Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
இலங்கைக்கு வருகிறார் ஜப்பான் நிதியமைச்சர்
இலங்கைக்கு வருகிறார் ஜப்பான் நிதியமைச்சர்
ஜப்பான் நிதியமைச்சர் ஷுனிச்சி சுசுகி, இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அடுத்தவாரம் வரவுள்ளார்.
ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் ரொட்னி எம்.பெரேரா மற்றும் ஜப்பான் நிதியமைச்சர் ஷுனிச்சி சுசுகி ஆகியோருக்கு இடையில் டோக்கியோவில் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் ஜப்பான் நிதியமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
10 வருடங்களின் பின்னர் ஜப்பான் நிதியமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கார் விற்பனையில் வரி தொடர்பில் அவதானம்
கார் விற்பனையில் வரி தொடர்பில் அவதானம்
கார் விற்பனையில் வரி தொடர்பில் அவதானம் தேவை பதிவு செய்யப்பட்ட கார்களை விற்பனை செய்யும் போது வற் எனப்படும் பெறுமதி சேர் வரி அதிகரிப்பின் தாக்கம் .
தொடர்பில், கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், அந்த சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் இதனை குறிப்பிட்டுள்ளார்.
யாழில் இரண்டு ஆட்டோ தீக்கிரை
யாழில் இரண்டு ஆட்டோ தீக்கிரை
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு ஆட்டோ தீக்கிரையாக்கப்பட்டது.
குறித்த சம்பவம் நேற்று (05) இரவு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இரண்டு வன்முறை கும்பல் இடையே இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களின் தொடர்ச்சியாகவே இரண்டு ஆட்டோ தீக்கிரையாக்கப்பட்டது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் அனுப்பிய பணம்
வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் அனுப்பிய பணம்
2023 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை ஊழியர்களால் டிசம்பர் மாதம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம் 569.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
2023 இல் வெளிநாடுகளில் உள்ள இலங்கை ஊழியர்களால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட மொத்த பணம் 5,969.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 57.5% அதிகரிப்பு என இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன
வீடு ஒன்றிற்குள் கை கால்களை கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் படுகொலை
வீடு ஒன்றிற்குள் கை கால்களை கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் படுகொலை
கம்பஹா, பாண்டியமுல்ல பிரதேசத்தில் வீடு ஒன்றிற்குள் கை கால்களை கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அந்த வீட்டில் வசித்து வந்த 81 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று (05) பிற்பகல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் நேற்று காலை வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு பூஜை செய்து விட்டு வீடு திரும்பியது தெரியவந்துள்ளது.
வீட்டில் உள்ள பொருட்களை திருட வந்த நபர் அல்லது குழுவால் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
வீடு ஒன்றிற்குள் கை கால்களை கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் படுகொலை
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, அம்பலாந்தோட்டை 100 அடி வீதியில் பல்லகஸ்வெவ சந்திக்கு அருகாமையில் நேற்று படுகொலை செய்யப்பட்ட நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் பாரகம, அம்பலாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 4 ஆம் திகதி பிற்பகல் முதல் காணாமல் போயுள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸில் இவரின் சகோதரர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
பின்னர், அப்பகுதி மக்களுடன் சேர்ந்து காணாமல் போனவரை தேடியபோது, அந்த இடத்தில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் ஒருவர் பலி நால்வருக்க காயம்
விபத்தில் ஒருவர் பலி நால்வருக்க காயம்
கொழும்பு – கண்டி வீதியின் தித்தவெல்லகட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்று வேனை கடந்து சென்று கொண்டிருந்த போது வேன் மீது மோதியதுடன் முன்னால் வந்த 2 வேன்களுடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் ஒருவர் பலி நால்வருக்க காயம்
வேன் ஒன்றின் சாரதி மற்றும் பின்னால் பயணித்த மூவர் படுகாயமடைந்து வத்துப்பிட்டிவல மற்றும் வரக்காபொல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலத்த காயமடைந்த சாரதி உயிரிழந்தார். 58 வயதுடைய கம்பளை, மரியாவத்தை பகுதியைச் சேர்ந்த சாரதியே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர்களில் ருமேனிய பிரஜை ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது
வீடியோ
இலங்கை உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு
இலங்கை உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு
கடந்த டிசம்பர் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது 23.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த டிசம்பர் மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவானதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இலங்கை உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு
கடந்த நவம்பர் மாதம் இந்நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 3.57 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
இதில், சீனா வழங்கிய 1.4 பில்லியன் நிதி வசதியும் இதில் அடங்குவதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது
கைப்பேசி என நினைத்து டிக்கெட் மெஷினை திருடிய பாட்டி
கைப்பேசி என நினைத்து டிக்கெட் மெஷினை திருடிய பாட்டி
புதிய கையடக்கத் தொலைபேசி எனத் தவறாகக் கருதி லங்கம பேருந்தொன்றில் நடத்துனரின் பயணச்சீட்டு இயந்திரம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணை விடுவிக்குமாறு காலி மேலதிக நீதவான் லக்மினி விதானகமகே உத்தரவிட்டார்.
