Posted in உலக செய்திகள்

30 வருடங்களுக்கு பின்னர் தன்னை ஆண் என கண்டுகொண்ட பெண்- அதிர்ச்சியில் கணவர்

30 வருடங்களுக்கு பின்னர் தன்னை ஆண் என கண்டுகொண்ட பெண்- அதிர்ச்சியில் கணவர்

சில நேரங்களில் பிறப்பின் அபூர்வத்தை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை. அப்படி ஒரு சம்பவம் தான் மேற்குவங்காளத்தில் நிகழ்ந்துள்ளது.

30 வருடங்களுக்கு பின்னர் தன்னை ஆண் என கண்டுகொண்ட பெண்
கோப்புப்படம்

மம்தா பானர்ஜி ஆளுகிற மேற்கு வங்காள மாநிலத்தில், பிர்பம் நகரை சேர்ந்தவர் அந்தப் பெண். 30 வயது. கடந்த 9 ஆண்டுகளுக்கு

முன்பாக அவருக்கு ஒரு ஆணுடன் திருமணம் நடந்தது. இருவரும் இத்தனை ஆண்டுகளாக இனிய மணவாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் அந்தப் பெண், அடிவயிற்றில் கடுமையான வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக

அவர் கொல்கத்தா நகரத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

அங்கு அவருக்கு புற்று நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் அனுபம் தத்தாவும், புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் டாக்டர் சமன்தாசும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தினர்.

அதில் இதுவரை பெண்ணாக தோன்றி வந்த அந்த பெண், பெண்ணே அல்ல, ஆண் என கண்டறிந்து அதிர்ச்சியில் உறைந்து

போயினர். அவருக்கு பெண்ணுக்குரிய உடல் உறுப்புகள் இருந்தன. அவரது குரலும் பெண் குரல்தான். ஆனால் அவருக்கு பிறப்பிலேயே

கருப்பையும், சினைப்பைகளும் இல்லை என்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர். அந்தப் பெண்ணுக்கு மாதவிலக்கும் வந்தது இல்லையாம்.

இதுபற்றி டாக்டர் அனுபம் தத்தா கூறியதாவது:-

இவருக்கு நேர்ந்திருப்பது ஒரு அபூர்வமான நிலை ஆகும். இப்படி 22 ஆயிரம் பேரில் ஒருவருக்கு வாய்ப்பது உண்டு. இவருக்கு

ஆண்களுக்கு உரிய ‘எக்ஸ் ஒய் குரோமசோம்’ தான் உள்ளது. பெண்களுக்குரிய ‘எக்ஸ்எக்ஸ் குரோமசோம்’ இல்லை என பரிசோதித்து அறிந்தோம்.

அடிவயிற்றில் வலி என்று அவர் சொன்ன உடன் தேவையான பரிசோதனைகளை செய்தபோது, ஆண்களுக்கு

அமைந்திருக்கக்கூடிய விதைப்பைகள் அவருக்கு உடலுக்குள் அமைந்திருந்ததை கண்டோம்.

அவருக்கு பயாப்சி பரிசோதனை செய்தோம். அதில் அவருக்கு விதைப்பை புற்றுநோய் இருப்பதை கண்டோம். தற்போது அவருக்கு

கெமோதெரபி சிகிச்சை அளிக்கிறோம். அவரது உடல்நிலை ஸ்திரமாக உள்ளது.

அவருக்கு உடலுக்குள் விதைப்பைகள் அமைந்திருந்தாலும், அவை உரிய வளர்ச்சியை பெறவில்லை. டெஸ்டோஸ்டீரான்

ஹார்மோனும் சுரக்கவில்லை. அவரில் சுரந்துள்ள பெண் ஹார்மோன் காரணமாக அவர் பெண்ணைப் போன்ற தோற்றத்தை பெற்றுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிறந்து வளர்ந்து 30 வருடங்களான நிலையில் அவர் தான் ஒரு பெண் அல்ல, ஆண் என அறியவந்தபோது, அவரது மனநிலை எப்படி

இருந்தது என்று கேட்டபோது டாக்டர் அனுபம் தத்தா நேரடியாக பதில் அளிக்கவில்லை.

ஆனால், “அவர் பெண்ணாகவே வளர்ந்திருக்கிறார். 9 வருடங்களுக்கு முன்பாக ஒரு ஆணை திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது அவருக்கும், அவரது கணவருக்கும்

நாங்கள் கவுன்சிலிங் (ஆலோசனை) தருகிறோம். அவர்கள் தங்கள் வாழ்க்கையை இப்படியே இணைந்தே தொடரும்படி கூறுகிறோம்” என கூறினார்.

