கொழும்பு துறைமுகத்தில் இந்திய கப்பல்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு துறைமுகத்தில் இந்திய கப்பல்

கொழும்பு துறைமுகத்தில் இந்திய கப்பல்

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். டில்லி எனும் யுத்த கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் 163 மீட்டர் நீளமுடையது.

கப்பலில் வருகை தந்த கடற்படை வீரர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்லவுள்ளனர் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அத்துடன், ஐ.என்.எஸ். டில்லி கப்பலை பார்வையிடுவதற்கு பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கப்பல் எதிர்வரும் 3 ஆம் திகதி வரையில் நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Posted in Uncategorized

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள 12,000 தொன் சீனி

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள 12,000 தொன் சீனி

இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 600 சீனிக் கொள்கலன்கள் இரண்டு மாதங்களாக கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவற்றில், 433 கொள்கலன்கள் ஒன்பது இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்டவை என்றும் சுமார் 12,000 மெற்றிக் தொன் சீனியைக் கொண்டுள்ளன என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

வணிக வங்கிகள் வழங்கிய கடன் கடிதங்கள் மூலம் இறக்குமதி அனுமதிப்பத்திரங்களின் அடிப்படையில் இந்தியாவில் இருந்து சீனி இறக்குமதி செய்யப்பட்டது என்றும் குறிப்பிட்டனர்.

இரண்டு மாதங்களாக 433 சீனிக் கொள்கலன்கள் வெளிவிடப்படாததால், இறக்குமதியாளர்கள் ஒரு கிலோ சீனிக்கு தாமதக் கட்டணமாக ரூ. 20 முதல் 25 வரை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, மற்றொரு சீனி இறக்குமதியாளரால் அனுமதிப்பத்திரம் இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்ட மற்றொரு தொகுதி கொள்கலன்கள் இரண்டு மாதங்களாக கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இறக்குமதியாளரால் மியான்மாருக்கு அனுப்பப்பட்ட 130 சீனி கொள்கலன்கள் அந்த நாட்டின் பிரச்சனை காரணமாக கொழும்பு துறைமுகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் இந்த 130 கொள்கலன்களை நாட்டுக்குள் கொண்டு வர அனுமதிக்காததால், அவற்றை மீண்டும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சீனி இருப்பு பற்றி விசாரித்த போது, லங்கா சதொச குறிப்பிட்ட சீனி இருப்பைக் கையகப்படுத்த முடிவு செய்துள்ளாக ​​துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கூறினார்.

இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடப்பட்டதாகவும், லங்கா சதொச நிறுவனத்திற்கு சீனியை வாங்கும் போது தாமதமான கட்டணத்திலிருந்து இறக்குமதியாளர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர்பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மேலும் சதொச மூலம் சலுகை விலையில் சீனி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்

Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு துறைமுகத்தில்- பிலிப்பைன்ஸ் கடற்படை கப்பல்கள்

கொழும்பு துறைமுகத்தில்- பிலிப்பைன்ஸ் கடற்படை கப்பல்கள்

இலங்கையில் தங்கியிருந்த பிலிப்பைன்ஸ் பிரஜைகளை மீன்டும் தாய் நாட்டுக்கு அழைத்துச் செல்ல பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு

சொந்தமான BRP Davao del Sur மற்றும் BRP Ramon Alcaraz ஆகிய இரண்டு கப்பல்கள் நேற்று (மே 29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

இராஜதந்திர பணிக்கு இலங்கை கடற்படை உதவி வழங்கியது.

கோவிட் -19 தொற்று நோயின் விளைவாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் உலகெங்கிலும் உள்ள சர்வதேச

விமானங்களின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதன் காரணமாக மீன்டும் தாய் நாட்டுக்கு செல்ல முடியாமல் இலங்கையில்

தங்கியிருந்த பிலிப்பைன்ஸ் பிரஜைகளை அழைத்துச் செல்ல இந்த இரண்டு கப்பல்களும் நேற்று (2020 மே 29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

குறித்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திலிருந்து அவற்றுக்கான விநியோகத் தேவைகளை பூர்த்திச் செய்து நாட்டின் நிலைமையைப் பொறுத்து பிலிப்பைன்ஸ் கப்பல்களில் இருந்து இறங்குவதற்கு

எந்தவொரு நபருக்கும் அனுமதி கிடைக்கவில்லை. இந்த தொற்றுநோய்களின் கீழ் அனைத்து நிலையான சுகாதார

வழிகாட்டுதல்களையும் பின்பற்றி அனைத்து பிலிப்பைன்ஸ் பிரஜைகளும் கப்பல்களில் பயணிப்பதற்கு முன்னர் முழுமையாக மருத்துவ சோதனைக்ககு உட்படுத்தப்பட்டனர்.

கப்பல்கள் இன்று 30 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திலிருந்து செல்லவுள்ளன.