Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
கையிருப்பு சொத்துக்களில் வீழ்ச்சி
கையிருப்பு சொத்துக்களில் வீழ்ச்சி
கையிருப்பு சொத்துக்களில் வீழ்ச்சி ,இலங்கை மத்திய வங்கியின் வாராந்திர பொருளாதார சுட்டெண் அறிக்கைக்கு அமைய, 2025 ஜூன் மாதத்திற்கான
கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி
உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி 6,080 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
2025 மே மாதத்தில் இந்த பெறுமதி 6,286 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது.
இதேவேளை, கடந்த ஜூன் மாதத்தினுள் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி 3.3 சதவீதத்தால் அதாவது 206 மில்லியன் அமெரிக்க டொலர்களால் வீழ்ச்சியடைந்துள்ளது.
அந்நிய செலாவணி இருப்பு
விசேடமாக, அந்நிய செலாவணி இருப்பு 6,231 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 6,023 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்ததே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
ஜப்பான் தென்கொரிய பொருட்களுக்கு 25%வரிவிதிப்பு
ஜப்பான் தென்கொரிய பொருட்களுக்கு 25%வரிவிதிப்பு
ஜப்பான் தென்கொரிய பொருட்களுக்கு 25%வரிவிதிப்பு ,தென் கொரியா மற்றும் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
வரிவிதிப்பு எதிர்வரும் ஒகஸ்ட் 1 முதல் அமலுக்கு
இந்த வரிவிதிப்பு எதிர்வரும் ஒகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்று ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அனுப்பிய கடிதங்களின் நகல்களையும் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் ட்ரம்ப் கூறியிருப்பதாவது: “வரும் ஒகஸ்ட் 1 முதல் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் ஜப்பான் / கொரியா ஆகிய நாடுகளின் அனைத்து வகையான பொருட்களுக்கும் தனித்தனியாக 25 சதவீத வரி விதிக்க
உள்ளோம். உங்கள் நாடுகளுடன் எங்களுக்கு உள்ள வர்த்தக பற்றாக்குறை ஏற்றத்தாழ்வை நீக்குவதற்கு இந்த 25% வரி என்பது மிகவும் குறைவு என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஏதேனும் காரணத்துக்காக உங்கள் வரிகளை உயர்த்த
நீங்கள் முடிவு செய்தால், நீங்கள் எவ்வளவு எண்ணிக்கையில் உயர்த்தத் தேர்வுசெய்தாலும், அது நாங்கள் வசூலிக்கும் 25 சதவீதத்தில் சேர்க்கப்படும்” இவ்வாறு ட்ரம்ப் அந்த கடிதங்களில் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா
இந்த கடிதங்கள் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா மற்றும் தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங் இருவருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்திருந்தார். அமெரிக்க நிர்வாகம் புதிய வரி விதிப்பு மற்றும்
திருத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அதிகாரபூர்வமாக கடிதம் அனுப்பும் என்று கூறியிருந்தார். அதன்
முதல்கட்டமாக தற்போது ஜப்பான் மற்றும் தென்கொரியாவுக்கு ட்ரம்ப் கடிதம் அனுப்பியுள்ளார்.
பொலிஸ் சேவையில் 28000 வெற்றிடங்கள்
பொலிஸ் சேவையில் 28000 வெற்றிடங்கள்
பொலிஸ் சேவையில் 28000 வெற்றிடங்கள் தற்போது பொலிஸ் சேவையில் 28,000 வெற்றிடங்கள் உள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி
இன்று (08) பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தற்போது பொலிஸ் அதிகாரிகளின் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்தார்.
அதன்படி, பொலிஸ் சேவையில் நிலவும் 5,000 வெற்றிடங்களுக்காக உடனடியாக ஆட்சேர்ப்பு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும்,
அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பொலிஸ் பரிசோதகர்
தற்போது உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், 5,000 கீழ்நிலை
பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கிடையில், விசாரணை தரத்தில் உள்ள 1,500 அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.