இந்த தம்பதியர் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சித்து இருக்கிறார்கள். ஆனால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்து

இருக்கிறது. இந்த பெண்ணின் தாய்வழி சித்திமார் 2 பேருக்கும் கடந்த காலத்தில் இதே பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறதாம்.

இதுபற்றி டாக்டர் அனுபம் தத்தா குறிப்பிடுகையில், “இது மரபணு கோளாறு. இப்போது இந்தப் பெண்ணை பரிசோதித்து அறிந்த பின்னர் அவரது 28 வயது சகோதரிக்கு பரிசோதனைகள்

நடத்தினோம். அவரும் இந்தப் பெண்ணைப்போலவே பெண் தோற்றத்தில் ஆணாகவே இருக்கிறார்” என்று கூறி அதிர வைத்தார்

      Posted in உலக செய்திகள்

      முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் பாஜக முடிச்சு -ப.சிதம்பரம் பதிலடி

      முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் பாஜக முடிச்சு -ப.சிதம்பரம் பதிலடி

      சீன ஆக்கிரமிப்பை எப்படி, எப்பொழுது மோடி அரசு அகற்றப்போகிறது என்ற கேள்விக்கு ஏன் இதுவரை பதில் இல்லை? என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

      முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் பாஜக முடிச்சு போடுகிறது- ப.சிதம்பரம் பதிலடி
      ப.சிதம்பரம்

      ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு பணம்

      திருப்பி விடப்பட்டதாகவும், பொதுமக்களுக்கான நிவாரண நிதியை குடும்ப அறக்கட்டளைக்கு திருப்பி விடுவது பெரிய மோசடி என்றும் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா குற்றம்சாட்டினார்.

      இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

      2005 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை அந்தமான் தீவுகளில் சுனாமி நிவாரணப் பணிகளுக்காகப் பிரதமர் நிவாரண

      நிதியிலிருந்து ரூ.20 லட்சம் பெற்றது உண்மைதான். ஒவ்வொரு ரூபாயும் நிவாரணப் பணிகளுக்குச் செலவழிக்கப்பட்டு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதில் என்ன தவறு?

      2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு? முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் பாஜக முடிச்சு போடுகிறது!

      சீன ஆக்கிரமிப்பை எப்படி, எப்பொழுது மோடி அரசு அகற்றப்போகிறது என்ற கேள்விக்கு ஏன் இதுவரை பதில் இல்லை?

      இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

          Posted in உலக செய்திகள்

          குருதீஸ் பகுதிகள் மீது துருக்கி அகோர தாக்குதல் – 20 கிரமங்களை விட்டு தப்பி ஓடும் மக்கள்

          குருதீஸ் பகுதிகள் மீது துருக்கி அகோர தாக்குதல் – 20 கிரமங்களை விட்டு தப்பி ஓடும் மக்கள்

          சிரியாவின் இட்லி பகுதியை முழுமையாக ஆக்கிரமித்து விட துருக்கிய இராணுவம் கடும் சமர் புரிந்து வருகிறது ,அதன்

          எதிரொலியாக துருக்கிய விமானங்கள் குருதீஸ் district of Pradost, north of Erbil பகுதிகள் மீது அகோர வான்வழி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது

          இதில் அந்த பகுதியை சேர்ந்த இருபது கிராம மக்கள் போரின் அச்சம் காரணமாக இடம் பெயர்ந்து உயிர் காக்க தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர்

          தொடர்ந்து கடும் சமர் இடம் பெற்ற வண்ணம் உள்ளது

              Posted in உலக செய்திகள்

              ஐஸ் எஸ் நிலைகள் மீது அகோர தாக்குதல் 11 சுரங்க வழிகள் தாக்கி அழிப்பு

              ஐஸ் எஸ் நிலைகள் மீது அகோர தாக்குதல் 11 சுரங்க வழிகள் தாக்கி அழிப்பு

              ஈராக்கின் Azim எல்லை பகுதியில் தளம் அமைத்து அரச படைகளுக்கு எதிராக போர் புரிந்து வந்த ஐ எஸ் தீவிரவாதிகள்

              ஈராக்கிய படைகளினால் தொடர் தாக்குதலுக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர்

              இவ்விதம் குறித்த பகுதியில் 11 சுரங்க வழி அமைத்து போராடி வந்த குறித்த அமைப்பின் முக்கிய பதுங்கு நிலைகள் அழிக்க

              பட்டுள்ளதுடன் முப்பதுக்கு மேற்பட்ட தீவிரவாதிகள் படுகொலை செய்ய பட்டுள்ளதக ஈராக்கிய அரச இராணுவம் அறிவித்துள்ளது குறிப்பிட தக்கது

              ஐஸ் எஸ் நிலைகள்
              ஐஸ் எஸ் நிலைகள்
                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                  பட்ட பகலில் பிரிட்டனில் இளம் பெண் கற்பழிப்பு

