Posted in இலங்கை செய்திகள்

யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை தள்ளாடும் இளசுகள்

யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை தள்ளாடும் இளசுகள்

போதைப்பொருள் பாவனையும் அது தொடர்பான சமுதாய சீர்கேடுகளும் இலங்கையின் ஏனைய பிரதேசங்களைப் போன்று வடமாகாணத்திலும் துரிதமாகப் பரவி வருவது அண்மைய நாட்களில் மிக வேதனையுடன் அவதானிக்கப்படுகிறது .

இது பாடசாலைகளினுள் மாத்திரமன்றி, வைத்திய சாலைகள் வளாகங்க களினுள்ளும் உள்நுழைய தொடங்கி உள்ளது.

காலத்தில் தனிமனித ஒழுக்கத்திலும் நற்பண்புகளிலும் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு முன்னுதாரணமாய்த் திகழ்ந்த வடபிரதேசம் இன்று போதை அரக்கனின் கோரப்பிடியில் சிக்குண்டு தனது சுயத்தையும் மாண்புகளையும் இழந்து நிற்கின்றது.

யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை தள்ளாடும் இளசுகள்

போதைப்பாவனையின் நேரடி மற்றும் மறைமுக விளைவுகளால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கிறது.

உடல்ரீதியான பாதிப்புக்களுக்கு மேலதிகமாக உளரீதியான மற்றும் சமூக ரீதியான பாதிப்புக்கள் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்த வல்லதாய் உணரப்படுகின்றன.

போரினால் சிதைவடைந்த வட இலங்கையின் மீள் உருவாக்கத்தின் ஆன்மாவாய் கருதப்படும் இளம் சமுதாயம் போதையின்பால் அடிமையுண்டு தானும் அழிந்து தன் நாட்டையும் அழிவிற்குட்படுத்துவது வேதனையின் உச்சம்

. போதையுடன் தொடர்புடைய குற்றங்களில் நாளாந்தம் அடையாளப்படுத்தப்படும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை நாளைய பிரளயத்தை கட்டியம் கூறி நிற்கின்றது.


இது நாம் விரைந்து செயற்படவேண்டிய தருணம்.போதைப்பொருள் பாவனைக்கு எதிரான பரந்துபட்ட கட்டமைப்பை உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்துவது எமது அனைவரினதும் கடமையாகும்.


போதைப்பொருள் பாவனையை தடுத்தல் என்பது தனியே போதைப்பொருள் பாவனையாளர்களை இனங்கண்டு சிகிச்சை அளிப்பதுடன் முடிந்து விடுவதில்லை.


போதைப்பொருள் நுகர்வோரை இனங்காணுதல், அவர்களுக்கு சிகிச்சை அளித்தல், அவர்கள் மீண்டும் தமது பழைய வாழ்க்கைக்குத் திரும்புவதைஉறுதிசெய்தல்,

மீளவும் போதைப் பழக்கத்துக்குற்படாத வகையிலான அகப்புறச் சூழ்நிலைகளை உருவாக்குதல் மற்றும் தொடர் கண்காணிப்பு வலையமைப்பை ஏற்படுத்துதல் உள்ளடங்கலான ஓர் பல்பரிமாணப் பொறிமுறையாகும்.


இப் பொறிமுறைகளை உருவாக்கி வெற்றிகரமாகச் செயற்படுத்துவதன் மூலம் மாத்திரமே போதைப்பொருள் பாவனைக்கு எதிரான நிலைபேறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்.

இதனை நிறைவேற்றுவதில் வைத்தியர்களாகிய எமக்குள்ள தார்மீகக் கடைமையை உணர்ந்துள்ள நாம்,

தனியே சிகிச்சை அளிப்பதுடன் மாத்திரம் நின்றுவிடாது ஏனைய அனைத்துப் பொறிமுறைகளினூடும் எமது நேரடியான பங்களிப்பை நல்குவதென்னும் தீர்க்கமான முடிவினை மேற்கொண்டுள்ளோம்.

இதற்கு அனைத்து பொறுப்புமிக்க அதிகாரிகள், பெற்றோர் பொதுமக்கள் மற்றும் ஊடகத் துறையினரின் மேலான ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்.

