Posted in Uncategorized

லண்டனில் போலீஸ் வேட்டை 16 பேர் கைது 150 ஆயிரம் பணம் மீட்பு

லண்டனில் போலீஸ் வேட்டை 16 பேர் கைது 150 ஆயிரம் பணம் மீட்பு

பிரிட்டனில் 39 வீடுகளில் சிறப்பு காவல்துறை அணிகள் நடத்திய தேடுதல் வேட்டையின் பொழுது ,
பதினாறு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

,இவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பவுண்டுகள் பணம் ,மற்றும் துப்பாக்கிகள் ,இருபது கிலோ

கொக்கையின் போதை வஸ்து என்பன மீட்க பட்டுள்ளன ,
கைதானவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

கொரனோ காலத்தில் ,போதைவஸ்து வேட்டையில் பிரிட்டன் காவல்துறையினர் பாரிய

வெற்றியை சாம்பாதித்துள்ளதுடன் ,பல மில்லியன் பவுண்டுகளை மீட்டுள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    200 பேர் படுகொலை -40,000 பேர் இடபெயர்வு

    200 பேர் படுகொலை -40,000 பேர் இடபெயர்வு

    கொங்கோவில் இடம்பெற்று பவரும் இராணுவ நடவடிக்கை காரணமாக 200 பேர் படுகொலை

    செய்யப்பட்டும் ,சுமார் நாற்பது ஆயிரம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது

    ADF இராணுவத்தினர் தொடுத்து வரும் இந்த தாக்குதலினால் மேற்படி பாதிப்பு ஏற்படுத்த

    பட்டுள்ளது ,கொங்கோவில் இடம் பெற்று வரும் உள் நாட்டு போர் காரணமாக பல லட்சம் மக்கள் பலியாகியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      கிளிநொச்சியில் தொல்பொருள் திணைக்களத்தினரால் அகழ்வுப் பணிகள் – மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு!

      கிளிநொச்சி உருத்திரபுரீச்சரர் சிவாலயத்தில் (2021.03.24) தொல்பொருள் திணைக்களத்தினரால் அகழ்வுப் பணிகள் அறிவிப்பு – மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு!

        Posted in Uncategorized

        ஐ.நா தீர்மானம் சிறிலங்காவுக்கு தோல்வி

        ஐ.நா தீர்மானம் சிறிலங்காவுக்கு தோல்வி

        அனைத்துலக அரங்கில் சிறிலங்காவுக்கு ஏற்பட்ட தோல்வியாக, ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமைந்துள்ளதென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்த தோல்வி தமிழர்களுக்கு நீதியாக மாறவில்லை என்பதோடு பொறுப்புக்கூறலை சிறிலங்கா அரசிடமே கொடுக்கின்ற ஓர் வலுவற்ற தீர்மானம் என தெரிவித்துள்ளது.

        ஐ.நா மனித உரிமைச்சபையில் பிரித்தானியா தலைமையிலான கூட்டுநாடுகளால் முன்வைக்கப்பட்ட சிறிலங்கா தொடர்பிலான தீர்மானத்துக்கு A/HRC/46/L.1 ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்தன. வாக்கெடுப்பில் 14 பங்கேற்கவில்லை.

        அண்மைக்காலத்தில் அனைத்துலக அரங்கொன்றில் சிறிலங்காவுக்கு ஏற்பட்ட தோல்வியாக இது இருந்தாலும், முன்னைய தீர்மானங்களை விட, வலுவற்ற நீர்த்துப்போன ஓர் தீர்மானமாக இது உள்ளதெனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

        கடந்த காலத்தில் சிறிலங்கா சாமார்த்தியமாக ‘பயங்கரவாதத்தின் மீதான போர்’ என்று பூச்சாண்டி காட்டி உத்திகளைக் கையாண்டது. 2015ல் ஏமாற்று அரசியலைக் கையாண்டு ஐ.நா மனித

