Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
அமெரிகாவில் எகிறிய கொரனோ மரணம் -3,181 மற்றும் பிரிட்டனில் 1,631 பேர் பலி
அமெரிகாவில் எகிறிய கொரனோ மரணம் -3,181 மற்றும் பிரிட்டனில்
1,631 பேர் பலி
இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் அமெரிக்காவில் 3,181
பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இதே நாளில் 120,201 பாதிக்க பட்டுள்ளனர்
அதேபோல பிரிட்டனில் 1,631 பேர் பலியாகியும் 20,089 பாதிக்க பட்டுள்ளனர்
,.கடந்த இரண்டு நாட்களில் பலி எண்ணிக்கை வீழ்ச்சி
அடைந்திருந்த நிலையில் தற்போது இரட்டிப்பாக உயர்வடைந்துள்ளது குறிப்பிட தக்கது

பெற்ற மகள்களை அடித்து பலி கொடுத்த தம்பதிகள் – அதிர்ச்சியில் உறைந்த கிராமம்
பெற்ற மகள்களை அடித்து பலி கொடுத்த தம்பதிகள் – அதிர்ச்சியில் உறைந்த கிராமம்
ஆந்திராவில் பெற்ற இரு மகள்களை, பேராசிரியர்களாக பணியாற்றும் பெற்றோரே நரபலி கொடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்
பேராசிரியர் தம்பதிகளுடன் மகள்களை படத்தில் காணலாம்
சித்தூர்:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் புருஷோத்தம் நாயுடு இவரது மனை வி பத்மஜா . புருஷோத்தம் அரசு கல்லூரியில் வேதியியல் இணை
பேராசிரியராக வேலைபார்த்து வருகிறார். எம்.எஸ்.சி கணிதத்தில் தங்கப்பதக்கம் வென்ற மனைவி பத்மஜா தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகின்றார்.

இவர்களது மகள்கள் அலெக்யா (27), சாய் திவ்யா (22) . அலெக்யா இந்திய வன முகாமைத்துவ நிறுவனத்தின் மாணவர், திவ்யா பிபிஏ பட்டதாரி ஆவார்.
ஊரடங்கால் வீட்டில் இருந்த இவர்கள், கடந்த சில மாதங்களாக வீட்டில் இவர்கள் பூஜைகள் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த
நிலையில், நேற்று காலை தனது இரண்டு மகள்களை உடற்பயிற்சி செய்யும் இரும்பு டம்பிள்ஸ் மூலம் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியதில், ஆன்மீகத்தில் கொண்ட அதீத ஈடுபட்டால்,
மூடநம்பிக்கையில் இதுபோன்று கொடூர செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். இதில் வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து தம்பதியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
எவ்வாறாயினும், சம்பவத்திற்கான் காரணத்தை போலீசாரால் தீர்மானிக்க முடியவில்லை.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
எதற்காக இந்த சம்பவம் நடந்தது என்பது என்பது பற்றிய முழு விவரங்களும் எங்களுக்குத் தெரியாது, ஆனால் நாங்கள் அங்கு சென்றதும் தம்பதிகள் சாதாரணமாக காணப்படவில்லை.
இறந்தவர்கள் எழுந்திருப்பார்கள் என்று கூறி, அவர்களுக்கு ஒரு நாள் நேரம் கொடுக்குமாறு எங்களிடம் கேட்டுக்கொண்டனர்.
அவர்களுடன் உரையாடிய பிறகு, அவர்கள் ஒரு மிரண்ட நிலையில் இருப்பதாக எங்களுக்குத் தோன்றியது இதனால் அவர்களை விசாரிக்க நாட்ளாகும் என கூறினர்.
சசிகலா சிறை தண்டனை முடிவுற்று இன்று விடுதலை
சசிகலா சிறை தண்டனை முடிவுற்று இன்று விடுதலை
4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவடைவதையொட்டி விக்டோரியா அரசு மருத்துவமனையில் இருந்தபடியே சசிகலா
இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார்.