                  பட்ட பகலில் பிரிட்டனில் இளம் பெண் கற்பழிப்பு

                  பிரிட்டன் கிளஸ்க்கோ பகுதியில் 29 வயதுடைய இளமை பெண் ஒருவர் மதிய வேளையில் மர்ம நபர்களில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

                  பாதிக்க பட்ட பெண் வழங்கிய தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த

                  வந்த காவல்துறையினர் குறித்த
                  விடயம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்

                  மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                      Posted in உலக செய்திகள்

                      துபாயில் இந்திய தம்பதிகொலை – நகைகள் கொள்ளை

                      துபாயில் இந்திய தம்பதிகொலை – நகைகள் கொள்ளை

                      துபாயில் இந்திய தம்பதியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவத்தில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

                      துபாயில் இந்திய தம்பதியை கொலை செய்து நகைகள் கொள்ளை – பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது
                      கைது

                      துபாய் நகரின் அரேபியன் ரேஞ்சஸ் பகுதியில் வசித்து வந்தவர்கள் ஹிரேன் ஆதித்யா-விதி ஆதித்யா தம்பதி. இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச்சேர்ந்த இவர்கள் சார்ஜாவில் வர்த்தகம் செய்து

                      வருகின்றனர். இந்த தம்பதியருக்கு 13 வயது ஒரு மகளும், 18 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை இந்த தம்பதி மர்மமான முறையில் அவர்களது அறையில் இறந்து

                      கிடந்தனர். மூத்தமகள் படுகாயம் அடைந்திருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று,

                      படுகாயம் அடைந்த தம்பதியின் மகளை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அந்த தம்பதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

                      இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அந்த தம்பதி மகள்களுடன் இரவில்

                      தூங்கிக்கொண்டிருந்த போது, அந்த நபர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, அந்த தம்பதியை கத்தியால் குத்தி கொலை

                      செய்துவிட்டு, வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றதும், இதில் அவருைடய மூத்தமகள் படுகாயம் அடைந்ததும் தெரியவந்தது.

                      மேலும், கைது செய்யப்பட்ட நபர் பராமரிப்பு பணிக்காக அந்த தம்பதியின் வீட்டிற்கு இதற்கு முன்னர் சென்று வந்த போது, வீட்டை

                      நோட்டமிட்டு நகைகளை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை அந்த நபரிடம் இருந்து போலீசார் மீ்ட்டனர்.

                      இந்திய தம்பதி இறந்த தகவலை இந்திய துணை தூதர் விபுல் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, இது மிகவும்

                      துயரமான சம்பவம் ஆகும். இந்திய துணை தூதரகம் அந்த குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறது என்றார்.

                          Posted in உலக செய்திகள்

                          கொரனோவால் மூழ்கிய அமெரிக்கா – அதிரும் உயிர் பலிகள்

                          கொரனோவால் மூழ்கிய அமெரிக்கா – அதிரும் உயிர் பலிகள்

                          அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.5 லட்சத்தைக் கடந்துள்ளது.

                          அதிரும் அமெரிக்கா – 24.5 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு
                          சிகிச்சை பெறும் நோயாளி

                          கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு

                          அடைந்தோர் எண்ணிக்கை 94 லட்சத்தைக் கடந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 4.82 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்

                          உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத் தாண்டவம்

                          ஆடி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

                          இந்நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்

                          பாதிப்பு அடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

                          மேலும், கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்தைத் தாண்டியது. மேலும், கொரோனா

                          தொற்றில் இருந்து 10 லட்சத்து 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

                              Posted in உலக செய்திகள்

                              தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு

                              தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு

                              தமிழகத்தில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரசுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது.

                              தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள் – மாவட்ட வாரியாக விவரம்
                              கோப்பு படம்

                              தமிழகத்தில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 516 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில்

                              கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 64 ஆயிரத்து 603 ஆக அதிகரித்துள்ளது.

                              இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 28 ஆயிரத்து 428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

                              வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைக்கு பின் நேற்று ஒரே நாளில் 1,227 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட்டுள்ளனர்

                              . இதனால் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 339 ஆக அதிகரித்துள்ளது.

                              ஆனாலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து

                              வருகிறது. உடலில் ஏற்கனவே எந்த நோய்களும் இல்லாமல் பூரண நலத்துடன் இருந்தவர்கள் பலரும் கொரோனா வைரசுக்கு பலியாகி வருகின்றனர்.

                              இந்நிலையில், மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில்

                              கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது.