        உரிமை;சபையின் 30/1 தீர்மானத்தைப் பிற நாடுகளுடன் கூட்டாக முன்மொழிந்து விட்டு, அதனைச் செயலாக்காமல் அனைத்துலக சமூகத்தினை சமாளித்ததென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

        ஏற்கெனவே தங்களிடம் சான்று இருப்பதாக ஐ.நா மனிதவுரிமைச் சபையின் துணை ஆணையாளர் மெர் கான் வில்லியம்ஸ் கூறியுள்ள போதிலும், புதிய தீர்மானத்தில் ஒரு கூறு ‘ஐ.நா ஆணையாளர் அலுவலகம் தகவலும்

        சான்றும் திரட்டவும் ஒருங்கமைக்கவும் பகுத்தாராயவும் பாதுகாக்கவும் வேண்டும்’ என்று கேட்டுக் கொள்வதாக’ உள்ளது. இது பாதிக்கப்பட்ட தமிழர்களை ஆற்றுப்படுத்துவதற்காக சேர்க்கப்பட்ட வெற்றுக்கூடான உள்ளடக்கமாக இது தோன்றுகிறது எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

        மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
        ஐ.நா மனிதவுரிமைப் சபையில் சிறிலங்காவுக்கு ஏற்பட்டுள்ள இந்த தோல்லி, அனைத்துலக இராஜதந்திர தளத்தில் சிறிலங்கா ஒதுக்கி வைக்கப்பட்ட அரசாகிக் கொண்டிருப்பதை வெளிக்காட்டுகின்றது.

        இந்தத் தீர்மானம் சிறிலங்கா விவகாரத்தில் பின்னோக்கி சென்றுள்ளது. பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளும் அயல்நாட்டு நீதிபதிகளும் பங்கேற்கக வேண்டுமென 2015ம் ஆண்டு தீர்மானம் முன்மொழிந்;திருந்தது.

        ஆனால் இன்றைய தீர்மானமோ பொறுப்புக்கூறலை முழுக்க முழுக்க ஓர் உள்நாட்டுப் (சிறிலங்கா) பொறிமுறையிடமே விட்டுவிடுகிறது. நாகரீக நாடுகளின் சட்டப்புத்தகங்களில் அசிங்கமான

        கறையாக வர்ணிக்கப்படும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பொறுத்த வரை, 2015 தீர்மானத்தில் இடம்பெற்ற ‘நீக்கம்’ என்ற சொல் இன்றைய தீர்மானத்தில் காணப்படவில்லை.

        சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்நிலையில் இருப்பவர்கள் போர்க்குற்றங்கள் புரிந்திருப்பதைத் தெளிவாகக சுட்டிகாட்டும் வகையில் ஐ.நாவின் மூன்று அறிக்கைகள் உள்ளன. (ஐநா வல்லுநர் குழு அறிக்கை, உள்ளக ஆய்வறிக்கை (பெட்ரி அறிக்கை எனப்படுவது), சிறிலங்கா தொடர்பான மனிதவுரிமை ஆணையாளர் அலுவலக OISL அறிக்கை)

        சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவும், உலகளாவிய மேலுரிமையினை சிறிலங்கா தொடர்பில் அனைத்துலக சமூகம் செலுத்த வேண்டும் என ஐநா உயராணையர் மிசேல் பசலே ஏற்கெனவே விடுத்த அழைப்பில் தெரிவித்துள்ளார்.

        ஐ.நா மனித உரிமைச்சபையின் 4 முன்னாள் ஆணையாளர்களும், சிறிலங்காவுக்குச் சென்றுவந்த 13 முன்னாள் ஐநா சிறப்பு அறிக்கையாளர்களும், சிறிலங்கா தொடர்பான ஐநா பொதுச் செயலரின் வல்லுநர் குழுவில் இடம்பெற்ற 3 உறுப்பினர்களும் சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பக் கோரியிருந்தார்கள்.

        நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 2011ம் ஆண்டில் இருந்து கோரிவருகின்றது.

        தற்போதைய ஐ.நா கூட்டத் தொடரிமை மையப்படுத்தி தாயக தமிழர் அரசியல் தரப்புக்களும், தமிழ் சிவில் சமூகமும், தமிழ் சமயத் தலைவர்களும், புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும், தமிழுலகமும், உட்பட பலரும தமது முதன்மைக் கோரிக்கையாக இதனை முன்வைத்திருந்தனர்.

        சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் கொண்டுபோய் நிறுத்துவதற்குத் தேவைப்படுவது நாடுகளிடத்திடத்தில் அரசியல் மனத்திட்பம்தானே தவிர புதிய செயல்திட்டமன்று.

        அரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள மன்றங்களில் நீதி பெறுவதில் அரசுகளற்ற தேசங்கள் சந்திக்கும் சவால்களை ஐநா மனிதவுரிமைச் சபையின் இன்றைய தீர்மானம் காட்டுகிறது.

        இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான காலத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பும் உலகச் சமுதாயமும் சுயநிர்ணய உரிமையை ஓர் அடிப்படைக் கொள்கையாக ஏற்றுள்ள போதிலும், அதனை நீதிநோக்கில் பயன்படுத்தும் முயற்சியை இப்போதிருக்கும் அரசுகள் தமது நலன்களின் அடிப்படையில் வழிமறிப்பதே வாடிக்கையாக இருந்து வருகிறது.

        இந்தத் அரசுகள் தமது ‘இறைமையையும்’ ‘ஆட்சிப்புலக் கட்டுக்கோப்பையும்’ கட்டிக் காப்பதன் போர்வையில், நாசிக் கொடுமைகளை நினைவுபடுத்தும் இனஅழிப்புக்களையும்,

        மானிடக்குற்றங்களை நடத்தத் தயங்குவதில்லை. மனிதவுரிமைகள் பற்றியும் ஜனநாயகம் பற்றியும் நீட்டி முழக்கும் உலக அரசுகள் தம் புவிசார் அரசியல் நலன்களுக்காக இந்தக் குற்றங்களைக் கண்டுகொள்வதில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

          Posted in Uncategorized

          பயணிகள் விமான சேவை இந்தியாவில் ஏப்ரல் 30 வரை தடை

          சர்வதேச பயணிகள் விமான சேவை இந்தியாவில் ஏப்ரல் 30 வரை தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

          கொரோனா பரவல் காரணமாக, சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.

          இருப்பினும், ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன.

          இந்நிலையில் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.

          இருப்பினும் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் திட்டமிடப்பட்ட சர்வதேச விமான சேவைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

            Posted in Uncategorized

            இலங்கைக்கு ஐநா இட்ட கட்டளை

            இலங்கைக்கு ஐநா இட்ட கட்டளை

            ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் (unchr) இலங்கை தொடர்பில் மையப்படுத்தப்பட்ட அணியால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

            இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான இந்த பிரேரணை, பிரித்தானியாவினால் சமர்ப்பிக்கப்பட்டது கனடா,. ஜேர்மனி, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் சார்பாகவே அந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

            46/1 என அடையாளம் காணப்பட்ட அந்த வரைவு பிரேரணை, நேற்றையதினம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தனது தரப்பின் சார்பில் கருத்துகளை முன்வைத்த சீனா, பிரேரணை வாக்கெடுப்புக்கு விடுமாறு கோரிநின்றது.

            அதனடிப்படையில், பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகள் வாக்களித்தன, எதிராக 11 நாடுகள் வாக்களித்தன, இந்தியா, ஜப்பான உள்ளிட்ட 14 நாடுகள் வாக்களிப்பதை தவிர்த்துகொண்டன.

