Posted in இலங்கை செய்திகள்

வடக்கு வீதி இணைப்புத் திட்ட கடன் தொகைக்கான காலம் நீடிப்பு

வடக்கு வீதி இணைப்புத் திட்ட கடன் தொகைக்கான காலம் நீடிப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வடக்கு வீதி இணைப்புத் திட்ட நிர்மாணப் பணிகளுக்கான கடன் தொகை செல்லுபடியான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இக் கடன் தொகைக்கான காலம் 2020 ஜுன் மாதம் 30 ஆம் திகதியாக இருந்த நிலையில் 2020 டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை தீர்மனம் பின்வருமாறு:

  1. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவி வழங்கப்படும் வடக்கு வீதியுடன் தொடர்புபட்ட திட்டத்திற்கான கடன் தொகைக்கான கால எல்லையை நீடித்தல்

  2. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவி வழங்கப்படும் வடக்கு வீதி இணைப்புத் திட்டத்தின் கீழ் தேசிய
  3. பெருந்தெருக்கள் மற்றும் மாகாண வீதி புனரமைப்பு மற்றும் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் தெரிவு
  4. செய்யப்பட்ட பாலங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு
  5. வருகின்றன. இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 98 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுகின்றன. கடன் தொகையில் எஞ்சும் தொகைகளில் மதவாச்சி –
  6. ஹொரவப்பத்தான வீதியின் மேலதிக ஒப்பந்த பொதி 02, 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த
  7. நிர்மாணப் பணிகளுக்கான கடன் நிதி செல்லுபடியான காலம் 2020 ஜுன் மாதம் 30 ஆம் திகதியாகும். இதற்கு முன்னர்
  8. இதனை பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அவ்வாறு செய்ய முடியாமல் போனது. இதற்கமைவாக
  9. சம்பந்தப்பட்ட கடன் தொகைக்கான காலத்தை 2020 டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் நீடிப்பதற்காக வீதி மற்றும்
  10. பெருந்தெருக்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
      செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
      Posted in இலங்கை செய்திகள்

      வவுனியாவில் வீட்டிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு

      வவுனியாவில் வீட்டிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு

      வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கைக்கு அண்மித்த

      பகுதியிலிலுள்ள வீடோன்றிலிருந்து இன்று (02) காலை இளைஞரின்

      சடலமொன்றினை வவுனியா பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

      வீட்டின் இரவு நித்திரைக்கு சென்ற இளைஞனை காலை தயார் எழுப்பிய சமயத்தில் இளைஞன் உயிரிழந்த நிலையில்

      காணப்பட்டுள்ளார். இதனையடுத்து தயார் அயலவர்களுக்கு தகவலை

      வழங்கியதினையடுத்து அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

      சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் இளைஞரின் மரணம்

      தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

      27 வயதுடைய ராஜேந்திரன் விமலராஜ் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

          Posted in இலங்கை செய்திகள்

          2020.07.01 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு

          2020.07.01 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

          01. கொவிட் 19 தொற்றின் போது உடனடியாக பதிலளிப்பதன் ஆரம்ப ஒத்துழைப்பாக இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்த கடன், மானியங்கள் மற்றும் பொருட்கள் ரீதியிலான உதவி

          கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அமைவாக மேற்கொள்ளப்படவேண்டிய அடிப்படை நடவடிக்கைகளுக்காக பல நாடுகள் சர்வதேச அமைப்புக்களினால் இலங்கை அரசாங்கத்திற்கு கடன் மானியங்கள் மற்றும் பொருட்கள் உதவி என்ற ரீதியில் 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 12 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வழங்கப்பட்டிருந்த பங்களிப்புக்கள் தொடர்பாக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

          இதற்கமைவாக, உலக வங்கியினால் இலங்கையில் ஏற்பட்ட COVID 19 இன் உடனடித்தேவைக்காக பதிலளித்தல் மற்றும் சுகாதார கட்டமைப்பை ஏற்பாடு செய்யும் திட்டத்திற்காக 128.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் சமூக பாதுகாப்பு வலைப்பின்னல் திட்டத்தின் கீழ் 45 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

          Covid 19 அவசர தேவைக்கு பதிலளித்தல் மற்றும் சுகாதார கட்டமைப்பை ஏற்பாடு செய்யும் திட்டத்தின் கீழ் உடன்பட்டுள்ள தொகையில் 57.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் சமூக பாதுகாப்பு வலைப்பின்னல் திட்டத்தின் கீழ் உடன்பட்ட மொத்த நிதியான 45 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இதுவரையில் நாட்டிற்கு கிடைத்திருப்பது தொடர்பில் அமைச்சரவை கவனம் செலுத்தியது.

          இதற்கு மேலதிகமாக சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மானியங்கள் மற்றும் அண்ணளவாக சுமார் 8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்கள் மேலே குறிப்பிட்ட தினம் வரையில் இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்திருப்பதையும் அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டது.

          02. மத்திய கலாசார நிதியத்தின் ஊழியர்களுக்கான சம்பளத்தை செலுத்துவதற்கான மானியத்தைப் பெற்றுக்கொள்ளல்

          இதுவரையில் மத்திய கலாசார நிதியம் பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன், இதன் காரணமாக ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஏனைய செலவுகளை சமாளிப்பதற்கு முடியாதுள்ளது. இந்த நிலைமையின் கீழ் மாதாந்தம் 135 மில்லியன் ரூபா வீதம் திறைசேரியில் மானியத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த நிதியத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கை புத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் அமைச்சரவையின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிதியம் தற்பொழுது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு என்ற ரீதியில் திறைசேரி தலையீட்டின் அடிப்படையில் குறுகிய கால கடன் தொகையை தேசிய வங்கியொன்றின் மூலம் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை செய்வதற்கும், எதிர்காலத்தில் நாட்டிற்குள் சுற்றுலா நடவடிக்கைகளை வழமை நிலைமைக்கு கொண்டுவருவதற்கும், மத்திய கலாசார நிதியத்தின் வருமானத்தை அதிகரித்து அதன் மூலம் கடன் தொகையை செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