4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவடைகிறது – சசிகலா இன்று விடுதலை
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதைய நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்புகள் முற்றிலுமாக நீங்கிவிட்டது.
இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு டாக்டர்கள் மாற்றியுள்ளனர். சசிகலாவின் உடல்நிலை
குறித்து விக்டோரியா அரசு மருத்துவமனை நேற்று மாலை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
66 வயதாகும் சசிகலாவுக்கு கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தற்போது கொரோனா
பாதிப்புகள் குறைந்துவிட்டன. கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லை. சுயநினைவுடன் நன்றாக பேசுகிறார்.
கொரோனா வழிகாட்டுதல்படி அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே பெங்களூரு சிறை நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தபடி சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார். இதற்கு கர்நாடக போலீஸ் துறை அனுமதி
வழங்கிவிட்டது. இதையடுத்து சிறை அதிகாரிகள் காலை 11 மணி அளவில் விக்டோரியா மருத்துவமனைக்கு வந்து சசிகலாவை சந்திக்கிறார்கள். அவரிடம் விடுதலை செய்வதற்கான
ஆவணங்களில் கையெழுத்து பெறுகிறார்கள். அதையடுத்து உணவு இடைவேளைக்கு பிறகு, சசிகலாவை முறைப்படி சிறை நிர்வாகம் விடுதலை செய்யும் என்று கூறப்படுகிறது.
அதன் பிறகு அவருக்கு சிறை சார்பில் அளிக்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்படும். பிறகு அவரை குடும்பத்தினர் தங்களின் பொறுப்பில் பார்த்துக் கொள்வார்கள். சசிகலாவுக்கு
தொடர்ந்து விக்டோரியா மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிப்பதா? அல்லது தனியார் மருத்துவமனைக்கு அழைத்து
செல்வதா? என்பது குறித்து உறவினர்கள் கலந்து ஆலோசித்து முடிவு செய்ய உள்ளனர்.
அதே நேரத்தில் தற்போதைய நிலையில் அடுத்த சில நாட்கள் சசிகலா பெங்களூருவில் தான் இருக்கப்போகிறார். அவரது
உடல்நிலை நன்றாக தேறிய பிறகே அவரை தமிழகத்திற்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
இன்று விடுதலை செய்யப்பட்ட பிறகு நாளை (வியாழக்கிழமை) சசிகலாவுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று
அறிக்கை வந்தால், அவரை மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யவும் அந்த மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், அவர் 2 வார காலம் தனிமையில் இருக்க
வேண்டும் என்று டாக்டர்கள் ஆலோசனை வழங்குவார்கள் என்று கூறப்படுகிறது. அவர் பெங்களூருவிலேயே ஏதாவது ஒரு ஓட்டலில் தங்கி ஓய்வு எடுப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலா அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நபர் என்பதால், சசிகலாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் கண்காணிப்பு
கேமராக்களில் பதிவு செய்யப்படுகிறது. இளவரசியும் சசிகலா உள்ள அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்
பங்கு சந்தையின் முதல்வியை -நிதி அமைச்சராக நியமித்த பைடன்
பங்கு சந்தையின் முதல்வியை -நிதி அமைச்சராக நியமித்த பைடன்
அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த வாரம் பதவியேற்றார். முன்னதாக அவர் பதவியேற்புக்கு முன்பே தனது
தலைமையில் அமையும் மந்திரிசபையை அறிவித்தார். அதன்படி அமெரிக்க நிதி மந்திரி பதவிக்கு பொருளாதார பெண் வல்லுநரான ஜேனட் ஏலனை (வயது 74) ஜோ பைடன் நியமித்தார்.