இது மிக பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
5வயது சிறுவன் திடீர் மரணம்
5வயது சிறுவன் திடீர் மரணம்
5வயது சிறுவன் திடீர் மரணம் ,மித்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜூலம்பிட்டிய பகுதியில் திடீர் நோய் நிலைமை காரணமாக ஐந்து வயது சிறுவன் ஒருவன் நேற்று (07) உயிரிழந்துள்ளான்.
சிறுவன் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த போது திடீரென மயக்கமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து, உடனடியாக சிறுவன் கட்டுவான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர், மேலதிக சிகிச்சைக்காக வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
மஹேஷிவிஜேரத்னவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு
மஹேஷிவிஜேரத்னவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு
மஹேஷிவிஜேரத்னவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு ,இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர்
மஹேஷி விஜேரத்னவை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.
முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம்
முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம்
முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம் ,வெல்லவாய பொலிஸ் பிரிவின் மூன்றாம் தூண் பகுதியில், எல்ல-வெல்லாவாய பிரதான வீதியில், முச்சக்கர வண்டி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்தில்

கதிர்காமத்திற்கு யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.
விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் சாரதி காயமடைந்து வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆபத்தான நிலையில்
அவர்களில் ஒருவர், ஆபத்தான நிலையில், மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பண்டாரவளை, அம்பதண்டேகம பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2027முதல் இலங்கையில் புதிய வரி
2027முதல் இலங்கையில் புதிய வரி
2027முதல் இலங்கையில் புதிய வரி ,2027 ஆம் ஆண்டு முதல் சொத்து வரி ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
வரி முறை 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிக்கை
இந்த வரி முறை 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் இலங்கை தொடர்பாக வெளியிட்ட தனது ஊழியர் மட்ட அறிக்கையில் இது குறித்து அறிவித்துள்ளது.
இந்த புதிய சொத்து வரியை விதிப்பதற்குத் தேவையான அடிப்படை நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தரவு சேகரிப்பு
பணிகளில் சிறிது தாமதம் இருந்த போதிலும், செப்டம்பர் மாதத்திற்குள் அந்தப் பணிகள் முடிவடையும் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டுகிறது.
சொத்துக்களின் மதிப்பை மதிப்பீடு செய்வதற்கும் வரி கணக்கிடுவதற்கும் டிஜிட்டல் தரவு முறைமை ஒன்று உருவாக்கப்படவுள்ளதுடன், 2026 ஆம் ஆண்டு
முடிவடைவதற்கு முன்னர் அதற்கு தேவையான அனைத்து தரவுகளும் தயாரிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சொத்து வரி விதிப்பு முறைகள்
2027 ஆம் ஆண்டில் இந்த புதிய வரியை அமுல்படுத்துவதற்கு சொத்து வரி விதிப்பு முறைகள் குறித்து ஒருங்கிணைந்த கலந்துரையாடல்கள் அவசியம் என சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவிக்கிறது.
இதற்கிடையில், டிஜிட்டல் சேவைகளுக்கு ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல் 18% பெறுமதி சேர் வரி (VAT) விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் அறிக்கைகள்
உண்மையற்றவை என தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
அந்த வரி விதிப்பு 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட ஒரு யோசனையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதம் முதல் திகதி முதல் அமுலுக்கு வரவிருந்த அந்த வரி விதிப்பு ஒக்டோபர் மாதம் முதல் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் அனில் ஜயந்த குறிப்பிட்டார்.
கோடீஸ்வர தொழிலதிபர் கொலை
கோடீஸ்வர தொழிலதிபர் கொலை
கோடீஸ்வர தொழிலதிபர் கொலை ,கட்டுனேரியில் ஒரு கோடீஸ்வர தொழிலதிபரை கொலை செய்து, சிரிகம்பள பகுதியில் உள்ள கார் கழுவும் இடத்தில் உள்ள கழிவுநீர் தாங்கிக்குள் அவரது உடலை வீசிய குற்றச்சாட்டில்
இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட 19 வயதான சகோதரர், வாகன பழுதுபார்க்கும் நபராவார். அதே நேரத்தில் அவரது 15 வயது தம்பி மாரவிலாவில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையில் படித்து வருகிறார்.
