Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு
பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு
யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க இன்று (29) பதவியேற்றார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்பார்.
இதன்போது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் கலந்து கொண்டனர்.
இதுவரை காலமும் கடமையாற்றிய மஞ்சள செனரத் பதவிஉயர்வு பெற்று சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவர் பதவி பிரமாணம்
புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவர் பதவி பிரமாணம்
பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்
24 மணிநேரத்தில் 836 சந்தேக நபர்கள் 24 மணிநேரத்தில் 836 சந்தேக நபர்கள் கைது
24 மணிநேரத்தில் 836 சந்தேக நபர்கள் கைது
நாடு தழுவிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையான ‘யுக்திய’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக நள்ளிரவு 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மேலும் 836 சந்தேக நபர்கள் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 6 பேரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருவர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த காலப்பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களில் 142 கிராம் ஹெரோயின், 95 கிராம் ஐஸ் மற்றும் 1,650 போதை மாத்திரைகள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு – புதுமாத்தளன் கடற்கரையில் அசம்பாவிதம்
முல்லைத்தீவு – புதுமாத்தளன் கடற்கரையில் அசம்பாவிதம்
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
குறித்த நபர் உறவினர்களுடன் புதுமாத்தளன் பிரதேசத்தில் உள்ள கடற்கரையில் நேற்று (28) நீராடச் சென்ற போதே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புதுக்குடியிருப்பு 10 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே காணாமல் போயுள்ளார்.
கடற்படையினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவியை பகிடிவதை – 6 மாணவர்கள் கைது
மாணவியை பகிடிவதை – 6 மாணவர்கள் கைது
.சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் பல்கலைக்கழகத்தின் 4 ஆம் ஆண்டு மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் கடந்த 14 ஆம் திகதி 1997 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சமனலவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.
சந்தேகத்திற்குரிய மாணவர்கள் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மொழிக் கல்வி பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் 23, 24 மற்றும் 25 வயதுடைய மொரவக, ருக்கஹவில, அலுஹ்தாராம, இமதுவ மற்றும் கிடலாவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என சமனலவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
வவுனியாவில் கோர விபத்து பேரூந்து மோட்டார் சைக்கிள் மோதல்
வவுனியாவில் கோர விபத்து பேரூந்து மோட்டார் சைக்கிள் மோதல்
வவுனியாவில் கோர விபத்து பேரூந்து மோட்டார் சைக்கிள் நேரெதிர் மோதல் ,இந்த கோர விபத்து சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
இலங்கை வவுனியா வலய பணிமனை அருகில் இடம்பெற்ற பேரூந்து மோட்டார் சைக்கிள் நேரெதிர் மோதியதில் ஏற்படட விபத்தில் சிக்கி ஒருவர் காயமடைந்துள்ளனர் .
மோட்டார் சைக்கிள் பேரூந்து மோதி தள்ளியதில் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .
வவுனியாவில் இவ்விதமான பேரூந்து மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இலங்கை மீனவர்கள் 13 பேர் மாலைத்தீவு கடற்பரப்பில் கைது
இலங்கை மீனவர்கள் 13 பேர் மாலைத்தீவு கடற்பரப்பில் கைது
இலங்கை மீனவர்கள் 13 பேர் மாலைத்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்,மாலைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கலே இவ்வாறு கைது செய்யப்பட்டனர் .
மேலும் அவர்கள் பயணித்த 02 மீன்பிடி படகுகளையும் மாலைத்தீவு கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
ஒரு கப்பலில் 7 இலங்கை மீனவர்களும், மற்றொரு கப்பலில் 6 இலங்கை மீனவர்களும் இருந்தனர் ,அனைவரும் மாலைத்தீவு கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த இரண்டு மீன்பிடி படகுகளும் கடந்த 25ஆம் திகதி பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு படகுகளும் தற்போது ஹா அலிஃப் ஃபில்லதூ துறைமுகத்தில் நங்கூரமிட்டு, நூராதீன் என்ற மாலைத்தீவு கடலோர பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மாலைத்தீவு கடற்பரப்பில் இந்திய மற்றும் இலங்கை மீன்பிடி கப்பல்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பது வழமையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் இரத்து
இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் இரத்து
இலங்கை கராத்தே சம்மேளனம் மற்றும் இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்திற்காக நியமிக்கப்பட்ட இடைக்கால குழுக்களை கலைக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் ஜூலை மாதம் 28 ஆம் திகதி, அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ரொஷான் ரணசிங்க கராத்தே டோ சம்மேளனத்தின் பதிவை இடைநிறுத்தி, சங்கத்தின் பணிகளை தற்காலிகமாக நடத்துவதற்கு இடைக்கால குழுவை நியமித்தார்.
இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் இரத்து
இது தொடர்பான இடைநிறுத்தத்தை ஏற்படுத்திய வர்த்தமானியை தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் இரத்துச் செய்து, கராத்தே டோ சம்மேளனத்தின் விடயங்கள் கடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகள் சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் ரொஷான் ரணசிங்க கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்தின் பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்தி இடைக்கால குழுவொன்றை நியமித்திருந்தார்.
தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையும் இரத்துச் செய்து சங்கத்தின் செயற்பாடுகளை முன்னைய அதிகாரிகள் சபையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
பொலிசார் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் 803 பேர் கைது
பொலிசார் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் 803 பேர் கைது
பொலிசார் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தியதில் 803 பேர் கைது செய்யப்பட்டனர் .விசேட பொலிஸ் நடவடிக்கையின் பொழுதே மேற்படி கைது நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது .
யுக்திய நடவடிக்கையின் தொடர்ச்சியே இந்த கைது நடவடிக்கை என பொலிசார் தெரிவித்துள்ளனர் .கைதானவர்கள் பலர் தேட படும் குற்றவாளிகளாக காணப்பட்டனர் .
யாவரும் நீதிமன்றில் பரப்படுத்த சிறை தணடனைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
போதைவஸ்து ஒழிப்பு சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர் .
தமிழ் தேசியம் தமிழருக்கு தெரியாதாம் எட்டப்பன் சுமந்திரன் பிதற்றல்
தமிழ் தேசியம் தமிழருக்கு தெரியாதாம் எட்டப்பன் சுமந்திரன் பிதற்றல்
தமிழ் தேசியம் தமிழருக்கு தெரியாதாம் சுமந்திரன் தெரிவித்துள்ளார் ,தமிழ் தேசிய வாதிகளிற்கு தெரியாது என கூறும் சுமந்திரன் புலம்பல்கள் இது என்றே மக்கள் .கூறுகிறார்கள்
2009 ஆம் ஆண்டு தமிழர்கள் அழிக்க பட்டதன் பின்னர் ,அதன் பின்னர் ஆண்ட ஆளும் கட்சிகளின் உயிர் நாடியாக அங்கம் வகித்த சுமந்திரன் ,தமிழ் தேசிய விடுதலை பெற்று கொடுக்கவில்லை .
தமிழன் அழிக்க பட்ட 14 வருடங்களில் தமிழர்களுக்கு இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை கூற வக்கற்ற சுமந்திரன், தானே தமிழர்களின் தலைவனாக மகுடம் சூட முனைகிறார் .
சட்டத்தை வைத்து அரசியல்வாதிகளை உள்ளக ரீதியாக மிரட்டி அடிபணிய வைக்கும் நடவடிக்கையில் இவர் ஈடுபடுகிறார் , இவ்வாறான குற்ற சாட்டுக்களை சமுக வலைத்தளங்களில் முன் வைக்க படுகிறது
சுமந்திரன் தமிழர்கள் நேசிக்கிறார்கள் என்றால் கனடாவில் கூழ் முட்டை அடிவாங்கி ஓடியது ஏன் ..?
தமிழ் தேசியம் தமிழருக்கு தெரியாதாம் எட்டப்பன் சுமந்திரன் பிதற்றல்
சாணக்கியன் சுமந்திரன் ஆகியோரை மக்கள் விரட்டியடித்தனர் .தனது பித்தலாட்டத்தை நிரப்பும் கூழ்முட்டையாக சுமந்திரன் உள்ளதை அந்த கூழ் முட்டையடி விவரங்கள் காணபடுகிறது
வந்திருந்த நாடுகளில் வந்திருந்து தமிழர்களை மிரட்டும் நடவடிக்கையில் சுமந்திரன் ஈடுபட்டார் .
இது தொடர்பாக பலமுறை பேட்டி காண முற்பட்டு அழைத்த பொழுது அவர் அழைப்புக்கு பதில் தரவில்லை .