இவரது நியமனத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் ஒப்புதல் அவசியம் ஆகும். செனட் சபையில் தற்போது ஜனநாயக கட்சிக்கு 50 உறுப்பினர்கள் குடியரசுக் கட்சிக்கு 50 உறுப்பினர்கள்
என சரிசமமான நிலை உள்ளது. செனட் சபையின் தலைவராக இருக்கும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் சபையில் நடக்கும் ஓட்டெடுப்பில் ஜனநாயக கட்சியின் முடிவுக்கு ஆதரவாக தனது
வாழ்க்கையை அளிப்பார். இதனால் செனட் சபையில் ஜனநாயக கட்சியினர் கொண்டுவரும் தீர்மானம், மசோதா உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் சிக்கலின்றி எளிதாக நிறைவேறும் சூழல் உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க நிதி மந்திரியாக ஜேனட் ஏலனை நியமிப்பது தொடர்பாக செனட் சபையில் நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடந்தது. சபையின் தலைவரான துணை ஜனாதிபதி
கமலா ஹாரிஸ் தலைமையில் நடந்த இந்த வாக்கெடுப்பில் ஜேனட் ஏலன் நியமனத்துக்கு ஆதரவாக 84 உறுப்பினர்களும், எதிராக 15 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஜேனட் ஏலனை அமெரிக்க நிதி மந்திரியாக நியமித்து செனட் சபை ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம்
அமெரிக்க வரலாற்றிலேயே நிதி மந்திரியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்கிற பெருமையை ஜேனட் ஏலன் பெறுகிறார். அவர் விரைவில் முறைப்படி பதவி ஏற்பார்.
அமெரிக்காவின் பிரவுன் மற்றும் யேழ் பல்கலைக்கழகங்களில் பொருளாதார பட்டப்படிப்புகளை முடித்த ஜேனட் ஏலன், உலகின்
பல்வேறு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக இருந்தபோது, இவரின் திறமை அறியப்பட்டது. அமெரிக்காவில் வேலையின்மை,
பொருளாதாரச் சிக்கல் நிலவியபோது, இவரின் கொள்கைகள், திட்டங்கள் அவற்றிலிருந்து மீண்டுவர உதவின.
அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுவில் 1994 முதல் 1997-ம் ஆண்டுவரை ஜேனட் ஏலன் பதவி வகித்துள்ளார். அமெரிக்க
ஜனாதிபதியாக கிளிண்டன் இருந்தபோது, அவரின் பொருளாதார ஆலோசகராக ஜேனட் ஏலன் பதவி வகித்துள்ளார்.
2004 முதல் 2010-ம் ஆண்டுவரை சான்பிரான்சிஸ்கோ மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராக ஜேனட் ஏலன் இருந்தார். 2014 முதல் 2018-ம் ஆண்டுவரை அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக ஜேனட் ஏலன் இருந்தார்.
அமெரிக்கப் பொருளாதாரம் மேலும் சிறப்படைய ஜேனட் ஏலனின் வழிகாட்டுதல்கள், நிதிக்கொள்கைகள் மீது தங்களுக்கு நம்பிக்கையிருக்கிறது என்று செனட் சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
செனட் சபையால் உறுதிப்படுத்தப்பட்ட ஜோ பைடனின் 3-வது மந்திரி சபை உறுப்பினர் ஜேனட் ஏலன் ஆவார். இதற்கு முன் தேசிய உளவுத்துறை இயக்குநராக அவ்ரில் ஹையின்சும், ராணுவ மந்திரி லாய்ட் ஆஸ்டினும் நியமிக்கப்பட்டனர். உள்துறை மந்திரியாக டோனி பில்கினை நியமிப்பதற்கு செனட்சபை விரைவில் ஒப்புதல் வழங்கும் என்று தெரிகிறது.
