Author: நலன் விரும்பி
சொந்த மக்களை ஏற்றி வர இந்தியா பறந்த 12 பிரிட்டன் விமானங்கள்
சொந்த மக்களை ஏற்றி வர இந்தியா பறந்த 12 பிரிட்டன் விமானங்கள்
இந்தியாவில் கொரனோ வைரஸ் காரணமாக விமான பயணங்கள் இரத்து
செய்ய பட்டன ,இதனால் உல்லாச பயணம் சென்ற பல நூறு மக்கள் சிக்கி கொண்டனர் .
இதனை அடுத்து பிரிட்டனில் இருந்து பன்னிரெண்டு சிறப்பு விமானங்கள் அனுப்பி வைக்க பட்டுள்ளன
இவை இந்தியாவின் New Delhi, Mumbai, Goa, Chennai, Hyderabad, Kochi,
ஆகிய பகுதி விமான நிலையங்கள் மூலம் அழைத்து வர படுகின்றனர்
அங்கு தவிக்கும் அத்தனை பயணிகளையும் நாம் அழைத்து
வருவோம் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

பிரிட்டனில் 917 பேர் பலி -1,559 பேர் ஆபத்தான நிலையில்
பிரிட்டனில் 917 பேர் பலி -1,559 பேர் ஆபத்தான நிலையில்
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற
கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 917 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இந்த
நோயால் ஆபத்தான நிலையில் 1,559 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
.இதுவரை இடம்பெற்ற இறப்பு விகிதம் 9,875 ஐ எட்டியுள்ளது
அது தவிர 78,991 தொடர் சிகிச்சைக்கு உள்ளாகி வருகின்றனர் .தொடர்ந்து
மரணத்தின் கோர தாண்டவம் அதிகரித்து செல்வதற் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது

மரக்கறியை வாங்கி விற்கும் அரசு – கோட்டா அதிரடி நடவடிக்கை
மரக்கறியை வாங்கி விற்கும் அரசு – கோட்டா அதிரடி நடவடிக்கை
இலங்கையில் கோட்டபாய ஆட்சியில் அமர்ந்ததன் பின்னர் நாட்டை முன்னோக்கி நகர்த்தும் நகர்வில் தீவிரம் காட்டி வருகின்றார் ,
அவ்வகையில் விசய உற்பத்தியாளர்களிடம் அவர்கள் விளைவிக்கும்
மரக்கறி மற்றும் விவசாய பொருட்களை அரசே நேரடியாக கொள்வனவு செய்கிறது .
அதன் பின்னர் அவர்களே அதனை விற்பனை செய்கின்றனர் ,கட்டு பாட்டு விலையுடன்
விவசாயிகள் நஷ்டம் ஏற்படாது பாதுகாக்கும் முன் மாதிரி நடவடிக்கையில் ஒன்றாக இது பார்க்க படுகிறது

இராணுவம் மருத்துவர்களை கௌரவிக்க ஒளியேற்ற படும் தாமரை கோபுரம்
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை,
பாதுகாப்புப்படையினர் உள்ளிட்ட அனைவரையும் கௌரவிக்கும் வகையில்
இன்று (11) மாலை 6.45 மணியளவில் தாமரைக் கோபுரம் ஒளிர்விக்கப்படுவதாக
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க தனது ட்விற்றர் குறிப்பிட்டுள்ளார.
இதன்போது தாமரைக் கோபுரம் சிவப்பு நிறத்தில் ஒளிர்விக்கப்படும்
என சீனத் தூதரகம் தனது ட்விற்றர் கணக்கில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
தெற்காசியாவின் மிக பெரும் கோபுரம் இது என்பது குறிப்பிட தக்கது