                              இந்த மொத்த எண்ணிக்கையில் சென்னையில் மட்டும் 645 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

                              மாவட்டவாரியாக கொரோனா உயிரிழப்பு விவரம்:

                              செங்கல்பட்டு – 57
                              சென்னை – 645
                              கோவை – 1
                              கடலூர் – 5
                              திண்டுக்கல் – 4
                              ஈரோடு – 1
                              கள்ளக்குறிச்சி – 1
                              காஞ்சிபுரம் – 14
                              கன்னியாகுமரி – 1
                              கிருஷ்ணகிரி – 2
                              மதுரை – 9
                              நாமக்கல் – 1
                              புதுக்கோட்டை – 2
                              ராமநாதபுரம் – 3
                              ராணிப்பேட்டை – 2
                              சேலம் – 1
                              சிவகங்கை – 1
                              தஞ்சாவூர் – 1
                              தேனி – 2
                              திருவள்ளூர் – 44
                              திருவண்ணாமலை – 7
                              தூத்துக்குடி – 4
                              திருநெல்வேலி – 5
                              திருச்சி – 3
                              வேலூர் – 3
                              விழுப்புரம் – 12
                              விருதுநகர் – 1
                              விமானநிலைய கண்காணிப்பு
                              வெளி நாடு – 1

                              மொத்தம் – 833

                                  Posted in உலக செய்திகள் சினிமா

                                  சுஷாந்த் ரசிகர்களுக்கு ஆதரவாக இருங்கள் – சல்மான்கான் வேண்டுகோள்

                                  சுஷாந்த் ரசிகர்களுக்கு ஆதரவாக இருங்கள் – சல்மான்கான் வேண்டுகோள்

                                  அவதூறுகளை பொருட்படுத்தாமல் சுஷாந்த் சிங்கின் ரசிகர்களுக்கு ஆதரவாக இருங்கள் என நடிகர் சல்மான் கான் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

                                  சுஷாந்த் ரசிகர்களுக்கு ஆதரவாக இருங்கள் – சல்மான்கான் வேண்டுகோள்
                                  சல்மான்கான், சுஷாந்த் சிங்


                                  இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வாரிசு நடிகர்கள் கொடுத்த மன அழுத்தத்தினால் நடந்துள்ளது என்று சர்ச்சைகள் எழுந்துள்ளன. சுஷாந்த் சிங் தற்கொலைக்கு சல்மான்கான், இயக்குனர் கரண்

                                  ஜோகர் ஆகியோர் காரணம் என்று வழக்கும் தொடர்ந்துள்ளனர். சல்மான்கான், கரண் ஜோகர், சோனம் கபூர், அலியாபட், சோனாக்சி

                                  சின்ஹா ஆகியோரை சமூக வலைத்தளத்தில் பின் தொடரும் ரசிகர்களும் குறைந்துள்ளனர்.

                                  இந்தி பட உலகில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் உள்ளது என்று சாடிய கங்கனா ரணாவத்துக்கு இன்ஸ்டாகிராமில் கூடுதலாக 20 லட்சம்

                                  ரசிகர்கள் சேர்ந்துள்ளனர். சல்மான்கானை வலைத்தளத்தில் பின் தொடர்ந்த 10 லட்சம் ரசிகர்கள் வெளியேறி விட்டனர். சோனம் கபூர்

                                  2 லட்சத்து 50 ஆயிரம் பேரையும் அலியாபட்டை 5 லட்சம் பேரையும் இழந்துள்ளனர். சல்மான்கானை வலைத்தளத்தில் பலரும் வசைபாடுகின்றனர்.

                                  சல்மான் கானின் டுவிட்டர் பதிவு

                                  இதையடுத்து சல்மான்கான் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “சுஷாந்த் சிங் ரசிகர்களுக்கு உறுதுணையாக இருக்கும்படி எனது அனைத்து ரசிகர்களையும்

                                  வேண்டிக்கொள்கிறேன். அவர்களின் அவதூறு வார்த்தைகளை பொருட்படுத்தாமல் அதற்கு பின்னால் இருக்கும் உணர்வுகளுக்கு

                                  முக்கியத்துவம் கொடுங்கள். நாம் விரும்பும் ஒருவரின் இழப்பு வலி மிகுந்தது. எனவே அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆதரவாக இருங்கள்” என்று கூறியுள்ளார்

                                      Posted in உலக செய்திகள்

                                      வடகொரிய அதிபரின் உருவ பொம்மையை எரித்த பாஜகவினர்

                                      வடகொரிய அதிபரின் உருவ பொம்மையை எரித்த பாஜகவினர்

                                      மேற்கு வங்காள மாநிலத்தில் சீன அதிபருக்கு பதிலாக வடகொரிய அதிபரின் உருவ பொம்மையை எரித்து பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

                                      சீன அதிபருக்கு பதிலாக வடகொரிய அதிபரின் உருவ பொம்மையை எரித்த பாஜகவினர்…
                                      வடகொரிய அதிபர் கிம்
                                      கொல்கத்தா:

                                      லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20

                                      இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு\காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

                                      இந்த மோதலால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை நிலவி வருகிறது. போரை எதிர்கொள்ளும் அளவிற்கு படைகள் தயார்படுத்தப்பட்டன.