          03. சிறைச்சாலை திணைக்களத்திற்கு உணவுப் பொருட்களை கொள்வனவு செய்தல் 2019 / 2020

          2019 / 2020 வருடத்திற்காக சிறைச்சாலை திணைக்களத்திற்கு உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் 2020.07.31 ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்தபோதிலும், கொவிட் 19 தொற்று நிலைமையின் காரணமாக அதற்காக புதிய வழங்குநர்களை தெரிவுசெய்வதற்கான பெறுகை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முடியாமல் போனது. இதனால், தற்பொழுது நாடு எதிர்கொண்டுள்ள நிலைமை மற்றும் தற்போதைய சந்தை நிலைமையை கவனத்தில் கொண்டு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழு சிபாரிசு செய்துள்ள வகையில், 2020.08.01 தொடக்கம் 2021.01.31ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு சிறைச்சாலை திணைக்களத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் ஒப்பந்தம் தற்போதைய வழங்குநர்களிடம் ஒப்படைப்பதற்காக நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

          04. உரத்தைக் கொள்வனவு செய்தல் – 2020 (ஜுலை மாதத்திற்காக)

          2020 ஜுலை மாதத்தின் தேவைக்காக வரையறுக்கப்பட்ட இலங்கை உர நிறுவனம் (லக்போர) மற்றும் வரையறுக்கப்பட்ட கொமர்ஷல் உர நிறுவனம் (கொமர்ஷல் போர) போன்ற நிறுவனங்களிடம் உர பெறுகையை மேற்கொள்வதற்காக சர்வதேச போட்டி விலைகள் கோரப்பட்டுள்ளன. இந்த விலைகள் தொடர்பில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள சிபாரிசை கவனத்தில் கொண்டு கீழ் குறிப்பிடப்பட்ட வகையில் உரத்தை வழங்குபவர்களிடம் கொள்வனவு செய்வதற்காக மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

          • ஒரு மெற்றிக் தொன் 260 அமெரிக்க டொலர்கள் என்ற அடிப்படையில் 9இ000 10, 5% மெற்றிக் தொன் யூரியாவை (கிரனியுலர்) கொள்வனவு செய்வதற்கான பெறுகையை Agri Commodities and Finance FZE என்ற நிறுவனத்திடம் வழங்கல்.

          • ஒரு மெற்றிக் தொன் 249.07 அமெரிக்க டொலர்கள் என்ற அடிப்படையில் ரிபல் சுபர் பொஸ்பேட் 6000 மெற்றிக் தொன்னை 10 5% கொள்வனவு செய்வதற்கான பெறுகையை Aries Fertilizers Group Pvt Limited  என்ற நிறுவனத்திடம் வழங்குதல்.

          05.மகாவலி விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு கொவிஜன மந்திரஹேஹி என்ற விவசாய மாளிகையை அமைத்தல்

          2019 டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி அமைச்சரவையினால் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்திற்கு அமைவாக மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சை மீண்டும் கொவிஜன மந்திரஹேஹி என்ற விவசாய மாளிகையை அமைப்பதற்காக தற்பொழுது தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் அமைச்சின் நடவடிக்கைகளை, முன்னெடுப்பதற்காக அந்த கட்டிடத்தின் வடிவமைப்பை மீள தயாரித்து மின்சார கட்டமைப்பை செப்பனிட வேண்டியுள்ளது. இந்த பணிகளை மிக விரைவில் மேற்கொண்டு பூர்த்தி செய்வதற்கு தேவை இருப்பதினால் இதனை செப்பனிடுவதற்கான ஆலோசனை சேவைக்கான ஒப்பந்தம், பொறியியல் பணிகள் தொடர்பில் மத்திய ஆலோசனை செயலகத்திற்கு (CECP) நிர்மாணப்பணிகளுக்கான ஒப்பந்தத்தை வரையறுக்கப்பட்ட மத்திய பொறியியலாளர் சேவை (தனியார்) (central Engineering Services (Pvt) Limited) நிறுவனத்திற்கும் நேரடியாக வழங்குவதற்காக மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

          06. நெல்லுக்கான இரசாயன உரத்தை விவசாய பணிகளுக்காக கொள்வனவு செய்வதற்கு வசதிகளை செய்தல்

          தற்பொழுது நடைமுறையிலுள்ள உர நிவாரண வேலைத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரையிலான நெல் உற்பத்திக்காக உர நிவாரணத்தின் கீழ் உரம் வழங்கப்படுவதுடன் இதற்கு மேலாக கூடுதலான நிலப்பரப்பிற்கு தேவையான உரத்தை பகிரங்க சந்தையில் கொள்வனவு செய்ய வேண்டும். இந்த நிலைமையின் கீழ் சில சந்தர்ப்பங்களில் பல்வேறு சந்தைகளில் ஏனைய பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் உரத்திற்கு தட்டுப்பாட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், விசேடமாக கொவிட் 19 தொற்று நிலைமையின் காரணமாக விவசாயம் மேற்கொள்ளப்படும் நிலப்பரப்பு அதிகரித்ததினால் உரத்திற்கான கோரிக்கை அதிகரித்துள்ளது. இதற்கமைவாக, அரசாங்கம் சிரமத்திற்குள்ளாகாத வகையில் விவசாயிகளுக்கு தேவையான மேலதிக உரத்தை கொள்வனவு செய்யவதற்கு அரசாங்கத்தின் உர நிறுவனத்தினால் நெல் உற்பத்திக்கான உரத்தை உர நிவாரண வேலைத்திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படுவதில் எஞ்சியிருக்கும் உரத்தை விவசாய அபிவிருத்தி மத்திய நிலையங்களின் மூலம் கொள்வனவு செய்து 50 கிலோ எடையைக் கொண்ட உரப்பொதியொன்று 1000 ரூபாவிற்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டது.