இலங்கையில் 198பேர் கொரனோவால் பாதிப்பு – புதிதாக 7 பேர் அடையாளம் கண்டு பிடிப்பு
இலங்கையில் 198 பேர் கொரனோவால் பாதிப்பு – புதிதாக 7 பேர் அடையாளம் கண்டு பிடிப்பு
இலங்கையில் இதுவரை பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்
சிக்கி 197 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் இன்று புதிதாக ஏழுபேர் அடையாளம் காண பட்டுள்ளனர் .
இதுவரை இந்த நோயின் தாக்குதலில் இருந்து ஏழுபேர் பலியாகியுள்ளனர்
அது தவிர யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 302 பேருக்கு சோதனைகள்
இடம்பெற்றுள்ளன எனினும் எவரும் பாதிக்க படவில்லை என மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்
மேலும் இந்த நோயால் பாதிக்க பட்ட 54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

இத்தாலி மே மாதம் வரை முற்றாத அடித்து பூட்டு – அரசு அறிவிப்பு
இத்தாலி மே மாதம் வரை முற்றாத அடித்து பூட்டு – அரசு அறிவிப்பு
இத்தாலியில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி
மக்கள் பலி எண்ணிக்கை அதிகரித்த்து வருகிறது ,இந்த நிலையில் மக்களை அந்த
நோயில் இருந்து காப்பாற்றும் நோக்குடன் எதிர்வரும் வைகாசி மாதம் வரை
லக் டவுன் முழுமையாக அடித்து பூட்டும் நகர்வு தொடரும் என அந்த நாட்டு அரச அதிபர் அவசர அறிவிப்பை மேற்கொண்டுள்ளார்
நாள்தோறும் பலநூறு மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் ,நோயினை கட்டு படுத்த முடியாது அரசு தினறி வருகிறது
மருத்துவர்கள் தாதியர் உள்ளிட்ட 140 பேர் இதுவரை பலியாகியுள்ளனர் என்பது இங்கே சுட்டி காட்ட தக்கது

அமெரிக்காவில் ஒரே நாளில் 2,108 பேர் பலி -501,000 பேர் பாதிப்பு
அமெரிக்காவில் ஒரே நாளில் 2,108 பேர் பலி -501,000 பேர் பாதிப்பு
அமெரிக்காவில் அதி வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்
சிக்கி ஒரே நாளில் 2,108 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இந்த நோயின்
தாக்குதலில் சிக்கி இதுவரை 18,77 7 பேர் பலியாகியுள்ளனர்
தொடர்ந்து 501,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் .ஆபத்தான நிலையில்
பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் உள்ளனர் .ஒரே நாளில் ஐந்தாயிரத்துக்கு
மேற்பட்ட மக்க பலியாக கூடும் என எதிர் பார்க்க படுகிறது
அமெரிக்கா
மக்கள் வரும் நாட்களில் வலிகளை சுமக்க வேண்டி வரும் என் டிரம்ப் அறிவித்திருந்ததது குறிப்பிட தக்கது

தீயில் எரிந்து பலியான தந்தை மகள் – கண்ணீரில் குடும்பம்
தீயில் எரிந்து பலியான தந்தை மகள் – கண்ணீரில் குடும்பம்
இலங்கை பலாங்கொடை பகுதியில் உள்ள கடை ஒன்றில் பணிபுரிந்து
வந்த தந்தையும் மகளும் அங்கு இடம்பெற்ற திடீர் தீவிபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர் .
ஒருவரை ஒருவர் காப்பற்ற முனைந்த பொழுது இருவரும் தீயின்
வேட்டையில் சிக்கி பரிதாபகரமாக பலியாகினர் .
இந்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகளை காவல்
துறையினர் முன்னெடுத்து வருகின்றனர் .
ஒரே குடும்பத்தில்
இருவர் பலியான சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது

வீதியில் செல்பவர்கள் அனைவரும் முக கவசம் அணியவும் – பொலிஸ் எச்சரிக்கை
வீதியில் செல்பவர்கள் அனைவரும் முக கவசம் அணியவும் – பொலிஸ் எச்சரிக்கை
சிங்கையில் வீடுகளை விட்டு வெளியில் பயணிப்பவர்கள் ,வீதியில் செல்பவர்கள்
அனைவரும் முக கவசம் அணியும் படி இலங்கை காவல்துறையினர் அவசர வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
வேகமாக இந்த நோயானது பரவும் அபாயம் அதிகரித்து காணப்படுவதால்
இந்த முன் எச்சரிக்கையை அவர்கள் தொடராக விடுத்தது வருகின்றனர் ,
அவ்வாறு அணியாது செல்பவர்கள் கைது செய்ய பட்டு 21 நாட்கள் தனிமை படுத்தல் முகாம்களில் அடைக்க படுவார் என தெரிவிக்க பட்டுள்ளது

வெளிநாட்டு இலங்கை தொழிலாளர்களுக்கு உதவ அரசு நடவடிக்கை
வெளிநாட்டு இலங்கை தொழிலாளர்களுக்கு உதவ அரசு நடவடிக்கை
புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களுக்கு உதவுவதற்கான சாத்தியப்பாடுகளை அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆராய்ந்துள்ளார்.
இதுதொடர்பாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களுக்கு உதவுவதற்கான சாத்தியப்பாடுகளை அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆராய்ந்தார்
தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தினால் வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த இலங்கைத்
தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களைப் பற்றி கலந்துரையாடுவதற்காகவும், குறித்த இலங்கையர்களுக்கு
உதவுவதற்கான சாத்தியமான வழிமுறைகள் குறித்து ஆராய்வதற்காகவும், வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி,
வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன வெளிநாட்டு உறவுகள் அமைச்சு, திறன் அபிவிருத்தி,
வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியவற்றின்
செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளை இன்று (2020 ஏப்ரல் 10) வெளிநாட்டு உறவுகள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.
மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா, கிழக்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்கப் பிராந்தியங்களில் பெருமளவில் பணியாற்றும்
சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்கள் தொடர்பில் சுட்டிக்காட்டிய அமைச்சர்
குணவர்தன, இந்த இலங்கையர்களின் நலன்கள் குறித்து இரண்டு அமைச்சுக்களும் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தின் போது, வளைகுடாப் பிராந்தியத்தில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தேவைகள் குறித்து
சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்களுக்கு அவர் விஷேடமாக கவனம் செலுத்தினார். கொரோனா வைரஸ்
பரவுவதைத் தடுப்பதற்காக இந்தப் பிராந்தியத்திலுள்ள நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை
மோசமாகப் பாதித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் குணவர்தன, இந்தத்
தாக்கங்களுக்கான தீர்வுகளை ஆராயுமாறு சிரேஷ்ட அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
நடைமுறைத் தீர்வுகளை ஆராய்ந்து, இந்த சவால் மிகுந்த நேரத்தில் புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களுக்கு உதவும் முகமாக,
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கீழ் பதிவு செய்யப்படாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகள்,
அண்மையில் தொழிலை இழந்தவர்கள் மற்றும் பணம் அனுப்புவது தொடர்பான பிரச்சினைகள் ஆகியன இந்தக் கூட்டத்தின் போது
கலந்துரையாடப்பட்டன. உலகெங்கிலுமுள்ள புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்கு
உதவுவதற்காகவும், பாதுகாப்பதற்காகவும் இலங்கை அரசாங்கம் சாத்தியமான
அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என்றும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும்
தொழிலாளர் உறவுகள் அமைச்சின் செயலாளர் டி.எம். சரத் அபயகுணவர்தன மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் புலம்
பெயர்ந்த தொழிலாளர்களின் தற்போதைய நிலைமை குறித்த தமது கருத்துக்களையும், உட்பார்வைகளையும் பகிர்ந்து
கொண்டதோடு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக இரு அமைச்சுக்களும் நெருக்கமாக
செயற்படும் என்பதனை வலியுறுத்தினர்.வெளிநாட்டு உறவுகள் அமைச்சு

