Posted in இலங்கை செய்திகள்

முகக்கவசம் அணியாத 3061 பேருக்கு போலிஸ் எச்சரிக்கை

முகக்கவசம் அணியாத 3061 பேருக்கு போலிஸ் எச்சரிக்கை

முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியைப் முன்னெடுக்காத 3061 பேருக்கு மேல் மாகாணத்தில் கடந்த 24

மணித்தியாள காலப்பகுதியல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.

முகக்கவசம் அணியாமை தொடர்பில் 2093பேரும் சமூக இடைவெளியைப் முன்னெடுக்காத 968 பேரும் இவ்வாறு

எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக மேல்மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை , இன்று அதிகாலை 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை

நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த 349 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த 158 பேரும், ஐய்ஸ் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த 14 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத மதுபானங்களை தம்வசம் வைத்திருந்த 206 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் பிடியாணைப் பிறப்பிக்கப்பட்ட 771 பேரும் இந்த விசேட சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்

      Posted in இலங்கை செய்திகள்

      முகக்கவசம் அணியாத 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கம்

      முகக்கவசம் அணியாத 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கம்

      முகக்கவசம் அணியாத 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு

      உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

      இன்று (01) அதிகாலை 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24

      மணித்தியாலங்களில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட

      சுற்றிவளைப்பில் குறித்த நபர்கள் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு

      உட்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

      இதன்போது, முகக்கவசத்தை சரியான முறையில் அணியாத 905 பேர் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

      முகக்கவத்தை அணியாதவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ச்சியாக

      முன்னெடுக்கப்படுவதாக மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.