வாங்க சார் எமது அழைப்புக்கு பதில் தாருங்கள் தமிழ் தேசியம் முதல் பல விடயங்கள் வரை பேசுவோம் .
உப்பு சப்பற்ற பேச்சுக்களைபேசி காலத்தை கடத்தி ஏமாற்றும் இந்த பித்தலாட்ட நாடகத்தை சுமந்திரன் நிறுத்த வேண்டும் .
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி சட்டத்தரணியாக உள்ள இவர் தமிழர்கள் தேசியம் பேசுகிறாராம் .
இப்பொழுது ஸ்ரீதரன் ஆட்சியை ஏற்க முடியாது அவருக்கு முட்டு கட்டை போட்டு குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் .
பொது மக்கள் அரசியல் கட்சியாக பரிணாமம் பெற்றுள்ள இவர் மக்கள் விமர்சனகள் மாற்று கருத்துக்களுக்கு பதில் அளிக்க வேண்டும் .
அதைவிடுத்து தனது அதிர்வு குழுக்கள் ஊடக பேசுவதை நிறுத்தி எம்மோடு பேசுங்கள் கேட்க நிறைய இருக்கு மிஸ்ட்டர் சுமந்திரன் .
தொடராக மக்களை ஏமாற்றுவதை நிறுத்தி நிலையான் அரசியலை நடத்துங்கள் .
சிங்கள ஏயன்சியாக உள்ள நீங்கள் ஆண்ட சிங்க முகமூடியை கழற்றி எறிந்து விட்டு முதலில், மனிதனாக மனித பண்புடன் வாழ முற்படுங்கள் மிஸ்டர் சுமந்திரன் .
புலிகள் காலத்தில் நீங்கள் எங்கு இருந்தீர்கள் ,கதிர்காமர் உங்கள் மாமா என்கின்ற விடயத்தை கூற மறைப்பது ஏன் என்பதை தெரிவியுங்கள் …?
கதிர்காமர் என் மாமா என்பதை நீங்கள் ஏற்கவிளையா..? அல்லது அது பொய்யா ?அதனையும் பகிரங்க வெளியில் பேசலாமே அப்போது நீங்கள் யார் என்பது மக்களுக்கு தெளிவாக புரியும் .
Grid
கோடி மோசடி பணம் திருடிய 500 கோடி தம்பதிகள் கைது
கோடி மோசடி பணம் திருடிய 500 கோடி தம்பதிகள் கைது
கோடி மோசடி பணம் திருட்டு அம்பலம் ,500 கோடி கொள்ளையடித்த தம்பதிகள் கைதுசெய்ய பட்டுள்ளனர் .
பிரமிட் திட்டத்தின் கீழ் இந்த மோசடியில் தம்பதிகள் ஈடுபட்டனர் என குற்றம் சாட்ட பட்டுள்ளது .
மோசடி பணம் கொள்ளையில் ஈடுபட்ட தம்பதிகள் மறைந்திருந்த நிலையில் இவர் கைது செய்ய பட்டுள்ளனர் .
இந்த மோசடி தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்ட நிலையில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது .
வடகிழக்கு இணைந்த தீர்வே தமிழருக்கு வேண்டும் சிவஞானம் சிறிதரன் தெரிவிப்பு
வடகிழக்கு இணைந்த தீர்வே தமிழருக்கு வேண்டும் சிவஞானம் சிறிதரன் தெரிவிப்பு
வடகிழக்கு இணைந்த தீர்வே தமிழருக்கு வேண்டும் என சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார் ,தலைவராக பதவி ஏற்றதன் பின்னர் சிவஞானம் சிறிதரன் இவ்வாறு தெரிவித்து தமிழர் விடுதலையின் முக்கியதத்துவத்தை எடுத்துரைத்தார் .
எமக்கு வடகிழக்கு இணைந்த தாயாக பகுதியே தமிழருக்கு அதிகம் பொருந்திய ஒன்றாக காணப்படும் என தமிழீழ விடுதலை புலிகள் தெரிவித்து, அந்த நிர்வாக அலகை கடை பிடித்து வந்தனர் .
அவ்வாறான நிலையில் ஒன்றிணைந்த இலங்கைக்குள் ,ஒன்றித்து வாழும் சம்ஸடி முறையிலான அதிகாரம் ,தமிழருக்கும் வேண்டும் என சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார் .