லண்டன் – குரைடனில் பெண்ணை முடியில் பிடித்து இழுத்து சென்ற கும்பல்
லண்டன் – குரைடனில் பெண்ணை முடியில் பிடித்து இழுத்து சென்ற கும்பல்
லண்டன் குரைடன் பகுதியில் காதலனுடன் பயணித்த இளம் பெண் ஒருவரை
அங்கு வந்த கும்பல் ஒன்று வழிமறித்து தாக்கியது ,இதில் காதலன் பலத்த
காயமடைந்த நிலையில் அந்த தாக்குதலை தடுக்க சென்ற காதலியை
தாக்கி அவரது முடியில் பிடித்து இழுத்து தரையில் தள்ளிய அகோரம் இடம்பெற்றுள்ளது
இது குறித்த தீவிர விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்
,காதலன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு தற்போது வீடு சென்றுள்ளார்
குற்றவாளிகளை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்
ஏழு நாளில் 16 கொடிய கிரிமினல்களை சிறையில் அடைத்த போலீஸ்
ஏழு நாளில் 16 கொடிய கிரிமினல்களை சிறையில் அடைத்த போலீஸ்
பிரிட்டனில் கொடிய நோயானது மக்களை கொன்று குவித்து வரும்
நிலையில் கிரிமினல்கள் தமது கைவரிசையை காட்டிய வண்ணமே உள்ளனர்
இவ்வேளை விசேட சிறப்பு காவல்துறை அணியினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு
முற்றுகையில் மிக முக்கிய மாக தேட பட்டு வந்த 16 கிரிமினல்கள் கைது
செய்ய பட்டு, கடந்த எழுநாட்களில் மட்டும் சிறையில் அடைக்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
இவர்கள்; அனைவரும் ,கடத்தல் ,கொலை,கொள்ளை ,மற்றும் நச்சு கலத்தல் ,
முறைகேடுகளில் ஈடுபட்ட குற்ற சாட்டுக்களில் கைது செய்ய பட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது

80 நாய்களை திருடியவர்களை மடக்கி பிடித்த போலீஸ் – லண்டனில் சம்பவம்
80 நாய்களை திருடியவர்களை மடக்கி பிடித்த போலீஸ் – லண்டனில் சம்பவம்
பீறிட்டான் தெற்கு வேல்ஸ் பகுதியில் எண்பது நாய்களை திருடி
செல்ல முயன்ற நபர்களை விசேட காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்
ஒவ்வொரு நாய்களும் அதிக விலை உயர்ந்தவை என கணிக்க பெற்றுள்ளது
பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்படி
பெரும் திருட்டு முறியடிக்க பட்டுள்ளது ,
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 592 பேர் மரணம்
பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 592 பேர் மரணம்
பிரிட்டனில் பரவி வரும் கோவிட் வைரஸ் நோயில் சிக்கி கடந்த 24
மணித்தியாலத்தில்
மட்டும் சுமார் 592 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் 22,195 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து நான்காயிரத்து மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில்
உள்ளனர் ,கடந்த இரு நாட்களாக மரண வீதம் குறைந்து காணப்படுவதால்,
ஆளும் அதிபர் லொக்கடவுனை நீக்கும் முயற்சியில் ஈடுபட கூடும் என ஏதிர்பார்க்க படுகிறது

அதிகாலை வேளை வீடு புகுந்து குடும்பத்தை சுட்டு கொன்ற ஆயுத தாரி
அதிகாலை வேளை வீடு புகுந்து குடும்பத்தை சுட்டு கொன்ற ஆயுத தாரி
அமெரிக்காவில் அதிகாலை நான்கு மணியளவில் வீட்டுக்குள் புகுந்த
ஆயுத தாரி ஒருவர் அங்கிருந்த கர்ப்பிணி தாய் மற்றும் அவரது சிசு
உள்ளிட்ட ஐவரை சுட்டு கொன்று விட்டு தப்பி சென்றுள்ளார்
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,இதுவரை இந்த
கொலையினை புரிந்தவர் யார் என்பது கண்டறியப்படவில்லை
,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
மக்களை இடித்து தள்ளிய போலீஸ் கார் – வீடியோ
மக்களை இடித்து தள்ளிய போலீஸ் கார் – வீடியோ
அமெரிக்காவில் வீதியில் நின்ற் அம்மக்களுக்குள் வேகமாக வந்த காவல்துறை
கார் ஒன்று புகுந்த்துள்ளது ,இதில் அந்த காரில் இடித்து வீச படும் காட்சிகள் வெளியாகி பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்காவில் தொடர்ந்து காவல்துறையின் மிலோச்சா செயல்
பாடுகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
பைடன்
பதவி ஏற்று மூன்று நாட்களில் நடந்த மிக பெரும் சம்பவமாக இது பார்க்க படுகிறது
பிரிட்டனில் ஜூலை 17-ந்தேதி வரை ஊரடங்கு நீடிப்பு
இங்கிலாந்து உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் ஜூலை 17-ந்தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
இங்கிலாந்தில் ஜூலை 17-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: 10 நாட்கள் கோரன்டைன்
போரிஸ் ஜான்சன்
கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவியது. மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. ஆனால், பொது ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாட்டால் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்தது.