            அவர்களின் பிரேரணையில், 2012 ஆம் ஆண்டுமுதல் இலங்கையில் எடுக்கப்பட்ட நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை நடவடிக்கைகள் குறித்து வெகுவாக கவனம் செலுத்தப்பட்டது.

            பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க இலங்கை விரிவான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரித்து பகுப்பாய்வு செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் அந்தப் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

            இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துதல் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளில் மாகாண சபை முறையைத் தொடர்வது குறித்தும்,

            கொரோனா தொற்றை அடுத்து மத சுதந்திரத்துக்கு இடையூறுகள் விளைவிக்கப்பட்டமை தொடர்பிலும் அந்தப் பிரேரணையின் சுட்டிக்காட்டப்பட்டள்ளது.

              Posted in Uncategorized

              ஆறுபேர் இணைந்து சிறுமியை அடித்து கொன்ற கொடூரம்

              ஆறுபேர் இணைந்து சிறுமியை அடித்து கொன்ற கொடூரம்

              இலங்கை பெரிய கல்லாறு பகுதியில் பன்னிரண்டு வயது சிறுமி ஒருத்தியை மூன்று பெண்கள்

              உள்ளிட்ட ஆறுபேர் இணைந்து நாள்தோறும் அடித்து துன்புறுத்தியுள்ளனர்

              இந்த அடி காயங்களினால் அவளது புண்களில் ஏற்பட்ட தொற்று கிருமி ஊடாக அவர் இறந்துள்ளார் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது

              இதனால் ஆறு பேரும் கைது செய்ய பட்டு கொலை குற்றச்சாட்டில் நீதி விசாரணைகள் இடம்பெற்று வருகிறது,


              மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                Posted in Uncategorized

                முதல் -மந்திரி உத்தவ் தாக்கரே மனைவிக்கு கொரோனா

                முதல் -மந்திரி உத்தவ் தாக்கரே மனைவிக்கு கொரோனா

                மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் மகனும், சுற்றுலாத்துறை மந்திரியுமான ஆதித்ய தாக்கரேக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

                மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மனைவிக்கு கொரோனா
                ராஷ்மி தாக்கரே
                மும்பை:

                மராட்டியத்தில் கொரோனாவின் 2-வது அலை அசுர வேகம் எடுத்துள்ள நிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் மகனும், சுற்றுலாத்துறை மந்திரியுமான ஆதித்ய தாக்கரேக்கு கடந்த 2

                நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் உத்தவ் தாக்கரேயின் மனைவி ராஷ்மி தாக்கரேக்கும் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் முதல்-மந்திரியின் வர்ஷா பங்களாவில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு உள்ளார்.

                உத்தவ் தாக்கரேயும், அவரது மனைவி ராஷ்மி தாக்கரேயும் கடந்த 11-ந் தேதி மும்பை ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

                இந்தநிலையில் ராஷ்மி தாக்கரே தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளார். மராட்டியத்தில் புதிய உச்சமாக நேற்று

                ஒரே நாளில் 28 ஆயிரத்து 699 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார்கள். இதேபோல இந்த ஆண்டில் அதிகப்பட்சமாக நேற்று மேலும் 132 பேர் உயிரிழந்து உள்ளனர்.

                Posted in Uncategorized

                ஐநாவில் தமிழர்கள் ஏமாற்ற பட்டது எப்படி – வீடியோ

                ஐநாவில் தமிழர்கள் ஏமாற்ற பட்டது எப்படி – வீடியோ

                ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இலங்கை தொடர்பாக வைக்க பட்ட விடயங்கள்

                அனைத்தும் இலங்கை அரசுக்கு சார்பான முறையில் வழங்க பட்டுள்ளது ,

                இங்கு தமிழர்கள் எவ்விதம் ஏமாற்ற பட்டனர் என்பது தொடர்பில் தமிழீழ நாடு கடந்த அரச பிரதமர்

