Tag: மரண தண்டனை
குற்றவாளிக்கு மரண தண்டனை
குற்றவாளிக்கு மரண தண்டனை
குற்றவாளிக்கு மரண தண்டனை ,கொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரு குற்றவாளி, அனுராதபுரம் முந்தைய உயர் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹெவாவசம் அவர்களால் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
ஹபரானாவைச் சேர்ந்த குற்றவாளி
ஹபரானாவைச் சேர்ந்த குற்றவாளி ஏ.ஜி.மிலன் குமார (33), 1915 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அப்பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.ஓஷன் மதுரங்கா (22) என்பவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்திருந்தார்.
கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் சுருக்கமற்ற விசாரணைக்குப் பிறகு, அவர் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டார்.
உயர் நீதிமன்ற நீதிபதி
தீர்ப்பை வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதி, குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது என்று குறிப்பிட்டார்.
அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் சார்மிகா குருகே மற்றும் யோமாலி நாகோடவிதானா ஆகியோர் அரசுத் தரப்பிலும், சட்டத்தரணி லெவ்கே
பண்டாரா குற்றவாளி சார்பிலும் ஆஜரானார்கள். அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் முன்னாள் ஜே.எம்.ஓ.
டாக்டர் பனீதா செனவிரத்ன, ஹபரானா காவல்துறை மற்றும் பலர் சாட்சியம் அளித்தனர்.
மரண தண்டனை மன்னிப்பு வழங்குமாறு பொன்சேகா வேண்டுதல்
மரண தண்டனை மன்னிப்பு வழங்குமாறு பொன்சேகா வேண்டுதல்
மரண தண்டனை மன்னிப்பு வழங்குமாறு பொன்சேகா வேண்டுதல் ,அமரகீர்த்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறு பொன்சேகா ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறார்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட
நபர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறு இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் சிறப்பு கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில்
கொழும்பில் நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
இந்த மாநாட்டின் போது, அத்தகைய நபர்களை மரண தண்டனையிலிருந்து விடுவிப்பது ஜனாதிபதியால் ஒரு பேனாவைத் தட்டுவதன் மூலம் செய்ய முடியும் என்று அவர் கூறினார்.
“அமரகீர்த்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு மன்னிப்பு வழங்குங்கள்.
அத்தகைய நபர்களை மரண தண்டனையிலிருந்து விடுவிப்பது என்பது ஜனாதிபதி ஒரு பேனாவைத் தட்டுவதன் மூலம் செய்ய வேண்டிய ஒன்று” என்று அவர் கூறினார்.
இலங்கை பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி கொலை
செய்யப்பட்ட வழக்கில் 12 பேருக்கு பிப்ரவரி 11 ஆம் தேதி, கம்பஹா உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு, மரண தண்டனை விதித்தது.
இலங்கையில் 814 மரண தண்டனை கைதிகள்
இலங்கையில் 814 மரண தண்டனை கைதிகள்
இலங்கையில் 814 மரண தண்டனை கைதிகள் சிறைகளில் தடுத்து வைக்க பட்டுள்ளதாக சிறை சாலை ஆணையகம் அறிவித்துள்ளது .
மரண தண்டனை விதிக்க பட்டவர்களில்
இவ்வாறு மரண தண்டனை விதிக்க பட்டவர்களில் ஐந்து வெளி நாட்டவரும் அடங்கும் என குறிப்பிட படுகிறது .
இந்த மரண தணடனை குற்றத்தை எதிர்நோக்கியுள்ள கைதிகளில் , ஒருவர் பயங்கரவாத குற்ற சாட்டின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அப்பாவி தமிழர்களை பயங்கரவாதிகள் என குற்றம் சுமத்தி
அப்பாவி தமிழர்களை பயங்கரவாதிகள் என குற்றம் சுமத்தி சிறைகளில் தடுத்து வைத்து கொடுமை படுத்துகிறது சிங்க பவுத்த மேலாதிக்கவாத அரசுகள் .
