Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

அமெரிக்காவில் கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் 2,246 பேர் மரணம்

அமெரிக்காவில் கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் 2,246 பேர் மரணம்

அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமாரா 2,246 பேர் மரணமாகியுள்ளனர்

மேலும் 80,625 பேர் பாதிக்க பட்டுள்ளனர் இதே நாளில் பிரிட்டனில்

345 பேர் மரணித்தும் 8,523 பேர் பாதிக்க பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது

Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

லண்டனில் தமிழ் பெண்ணிடம் 3000 பவுண்டுகளை மிரட்டி பறித்த கும்பல்- வீடியோ

லண்டனில் தமிழ் பெண்ணிடம் 3000 பவுண்டுகளை மிரட்டி பறித்த கும்பல்- வீடியோ

பண மோசடி

லண்டனில் தமிழர்களிடம் HMRC என கூறி பணம் பறிக்கும் ,கும்பல் ஒன்று சிக்கியது ,அவர்களது மிரட்டல்களையும் ,எவ்வாறு

மோசடியில் ஈடுப்புகின்றனர் என்பதை தமிழ் வாலிபர் ஒருவர் பதிவு செய்து வெளியிட்ட திகில் காணொளி இது,அவர் அந்த கும்பலை எவ்வாறு கழுவி ஊத்தியுள்ளார் என்பதற்கு இது நல்ல சான்று

பணத்தை இழந்த தமிழ் பெண்

சில நாட்களுக்கு முன்னர் லண்டன் குறைடன் பகுதியில் தமிழ் பெண்ணிடம் மூவாயிரம் பவுண்டுகளை குறித்த கும்பல் மோசடி செய்துள்ளது

பணத்தை செலுத்திய பின்புதான் இவர்கள் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் என அந்த பெண் புரிந்துள்ளார் ,

அவர் மொன்சா காட் மூலம் பணத்தை செலுத்தியதால் அதனை மீள் பெற முடியாத நிலையில் சிக்கியுள்ளார் ,வங்கிகள் மூலம் செலுத்தி இருப்பின் அவர் அதனை பெற்று கொண்டிருக்க முடியும் .

பொலிஸ் விசாரணை

குறித்த விடயம் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் ,தமிழர்களே இந்த காணொளியை முடிந்தவரை உங்கள்

நண்பர்களுக்கு பகிருங்கள் , இவ்வாறான மோசடி கும்பலிடம் இருந்து ஏனையவர்களை காப்பாற்றி கொள்வோம்

இதில் அழுத்தி காணொளி பார்க்க

https://www.youtube.com/watch?v=KNqvk7jSfrY&feature=youtu.be
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

நம்பமுடியா அதிசயம் -22 வாரத்தில் பிறந்த சிசு – படம் உள்ளே

நம்பமுடியா அதிசயம் -22 வாரத்தில் பிறந்த சிசு – படம் உள்ளே

பிரிட்டன் University Wishaw மருத்துவ மனையில் இருபத்தி இரண்டு வாரங்கள் ஆன நிலையில் பெண் ஒருவர் சிசு ஒன்றை

பிரசவித்துளளார் ,இவ்வாறு பிறந்த சிசு சுமார் நான்கு மாதங்கள் மருத்துவ மனையின் கண்ணாடி பெட்டிக்குள் வைத்து சிகிச்சை

வழங்க பட்டு வந்தது ,அதன் பின்னர் தற்போது சிசு பெற்றோருடன் வீட்டுக்கு

அனுப்பி வைக்க பட்டுளளார் ,தாய் சேய் மிக நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

மேற்படி சம்பவம் உலக அரங்கத்தில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோ விதிமீறல் – 500 பேருக்கு தண்டம்

பிரிட்டனில் கொரனோ விதிமீறல் – 500 பேருக்கு தண்டம்

இங்கிலாந்தில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து ,அதனை கட்டு படுத்த விதிகள் விதிக்க பட்டன

,இவ்வாறான நிலையில் கடந்த 90 நாட்களில் மட்டும் சுமார் 500 பேருக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதாக ஸ்கொட்லாந்து யார்டு