    Posted in இலங்கை செய்திகள்

    உக்கிரேனில் தடுத்து வைக்க பட்டவர்கள் மாணவர்கள் இல்லை இலங்கை

    உக்கிரேனில் தடுத்து வைக்க பட்டவர்கள் மாணவர்கள் இல்லை இலங்கை

    உக்கிரேனில் ரசியா இராணுவத்தால் தடுத்து வைக்க பட்ட இலங்கையர்கள் யாவரும் மருத்துவ மாணவர்கள் அல்ல எனவும் இலங்கை அறிவித்துள்ளது .

    இவர்கள் ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக உக்கிரேனுக்குள் நுழைந்தவர்கள் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது .

    இந்த வெளிவிவகார அமைச்சீன, இந்த பேச்சு மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

    அகதிகளாக சென்றவர்கள் மருத்துவ மாணவர்கள் அல்ல எனபடுவது இலங்கையர்கள் அல்ல இலங்கை தெரிவிக்கிறது .

    எவ்விதம் இலங்கை அலட்சியமாக செயல் படுகிறது என்பதை, இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது .

    இது தான் இன்றைய இலங்கையும் ,அதன் கோமாளி பொறுப்பற்ற ஊழல் நிறைந்த அமைச்சர்களும் .

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் அரிசி விலை அதிகரிக்கும் வெளியான அறிவிப்பு

      இலங்கையில் அரிசி விலை அதிகரிக்கும் வெளியான அறிவிப்பு

      இலங்கையில் எதிர் வரும் மாதம் முதல் அரிசியின் விலை அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன .

      எதிர் வரும் மாதம் அரிசியின் வரி அதிகரிக்க படவுள்ள நிலையில் ,இந்த அரசியின் விலை அதிகரிக்க பட உள்ளது .

      அரசி உற்பத்தியாளர்கள் இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளனர் .

      நாள் தோறும் இலங்கையில் பொருள்களின் விலைகள் அதிகரித்து செல்வதால் மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர் .

      மேலும் இவ்வாறு விலைகள் அதிகரிக்க பட்டு செல்ல பட்டால் , நாட்டில் மீளவும் போராட்டங்கள் வெடிக்கும் என எதிர்பார்க்க படுகிறது .

        Posted in இலங்கை செய்திகள்

        இந்தியா மீனவர்கள் 8 பேர் சிங்கள கடற்படையால் கைது

        இந்தியா மீனவர்கள் 8 பேர் சிங்கள கடற்படையால் கைது

        இந்தியா மீனவர்கள் 8 பேர் சிங்கள கடல் படையால் கைது செய்ய பட்டுள்ளனர் .

        இலங்கை கரை நகர் கடலுக்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த பொழுது , சிங்கள கடல் படையால் இவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .

        கைதான மீனவர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்க பட்ட நிலையில் நீதிமன்றம் முன் பார படுத்த பட்டுள்ளனர் .

        இலங்கைக்கு இந்தியா உதவி வருகின்ற பொழுதும் ,தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் தொடராக கைது செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் மின் வெட்டு மேலும் அதிகரிப்பு மக்கள் அவதி

          இலங்கையில் மின் வெட்டு மேலும் அதிகரிப்பு மக்கள் அவதி

          இலங்கையில் மேலும் மின்வெட்டு இருப்பது நிமிடங்களினால் அதிஅக்ரிக்க பட்டுள்ளது .

          இந்த மின்வெட்டு அதிகரிப்பினால் மக்கள்மற்றும் தொழில் துறைகள் அதிகரிக்க படுகின்றான் .

          இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,இவ்வாறான நெருக்கடி நிலையில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது .

          இவ்வாறான நிலை நீடித்தால் இலங்கை வைரிவில் இருளில் மூழ்கும் அபாயம் எழும் என் செத்து பார்க்க படுகிறது .

            Posted in இலங்கை செய்திகள்

            ஆண் ஒருவர் சடலமாக மீட்பு வீதிகளில் மிதக்கும் சடலங்கள்

            ஆண் ஒருவர் சடலமாக மீட்பு வீதிகளில் மிதக்கும் சடலங்கள்

            இலங்கை கட்டன் பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

            கடந்த தினம் வயலுக்கு சென்றவரே இவ்விதம் , சடலமாக மீட்க பட்டுள்ளார் .

            இறந்தவர் 72 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,இவரது மரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .


            இலங்கையில் நாள் தோறும் இவ்வாறு ,வீதிகள் மற்றும் நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளது .

            இந்த மர்ம கொலைகளின்பின்னால் யார் உள்ளது என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது .

              Posted in இலங்கை செய்திகள்

              பாராளுமன்றத்தை பார்வையிட மக்களுக்கு அனுமதி

              பாராளுமன்றத்தை பார்வையிட மக்களுக்கு அனுமதி

              இலங்கை பாராளுமன்றத்தை பார்வையிட, மக்களுக்கு மீள் அனுமதி வழங்க பட்டுள்ளது .

              மக்கள் போராட்டங்களை அடுத்து ,மக்கள் பாராளுமன்றத்தை பார்வையிட அனுமதி தடுக்க பட்டிருந்த நிலையில் ,தற்பொழுது மீளவும் அனுமதி வழங்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

              இந்த செயல் கொதித்து போயுள்ள மக்கள் மத்தியில் ,மீளவும் நல்லெண்ணத்தை கட்டி எழுப்பும் கண்துடைப்பு நாடகமாக பார்க்க படுகிறது .

              மேலும் உலக நாடுகளை ஏமாற்றிடவும் ,இந்த தளர்வுகள் மேற்கொள்ள பட்டுள்ளதாகவும்,விமர்சகர்கள் தமது கருத்துக்களை பதிவு செய்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கையில் அரசியல் மாறிவிட்டது – மக்களை ஏமாற்ற முடியாது சரத் பொன்சேகா

                இலங்கையில் அரசியல் மாறிவிட்டது – மக்களை ஏமாற்ற முடியாது சரத் பொன்சேகா

                இலங்கையில் அரசியல் மாறிவிட்டது என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார் .

                மேலும் இலங்கையில் மக்கள் மிகவும் தெளிவானவர்களாக மாறிவிட்டனர் .

                அரசியல் காட்சிகள் வாக்கு வாங்கிட மட்டும் ,மக்கள் வீடுகளை தட்டுகின்றனர் ,அதன் பின்னர் அவர்கள் மக்களை மறந்து விடுகின்றனர் .

                எமது காட்சியைச சேர்ந்தவர்கள் கூட உங்களுக்கு நன்மை செய்திடவில்லை என்றால் எங்களையும் தண்டியுங்கள் .

                இவ்வாறு கூறி திடீர் அந்தரபெல்ட்டி அடித்துள்ளார் சரத் பொன்சேகா .

                எதிர் வரும் தேர்தலில் பலத்த தோல்வியை தாம் சிந்திப்போம் என்கின்ற நிலை போலும் .

                அதனால்தான் இவ்வாறு சரத் பொன்சேகா தெரிவித்துள்ளதாக பார்க்க படுகிறது .

                  Posted in இலங்கை செய்திகள்

                  புதிதா 96 எரிபொருள் நிலையங்களை அமைக்கும் ஐ ஓ சி

                  புதிதா 96 எரிபொருள் நிலையங்களை அமைக்கும் ஐ ஓ சி

                  இலங்கையில் புதிதாக 96 எரிபொருள் நிலையங்களை நிறுவ உள்ளதாக இலங்கை ஐ ஓ சி நிறுவனம் தெரிவித்துள்ளது

                  இலங்கையில் தற்காலத்தில் எரிபொருள் தட்டு பாடு நிலவி வரும் நிலையில் ,புதிதாக 96 எரிபொருள் நிலையங்களை திறக்க உள்ளது .

                  இந்த அறிவிப்பை லங்கா ஐ ஓ சி தெரிவித்துள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

                  இதுவரை இந்த நிறுவனத்திற்கு 214 எரிபொருள் நிலையங்கள் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

                    Posted in இலங்கை செய்திகள்

                    ரசிய படையில் சிக்கிய இலங்கையர்கள் நிகம் பிடுங்க பட்டு வதை

                    ரசிய படையில் சிக்கிய இலங்கையர்கள் நிகம் பிடுங்க பட்டு வதை

                    உக்கிரேன் ரஷ்ய படைகள் வசம் வீழ்ந்த பொழுது ,ரஸ்ய படைகளிடம் சிக்கி கொண்ட இலங்கையர்கள் ஏழுபேர் விடுதலை செய்ய பட்டனர் .

                    அவ்வாறு விடுதலை செய்ய பட்ட இலங்கையர்கள் தம்மை ,ரஷ்ய இராணுவம் நீக்கம் பிடுங்கி வதை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர் .

