Posted in Uncategorized

இலங்கையில் 7,000 கர்ப்பிணிகளுக்கு கொரோனா

இலங்கையில் 7,000 கர்ப்பிணிகளுக்கு கொரோனா

இலங்கையில் இதுவரை 7,000 கர்ப்பிணிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், 55 பேர் உயிரிழந்துள்ளனர் என குடும்ப சுகாதாரப் பிரிவின் பணிப்பாளரும் சமூக மருத்துவ நிபுணருமான வைத்தியர் சித்ரமாலி டீ சில்வா தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே
அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், இலங்கையில் இதுவரை 90 சதவீதமான கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர். கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது என்றார்.

இதுவரை 55 கர்ப்பிணிகள் தொற்றுக்குள்ளாகி மரணித்துள்ள நிலையில், அனைத்து மரணங்களும் இந்த வருடம் மே மாதத்தின் பின்னரே இடம்பெற்றுள்ள என்றார். அத்துடன் இவ்வாறு உயிரிழந்த அனைத்து கர்ப்பிணிகளும் எவ்வித தடுப்பூசியையும்
பெறாதவர்கள் என்பதுடன், வரலாற்றின் முதற்தடவை அதிகளவு கர்ப்பிணிகள்
உயிரிழந்துள்ளனர் என்றார்.

மேலும் சிறுவர்களுக்கு கொரோனா ஒழிப்பு தடுப்பூசியை வழங்குவது தொடர்பில் தொற்றா நோய் தொடர்பான குழு தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருவதுடன், சிறுவர்களிடையே
தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்கள் குறித்து ஆராய்ந்த போது, பல நாள் நோய்
வாய்ப்பட்டவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமையவே பல்வேறு நோய்தொற்றுக்கு உள்ளான சிறுவர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்த தீர்மானித்தோம் என்றார்.

    Posted in Uncategorized

    யாழ்ப்பாணம் வருகிறார் மகிந்த

    யாழ்ப்பாணம் வருகிறார் மகிந்த

    யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி – பளை ஆகிய பகுதிகளில், 60,000 குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்கும் இரண்டு முக்கிய நீர் திட்டங்களை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,  ஒக்டோபர் 6ஆம் திகதி யன்று, யாழ்ப்பாணத்தில்  ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

    ஆரம்பிக்கப்படும் திட்டங்கள், SWRO உப்பு நீக்கும் ஆலைபிரிவு, இது தாழையடியில் கட்டப்படும் மற்றும் இது நயினாதீவில் முழுமையாக நிறைவு செய்யப்பட்ட நீர் வழங்கல் திட்டம் ஆகும். இந்தத் திட்டம் இப்போது 5,000 பயனாளிகளுக்கு பாதுகாப்பான நீரை வழங்கும்.

    மேலும், யாழ்ப்பாண நகர நீர் விநியோகத் திட்டமும் விரைவில் தொடங்கப்படும். இதில் 1 இலட்சம் மக்கள் தொகையை உள்ளடக்கிய JKWSSP இன் ( Jaffna Kilinochchi Water Supply and Sanitation Project) கீழ் 284 கிலோ மீற்றர்  நீளமுள்ள குழாய்களை அமைப்பதில் அடங்கும்.

    யாழ்ப்பாண நகர நீர் விநியோகம் மற்றும் தாழையடி SWRO SWRO உப்பு நீக்கும் ஆலைபிரிவு, 2023க்குள் முடிக்கப்பட்டு 3 இலட்சம்  பயனாளிகளுக்கு சுத்தமான நீர் வழங்கப்படும்.

      Posted in Uncategorized

      Zoom இல் கல்வி கற்ற சிறுமி சடலமாக மீட்பு

      Zoom இல் கல்வி கற்ற சிறுமி சடலமாக மீட்பு

      மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

      மட்டக்களப்பு அரசடி, பொற்கொல்லர் வீதியில் உள்ள வீடொன்றில் சிறுமியின் சடலம் கிடப்பதாக நேற்றிரவு (27) கிடைத்த தகவல்களை தொடர்ந்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

      சடலமாக மீட்கப்பட்ட சிறுமி, மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலையில் தரம் 08 கல்வி பயிலும் 13 வயது சிறுமியென பொலிஸார் தெரிவித்தனர்.