இப்படி செய்திகளை அடித்து விடுகின்றமை கவலை தருவதாக மக்கள் மன்றம் குற்றம் சுமத்துகிறது .
இளைஞன் படுகொலை ஐவருக்கு மரண தண்டனை
இளைஞன் படுகொலை ஐவருக்கு மரண தண்டனை
இளைஞன் படுகொலை ஐவருக்கு மரண தண்டனை ,இளைஞன் படுகொலை: ஐவருக்கு மரண தண்டனை இளைஞன் ஒருவரை கிரிக்கெட் மட்டை மற்றும் பொல்லுகளால் தாக்கிபடுகொலை செய்தனர் என குற்றஞ்சாட்டப்பட்ட
ஏழுவரில் ஐவரை குற்றவாளியாக இனங்கண்டகொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, ஐவருக்கும் மரண தண்டனைதீர்ப்பளித்து,
ஏனைய இருவருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்தார். தற்போது 27 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட இருவர், சம்பவம்இடம்பெற்ற போது, 15 மற்றும் 17 வயதுடைய சிறுவர்களாக இருந்தனர். அதனால்,அவ்விருவருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்குளிய, மோதரை பகுதியில் இரண்டு கோவில்களுக்கு இடையில் வீடொன்றில் வைத்து, இன்றைக்கு 13 வருடங்களுக்கு முன்னர் 21 வயதான பிரான்சிஸ் சுரஞ்சன் என்ற இளைஞனே படுகொலை செய்யப்பட்டார்.
பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றங்கள்எவ்விதமான சந்தேகத்துக்கும் இடமின்றி, நிரூபிக்கப்பட்ட மையால், அவர்களைகுற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க,அவர்களுக்கு மேற்கண்டவாறு தண்டனையை, திங்கட்கிழமை (28) விதித்தார்.
2012 செப்டம்பர் 26 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாளொன்றில், பிரான்சிஸ்சுரஞ்சன் என்ற இளைஞனை கிரிக்கெட் மட்டைமற்றும் பொல்லுகளால் தாக்கி படுகொலை செய்தனர் என ஒன்பது பேருக்கு எதிராக சட்டமாஅதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, அதில் இருவர் மரணமடைந்துவிட்டனர்.அதனால், ஏழு பேருக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு மேற்கண்டவாறு தீர்ப்பளிக்கப்பட்டது
கற்பழிப்பு குற்றவாளிக்கு ஈரான் பொதுவெளியில் மரண தண்டனை
கற்பழிப்பு குற்றவாளிக்கு ஈரான் பொதுவெளியில் மரண தண்டனை ,டஜன் கணக்கான வழக்குகளில் தண்டிக்கப்பட்ட தொடர் கற்பழிப்பு குற்றவாளிக்கு ஈரான் பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றியது.
இரண்டு தசாப்தங்களாக டஜன் கணக்கான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி ஒருவரை அதிகாரிகள் பொது இடத்தில் தூக்கிலிட்டதாக ஈரானின் அரசு ஊடகம் கூறுகிறது.
கடந்த இரண்டு தசாப்தங்களாக டஜன் கணக்கான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஈரானிய ஆடவர் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
முன்னதாக அக்டோபரில் ஈரானின் உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்ததை அடுத்து முகமது அலி சலாமத் தூக்கிலிடப்பட்டதாக அரசுக்கு
சொந்தமான ஈரான் செய்தித்தாள் கூறியது. மேற்கு நகரமான ஹமேடானில் உள்ள ஒரு கல்லறையில் செவ்வாய்க்கிழமை விடியற்காலையில் அவர் கொல்லப்பட்டார்.
நகரில் மருந்தகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்த 43 வயதுடைய சலாமத் மீது 200 பெண்கள் கற்பழிப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்
. இவர் கடந்த 20 ஆண்டுகளாக இந்தக் குற்றங்களைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
ஈரானிய ஊடகங்களின் அறிக்கைகள் பல வழக்குகளில், திருமணத்தை முன்மொழிந்த பிறகு அல்லது டேட்டிங் செய்த பிறகு, பாதிக்கப்பட்டவர்களை
பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. ஈரானில் சட்டவிரோதமான கருக்கலைப்பு மாத்திரைகளை அவர் சிலருக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது.