இமதுவ ஹவ்பே பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இமதுவ ஹவ்பே பகுதியில் வசிக்கும் இந்தப் பெண், ஹவ்பேயில் அமைந்துள்ள வீட்டுக்குச் செல்வதற்காக அண்மையில் இமதுவவிலிருந்து பேருந்தில் ஏறியுள்ளார்.
கைப்பேசி என நினைத்து டிக்கெட் மெஷினை திருடிய பாட்டி
அந்த பேருந்து அக்குரஸ்ஸ டிப்போவிற்கு சொந்தமான பேருந்தாகும்.
குறித்த வயோதிப பெண் பேருந்தில் ஏறியதும், கண்டக்டர் டிக்கெட் இயந்திரத்தை இருக்கையில் வைத்துவிட்டு, தண்ணீர் குடிக்க சாரதியின் இருக்கைக்குச் சென்றார்.
அப்போது பேருந்தில் சில பயணிகள் மட்டுமே இருந்துள்ளனர்.
பேருந்தில் ஏறியதும் இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் டிக்கெட் இயந்திரம் இருப்பதை பார்த்த வயோதிப பெண், நவீன கைப்பேசி என நினைத்து அதனை வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார்.
வீட்டிற்குச் சென்றதும் புதிய கைப்பேசியில் அழைப்புகளை மேற்கொள்ள எண்களை டயல் செய்தாள் ஒவ்வொரு முறையும் அந்த எண்களை டயல் செய்யும் போது அழைப்புகளுக்கு பதிலாக பேருந்து டிக்கெட்டுகள் வெளி வந்தன.
இது கையடக்கத் தொலைபேசியல்ல, பயணச்சீட்டு இயந்திரம் என்பதை அறிந்து மறுநாள் காலி பேருந்து நிலையத்திற்கு கொண்டு வந்து அங்கிருந்த அதிகாரி ஒருவரிடம் கொடுத்துள்ளார்.
சம்பவத்தை அறிந்த அதிகாரி, அவரை தடுத்து நிறுத்தி, பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் சந்தேக நபரை இமதுவ பொலிஸ் சார்ஜன்ட் பிரேமசிறி காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தார்.
ஜனாதிபதியுடன் செல்பி எடுத்த கில்மிசா
ஜனாதிபதியுடன் செல்பி எடுத்த கில்மிசா
வடக்குக்கு நான்கு நாள் பயணமாக வியாழக்கிழமை (04) யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றார்.
இந்நிலையில் யாழில் உள்ள தனியார் விடுதியில் வியாழக்கிழமை (04) இரவு நடைபெற்ற நிகழ்வின் போது கில்மிஷாவை நேரில் அழைத்து பாராட்டி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்
ஜனாதிபதியுடன் செல்பி எடுத்த கில்மிசா
இதன்போது ஜனாதிபதி முன்னிலையில் கில்மிஷா பாடலும் பாடினார். அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் செல்பியும் எடுத்துக்கொண்டார்.
இந்தியாவின் ஜீ தமிழ் சரிகமப நிகழ்வின் வெற்றியாளர் பட்டத்தை கில்மிஷா உதயசீலன் சூட்டிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

விமானப்படை தளத்தை படம் எடுத்தவர் கைது
விமானப்படை தளத்தை படம் எடுத்தவர் கைது
வவுனியா விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்ததாக சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று வவுனியா விமானப்படை தளத்தில் ஜனாதிபதி விசேட விமானத்தில் வருகை தந்து வன்னி அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விமானப்படை தளத்தை படம் எடுத்தவர் கைது
இந்நிலையில் பாதுகாப்பு வாகனத்தொடரணி சென்றுக் கண்டிருந்த நிலையில் அதனை இளைஞரொருவர் புகைப்படம் எடுத்தமையை அவதானித்த பாதுகாப்பு உத்தியோகத்தரொருவர் குறித்த இளைஞனை கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்
குறித்த இளைஞன் பூனாவ பகுதியை சேர்ந்த பைருஸ் பவாஹிர் என்பவராவார்.
இவரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
24 மணிநேரத்தில் 1184 சந்தேக நபர்கள் கைது
24 மணிநேரத்தில் 1184 சந்தேக நபர்கள் கைது
இன்று (05) அதிகாலை முடிவடைந்த 24 மணிநேரத்தில் பொலிஸாரின் “யுக்திய” விசேட நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச்சாட்டுகளில் 1184 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 337 கிராம் 758 மில்லிகிராம் ஹெரோயின், 242 கிராம் 372 மில்லிகிராம் ஐஸ், 06 கிலோகிராம் கஞ்சா, 7,772 கஞ்சா செடிகள், 03 கிலோகிராம் 694 கிராம் மாவா, 55 கிராம் ஹஷிஸ், 1,221 மாத்திரைகள் மற்றும் 1 கிலோ 226 கிராம் குஷ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, கைது செய்யப்பட்ட 1184 சந்தேக நபர்களில் 59 சந்தேகநபர்களிடம் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
24 மணிநேரத்தில் 1184 சந்தேக நபர்கள் கைது
அத்துடன், 23 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், போதைக்கு அடிமையான 49 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேநேரம், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 93 சந்தேக நபர்கள் இதன் போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை
விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை
நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் நாடளாவிய ரீதியில்
முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையான ‘யுக்திய’வின் ஒரு பகுதியாக குறிப்பிட்ட சில பிரதேசங்களில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட போக்குவரத்து நடவடிக்கை இன்று ( 05) தொடக்கம் ஒரு வார காலத்துக்கு காலை 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு – கண்டி வீதியில் களனி பல்கலைக்கழக பழைய கட்டிடம் வரையிலும், கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் நீர்கொழும்பு ஒலியமுல்ல பாடசாலை வரையிலும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும்.
கில்மிஷாவை சந்தித்தார் ஜனாதிபதி
கில்மிஷாவை சந்தித்தார் ஜனாதிபதி
இந்தியாவின் ஜீ தமிழ் சரிகமப நிகழ்வின் வெற்றியாளர் பட்டத்தைச் சூடிய கில்மிஷா உதயசீலனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்துள்ளார்.
யாழில் நேற்று நடைபெற்ற சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் கூட்டத்தின்போதே, கில்மிஷா மற்றும் அவரது குடும்பத்தினரை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்
பேஸ்புக் மூலம் இளம் பெண்களை வேட்டையாடிய இளைஞன் கைது
பேஸ்புக் மூலம் இளம் பெண்களை வேட்டையாடிய இளைஞன் கைது
அண்மையில், பேஸ்புக் மூலம் குறைந்த விலையில் ‘ஐபோன்’ தருவதாக கூறி இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
அதன்படி, வேறு ஒரு இளம்பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் பெயரைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி முகநூல் கணக்கு மூலம் குறித்த நபர் சம்பந்தப்பட்ட இளம்பெண்களுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர், மொடலிங் போட்டியொன்றில் வெற்றி பெற்றால், ‘ஐபோன்’ கைப்பேசி இலவசமாக வழங்கப்படும் என்றும் குறித்த நபர் அப் பெண்களிடம் கூறியுள்ளார்.
அதன் பின்னர் சந்தேக நபர் இளம் பெண்களிடம் அவர்களின் அரை நிர்வாண புகைப்படங்களை பெற்று அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக கூறி பணம் பறித்ததாக கூறப்படுகிறது.
பேஸ்புக் மூலம் இளம் பெண்களை வேட்டையாடிய இளைஞன் கைது
பணம் தராத யுவதிகளை குருநாகல் பகுதிக்கு அழைத்து வந்து பலாத்காரம் செய்ததையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர், முகநூல் நிறுவனத்தின் ஊடாக தகவல்களை பெற்றுக்கொண்ட விசாரணை அதிகாரிகள் பொலன்னறுவை பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
அத்துடன், அவர் பணப் பரிமாற்றம் செய்த வங்கிக் கணக்கின் உரிமையாளரும் தம்புள்ளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் இருவரும் 22 மற்றும் 20 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபருடன் பாடசாலை வயது மாணவிகளும் தகவல்களை பரிமாறிக்கொண்டுள்ள நிலையில்,
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
82 வீத வரி அறவிடப்படவில்லை
82 வீத வரி அறவிடப்படவில்லை
2023 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் அறவிடப்பட வேண்டிய வரி வருமானத்தில் 82 வீதம் அறவிடப்படவில்லை என பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது தெரியவந்தது.
கடந்த ஆண்டுக்கான வரி அறவீடு மற்றும் அதன் செயற்றிறன் தொடர்பில், உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளின் பங்கேற்புடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டது.