          07. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவி வழங்கப்படும் வடக்கு வீதியுடன் தொடர்புபட்ட திட்டத்திற்கான கடன் தொகைக்கான கால எல்லையை நீடித்தல்

          ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவி வழங்கப்படும் வடக்கு வீதி இணைப்புத் திட்டத்தின் கீழ் தேசிய பெருந்தெருக்கள் மற்றும் மாகாண வீதி புனரமைப்பு மற்றும் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட பாலங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 98 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுகின்றன. கடன் தொகையில் எஞ்சும் தொகைகளில் மதவாச்சி – ஹொரவப்பத்தான வீதியின் மேலதிக ஒப்பந்த பொதி 02, 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த நிர்மாணப் பணிகளுக்கான கடன் நிதி செல்லுபடியான காலம் 2020 ஜுன் மாதம் 30 ஆம் திகதியாகும். இதற்கு முன்னர் இதனை பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அவ்வாறு செய்ய முடியாமல் போனது. இதற்கமைவாக சம்பந்தப்பட்ட கடன் தொகைக்கான காலத்தை 2020 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிப்பதற்காக வீதி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

          08. இலங்கை மட்பாண்ட (பீங்கான்) கூட்டுத்தாபன மறுசீரமைப்பின் கீழ் ஒட்டுசுட்டான் தொழிற்சாலையில் உற்பத்தி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் திட்டம்

          வரையறுக்கப்பட்ட சம்சன் ரஜரட்ட டைல்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் இணைந்து இலங்கை மட்பாண்ட (பீங்கான்) கூட்டுத்தாபனத்தின் கீழ் நடத்தப்படும் ஒட்டுசுட்டான் செங்கல் மற்றும் ஓடு தொழிற்சாலையின் தயாரிப்பு நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அங்கீகாரம் வழங்கப்பட்டது. இருப்பினும் இதுவரையில் இலங்கை மட்பாண்ட (பீங்கான்) கூட்டுத்தாபனத்தினால் இந்த தொழிற்சாலையை மீள ஆரம்பிக்கும் நோக்கில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் தனியார் நிறவனத்தின் ஒத்துழைப்பின்றி தயாரிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கமைவாக தனிப்பட்ட முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பின்றி இந்த தொழிற்சாலை தயாரிப்பு நடவடிக்கைகள் லங்கா பீங்கான கூட்டுத்தாபனத்தினாலேயே மேற்கொள்வதற்காக கைத்தொழில் மற்றும் விநியோக முகாமைத்துவம் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

          09. ப்ரோட்லேன்ட் மின் உற்பத்தி நிலைய திட்டத்தின் நிர்மாணப் பணிகளுக்கான ஆலோசனை சேவைக்காக பொறியியல் பணிகள் தொடர்பிலான மத்திய ஆலோசனை செயலக (CECB) உடன் இருந்த ஆலோசனை சேவை ஒப்பந்தத்தை நீடித்தல்

          ப்ரோட்லேன்ட் நீர் மின் உற்பத்தி திட்டத்தை நிர்மாணிப்பதற்கான ஆலோசனை சேவைக்கான ஒப்பந்த பொறியியலாளர் பணிகள் தொடர்பான விடயங்கள் மத்திய ஆலோசனை செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட திட்டம் 2017ஆம் ஆண்டு ஜுலை மாதம் 14 ஆம் திகதி பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், திட்டத்திற்கு எதிராக பிரதேசத்தில் பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு, காணிகளை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டமை, உபகரணங்களை விநியோகிக்கும் தயாரிப்பாளர் மற்றும் கடன் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டமை போன்ற காரணங்களினால் திட்டமிட்ட வகையில் திட்டத்தை பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளது. இதனால் பொறியியலாளர் பணிகள் தொடர்பில் மத்திய ஆலோசனை செயலகத்துடன் (CECB) உள்ள ஆலோசனை சேவை ஒப்பந்தத்தின் உடன்படிக்கைக் காலத்தை நீடிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. இதற்கமைவாக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய இந்த ஆலோசனைக்கான ஒப்பந்தம் 2020.07.31 ஆம் திகதி வரையில் நீடிப்பதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

          10. 2020 / 2021 கால எல்லைக்குள் வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் விமான துறை காப்புறுதியை புதுபித்தல் மற்றும் நிறுவுதல்

          விமான சேவையின் நடவடிக்கைக்கான விமான துறை காப்புறுதி மிக அவசியமான தேவையாவதுடன் வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறவனத்தினால் இந்த காப்புறுதி அமைச்சரவை அங்கீகாரத்துடன் 2018 ஆம் ஆண்டில் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திடம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இது வருடாந்தம் புதுபிக்கப்பட வேண்டும், அத்தோடு 2020 / 2021 ஆம் ஆண்டுக்கான காப்புறுதி இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் பெற்றுக் கொள்வதற்காக வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் நிலையான தொழில்நுட்பத்தை மதிப்பீடு செய்யும் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக, சம்பந்தப்பட்ட காப்புறுதி 4.05 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தினால் பெற்றுக் கொள்வதற்காக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

          11. சகத்திராண்டு சவால்கள் கூட்டுத்தாபனம் (MCC) உடன்படிக்கையை மதிப்பீடு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை

          சகத்திராண்டு சவால்கள் கூட்டுத்தாபனத்துடன் (MCC) கைச்சாத்திடுவதற்கான உத்தேச உடன்படிக்கை தொடர்பில் மதிப்பீடு செய்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக பேராசிரியர் லலித ஸ்ரீ குணவர்தன அவர்களின் தலைமையின் நியமிக்கப்பட்டுள்ள குழு தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. கௌரவ பிரதமர் அவர்களினால் இந்த அறிக்கை அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் அடங்கியுள்ள சிபாரிசுகள் தொடர்பாக அமைச்சரவையின் அனைத்து அங்கத்தவர்களினதும் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளன.