தமிழருக்கு வடகிழக்கு இணைந்த தீர்வை யார் தருகிறார்களோ அவர்களுக்கு எமது ஆதரவு வழங்க படும் என ,சிவஞானம் சிறிதரன் தெரிவித்து ,இப்பொழுதே சிங்கள கட்சிகளுக்கு போடு ஒன்றை போட்டுள்ளார் .
விபத்து ஏற்பட சாரதிகளே காரணம் பண்டத்துல பந்துல குணவர்தன
விபத்து ஏற்பட சாரதிகளே காரணம் பண்டத்துல பந்துல குணவர்தன
விபத்துக்கள் அதிகம் சாலைகளில் ஏற்பட சாரதிகளே கரணம் என பந்துல குணவர்தனதெரிவித்தார் ,இவ்வாறான விபத்துகளினால் சாரதிகள் இறப்பதுடன் காயமடைந்து வருவதாக பந்துல குணவர்தன கவலை வெளியிட்டார் .
வீதி விபத்துக்களை தடுக்க பல்வேறு பட்ட நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகின்ற பொழுதும் ,ஆண்டு தோறும் விபத்துக்கள் அதிகரித்து செல்கின்றன .
கல்வி முறையில் இருந்து வீதி போக்குவரத்தை மக்களுக்கு தெளிவு படுத்தினால் மட்டுமே இந்த விபத்தில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும் என தெரிவிக்க படுகிறது .
Grid
உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு 15 லட்சம் இழப்பீடு
உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு 15 லட்சம் இழப்பீடு
சனத் நிஷந்தவுடன் இறந்த பொலிஸ் கான்ஸடபிள் அதிகாரிக்கு 15 லட்சம் இழப்பு வழங்க பட்டுள்ளதக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது
இராயங்க அமைச்சருக்கு காவல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொலிஸ் கான்ஸடபிள் அதிகாரிக்கே இந்த இழப்பீடு வழங்க பட்டுள்ளது .
இவர் இறந்த பின்னர் பொலிஸ் தலைமையாகத்தால் பதவி உயர்வு வழங்க பட்டிருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு
ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி
ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு
மோட்டார் சைக்கிள் திருட்டு
டெங்கு அபாயம் தொடர்கிறது
பொலிசார் நடத்திய யுக்திய நடவடிக்கையில் 814 பேர் கைது
பொலிசார் நடத்திய யுக்திய நடவடிக்கையில் 814 பேர் கைது
பொலிசார் நடத்திய யுக்திய நடவடிக்கையில் 814 பேர் கைது செய்யப்பட்டனர் ,கடந்த 24மணித்தியாலத்தில் யுக்திய நடவடிக்கையில் பொலிசாரால் இந்த கைது இடம்பெற்றுள்ளது .
இந்த யுக்திய நடவடிக்கை பொலீசாருடன் சிக்கிய நபர்கள் பல்வேறு பேட் குற்ற செயல்களுடன் தொடர்பு பட்டவர்களாக காண படுகின்றனர் .
அதிக அளவான நபர்கள் போதைவஸ்துடன் கைது செய்ய பட்டுள்ளதாக யுக்தியை நடவடிக்கை பொலிசார் தெரிவித்துள்ளனர் .
Grid
புதுக்குடியிருப்பு விபத்தில் வாலிபன் பலி அதிகரித்த விபத்துக்கள்
புதுக்குடியிருப்பு விபத்தில் வாலிபன் பலி அதிகரித்த விபத்துக்கள்
புதுக்குடியிருப்பு விபத்தில் வாலிபன் பலியாகியுள்ளார் , முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வில்லிபுனத்தை சேர்ந்தவரே பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
அதிகரித்த விபத்துக்கள் தொடர்பாக விசேட வீதி போக்குவரத்து கண்காணிப்பு நடத்த பட்டு வருகின்ற பொழுதும், சாரதிகள் அலட்சிய போக்கால் இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
இலங்கையில் நாள்தோறும் இடம்பெறும் விபத்து சம்பவங்களில் சிக்கி நான்கிற்கு மேற்பட்ட மக்கள் பலியாகி வருகின்றனர் .
இவ்வாறான புதிய விபத்து புள்ளி விபரம் மக்களை அலறவிட்டுள்ளது .