கொரோனா வைரஸ் பெயரில் இணையதள பண மோசடி
கொரோனா வைரஸ் பெயரில் இணையதள பண மோசடி
கொரோனா வைரஸ் பெயரில் இணையதள பண மோசடி மற்றும் இணைய தள
குற்றச் செயல்கள் நடப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இவை தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட
வேண்டும் என்று அந்த அமைப்பு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அரசு பணிகள் வங்கி பணிகள் வர்த்தக பணிகள்
மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் போன்றவை இணைய தளங்கள் ஊடாகவே இடம்பெறுகின்றன.
அதனால் இணைய தள பயன்பாடு அதிகரித்துள்ளது. இவற்றை இணைய தள மோசடி மற்றும் இணைதள குற்றச்செயல்களில்
ஈடுபடுவோர் பயன்படுத்தி நிதி மோசடி மற்றும் குற்றங்களை அதிக அளவில் மேற்கொள்வதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண மக்கள்இ ‘வாட்ஸ் ஆப்இ பேஸ்புக், டிக் டாக், ஹலோ சாட்’ போன்ற சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவதால்
அவர்களை குறிவைத்து செல்படுகின்றனர்.
ஒவ்வொருவரின் எண்ணுக்கும் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக
வலைதளங்கள் வழியே கொரோனா குறித்த தகவல் பதிவு உள்ளதாக இணைய தள லிங்குகளை அனுப்புகின்றனர்.
மக்கள் ஆர்வமாக பார்க்கும் தகவல்களை, அவற்றின் தலைப்பில் தருகின்றனர். இந்த லிங்கை பயனாளர்கள் திறந்தால் பயனாளரின்
ஈ- – மெயில் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவை, தானாகவே திருடப்படுகின்றன.
அவற்றை பயன்படுத்தி, வங்கி கணக்குகளை விபரங்களைப் பெற்று, அதில் உள்ள பணத்தை இவர்கள் திருடுகின்றனர்.
ஒவ்வொருவரின் ஈ- – மெயில் முகவரிக்கும் கூகுள் தேடலிலும், கொரோனா பெயரில், சில சைபர் வைரஸ்களை அனுப்பி
கணினிகளையும் முடக்குகின்றனர். இது குறித்து, எச்சரிக்கையாக இருக்குமாறு, உலக சுகாதார நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது.
அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு: ‘கொரோனா மற்றும் கோவிட்- – 19’ என்ற
பெயரில் வரும் one line இணைப்புகளை திறக்கும் முன் எச்சரிக்கையாக இருங்கள்.
இணையதளம்
இணைப்புக்குள் செல்ல வேண்டிய அவசியம் உள்ளதா என்பதை
யோசித்து கொள்ளவும்.உலக சுகாதார நிறுவனமானஇ டபிள்யூ.ஹெச்.ஓ., என்ற பெயரில் யாராவது அழைத்தால், அதை
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆய்வு செய்து கொள்ளவும். எந்த பயனாளரின் பெயர் மற்றும் ரகசிய வார்த்தையையும் நாங்கள்
கேட்பதில்லை. நீங்கள் எங்களுக்கு, – ஈ மெயிலில் தகவல் கேட்காமல் எந்த லிங்கும் இணைப்பு பைலையும் நாங்கள் உங்களது, ஈ-
மெயிலுக்கு அனுப்புவதில்லை. நிவாரண நிதியை தனியாக கேட்பதில்லை. அவசரமாக எந்த தகவலையும் அனுப்புமாறு
கேட்பதில்லை. எனவே, Online பயன்பாட்டில் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கடல்பரப்பு பலத்த கண்காணிப்பு – நுழைவோரை கைது செய்ய நடவடிக்கை
இலங்கை கடல்பரப்பு பலத்த கண்காணிப்பு – நுழைவோரை கைது செய்ய நடவடிக்கை
இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து கொரோனா அச்சம் காரணமாக இலங்கைக்குள் அகதிகளாக அத்துமீறி நுளைய
முயற்சிப்பவர்களை தடுக்கும் வகையில் இலங்கையின் கடல் பிராந்தியங்கள் மற்றும் கடலோரப் பகுதியில் கண்காணிப்பு
நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இவ்வாறான நபர்கள் இலங்கை இலங்கைக்குள் நுழைவதை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும்
அவ்வாறானவர்கள் எவ்விதத்திலும் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்
எனவும் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
கடற் பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற் தொழிலாளர்களிடம் மேற்படி விடயம் தொடர்பாக மிகுந்த
அவதானத்துடன் செயற்படுமாறும் அவ்வாறானவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைவதை அவதானித்தால் உடனடியாக
இலங்கை கடற்படைக்கோ அல்லது ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ உடனடியாக தகவல்களை
தெரியப்படுத்துமாறும் கடற்படைத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கமைவாக வடக்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு மற்றும் வடமேற்கு கடல் பிராந்தியங்களில் இலங்கை விமானப்படையுடன்