                    மேலும் தடுத்து வைக்க பட்டிருந்த பொழுது, ரஷ்ய இராணுவத்தினர் அங்குள்ளவற்றை சுத்தம் செய்யும் படி கொடுமை படுத்தி வந்ததாக பாதிக்க பட்டவர்கள் தெரிவித்துள்ளனர் .

                    ரசிய படையில் சிக்கிய இலங்கையர்கள் நிகம் பிடுங்க பட்டு வதை

                    கற்றல் நடவடிக்கை மேற்கொள்ள இந்த இலங்கையர்கள் ,உக்கிரேனுக்கு சென்றிருந்த நிலையில் ,ரஷ்ய இராணுவத்தால் கைது செய்யப் பட்டனர் .

                    உக்கிரேன் இராணுவத்தின் தாக்குதலில் ,கஜீவ் நகரின் கொட்டல் ஒன்றில் தடுத்து வைக்க பட்ட இவர்களை கண்ணுற்ற உக்கிரேன் இராணுவம் விடுவிக்க பட்ட பகுதிகளில் இருந்து ,இந்த ஏழு இலங்கையர்கள் மீட்டக பட்டனர் .

                    உக்கிரேன் இராணுவத்தினரால் மீட்க பட்ட இலங்கையர்கள் யாவரும் ,தற்போது ,இலங்கைக்கு அனுப்பி வைக்கும் நகர்வில் உக்கிரேன் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது .

                    ரசிய படையில் சிக்கிய இலங்கையர்கள் நிகம் பிடுங்க பட்டு வதை
                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கையில் தாமரை கோபுரத்தின் வருமானம் அறிவிப்பு

                      இலங்கையில் தாமரை கோபுரத்தின் வருமானம் அறிவிப்பு

                      இலங்கையில் தாமரை கோபுரத்தின் வருமானம் அறிவிக்க பட்டுள்ளது .

                      கடந்த 15ஆம் திகதி திறந்து வைக்க பட்ட ,இந்த தாமரை கோபுரத்தின் மூன்று நாள் வருமானம் ,சுமார் 75 லட்சத்தை கடந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

                      வீழ்ந்து போன பொருளாதாரத்தை மீள் தாக்க வைத்து கொள்ள, தாமரை கோபுரம் மற்றும் இவ்விதமான வழிகளில் அரசு பணத்தை ஈட்டி வருகிறது .

                      உல்லாச பயணிகள் வருகையின் மூலம் 900 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளதாக உல்லாசத்துறை தெரிவித்துள்ளது .

                      அரசின் பல இவ்வாறான நிறுவனங்கள், இலாபத்தில் செல்கின்ற பொழுதும் ,
                      ஆண்டு கணக்கறிக்கையில் இழப்பு காண்பிக்க படுகின்றமை குறிப்பிட தக்கது.

                        Posted in இலங்கை செய்திகள்

                        ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அலி சப்ரி

                        ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அலி சப்ரி

                        2022 செப்டெம்பர் 24ஆந் திகதி நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77ஆவது அமர்வில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இலங்கையின் அறிக்கையை வழங்கவுள்ளார்.

                        இந்த விஜயத்தின் போது, ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த மாநாட்டின் வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பு, குழு 77 மற்றும் சீன உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின்

                        கூட்டம், உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சியின் நண்பர்கள் குழுவின் அமைச்சர் கூட்டம் மற்றும் அணிசேரா நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டம் போன்ற அமைச்சர்கள் மட்டத்திலான பல்வேறு கூட்டங்களில் அவர் உரையாற்றுவார்.

                        ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அலி சப்ரி

                        ஐ.நா. உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடனும் அவர் இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். மேலும் அவர் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. வின் உயர் மட்ட அதிகாரிகளையும் சந்திப்பார்.

                        இலங்கைத் தூதுக்குழுவில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான்

                        பீரிஸ், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி மற்றும் நியூயோர்க்கில் உள்ள இலங்கையின் நிரந்தரத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அமர்வின் உயர்மட்ட அமர்வு 2022 செப்டம்பர் 20 முதல் 26 வரை நடைபெறும்.