                துல்லியமாக எடுத்து விளங்கும் இந்த விடயத்தை தமிழர்களே கேளுங்கள் பகிருங்கள்

                https://www.youtube.com/watch?v=4J235pd6b8g
                  Posted in Uncategorized

                  கடல் வழியாக லண்டனுக்குள் நுழைய முயன்ற அகதிகள் 72 பேர் பிரான்சில் கைது

                  கடல் வழியாக லண்டனுக்குள் நுழைய முயன்ற அகதிகள் 72 பேர் பிரான்சில் கைது

                  பிரான்ஸ் கலையில் இருந்து லண்டனுக்குள் நுளையும் முகமாக படகில் இரகசியமாக பயணித்த

                  எழுபத்தி இரண்டு அகதிகளை தாம் கைது செய்துள்ளதாக பிரான்ஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

                  ஆங்கில கால்வாயை ஊடறுத்து படகு மூலம் பல நூறு அகதிகள் தொடராக நுழைந்த வண்ணம் உள்ளனர்

                  இந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் நுழைவு ஆளும் பிரிட்டன் அரசுக்கு பெரும் நெருக்கடியை தருவித்துள்ளது குறிப்பிட தக்கது

                    Posted in Uncategorized

                    வீட்டில் இருந்து மீட்க பட்ட $700,000 – சிக்கிய பிரபலம்

                    வீட்டில் இருந்து மீட்க பட்ட $700,000 – சிக்கிய பிரபலம்

                    அவுஸ்ரேலியாவில் பிரபல தொழில் அதிபர் ஒருவர் தனது வீட்டில் பாது காப்பாக மறைத்து

                    வைத்திருந்த ஏழு லட்சம் டொலர்கள் மீட்க பட்டன

                    இந்த பணம் மீட்பை அடுத்து அவர் தற்போது நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,
                    நீதி விசாரணைகளில் இவர் சிறை செல்லும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்க படுகிறது

                      Posted in Uncategorized

                      லொத்தரியில் $2.5 மில்லியனை அள்ளி சென்ற நபர்

                      லொத்தரியில் $2.5 மில்லியனை அள்ளி சென்ற நபர்

                      அவுஸ்ரேலியாவில் இடம் பெற்ற லொத்தரியில் நபர் ஒருவர் சுமார் 2.5 மில்லியன் டொலர்களை அள்ளி சென்றுள்ளார்


                      கடந்த வராமு இதுபோல நபர் ஒருவர் பல மில்லியனை அள்ளி சென்றார் ,அதனை அடுத்து இப்பொழுது இந்த


                      குழுக்களில் இவை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிட தக்கது

                        Posted in Uncategorized

                        ஐநா பிரேரணையால் மக்களுக்கு தீர்வு கிடைக்காது – பீரீஸ் முழக்கம்

                        ஐநா பிரேரணையால் மக்களுக்கு தீர்வு கிடைக்காது – பீரீஸ் முழக்கம்

                        ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை, அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாகுமெனத் தெரிவித்த கல்வி

                        அமைச்சரான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், இப்பிரேரணைகள் ஊடாகச் சாதாரண மக்களுக்கு நன்மைகள் எவையும் கிடைக்காது; மாறாக, புலம்பெயர் அமைப்புகள் மாத்திரம் குறுகிய பயனைப் பெறும் என்றார்.

                        அனைத்து நாடுகளுடனும் பொதுத் தன்மையைப் பேணுவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கொள்கையாகும் எனத் தெரிவித்த அமைச்சர் ஜி.எல். பீரிஸ், இலங்கை விவகாரத்தில்

                        ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களை அடிப்படையாகக் கொண்டு கொள்கை வகுக்கிறது.

                        இவ்வாறான செயற்பாடு, ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படைக் கொள்கைக்கு முரணானது என்றார்.

                        ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

                        தொடர்ந்து கருத்துரைத்த அவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்பின் பெறுபேறு எதுவாக அமைந்தாலும், அரசாங்கம் சர்வதேசத்துடனும் ஐக்கிய நாடுகள் சபையுடனும் இணக்கமாகவே செயற்படும்.