தெரிவித்துள்ளதுடன் .இதில் பலது கிரிமினல் குற்றமாகவும் பதிவு செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

அதிக கூடிய தண்டம் ஐம்பதாயிரம் பவுண்டுகள் வரை இடம்பெற்றுள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

17 வயது வாலிபனை போத்தலால் அடித்து சித்திரவதை செய்த 2 பெண்கள்

17 வயது வாலிபனை போத்தலால் அடித்து சித்திரவதை செய்த 2 பெண்கள்

திடீர் தாக்குதல்

பிரிட்டன் Johnstone, Renfrewshire பகுதியில் 17 வயது வாலிபன் ஒருவனை 25 வயதுக்கு உட்பட்ட இரு பெண்கள் அவனை சாராய

போத்தலினால் அடித்து மண்டையில் உடைத்து ,உடைந்த துகள்கள் மூலம் கால் ,மற்றும் உடம்பில் பெயரை எழுதியுள்ளனர்

இந்த வதையால் உடலில் பலத்த வெட்டு காயங்கள் காணப்பட்டுள்ளன

மீட்பு

இவ்வாறான நிலையில் மீட்க பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டார் ,

தொடர்ந்து அவனது வாழ்நாளில் மீள் இயங்க முடியாத பெரும் நெருக்கடி நிலைக்கு மேற்படி சம்பவம் இட்டு சென்றுள்ளது

நீதிமன்ற விசாரணை

இதனை அடுத்து குறித்த நபர்களுக்கு பல்லாண்டு சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது ,தாக்குதலை நடத்தியவர்கள் ,போதைவஸ்து

,மற்றும் மன நலன் பாதிக்க பட நிலையில் இருந்தமையால் தண்டனை காலம் குறைக்க பட்டுள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் -போலிஸ் நடமாடும் கமரா -27,000 பேருக்கு தண்டம் – படம் உள்ளே

லண்டனில் -போலிஸ் விசேட வேட்டை நடமாடும் கமரா மூலம்-27,000 பேருக்கு தண்டம் – படம் உள்ளே

பொலிஸ் கமரா

பிரிட்டனில் சாலை வேக கட்டுப் பாட்டை கண்காணிக்க காவல்துறையினர் தற்பொழுது நடமாடும் கமராவை நகர்த்தி வருகின்றனர் ,

காவல்துறை வான் ஒன்றில் இந்த கமரா பொருத்த பட்டு இருக்கும் ,இதனை முக்கிய சாலைகளில் நிறுத்தி விடுவார்கள்

வேகமாக வரும் கார்கள் இதில் சிக்கி விடுகின்றன

சிக்கிய கார்கள்

இவ்விதம் கடந்த ஆண்டில் மட்டும் ஏ 282 ,கென்ட் சாலையில் சுமார் 27,000 கார்கள் சிக்கியுள்ளன

மேற்படி கமரா அதிவேக சாலைகளிலும் நிறுத்த பட்டுள்ளன
சாரதிகள் எச்சரிக்கை, போலீசார் இவ்வாறும் உங்களை துரத்து கின்றனர்

வீதி கண்காணிப்பு

பிரிட்டனில் சாலை வேக கட்டுப்பாட்டை கண்காணிக்க காவல்துறையினர் தற்பொழுது நடமாடும் கமராவை நகர்த்தி வருகின்றனர் ,

காவல்துறை வான் ஒன்றில் இந்த கமரா பொருத்த பட்டு இருக்கும் ,இதனை முக்கிய சாலைகளில் நிறுத்தி விடுவார்கள்

வேகமாக வரும் கார்கள் இதில் சிக்கி விடுகின்றன

தண்டம்

இவ்விதம் கடந்த ஆண்டில் மட்டும் ஏ 282 ,கென்ட் சாலையில் சுமார் 27,000 கார்கள் சிக்கியுள்ளன

மேற்படி கமரா அதிவேக சாலைகளிலும் நிறுத்த பட்டுள்ளன
சாரதிகள் எச்சரிக்கை, போலீசார் இவ்வாறும் உங்களை துரத்து கின்றனர்