ஜெர்மனிக்கு அடுத்தப்படியாக இங்கிலாந்து பல்வேறு தளர்வுகளை அமல்படுத்தியது. இதனால் மக்கள் மெதுவாக சகஜ நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பைசர் தடுப்பூசி, அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியும் நடைமுறைக்கு வந்தது.
இந்த நிலையில்தான் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்தது. உருமாமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவியது. இதனால் இங்கிலாந்து மீண்டும் பழைய நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பலவேறு நாடுகள் இங்கிலாந்து உடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்தது.
இந்த நிலையில் ஜூலை 17-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக இங்கிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள வெளிநாட்டில் இருந்து வரும் நபர்கள் 10 நாட்கள் கட்டாய கோரன்டைனில் இருக்க வேண்டும் என முடிவுக்க எடுக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து நாளை இறுதி முடிவு எடுக்கபட இருக்கிறது.
இந்த ஊரடங்கால் பப்புகள், ரெஸ்டாரன்ட்கள், மால்கள் போன்றவைகளும் மூடப்பட உள்ளது. இங்கிலாந்தில் நேற்று வரை 5.9 மில்லியன் மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
உருமாறிய கொரோனா தொற்றால் உயிரிழப்பு அதிகமாகும் அபாயம் உள்ளது என எச்சரித்துள்ள போரிஸ் ஜான்சன், தடுப்பூசி திட்டம் சரியான வகையில் வேலை செய்யும்வரை வரை ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நேற்ற வரை 97,329 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
பிரிட்டனில் 600 பேர் பலியாம் – திடீரென மரண இழப்பில் வீழ்ச்சி
பிரிட்டனில் 600 பேர் பலியாம் – திடீரென மரண இழப்பில் வீழ்ச்சி
பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி அறுநூறு பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
,கடந்த நாளில் நிலவிய மரணத்தில் இருந்து இவை சரி பாதியாக உள்ளது
இந்த திடீர் வீழ்ச்சி திட்டமிடப் பட்ட மூடி மறைப்பா அல்லது
இயற்கையாக குறைந்த மரணமா என்பது தொடர்பாக சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது
பிரிட்டனில் கொரனோவால் 1,348 பேர் பலி -33,552 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கொரனோவால் 1,348 பேர் பலி -33,552 பேர் பாதிப்பு
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தகத்தலில் சிக்கி கடந்த24
மணித்தியாளத்தில் மட்டும் சுமார் 1,348 பேர் பலியோகியும் 33,552
பேர் பாதிக்க பட்டுள்ளனர்
எதிர்வரும் குளிர்க்கலாம் ஆரம்பிக்க படவுள்ளநிலையில் ,மரண எண்னிக்கை
இரட்டிப்பாக அதிகரிக்க படும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்க பட்டுள்ள
நிலையில் ,விசேட மருத்துவ நிலையங்கள் தற்காலிகமாக
அமைக்க பட்டு செயல்முறை பாவனைக்கு விடப்பட்டுள்ளன
பிரிட்டனில் கொரனோவால் பாதிக்க பட்ட 4,076 பேருக்கு செயற்கை சுவாசம்