                        இலங்கை விவகாரத்தில் மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகள் ஒருதலைப்பட்சமானது.

                        சர்வதேசத்துக்கு அடிபணிந்து, இராணுவத்தினரை ஒருபோதும் காட்டிக் கொடுக்கமாட்டோம். இராணுவத்தினரைப் பாதுகாக்க மேலதிகமாக சட்டம் இயற்றுவோம்’ என்றார்.

                        ‘இலங்கை விவகாரத்தில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர், ஒரு

                        தலைப்பட்சமாகச் செயற்பட்டு, இலங்கையின் உள்ளக விவகாரங்கள் தொடர்பில், வெறுக்கத்தக்க வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்’ என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

                          கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
                          Posted in Uncategorized

                          சூப்பர் மார்க்கட்டுக்குள் புகுந்து மக்களை சுட்டு கொன்ற மர்ம நபர் – 10 பேர் பலி

                          சூப்பர் மார்க்கட்டுக்குள் புகுந்து மக்களை சுட்டு கொன்ற மர்ம நபர் – 10 பேர் பலி

                          அமெரிக்காவில் சூப்பர் மார்க்கட்டுக்குள் துப்பாக்கியுடன் சென்ற நாபா அங்கிருந்த மக்கள் மீது திடீர் சூட்டு தாக்குதலை நடத்தினான் ,இதில் பத்து பேர் பலியாகினர்

                          இந்த தாக்குதலை தடுக்க விரைந்து சென்ற போலீசார் ஒருவரும் பலியாகியுள்ளார்

                          குறித்த ஆயுத தாரி கைது செய்ய பட்டுள்ளான்


                          தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,இது தீவிரவாத செயலுடன் தொடர்புடையதா என்பது தொடர்பில் தெரியவரவில்லை

                            Posted in Uncategorized

                            இரவு வேளையில் வீதியில் நடமாடிய பெண்கள் நால்வர் கைது

                            இரவு வேளையில் வீதியில் நடமாடிய பெண்கள் நால்வர் கைது

                            எவ்விதமான காரணங்களும் இன்றி, இரவு வேளையில் வீதியில் நடமாடிய பெண்கள் நால்வர் கைது

                            செய்யப்பட்ட சம்பவம் யாவரும் அறிந்ததே, அந்த நான்கு பெண்களுக்கும் தலா 50 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

                            கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இந்த நால்வருக்கும் எதிராகவும்

                            “ தெருக்களில் அநாவசியமாக சுற்றிதிரிந்தல்” என்ற குற்றச்சாட்டப்பட்டது.

                            அந்தப் பெண்கள் நால்வரும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்

                            ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே அவர்களுக்கு தலா 50 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

                              Posted in Uncategorized

                              லொறி ஆட்டோ மோதல் – தாய் முன்னே பலியான மகள்

                              தலவாக்கலை – சென்.கிளயார் டெவோன் பகுதியில் லொறியொன்றும் ஓட்டோவும் மோதி விபத்துக்குள்ளானதில், கணேஷன் நித்யாவின் (வயது 25 என்ற யுவதி உயிரிழந்துள்ளார். அவரது தாயார் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                              இன்றுக்காலை 5.24க்கு இடம்பெற்றுள்ளது என திம்புள்ளை- பத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

                              இந்த விபத்து இன்று காலை 5.20 மணியளவில் இடம்பெற்றதாக திம்புள்ளை−பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                              நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சுகாதார அமைச்சுக்கு சொந்தமான லொறியொன்றும், கொழும்பிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த ஓட்டோடுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

                              ஓட்டோவில் பயணித்த யுவதி மரணமடைந்தார், அவரது தாயார் படுகாயமடைந்துள்ளார் எனினும்,

                              ஓட்டோ சாரதிக்கு எவ்விதமான ஆபத்துகளும் ஏற்படவில்லையென பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