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோ நோயில் சிக்கி 130,000 பேர் மரணம்

பிரிட்டனில் கொரனோ நோயில் சிக்கி 130,000 பேர் மரணம்

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் ஒருலட்சத்து முப்பதாயிரம் பேர்

மரணமாகியுள்ளனர் ,மேலும் இதைவிட வீடுகள் ,வயோதிபர்

மடங்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை இதுவரை இணைக்கப்படவில்லை

இரண்டாம் அலையாக பரவி வரும் நிலையில் இவ்விதம் வசித்து

வந்தவர்கள் விபரங்கள் அறிவிக்க பட்டால் அது பல்லாயிரமாக உயரும் என எதிர் பார்க்க படுகிறது

இரண்டாம் அலையில் ,மருத்துவமனைகளில் இறந்தவர் விபரங்கள் மட்டுமே வெளியிட பட்டு வந்துள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் லொக்கடவுன் நீக்க படுகிறது -பாடசாலைகள் திறப்பு – விபரம் உள்ளே

பிரிட்டனில் லொக்கடவுன் நீக்க படுகிறது -பாடசாலைகள் திறப்பு – விபரம் உள்ளே

பிரிட்டனில் நடைமுறையிலிருக்கும் லொக்கடவுன் திறக்க படுகிறது

அவை கட்டம் கட்டமான நகர்வின் ஊடக திறக்க பட உள்ளது என ஆளும் அரசு அறிவித்துள்ளது

எதிர் வரும் எட்டாம் திகதி பாடசலைகள் திறக்க படுகின்றன ,இரு வீட்டார் ,அல்லது ஆறு பேர் ஒன்றாக கலந்து பேச முடியும் ,

அதனை அடுத்து சித்திரை 12 ஆம் திகதி ,பார்கள் நீச்சல் தடாகங்கள்,ஆடம்பர கடைகள் உள்ளிட்டவைகள் திறக்க படும்

வைகாசி மாதம் 17 ஆம் திகதி நிகழ்கால கொரனோ விதிகளில் திடீர் மாற்றம் தளர்வு மேற்கொள்ள படுகிறது

அதன் படி ஒரே தடவையில் முப்பது பேர் கலந்து கொள்ள முடியும், மக்கள் வீதிகளில் நடமாட முடியும் ,அதாவது முழு லொக்கடவுன் நீக்க படுகிறது என்பதாக அரசு அறிவித்துள்ளது

Posted in குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

காரோடு சிறுவர்களை கடத்தி சென்ற திருடர்கள்

பிரிட்டன் புறநகர் பகுதியாக விளங்கும் Birmingham பகுதியில் பதின் ஐந்து வயதுடைய திருடர்கள் சிறுவர்களுடன் காரினை கடத்தி சென்றுள்ளனர் .

சிறுவர் கடத்தல்

இயந்திரத்தை ஆன் செய்தபடி காரினை விட்டு சென்ற தந்தைக்கு ஏற்பட்ட மேற்படி செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

மேற்படி சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு விரைந்து தெரிவிக்க பட்ட நிலையில் ,

பொலிசார் சுற்றிவளைப்பு

விரைந்து செயல் பட்ட மிட்லண்ட் காவல் துறையினர் கடத்தல் காரர்களை காருடன் மடக்கி பிடித்தனர்

சிறுவர்கள் எவ்வித பாதிப்பும் இன்றி மீட்க பட்டனர்

மேற்படி இரு கார் திருடர்களும் கைது செய்யப்பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

திருடர்கள்
,இவ்விருவரும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடும் திருடர்கள் என கண்டு பிடிக்க பட்டுள்ளது

பெற்றவர்களே யாக்கிரதை பிள்ளைகளை இவ்விதம் காருக்குள் விட்டு செல்லாதீர்கள்

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் பற்றி எரிந்த warehouse- அடித்துமூடப் பட்ட வீதிகள்

லண்டனில் பற்றி எரிந்த warehouse- அடித்துமூடப் பட்ட வீதிகள்

தீ பரவல்

லண்டன் எம் 67 வேக சாலைக்கு அருகில் அமையப் பெற்றிருந்த warehouse

ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது ,இந்த தீ பரவல் அதிவேகமாக பரவிய நிலையில் அந்த கடை முற்றாக எரிந்து அழிந்துள்ளது