இணைந்து விசேட கூட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறான நகர்வுகளை தடுக்க இலங்கை கடற்படையானது, இந்திய
அதிகாரிகளிடமும் உதவிகளை கோரியுள்ளதாக கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாட்டுக்குள் நுழைய முயற்சிக்கும் இத்தகையவர்கள் அவர்களது
சொந்த நாட்டுக்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உணவின்றி தவிக்கும் ஐந்தாயிரம் பேருக்கு ஒரு மாதம் சாப்பாடு வழங்கும் சச்சின் தெண்டுல்கர்
உணவின்றி தவிக்கும் ஐந்தாயிரம் பேருக்கு ஒரு மாதம் சாப்பாடு வழங்கும் சச்சின் தெண்டுல்கர்
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ள நிலையில், ஆயிரம் பேருக்கு சாப்பாடு வழங்க உதவி செய்துள்ளார் சச்சின் தெண்டுல்கர்.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் ஐந்தாயிரம் பேருக்கு ஒரு மாதம் சாப்பாடு வழங்கும் சச்சின் தெண்டுல்கர்
சச்சின் தெண்டுல்கர்
ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். 21 நாள் ஊரடங்கு என்பதால் தினக்கூலி
வேலை செய்யும் நபர்கள் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் உள்ளனர். மேலும் வீடு
இல்லாமல் தெருக்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் உள்ளனர்.
இவர்களுக்கு லாபம் நோக்கமின்றி செயல்படும் தொண்டு நிறுவனங்கள் உணவுகள் வழங்கி அவர்களை காப்பாற்றி வருகின்றனர்.
இந்த உதவியை செய்து வரும் ஒரு தொண்டு நிறுவனம் மூலம் சச்சின் தெண்டுல்கர் ஒரு மாதம் 5000 ஆயிரம் பேருக்கு உணவு
வழங்கி வருகிறார். இதை அந்த நிறுவனம் டுவிட்டர் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.
‘‘லாக்டவுன் காலத்தில் மக்களுக்கு உணவு வழங்குவதற்கான உதவி செய்த சச்சின் தெண்டுல்கருக்கு நன்றி.
ஒரு மாதத்திற்கு ஐந்தாயிரம் பேருக்கு உணவு வழங்கும் பொறுப்பை அவர் எடுத்துள்ளார்.
மேலும் ஏராளமான நபர்கள் இதுபோன்று உங்களுடைய ஆதரவை மக்களுக்கு
கொடுக்க வேண்டும்’’ என அப்னாலயா என்ற அமைப்பு தங்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு தப்பிய 49 நாடுகள் எவை தெரியுமா?
கொரோனாவுக்கு தப்பிய 49 நாடுகள் எவை தெரியுமா?
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசில் இருந்து சில நாடுகள் தப்பித்துள்ளன.
அந்த நாடுகளில் வைரசுக்கு இதுவரை எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.
உலகம் முழுவதும் 16 லட்சத்து 80 ஆயிரத்து 527 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 12
லட்சத்து 5 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 49 ஆயிரத்து 814 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 3 லட்சத்து 73 ஆயிரத்து 587 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து ஆயிரத்து 762 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து சில நாடுகள் தப்பியுள்ளன.
பெரும்பாலும் தனித்தனி தீவுகளாக உள்ள அந்த நாடுகளில் வைரஸ் பரவி இருந்தாலும் இதுவரை எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.
கோப்பு படம்
கொரோனா பரவி இருந்தாலும் உயிரிழப்புகளை சந்திக்காத நாடுகள்/தீவுகள் மற்றும் பகுதிகள் வருமாறு:-
1) ரியூனியன்
2) வியட்நாம்
3) கயானா
4) ஃபரியோ தீவுகள்
5) கிப்ரல்டர்
6) கம்போடியா
7) ரவண்டா
8) மடகாஸ்கர்
9) அருபா
10) பிரெஞ்சு கயானா
11) உகாண்டா
12) பிரெஞ்சு பாலினிசியா
13) மெக்கோ
14) கயானா பிசயூ
15) எரிட்ரியா
16) மோசாம்பிக்யூ
17) மாலத்தீவுகள்
18) ஈக்வடொரியல் கயானா
19) நியு கல்டோனியா
20) டோமினிகா
21) பிஜி
22) லஓஸ்
23) மங்கோலியா
24) நமீபியா
25) செயிண்ட் லூசிகா
26) கிரினடா
27) செயின் வின்செண்ட் கிரேனெடினெச்
28) ஈஸ்வட்னி
29) சாட் குடியரசு
30) கிரீன்லாந்து
31) செயிண்ட் கிட்டிஸ் மற்றும் நிவிஸ்
32) செசில்ஸ்
33) நேபாளம்
34) மொன்செரட்
35) மத்திய ஆப்ரிக்க குடியரசு
36) சியாரா லியோன்
37) செயிண்ட் பெர்த்
38) பூட்டான்
39) பிலாக்லாந்து தீவுகள்
40) சா டோமி மற்றும் பிரின்சிபி
41) தெற்கு சூடான்
42) மேற்கு சஹாரா
43) அகுயிலா
44) பிரிட்டிஷ் வெரின் தீவுகள்
45) புருன்டி
46) கரீபியன் நெதர்லாந்துஸ்
47) பப்புவா நியூகினினா
48) டைமூர் டெஸ்டி
49) செயிண்ட் பெர்ரி மியூலான்