                              ஓட்டோ சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலத்தால் இவ்விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், அவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                                Posted in Uncategorized

                                மனைவி மீது அசீட் வீசிய கணவன் – காவல் நிலையத்தில் நடந்த பயங்கரம்

                                மனைவி மீது அசீட் வீசிய கணவன் – காவல் நிலையத்தில் நடந்த பயங்கரம்

                                இலங்கை காலி பகுதியில் குடும்ப தகராறு காரணமாக 28 வயதுடைய மனைவி புகார் அளித்த நிலையில் கணவனை

                                அழைத்து விசாரிக்க போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர் ,அவ்வேளை காவல்நிலையம் வருகை தந்த கணவனை தான் மறைத்து வைத்திருந்த அஸீட்டை எடுத்து மனைவி மீது வீசியுள்ளார்

                                இந்த தாக்குதலால் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளான் நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில்

                                மனைவி அனுமதிக்க பட்டுளளார் ,இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளன
                                இந்த தாக்குதலில் காவலர் ஒருவரும் காயமடைந்துள்ளார்

                                கணவன் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

                                  Posted in Uncategorized

                                  இலங்கைக்கு எதிராக ஐநாவில் வாக்கெடுப்பு

                                  ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக சில நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை மீதான வாக்கெடுப்பை நாளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

                                  அதனடிப்படையில், வாக்கெடுப்பு ஜெனீவா நேரத்தில் முற்பகல் 9 மணிக்கும்(இலங்கை நேரத்தின் பிராகரம் இன்று பிற்பகல் 1 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

                                  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை, இன்றைய தினம் (22)

                                  இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற தலைப்பிலான

                                  குறித்த யோசனை, பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, வடக்கு மெஸிடோனியா, மொன்டினீக்ரோ, மலாவி ஆகிய நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ளது

                                    Posted in Uncategorized

                                    மனைவி மகளை வெட்டிய கணவன்- தப்பி ஓட்டம்

                                    மனைவி மகளை வெட்டிய கணவன்- தப்பி ஓட்டம்

                                    வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில்

                                    வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்றையதினம் இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

                                    சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

                                    நேற்றையதினம் (20) இரவு தனது மகளும், மனைவியும் வீட்டில் இருந்த நிலையில் கணவனால் வாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

                                    இதனால் படுகாயமடைந்த அவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

                                    வாள்வெட்டில் ஈடுபட்ட நபர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                                    வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

                                      Posted in Uncategorized

                                      பஸ்ஸில் பிட்பொக்கட் திருடனை மடக்கி பிடித்த மக்கள்

                                      பஸ்ஸில் பிட்பொக்கட் திருடனை மடக்கி பிடித்த மக்கள்

                                      திருகோணமலையிலிருந்து கண்டிக்குச் சென்ற பயணிகள் பஸ்ஸில் பிட்பொக்கட் அடித்த ஒருவரை பொது மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

                                      இச்சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                                      மூதூர் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரேயே பயணிகள் பிடித்து கந்தளாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

                                      இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது:

                                      திருகோணமலையிலிருந்து நேற்று (21) மாலை 4.00 மணிக்குச் கண்டிக்குச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ்ஸில் நான்காம் கட்டையிலிருந்து ஏறிய

                                      சந்தேக நபர் பஸ்ஸில் தூங்கிய பிரயாணி ஒருவரின் பணப்பொதியை திருடிய வேளை மற்றொருவர் கண்டு கூக்குரலிட்டுள்ளார்.

                                      இதனை தொடர்ந்து பயணிகள் சந்தேக நபரை பிடித்து கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                                      சந்தேக நபர் தொடர்பாக திருகோணமலை, கந்தளாய் மற்றும் தம்பலாகாமம் போன்ற பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                                      சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.