இந்த தீ பரவல் வானில் பெரும் புகை மூட்டங்களாக காணப்பட்ட நிலையில் குறித்த வேக சாலை அடித்து மூடப் பட்டதுடன்

வீட்டு யன்னல்கள் பூட்டு

அயலில் உள்ள வீட்டு யன்னல்கள் யாவரும் அடித்து பூட்டும்படி உத்தரவிடப்பட்டது

இந்த தீயினை கட்டுப்படுத்த சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் களத்தில் குவிக்க பட்டனர்

தொடரும் விசாரணைகள்

இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் யூலைக்குள் அனைவருக்கும் கொரனோ தடுப்பூசி -அரசு

பிரிட்டனில் யூலைக்குள் அனைவருக்கும் கொரனோ தடுப்பூசி -அரசு

இங்கிலாந்தில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை தடுக்க எதிர்வரும்

யூலை மாத இறுதிக்குள் அனைவருக்கும் கொரனோ தடுப்பூசிகள் செலுத்த படும் என தெரிவிக்க பட்டுள்ளது

தற்பொழுது வயதனவர்களுக்கு முன்னுரிமை வழங்க பட்டு செலுத்த

பட்டு வருவதுடன் ,நோயினால் பாதிக்க பட்டவர்களுக்கு செலுத்த பட்டு வருகிறது

எதிர் வரும் 90 நாட்களுக்கு அணைத்து மக்களுக்கும் செலுத்த படும் என்றஅறிவிப்பு வெளியாகி மக்களுக்கு மகிழ்ச்சி செய்தியை வழங்கியுள்ளது அரசு

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கிழக்கு லண்டன் ASDA கடைக்குள் ரவுடிகள் சண்டை – வீடியோ

லண்டன் Asda கடைக்குள் ரவுடிகள் திடீர் போத்தல் சண்டை – உடைக்க பட்ட கடை – வைரலாகும் வீடியோ

கடைக்குள் சண்டை

கடந்த தினம் இரவு பத்து முப்பது மணியளவில் கிழக்கு லண்டன் பகுதியில் உள்ள பிரபல அஷ்டா பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள்

ஆசிய இன வாலிபர் குழுவுக்கு இடையில் திடீர்சண்டை மூண்டது ,இதன் பொழுது அங்கிருந்து போத்தல்களை எடுத்து இவர்கள் தாக்குதலை நடத்தினர்

வைரலாகும் வீடியோ

மேற்படி காட்சியை பதிவாக்கிய நபர் அதனை வெளியிட்டுள்ளார் ,போலீஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது ,

இதுவரை மேற்படி சம்பவம் தொடர்பில் யாரும் கைது செய்யப்படவிலை ,

குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

https://www.youtube.com/watch?v=CnzhMuLcXK4
இதில் அழுத்துவதன் ஊடாக காணொளி பார்க்க முடியும்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

இங்கிலாந்தில் லொறிகளுக்கு கமரா பொருத்தவேண்டும் -இல்லை எனின் 550 நாளுக்கு தண்டம்

பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து பிரிந்து சென்றதன் பின்னர் புதிய வீதி போக்குவரத்து நுழைவோர் சட்டத்தை அறிமுக படுத்துகிறது ,

புதிய சட்டம்

நாள் ஒன்றுக்கு 10,000 ஆயிரம் லொறிகள் ஐரோப்பாவில் இருந்து நுழைகின்றன ,இவ்விடம் நுழையும் லாரிகள் பின்புறம் ,முன்புறம்

கமராக்கள் பொருத்தி இருக்க வேண்டும் ,வீதி விபத்துக்கள் மற்றும் மரணங்களை தடுக்க இந்த விடயத்தை பிரிட்டன் அரசு

புதிய சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதாக கூறுகின்ற பொழுதும்விடயம் அதுவல்ல என்பதே உண்மையாகும் ,