                                      அதேசமயம் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

                                      இதற்கிடையில், லடாக்கில் இந்திய படையினர் வீரமரணமடைந்ததையடுத்து நாடு முழுவதும் சீனாவுக்கு எதிராக கண்டனக்குரல்கள் எழுந்தன.

                                      பல்வேறு பகுதிகளில் சீன பொருட்களை சாலையில் போட்டு உடைத்தும், சீன அதிபரின் புகைப்படங்களை தீயிட்டு கொளுத்தியும் மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

                                      கிம், பாஜக-வை சேர்ந்தவர், ஜி ஜிங்பிங்

                                      இந்நிலையில், மேற்கு வங்காளத்தை சேர்ந்த பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் சிலர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பதிலாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

                                      போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவை சேர்ந்த ஒரு நபர் கூறுகையில்,’சீன பொருட்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். சீன பிரதம மந்திரி கிம் ஜாங் உன்னின் உருவ பொம்மையை எரித்து

                                      எங்கள் எதிர்ப்பை தொடர்ந்து வெளிப்படுத்துவோம்’ என்றார். அந்த நபர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

                                      ஜி ஜின்பிங்கிற்கு பதிலாக மேற்குவங்காள பாஜகவினர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்த

                                      சம்பவமும் அது தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவும் நாடு முழுவதும் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

                                          Posted in உலக செய்திகள்

                                          கொரோனாவில் இருந்து குணமடைந்த 49 லட்சம் பேர்

                                          கொரோனாவில் இருந்து குணமடைந்த 49 லட்சம் பேர்

                                          உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 49 லட்சத்து 21 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

                                          கொரோனாவில் இருந்து குணமடைந்த 49 லட்சம் பேர்
                                          கோப்பு படம்
                                          ஜெனிவா:

                                          சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த

                                          வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

                                          இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பு மருந்துகள்

                                          கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

                                          இந்நிலையில், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49 லட்சத்து 21 ஆயிரத்தை கடந்தது.

                                          தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 91 லட்சத்து 85 ஆயிரத்து 974 பேருக்க்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

                                          வைரஸ் பரவியவர்களில் 37 லட்சத்து 90 ஆயிரத்து 337 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 57 ஆயிரத்து 888 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

                                          கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 4 லட்சத்து 74 ஆயிரத்து 257 பேர் பலியாகியுள்ளனர்.

                                          ஆனாலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 49 லட்சத்து 21 ஆயிரத்து 380 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

                                          வைரஸ் பாதிப்பில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளின் விவரங்கள்:-

                                          அமெரிக்கா – 10,02,929
                                          பிரேசில் – 5,79,226
                                          ரஷியா – 3,44,416
                                          இந்தியா – 2,37,196
                                          பெரு – 1,45,320
                                          சிலி – 2,05,397
                                          இத்தாலி – 1,83,426
                                          ஈரான் – 1,66,427
                                          ஜெர்மனி – 1,75,300
                                          துருக்கி – 1,61,533
                                          மெக்சிகோ – 1,40,118
                                          சவுதி அரேபியா – 1,05,175

                                              Posted in உலக செய்திகள்

                                              துப்பாக்கி சூடு 9 பேர் பலி -50 பேர் காயம்

                                              துப்பாக்கி சூடு 9 பேர் பலி -50 பேர் காயம்

                                              அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் ஒன்பது பேர் மரணம் ,இறந்தவர்கள் நால்வர் சிறுவர்கள் எனவும் மேலும் ஐம்பதுக்கு

                                              மேற்பட்டவர்கள் படு காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்,அதிகரித்து வரும் சூட்டு சம்பவங்களும் வர இருக்கும் தேர்தலுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் வலுக்கிறது

                                              டிரம்பின் நாடுகள் மீதான ஆக்கிரமிப்பும் ,அதனால் நடத்த பட்ட அரசியல் ,இராணுவ படு கொலைகளுக்கும் இவ்வேளை பாதிக்க

                                              பட்ட நாடுகளின் உளவுத்துறைகள் பெரும் சதியில் ஈடுபடலாம் என தெரிவிக்க பட்டுள்ளது

                                                  Posted in உலக செய்திகள்

                                                  ரசியா விமானிகள் அகோர வான்வழி தாக்குதல்

                                                  ரசியா விமானிகள் அகோர வான்வழி தாக்குதல்

                                                  சிரியாவின் Idlib and Sahl Al-Ghab பகுதியில் இடம்பெற்று வரும் கடும் போராட்டம் ஈடுபட்டு வருகிறது