          12. ருவன்புர அதிவேக நெடுஞ்சாலை

          தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனமான சௌபாக்யே இதிரி தெக்ம – சௌபாக்கியத்தின் எதிர்கால நோக்கில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காத்தொடுவ – இங்கிரிய – இரத்தினபுரி – பெல்மடுல்ல தொடக்கம் இணைப்புக்களை ஏற்படுத்தி ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வெளிநாட்டு நிதியில் செயல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் இந்த உள்ளுர் நிதியின் கீழ் நிர்மாணிப்பதன் மூலம் நாட்டிற்கு மிகவும் சிறந்த நன்மைகளை பெற்றுக் கொள்ள முடிந்திருப்பதாக தெரிகிறது. இதற்கமைவாக உள்ளுர் வங்கியின் மூலம் பெறப்படும் நிதியைப் பயன்படுத்தி தேசிய நிர்மாண நிறுவனங்களின் சேவையைப் பெற்று இதன் அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்வதற்காக வீதி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

          13. அரசாங்கத்தின் எஞ்சிய காடு என்ற ரீதியில் கருதப்படும் காணிப்பகுதியை மாவட்ட செயலாளர் / பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைப்பதல்

          வன பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படாத பிரதேச செயலாளரின் கீழ் நிருவகிக்கப்பட்டு வரும் அரசாங்கத்தின் எஞ்சிய வனம் என்ற ரீதியில் அடையாளங் காணப்பட்டுள்ள காணிகளில் நிருவாகம் அதனுடனான வளங்கள் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள 2001.08.10 ஆம் திகதி இலக்கம் 05 / 2001 சுற்றரிக்கையின் ஒழுங்கு விதிகளுக்கு அமைவான வன பாதுகாப்பு திணைக்களத்திற்கு உட்படுத்தப்படும். இந்த சுற்றறிக்கையில் ஒழுங்கு விதிகளுக்கு அமைய இந்த காணி ஏனைய பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுமாயின் அதற்காக நீண்ட நடைமுறையொன்று கடைபிடிக்க வேண்டும் என்பதினால் இதில் எஞ்சிய காடுகளில் சேனை பயிர்ச்செய்கை போன்ற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் விவசாயிகள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் அந்த காணி பொருளாதார ரீதியில் பயனுள்ள பணிகளுக்காக பயன்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் அமைச்சரவையின் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டதுடன் இது தொடர்பிலான விடயங்களை கண்டறிந்து எஞ்சிய வன பகுதி மற்றும் வன ஜீவராசிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த காணிகளின் உரிமையை தொடர்ந்தும் அரசாங்கம் கொண்டுள்ள வகையில் முன்னெடுத்து தற்காலிகமாக மாற்று நடவடிக்கைக்காக பயன்படுத்தக் கூடிய வகையில் அதற்கான அதிகாரத்தை மாவட்ட செயலாளர் / பிரதேச செயலாளரிடம் வழங்குவதற்கென பொருத்தமான நடைமுறையொன்றை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்குமாறு சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் வளங்கள் அமைச்சரிடம் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

          Posted in இலங்கை செய்திகள்

          57 கடற்படையினர் இங்கிலாந்து நோக்கி பயணம்

          57 கடற்படையினர் இங்கிலாந்து நோக்கி பயணம்

          கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கபட்டிருந்த கப்பல் ஒன்றில்

          சேவையாற்றிய 57 கடற்படையினர் விஷேட விமானம் ஒன்றின் மூலம்

          மத்தள விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து நோக்கி சென்றுள்ளனர்.

          வாமோச் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றில்

          மூலம் இன்று அதிகாலை 5.50 மணியளவில் அவர்கள் இங்கிலாந்து நோக்கி பயணமாகி உள்ளனர்.

          குறித்த விமானம் நேற்று காலை 10.20 மணியளவில் ரோமில் இருந்து கொழும்பு

          துறைமுகத்தில் உள்ள கப்பல் ஒன்றில் சேவையாற்றுவதற்காக 155 கடற்படையினரை அழைத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

              Posted in உலக செய்திகள்

              தந்தை மகனை அடித்து கொன்ற போலீஸ் அதிகாரி – நீதிமன்றில் நிறுத்தம்

              தந்தை மகனை அடித்து கொன்ற போலீஸ் அதிகாரி – நீதிமன்றில் நிறுத்தம்

              சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்.ஐ. ரகு கணேஷ் தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்

              ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

              சாத்தான்குளம் வழக்கு: நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார் எஸ்.ஐ. ரகு கணேஷ்


              கைது செய்யப்பட்ட எஸ்.ஐ. ரகு கணேஷ்
              சென்னை:

              சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு

              உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

              அதன்படி, நேற்று பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்தி சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை கொலைவழக்காக பதிவு செய்தனர்.

              மேலும், இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் எஸ்.ஐ.யாக பணியாற்றிய ரகு கணேஷை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்

              . 4 போலீசார் மீது கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

              இந்நிலையில், கைது செய்யப்பட்ட எஸ்.ஐ.ரகு கணேஷ் தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்

              ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் முன்னதாக ரகு கணேசுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதல் கட்டமாக உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டது.

              மருத்துவப்பரிசோதனை முடிந்த உடன் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ. ரகு கணேஷ் தூத்துக்குடி நீதிமன்ற நீதிபதி முன் தற்போது

              ஆஜர்படுத்தபடுத்தப்பட்டுள்ளதாக என தகவல் வெளியாகிவருகிறது

                  கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
                  Posted in உலக செய்திகள்

                  எதியோப்பியாவில் 81 பேர் சுட்டு கொலை – பல டசின் பேர் காயம்

                  எதியோப்பியாவில் 81 பேர் சுட்டு கொலை – பல டசின் பேர் காயம்

                  எதியோப்பியாவில் இடம்பெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 81 பேர் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளனர் ,மேலும் பல டசின் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                  இவ்வாறு காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

                  அமைதி வழியில் போரடிய அப்பாவி மக்கள் மீது அடக்குமுறையை பாவித்து

                  ,சர்வாதிகார ஆட்சியை நிலை நிறுத்தியுள்ள அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் வெடித்து பறக்கிறது