அகதிகள் நுழைவு

பிரான்சில் இருந்து இவ்விதம் நுழையும் லாரிகள் மூலம் அகதிகள் அதிகளவு நுழைந்து

வருகின்றனர் ,இதனால் பிரிட்டன் அரசு பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது ,அதனை தடுக்கவே இந்த விடயத்தை அறிமுக படுத்தியுள்ளது

தண்டம்

கமராக்கள் பொருத்த படாது பிரிட்டனுக்குள் நுழையும் லொறிகளுக்கு நாள் ஒன்றுக்கு 550 பவுண்டுகள் தண்டம் அறவிட படும் என் ஏச்சரிக்க பட்டுள்ளது

இது குறித்த விடயம் தெரியாது பிரான்சின் எல்லைகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட லாரிகள் காத்து நிற்கின்றன ,அவ்வாறு

உள்ள சாரதிகளுக்கு இந்த விடயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ,இங்கே நுழையும் பொழுது அவர்களை பல ஆயிரத்தை தண்டமாக செலுத்தும் நிலை ஏற்பட போகிறது

கொரனோவால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை இவ்விதம் கட்டியெழுப்ப ஆளும் அரசு முனைவதை இதன் ஊடாக காண முடிகிறது

Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

லண்டன் பேர்மிங்கத்தில் பாட்டி – 150 பேரை மடக்கிய பொலிஸ் – video

பிரிட்டன் பேர்மிங்காம் பகுதியில் உள்ள நைட் கிளப் ஒண்றில் மிக இரகசியமாக நடத்த பட்ட பாட்டி ஒன்று பொலிஸாரின் திடீர் முற்றுகைக்கு உள்ளானது

காட்டி கொடுத்த உளவு விமானம்

காவல்துறையினரின் ஆள் இல்ல டிரோன் ரக உளவு விமானம் அங்கு அதிக நபர்கள் கூடி நிற்பதை காட்டி கொடுத்தது ,உடனே உஷாரான போலீசார் ஆயுதங்களுடன் சுற்றிவளைத்தனர் ,

பொலிசார் மீது தாக்குதல்

இவர்களை கண்ணுற்ற குழுவினர் பெலிட் ,மற்றும் பியர் போத்தல்கள் கொண்டு தாக்குதலை நடத்தினர் ,இதில் சில போலீசார் படுகாயமடைந்தனர்

தண்டம்

நிகழ்கால கொரனோ தடையை மீறி இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் தண்டம் அறவிட பட்டுள்ளது

,மேலும் இதனை ஒழுங்கு செய்தவருக்கு பத்து ஆயிரம் பவுண்டுகள் மற்றும் ,அந்த நைட்கிளப் உரிமையாளருக்கும் பத்து ஆயிரம் வழங்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது

உள்ளே யாருக்கும் தெரியாது மறைந்திருப்பதாக நினைப்பவர்களே யாக்கிறதை ,தலைக்கு மேலே ஆள் இல்லா உளவு விமானம் பறக்கிறது

அயல் வீடு சென்றவர் சிக்கினார்

அயல் வீடு ஒன்றுக்கு சென்றவரையும் மேற்படி ரக விமானம் காட்டி கொடுத்துள்ளது ,உளவு விமானத்தை கண்டு ஓட்டம் பிடித்துள்ளார்

எனினும் அவரை பின்தொடர்ந்த போலீசார் அவருக்கும் தண்டம் வழங்கியுள்ளனர்

    Posted in குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

    லண்டனில் கள்ள வங்கி அட்டை மோசடி – சிக்கிய கும்பல் – ஆடம்பர வாழ்க்கை அம்பலம்

    லண்டனில் கடந்த 14 மாதங்களுக்கு மேலாக போலியான நிறுவனங்களை உருவாக்கி அதன் ஊடாக மக்களின் வங்கி விபரங்களை திருடி அதன் ஊடாக பணத்தை திருடி ஆடம்பர

    வாழ்ககை வாழ்ந்து வந்த வாலிப கூட்டம் ஒன்றை குற்ற தடுப்பு பிரிவினர் மடக்கி பிடித்தனர்