                                                  சிரியாவை அரச படைகளிற்கு ஆதரவாக ரசிய விமானங்கள் கிளர்ச்சி படைகள் நிலைகள் மீது அகோர தாக்குதலை நடத்தினர்

                                                  இந்த தாக்குதலை அடுத்து பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சிரியா ,

                                                  ரஷியா இராணுவமே அறிவித்துள்ளது ,தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்ற வண்ணம், உள்ளது

                                                  ரசியா விமானிகள்
                                                  ரசியா விமானிகள்
                                                      Posted in உலக செய்திகள்

                                                      சென்னையில் மட்டும் 601 பேர் பலி – தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்

                                                      சென்னையில் மட்டும் 601 பேர் பலி – தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்

                                                      தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் பலியானோர் மொத்த எண்ணிக்கை 757 ஆக அதிகரித்துள்ளது.

                                                      சென்னையில் மட்டும் 601 பேர் பலி – தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்
                                                      கோப்பு படம்

                                                      தமிழகத்தில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 532 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில்

                                                      கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது.

                                                      இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 25 ஆயிரத்து 863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

                                                      வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைக்கு பின் நேற்று ஒரே நாளில் 1,438 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட்டுள்ளனர்.

                                                      இதனால் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 754 ஆக அதிகரித்துள்ளது.

                                                      ஆனாலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து

                                                      வருகிறது. உடலில் ஏற்கனவே எந்த நோய்களும் இல்லாமல் பூரண நலத்துடன் இருந்தவர்கள் பலரும் கொரோனா வைரசுக்கு பலியாகி வருகின்றனர்.

                                                      இந்நிலையில், மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில்

                                                      கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 757 ஆக அதிகரித்துள்ளது.

                                                      இந்த மொத்த எண்ணிக்கையில் 601 உயிரிழப்புகள் சென்னையில் ஏற்பட்டுள்ளது.

                                                      மாவட்டவாரியாக கொரோனா உயிரிழப்பு விவரம்:

                                                      செங்கல்பட்டு – 49
                                                      சென்னை – 601
                                                      கோவை – 1
                                                      கடலூர் – 3
                                                      திண்டுக்கல் – 4
                                                      ஈரோடு – 1
                                                      காஞ்சிபுரம் – 10
                                                      கன்னியாகுமரி – 1
                                                      கிருஷ்ணகிரி – 2
                                                      மதுரை – 8
                                                      நாமக்கல் – 1
                                                      புதுக்கோட்டை – 1
                                                      ராமநாதபுரம் – 2
                                                      ராணிப்பேட்டை – 2
                                                      சிவகங்கை – 1
                                                      தஞ்சாவூர் – 1
                                                      தேனி – 2
                                                      திருவள்ளூர் – 37
                                                      திருவண்ணாமலை – 7
                                                      தூத்துக்குடி – 3
                                                      திருநெல்வேலி – 4
                                                      திருச்சி – 1
                                                      வேலூர் – 3
                                                      விழுப்புரம் – 10
                                                      விருதுநகர் – 1
                                                      விமானநிலைய கண்காணிப்பு
                                                      வெளி நாடு – 1

                                                          Posted in உலக செய்திகள்

                                                          அமெரிக்காவில் -மக்கள் மீது துப்பாக்கி சூடு 9 பேர் காயம்

                                                          அமெரிக்காவில் -மக்கள் மீது துப்பாக்கி சூடு 9 பேர் காயம்

                                                          அமெரிக்கா அத்தலைநகர் நியூ யார்க் பகுதியில் பட்டி ஒன்று இடம்பெற்றுள்ளது

                                                          அங்கு ஆயுதங்களுடன் நுழைந்த ஆயுததாரி நடத்திய சரமாரி துப்பாக்கிக்கு சூட்டில் ஒன்பது பேர் படுகாயமடைந்தனர்

                                                          காயமடைந்தவரில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

                                                          இந்த் படுகொலை முயற்சிக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை

                                                              Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                                                              காதலியை குத்தி கொன்ற பிக்கு

                                                              தன் முன்னாள் காதலி வேறொருவருடன் இருப்பதைக் கண்ட துறவி ஒருவர், ஆத்திரத்தில் தன்னிலை மறந்து அந்த பெண்ணை கொலை செய்துள்ளார்.

                                                              புதிய காதலனுடன் முன்னாள் காதலி- கோபத்தில் கொடூர செயலை செய்த துறவி
                                                              முன்னாள் காதலி – துறவி

                                                              தாய்லாந்தை சேர்ந்த புத்த மதத்துறவி உம் தீரென்ராம் (57) துறவியாவதற்கு முன் லம்பாய் புவலோய என்ற பெண்ணை

                                                              காதலித்து வந்துள்ளார். புத்த துறவியானதும் காதலியை பிரிந்து விட்டார்.