பிரான்சில் 987 பேர் பலி -124,869 பேர் பாதிப்பு
பிரான்சில் 987 பேர் பலி -124,869 பேர் பாதிப்பு
பிரான்ஸ் நாட்டில் பரவி வரும் கொரனோ நோயின் தொற்றில் சிக்கி கடந்த இருபத்து நான்கு மணித்தியாலத்தில் 987 பேர்
பலியாகியுள்ளனர் ,மேலும் இந்த நோயில் சிக்கி இதுவரை 13,197 பேர் பலியாகியுள்ளனர்
தொடர்ந்து 124,869 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,இன்று மேலும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இறந்தவர்கள்
எண்ணிக்கை அதிகரித்துள்ளது .மக்கள் மத்தியில் தொடர்ந்து பீதி நிலவுகிறது ,
பிரான்சின் முப்படையினரும் பல்லாயிர கணக்கில் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

சிறப்பு விமானத்தில் இலங்கை வந்தடைந்த கொரனோ சோதனை கருவிகள்
சிறப்பு விமானத்தில் இலங்கை வந்தடைந்த கொரனோ சோதனை கருவிகள்
கொரனோ நோயினால் இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது ,
இவ்வேளை சீனாவில் இருந்து முன்னர் கொள்வனவு செய்ய பட்ட கருவிகளில் போலியானவை என கண்டு பிடிக்க பட்டது
அதனை அடுத்து தற்போது மீள 20,064 கொரனோ சோதனை கருவிகளை
அன்பளிப்பாக சிறப்பு விமானம் ஒன்றில் சீனா இலங்கைக்கு அனுப்பி வைத்த்துள்ளது
இவ்வாறு இந்த கருவிகள் வந்தடைந்த நிலையில் வேகமாக சோதனைகள் ஆரம்பிக்க படும் என இலங்கை சுகாதார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது
ஆண்டவரே நீர் தன் இம்முறையும் போலி இல்லாது காப்பற்ற வேண்டும் ,
அவ்வாறு போலியாக இருந்தாலும் இலங்கை சீனா மீது குற்றம் சுமத்த முடியாத நிலையில் ,இலங்கையின் வாயை கட்டி விட்டது .
சீனாவின் வியாபாரம் சிறப்பு .

பிரான்சு விமான தங்கி கப்பல், கடல் படையினர் 50 பேருக்கு கொரனோ
பிரான்சு விமான தங்கி கப்பல், கடல் படையினர் 50 பேருக்கு கொரனோ
பிரான்சு நாட்டின் மிக பெரும் மிதக்கும் விமான தங்கி கப்பலான Charles de Gaulle கப்பலில் பணியில் ஈடு பட்ட சுமார் ஐம்பது கடல்
படையினருக்கு கொரனோ நோயின் தொற்று உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவ்வாறு நோயின் தொற்றுக்கு உள்ளானவர்களில் விமானிகளும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது
கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக காவல்துறையினர் பத்தாயிரம்
பேருக்கு மேற் பட்டவர்கள் இந்த நோயினால் பாதிக்க பட்டிருந்த நிலையில் இந்த கப்பல் படையினர் பாதிக்க பட்டுள்ளனர்
சர்வதேச கடல் கண் காணிப்பில் ஈடுபட்ட இந்த கடல் படையினருக்கு
எவ்வாறு இந்த நோயானது தொற்றியது என்பதே இராணுவத்துக்கும் இப்பொது எழுந்துள்ள கேள்வியாகும்
பாதிக்க பட்டவர்கள் அனைவரும் தனிமை படுத்த பட்டு தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர் ,
பிரான்சில் இதுவரை ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் வரை கிட்ட தட்ட இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளதும்
,அதனால் உயிர் பலிகள் அதிகரித்து செல்வதும் குறிப்பிட தக்கது