    ஆடம்பர வாழ்க்கை

    ஐந்து நட்சத்திர விடுதி மற்றும் ரோலெஸ்க்ஸ் கைக் கடிகாரம் ,ஆடம்பர கார்கள் ,உல்லாச விடுதிகளில் விடுமுறை என சுற்றி திரிந்த கும்பலே வசமாக சிக்கியுள்ளது

    அதிக விலை கூடிய ரோலெக்ஸ் கைக் கடிகாரம் ஒன்றை கொள்வனவு செய்திட சென்ற பொழுது மேற்படி கும்பல் சிக்கியுள்ளது

    ,கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் மேற்படி திடுக்கிடும் விபரங்கள் வெளியாகியுள்ளது

    வாலிப திருடர்கள்

    இந்த கொள்ளையில் ஈடுபட்ட அனைவரும் 23 முதல் 32 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது ,இதில் அனைவரும் முஸ்லீம்கள் என்பதும் தெரிய வந்துள்ளது

    குற்ற தடுப்பு பிரிவினர் விசாரணையின் பின்னர் அனைவரும் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,போலீஸ்

    விசாரணைகளில் 90,000 பவுண்டுகள் வரை மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது

    எனினும் இதனை விட மோசடிகள் அதிகமாக இருக்கலாம் என நம்ப படுகிறது ,


    ஓசியில உடம்பு வளர்க்கும் கூட்டம் அப்பாவி மக்கள் விபரங்களை திருடி அதன் ஊடே இந்த ஆடம்பர வாழ்க்கையை

    அனுபவித்திருக்கின்றனர் ,வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும் என கூறியே விபரங்களை பெற்று இந்த மோசடியில் இந்த கும்பல் ஈடுபட்டுள்ளது

    மக்களே உசார்

    மக்களே உசார் தொலைபேசி வாயிலாக யாராவது இவ்வாறு முனைந்தால் எதுவும் தெரிவிக்காதீர்கள் ,வங்கிக்கு நேரடியாக சென்று செய்து கொள்ளுங்கள்

    இவர்களிடம் மோசம் போன அனைவரும் ,அழைத்தவர்கள் யாவரும் வங்கியில் உள்ளவர்கள் என தெரிந்தே தமது வங்கி விபரங்களை தெரிவித்தன் விளைவே இந்த விடயம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      பிரிட்டன் கடலில் போதைவஸ்து படகை துரத்தி பிடித்த கடற்படை – 2.6 தொன் மீட்பு

      பிரிட்டன் கடற்பரப்பில் சந்தேகித்திற்கு இடமான முறையில் சென்று கொண்டிருந்த மீன் பிடி படகு ஒன்றை கடற்படையினர் வழிமறித்தனர் ,அப்போது அந்த படகு அவர்கள் முற்றுகையில்

      இருந்து தப்பிக்க முயற்சித்தது ,சந்தேகம் அடைந்த அவர்கள் அதனை துரத்தி பிடித்தனர் ,

      சுற்றைவளைக்க பட்ட படகில் இருந்து சுமார் 11 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான போதைவஸ்து மீட்க பட்டது

      கடந்த பத்து மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 2,6 தொன்

      எடையுள்ள போதைவஸ்து மீட்க பட்டுள்ளதாக ராயல் கடற்படை அறிவித்துள்ளது

      இந்த ஆண்டில் சிக்கிய மிக பெரும் போதைவஸ்து கடத்தல் இதுவாக பதிவு பெற்றுள்ளது

        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

        அணுசக்தி ஆய்வுகளை நிறுத்திய ஈரான் – அடுத்து என்ன ..?

