Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் ரயில் ஆட்டோ மோதல் – விசாரணையில் பொலிஸ்

வவுனியாவில் ரயில் ஆட்டோ மோதல் – விசாரணையில் பொலிஸ்

வவுனியா செட்டிக்குளம் துடரிக்குளம் பகுதியில் இன்று (01) காலை ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

துடரிக்குளம் பகுதியில் ரயில் கடவையின் ஊடாக கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டியினை மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதித்தள்ளியதில் முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

58 வயது மதிக்கத்தக்க நபரொருவரே விபத்தில் உயிரிழந்துளதாக தெரியவருகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.