                      Posted in உலக செய்திகள்

                      பெரும் போதைவஸ்து கடத்தல் முறியடிப்பு – சிக்கிய ஐஸ் எஸ் தீவிரவாத குழு

                      பெரும் போதைவஸ்து கடத்தல் முறியடிப்பு – சிக்கிய ஐஸ் எஸ் தீவிரவாத குழு

                      இத்தாலிய நாட்டில் கப்பல்கள் மூலம் கடத்தி வரப்பட்டு ஐரோப்பிய

                      சந்தையில் விற்பனை செய்ய பட்டு வந்த மிக பெரும்

                      போதைவஸ்து கடத்தல் முறியடிக்க பட்டுள்ளது

                      இத்தாலிய உளவுத்துறையினர் மேற்கொண்ட தகவல் சேகரிப்பு மற்றும்

                      கண்டறியும் துப்பறியும் வேட்டையின் பொழுதே மேற்படி விடயம் அம்பலமாகியுள்ளது

                      இவர்களின் இந்த சர்வதேச ரீதியாக சட்டவிரோதமாக இயங்கி வந்த உருமறைப்பு

                      செய்ய பட்ட உற்பத்தி ஆலைகள் கண்டு பிடிக்க பட்டு இரகசிய நகர்வுகள்

                      முடுக்கி விட பட்டுள்ளது ,மாபிய கும்பல்கள் மூலம் இவை வெளிச் சந்தைக்கு எடுத்து செல்ல பட்டதும் கண்டறிய பட்டுளள்து

                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                          பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 176 பேர் பலி

                          பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 176 பேர் பலி

                          பிரித்தானியாவில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி சுமார் 176 பேர் பலியாகியுள்ளனர்

                          இதுவரை இங்கு இடம்பெற்ற இறப்பு எண்ணிக்கை சுமார் 43,906 ஆக அதிகரித்துள்ளது

                          மேலும் மூன்று லட்சம் மக்கள் வரைபாதிக்க பட்டுள்ளனர் ,தற்ப்போது மெல்ல இயல்பு வாழ்விற்கு பிரிட்டன் நகர்ந்து

                          செல்கிறது ,எனினும் மக்கள் மத்தியில் பெரும் பீதி நிலவி வருகிறது குறிப்பிட தக்கது

                              Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                              லண்டன் மிச்சம் தமிழ் சிறுமி கொலை – விசாரணைகள் தீவிரம் -மக்கள் உதவியை நாடும் பொலிஸ்

                              லண்டன் மிச்சம் சிறுமி கொலை – விசாரணைகள் தீவிரம் -மக்கள் உதவியை நாடும் பொலிஸ்

                              நேற்று பிரிட்டன் மிச்சம் பகுதியில் 35 வயது தாய் மற்றும் ஐந்து வயது மகள் சாயாகி உள்ளிட்ட தமிழர்கள் பலத்த கத்தி வெட்டு

                              காயங்களுக்கு உள்ளான நிலையில்
                              தொடர் அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து மீட்க பட்டனர்

                              இவ்வாறு மீட்க பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் இருந்தமையால் உலங்குவானூர்தி மூலம் எடுத்து செல்ல பட்டு

                              சிகிச்சை அளிக்க பட்டது ,ஆனாலும் அழகிய அப்பாவி ஐந்து வயது சாயாகி பரிதாபகரமாக பலியானார்

                              தற்போது 35 வயதுடைய தாயார் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்,மருத்துவமனையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளார்

                              மேலும் இவரது இந்த கொலை,தற்கொலை முயற்சி , தொடர்பாக அறிந்து கொள்வதில் மிக சிரமங்கள் ஏற்பட்டுள்ளது எனவும் ,இந்த

                              கொலைக்கான பின்புலம் ,மற்றும் அதற்குரிய காரணங்கள் ,புறசூழல் தொடர்பாக தற்போது சிறப்பு குற்ற தடுப்பு துறையினர் மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

                              இந்த கொலை அல்லது தாயாரது செயல் பாடுகள் தொடர்பில் ஏதாவது தெரிந்தால் ,தமிழ் பேசும் மக்கள் தமக்கு தெரிவிக்கும் படி காவலதுறையினர் வேண்டுதல் விடுத்துள்ளனர்

                              மேற்படி விடயம் தொடர்பில் பல்வேறு பட்ட முறைகளில் விசாரணைகள் மற்றும் கண்காணிப்புக்கள் இடம்பெற்ற வண்ணம்

                              உள்ளது ,குறிப்பாக சமூக வலைத்தளங்கள் வெகுவாக கண்காணிக்க படுவதை மறைமுக சொல்லாடல்கள் மூலம் கணிக்க முடிகிறது

                              Sayagi Sivanantham.சாயகி சிவனானந்தம் இறப்பு உலக தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது ,இரு

                              பிள்ளைகளின் தயாரின் இந்த மன அழுத்தமே, இந்த கொலைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது

                              மிகவும் பண்பான ,நட்பான பெண் எனவும் ,அமைதியாக உள்ள அவர் தான் தனது பெண் பிள்ளை தொடர்பாக அதிகம் யோசிப்பதாக கூறியதாக மக்கள் மத்தியில் பரவலான பேச்சு உலவுகிறது

                              தாயின் செயலை கண்ணுற்ற 11 வயது மகனே காவல்துறைக்கு தகவல் வழங்கினார் என்ற செய்திகளும் கசிகிறது

                              மிக சிறந்த குடும்ப பெண்மணி ,சிறந்த படித்த பண்பான குடும்பத்தில் ,அன்பு செலுத்த தவறாத அழகிய உறவினர்கள்

                              ,சொந்த பந்தம் உள்ள குடும்பத்தில் இடம்பெற்றுள்ள இந்த செயல் நம்மை மட்டும் அல்ல ஒட்டு மொத்த தமிழர் சமூகத்தை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

                              மன அழுத்த நோய்க்கு சிகிச்சை பெற இருந்த முதல் நாள் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மக்க மத்தியில் பேச படுகிறது

                              அன்பு மகளின் ஆறா துயரில் எதிரி இணையமும் பங்கெடுத்து கொள்கிறது ,விடுதலையின் நேசமானவள் ,ஈழ விடுதலை போருக்கு

                              தம்மை அர்ப்பணித்த அழகிய குடும்பம் ,அறம் நின்று செயல் படும் வீரம் செறிந்த தமிழ் குடும்பத்தில் நிகழ்ந்த செயல் கண்ணீரால் குளிக்க வைக்கிறது

                              மக்களே இவ்வாறானவர்களை கண்டால் ஆறுதல் கூறுங்கள் ,அரவணையுங்கள் ,எம்மால் முடிந்தஉதவிகளை செய்வோம்

                              ,தேவை அற்ற விடயங்களை ,கூறை கூறுதல்,என்பனவற்றை இவ்வேளை தவிர்ப்பம் ,அவர்கள் நிலையில் இருந்து நாம் கொஞ்சம் சிந்திப்போம்