கோடீஸ்வர தொழிலதிபரின் கொலையில் முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் 20 வயது இளைஞரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்
அடிப்படையில் பாடசாலை மாணவனும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புத்தளம் – மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய வர்த்தகர் ஒருவர் ஜூன் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக வென்னப்புவை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காணாமல்போன வர்த்தகரின் கார் வென்னப்புவை பிரதேசத்தில் உள்ள
அவரது 20 வயதுடைய நண்பனின் வீட்டிலிருந்து கடந்த வியாழக்கிழமை (03) கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்த கைதுசெய்யப்பட்ட வர்த்தகரின் நண்பனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி இரவு
வர்த்தகரும் அவரது 5 நண்பர்களும் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த போது வர்த்தகருக்கும் நண்பர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் வர்த்தகர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர் நண்பர்கள் அனைவரும் இணைந்து வர்த்தகரின் சடலத்தை வென்னப்புவை, சிறிகம்பொல பிரதேசத்தில் உள்ள வாகனங்களை
பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றின் கழிவு நீர் குழிக்குள் வீசியதாக வர்த்தகரின் நண்பன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மாணவனை தாக்கிய மாணவன்
மாணவனை தாக்கிய மாணவன்
மாணவனை தாக்கிய மாணவன் பத்தரமுல்லையில் உள்ள ஒரு பிரபலமான தேசிய பாடசாலையின் 11 ஆம் தர மாணவன் ஒருவன் அதே பாடசாலையில்
உள்ள மற்றொரு மாணவனால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 3 ஆம் திகதி மதியம் 12.05 மணியளவில் மூன்று மாணவர்களுடன் வந்த 11 ஆம் தர மாணவன் இந்த தாக்குதலை மேற்கொண்டதோடு, தாக்குதலுக்கு இலக்கான மாணவரின் காது சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இந்த தாக்குதலின் விளைவாக காதில் காயம் ஏற்பட்ட மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க பாடசாலை நிர்வாகம்
எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையை தொடர்புகொண்டு வினவிய போது, குறித்த மாணவன் இன்று (07) செவிப்புலன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் பெற்றோர் இது தொடர்பாக தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர். பாடசாலை நேரத்தில்
மாணவன் மீது இவ்வளவு கடுமையான தாக்குதல் நடந்துள்ள பின்னணியில், பாடசாலை நிர்வாகம் மாணவனை சிகிச்சைக்கு அனுப்பாமல் கடமை தவறி செயற்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன் ஒரு திறமையான இசைக்கலைஞர் என்றும், அவரது காதில் ஏற்பட்ட காயம் அவரது எதிர்காலத்தை கடுமையாக
பாதிக்கும் என்றும் கூறிய மாணவனின் தாயார், சட்டத்தின் மூலம் நீதி கோருவதாகவும் கூறினார்.
“எங்களுக்கு இழப்பீடு தேவையில்லை. என் மகனுக்கு நடந்தது இன்னொரு பிள்ளைக்கு நடக்கக்கூடாது என்பதற்காக நான் சட்ட நடவடிக்கை எடுக்க விரும்புகிறேன். ஏனென்றால், இவ்வாறான சந்தர்ப்பத்தில் என் மகன் மீது
கத்தியால் குத்தி இருந்தால் என்ன நடந்திருக்கும்? அதனால்தான் நான் சட்டத்தின்படி செயல்பட விரும்புகிறேன். எனக்கு பணம் முக்கியமில்லை. நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.”