      சிறுமியின் மரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

      நேற்று மாலை பெற்றோர் வெளியில் சென்ற நிலையில், சகோதரிகள் இருவர் வீட்டிலிருந்துள்ளதாகவும் உயிரிழந்த சிறுமி Zoom ஊடாக கற்றல் நடவடிக்கையிலிருந்த நிலையில் அவரது அக்கா குளியலறையிலிருந்துள்ளதாகவும் குளியலறையிலிருந்து வந்தபோது Zoom கற்றல் நடவடிக்கையிலிருந்த தங்கை தனது உயிரை மாய்த்துள்ள நிலையிலிருந்துள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

      சிறுமியின் மரண விசாரணையை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெட்னம் மேற்கொண்டார்.

      அதனை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

        Posted in Uncategorized

        ஆலயத்தில் திருடியவர் கைது


        ஆலயத்தில் திருடியவர் கைது

        இரத்தினபுரி- மஹவலவத்த சிவன் கோவிலிலுள்ள காளிச் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவரிடம்
        பெறப்பட்ட வாக்குமூலத்துக்கு அமைய, குறித்த நகைகள் நகை அடகு பிடிக்கும்
        நிலையமொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

        கோவிலிலுள்ள காளி சிலையிலிருந்து நகைகள் காணாமல் போயுள்ளதாக இந்த மாதம் 17ஆம்
        திகதி இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதற்கமைய, சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்த கைரேகைகள் மற்றும் ஏனைய சாட்சிகளைக் கொண்டு 3 பிரிவுகளாகப் பிரிந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

        இந்த நிலையில், இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திகன பிரதேசத்தைச் சேர்ந்த நபர்
        ஒருவர், நிவித்திகல நகரிலுள்ள அடகு நிலையத்தில் சில தங்க ஆபரணங்களை அடகு
        வைத்துள்ளார் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, இரண்டு பிள்ளைகளின்
        தந்தையான 39 வயதுடைய முடி திருத்துனராக தொழில் செய்யும் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

        கொரோனா தொற்றால் தமக்கு தொழில் இழக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தான்
        தொடர்ச்சியாக நிவித்திகல பிரதேசத்திலுள்ள 7 கோவில்களிலுள்ள சிலைகளின் தங்க
        ஆபரணங்களை திருடியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் குறித்த முடி திருத்துனர்
        தெரிவித்துள்ளார்.

        இதனையடுத்து சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட நகைகளை நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

          Posted in Uncategorized

          ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி

          ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி

          ஆகாஷ் ஏவுகணையின் புதிய பதிப்பான ஆகாஷ் பிரைம், சோதனையில் இலக்கை துல்லியமாக தாக்கியது என டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது.

          ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி: டி.ஆர்.டி.ஓ.
          ஆகாஷ் பிரைம் ஏவுகணை


          பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) இந்திய ராணுவத்திற்கு போர் தளவாடங்களை தயாரித்து கொடுத்து வருகிறது. அந்த வகையில் ஆகாஷ் ஏவுகணையின் புதிய பதிப்பான ஆகாஷ் பிரைம் ஏவுகணையை தயாரித்துள்ளது.

          இந்த ஏவுகணையை ஒடிசாவில் உள்ள சாந்திபூரில் இருந்து பரிசோதித்தது. அப்போது குறிப்பிட்ட

          இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த நிலையில் ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது.

          ஆகாஷ் பிரைம் ஏவுகணை ஆளில்லா விமானங்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. ஆகாஷ் பிரைம் ஏவுகணையை மேம்படுத்தியபின், விமானத்தில் இருந்து பரிசோதிக்க உள்ளது டி.ஆர்.டி.ஓ.

            Posted in Uncategorized

            பளையில் மிளகாய் கன்றுகளை பிடுங்கி எறிந்த தெரு பொறுக்கிகள் – கதறும் விவசாயிகள்

            பளையில் மிளகாய் கன்றுகளை பிடுங்கி எறிந்த தெரு பொறுக்கிகள் – கதறும் விவசாயிகள்

            பளையில் மாற்றுத் திறனாளி குடும்பத்தின் வாழ்வாதார பயிர்கள் விசமிகளால் முற்று முழுதாக அழிக்கப்பட்டதை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பார்வையிட்டார்!

            கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் உள்ள அரசர் கேணிபகுதியில் மாற்றுத்திறனாளி குடும்பம் ஒன்றினால் தங்களது வாழ்வாதாரதொழிலாக பயிரிடப்பட்ட மிளகாய் செடிகள் அனைத்தும் நேற்று முன்தினம் இரவு(25) விசமிகளால் பிடுங்கி எறியப்பட்டுள்ளன.

            விவசாயத்தை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வரும் குறித்த குடும்பம் முறை 800 கன்றுகள் மிளகாய் செடிகளை பயிரிட்டுள்ளனர். விவசாய உள்ளீடுகள் பற்றாக்குறை,

            விலைவாசிகளின் ஏற்றம் என பல நெருக்கடிகளுக்குள் மத்தியில்கடன் பெற்றும் தங்களது விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

            இன்று(27) குறித்த பகுதிக்கு சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பிடுங்கி எறியப்பட்ட மிளகாய் கன்றுகளை பார்வையிட்டும் மக்களின் பிரச்சனைகளையும் கேட்டறிந்தார்.

            தொடரச்சியாக இடம்பெற்று வரும் இவ்வாறான சட்டவிரோத செயல்களை தடுக்க தாம் உயர் மட்டம் வரை சென்று இதற்கான தீர்வை பெற்று தருவதாக தெரிவித்திருந்தார்.

            மிளகாய் கன்று
            மிளகாய் கன்று
              Posted in Uncategorized

              இலங்கைக்குள் நுழைந்த ஐ எஸ் – வாட்சாப் குழுவை தேடும் பொலிஸ்

              இலங்கைக்குள் நுழைந்த ஐ எஸ் – வாட்சாப் குழுவை தேடும் பொலிஸ்

              இலங்கையில் உள்ள முஸ்லீம் தீவிரவாத போக்குடையவர்கள் உலக மகா கொடிய பயங்கரவாத இயக்கமாக விளங்கி வரும்

              ஐ எஸ் குழுவுடன் இணைந்து செயல் பட்டு வந்த நிலையில் அவர்களை மடக்கி பிடிக்கும் நகர்வில் இலங்கை உளவுத்துறை ஈடுபட்டுள்ளது

              இவர்கள் இயக்கி வந்த வாட்சாப் குழுவை தேடி தற்போது வேட்டை ஆரம்பமாகியுள்ளது ,விரைவில் இவர்கள் அனைவரும் கைது செய்ய படுவார்கள் என நம்ப படுகிறது

                Posted in Uncategorized

                யாழில் வாள்வெட்டு குழு அட்டகாசம் – வீடுகள் தீவைத்து எரிப்பு

                யாழில் வாள்வெட்டு குழு அட்டகாசம் – வீடுகள் தீவைத்து எரிப்பு

                இலங்கை யாழ்ப்பாணம் அல்வாய் பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று திடீரென வீடொன்றுக்குள்

                புகுந்து அங்குள்ள உடமைகளை அடித்து சேத படுத்தியதுடன் ,அந்த வீட்டுக்கு தீவைத்து தப்பி சென்றுள்ளது


                இதில் வெட்டுகுமார் என்ற தெரு ரவுடி கைது செய்ய பட்டுள்ளான்


                மேலும் அவனது கூட்டாளிகள் தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர் ,விரைவில் அவர்களு கைது செய்ய படுவார்கள் என சிங்கள கூலி காவல்துறை தெரிவித்துள்ளது

                  Posted in Uncategorized

                  அமைச்சரின் கால்களை நக்க வைத்து தமிழ் கைதிகள் வதை

                  அமைச்சரின் கால்களை நக்க வைத்து தமிழ் கைதிகள் வதை

                  இலங்கையின் சிறைச்சாலை அமைச்சர் ரோகன் ரத்வத்த அனுராதபுரம் சிறை சாலைக்கு சென்ற

                  பொழுது அங்கு தடுத்து வைக்க பட்டுள்ள தமிழ் கைதிகள் மூலம் அவரது கால் சப்பாத்து நக்கி சுத்த படுத்த பட்டது

                  இவ்வாறான கீழ்த்தரமான செயலில் செயல் பட்ட அவருக்கு எதிராக மக்கள் ,மற்றும் தமிழ் எம்பிக்கள் சிலர் கடும் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்