                              கணவன் மற்றும் மகனுக்கு ஆறுதல் கூறுங்கள் ,இவ்வேளை நாம் அதை தான் செய்திட முடியும் ,கண்ணுறக்கம் தொலைத்து அவர்களின் போலவே நாமும் வாடுகிறோம்

                              போலீசார் விரைவில் இது தொடர்பான முழுமையான விடயங்களை அறிய தருவார்கள் என்பது தெளிவாகிறது

                              அந்த அழகிய சிறுமிக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்

                              சின்ன சிரிப்பழகி
                              சிவந்த உடல் அழகி
                              ஆளுமை பேரழகை
                              அவனியில் இழந்தோமே

                              பெற்ற தாயவளே
                              பெரும் துயர் தந்திடவே
                              கண்ணீர் உடைகிறது
                              கத்தி விழி அழுகிறது

                              ஒப்பாரி சத்தங்கள்
                              ஓயா ஒலிக்கிறது
                              வேரை அறுத்த செயல்
                              வேதனை கொதிக்கிறது

                              தப்பான சிந்தையால்
                              தவறாகி போனது
                              அப்பாக்கள் உழைப்பெல்லாம்
                              அலங்கோலம் ஆனது

                              என்ன நினைத்தாளோ ..
                              ஏன் இதை செய்தாளோ ..?
                              தாங்கி பெற்றவளோ
                              தாயே எமன் ஆனாள்

                              நெருக்கடி உனை வாட்ட
                              நொறுங்கி நீ வாட
                              கொங்கை பால் தந்தாள்
                              கொலையது செய்தாளோ …?

                              வன்னி மைந்தன் ( ஜெகன் )
                              ஆக்கம் -01-07-2020

                              லண்டன் மிச்சம் சிறுமி கொலை - விசாரணைகள் தீவிரம் -மக்கள் உதவியை நாடும் பொலிஸ்தாயின் செயலை கண்ணுற்ற 11 வயது மகனே காவல்துறைக்கு தகவல்
                              லண்டன் மிச்சம் சிறுமி கொலை – விசாரணைகள் தீவிரம் -மக்கள் உதவியை நாடும் பொலிஸ்தாயின் செயலை கண்ணுற்ற 11 வயது மகனே காவல்துறைக்கு தகவல்
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதி இராணுத்தினரால் கிருமி நீக்கம்

                                  யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதி இராணுத்தினரால் கிருமி நீக்கம்

                                  யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதியினை யாழ்ப்பணத்தில் உள்ள இராணுவ வீரர்கள் நேற்று (30) கிருமி தொற்று நீக்கம் செய்துள்ளனர்.

                                  திருநெல்வேலியில் உள்ள ஆனந்த குமாரசுவாமி பெண்கள் விடுதி மற்றும்

                                  பாலசிங்கம் ஆண்கள் விடுதி என்பவற்றுடன் கொக்குவில் புதிய பெண்கள்

                                  விடுதி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளும் இவ்வாறு கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

                                  அண்மையில் யாழ் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரியவிடம்

                                  பல்கலைக்கழக அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகொளுக்கினங்க குறித்த தொற்று நீக்கப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

                                  இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இத் தொற்று நீக்கப்பணிகளுக்கு

                                  பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் தமது ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளனர்.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      திரைப்பட விளம்பரங்களில் வேட்பாளர்களின் புகைப்படம் காட்சி படுத்த தடை

                                      திரைப்பட விளம்பரங்களில் வேட்பாளர்களின் புகைப்படம் காட்சி படுத்த தடை

                                      திரையரங்குகளில் திரைப்படங்களை காட்சிப்படுத்தும்

                                      சந்தர்ப்பங்களில் எந்தவொரு வேட்பாளரினதும் புகைப்படம் காட்சி

                                      படுத்தும் விளம்பரங்களை திரையிட வேண்டாம் என பதில் பொலிஸ்

                                      மா அதிபர் சி.டி.விக்ரமரட்ண திரையரங்குகளின் உரிமையாளர்களுக்கு இன்று ஆலோசனை வழங்கியுள்ளார்.

                                          Posted in இலங்கை செய்திகள்

                                          முகக்கவசம் அணியாத 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கம்

                                          முகக்கவசம் அணியாத 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கம்

                                          முகக்கவசம் அணியாத 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு

                                          உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                                          இன்று (01) அதிகாலை 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24

                                          மணித்தியாலங்களில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட

                                          சுற்றிவளைப்பில் குறித்த நபர்கள் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு

                                          உட்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

                                          இதன்போது, முகக்கவசத்தை சரியான முறையில் அணியாத 905 பேர் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                                          முகக்கவத்தை அணியாதவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ச்சியாக

                                          முன்னெடுக்கப்படுவதாக மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

                                              Posted in இலங்கை செய்திகள்

                                              காணி பதிவை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

                                              காணி பதிவை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

                                              காணி பதிவின்போது இடம்பெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும் பதிவு பொறிமுறைமையை துரிதப்படுத்துவதற்கும் ஈ – காணி

                                              (இலத்திரனியல் முறைமை) பதிவை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார்.

                                              காணிப் பதிவின் போது இடம்பெறும் மோசடிகள் மற்றும் தாமதங்கள் காரணமாக பொதுமக்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். காணி ஆணையாளர் திணைக்களம்,

                                              காணி உரித்துகள் நிர்ணய நிறுவனம், நில அளவைத் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகத் திணைக்களம் ஒன்றிணைந்த வகையில் ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவு செய்யும்

                                              நடவடிக்கையை துரிதப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

                                              ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவு செய்தல் நடவடிக்கை தொடர்பாக நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.