ஈரானில் ஒரு குற்றவாளிக்குக் காரணமான மிகப்பெரிய பலாத்கார வழக்கில் ஜனவரி மாதம் அவர் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதைத்
தொடர்ந்து, நகரின் நீதித் துறையில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி, சலாமத்துக்கு மரண தண்டனை வழங்கக் கோரினர்.
செப்டம்பரில் ஐ.நா நிபுணர்கள், மரணதண்டனையை நிறைவேற்றும் உலகின் முன்னணி நாடுகளில் ஈரானும் இருப்பதாகக் கூறியுள்ளனர். ஈரானில்
அதிகரித்து வரும் மரணதண்டனைகள் மனித உரிமைக் குழுக்களின் எதிர்ப்பைத் தூண்டியுள்ளன.
போதையில் வந்த கணவனுக்கு மரண தண்டனை வழங்கிய மனைவி
போதையில் வந்த கணவனுக்கு மரண தண்டனை வழங்கிய மனைவி
மாத்தறை வெலிகம பிரதேசத்தில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த கணவர், தனது மனைவியால் தாக்கப்பட்டு உயிரிழந்த மற்றுமொரு சம்பவம் பதிவாகியுள்ளது.
42 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
மாத்தறை, வெலிகம, கொஸ்கஹஹேன பிரதேசத்தில் வசிக்கும் இவர், நேற்று இரவு மது போதையில் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை தாக்கியதால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இவர் நேற்று இரவு குடிபோதையில் வந்து மனைவியை தாக்க முயன்றார்.
இதன்போது மனைவி அயலவர்கள் சிலருடன் இணைந்து சேர்ந்து வீட்டின் முன் உள்ள மின்கம்பத்தில் கணவனை கட்டிப்போட்டுள்ளார்.
பின்னர், அவரது மனைவி உள்ளிட்டவர்கள் அவரைத் தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் மயக்கமடைந்த அவர், வெலிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்டப்பட்ட கயிற்றில் கழுத்து இறுகி இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவியை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இஸ்ரேல் உளவாளிக்கு ஈரான் மரண தண்டனை
இஸ்ரேல் உளவாளிக்கு ஈரான் மரண தண்டனை
இஸ்ரேல் உளவாளிக்கு ஈரான் மரண தண்டனை
வழங்கி தீர்ப்பை நிறைவேற்றறிள்ளது .
இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் தொடரும் மோதல்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
கிளிநொச்சி நீதிமன்றில் முதல் மரண தண்டனை
கிளிநொச்சி நீதிமன்றில் முதல் மரண தண்டனை
கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் பெண்ணொருவரை கொலை செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட கிளிநொச்சி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஒன்பது வருடங்களின் பின்னர், வியாழக்கிழமை (09) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
மாத்தளை பகுதியைச் சேர்ந்த இராஜசுலோஜனா என்ற பெண்ணை, 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ம் திகதி கத்தியால் குத்திக் படுகொலை செய்து கிணற்றுக்குள் தள்ளிவிட்டுள்ளார். அதன்பின்னர் அப்பெண் சடலமாக மீட்கப்பட்டார்
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சி பொலிஸார் மற்றும் CID யினர் சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு அயலில் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்கள அலுவலகத்தில் பணியாற்றிய படுகொலைச் செய்யப்பட்ட பெண்ணின் காதலனை கைது செய்தனர்.
அத்துடன் படுகொலைக்கு பயன்படுத்திய கத்தி, அந்த பெண், இறுதியாக வைத்திருந்த அலைலைபேசி மற்றும் உடைகள் என்பவற்றை நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.