                                                              இந்த நிலையில் தீரென்ராம் தனது முன்னாள் காதலியான லம்பாய் புவலோயை (33) புதுக்காதலனுடன் அவரது வீட்டுக்கு முன் காரில்

                                                              அமர்ந்திருப்பதைக் கண்டுள்ளார். ஆத்திரத்தில் தனது வேனை அவர்கள் கார் மீது தீரென்ராம் மோத, லம்பாய் புதிய காதலன் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

                                                              உடனே தீரென்ராம் தன் காரிலிருந்த பட்டாக்கத்தியை எடுத்து லம்பாயை தாறுமாறாக வெட்டியுள்ளார். பின்னர் வீட்டுக்குச் சென்ற

                                                              தீரென்ராம், தனது முன்னாள் காதலியை வேறொருவருடன் பார்க்க நேர்ந்ததால் கோபத்தை அடக்க இயலாமல் அவளைக் கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

                                                              போலீசார் சம்பவ இடத்திலேயே தீரென்ராமை கைது செய்தனர். தீரென்ராமின் சகோதரர், தனது சகோதரர் புத்த துறவியாகும் முன்

                                                              லம்பாயை காதலித்ததாகவும், புத்த துறவியானதும் அவரைப் பிரிந்துவிட்டதாகவும், லம்பாய் அடிக்கடி அவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

                                                              லம்பாயின் வயிற்றில் தீரென்ராமின் குழந்தை வளர்வதால், அதைக் குறித்து வெளியே சொல்லப்போவதாகவும், அதை வெளியில்

                                                              சொன்னால் புத்த துறவி வாழ்க்கையே நாசமாகிவிடும் என்று மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

                                                              ஆகவே, தீரென்ராம் ஏற்கனவே கோபத்திலிருந்த நிலையில், லம்பாயை புதிய காதலனுடன் பார்த்தவுடன் ஆத்திரத்தில் அவளைக் கொலை செய்துள்ளார்.

                                                              லம்பாய் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

                                                              காதலியை குத்தி கொன்ற பிக்கு
                                                              காதலியை குத்தி கொன்ற பிக்கு
                                                              Posted in உலக செய்திகள்

                                                              50 ஆயிரம் பேர் பலி – நிலைகுலைந்த பிரேசில்

                                                              50 ஆயிரம் பேர் பலி – நிலைகுலைந்த பிரேசில்

                                                              பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது.

                                                              50 ஆயிரம் பேர் பலி – நிலைகுலைந்த பிரேசில்
                                                              கொரோனாவால் உறவினரை இழந்த நபர்
                                                              ரியோ டி ஜெனிரோ:

                                                              சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

                                                              இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

                                                              இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

                                                              இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 89 லட்சத்து 13 ஆயிரத்து 524 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

                                                              வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 37 லட்சத்து 8 ஆயிரத்து 889 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 54 ஆயிரத்து 503 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

                                                              கொரோனாவில் இருந்து 47 லட்சம் 37 ஆயிரத்து 951 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு உலகம்

                                                              முழுவதும் இதுவரை 4 லட்சத்து 66 ஆயிரத்து 684 பேர் உயிரிழந்துள்ளனர்.

                                                              இதற்கிடையில், அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில்

                                                              இரண்டாவது இடத்தில் பிரேசிலில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

                                                              பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ

                                                              தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 10 லட்சத்து 70 ஆயிரத்து 139 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில்

                                                              31 ஆயிரத்து 571 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

                                                              மேலும், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று மட்டும் அங்கு 968 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பிரேசிலில் கொரோனாவுக்கு

                                                              பலியானோர் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்து 58 ஆக அதிகரித்துள்ளது.

                                                              கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

                                                              அமெரிக்கா – 1,21,980
                                                              பிரேசில் – 50,058
                                                              இங்கிலாந்து – 42,589
                                                              ஸ்பெயின் – 28,322
                                                              இத்தாலி – 34,610
                                                              மெக்சிகோ – 20,781
                                                              பிரான்ஸ் – 29,633
                                                              இந்தியா – 12,948.