இந்தியா மீனவர்கள் 12 பேர் விடுதலை
இந்தியா மீனவர்கள் 12 பேர் விடுதலை
இந்தியா மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் .யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள் நீதிமன்றினால் இவ்வாறு விடுவிக்க பட்டுள்ளனர் .
இலங்கை கடல்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்கின்ற குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட இந்தியா மீனவர்களே இவ்விதம் விடுவிக்க பட்டுள்ளனர் .
விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர் இலங்கை கடற்படையால் இந்தியா மீனவர்கள் தொடராக இவ்விதம் கைது செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
மத்திய கிழக்கில் பதட்டங்களை உடனடியாகக் குறைக்க இலங்கை அழைப்பு
இஸ்ரேலில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
எரிபொருள் இன்றி தடுமாறும் இலங்கை
டிரம்ப்-ஜி உச்சிமாநாட்டிற்கு வழிவகுக்கும் வகையில் அமெரிக்க சீன
சிங்கள தமிழ் புத்தாண்டு வெடித்த சண்டை
பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா
பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு பொலிஸ் கவலை
பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு பொலிஸ் கவலை
பாலியல் குற்றங்கள் இலங்கையில் அதிகரித்து வருவதாக பொலிஸ் கவலை வெளியிட்டுள்ளது ,இந்த் ஆண்டில் பாலியல் குற்றங்கள் விபரத்தை வெளியிட்ட பொலிஸ் புள்ளி விபரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன .
ஆண்டு தோறும் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சம்சுபா உளவியலுடன் சம்பந்த பட்ட ஒன்றாக காண படுகிறது .
இ கடந்த வாரியத்தில் 18 வயதுக்கு உள்ளிட்ட பெண்கள் 1502 பேர் பிழையால் துன்புறுத்தல் குற்றங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் ரேணுகா தெரிவித்துள்ளார் .
பெண்கள் மற்றும் மக்கள் மத்தியில் விழுப்புணர்வுஅட்டிர காரணத்தினாலும் ,போதை பாலகத்தினால் இவ்விதமான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொள்ளை
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொள்ளை
பமுனுகம தெலத்துர எலபெம்ம பகுதியில் கூரிய ஆயுதங்களால் மூவர் தாக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இணையத்தில் வெளியான விளம்பரத்துக்கு அமைய மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக லொறியில் வந்த மூவரே இவ்வாறு தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதியில் மறைந்திருந்த நால்வர் இந்த தாக்குதலை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 132,000 ரூபாய் பணம், 5 அலைலைபேசிகள், தங்க நகை மற்றும் வளையல் என்பவற்றை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்ட சந்தேக நபர்கள் பமுனுகம பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாது இருக்கிறோம் ஸ்ரீதரன்
சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாது இருக்கிறோம் ஸ்ரீதரன்
தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர். இதனால் அரசு அச்சத்தில் மூழ்கியுள்ளது. இதுவும் தமிழர்களுக்கான பாதை திறக்க வழியாகும். ஆகவே நாம் எல்லோரும் இணைந்து ஒருமிக்க வேண்டிய காலகட்டம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் கடந்த 21 ந் திகதி தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களினால் வியாழக்கிழமை(24) மாலை வரவேற்பு நிகழ்வு மன்னார் அலுவலகத்தில் நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாது இருக்கிறோம் ஸ்ரீதரன்
மனிதர்களுடைய வாழ்விலே பிறப்பிலிருந்து இறப்பு வரை எவ்வளவோ நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறே தமிழர்களுடைய வாழ்வில் பல அடையாளங்களோடும் எதிர் பார்ப்புகளோடும் கடந்து சென்று கொண்டிருக்கின்றன.இந்த நேரத்தில் மன்னார் மக்களுடன் நான் உரையாடுவது எனது வரலாற்றில் ஒரு பதிவாகின்றது.என்னுடைய தெரிவுக்கு மன்னார் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு நன்றியுடன் அத்துடன் உங்களுடன் நம்பிக்கையுடன் பயணிக்க இருக்கிறேன்.
இந்த மண்ணிலே நாம் பல உயிர்களை தியாகம் செய்திருந்தும் நாம் இன்னொரு சுதந்திரமான காற்றை சுவாசிக்க முடியாத கட்டத்தில் இருக்கிறோம். நாம் இன்னும் அந்நியப்படுத்த பட்டிருக்கின்றோம்.