                  மேற்படி சம்பவம் சர்வதேச அரங்கிற்கும் எடுத்து செல்ல பட்டுள்ளது

                    Posted in Uncategorized

                    தாடி அகற்ற தலிபான்கள் தடை – கடுப்பில் ஆண்கள்

                    தாடி அகற்ற தலிபான்கள் தடை – கடுப்பில் ஆண்கள்

                    ஆப்கான் நாட்டில் ஆண்கள் அனைவரும் தாடி வளர்க்க வேண்டும் என தலிபான்கள்

                    அறிவித்துள்ளனர்

                    தாடியை முகத்தில் இருந்து நீக்கம் செய்தல் அவர்களுக்கு மரண தண்டனை வழங்க படும் என்ற

                    அறிவிப்பு ஆண்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

                      Posted in Uncategorized

                      இளம் மனைவியை சுட்டு கொன்ற கணவர்

                      இளம் மனைவியை சுட்டு கொன்ற கணவர்

                      இலங்கை எம்பிலிபிட்டிய பகுதியில் 35 வயதுடைய இளம் மனைவியை கணவர் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                      இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் ,கொலையில் முடிவடைந்துள்ளது ,கணவர் கொலை

                      குற்ற சாட்டில் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளார்

                        Posted in Uncategorized

                        காவல்துறை அதிகாரிகள் கையை கடித்த குற்றவாளி

                        காவல்துறை அதிகாரிகள் கையை கடித்த குற்றவாளி

                        இலங்கை மாத்தறை பகுதியில் காவல்துறை அதிகாரி இருவரது கைகளை கடித்து விட்டு தப்பி ஒட

                        முயன்ற குற்றவாளி கைது செய்ய பட்டு நீதவான் நீதிமன்றில் ஆயராக்க பட்டார்

                        இவரை தடுத்து வைத்து விசாரிக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ,இவர் புரிந்த மேற்படி

                        குற்றத்திற்கு பல்லாண்டு சிறை தண்டனை வழங்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                          Posted in Uncategorized

                          பீச்சில் துப்பாக்கி தாரியை சுட்டு கொன்ற பொலிஸ்

                          பீச்சில் துப்பாக்கி தாரியை சுட்டு கொன்ற பொலிஸ்

                          அமெரிக்கா Huntington பீச்சின் மண் பிட்டியில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்த ஆயுத தாரி ஒருவரை காவல்துறை நபர் சுட்டு கொன்றுள்ளார்

                          போலீசாரின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்து வந்த நிலையில் அவரை சுட்டு கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

                          இவ்வாறு தாம் சுட்டு கொன்றிருக்க விட்டால் அவர் மக்களை வேட்டையாடி இருப்பார் என காவல்துறை கதை பேசி வருகின்றமை கவனிக்க தக்கது

                            Posted in Uncategorized

                            ரசியா எல்லைக்குள் நுழைந்த அமெரிக்கா விமானங்கள் -வானில் நடந்த பரபரப்பு

                            ரசியா எல்லைக்குள் நுழைந்த அமெரிக்கா விமானங்கள் -வானில் நடந்த பரபரப்பு

                            ரசிய வான் பரப்புக்குள் அமெரிக்கா நாட்டின் மூன்று விமானங்கள் நுழைந்தன

                            இதனை கண்ணுற்ற ரசியா விமானங்கள் அதனை துரத்தி சென்றன

                            இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது

                            ரசியாவுக்குள் சமீபகாலமாக அமெரிக்கா திடீர் நுளைவுகளை மேற் கொண்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

                              Posted in Uncategorized

                              ஆயுத கிடங்கு மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை – பற்றி எரியும் களஞ்சியம்

                              ஆயுத கிடங்கு மீட்டது வீழ்ந்து வெடித்த ஏவுகணை – பற்றி எரியும் களஞ்சியம்

                              சவுதி ஆதரவு குழுவிற்கு ஆயுதங்களை வழங்கி போரை தொடுத்து வருகிறது


                              ஏமன் நாட்டின் Ma’rib மாகாணத்தில் உள்ள சவுதியை ஆதரவு படைகளின் ஆயுத களஞ்சியம் மீது இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன

                              இந்த ஏவுகணைகள் தாக்குதலை அடுத்து அந்த களஞ்சியம் பற்றி எரிந்த வண்ணம் உள்ளது

                                Posted in Uncategorized

                                பாகிஸ்தானில் வெடித்த குண்டு – சிதறிய மனித உடல்கள்

                                பாகிஸ்தானில் வெடித்த குண்டு – சிதறிய மனித உடல்கள்

                                பாகிஸ்தான் Balochistan மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்தியா வெடிகுண்டு ததாக்குதலில் சிக்கி


                                நால்வர் பலியாகினர் மேலும் .இரண்டுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்


                                தாலிபான்களுக்கு பாகிஸ்தான் உதவியதன் பின்னர் தொடர் குண்டு வெடிப்பு பாகிஸ்தானில் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                                  Posted in Uncategorized

                                  இலங்கை வரும் ஐரோப்பிய குழு – ஜிஎஸ்பி+ நிறுத்த படும் வாய்ப்பு

                                  இலங்கை வரும் ஐரோப்பிய குழு – ஜிஎஸ்பி+ நிறுத்த படும் வாய்ப்பு

                                  இலங்கையில் ஆளும் அரசு தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் நிலையில்

                                  ஆண்டு தோறும் இலங்கைக்கு வழங்க படும் ஜிஎஸ்பி+ வரி சலுகை நிறுத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                                  நாளை இலங்கை வரும் ஐரோப்பிய தூது குழுவினர் இது தொடர்பாக ஆராயவுள்ளனர்

                                  இவர்கள் மேற்கொள்ளும் இந்த ஆய்வு நடவடிக்கையின் பின்னரே இலங்கைக்கு ஆப்பு வைக்க படும் ஆட்டம் ஆரம்பிக்க படுமா என்பதை அறிய முடியும் ,இதில் இலங்கைக்கு கடிவாளம் வழங்க

                                  பட்டால் ,போர் குற்ற விசாரணைகள் துரித படுத்த படும் நிலை ஏற்படும் என்பதை அடித்து கூறலாம்

                                    Posted in Uncategorized

                                    இலங்கையில் மீளவும் ஊரடங்கு – கொதிப்பில் மக்கள்

                                    இலங்கையில் மீளவும் ஊரடங்கு – கொதிப்பில் மக்கள்

                                    இலங்கையில் வேகமாக கொரனோ நோயானது பரவி வரும் நிலையில் இரவு பத்து மணி முதல்

                                    அதிகாலை நான்கு மணிவரை ஊரடங்கு சட்டத்தை அமூல் படுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது

                                    எதிர்வரும் மதம் முதலாம் திகதி முதல் இவை நடைமுறைக்கு வரும் என எதிர் பார்க்க படுகிறது

                                      Posted in Uncategorized

                                      யாழில் கோயிலுக்கு வந்தவர் – ஆற்றில் சடலமாக மீட்பு

                                      யாழில் கோயிலுக்கு வந்தவர் – ஆற்றில் சடலமாக மீட்பு

                                      யாழ்ப்பாணம் தொண்டமனாரு பகுதியில் கோயிலுக்கு வருகை தந்த முதியவர் ஒருவர் அந்த நீரேரியில் குளிக்க முயன்ற பொழுது நீரில் அடித்து செல்ல பட்டு இறந்துள்ளார்

                                      மீன் பிடிக்க வந்தவர்கள் சடலத்தை கண்ணுற்று காவல்துறைக்கு தெரிவித்த நிலையில் சடலம் மீட்க பட்டுள்ளது

                                      மேற்படி சம்பவம் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                        Posted in Uncategorized

                                        ஆற்றில் மிதந்த மனித சடலம் – நடந்தது என்ன ..?

                                        ஆற்றில் மிதந்த மனித சடலம் – நடந்தது என்ன ..?

                                        மட்டக்களப்பட்டு ஏறாவூர் பகுதியில் உள்ள வாவி ஒன்றில் இருந்து ஆணின் சடலம் மீட்க பட்டுள்ளது

                                        இவர் படுகொலை செய்ய பட்டு ஆற்றுக்குள் வீச பட்டு இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது

                                        சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

                                        இலங்கையில் சமீப காலங்களாக நீர் நிலைகளில் மனித சடலங்கள் மிதந்து வருகின்றமை குறிப்பிட தக்கது