Tag: ருத்துவர்
இந்தியாவில் 798 மருத்துவர்கள் பலி
இந்தியாவில் 798 மருத்துவர்கள் பலி
கொவிட்-19 இன் இரண்டாவது அலையின் போது இந்தியாவில் 798 மருத்துவர்கள் இறந்தனர்; டெல்லியில் உயிரிழப்பு அதிகமாக இருந்தது என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் அதிகபட்சம் 128 மருத்துவர்கள் உயிர் இழந்தனர். பீகாரில் 115 பேர், உத்தரப்பிரதேசத்தில் 79 பேர் கொவிடுக்கு பலியானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
.
டெல்டா பிளஸ் மாறுபாட்டின் பரவலான இந்திய மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் கொவிட் -19 இன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மகாராஷ்டிராவில் 23 மருத்துவர்களும், கேரளாவில் 24 இறப்புகளும் பதிவாகியுள்ளன. பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஒரு மருத்துவர் மட்டுமே இறந்துள்ளார். இதுதான் மருத்துவர்களின் பலி எண்ணிக்கையில் மிகவும் குறைவு.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது மக்களுக்கு உதவி செய்த மருத்துவர்களை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பாராட்டிப் பேசினார். மருத்துவர்கள்
மதிக்கப்படுவார்கள், பாதுகாக்கப்படுவார்கள் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளதாக, ஐ.எம்.ஏ தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால் தெரிவித்தார். மேலும் தடுப்பூசி போடுவதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்