                        வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

                          Posted in இலங்கை செய்திகள்

                          தியாகதீபம் லெப் கேணல் திலீபன் நினைவுசுமந்து பிரித்தானியாவில் களங்கண்ட வீரர்கள்

                          தியாகதீபம் லெப் கேணல் திலீபன் நினைவுசுமந்து பிரித்தானியாவில் களங்கண்ட வீரர்கள்

                          ‘பார்த்தீபன் இன்னமும் பசியோடு இருக்கின்றான்…’ என்ற உணர்வினை நெஞ்சினில் தாங்கியவாறு தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களை

                          நினைவிருத்தி விளையாட்டு வீரர்கள் பலர் பிரித்தானியாவில் ஆடுகளங்கண்டனர்.

                          நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டு துறை அமைச்சினால் 7வது தடவையாக முன்னெடுக்கப்பட்டிருந்த விளையாட்டுப் போட்டியில்

                          பிரித்தானியாவின் பல கழகங்கள், குழுக்கள் பங்கெடுத்து வெற்றிகளை தமதாக்கி கொண்டனர்.

                          தியாகதீபம் லெப் கேணல் திலீபன் நினைவுசுமந்து பிரித்தானியாவில் களங்கண்ட வீரர்கள்

                          கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், மென்பந்து துடுப்பாட்டம், சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், பாரம்பரிய விளையாட்டுக்கள் என பல விளையாட்டுக்கள் சிறப்புடனும் பிரமாண்டமாகவும் இடம்பெற்றிருந்தன.

                          பிரதம விருந்தினர் குறைடன் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீவ் ரீட் அவர்கள் பங்கெடுத்திருக்க, சிறப்பு அதிதிகளாக Croydon civic mayor Alisa

                          Flemming, Croydon Councillor Stuart Collins, Croydon Councillor Manju Shahul-Hameed, Croydon Councillor Appu Srinivasan, Croydon Councillor Catherine Wilson, Croydon Councillor

                          Sherwan Chowdhury, Harrow Councillor Suresh Krishna, Harrow Councillor Sasikkala Suresh
                          , Croydon broadgreen labour party Secretary Rajagopal ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.

                          ஆடுகளத்தின் தொடக்க நிகழ்வாக மங்கள விளக்கினை வரலாற்று மையம் பண்ணிப்பாளர் திரு.சந்தியரூபன், தமிழ் திரு.பாலமுரளி சிவானந்தம், தமிழீழ அரசியல்துறை பி. பொறுப்பாளர் திரு வீரன்,நா.தமிழீழ அரசாங்கத்தின்

                          துணை சபாநாயகர் கலையழகன்,குறைடொன் நகர தொழில்கட்சி உறுப்பினர் திரு.சர்வான் சௌத்ரி ஆகியோர் ஏற்றிவைத்தனர்.

                          பிரித்தானிய தேசியக் கொடியினை நா.தமிழீழ அரசாங்கத்தின் மூத்த செயற்பாட்டாளர் திரு.ஆறுமுகம் ஆனந்தம் அவர்களும், தமிழீழத் தேசியக்

                          கொடியினை மூத்த தேசிய செயற்பாட்டாளர் திரு.கந்தசாமி பரணிதரன் அவர்களும் ஏற்றிவைத்திருந்தனர்.

                          தியாகி திலீபன் அவர்களது திருவுருவப் படத்துக்கான மலர்மாலையினை நா.தமிழீழ அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர் திரு.தாமோதரம் பிள்ளை

                          முருகாதாஸ் அவர்கள் அணிவிக்க, ஈகைச் சுடரினை ஈகைப் பேரொளி முருகாதாஸ் அவர்களின் தயார் வர்ணகுலசிங்கம் புவனேஸ்வரி அவர்கள் ஏற்றிவைத்தார்.

                          வரவேற்புரையினை நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவைத் தலைவர் பாலம்பிகை முருகதாஸ் அவர்கள் வழங்கிவைக்க, வீரர்கள் களங்கண்டனர்.

                          நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை துணை
                          அமைச்சர் நீதிராசா அவர்களின் தலைமையில் நடைபெற்றற

                          இவ்விளையாட்டு வெற்றியபெற்ற வீரர்களுக்கு பதக்கங்கள்,
                          வெற்றிக்கிண்ணங்கள், பணப்பரிசுகள் வழங்கப்பட்டன.