கிளிநொச்சி நீதிமன்றில் முதல் மரண தண்டனை
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குக்கான தீர்ப்பை, கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. எம் .ஏ சகாப்தீன் வழங்கினார்.
தீர்ப்பு வாசித்துக் காட்டப்பட்டது. குற்றவாளியின் இறுதிக் கருத்தும் கேட்கப்பட்டது. தான் நிரபராதி என்றார். அதன்பின்னர், நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்றனர். அனைத்து மின்விளக்குகளும் அணைக்கப்பட்டன. அதன்பின்னர், தீர்ப்பின் கீழ் கையொப்பமிட்டு, பேனையை நீதிபதி உடைத்து வீசினார்.
கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட முதலாவது மரண தண்டனை தீர்ப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை
நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை
நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் இன்று (15) மரண தண்டனை விதித்துள்ளது.
2005 ஆம் ஆண்டு திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமைக்காக அதிகாரிகளுக்கு விசாரணையின் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அப்போது திஸ்ஸமஹாராம பொலிஸில் கடமையாற்றிய குற்றப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 4 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு
எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீதிமன்றம் அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தது.
டக்ளஸ் கொலைக்கு உதவி புரிந்த பெண்ணுக்கு மரண தண்டனை
டக்ளஸ் கொலைக்கு உதவி புரிந்த பெண்ணுக்கு மரண தண்டனை
இலங்கையில் சிங்கள ஒட்டு குழு தலைவராக விளங்கி வரும் டக்கிளஸ் தேவானந்தா மீது ,
மர்ம நபர்கள் நடத்திய தற்கொலை தாக்குதலில் சிக்கி காவல்துறையில் உள்ளிட்ட நால்வர் பலியாகினர் .
ஆனால அந்த தாக்குதலில் டக்ளஸ் தேவானந்தா உயிர் தப்பினார் .
அந்த கொலை குற்ற சட்டு தொடர்பிலான விசாரணைகளில் ,
பெண் ஒருவர் உடைந்த புரிந்தார் என தெரிவது,
அவருக்கு மரண தண்டனை விதிக்க பட்டுள்ளது .
ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை
ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை
ஐஸ் போதைப் ஐஸ் என்றழைக்கப்படும் கிறிஸ்டல் மெத்தம்பெட்டமைன் எனும் போதைப் பொருளை 5 கிராம் அல்லது அதற்கு மேல் வைத்திருப்பவர்கள் அல்லது கடத்துபவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண
தண்டனை அல்லது ஆயுள்தண்டனை விதிக்கப்படலாம் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி தெரிவித்தமை வரவேற்கத்தக்க விடயம் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
தனிப்பட்ட ஒருவரின் இலாபத்திற்காக தடை செய்யபட்ட பொருள் என்று அறிந்தும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றமை மாபெரும் குற்றமாகும்.
கடுமையான தண்டனைகள் ஊடாகவே இவ்வாறான செயற்பாடுகளை முற்றிலும் இல்லாதொழிக்க முடியும். பாதுகாப்பு பொது செயலாளரின் இந்த அறிவிப்பானது வரவேற்தக்க விடயமாகும்.
நாட்டில் 22 வயது முதல் 26 வயதுக்குட்பட்ட தரப்பினரே இந்த போதைப் பொருளுக்கு அதிகளவில் அடிமையாகியுள்ளனர்.
என்று தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை குறிப்பிட்டுள்ள நிலையில இவ்வாறான கடுமையான தண்டனைகள் ஊடவே இளைய சமுதாயத்தினரை சரியான பாதைக்கிட்டு செல்ல முடியும் எனவும், பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.
ஹெட்டியாராச்சியின் இச்செயற்பாடு வரவேற்கதக்கது என தெரிவித்துள்ளார்.பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை.