பிரிட்டனில் கொரனோவால் பாதிக்க பட்ட 4,076 பேருக்கு செயற்கை சுவாசம்
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி பாதிக்க பட்ட மக்களில் சுமார் 4,076 பேருக்கு செயற்கை
சுவாசம் பொருத்த பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் உள்ளனர்
இவ்வாறு பொருத்த பட்டால் இவர்கள் மரணத்தில் எல்லையில்
இருக்கின்றனர் என்பதே பொருளாகும்
அவ்வாறு நோக்கின் இவர்களில் பலநூறு பேர் மரணிப்பர் என்பதே கூற்றாகும்
இவ்வாறு செயற்கை சுவாசம் அகற்ற பட்ட பல தமிழர்கள்
மரணமாகியுள்ளமை இங்கே சுட்டி காட்ட தக்கது
பாடசாலைக்குள் புகுந்து மாணவர்களை வெட்டிய கொடூரன்
பாடசாலைக்குள் புகுந்து மாணவர்களை வெட்டிய கொடூரன்
சீனாவின் குன்மிங் நகரில் உள்ள பாடசாலை ஒன்றுக்குள் கத்தியுடன்
புகுந்த 56 வயது நபர் ஒருவர் அங்கு நின்ற மாணவர்கள் மீது சரமாரியாக கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினான் ,
இந்த செய்தியை அறிந்து விரைந்து வந்த போலீசார் முற்றுகையை கண்ணுற்ற இவன்
,அதில் இருந்து தப்பிக்க மாணவன் ஒருவனை சிறை பிடித்து அவன் கழுத்தில்
கத்தியை வைத்து மிரட்டினான் ,போலீசார் கேட்டு கொண்டும் அவனை விடுவிக்க
தவறியதால் குறிபார்த்து சுடும் தாக்குதல் மூலம் அவன் சுட்டு கொலை செய்ய பட்டான்
இந்த தாக்குதலுக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
சுலைமானி கொலைக்கு டிரம்பை பழிவாங்குவோம் – ஈரான் மிரட்டல்
சுலைமானி கொலைக்கு டிரம்பை பழிவாங்குவோம் – ஈரான் மிரட்டல்
ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொலைக்கு டிரம்பை பழிவாங்குவோம்
என ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
காசிம் சுலைமானி கொலைக்கு டிரம்பை பழிவாங்குவோம் – ஈரான் பகிரங்க மிரட்டல்
ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி
டெஹ்ரான்:
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 2018-ம்
ஆண்டு அமெரிக்கா வெளியேறியது முதல் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் உருவானது.
இந்த சூழலில் கடந்த ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய வான் தாக்குதலில்
ஈரான் ராணுவ தளபதி காசி சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் தீராப்பகை உருவானது.
டிரம்ப்
காசிம் சுலைமானி கொலைக்கு டிரம்ப் பதில் சொல்லியே ஆகவேண்டும் என ஈரான் ஏற்கனவே எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொலைக்கு
டிரம்பை பழிவாங்குவோம் என ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
அயத்துல்லா அலி காமெனியின் அதிகாரபூர்வ வலைதளத்தில், டிரம்ப் கோல்ப் விளையாடிக் கொண்டிருக்கையில் அவரது
தலைக்கு மேல் போர் விமானம் பறப்பது போன்ற ஒரு புகைப்படம்
பகிரப்பட்டிருக்கிறது. அந்த பதிவில் பழிவாங்கப்படுவது நிச்சயம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதேபோல் அயத்துல்லா அலி காமெனியுடன் தொடர்புடைய டுவிட்டர் கணக்கிலும் இந்த புகைப்படம் பகிரப்பட்டது.