இருப்பினும், இது குறித்து நாங்கள் விசாரித்தபோது, சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபர், தாக்குதல் குறித்து மறுநாள் காலையில் தனக்குத்
தெரிவிக்கப்பட்டதாகவும், பாடசாலை நிர்வாகம் இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நால்வர்மீட்பு
கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நால்வர்மீட்பு
கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நால்வர்மீட்பு ,எத்துகால கடலில் நீராடச்சென்ற நான்கு பேர் கடல் அலையில் சிக்கி, கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவம் நேற்று (6) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ்
சம்பவத்தின் போது அவ்விடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகளான பொலிஸ் கண்காணிப்பாளர் அனுராத,
பொலிஸ் கான்ஸ்டபிள் லக்ஷான்
பொலிஸ் கான்ஸ்டபிள் லக்ஷான் (99177) மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் விஜேசிங்க (105320) ஆகியோர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டவர்களை காப்பாற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 20, 21, 22 மற்றும் 34 வயதுடைய வெயங்கொட, புடலுஓயா மற்றும் நமுனுகுல பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.
துமிந்த திசாநாயக்கவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்
துமிந்த திசாநாயக்கவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்
துமிந்த திசாநாயக்கவுக்கு தொடர்ந்து விளக்கமறியல் ,முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூலை 15ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (7) அவர் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பெண்ணொருவரின் பயணப் பையில்
கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க
முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மே மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி மே மாதம் 20ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது,
மேலும் இது தொடர்பாக இரண்டு பெண்களும் ஆணொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
விசாரணைகளின் போது வௌியான தகவல்
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது வௌியான தகவல்களுக்கு அமைய, முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டார்.
தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்
தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்
தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம் ,தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இன்று (07) முதல் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, ஆணைக்குழுவின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, வாக்காளர் பதிவு தகவல்களைச் சரிபார்த்தல், இணையவழி பதிவு, வாக்காளர் அறிக்கைகளைப் பெறுதல் மற்றும் ஏனைய மாவட்டங்களுடனான
அனைத்து இணைவழி சேவைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விசேட சோதனை 120பேர் கைது
விசேட சோதனை 120பேர் கைது
விசேட சோதனை 120பேர் கைது ,சப்ரகமுவ மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 120 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேகாலை மற்றும் இரத்தினபுரி பொலிஸ்
எம்பிலிப்பிட்டிய, சீதாவகபுர, கேகாலை மற்றும் இரத்தினபுரி பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கி இந்த விசேட சோதனை நடவடிக்கை நேற்று (6) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 7 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 19 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த விசேட சோதனை நடவடிக்கையில் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் உட்பட 900இற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.
டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்
டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்
டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல் ,முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு பாதாள உலகக் கும்பல் தலைவர் ஒருவரிடமிருந்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு
இது தொடர்பில் அவர் பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 5 ஆம் திகதி டுபாயில் வசிக்கும் ஒரு பாதாள உலகக் கும்பல் தலைவரிடமிருந்து முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.
அதில் அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது.
டிரான் அலஸ் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது, நாட்டை விட்டு தப்பிச் சென்ற பாதாள உலகத் தலைவர்கள் மற்றும் அவர்களுடன்
தொடர்புடைய நபர்களை மீண்டும் அழைத்து வர உத்தரவுகளைப் பிறப்பித்ததாகக் கூறி, இந்தக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக ‘அத தெரண’ பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் வினவியது.
பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்
முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இது தொடர்பில் தன்னிடம் முறைப்பாடு அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.
அதன்படி, அனைத்து பிரிவுகளுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
இனிய பாரதி கைது
இனியபாரதி கைது
இனிய பாரதி கைது ,கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான இனிய பாரதி என அழைக்கப்படும் கே. புஷ்ப குமார் எனும் கைது செய்யப்பட்டுள்ளர்.
குற்றப் புலனாய்வு பிரிவினரின் மற்றொரு
குற்றப் புலனாய்வு பிரிவினரின் மற்றொரு அணியினர் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு இனிய பாரதியை ஞாயிற்றுக்கிழமை (06) அதிகாலை கைது செய்துள்ளனர்.
