57 கடற்படையினர் இங்கிலாந்து நோக்கி பயணம்
கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கபட்டிருந்த கப்பல் ஒன்றில்
சேவையாற்றிய 57 கடற்படையினர் விஷேட விமானம் ஒன்றின் மூலம்
மத்தள விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து நோக்கி சென்றுள்ளனர்.
வாமோச் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றில்
மூலம் இன்று அதிகாலை 5.50 மணியளவில் அவர்கள் இங்கிலாந்து நோக்கி பயணமாகி உள்ளனர்.
குறித்த விமானம் நேற்று காலை 10.20 மணியளவில் ரோமில் இருந்து கொழும்பு
துறைமுகத்தில் உள்ள கப்பல் ஒன்றில் சேவையாற்றுவதற்காக 155 கடற்படையினரை அழைத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.