                          தியாகதீபம் லெப் கேணல் திலீபன் நினைவுசுமந்து பிரித்தானியாவில் களங்கண்ட வீரர்கள்
                          தியாகதீபம் லெப் கேணல் திலீபன் நினைவுசுமந்து பிரித்தானியாவில் களங்கண்ட வீரர்கள்
                          தியாகதீபம் லெப் கேணல் திலீபன் நினைவுசுமந்து பிரித்தானியாவில் களங்கண்ட வீரர்கள்
                            Posted in இலங்கை செய்திகள்

                            இலங்கையில் நீருக்கு பணம் செலுத்தாதது அலையும் எம்பிக்கள்

                            இலங்கையில் நீருக்கு பணம் செலுத்தாதது அலையும் எம்பிக்கள்

                            இலங்கையில் நீர்ப்பாசனத்தை பெற்றுக் கொண்ட எம்பிக்கள் ,அவர் தம் பாவனைக்குரிய நீருக்கான கட்டுப்பணத்தை செலுத்தாது உள்ளனர் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது .

                            இலங்கை எம்பிக்களினால் சுமார் பத்து மில்லியன் ரூபா நீர்பாசன கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

                            மக்களை நிர்வகிக்க வந்துள்ள, இந்த எம்பிக்கள் நீர் பாவனைக்கு பணம் செலுத்தாமை உள்ளது ,மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

                            அரசியல்வாதிகள் தவறு செய்கின்ற பொழுது,அதனை தட்டி கேட்க மறுக்கும் அதிகாரிகள் ,அப்பாவிகள் ஒரு தவணை தவறினால், அதற்கு வட்டிக்கு
                            குட்டி என மக்களிடம் இருந்து பணத்தை கறந்து வருகின்றமை குறிபிட தக்கது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              போதைக்கு அடிமையாகி 10 பேர் மரணம் 320 பேர் கைது

                              போதைக்கு அடிமையாகி 10 பேர் மரணம் 320 பேர் கைது

                              யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையாகி 10 பேர் பலியாகியும் , 320 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

                              கைதானவர்கள் யாவரும் போதைவஸ்துடன் கைது செய்ய பட்டுள்ளனர் .

                              1995 ஆண்டு இலங்கை இராணுவத்திடம் யாழ்ப்பாணம் வீழ்ந்த பின்னர் ,.யாழ்ப்பாணம் முற்றாக போதையின் தலை நகராக மாற்றம் பெற்றுள்ளது .

                              சமூக சீர்கேடுகள் மற்றும் போதைக்கு அடிமையான வாலிபர்கள் உருவாக்க பட்டுள்ளனர் .

                              இதுவே இந்த மரணத்திற்கு காரணமாகவும் அமைந்துள்ளது .

                              Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                              மாமாவை கோடாரியால் வெட்டி கொன்ற மருமகன்

                              மாமாவை கோடாரியால் வெட்டி கொன்ற மருமகன்

                              இலங்கை அக்குரஸ்ஸ பகுதியில் மாமனாரை ,மருமகன் கோடாரியால் வெட்டி கொன்றுள்ள சம்பவம் பெரும் பர பரப்பபை ஏற்படுத்தியுள்ளது .

                              கணவனுக்கும் ,மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தகராரை விலக்கு பிடிக்க சென்ற மாமனார் மீது ,கோபம் கொண்ட மருமகன், கோடரியால் வெட்டி கொன்று விட்டு தப்பி சென்றுள்ளார் .

                              மருமகனின் கோடாரி வெட்டில் , மனைவியின் தந்தை சம்பவ இடத்திலேயே துடி துடித்து பலியானார் .

                              இறந்தவர் 66 வயதுடையவர் என தெரிவிக்க பட்டுள்ளது .

                              மாமாவை கோடரியால் வெட்டி கொன்று விட்டு, தப்பி ஓடிய மருமகனை ,கைது செய்யும் நகர்வில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .

                              கோபம் செய்த பாவம் ,கொலையில் முடிந்துள்ளது .

                                Posted in இலங்கை செய்திகள்

                                சம்பளம் வழங்க முடியா நிலையில் திணறும் அரச நிறுவனங்கள்

                                சம்பளம் வழங்க முடியா நிலையில் திணறும் அரச நிறுவனங்கள்

                                இலங்கையில் சம்பளம் வழங்க முடியா நிலையில் ,அரச நிறுவனங்கள் திணறி வருவதாக உள்ளக கசிவுகள் தெரிவித்துள்ளன .