குறித்த கைது தொடர்பாக அம்பாறை மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தனது முகப்புத்தகத்தில் உறுதிப்படுத்தி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த தகவலுக்கமைய கோவில் பிரதேசத்தில் உள்ள முனியக்காடு பகுதியில் வைத்து வீட்டுக்குள் மறைந்திருந்த வேளை இனிய பாரதி புலனாய்வு
சுற்றி வளைக்கப்பட்டு கைது
பிரிவினால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கைதானது இனிய பாரதியின் மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் இளைஞர், யுவதிகளை கடத்தி காணாமல் ஆக்கியமை உள்ளிட்ட
பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளடங்கலாக முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு படுகொலை தொடர்பில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒருவர் பலி ரயில் மோதி
ஒருவர் பலி ரயில் மோதி
ஒருவர் பலி ரயில் மோதி ,கொச்சிக்கடையில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் ரயில் மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
கொச்சிக்கடையில் லுர்டு மாவத்தைக்கு செல்லும் துணை சாலையில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக போலீசார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், அதே நேரத்தில் பின்னால் இருந்தவர் பலத்த காயமடைந்து நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இறந்தவர் நீர்கொழும்பு, பெரியமுல்ல பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர்.
சம்பவம் குறித்து கொச்சிக்கடை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கைக்கான ஆஸ்திரேலியா தூதர் நியமனம்
இலங்கைக்கான ஆஸ்திரேலியா தூதர் நியமனம்
இலங்கைக்கான ஆஸ்திரேலியா தூதர் நியமனம்,இலங்கைக்கான ஆஸ்திரேலியாவின் அடுத்த உயர் ஸ்தானிகராக மேத்யூ டக்வொர்த் நியமிக்கப்பட்டுள்ளார்
இலங்கைக்கான ஆஸ்திரேலியாவின் அடுத்த உயர் ஸ்தானிகராக மேத்யூ டக்வொர்த் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
டக்வொர்த் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையில் மூத்த தொழில் அதிகாரி ஆவார், மேலும் சமீபத்தில் அமெரிக்க வர்த்தக பணிக்குழுவின் உதவிச்
செயலாளராகவும், ஆஸ்திரேலியா-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் துணைத் தலைமை பேச்சுவார்த்தையாளராகவும் இருந்தார்.
அவர் முன்னர் இந்தோனேசியா மற்றும் கம்போடியாவில் வெளிநாடுகளில் பணியாற்றியுள்ளார்.
இந்த அறிவிப்பை வெளியிட்ட வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், வடகிழக்கு இந்தியப் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவின் முக்கிய பங்காளியாக இலங்கை இருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வலுவான
சமூக இணைப்புகள், நீண்டகால வளர்ச்சி கூட்டாண்மை, வளர்ந்து வரும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள் மற்றும் அமைதியான, நிலையான
மற்றும் வளமான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறினார்.
“நாடுகடந்த குற்றம், பிராந்திய கடல்சார் பாதுகாப்பு மற்றும் மக்கள் கடத்தல் உள்ளிட்ட பகிரப்பட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்களுக்கு
நடைமுறை தீர்வுகளைக் கண்டறிய ஆஸ்திரேலியாவும் இலங்கையும் நெருக்கமாக இணைந்து செயல்படுகின்றன” என்று அவர் மேலும் கூறினார்.
“எங்கள் நாடுகள் வலுவான மக்களுக்கு இடையேயான உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன, மேலும் 160,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட
ஆஸ்திரேலியாவின் இலங்கை சமூகம் ஆஸ்திரேலியாவின் பன்முக கலாச்சார சமூகத்திற்கு ஒரு முக்கியமான மற்றும் மதிப்புமிக்க பங்களிப்பைச் செய்கிறது” என்று அமைச்சர் பென்னி வோங் மேலும் கூறினார்.
2022 முதல் இலங்கையில் ஆஸ்திரேலியாவின் நலன்களை முன்னேற்றுவதற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக பதவி விலகும் உயர் ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸ் அவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
நான்கு பேர் கைது விமானதளத்தில்
நான்கு பேர் கைது விமானதளத்தில்
நான்கு பேர் கைது விமானதளத்தில் ,15 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மதுபானம் மற்றும் ஏலக்காயை கடத்த முயன்றபோது நான்கு பேர் BIA-வில் கைது செய்யப்பட்டனர்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்
இன்று (06) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுமார் 15 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மதுபானம் மற்றும் ஏலக்காயை
நாட்டிற்கு கடத்த முயன்றபோது மொத்தம் நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர்.