அந்தப் பதிவில் சுலைமானியைக் கொன்றவர். இவர் தான் சுலைமானியை
தாக்க உத்தரவிட்டார். டிரம்ப் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும்’’ என பாரசீக மொழியில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து விதிமுறைகளை மீறியதாக கூறி அந்த டுவிட்டர் கணக்கை
டுவிட்டர் நிறுவனம் நிரந்தரமாக முடக்கியது. அதேசமயம் இந்த டுவிட்டர்
கணக்கு அயத்துல்லா அலி காமெனியுடையது இல்லை என்றும் போலியான
டுவிட்டர் கணக்கு என்றும் டுவிட்டர் மூலம் விளக்கமளித்துள்ளது.
அத்துமீறினால் தாக்குவோம் – இந்தியா இராணுவம் அதிரடி அறிவிப்பு
அத்துமீறினால் தாக்குவோம் – இந்தியா இராணுவம் அதிரடி அறிவிப்பு
இந்தியா சீனா எல்லையில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது
.இரு நாட்டு இராணுவத்திற்கும் இடையில் மோதல்கள் கூட வெடித்தன
இவ்வாறான நிலையில் தற்பொழுது மீளவும் சீனா இராணுவம் அத்துமீறி
நுழைந்து வலிந்து தாக்குதலை மேற்கொண்டால் நாமும் பதிலடி தாக்குதலை நடத்துவோம் என்கிறது இந்தியா இராணுவம்
உலக நாடுகளை மிரள வைத்து வரும் சீனா முன்பாக இந்தியாவால்
தாக்கு பிடிக்க முடியுமா என்பதே இன்றைய கேள்வியாகும்
வெளிநாட்டு கப்பல் மீது சீனா கடல் படை தாக்குதல் – பதட்டம் அதிகரிப்பு
வெளிநாட்டு கப்பல் மீது சீனா கடல் படை தாக்குதல் – பதட்டம் அதிகரிப்பு
தென் சீனா கடல் பகுதியில் தொடர்ந்து அத்துமீறி நுழைந்து மிரட்டல்
பணியில் ஈடுபட்டு இருந்த அமெரிக்கா கப்பல் மீது சீனா கடல்
படையினர் தாக்குதல் நடத்தியகியுள்ளதாக தெரிவித்துள்ளது
மேற்படி சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
பைடன் பதவி ஏற்று முதலாவது மோதலாக இது உருமாற்றம்
பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

அமெரிக்கா வாஷிங்கடனில் 7.000 இராணுவம் குவிப்பு – வீதிகளில் இராணுவம்
அமெரிக்கா வாஷிங்கடனில் 7.000 இராணுவம் குவிப்பு – வீதிகளில் இராணுவம்
அமெரிக்காவில் டிரம்ப் பதவி பறிபோன நிலையில் அங்கு பெரும் பதட்டம்
நிலவியது ,இதனை அடுத்து தற்பொழுது
வாஷிங்க்டன்
பகுதியில் தொடர்ந்து ஏழாயிரம் இராணுவத்தினர் குவிக்க பட்டு காவல் கடமையில் ஈடு படுத்த பட்டுள்ளனர்
இவர்கள் எதிர்வரும் பங்குனி மாதம் விரை இவ்வாறு நிலை நிறுத்த
படுவார்கள் என தெரிவிக்க படுகிறது

ஈராக் -அமெரிக்கா இராணுவ தளம் அருகில் ஏவுகணை தாக்குதல்
ஈராக் -அமெரிக்கா இராணுவ தளம் அருகில் ஏவுகணை தாக்குதல்
ஈராக் தலைநகரில் உள்ள பக்தாத் சர்வேதச விமான நிலையத்தில்
வெளிப்புறத்தில் மூன்று ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
இதனால் மக்களுக்கு சேதங்கள் ஏற்படவில்லை ,நேற்று
வெள்ளிக்கிழமை
இரவு இடம்பெற்ற இந்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை,இந்த விமான தளம் அருகில் அமெரிக்க இராணுவ தளங்கள் உள்ளது
மேற்படி ஏவுகணைகள் ஈரான் நட்டு தயாரிப்பில் ஆனவை என தெரிவிக்க பட்டுள்ளது