                                நாளாந்த செலவை கூட ,அரச நிறுவனங்களினால் செயல் படுத்த முடியா நிலையில் உள்ளதாக அரச நிறுவன ஊழியர்கள் தெரிவிக்கின்றன .

                                ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல் ,மற்றும் ,அரச ஊழியர்கள் பயன் படுத்தும் பொருட்களின் விலைகள் உயர்வு .

                                அதனால் எழுந்துள்ள தட்டுபாடு அதனை , எதிர்கொள்ளல் முடியாது உள்ள நிதி சிக்கலினால் இந்த அரச நிறுவனங்கள் திணறி வருகின்றன .

                                இவ்விதம் நிலமை நீடித்தால் ,அரச நிறுவங்கள் இழுத்து மூட படும் , நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  காதலியிடம் செல்வதற்கு பிக்குவை கொன்ற காதலன் கைது

                                  காதலியிடம் செல்வதற்கு பிக்குவை கொன்ற காதலன் கைது

                                  காதலியிடம் செல்வதற்கு ,தான் தங்கி இருந்த விகாரதிபதியை கொன்ற, இளம் பிக்கு ஒருவர் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார் .

                                  சீதுவ விகாரதிபதியை கொன்று ,அவரது வாகனங்களை விற்று விட்டு டுபாய் செல்ல திட்டமிட்டிருந்த ,இளம் பிக்கு கொலை குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் .

                                  கைதான பிக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுப்பில் வைக்க பட்டுள்ளார் .

                                  இளம் பிக்குவின் கொலைக்கு உடந்தையாக, டுபாயில் உள்ள தனது முஸ்லீம் காதலி உறவினர்கள் உதவியுள்ளதாக தெரிவிக்க படுகிறது.

                                  இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    பாடசாலை நேரத்தை நீடிக்க அரசு உத்தேசம்

                                    பாடசாலை நேரத்தை நீடிக்க அரசு உத்தேசம்

                                    இலங்கையில் பாடசாலைகளின் நேரத்தை நான்கு மணிவரை நீடிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் வேண்டியுள்ளார் .

                                    பாடசாலை விளையாட்டு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசும் பொழுது ,விளையாட்டுத்துறை அமைச்சர் இவ்விதம் தெரிவித்துள்ளார் .

                                    பாடசாலைகள் இரண்டு மணித்தியாலம் விளையாட்டுக்கு ஒதுக்க பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார் .


                                    விளையாட்டு துறை அமைச்சரின் இந்த கருத்தியல் முன்வைப்பு மாணவர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

                                    நான்கு மணி வரை பாடசாலைகள் மூட பட வேணுமெனின் மாணவர்கள் வகுப்பறையில் அதிக நேரத்தை செலவு செய்திட வேண்டும் .

                                    இது மாணவர்கள் உளவியல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      யாழில் வீடொன்றில் புலிகளின் தங்க புதையல் -தோண்டிய இராணுவம்

                                      யாழில் வீடொன்றில் புலிகளின் தங்க புதையல் -தோண்டிய இராணுவம்

                                      யாழில் வீடொன்றில் தமிழீழ விடுதலை புலிகளின் தங்க புதையல் உள்ளதாக தெரிவித்து அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ளது .

                                      யாழில் டச்சு வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் ,விடுதலை புலிகளின் தங்கம் புதைக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டது .

                                      அதனை அடுத்து அந்த வீட்டுக்குள் கனரக வாகனகள் சகிதம் தோண்டும் பணிகள் ஆரம்பிக்க பட்டன .

                                      நீதவான் முன்னிலையில் இடம்பெற்ற அகழ்வு பணிகள், மதியம் இரண்டு மணியளவில் நிறுத்த பட்டது .

                                      யாழில் வீடொன்றில் புலிகளின் தங்க புதையல் -தோண்டிய இராணுவம்

                                      குறித்த வீட்டில் தங்கம் உள்ளது, என தெரிவித்து நடத்த பட்ட ,தோண்டும் பணிகள் இடை நிறுத்த பட்டுள்ளது .

                                      விடுதலை புலிகள் அழிந்த பின்னரும் ,தங்க புதையல்கள் உள்ளது என தெரிவித்து ,அகழ்வு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

                                      புலிகள் அழிந்தாலும் அவர்கள் பெயரை உச்சரிக்க வேண்டிய நிலையில் .இலங்கை அரசியல் உள்ளமை இங்கே கவனிக்கலாம் .