கொழும்பு மற்றும் ஹட்டனைச் சேர்ந்த நபர்கள், சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவின் பெங்களூரிலிருந்து வந்த விமானத்தில்
அவர்கள் இந்தியாவின் பெங்களூரிலிருந்து வந்த விமானத்தில் அதிகாலை 1:00 மணியளவில் BIA-வை வந்தடைந்தனர்.
சுங்க அதிகாரிகள் அவர்கள் எடுத்துச் சென்ற 20 சாமான்களுக்குள் 378 மதுபான பாட்டில்கள் மற்றும் 132 கிலோகிராம் ஏலக்காயை கண்டுபிடித்தனர்.
கட்டுநாயக்க சுங்க அதிகாரிகள் அந்த நபர்களை தடுத்து நிறுத்தி, சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இராணுவம் யானைக்கு சிகிச்சையளித்த து
இராணுவம் யானைக்கு சிகிச்சையளித்த து
இராணுவம் யானைக்கு சிகிச்சையளித்த து ,காயமடைந்த ‘பாதியா’ யானைக்கு சிகிச்சையளிக்க இராணுவம் உதவுகிறது.
இலங்கை இராணுவம்
இலங்கை இராணுவம் காயமடைந்த காட்டு யானை ‘பாதியா’ வை சிகிச்சைக்கு உதவியுள்ளது, சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டு
காயங்களிலிருந்து மீண்டு வந்த நிலையில், நிகவெரட்டியவில் உள்ள மணிகம பகுதியில் சுற்றித் திரிந்தது.
காட்டு யானை சமீபத்தில் ஒரு நீர் குழியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
வனவிலங்கு அதிகாரிகளால் சிகிச்சை
பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுகளின்படி, 15 வது இலங்கை பீரங்கிப்படை மற்றும் 9 வது இலங்கை தேசிய காவல்படையின் துருப்புக்கள் வனவிலங்கு
அதிகாரிகளால் சிகிச்சை தொடங்கும் வரை அந்தப் பகுதியைப் பாதுகாக்க நிறுத்தப்பட்டன.
இராணுவப் படையினர் தற்போது சம்பவ இடத்தில் உள்ள வனவிலங்கு அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதுடன் இராணுவத்தினருக்கு வாழ்த்துக்கும் குவிந்து வருகிறது .சிங்கள மக்கள் சமூக ஊடகங்களில் இதனை காணமுடிகிறது .
அதிகரிக்கும் விபத்து திணறும் மருத்துவமனை
அதிகரிக்கும் விபத்து திணறும் மருத்துவமனை
அதிகரிக்கும் விபத்து திணறும் மருத்துவமனை ,சுகாதார அமைச்சகம் தேசிய காயம் தடுப்பு வாரத்தை அறிவித்துள்ளது
தேசிய காயம் தடுப்பு வாரத்தை அறிவிக்க சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, தேசிய காயம் தடுப்பு வாரம் நாளை (ஜூலை 7) முதல் ஜூலை 11 வரை செயல்படுத்தப்படும்.
ஒவ்வொரு நாளுக்கும் கவனம் பின்வருமாறு என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது:
சாலை போக்குவரத்து விபத்துகளைத் தடுத்தல்
ஜூலை 7 – சாலை போக்குவரத்து விபத்துகளைத் தடுத்தல்
ஜூலை 8 – பணியிடங்களில் காயங்களைத் தடுத்தல்
ஜூலை 9 – வீடுகள் மற்றும் முதியோர் பராமரிப்பு மையங்களில் காயங்களைத் தடுத்தல்
ஜூலை 10 – நீரில் மூழ்குவது தொடர்பான விபத்துகளைத் தடுத்தல்
ஜூலை 11 – பள்ளிகள், பாலர் பள்ளிகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு மையங்களில் காயங்களைத் தடுத்தல்
இந்த வாரத்தில், அதிகாரிகள் காயம் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள், பல்வேறு அதிக ஆபத்துள்ள பகுதிகளை ஆய்வு செய்வார்கள் மற்றும் எதிர்காலத்தில் காயங்களின் அபாயத்தைக்
குறைக்க குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை செயல்படுத்துவார்கள் என்று சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டது.