82 வீத வரி அறவிடப்படவில்லை
கடந்த ஆண்டின் முதல் 06 மாதங்களில் அறவிடப்பட வேண்டிய வரி வருமானம் 943 பில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த தொகையில் 767 பில்லியன் ரூபாவை பல்வேறு காரணங்களால் அறிவிட முடியாது போயுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிங்கள காவல்துறையை கழுவி ஊற்றிய தமிழர்கள் யாழில் நடந்த தரமான சம்பவம்
சிங்கள காவல்துறையை கழுவி ஊற்றிய தமிழர்கள் யாழில் நடந்த தரமான சம்பவம்
சிங்ளகளை காவல்துறையை கழுவி
ஊற்றிய தமிழர்கள் யாழில் நடந்த தரமான சம்பவம் .
தமிழர்களை அடக்குவது ,கேவல் படுத்துவது ,பொய் வழக்கு போட்டு உள்ளே வைப்பது என்ற நாடகத்தை ஆடும் பேரினவாக சிங்கள பவுத்த அரசுக்கு யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் வழங்கிய சாட்டை அடி
முஸ்லீம்கள் சொத்துக்களை கடைகளை ,பள்ளி வாசல்களையே அடித்து உடைப்பது ,இந்துக்களின் ஆலயங்களை உடைப்பது தான் இன்றைய சிங்கள தீவிரவாதம் என்பது .
அப்படியா சிங்கள கூலிகளுக்கு இவர்கள் வழங்கிய தரமான சம்பவம் இது .
இந்த வருடத்தின் சிறந்த தரமான சம்பவம இது பதிய பெற்றுள்ளது .
பிரபல பாடசாலையில் இருந்து ஆயுதங்கள் மீட்பு
பிரபல பாடசாலையில் இருந்து ஆயுதங்கள் மீட்பு
வத்தளையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இருந்து ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலையின் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரின் அறையில் இருந்தே குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரபல பாடசாலையில் இருந்து ஆயுதங்கள் மீட்பு
டி 56 ரக துப்பாக்கி ஒன்றும், 04 மெகசின்கள் மற்றும் 9 MM ரக 18 தோட்டாகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஆயுதங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவன் கனேமுல்ல சஞ்சீவவிற்கு சொந்தமானது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஆயுதங்களுடன் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களவாக மணலுடன் சென்ற டிப்பரை மடக்கிப் பிடித்த பொலிஸ்
களவாக மணலுடன் சென்ற டிப்பரை மடக்கிப் பிடித்த பொலிஸ்
கிளிநொச்சி-பூநகரி சாமிப்புலம் கிராமத்தில் களவாக மணலுடன் சென்ற டிப்பரை விசேட அதிரடிப் படையினர் மடக்கிப் பிடித்துள்ள சம்பவம் புதன்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.
பிடிக்கப்பட்ட டிப்பரை மணலுடன் பூநகரி பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், பூநகரி பிரதேசத்தில் தொடர்ச்சியாக மணல், மரக்கடத்தல்கள் இடம் பெறுவதன் காரணமாக அதனை தடுக்க விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்
- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன
- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன
- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது
- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா
யாழில் பாதுகாப்பு உச்சம் மூவர் கைது
யாழில் பாதுகாப்பு உச்சம் மூவர் கைது
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
யாழில் பாதுகாப்பு உச்சம் மூவர் கைது
யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள் வீதிகளில் வீதித்தடைகள் கொண்டுவரப்பட்டு முழுமையாக பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், கலகமடக்கும் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு இன்று (04) வருகைதரும் ஜனாதிபதி, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் மாலை 3 மணி முதல் 5.30 வரை நடைபெறும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்கின்றார்.
முகக்கவசம் மீண்டும் கட்டாயம்
முகக்கவசம் மீண்டும் கட்டாயம்
அமெரிக்காவில் உள்ள சில மருத்துவமனைகளில் கொவிட், சளி மற்றும் சுவாச நோய்கள் பரவுவதைத் தடுக்க முகக்கவசங்களை அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளதாக வௌிநாட்டு ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
நியூயோர்க், கலிபோர்னியா, மாசசூசெட்ஸ் மற்றும் இல்லினோய்ஸ் ஆகிய மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள் இந்த முடிவை எடுத்துள்ளன.
டிசம்பர் 17-23 வரையான வாரத்தில், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 29,000 கொவிட் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 16% அதிகரிப்பாகும் என வௌிநாட்டு ஊடங்கள் மேலும் தெரிவிக்கின்றன.






