                                                                  Posted in உலக செய்திகள்

                                                                  ஈரான் மேலும் எண்ணெய் கப்பலை Venezuela வுக்கு அனுப்பியது – கொதிக்கும் அமெரிக்கா

                                                                  ஈரான் மேலும் எண்ணெய் கப்பலை Venezuela வுக்கு அனுப்பியது – கொதிக்கும் அமெரிக்கா

                                                                  ஈரான் நாடானது அமெரிக்காவின் எதிர்பார்ப்பை மீறி மேலும் ஒரு எண்ணெய் கப்பலை Venezuela வுக்கு அனுப்பியுள்ளது

                                                                  சட்டவிரோதமாக ஈரான் இந்த எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக

                                                                  அமெரிக்கா குற்றம் சுமத்தி வரும் நிலையிலும் ,தொடர் கப்பல் போக்குவரத்தில் தடங்களை ஏற்படுத்தி மிரட்டல் விடுத்தது வரும்

                                                                  நிலையில் ஈரான் இந்த கப்பல் துணிகரமாக இந்த கப்பலை அனுப்பியுள்ளது குறிப்பிட தக்கது

                                                                  ஈரான்-மேலும்-எண்ணெய்
                                                                  ஈரான்-மேலும்-எண்ணெய்
                                                                  Posted in உலக செய்திகள்

                                                                  6 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய பிஎம்டபிள்யூ நிறுவனம் முடிவு – ஊழியர்கள் அதிர்ச்சி

                                                                  6 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய பிஎம்டபிள்யூ நிறுவனம் முடிவு – ஊழியர்கள் அதிர்ச்சி

                                                                  கொரோனா வைரசால் விற்பனை சரிந்து வரும் நிலையில் பிரபல பிஎம்டபிள்யூ சொகுசு கார் நிறுவனம் தனது ஊழியர்களில் 6 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

                                                                  6 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய பிஎம்டபிள்யூ நிறுவனம் முடிவு – ஊழியர்கள் அதிர்ச்சி
                                                                  கோப்பு படம்

                                                                  உலகின் மிகவும் பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களில் பிஎம்டபிள்யூ-வும் ஒன்று. ஜெர்மனி நாட்டை தலைமையிடமாக

                                                                  கொண்டு செயல்படும் இந்த கார் நிறுவனத்தின் கிளைகள் உலகின் பல்வேறு நாடுகளில் அமைந்துள்ளது.

                                                                  பிஎம்டபிள்யூ கார் நிறுவனத்தில் மொத்தம் 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.

                                                                  இதற்கிடையில், உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

                                                                  குறிப்பாக வாகனத்துறையில் விற்பனை இல்லாததால் பெரும் நஷ்டத்தை
                                                                  சந்தித்து வருகிறது. இதனால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி வருகிறது.

                                                                  இந்நிலையில், கொரோனா காரணமாக போதிய விற்பனை இல்லாத காரணத்தால் பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது ஊழியர்களில்

                                                                  6 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

                                                                  இந்த வேலை நீக்கம் இந்த ஆண்டு இறுதிக்குள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும், தானியங்கி காரை

                                                                  உருவாக்குவதில் மேற்கொள்ளப்பட்ட வரும் ஆராய்ச்சிகளையும் தற்காலிகமாக
                                                                  நிறுத்திவைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

                                                                  6 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளதால் பிஎம்டபிள்யூ ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

                                                                      Posted in உலக செய்திகள்

                                                                      அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: கருத்துக் கணிப்பில் டிரம்புக்கு பின்னடைவு

                                                                      அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: கருத்துக் கணிப்பில் டிரம்புக்கு பின்னடைவு

                                                                      அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு என்பது குறித்த நடந்த கருத்து கணிப்பில் டிரம்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

                                                                      அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: கருத்துக் கணிப்பில் டிரம்புக்கு பின்னடைவு
                                                                      டிரம்ப்

                                                                      அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதியிடம் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை

                                                                      எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களமிறங்கியிருக்கிறார். ஜனாதிபதி தேர்தலில்

                                                                      மக்களின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து தொடர்ந்து கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

                                                                      இந்த வகையில் அமெரிக்காவின் கின்னிபியாக் பல்கலைக்கழகம் கடந்த 11ந் தேதி முதல் 15ந் தேதி வரை தேசிய அளவில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. இதன் முடிவுகள் நேற்று

                                                                      வெளியிடப்பட்டன. கருத்துக் கணிப்பில் தற்போது தேர்தல் நடைபெற்றால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, டிரம்புக்கு ஆதரவாக 41 சதவீதம் பேர்

                                                                      மட்டுமே வாக்களித்தனர். அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு தரமாக 49 சதவீதம் பேர் வாக்களித்தனர்.

                                                                      இதன் மூலம் டிரம்பை விட ஜோ பிடன் 8 புள்ளிகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். அதேபோல் கொரனோ வைரஸை

                                                                      கையாண்ட விதம், வேலை இழப்பு பொருளாதார சரிவு உள்ளிட்ட விவகாரங்களில் டிரம்பின் தலைமைக்கு எதிராக 55 சதவீதம் பேர் வாக்களித்தனர்.