        ஈரான் தனது நாட்டின் பாதுகாப்பபு தேவை கருதி அணுசக்தி ஆய்வில் ஈடுபட்டது ,இதனை அடுத்துஅந்த நாடு மீது அமெரிக்கா பொருளாதாரா தடையை விதித்தது ,

        தற்பொழுது தாம் மேலும் தொடர்ந்து அது தொடர்பிலான ஆய்வில் ஈடுபடுவதை நிறுத்தி விட்டோம் என

        ஈரான் தெரிவித்துள்ள நிலையில் அந்த நாடு மீது விதிக்க பட்ட

        பொருளாதார தடையை அமெரிக்கா நீக்கும் என எதிர் பார்க்க படுகிறது

        அவ்விதம் பொருளாதார தடையினை நீக்கிட மறுத்தால் மீளவும் அனுசக்கதி செறிவாக்கத்தில் ஈரான் ஈடுபடும் என்ற நம்ப படுகிறது

        அமெரிக்கா ஆளும் அதிபர் ஜோ பைடன் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே

        ஈரானுடன் நடத்த பட்ட ரகசிய பேச்சுக்களி பொழுது இவை

        தெரிவிக்க பட்டதாக அப்போதே செய்திகள் வெளியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          லண்டனில்-கொரனோ வேளை நாடுகளுக்கு பயணித்த நால்வருக்கு 10,000 தண்டம்

          பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து சுமார் 38 நாடுகளுக்கு செல்ல அரசு தற்கால தடை விதித்துள்ளது ,அவ்வாறு தடைவிதிக்க பட்ட நாடுகளுக்கு சென்று மீள்

          பிரிட்டனுக்கும் நுழைந்த நால்லவருக்கு சுமார் பத்து ஆயிரம் பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது

          மேலும் அவர்கள் கொரனோ சோதனை முடியும் வரை நாள் ஒன்றுக்கு 152 பவுண்டுகள் செலுத்த வேண்டு, அது தவிர நாள்

          ஒன்றுக்கு தனிமை படுத்த பட்ட முகாமில் தங்குவதற்கு உரிய பணமும் செலுத்த படவேண்டும்


          என தெரிவிக்க பட்டுள்ளது
          இதுக்கு தானே மகனே ஆசை பட்டாய்

          மக்களே யாகாக்கிரதை இன்று அவர்களுக்கு நாளை உங்களுக்கு

            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            15 நாடுகளில் முக்கிய பதவிகளில் இந்தியர்கள்

            15 நாடுகளில் முக்கிய பதவிகளில் இந்தியர்கள்

            இந்தியாவை பூர்வீகமாக கொண்டவவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து

            உள்ளிட்ட நாடுகளில் முக்கிய காபினெட் பதவிகளில் உள்ளனர் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது

            அமெரிக்காவின் உப ஜனாதிபதி இந்தியாவை பூர்வீகமாக கொண்டவராக

            உள்ளார் அதேபோல் பிரிட்டன் நிதி அமைச்சர் உள்ளிட்டவர்களும் முக்கியபொறுப்புக்களில் உள்ளனர்

            லண்டனில் நபர் வெட்டிக்கொலை

            இவ்வாறு பதின் ஐந்து நாடுகளில் இந்தியர்களின் இந்த அமர்வு பெரும் சாதனையாக பார்க்க படுகிறது

            எனினும் இவர்களினால் இந்தியாவுக்கு நன்மைகள் கிட்டுமா என்பது தான் இன்றைய கேள்வியாக உள்ளது

            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            லண்டனில் நபர் வெட்டிக் கொலை – அதிர்ச்சியில் பொலிஸ்

            ஓட ஓட வெட்டி கொலை செய்ய பட்ட நபர் – சம்பவ இடத்தில் துடி துடித்து இறந்த பரிதாபம் – நடந்தது என்ன விசாரணையில் பொலிஸ்

            கடந்த தினம் இரவு 7,40 மணியளவில் Highgate Road, Kentish Town, பகுதியில் நபர் ஒருவரை மர்ம நபகள் துரத்தி கோரமாக வெட்டி

            கொன்றனர் ,பலத்த கத்தி குத்து தாக்குதலுக்கு உள்ளான இவர் மீட்க பட்டு சிகிச்சை வழங்க பட முன்னரே சம்பவ இடத்தில இறந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

            மேற்படி கொலை செயலை புரிந்த இருவர் கைது செய்ய

            பட்டுள்ளனர் ,இந்த படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை

            தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,லண்டன்

            பகுதியில் இவ்விதமான வன்முறை குற்ற சம்பவங்கள் சமீப காலங்களாக அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது