Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
அமெரிக்கர்கள் அனைவரும் மாஸ்க் அணியவேண்டும் – ஜோ பைடன்
கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க அடுத்த 100 நாட்களுக்கு அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்கர்கள் அனைவரும் அடுத்த 100 நாட்களுக்கு மாஸ்க் அணியவேண்டும் – ஜோ பைடன் வேண்டுகோள்
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் நேற்று பதவியேற்றார். வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளை தொடங்கினார்.
அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்த சில கொள்கை முடிவுகளை மாற்றியமைத்துள்ளார்.
கொரோனா நெருக்கடி, குடியேற்றம், இனவாத பிரச்சினை உள்ளிட்ட 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார் பைடன்.
கொரோனா நோய்த்தடுப்பு விஷயத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை அதிகரிப்பது தொடர்பான உத்தரவில் முதலில் கையெழுத்திட்டார்.
இந்நிலையில், கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க அடுத்த 100 நாட்களுக்கு அனைவரும் கண்டிப்பாக மாஸ்க்
அணிய வேண்டும் என அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, அதிபர் பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் ஏப்ரல் மாதம் வரை அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என வல்லுநர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதன்மூலம்
குறைந்தது 50 ஆயிரம் பேரின் உயிரை காப்பாற்ற முடியும். எனவே, அமெரிக்கர்கள் அனைவரும் அடுத்த 100 நாட்களுக்கு கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்
மனித வெடிகுண்டு தாக்குதல் – 32 பேர் மரணம்
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் டயாரன் சதுக்கம் அருகே உள்ள மக்கள் நெரிசல் மிகுந்த சந்தைப்பகுதியில் நேற்று 2 பேர்
சந்தேகத்துக்கு இடமளிக்கும்வகையில் நடமாடிக்
கொண்டிருந்தனர். அவர்களை பாதுகாப்பு படையினர் பின்தொடர்ந்து சென்றனர்.
அப்போது, இருவரும் தங்கள் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை
வெடிக்கச் செய்தனர். இதில் 32 பேர் பலியானார்கள். சுமார் 110 பேர் காயமடைந்தனர்.
கடந்த 3 ஆண்டுகளில் ஈராக்கில் நடந்த முதலாவது தற்கொலைப்படை
தாக்குதல் இதுவே ஆகும். ஐ.எஸ். பயங்கரவாதிகள் பாணியை
நினைவுபடு்த்தினாலும், இதற்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை
பாகிஸ்தான் திடீரென ‘ஷாகீன்-3’ என்ற தொலைதூர ஏவுகணையை ஏவி சோதித்து இருக்கிறது.
பாகிஸ்தான் தொலைதூர ஏவுகணை சோதனை
பாகிஸ்தான் நேற்றுமுன்தினம் திடீரென ‘ஷாகீன்-3’ என்ற தொலைதூர ஏவுகணையை ஏவி சோதித்து இருக்கிறது.
இந்த ஏவுகணை தரையில் இருந்து புறப்பட்டு 2,750 கி.மீ. வரையில் பறந்து சென்று, தரையில் உள்ள இலக்கை தாக்கும். குறிப்பாக
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபாரை இலக்காக கொள்ளக்கூடியது.
பாகிஸ்தான் உருவாக்கியுள்ள ஏவுகணைகளில் மிக அதிக தொலைவுக்கு செல்லக்கூடியது, இந்த ஏவுகணைதான்.
இந்த ஏவுகணை சோதனையை நேரில் பார்வையிட்ட பாகிஸ்தான் கூட்டுப்படை தளபதிகளின் தலைவர் ஜெனரல் நதீம் ராசா கூறுகையில், “பிராந்தியத்தில் பாகிஸ்தான் அமைதியான சக
வாழ்வை விரும்புகிறது. பாகிஸ்தானின் இறையாண்மைக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பையும் தடுப்பதுதான் நமது ராணுவ திறன் ஆகும்” என குறிப்பிட்டார்.
இந்த ஏவுகணை சோதனை, அதன் பல்வேறு வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப சாதனங்களை மறுபரிசீலனை செய்வதை நோக்கமாக கொண்டது என்று பாகிஸ்தான் ராணுவ செய்தி
தொடர்பு பிரிவான ஐ.எஸ்.பி.ஆர். கூறுகிறது. மேலும் இந்த சோதனை, அரபிக்கடலில் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது எனவும் சொல்கிறது.
இந்த சோதனை அதன் தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டு வரையறைகளை வெற்றிகரமாக சரி பார்த்துள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த ஏவுகணை முதன்முதலாக 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் ஏவி சோதிக்கப்பட்டது. இன்னும் பாகிஸ்தான் படையில் சேர்க்கப்படவில்லை.
மாடியில் இருந்து குதித்து வயோதிபர் தற்கொலை
சென்னை எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடத்தில் இருந்து முதியவர் ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம்
நடந்து ஒரு மணி நேரம் தாண்டியும் பிணத்தை மீட்க போலீசார் வராததால் பயணிகள் ஆதங்கம் தெரிவித்தனர்.
எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடத்தில் இருந்து முதியவர் கீழே குதித்து தற்கொலை
எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடத்தில் இருந்து முதியவர் குதித்து தற்கொலை
சென்னை:
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர் அமைந்திருக்கும் கட்டிடம் நேற்று வழக்கமான பரபரப்புடன் இயங்கியது. பயணிகள் நடமாட்டமும் வழக்கம்போலவே இருந்தது.
இந்தநிலையில் முதியவர் ஒருவர், அந்த கட்டிடத்தின் மாடி படிக்கட்டுகளில் வேகமாக ஏறிக்கொண்டிருந்தார். “எங்கே
செல்கிறீர்கள்?”, என சில பயணிகள் கேட்டும், அவர் அதை காதில் வாங்காமல் சென்று கொண்டிருந்தார்.
ஒருகட்டத்தில் கட்டிடத்தின் உச்சிக்கு சென்ற அவர், அங்கே அமர்ந்துகொண்டு தரையை வெறித்து பார்த்தபடி இருந்தார். ஏதோ விபரீதம் நடக்கப்போவதை அறிந்த பயணிகள் அவரை கீழே
இறங்குமாறு கூச்சலிட்டனர். சிலர் ரெயில்வே போலீசுக்கு தொடர்புகொண்டு விஷயத்தை தெரியப்படுத்தி கொண்டிருந்தனர்
. அதேவேளை அங்கு வந்த ரெயில்வே போலீசாரும் இதை கண்டும் காணாதது போல சென்றனர்.
இதற்கிடையில் யாரும் எதிர்பாராதநிலையில் திடீரென அந்த முதியவர் கட்டிடத்தில் இருந்து கீழே குதித்தார். தரையில் மோதிய வேகத்தில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த
வெள்ளத்தில் துடிதுடித்தபடி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் மீண்டும் ரெயில்வே போலீசுக்கு தொடர்புகொண்டனர்.
சம்பவம் நடந்து ஒரு மணி நேரம் ஆகியும் போலீசார் அங்கே வரவில்லை. இதற்கிடையில் 108 ஆம்புலன்சு ஊழியர்கள் வந்தனர். அவர்கள் அந்த முதியவர் இறந்துவிட்டதாகவும், உடலை கைப்பற்ற ரெயில்வே போலீசார் வருவார்கள் என்றும் கூறி சென்றுவிட்டனர்.
இதனால் ரத்தவெள்ளத்தில் அந்த முதியவரின் உடல் நீண்டநேரம் அங்கேயே கிடந்தது. இதனால் பயணிகள் ஆதங்கம் அடைந்தனர். சிலர் ஆவேசமாக எழும்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு சென்று போலீசாரிடம் நடந்ததை தெரிவித்தனர்.
இதையடுத்து ரெயில்வே போலீசார், தற்கொலை செய்த முதியவரின் உடலை மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரெயில்வே கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து உயிரை விட்ட முதியவர் யார்? ஏன் இந்த முடிவை எடுத்தார்? என்பது குறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எழும்பூர் ரெயில்வே போலீசாரின் தாமதமான நடவடிக்கையால் வேதனைக்குள்ளான பயணிகள் சிலர் கூறுகையில், “முதியவர் கட்டிடத்தில் ஏறும்போதே போலீசுக்கு தகவல் கொடுத்தோம். அப்போதே வந்திருந்தால் ஒரு உயிரை காப்பாற்றியிருக்கலாம். அந்த முதியவர் உயிருக்கு போராடியபோதும் போலீஸ் வரவில்லை. போலீசாரின் இந்த அஜாக்கிரதை கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்துக்கே எட்டி பார்க்காத போலீசாரை இனியும் நம்பக்கூடாது. நமது பாதுகாப்பை நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்போல…”, என்றனர்
நெதர்லாந்தில் ஊரடங்கு சட்டம் – மீறி சென்றால் தண்டம்
நெதர்லாந்தில் ஊரடங்கு சட்டம் – மீறி சென்றால் தண்டம்
நெதர்லாந்தில் மீள் அவேக்மாக கொரனோ நோயானது பரவி வருவதால்
எதிர்வரும் வர விடுமுறையில் இருந்து ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க படவுள்ளது என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது
அதன் படி இரவு 8.30 pm மணி முதல் ,அதிகாலை to 4.30 am, மணிவரையில்
மக்கள் வெளியில் நடமாட தடை செய்ய பட்டுள்ளது ,அவ்விதம் மீறி செல்வோர்
மீது விதிக்க பட்டுள்ள விதிகளின் படி சட்டம் பாயும் என்பது நிலையாக உள்ளது மக்களே உசார்
அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்பு
அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்பு
அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் அவர்கள் பதிவி ஏற்றுலாளர்
டிரம்ப் பெயரம் நெருக்கடியை கொடுத்து வெள்ளை மாளிகையை விட்டு
வெளியேற மறுப்பார் என நிலை நிலவிய நிலையில் பெரும் பதட்டம் ஏற்பட்டது ,ஆனல் அவை சுமுகமாக முடிவுற்று பதவி ஏற்றுக்கொண்டார்
மேலும் எதிரிகளையும் னைத்து அறத்தை நாட்டுவேன் என சூளுரைத்தார் ,
மக்களின் வாழ்வாதரம் ,பொருளாதரம் உள்ளிட்டவையில் அதிக கவனாம் செலுத்த பட்டு நாட்டை முன்னோக்கி நகர்த்தி செல்வேன் என அவர் சபதம் எடுத்தார்
அதேபோலவே அமெரிக்காவின் முதல் கறுப்பின பிரதி ஜனாதி பதியாக கமலா கரீஸ் தெரிவு செய்ய பட்டுள்ளார்
ஐஸ் எஸ் நிலைகள் மீது ரசியா விமானங்கள் அகோர குண்டு தாக்குதல்
ஐஸ் எஸ் நிலைகள் மீது ரசியா விமானங்கள் அகோர குண்டு தாக்குதல்
சிரியாவின் வடக்கு அப்பலோ பகுதியில் நிலை எடுத்து போராடி வரும்
ஐ எஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது ரசியா சண்டை விமானங்கள் அகோர தாக்குதலை நடத்தின
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 40 தடவை தாக்குதலை நடத்தின ,
இதில் குறித்த அமைப்பின் முக்கிய பதுங்கு குழிகள் ,ஆயுத களஞ்சியங்கள்
மற்றும் முக்கிய இரசாயன இராணுவ தளங்கள் மீதே துல்லியமான
தாக்குத்தல் நடத்த பட்டதாக சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது
சுட்டு வீழ்த்த பட்ட அமெரிக்கா உலங்குவானூர்தி
சுட்டு வீழ்த்த பட்ட அமெரிக்கா உலங்குவானூர்தி
சிரியாவின் வடகிழக்கு கசாக்கா பகுதிக்கு மேலாக பறப்பில் ஈடுபட்டு
கொண்டிருந்த அமெரிக்கா இராணுவத்தின் முன்னணி தாக்குதல் உலங்குவானூர்தியாக
விளங்கும் A Boeing AH-64 Apache attack helicopter என்ற வானூர்தி சுட்டு வீழ்த்தப் பட்டுள்ளது
இதில் பயணித்த அணைவரும் பலியாகியுள்ளதாக சிரியா
இராணுவத்தை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன
ஆனால் அமெரிக்கா இராணுவமோ , இயந்திர கோளாறு
காரணமாக வீழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது
20 குருதீஸ்தான் போராளிகள் -துருக்கிய இராணுவத்தால் கைது
20 குருதீஸ்தான் போராளிகள் -துருக்கிய இராணுவத்தால் கைது
தனி நாடு கோரி போராடி வரும் குருதீஸ்தான் போராளிகள்
இருபது பேரை துருக்கிய இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்
இவ்விதம் கைதான அனைவரும் குறித்த போராளிகள் அமைப்புடன் தொடர்பில்
உள்ளவர்கள் எனவும் பயிற்சி பெற்றவர்கள் எனவும் துருக்கிய இராணுவம் தெரிவிக்கிறது
தொடர்ந்து குறித்த அமைப்பிற்கு எதிராக போர் தொடர்ந்த
வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது
அமெரிக்காவில் புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு – எகிற காத்திருக்கும் பங்கு சந்தை
அமெரிக்காவில் புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு – எகிற காத்திருக்கும் பங்கு சந்தை
நாளை இருபதாம் திகதி அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாகி ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார் ,இவரது ஆட்சியின் பொழுது
வேலைவாய்ப்பு ,பொருளாதரம் ,மக்கள் வாழ்வாதாரம் செழிக்கும்
என்ற நிலையில் உலக பங்கு சந்தை அதிக உச்சத்தை தொடும் என எதிர் பார்க்க படுகிறது
டிரம்ப் பதிவோ விலகி சென்றுள்ளார் என்ற தகவல் ஒருபுறம்
கசிகிறது, மறுபுறமோ நாளை அவரும் விலகுவார் என்கிறது
மறு செய்தியோ இரு நாளுக்கு முன்னரே அவர் விலகி சென்று
விட்டுட்டார் எனவும் ,மிகவும் கவலை தோய்ந்த நிலையில் சென்றுள்ளார் என குறிப்பிடுகிறது
மேலும் பதவி விலகினாலும் இவர் புரிந்த செயல்பாடுகளுக்கு தண்டனை
கிடைக்க பெற்று சிறைகளில் அடைக்க படலாம் என்ற நிலை ஏற்படலாம் எனவும் எதிர்பார்க்க படுகிறது
பிரிட்டனில் கொரனோவால் 1,610 பேர் இன்று மட்டும் மரணம்
பிரிட்டனில் கொரனோவால் 1,610 பேர் இன்று மட்டும் மரணம்
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி இன்று மட்டும் சுமார் 1,610 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும்
இதே நாளில் 33,355 பேர் பாதிக்க ப்பட்டுள்ளனர்
தொடர்ந்து நோயின் தாக்குதல் அதிகரித்து வருவதால் மருத்துவ
மனைகள் நிரம்பி வழிகின்றன
மேலும் விசேட அவசர மக்கள் மருத்துவ காப்பு நிலையங்களை
உருவாக்கும் படியும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
பார்க்கில் சென்றவரை விரட்டி கடித்த நாய்
பார்க்கில் சென்றவரை விரட்டி கடித்த நாய்
லண்டன் Richmond Park.பகுதியில் உரிமையாளாரை அத்துமீறி பறந்து
சென்ற நாய் ஒன்று அங்கு நின்ற மான் ஒன்றை கடித்து குத்தறியதுடன்
,அங்கு நின்ற மனிதர்களையும் கடித்துள்ளது
காயமடைந்தவர்கள் உரியமுறை சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டனர்
மேற்படி நாயின் உரிமையாளர் முறையான பாதுகாப்பபு விதிகளுக்கு
உட்படுத்த படாது அழைத்து சென்ற குற்ற சாட்டில் அறுநூறு பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது

15 வயது சிறுவனை 40 தடவை பிளான் பண்ணி கொலை செய்த ரவுடி கும்பல்
15 வயது சிறுவனை 40 தடவை பிளான் பண்ணி கொலை செய்த ரவுடி கும்பல்
பிரிட்டனில் பதின் ஐந்து வயது கறுப்பின வாலிபர் ஒருவரி அதே கறுப்பின
ரவுடி கும்பல் ஒன்று நாற்பது தடவை பிளான் பண்ணி கொலைசெய்துள்ளது
இது தொடர்பான நீதி விசாரணைகளின் பொழுதே மேற்படி அதிர்ச்சி
தகவல் வெளியாகியுள்ளது ,
குறித்த சிறுவனை கொலை செய்த நான்கு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

இராணுவம் கிளர்ச்சி படைகள் மோதல் 16 இராணுவம் பலி
இராணுவம் கிளர்ச்சி படைகள் மோதல் 16 இராணுவம் பலி
ஆப் கானிஸ்தான் வடக்கு Kunduz மாகாணத்தில் அரச இராணுவம் மற்றும்
போராளிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களில் சிக்கி பதினாறு
இராணுவத்தினர் பலியாகியுள்ளார் .
மேலும் இந்தமோதலில் சிக்கி இரண்டு சிவிலியன்களும் பலியாகியுள்ளனர்
அரசு மற்றும் கிளர்ச்சி படைகளுக்கு இடையில் தொடர் மோதல்கள்
வெடித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
லெபனானுக்கு 100 கவச வண்டிகளை அன்பளிப்பாக வழங்கிய பிரிட்டன்
லெபனானுக்கு 100 கவச வண்டிகளை அன்பளிப்பாக வழங்கிய பிரிட்டன்
பிரிட்டனராசு லெபனான் இராணுவத்தினருக்கு நூறு கவச
வண்டிகளை அன்பளிப்பு செய்துள்ளனர்
சிரியா எல்லையில் காவல் கண்காணிப்பில் ஈடுபடுவதற்கே
மேற்படி அன்பளிப்பை செய்துள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது
இவ்வாறு நூறு வண்டிகளை இலவசமாக பிரிட்டன் அவசரமாக
வழங்க கரணம் என்ன என்பதே எழுந்துள்ள முக்கிய கேள்வியாகும்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடி
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.59 கோடி
உலகம் முழுவதும் தற்போது 2 ஆவது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.
இதனைத்தொடர்ந்து உலக நாடுகள் கொரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக இடைவெளியை
மக்கள் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 95,976,177 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 68,593,307 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2,048,328 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தற்போது 25,334,542 பேர் சிகிச்சை பெற்று
வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 111,848 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
வாலிபர் மீது கத்தி குத்து – சாலை அடித்து பூட்டு
வாலிபர் மீது கத்தி குத்து – சாலை அடித்து பூட்டு
லண்டன் major road through Neasden, near the North Circular பகுதியில் நேற்று
இரவு ஒன்பது முப்பது மணியளவில் வாலிபர் ஒருவர் மீது சரமாரி கத்தி குத்து தாக்குதல் இடம் பெற்றுள்ளது
இதில் பலத்த காயமடைந்த அவர் இரத்த வெள்ளத்தில் மீட்க பட்டு
தீவிர சிகிச்சை பிரில் அனுமதிக்க பட்டுளளார்
இந்த கொலைவெறி தாக்குதலுக்கு உரிய காரணம்
தெரியவரவில்லை ,தொடர்ந்து போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இதனால் அவ்வழி சாலை அடித்து பூட்ட பட்டுள்ளது

லண்டனில் ஒன்று கூடிய 14 வாலிபர்களுக்கு தலா 200 விகிதம் தண்டம்
லண்டனில் ஒன்று கூடிய 14 வாலிபர்களுக்கு தலா 200 விகிதம் தண்டம்
கடந்த தினத்திற்கு முன் தினம் business park in Park Royal. பகுதியில் ஆடம்பர்கர்களுடன்
ஒன்று கூடிய 14 வாலிபர்களுக்கு தலா 200 பவுண்டுகள் விகிதம் தண்டம் அறவிட பட்டுள்ளது
இவர்கள் இதனை 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் ,அது தவறின்
100 முதல் 6400 வரை தண்டம் உயரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்
கொரனோ விதிகளை மீறி செயல்பட்ட நிலையில் இந்த விடயம்
இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
கொரனோ தாண்டவம் – அமெரிக்காவில் 3,472 மற்றும் பிரிட்டனில்1,295 பேர் பலி
கொரனோ தாண்டவம் – அமெரிக்காவில் 3,472 மற்றும் பிரிட்டனில்1,295 பேர் பலி
பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில்
மட்டும் அமெரிக்காவில் 3,472 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 204,214 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அதேபோல பிரிட்டனில் 1,295 பேர் பலியாகியும் மேலும் 41,346 பேர் பாதிக்க
பட்டுள்ளனர் ,தொடர்ந்து வரும் நாட்களில் மேலும் இதன் தாக்கம்
அதிகரிக்கும் என எச்சரிக்கை பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
லண்டன் Heathrow விமான நிலையத்தில் வெடிகுண்டுடன் நபர் கைது
லண்டன் Heathrow விமான நிலையத்தில் வெடிகுண்டுடன் நபர் கைது
கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஐந்து முப்பது மணியளவில் லண்டன்
கீத்திரோ சர்வதேச விமான நிலையத்தில் வந்தடைந்த பயணி ஒருவரது
சூட்கேசில் கைக்குண்டு ஒன்று இருந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
சுங்க பணிகள் சோதனை மையத்தில் வெடிகுண்டு இருப்பது கண்டு
பிடிக்க பட்ட நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
விமானத்தை குண்டு வைத்து தகர்க்கும் நடவடிக்கையில் இவர்
ஈடுபடவே இந்த குண்டை எடுத்து சென்றதாக சந்தேகிக்க படுகிறது








