Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
சுவீடன் பறந்த அனுர திஸாநாயக்க
சுவீடன் பறந்த அனுர திஸாநாயக்க
சுவீடன் பறந்த அனுர திஸாநாயக்க தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க சுவீடன் நாட்டிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
நேற்றிரவு (25) அனுரகுமார திஸாநாயக்க இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அனுரகுமார திஸாநாயக்க ஏப்ரல் 27 ஆம் திகதி சனிக்கிழமை சுவீடனில் நடைபெறும் பொதுக்கூட்டம் மற்றும் பல சிநேகபூர்வ சந்திப்புகளில் பங்கேற்பதற்காகவே இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இலங்கையில் அடுத்த ஜனாதிபதி தான் எனவே முழக்கம் இட்டு வரும் அனுர திஸாநாயக்க தற்போது முக்கிய ஏறிப்போய் நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளுக்கு பயணம் சென்றவண்ணம் உள்ளார் .
தான் இலங்கையின் ஜனாதிபதியானால் அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற வரைபு அட்டவணை ஒன்று சில நாடுகளினால் அனுர திஸாநாயக்காவுக்கு வழங்க பட்டுள்ளது என, சில எதிரிகள் இப்படி உரைத்து வருகின்றன .
இது அனுர திஸாநாயக்க்வின் அரசியல் பயணத்தை திசை திருப்பி மக்களை அவருக்கு எதிராக திசை திருப்பும் தந்திரோபாய திட்டமா என எண்ண வைக்கிறது .
எனினும் இவரும் சிங்கள மக்கள் மத்தியில் பேசும் பொழுது இனவாதத்தை கக்கிய வண்ணம் பயணிக்கிறார் .
அவ்வாறன இவர் எவ்வாறு தமிழருக்கு தீர்வினை பெற்று கொடுப்பார் என்ற விடயம் எழுகிறது .
சுவீடன் பயணமும் இதன் ஒரு அங்கமாக காணப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
இராணுவ கெப்வண்டி மீது லொறி மோதல்
இராணுவ கெப்வண்டி மீது லொறி மோதல்
இராணுவ கெப்வண்டி மீது லொறி மோதல் ,அதிகாலை மாங்குளம் வசந்தநகரில் இராணுவ கெப் வண்டி மீது லொறி மோதியதில் இலங்கை இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று (26) காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முறிகண்டி வசந்தநகர் சந்தியின் A9 வீதியில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த பார ஊர்தியை, அதே திசையில் பயணித்த இராணுவ கப் வாகனம் முன் நோக்கி முற்பட்டுள்ளது.
இதன்போது குறித்த கப் வாகனம் திடிரென இயங்காமல் நின்றுள்ளது. எதிரே வந்த வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி விடும் எனும் அச்சத்தில் விபத்தை தருக்கும் நோக்குடன் சாரதி பாரஊர்தியை செலுத்த முற்பட்டுள்ளார்.
இராணுவ வீரர்கள் வீதியில் விழுந்துனர்
இதன்போது, கப் வாகனத்தில் பாரஊர்தி மோதியதில் அதில் பயணித்த இரண்டு இராணுவ வீரர்கள் வீதியில் விழுந்துள்ளனர்.
அதில் ஒருவர் மேல் பாரஊர்தி ஏறியதில் குறித்த இராணுவ வீரர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
இதேவேளை சம்பவத்தில் காயமடைந்த 7 பேரில் இருவர் இரணைமடுவில் உள்ள இராணுவ வைத்தியசாலையிலும், மற்ற நால்வரும் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடல் கொந்தளிப்பாக காணப்படும் எச்சரிக்கை
கடல் கொந்தளிப்பாக காணப்படும் எச்சரிக்கை
கடல் கொந்தளிப்பாக காணப்படும் எச்சரிக்கை ,நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.
இதன்படி, மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்
காற்று மின்னல் தாக்குதல்
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.
இதன் கடல் கரையோர மக்களுக்கும் மீனவர்களும் ,சுற்றுலா பயணிகளுக்கும் கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
சம்பந்தன் ஐயாவுக்கு விடுமுறை
சம்பந்தன் ஐயாவுக்கு விடுமுறை
சம்பந்தன் ஐயாவுக்கு விடுமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா, பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காமல் இருக்க மேலும் 3 மாத கால விடுமுறை வழங்க பாராளுமன்றம் அனுமதியளித்துள்ளது.
பாராளுமன்றம் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி., த.தே.கூவின் தலைவர் இரா.சம்பந்தன்
பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காமல் இருக்க மேலும் 3 மாத கால விடுமுறை வழங்கும் முன்மொழிந்தார். அதற்கு பாராளுமன்றம் அங்கிகாரம் வழங்கியுள்ளது.
நீதிபதி இளஞ்செழியன்மீது துப்பாக்கிச்சூடு
நீதிபதி இளஞ்செழியன்மீது துப்பாக்கிச்சூடு
மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவரது மெய்ப்பாதுகாவலாரான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தார் .
மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த சம்பவம் தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் புதன்கிழமை (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்
இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்திற்கு வருகைதந்தார்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையில் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனும் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரும் சாட்சியமளித்தனர்.
சட்டமா அதிபர் திணைக்களம்
குறித்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் விசேட அரச சட்டவாதி நாகரத்தினம் நிசாந்தும் எதிராளிகள் சார்பில் சட்டத்தரணி பிரதீபன் சர்மினியும் ஆஜராகினர்.
குறித்த வழக்கு விசாரணை தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
தமிழரசு நிர்வாகத்தெரிவு வழக்கு ஒத்திவைப்பு
தமிழரசு நிர்வாகத்தெரிவு வழக்கு ஒத்திவைப்பு
தமிழரசு நிர்வாகத்தெரிவு வழக்கு ஒத்திவைப்பு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (24) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத் தெரிவு
தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
எதிராளிகள் பெயரிடப்பட்டுள்ள நிலை
இது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கருத்துரைக்கையில்,
07 எதிராளிகள் பெயரிடப்பட்டுள்ள நிலையில், 2ஆம்,4ஆம் எதிராளிகளான தலைவராக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன்,
செயலாளராக தெரிவாகிய ச.குகதாசன் ஆகியோர்களுக்கு சார்பாக ஆஜராகினேன். சுமார் மூன்று மணி நேரம் இவ்வழக்கு விவாதிக்கப்பட்டு சமர்ப்பணம் செய்யப்பட்டது.
வழகுகல் தாக்கல்
கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி வழகுகல் தாக்கல் செய்யப்பட்டு 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு பொதுநலன் கருதி முடிவுக்கு கொண்டு வரவேண்டும். கட்சி யாப்பை மீறியதாக இங்கு எதுவும் சொல்லப்படவில்லை. குறிப்பாக சில விதிகளில் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் வழக்கு தொடர்ந்தால் அதனை வெற்றி கொள்ளலாம். ஆனால், காலம் செல்லும், இதனால் வழக்கை காலம் சென்ற நிலையில், வெற்றி கொண்டால் தோல்வியாகவே கருதப்படும். வழக்காளி கோரும் நிவாரணத்தை வழங்கத் தயாராக இருக்கிறோம்.
எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, இதனை வழக்காளி தனது சட்டத்தரணி ஊடாக தெரிவிக்கவேண்டும். வழக்கை வாபஸ் பெற வேண்டும் என எனது வாதத்தை நீதிமன்றில் தெரிவித்தேன் என்றார்.
தேர்தல் தொடர்பில் மனம்திறந்த நாமல்
தேர்தல் தொடர்பில் மனம்திறந்த நாமல்
தேர்தல் தொடர்பில் மனம்திறந்த நாமல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியிலிருந்து பொருத்தமான வேட்பாளரை முன்னிலைப்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியில் பல வேட்பாளர்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த தேர்தல் வந்தாலும் அதற்கு தயாராக இருக்கிறோம்.
இலங்கையில் எங்கு சென்று எமது முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் அழைக்கப்பட்டாலும் அனைத்து வேட்பாளர்களும் எமது கூட்டங்களில் இணைவதை நீங்கள் பார்க்கலாம்.
இதன் ஊடாக எமது கட்சி கிராமங்களிலும் தொடர்ந்து செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. ஜனாதிபதி, தேர்தலை வைப்பாரா? இல்லையா? என்பது எங்களுக்குத் தெரியாது.
வாக்குச் சீட்டில் மொட்டு சின்னம்
தேர்தல் வைத்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடும்.
அப்போது வாக்குச் சீட்டில் மொட்டு சின்னம் இருக்கும். வேட்பாளரை பற்றி உரிய நேரத்தில் வௌிப்படுத்துவோம். அதனை முன்கூட்டியே கூற வேண்டிய அவசியம் இல்லை.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு ஏனும் விண்ணப்பிக்க வேட்பாளர்கள் யாராவது இருக்கிறார்களா என்று நீங்கள் முன்பு என்னிடம் கேட்டீர்கள்.
தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுஜன பெரமுனவிடமிருந்து பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் மூலம், காலத்திற்கு ஏற்ற, சவால்களை சமாளிக்கக்கூடிய நபரை முன்வைப்போம்” என்றார்.
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதை தடுப்பதற்கு அரசாங்கம்
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை நடத்துவதை தடுப்பதற்கு அரசாங்கம் எத்தகைய தந்திரங்களை கையாண்டாலும் அவை வெற்றியடையாது என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் அபிவிருத்திக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் முறையான வேலைத்திட்டம் இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் கட்சிகளுக்கு இடையில் பெரும் போட்டி நிலவுகிறது .
இவ்வாறான கால பகுதியில் மகிந்த ராஜபக்ச மகன் நாமல் ராஜபக்ச இவ்வாறு தனது கருத்தை பதிவு செய்து பரபரப்பை கிளப்பியுள்ளார் .
பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர்
பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர்
வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர் ஒருவர் நுழைந்தமையால் மாணவிகள் மத்தியில் அச்சநிலை ஏற்ப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பம்பைமடு பெண்கள் விடுதியில்
பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் முகாமுக்குள் இரவு வேளையில் இனம் தெரியாத நபர் ஒருவர் உள்ளாடையுடன் நுழைந்துள்ளார்.
இதனால் அங்கிருந்த மாணவி ஒருவர் அச்சமடைந்து கூச்சலிட்ட நிலையில், குறித்த நபர் தப்பிச்சென்றுள்ளார்.
இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி தாயாருக்கு தொலைபேசியூடாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இருதய நோயினால் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் இச்சம்பவம் அறிந்ததை அடுத்து ஏற்பட்ட திடீர் நோய் நிலையால் மரணமடைந்தார்.
மாணவிகள் விடுதியில்
குறித்த சம்பவத்தால் மாணவிகள் விடுதியில் இருந்து முற்றாக வெளியேறியுள்ளமையுடன் இவ் அநீதிக்கு எதிரான நீதியினை
கோரியுள்ளமையுடன் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஏன் உள்ளனர் என்ற கேள்வியினையும் எழுப்பியுள்ளனர்.
இதேவேளை உள்ளாடையுடன் நுழைந்த நபர் தொடர்பாக கண்காணிப்பு கெமராக்களின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது
சாதாரண தரப்பரீட்சை தொடர்பில் விசேடஅறிவித்தல்
சாதாரண தரப்பரீட்சை தொடர்பில் விசேடஅறிவித்தல்
எதிர்வரும் கல்விப் பொதுத் சாதாரண தரப்பரீட்சை தொடர்பில் விசேடஅறிவித்தல் இலக்காகக் கொண்டு இடம்பெறும் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அன்றைய தினம் நள்ளிரவு 12.00 மணி முதல், பரீட்சையை இலக்காகக் கொண்ட மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் உள்ளிட்டவை இடைநிறுத்தப்படும் என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த விதிகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை
இந்த விதிகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.
இதேவேளை, அண்மையில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் மே மாத இறுதியில் வெளியிடப்படும் எனவும் பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் மதிப்பீடு செய்வதில் ஏற்பட்டுள்ள காலதாமதம்
காரணமாக உயர்தர வகுப்புகளுக்கு மாணவர்கள் பிரவேசிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.
கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு கடிதம்
கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள அவர், கடந்த வருடம் டிசம்பர் மாதம் சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதிலும், 4 மாதங்களுக்கு
மேலாகியும் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகளை வெளியிட பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஏறக்குறைய 2 இலட்சம் மாணவர்கள் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகளுக்காக விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாகவும், அந்த பெறுபேறுகளின் தாமதம்
காரணமாக உயர்தர பாடப் பிரிவுகளை தெரிவு செய்வதில் மாணவர்களின் செயற்பாடுகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே மீண்டும் மீள் மதிப்பீட்டை நடத்தி பெறுபேறுகளை விரைந்து வெளியிடுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிடுமாறு கல்வி அமைச்சரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியாளர்களை கைது
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியாளர்களை கைது
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியாளர்களை கைது அநுராதபுரத்தை அண்மித்த விகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்ட் .
ஒருவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குவதாக பணம் வசூலித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டுடன் தொடர்புடைய தரப்பினரை கைது செய்யுமாறு விசாரணை குழுக்களுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு
உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தவிர வேறு எந்த தரப்பினருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பணத்தைப் பெறும் அதிகாரம் இல்லை எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, வெளிநாட்டு வேலைகளை வழங்குவதாக கூறி சட்டவிரோதமான முறையில் பணத்தை பெற்றுக்கொள்ளும் ஆட்கடத்தல்காரர்களை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை பிரிவிற்கும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மோசடிகளை தடுக்க உத்தரவு
இவ்வாறு பணம் பெறும் மோசடிகளை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கமாறும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை விரைவாகவும் வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்கு சகல வசதிகளையும் வழங்குமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உயர் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை ஏப்ரலில் வீழ்ச்சி
சுற்றுலாப் பயணிகளின் வருகை ஏப்ரலில் வீழ்ச்சி
சுற்றுலாப் பயணிகளின் வருகை ஏப்ரலில் வீழ்ச்சி நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வந்தது.
இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது.
ஏப்ரல் முதல் மூன்று வாரங்களில் மொத்தம் 107,124 சுற்றுலாப் பயணிகளே நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
இந்த எண்ணிக்கையை ஆண்டின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடும் போது, ஒரு மந்தநிலையை காட்டுகிறது.
ஏப்ரல் மாதத்தில் 100,000 சுற்றுலாப் பயணிகள் மூன்று வாரங்களில் வருகை தந்துள்ளனர்.
நாளாந்த வருகை சராசரி 5,100 என்ற அளவில் குறைந்துள்ளது. அதே நேரத்தில் வாராந்தம் சராசரி வருகை 35,000 ஆக குறைந்தது.
மொத்த சுற்றுலா பயணிகளின் வருகை
எனினும், இந்த மந்தநிலை அசாதாரணமானது அல்ல, மாதாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை போக்குகளைப் பார்க்கும்போது, தொற்றுநோய்க்கு முன்பே, முதல் காலாண்டில் ஒரு உயர்வுக்குப் பிறகு, ஏப்ரல் மாதத்தில் மந்தநிலை காணப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் ஆரம்பமாவதற்கு முன் வரும் இரண்டு மாதங்களில் வேகம் மேலும் குறையும்.
ஏப்ரல் மாதத்தில் மொத்த சுற்றுலா பயணிகளின் வருகையில் 17 சதவீதமானவர்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, 11 சதவீதமானவர்கள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ளதோடு, 10 சதவீதமானவர்கள் பிரித்தானியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.
கொரனோ வைரஸ்
உலகை தாக்கிய மிக பெரும் கொரனோ வைரஸ் தாக்குதலை நோயினை அடுத்து ,பொருளாதாரத்தில் வீழ்ச்சியுற்ற இலங்கை தேசத்தினால் அதில் இருந்து மீண்டு எழ முடியவில்லை .
உல்லாசப் பயணத்தில் மட்டுமே தமது நாட்டின் வருமானத்தை நம்பி இருந்த ,இலங்கை தற்பொழுது அந்த வருமானத்தை இழந்து தவிக்கும் காட்சிகள் இலங்கையை நகைப்புக்கு உள்ளாக்கியது .
வீதிக்கடை உணவாகம்
அவ்வாறான கால பகுதியில் மீளவும் வளர்ச்சியடைந்து வரும் உல்லாச பயணத்தை ,சில வீதிக்கடை உணவாக காரர்கள் மேற்கொள்ளும் செயல் பாட்டினால், மீளவும் அந்த உல்லாச பயணம் வீச்சியுறும் நிலைக்கு தள்ள பட்டு வருகிறது .
மீளவும் அதே துயரை இலங்கை சந்திக்க போவதை உல்லாச பயணிகள் வரவு எடுத்து இடித்துரைக்கிறது .
வவுனியா பொலிஸார் அதிரடி
வவுனியா பொலிஸார் அதிரடி
வவுனியா பொலிஸார் அதிரடி வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக பல மோசடிகள் இடம்பெறுவதாகவும் அதற்கு பொலிஸாரும் உடந்தை என தெரிவித்து நேற்றைய தினம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதனை தொடர்ந்து வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கமைவாக நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .
பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு
செயல்பட்ட தலைமை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க தன் தலைமையிலான குழுவினருடன் இன்று புதன்கிழமை (24) அதிகாலை
வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக மோசடிகளில் ஈடுபட்டுவருபவர்கள் என அடையாளம் காணப்பட்ட ஆறு பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் விசாரணை
கைது செய்யப்பட்டவர்களை தடுத்து வைத்து விசாரணை மேக்கொண்ட பின்னர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, வுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க அவர்கள் எதிர்வரும் நாட்களில் கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக ஏதேனும்
மோசடிகள் இடம்பெறுமாயின் தனது உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கமான 0718593520 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவித்தல் வழங்கியுள்ளார்.
பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பலரும் பராட்டுக்களை தெரிவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது
பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது
பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது ,நீதிபதி இவ்விதம் லஞ்சம் பெற்றுள்ள சம்பவம் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது .
கைது இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால், புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர், ரூ. 5,000 லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிபதி கைது
புத்தளம் வெத்தளை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் முறைப்பாட்டையடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பான விவாகரத்துச் சான்றிதழை வழங்குவதற்காக, குறித்த நீதிபதி ஒரு பெண்ணிடம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் பெருகி வரும் குற்றங்கள் மற்றும் மக்கள் முன்பாக நீதியை நிலை கட்டவேண்டிய நீதிபதியே வ்வாறு லஞ்சம் பெற்று கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
காவல்துறை மற்றும் அரச அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் அதிகமாக காணப்படுகின்றன .
அனால் தற்போது நீதிகளும் லஞ்சம் பெற்று கொள்கிறார்கள் என்ற விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இந்த செயல்பாடானது இலங்கை நீதித்துறையில் நம்பிக்கை அற்ற நிலையை ஏற்படுத்தி விட்டுள்ளது .
மைத்திரிபாலவுக்கு இடைக்காலத் தடையுத்தரவு
மைத்திரிபாலவுக்கு இடைக்காலத் தடையுத்தரவு
மைத்திரிபாலவுக்கு இடைக்காலத் தடையுத்தரவு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை விதித்து கொழும்பு பிரதான மாவட்ட நீதவான் சந்துன்விதானகே புதன்கிழமை (24) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.
இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது .
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினரும் கலாசார அமைப்பாளருமான முண்டிகு சரச்சந்திரன் மற்றும் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட கட்சியின் நான்கு உறுப்பினர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை பரிசீலித்ததன் பின்னர் இந்த இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது .
வழக்கு விசாரணை நிறைவுக்கு வரும் வரையிலும் இந்த இடைக்காலத்தடையுத்தரவு அமுலில் இருக்கும்
மைத்திரிபால ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது சட்டவிரோதமானது
2022 ஆம் ஆண்டு இந்த வழக்கை சர்ச்சந்திர தாக்கல் செய்துள்ளார், மேலும் மைத்திரிபால சிறிசேன 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது சட்டவிரோதமானது என அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சாந்த ஜயவர்தன நீதிமன்றில் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பின் படி, முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கட்சியின் தலைவர் பதவியை வகிக்க சாத்தியமில்லை எனவும் அவர்கள் ஆதரவாளர்களாக செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாத, பிரதிவாதங்களை அவதானித்த நீதவான், இடைக்கால உத்தரவைப் பிறப்பித்ததுடன், ஆட்சேபனைகளை ஜூன் 24 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு பிரதிவாதிக்கு உத்தரவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் சட்டத்தரணி ஜயமுதித ஜயசூரிய மற்றும் சட்டத்தரணி சம்பத் பெரேரா ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்
ஈரான் ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்
ஈரான் ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்
ஈரான் ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்,இலங்கைக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கை வந்தார்.
இலங்கை மாத்தள விமான நிலையத்தி வந்தடைந்த ஈரான் கேனாதிபதி இப்ராஹிம் ரைசி.உமா ஓயா திட்டத்தை திறந்து வைப்பர் என தெரிவிக்க பட்டுள்ளது .
அச்சுறுத்தல் நிலையில் இலங்கை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி
இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சம் பெற்றுள்ள இக்கால பகுதியில் ,இலங்கை ,வந்தடைந்துள்ள ஈரான் ஜனாதிபதியின் வரவு துணிச்சல் நிறைந்த ஒன்றாக பார்க்க படுகிறது .
ஈரானுக்கும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதும் ,பதிலுக்கு ,இஸ்ரேலுக்கு ஈரான் அடித்த நிலையில் ,அமெரிக்கா ஐரோப்பா ,இஸ்ரேல் ,எதிர்ப்புக்கு மத்தியில் ஈரான் ஜனாதிபதி இலங்கை வந்தடைந்துள்ளார் .
மொசாட் குறியில் ஈரான் ஜனாதிபதி
மொஸாட் குறியில் என்றான் ஜனாதிபதி உள்ள பொழுதும் ,பாதுகாப்பு அச்சுறுத்தல் மத்தியில் பயணித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது .
இவர் இலங்கையில் மொசாட்டினால் கொலை செய்ய பட கூடிய ஆபத்துக்களு உள்ளதான அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது .
அவ்வாறு நிகழ்ந்தால் இலங்கை அமெரிக்கா ,இஸ்ரேலை தட்டி கேட்கவா முடியும் என்ற நிலையே காணப்படுகிறது .
ஈரான் இலங்கை உறவு
ஈரானுக்கும் சிலாகிக்கும் இடையில் நல்லுறவு காணப்படுகிறது .பொருளாதார ரீதியில் இலங்கை பெரும் நெருக்கடியை சந்தித்த பொழுது ஈரான் மிக பெரும் ஆதரவை வழங்கி இருந்தது .
விசேட எண்ணெய் கப்பல்களை அனுப்பி வைத்திருந்தது .மேலும் இலங்கை தேயிலையை மாதம் ஒன்றுக்கு ஐந்து மில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்கிறது .
இவ்வாறான பொருளாதார ஒப்பந்தங்களில் ஈரானுக்கும் இலக்கைக்கும் நல்லுறவு காணப்படுகிறது .
அவ்வாறான இவ்வேளையில் ,ஈரான் ஜனாதிபதி இலங்கை வந்தடைந்துள்ளது ,மேலும் இருநாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பில் பலத்தை சேர்க்கும் என கருத படுகிறது .
ஜனாதிபதியின் இலக்கை வருகையுடன் இலங்கை மீதான மேற்குலக நாடுகளின் அழுத்தம் அதிகரிக்க கூடும் எனவும் ,ஐக்கிய நடுகல் மனித உரிமை அவையில் ,இலங்கை தமிழ் இனப்படுகொலை தொடர்பான விடயம் தீவிரம் பெறலாம் என படுகிறது .
தமது சொல்லை தட்டையா இலங்கைக்கு ,அவர்கள் புரிந்த தமிழ் இந கொலையை தூசி தட்டி எடுத்தாலும் வியப்பதற்கில்லை எனலாம் .
யாழ் விபத்தில் ஒருவர் காயம்
யாழ் விபத்தில் ஒருவர் காயம்
யாழ் விபத்தில் ஒருவர் காயம், யாழ்நகரை அண்மித்த நாலுகால் மட சந்தியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி பட்டாரக வாகனம் சேதத்திற்கு உள்ளாகியது .
வான் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ் பொலிசார் தெரிவித்துள்ளனர்
வான் மோதியதில் சிதறிய ஆட்டோ
யாழ் மானிப்பாய் காரைநகர் பிரதான வீதியில் நாலுகால்மடம் சந்தியில் அமைந்துள்ள அரைக்கும் ஆலை ஒன்றில் இருந்து பிரதான வீதியில் முச்சக்கர வண்டி பயணிக்க தொடங்கிய நிலையில் பின்புறமாக வந்த பட்டாரக வாகனம் மோதியுள்ளது.
மடசந்தி வான் ஆட்டோ விபத்தில் ஒருவர் காயம்
இதன் போது முச்சக்கர வண்டியினை செலுத்திய ஆறுகால்மடம் பகுதியினை சேர்ந்த 20 வயதான அஜிந்தன் எனும் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார்.
இதேவேளை, பட்டாரக வாகனம் மின்கம்பத்துடன் மோதி பகுதியளவில் சேதமடைந்ததோடு வாகன சாரதி காயங்களின்றி மீட்கபட்டுள்ளார்
சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ் மாவட்ட போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இஞ்சியின் விலை பாரிய அதிகரிப்பு
இஞ்சியின் விலை பாரிய அதிகரிப்பு
இஞ்சியின் விலை பாரிய அதிகரிப்பு காரணமாக ,இஞ்சி அதிகம் பயன் படுத்தும் இலங்கை மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .
இலங்கையில் நாள் தோறும் அதிகரித்து செல்லும் பொருட்களின் விலையால் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர் .
இலங்கையில் இஞ்சியின் விலை அதிகரிப்பு
இலங்கையில் இஞ்சியின் விலை அதி உச்ச விலைக்கு சென்றதினால் ,அதனை இந்த விலை கொடுத்து வாங்கிட முடியா நிலையில் மக்கள் திணறி வருகின்றனர் .
உள்ளூர் உற்பத்தியில் இஞ்சி பயிர் செய்கை வீழ்ச்சி அடைந்த நிலையிலும் ,இறக்குமதி குறைவடைந்து நிலையில் ,இஞ்சியின் விலை உச்சத்தை எட்டியுள்ளது .
கோட்டபாய ஆட்சியின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சரிவின் பின்னர் ,தற்போது இலங்கை மிக பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றது அதிகரித்துள்ளது .
உயரும் பொருள் விலை தவிக்கும் மக்கள்
திடீர் திடீரென உயரும் பொருள் விலையினால் ,மக்கள் அன்றாட வாழ்வியல் பாதிக்க பட்டுள்ளது .
காய்கறி விலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரிப்பால் ,ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போரட்டம் நடத்தி வந்தனர் .
அவ்வாறான நிலையில் இலங்கையில் இஞ்சியின் விலை 3200 ரூபாவாக அதிகரித்து காணப்படுவது ,மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
Featured
வங்கி உடைத்து தங்கம் திருட்டு
வங்கி உடைத்து தங்கம் திருட்டு
வங்கி உடைத்து தங்கம் திருட்டு ,கலவானை தனியார் நிதி நிறுவனமொன்றை உடைத்து தங்கம் திருடிய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (22) அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்ட நிலையில், குறித்த விற்பனை நிலையத்தில் விற்பனை அதிகாரி ஒருவரும் தங்கப் பொருட்களுக்கு பொறுப்பான அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கலவான பிரதேசத்தில் வசிக்கும் 26 மற்றும் 33 வயதுக்குட்பட்ட இருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
68,978,357 ரூபா பெறுமதியான கழுத்தணிகள், மோதிரங்கள், வளையல்கள், பிரேஸ்லட், காதணிகள், பென்டன்கள் உள்ளிட்ட 03 கிலோ 770 கிராம் தங்கப் பொருட்கள் மற்றும்
சிசிரிவி அமைப்பின் டெகோடர் ஆகியவை திருடிச் செல்லப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் பதில் முகாமையாளர் கலவானை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலவானை பொலிஸார் விசேடமாக மேற்கொண்டு வருகின்றனர்.
பாக்குநீரிணையை கடக்கமுயன்ற முதியவர் மரணம்
பாக்குநீரிணையை கடக்கமுயன்ற முதியவர் மரணம்
இலங்கையில் தலைமன்னார் முதல் இந்தியாவில் தனுஷ்கோடி வரை உள்ள 30 கிலோமீட்டர் தூரமுடைய பாக்குநீரிணையை கடக்கமுயன்ற முதியவர் மரணம் .
பாக்கு நீரிணையை நீந்திக் கடக்க முயன்ற இந்தியாவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார்.
தலைமன்னார் முதல் தனுஷ்கோடி
தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை நீந்தி கடப்பதற்கு இந்திய, இலங்கை இருநாட்டு அரசாங்கத்திடம் உரிய அனுமதி பெற்று நேற்று திங்கட்கிழமை (22) 31 பேர் கொண்ட குழு ராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் புறப்பட்டு தலைமன்னார் வந்தடைந்தனர்.
இங்கிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (23) அதிகாலை சுமார் 12.10 மணி அளவில் கடலில் குதித்து நீந்த தொடங்கினர்.
அப்போது 3 மணி அளவில் பெங்களூரைச் சேர்ந்த கோபால் ராவ் (78) என்பவருக்கு திடீரென நடுக்கடலில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
நெஞ்சு வலி
இதனையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவக் குழு நெஞ்சு வலி காரணமாக கோபால் ராவ் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.
இதனையடுத்து, கோபால் ராவ் உடல் தனுஷ்கோடி பாலம் மீன்பிடித் துறைமுகத்திற்கு எடுத்து செல்லப்பட்டு பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரத்திலுள்ள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உடன் வந்த நபர் ஒருவர் உயிரிழந்ததால் 30 பேரும் மன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை நீந்தி கடந்து சாதனை படைக்கும் நிகழ்வை கைவிட்டனர்.
கோபால் ராவ் உயிரிழந்த தொடர்பாக ராமேஸ்வரம் நரைன் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கட்சியில் இருந்து மைத்திரிபால இராஜினாமா
கட்சியில் இருந்து மைத்திரிபால இராஜினாமா
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து மைத்திரிபால இராஜினாமா தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன விலகல்
தற்போது நீதிமன்றத்தின் தடையுத்தரவுக்கு உள்ளாகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகுவார் என்றும் அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் யாப்பின் பிரகாரம் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகும் தலைவர், கட்சியின் போஷகர் பதவிக்கு நியமிக்கப்படுவார்.
கட்சியில் கடும் கருத்து மோதல்
தற்போதும் கட்சியில் கடும் கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், இரு பிரிவினரும் இரண்டு பதில் தலைவர்களின் பெயர்களைக் கூறி தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கையளித்துள்ளனர்.
இந்த நியமனங்களுக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த பலரும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளன.
எதிர் வரும் தேர்தலை அடுத்து உள்கட்சிக்குள் மோதல்கள் வெடித்துள்ளன .அதன் ஒரு அங்கமாகவே இந்த விலகல் இடம்பெறுகிறது .



