நாம் 75 ஆண்டுகளுக்கு மேலாக போராடி போராடி வரும் ஓர் இனமாக இருக்கின்றோம். 1949 ஆம் ஆண்டு தந்தை செல்வா கூறியது தமிழர் ஒரு தேசிய இனம். இழந்துபோன இறைமையை மீட்டு எடுத்து எமது தேசிய அடையாளத்தோடு வாழ வேண்டும் என செயல்பட ஆரம்பித்தார்.
தந்தை செல்வா மன்னார் மண்ணுக்கும் வந்து சென்றுள்ளார். அவருடைய காலத்தில் பலர் இந்த மண்ணில் எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்துள்ளனர்.அவருடைய தேசிய சின்னத்துடன் இந்த மண்ணில் தேசிய மாநாடு இங்கு நடந்துள்ளது.
இவ்வாறு வரலாறு இப்பொழுதும் எமக்கு புதிய பணியை தந்துள்ளது. இது ஒரு தனி மனிதன் ஆற்றும் பணியல்ல. மாறாக நாம் யாவரும் ஒன்றிணைந்து ஒரு சக்தியாக தமிழர் என்று திரள்கின்ற பொழுது இந்த சமூகம் உலகம் எம்மை அங்கிகரிக்கின்ற நாள் நெருங்கிக் கொண்டு இருக்கின்றது என்ற நம்பிக்கை எம்மிடம் இருக்க வேண்டும்.
எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் உலகம் முழுவதும் பாரிய மாற்றங்கள் இடம்பெற இருக்கின்றன. இன்று உலகத்தில் நிகழ்கின்ற சண்டைகள் அரசியல் நிகழ்வில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இலங்கை நாடும் இங்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறார்கள். இலங்கை உலகத்தை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றது என உலகம் தெளிவாக புரிந்து கொண்டு இருக்கின்றது.
தமிழர்களின் தேசிய அபிலாசைகளை உலகம் புதிய பரிமாணத்துடன் சிந்திக்க முற்பட்டுள்ளது. நாம் இழந்த ஆத்மாக்கள் இப்பொழுது எமக்கு உத்வேகத்தை தருகிறது.நாம் எந்த நோக்கத்துக்காக எமது உறவுகளின் உயிர்களை இழந்தோ மோ அந்த நோக்கங்கள் இன்னும் அழிந்து போகவில்லை.சிங்கள மக்களுக்கு முன்பே நமது தமிழினம் இங்கு வாழ்ந்துள்ளது. நாம் இங்கு பல அடையாளங்களுடன் வாழ்ந்திருக்கிறோம்.
ஆகவேதான் இழந்த இறைமையை தான் நாம் மீண்டும் பெற போராடுகின்றோம். எமது மொழி , இடம் , கலை பண்பாட்டு இவைகள் எமது தமிழ் தேசிய அடையாளத்தை பற்றியுள்ளது.நாம் பல சவால்களை சந்தித்து இன்னும் மனிதர்களாக இருக்கிறோம் என்றால் நாம் அறத்தின் மீதும் தர்மத்தின் மீது பற்றுக் கொண்டவர்களாக இருக்கின்றோம்.இலங்கை அரசுக்கு ஒரு செய்தியை கூறுகின்றோம்.
தமிழர்களுக்கு வெளிச்சமான பாதை தொடங்கியுள்ளது. ஆகவே நாம் ஒருமித்த கரங்களாக இணைந்து கொள்வோம்.
நமக்கு இந்த நாடு நிம்மதியான அமைதியை தருமா? என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டு நிற்கின்றோம். இலங்கை அரசு தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்காவிடில் இந்த நாடு பெரும் பாதாளத்துக்குள் விழும் என்பது ஐயம் இல்லை.
நாம் பெற்ற துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர். இதனால் அரசு பயத்தில் மூழ்கியுள்ளது. இதுவும் தமிழர்களுக்கான பாதை திறக்க வழியாகும். ஆகவே நாம் எல்லோரும் இணைந்து ஒருமிக்க வேண்டிய காலகட்டம் என தெரிவித்தார்.





