கொரனோ தாக்குதல் பிரிட்டனில் 1,038 பேர் பலி
கொரனோ தாக்குதல் பிரிட்டனில் 1,038பேர் பலி
பிரிட்டனில் கடந்த இருபத்து நான்கு மணித்தியாலத்தில் வெளியான சுகாதார அமைச்சின் தகவலின்
படி கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி 1,038பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இதுவரை இடம்பெற்ற மொத்த பலி எண்ணிக்கை 9,016 ஆக அதிகரித்துள்ளது
அறுபத்தி ஐந்தாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .எதிர் வரும் நாட்களில் மேலும் இதன் உயிர் பலிகள் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது
ஆபத்தான நிலையில் சுமார் எட்டாயிரம் பேர் உள்ளனர் ,இவர்கள் அனைவரும் செயற்கை சுவாசம் பெற்ற வண்ணம் உள்ளனர்
,இவ்வாறு பெறுபவர்கள் அவர்களின் இறுதி நாட்கள் எண்ணப்படும் காலமாக மாற்றம் பெற்றுள்ளது ,
இவர்களது சுவாச காற்று வயர்கள் கழற்ற பட்டு விட்டால் அது மரணமாகவே அமையும் என்பது பாதிக்க பட்டவர்கள் கூறும் கருத்துக்களாக உள்ளன
45 நிமிடம் கியூவில் நின்று பொருட்கள் வாங்கிய முன்னாள் பிரிட்டன் பிரதமர் திரேசா மே
45 நிமிடம் கியூவில் நின்று பொருட்கள் வாங்கிய முன்னாள் பிரிட்டன் பிரதமர் திரேசா மே
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் திரேசா மே அவர்கள் Berkshire பகுதியில் உள்ள வெய்யிற் ரோஸ் கடையில் 45 நிமிடங்கள் நிரையில் நின்று பொருட்கள் வாங்கி சென்றுள்ளார்
கொரனோ வைரஸ் பரவலின் எதிரொலியால் மூன்றடி இடை வெளியில் காத்து நின்று பொருட்களை வாங்கி சென்றுள்ள காட்சிகள் வெளியாகின .
தற்போது இவரது இந்த செயல் பாடு நெட்டிசன்களினால் பாராட்ட பெறுவதுடன் அவர் மீதான நன் மதிப்பை அதிகம் ஏற்படுத்தியுள்ளது
இதே போல நமது இலங்கை இந்தியாவில் யாரும் கியூவில் நின்று பொருட்களை வாங்குவார்களா …?
யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது போல இராணுவம் முன்னே வரும் பின்னே சிரித்த படி ஜனாதிபதி வருவார் .
ஆடு மாடு அடித்து விரட்டியது போல மக்கள் விரட்ட படுவார்கள் ,இங்கே பாருங்கள்
,இது தாங்க ஜனநாயக நாடு
அமெரிக்கா சரக்கு விமானம் மீது எறிகணை தாக்குதல் – அதிர்ச்சியில் அமெரிக்கா click here
பிரான்சு விமான தங்கி கப்பல், கடல் படையினர் 50 பேருக்கு கொரனோ click here
கொரனோ தாக்குதல் பிரிட்டனில் 1,038பேர் பலி click here
அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல் – முகாம் பலத்த சேதம்- Read More Click Here

10 மில்லியன் நாய்களை ஆண்டு தோறும் கொன்று தின்ற சீனர்கள் – நாய்கள் உண்ண தடை
10 மில்லியன் நாய்களை ஆண்டு தோறும் கொன்று தின்ற சீனர்கள் – நாய்கள் உண்ண தடை
சீனாவில் ஆண்டு தோறும் பாத்து மில்லியன் நாய்களை கொன்று அந்த மக்கள் சுவையான உணவுகளாக சுவைத்து உண்டு
வந்துள்ளனர் ,அவ்வாறான நாய்களை வரும் காலங்களில் கொலை செய்வதற்கோ ,இறைச்சிக்கு வெட்ட பாடுவதற்கோ அரசு அனுமதி மறுத்துள்ளது .
நாய்களை கொன்று விற்பனை செய்யும் இறைச்சி கடைகளுக்கு வழங்க பட்ட அனுமதி பத்திரங்கள் அதிரடியாக இரத்து செய்ய
பட்டுள்ளன ,அத்துடன் ,புதிய சட்ட மூலம் மூலம் ,பன்றி,கோழி,நாய்,ஒட்டகம் என்பன செல்ல பிராணிகளாக வளர்க்க சட்டம் வருகிறது
இந்த விலங்குகளில் இருந்தே கொரனோ வைரஸ் தோற்றிய நிலையில் சீனா அரசு இந்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
,நாய்களை உலகில் விலங்குகளாக பார்க்காது அவற்றை செல்ல பிராணிகளாக பாவித்து வருகின்றனர் ,அதனை தாமும் இனி
பின்பற்ற போவதாக சீனா அறிவித்துள்ளது
சீனாவின்
இந்த முடிவால் ஆண்டு தோறும் பத்து மில்லியன் நாய்களின் உயிர் காப்பாற்ற படுகின்றன
ஆனால் நாயை திண்றவங்க வீட்டில் வளர்த்து உண்ண மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் ..?
அதற்கும் சீனா திட்டம் வைத்துள்ளதாம் .அபப்டி என்றால் சூப்பர் தான் ,