                                              காணிப் பதிவுசார் நிறுவனங்களை ஒன்றிணைப்பதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். வனஜீவராசிகள், வன பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் அமைச்சையும் ஒன்றிணைத்து

                                              குழுவொன்றை நியமித்து இவ்வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

                                              ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவின் ஊடாக உறுதிப்பத்திரம், காணி பொழிப்பு அறிக்கை கணனிமயப்படுத்தப்படும். பொழிப்பு அறிக்கை

                                              பெற்றுக்கொள்ளும்போது கணனிமயப்படுத்தப்பட்ட ஆவணத்தை வழங்குவதற்கும் சட்டத்தரணிகளுக்கு, பத்திரத்துறை

                                              பதிவாளர்களுக்கு மற்றும் எந்தவொரு நபருக்கு அல்லது அரச நிறுவனத்திற்கு online மூலம் காணி பற்றிய தகவல்களை

                                              பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் காணி மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமென அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

                                              இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்துடன் (ICTA) ஒன்றிணைந்து ஆகஸ்ட் மாதமளவில் இவ்வேலைத்திட்டத்தை மக்கள் மயப்படுத்த

                                              எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு ஈ – காணி (இலத்திரனியல் முறைமை)யின் கீழ் பதிவு செய்யும் காணிகளுக்கு இலத்திரனியல்

                                              கணக்குப் புத்தகம் ஒன்றையும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

                                              பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, காணி அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே.ரணவக்க, பதிவாளர் நாயகம் என்.சி.வித்தான, காணி ஆணையாளர் நாயகம்

                                              ஆர்.எம்.சி.எம்.ஹேரத், காணி உரித்துகள் நிர்ணய ஆணையாளர் நாயகம் ஜி.எம்.எச்.பிரியதர்ஷனி, நில அளவையாளர் நாயகம்

                                              ஏ.எல்.எஸ்.சி.பெரேரா இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) தலைவர் ஜயந்த த சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டன

                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                  வவுனியாவில் ரயில் ஆட்டோ மோதல் – விசாரணையில் பொலிஸ்

                                                  வவுனியாவில் ரயில் ஆட்டோ மோதல் – விசாரணையில் பொலிஸ்

                                                  வவுனியா செட்டிக்குளம் துடரிக்குளம் பகுதியில் இன்று (01) காலை ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

                                                  துடரிக்குளம் பகுதியில் ரயில் கடவையின் ஊடாக கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டியினை மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதித்தள்ளியதில் முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

                                                  58 வயது மதிக்கத்தக்க நபரொருவரே விபத்தில் உயிரிழந்துளதாக தெரியவருகின்றது.

                                                  விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      களவாக மின்சாரம் பெற்ற 1937 பேர் மீது வழக்கு

                                                      களவாக மின்சாரம் பெற்ற 1937 பேர் மீது வழக்கு

                                                      2019 மே மாதம் தொடக்கம் இவ்வருடத்தின் மே மாதம் வரையான காலப்பகுதியில் சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக் கொண்ட

                                                      1937 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

                                                      இதன்போது, நீதிமன்ற தீர்ப்பின் படி அபராத் தொகையாக 59 மில்லியன் ரூபாய் அறவிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

                                                      இலங்கை மின்சார சபையினால் விசாரணை குழு மற்றும் பொலிஸாருடன் இணைந்து சட்டவிரோதமாக மின்சாரத்தை

                                                      பெற்றுக் கொள்ளும் நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

                                                      இதேவேளை, பல்வேறு நபர்களால் ஆண்டுதோறும் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுக் கொள்ளப்படுவதால் இலங்கை மின்சார

                                                      சபைக்கு 100 மில்லியன் ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

                                                      இதில், அநேகமானோர் பயிர்ச் செய்கைகளை விலங்குகளிடம் பாதுகாப்பதற்காக இவ்வாறு சட்டவிரோதமாக மின்சாரத்தை பெறுவதாக தெரியவந்துள்ளது.

                                                      இதேவேளை, சட்டவிரோதமாக மின்சாரத்தை பெறுவதற்கு முயற்சிக்கும் போது ஆண்டுதோறும் 100 தொடக்கம் 150 பேர்

                                                      வரையில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

                                                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                          பிரிட்டனிடனில் கடைக்குள் புகுந்த கார்- சிறுவன் பலி

                                                          பிரிட்டனிடனில் கடைக்குள் புகுந்த கார்- சிறுவன் பலி

                                                          கடந்த தினம் மதியம் இரண்டு மணியளவில் பிரிட்டன் Morningside Road in Edinburgh

                                                          பகுதியில் உள்ள வீதியோர கடை ஒன்றுக்குள் கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து கடைக்குள் புகுந்ததில் அவ்வேளை அங்கு நின்ற மூன்று வயது இசுறுவன் பலியானார் .

                                                          மேற்படி விபத்து தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                                                          சாரதியின் அலட்சிய போக்கே மேற்படி விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது

                                                          பிரிட்டனிடனில் கடைக்குள்
                                                          பிரிட்டனிடனில் கடைக்குள்
                                                              Posted in உலக செய்திகள்

                                                              15 நாடுகளுக்கு எல்லையை திறந்துவிட ஐரோப்பிய யூனியன் முடிவு

                                                              15 நாடுகளுக்கு எல்லையை திறந்துவிட ஐரோப்பிய யூனியன் முடிவு

                                                              ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்துள்ள நிலையில், சீனா உள்பட 15 நாடுகளுக்கு எல்லையை திறந்தவிட ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது.

                                                              சீனா உள்பட 15 நாடுகளுக்கு எல்லையை திறந்துவிட ஐரோப்பிய யூனியன் முடிவு


                                                              எல்லையை திறந்து விட ஐரோப்பிய யூனியன் முடிவு
                                                              சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் ஐரோப்பிய

                                                              நாடுகள், ஆசிய கண்டம், ஆப்பிரிக்க கண்டம், அமெரிக்க கண்டனம் என உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது.

                                                              ஐரோப்பிய கண்டத்தில் இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து, பிரன்ஸ் நாடுகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. சுமார் மூன்று

                                                              மாதங்களுக்குப் பிறகு கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது.

                                                              ஆனால் அமெரிக்காவில் இன்னும் குறையவில்லை. இந்தியாவில் தற்போதுதான் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாளையில்

                                                              இருந்து (ஜூலை 1-ந்தேதி) 15 நாடுகளுக்கு ஐரோப்பிய யூனியன் எல்லைகளை திறந்து விட முடிவு செய்துள்ளது. இந்த 15 நாடுகளில்

                                                              சீனா இடம் பிடித்துள்ளது. ஆனால் அமெரிக்கா நிராகரிக்கப்பட்டுள்ளது.