இலங்கையில், மொத்த மக்கள் தொகையில் 7 பேரில் ஒருவர் ஆண்டுதோறும் மருத்துவ கவனிப்பு தேவைப்படும் காயத்தை அனுபவிப்பதாக சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டது.
தரவுகளின்படி, ஒரு நிமிடத்திற்கு குறைந்தது 6 முதல் 8 இலங்கையர்கள் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் காயத்திற்கு ஆளாகின்றனர்.
அன்றாட வாழ்வில் ஏற்படும் விபத்துகள்
அன்றாட வாழ்வில் ஏற்படும் விபத்துகள் காரணமாக ஒவ்வொரு இலங்கையருக்கும் ஆண்டுதோறும் குறைந்தது ஒரு காயமாவது ஏற்பட வாய்ப்புள்ளது என்று அமைச்சகம் மேலும் வலியுறுத்தியது.
திடீர் காயங்களால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலோர் 15-44 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், இந்த வயது வரம்பிற்குள் மரணத்திற்கு
காயங்கள் ஒரு முக்கிய காரணமாகும் என்றும் சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டியது.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படும் காயங்களால் இலங்கையில் ஆண்டுதோறும் 2,500 முதல் 3,000 பேர் இறக்கின்றனர் என்றும் அது வெளிப்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் இறப்புகளுக்கு 10வது முக்கிய காரணமாக காயங்கள் உள்ளன.
கூடுதலாக, இலங்கையில் ஆண்டுதோறும் நிகழும் 145,000 மொத்த இறப்புகளில், 10,000 முதல் 12,000 வரையிலான இறப்புகள் திடீர் காயங்களால்
ஏற்படுகின்றன. இது மாதத்திற்கு சராசரியாக சுமார் 1,000 இறப்புகள் அல்லது ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும் குறைந்தது 4 இறப்புகள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனை பராமரிப்பை அடைவதற்கு முன்பே 7,500 முதல் 8,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் நிகழ்கின்றன என்பது மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பராமரிக்கப்படும் தேசிய காயம் கண்காணிப்பு அமைப்பின் படி
, உள்நோயாளி சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் பெரும்பாலான மக்கள் வீழ்ச்சி தொடர்பான காயங்களுக்கு சிகிச்சை பெறுகிறார்கள்.
அமைச்சகம் சுட்டிக்காட்டியது:
15% சாலை விபத்துகள் காரணமாகவும் 15% விலங்கு தாக்குதல்கள் காரணமாகவும் 14% விழும் பொருட்களால் 11% தாக்குதல்கள்
(வேண்டுமென்றே அல்லது தற்செயலாக) 8% வெட்டுக்கள், சிராய்ப்புகள் மற்றும் இது போன்ற காரணங்களால்
வேண்டுமென்றே ஏற்படும் காயங்களும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன, ஆண்டுதோறும் 3,000 க்கும் மேற்பட்டோர் தற்கொலை காரணமாக இறக்கின்றனர்.
ஆயிரக்கணக்கான உயிர்கள் இதன் காரணமாகவும் இழக்கப்படுகின்றன:
வீழ்ச்சிகள்
நீரில் மூழ்குதல்
பல்வேறு பொருட்களால் விஷம்
விலங்கு கடித்தல் மற்றும் தாக்குதல்கள்
வன்முறை மற்றும் கொலைகள்
அதன்படி, முக்கியமான பொது சுகாதாரப் பிரச்சினையைத் தீர்க்க பயனுள்ள காயம் தடுப்பு நடவடிக்கைகளுக்கான அவசரத் தேவையை சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.




































