Tag: வெடித்து
வெடித்து சிதறிய ஆயுத கூடம் – 15 பேர் மரணம்
வெடித்து சிதறிய ஆயுத கூடம் – 15 பேர் மரணம்
ரஷியாவின் மாஸ்கோவில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லெஸ்னோய் கிராமத்தில் வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை
செய்துகொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தொழிலாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். எனினும் சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த
தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் 15 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஒருவரைக் காணவில்லை. ஒருவர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தொழிற்சாலையில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய விசாரணைக்குழுவினர் சென்றுள்ளனர்.
வெடித்து சிதறிய ஆயுத கிடங்கு 13 இராணுவம் பலி -94 பேர் காயம்
வெடித்து சிதறிய ஆயுத கிடங்கு 13 இராணுவம் பலி -94 பேர் காயம்
கஜகஸ்தான் நாட்டின் இராணுவ தளத்தில் உள்ள ஆயுத கிடங்கு ஒன்று திடீரென வெடித்து சிதறியது ,இதன்பொழுது அங்கு பணிபுரிந்த பத்து இராணுவத்தினர் இதுவரை பலியாகியுள்ளனர்
மேலும் 94 க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்
இந்த குண்டு வெடிப்பு தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,
இந்த குண்டு தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்பு மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்ச படுகிறது