காதலிக்காக ஓட்டலில் கொள்ளை அடித்தவருக்கு மரண தண்டனை
காதலிக்காக ஓட்டலில் கொள்ளை அடித்தவருக்கு மரணதண்டனை
இரண்டு பேரை கொலை செய்து ஓட்டலில் கொள்ளை அடித்தவருக்கு அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 2022-ல் முதல் மரண தண்டனை: காதலிக்காக ஓட்டலில் கொள்ளை அடித்தவருக்கு நிறைவேற்றம்
டொனால்டு கிராண்ட்
அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் வசித்து வந்த டொனால்டு கிராண்ட் என்பவர் கடந்த 2001-ம் ஆண்டு தனது 25 வயதில், ஓட்டல் ஒன்றில் புகுந்து இரண்டு ஊழியர்களை கொலை செய்து கொள்ளையடித்தார்.
டொனால்டு கிராண்ட் ஒரு ஊழியரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ததுடன், மற்றொருவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். விசாரணையின்போது, ஜெயிலில் இருந்து அவரது காதலியை ஜாமீனில் எடுக்க பணம் தேவைப்பட்டதால் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
விசாரணை முடிவில் அவருக்க்கு நீதிமன்றம் கடந்த 2005-ம் ஆண்டு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.
அமெரிக்காவில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததால் டொனால்டு கிராண்டின் தண்டனை நிறைவேற்றம் தள்ளிப்போனது. பல்வேறு மாகாணங்களில் மரண தண்டனை நிறைவேற்றம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒக்லஹோமா மாகாணமும் ஒன்று. கடந்த 2015-ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்ற தடைவிதிக்கப்பட்டது. அந்த தடை கடந்த ஆண்டு நீக்கப்பட்டது. இந்த நிலையில் டொனால்டு கிராண்டிற்கு மூன்று விஷ ஊசிகள் செலுத்தப்பட்டு மரண் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 23 மாநிலங்களில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் 13 பேருக்கு மரண தண்டனை
இந்தோனேசியாவில் 13 பேருக்கு மரண தண்டனை
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அங்கு கடந்த ஜூன் மாதம் 13 பேரைக் கொண்ட ஒரு கும்பல் சிக்கியது.
இந்தோனேசியாவில் பாகிஸ்தானியர் உள்பட 13 பேருக்கு மரண தண்டனை
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அங்கு கடந்த ஜூன் மாதம் போதைப்பொருள் கடத்தியதாக ஒரு பாகிஸ்தானியர், 3
ஈரானியர், 9 இந்தோனேசியர்கள் என 13 பேரைக்கொண்ட ஒரு கும்பல் சிக்கியது. அத்துடன் 400 கிராம் போதைப்பொருளும் (மெத்தாம்பேட்டமைன்) சிக்கியது. இவர்கள் கைது செய்யப்பட்டு,
மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சுகபூமி நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கருதி, 13 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு திட்டம் போட்டுக்கொடுத்த ஈரானியருக்கு, அவரது மனைவியுடன் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனேசியாவில்
போதைப்பொருள் கடத்தலில் ஒரே நேரத்தில் 13 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறுகிறது. தண்டிக்கப்பட்ட அனைவரும் அந்த நாட்டு வழக்கப்படி சுட்டுக்கொல்லப்படுவார்கள்.
பிள்ளைகள் முன்பாக தாயை கற்பழித்த கும்பலுக்கு மரண தண்டனை
பிள்ளைகள் முன்பாக தாயை கற்பழித்த கும்பலுக்கு மரண தண்டனை
பாகிஸ்தான் கிழக்கு சிட்டி பகுதியில் அதிவேக சாலை அருகே பிள்ளைகள் முன்பாக தாயை
கட்டிவைத்து கற்பழித்த இருவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது
நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த நீதிமன்ற விசாரணைகளில் இந்த தீர்ப்பு வழங்க பட்டுள்ளது
இவர்கள் மக்கள் பார்க்க அவர்கள் முன்பாக தூக்கிலிட பட்டு கொலை செய்ய படலாம் என எதிர் பார்க்க படுகிறது












