                                                              சூழ்நிலைக்கு ஏற்ப இரண்டு வாரத்திற்கு ஒருமுறை இது மாற்றியமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                              கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, உருகுவே, அல்ஜீரியா, ஜார்ஜியா, ஜப்பான், மொராக்கோ, ருவாண்டா,

                                                              செர்பியா, தென்கொரியா, தாய்லாந்து, துனிசியா, மொன்டெனெக்ரோ ஆகிய நாடுகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

                                                              27 நாடுகள் கொண்ட ஐரோப்பிய யூனியனில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதன் அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

                                                                  Posted in உலக செய்திகள்

                                                                  வெடித்து சிதறிய மருத்துவமனை 13 பேர் பலி

                                                                  வெடித்து சிதறிய மருத்துவமனை 13 பேர் பலி

                                                                  ஈரான்: மருத்துவமனையில் பயங்கர வெடி விபத்து – 13 பேர் பலி

                                                                  ஈரானில் உள்ள மருத்துமனையில் ஆக்சிஜன் டாங்க் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

                                                                  ஈரான்: மருத்துவமனையில் பயங்கர வெடி விபத்து – 13 பேர் பலி
                                                                  வெடி விபத்து ஏற்பட்ட மருத்துவமனை
                                                                  தெஹ்ரான்:

                                                                  ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகில் தைரிஷ் சதுர்க்கம் என்ற பகுதி அமைந்துள்ளது. அங்குள்ள ஒரு மருத்துவமனையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

                                                                  மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் டாங்கில் ஏற்பட்ட கவு காரணமாக இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள்

                                                                  வெளியாகி வருகின்றன. இந்த வெடி விபத்து காரணமாக மருத்துவமனை முழுவதும் தீ கொளுந்து விட்டு எரிந்தது.

                                                                  இந்த கோர சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

                                                                  மருத்துவமனையில் பலர் சிக்கி இருக்கக்கூடும் என்பதால் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று கட்டிடத்திற்குள்

                                                                  சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

                                                                  ஆனால் மருத்துவமனையில் ஆக்சிஜன் டாங்கிகள் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் அவை தொடரந்து வெடித்து சிதறிய வண்ணம் உள்ளது.

                                                                  இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

                                                                  வெடித்து சிதறிய மருத்துவமனை
                                                                  வெடித்து சிதறிய மருத்துவமனை
                                                                      Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                                                                      லண்டனில் தமிழ் சிறுமி பலி – ஆபத்தான நிலையில் தாய் – நடந்தது என்ன ..?

                                                                      லண்டனில் தமிழ் சிறுமி பலி – ஆபத்தான நிலையில் தாய் – நடந்தது என்ன ..?

                                                                      பிரிட்டன் லண்டன் மிச்சம் பகுதியில் 35 வயதுடைய தாய் ஒருவரும் நான்கு வயது அழகிய மகளும் வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டுள்ளனர் ,


                                                                      பலமான காயங்களுக்கு உள்ளான நிலையில் ,நான்கு வயது மகள் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்ட பொழுதும் அங்கு சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

                                                                      The woman, who is 35, was taken to hospital where her injuries are deemed to be life-threatening, police say.

                                                                      30 ஜூன் Monarch Parade at around 4pm on Tuesday (June 30 இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

                                                                      கிளிநொச்சியை நெருங்கிய உறவினர்கள் உறவினர்களை கொண்ட இவர்கள் இந்த செயல் பெரும் அதிர்ச்சியை

                                                                      ஏற்படுத்தியுள்ளது ,ஆபத்தான நிலையில் உலங்கு வானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்ட பொழுதும் சிகிச்சை

                                                                      பலனின்றி தற்பொழுது அழகிய அப்பாவி சிறுமி பலியாகியுள்ளார் என தெரிவிக்க படுகிறது

                                                                      மேற்படி படுகொலை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது,இந்த சம்பவம் தொடர்பில் யாரும் கைது செய்ய படவில்லை

                                                                      மேற்படி சம்பவம் லண்டன் மிச்சம் மக்கள் ,மற்றும் தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                                                      இவ்வாறான நிகழ்வுகள் தமிழர்கள் மத்தியில் தற்பொழுது அதிகரித்து செல்வது மன வேதனையை அளிக்கிறது

                                                                      இறந்த சிறுமியின் சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,சடல பரிசோதனையில் ஏதாவது தடயம் கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

                                                                      பொலிஸ் செய்தி

                                                                      An investigation is underway following an incident in Mitcham.

                                                                      Police were called to an address on Monarch Parade in Mitcham at 16:00hrs on Tuesday, 30 June to a report of a two people injured.

                                                                      Officers and London Ambulance Service attended and a woman and a child were inside a property suffering injuries.

                                                                      The woman, aged 35, has been taken to hospital where her injuries are deemed life-threatening.

                                                                      The child, a four-year-old girl, was also taken to hospital however was pronounced dead shortly after. Next of kin have been informed.

                                                                      A post-mortem examination will take place in due course.

                                                                      Officers remain in the area and a crime scene is in place.

                                                                      At this early stage, police are not looking for anyone else in connection with this incident.

                                                                      No arrests; enquiries into the incident continue

                                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                                          மலையக தொழிலாளர் முன்னணியின் கிளை காரியாலயம் திறப்பு

                                                                          மலையக தொழிலாளர் முன்னணியின் கிளை காரியாலயம் திறப்பு

                                                                          மலையக மக்கள் முன்னணியின் தொழிற் சங்கமான மலையக தொழிலாளர்

                                                                          முன்னணியின் கிளை காரியாலயம் பத்தனையில் முன்னணியின் தலைவரும்

                                                                          நுவரெலியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணனினால் வைபவ ரீதியாக திறந்து

                                                                          வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் முன்னணியின் முக்கியஸ்த்தர்கள் உட்பட உறுப்பினர்கள் கலந்துக் கொண்டார்கள்

                                                                          மலையக தொழிலாளர்
                                                                          மலையக தொழிலாளர்