Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

குடிவரவு அமைச்சர் பட்டேலுக்கு ஆப்பு வைத்த பிரதமர் – குற்றங்கள் விசாரணை

குடிவரவு அமைச்சர் பட்டேலுக்கு ஆப்பு வைத்த பிரதமர் – குற்றங்கள் விசாரணை

பிரிட்டன் குடியகல்வு குடிவரவு அமைச்சராக விளங்கியவர் இந்தியாவை சேர்ந்த பட்டேல் ஆகும்

இவர் இந்த அமைச்சு பதவியை ஏற்றதன் பின்னர் அங்கு பணிபுரிந்த ஊழியர்களை

வார்த்தைகளினால் காய படுத்தி ,அவமரியாதை செய்ததான புகார்கள்

முன் வைக்க பட்ட நிலையில் இது தொடர்பான உடனடி விசாரணைக்கு பிரதமர் ஜோன்சன் உத்தரவிட்டார்

இதனால் தற்போது இவரது குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்ற

வண்ணம் உள்ளது ,இவர் மீது சுமத்த பட்டுள்ள குற்றங்கள் நிரூபிக்க பட்டால் அவர் சிறை செல்லும் நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது

குறித்த அமைச்சு பதவியை இவர் ஏற்றதன் பின்னர் அகதிகளை லண்டனில்

இருந்து ஆயிரம் மைல் தொலைவில் உள்ள தனி தீவு ஒன்றில் அடைத்து

வைக்க தீவிர முயற்சிகளை மேற் கொண்டு வந்தார் ,இவரது இந்த நகர்வுக்கு மனித உரிமை அமைப்புக்கள் கடும் கணடனம் தெரிவித்தனர்

இவரே ஒரு வெளிநாட்டவர் என்பதை மறந்து இவ்விதமான செயல் பாட்டை

செயல்படுத்த முனைந்தது பெரும் சர்ச்சைகளை கிளப்பி வந்தமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

குருதீஸ் போராளிகள் மீது துருக்கி கடும் தாக்குதல்

குருதீஸ் போராளிகள் மீது துருக்கி கடும் தாக்குதல்

வடக்கு சிரியாவில் தளம் அமைத்து போராடி வரும் குருதீஸ்

போராளிகள் மீது துருக்கிய இராணுவம் கடும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது

இதனால் குறித்த போராளிகள் அமைப்பிற்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

அமெரிக்கா ஆதரவு பெற்ற அமைப்பு ,அதே அமெரிக்காவினால் கைவிட

பட்ட நிலையில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை போல அழிந்து செல்லும் விளிம்பு நிலையில் உள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் இராணுவம் அகோர தாக்குதல்

தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் இராணுவம் அகோர தாக்குதல்

தெற்கு லெபனான் போராளிகள் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேலிய இராணுவம் அகோர தாக்குதலை மேற் கொண்டுள்ளது

மேற்படி தாக்குதலில் குறித்தா அமைப்பிற்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக

இஸ்ரேல் அறிவித்துள்ளது
மேலும் முக்கிய தளபதிகள் படுகொலை செய்ய பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவின் முதலாவது அதிக வயது கூடிய அதிபராக பைடன் சாதனை பதிவு

அமெரிக்காவின் முதலாவது அதிக வயது கூடிய அதிபராக பைடன் சாதனை பதிவு

அமெரிக்காவின் முதலாவது அதிக வயது கூடிய ஜனாதிபதியாகி புதிதாக தெரிவு செய்ய பட்டுள்ள ஜோ பைடன் இடம் பிடித்துள்ளார்

இவருக்கு தற்பொழுது 78 வயதாகிறது
இவர் தனது ஆட்சி காலம் முடிவதற்குள் இறந்து விடுவார் எனவும்

அதன் பின்னர் முலாவது ஜனாதிபதி என்ற பெருமையை கமலா காரிஸ் பெறுவார் என்ற எதிர் பார்ப்பு அதிகரித்துள்ளது

பாக்கலாம் வரப்போகும் ஆண்டுகள் சொல்ல போகும் செய்திகள் எதுவாக உள்ளது என்பதை

Posted in இலங்கை செய்திகள்

இராணுவத்தின் புதிய படைப் பிரிவு ஆரம்பம்

இராணுவத்தின் புதிய படைப் பிரிவு ஆரம்பம்

மூன்று படையணிகளை உள்ளடக்கிய இலங்கை இராணுவ பொறியியலாளர்களின் பல் திறன் மற்றும் பன்முகத் திறன்

கொண்ட புதிய முதலாவது இராணுவ பொறியியலாளர் பிரிவு நேற்று முன்தினம் ஸ்தாபிக்கப்பட்டது.

புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள இராணுவ பொறியியலாளர் பிரிவு பல்திறன் மிக்க பல பணிகளை முன்னெடுக்கவுள்ளது. இதற்கமைய அனைத்து வகையான தேசிய கட்டுமான பொறியியல் பணிகள்,

சிவில் -இராணுவ பணிகள், கண்ணிவெடி அகற்றுதல் மற்றும் இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி தொடர்பான பணிகள், துரித அனர்த்த முகாமைத்துவ பணிகள், தளபதியின்

பணிகள் என்பவற்றை மத்தியஸ்த்தப்படுத்தல், பொறுப்பேற்றல், விநியோகித்தால் மற்றும் அவற்றை நிறைவேற்றுதல் என்பவற்றை முன்னெடுக்கவுள்ளது.

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் , இராணுவத்தின் தளபதியும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர

சில்வா, மத்தேகொடையில் நிர்மாணிக்கப்படவுள்ள தலைமையக கட்டிடத்திற்கான பெயர் பதாகையை திறந்து வைத்ததுடன்

நிர்மாணப் பணிகளை தொடக்கி வைக்கும் வகையில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்ளையும் நாட்டினர்.

புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட பொறியாளர்கள் பிரிவின் செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும்

வகையில் உத்தியோகபூர்வ ஏட்டில் இராணுவ தளபதி வைபவ ரீதியாக கையொப்பமிட்டார்.

புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட பொறியாளர்கள் பிரிவுக்கான முதலாவது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2020 ஒக்டோபர் 28 ம் திகதி முதல்

அமுலுக்கு வரும் வகையில் இப் புதிய பொறியியலாளர் பிரிவின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சப்பர்ஸ் குடா ஒய்வு விடுதி வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பேட்மிட்டன் மைதானம் மற்றும் அனைத்து உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சி கூடத்தையும் இராணுவ

தளபதி திறந்து வைத்தார். அத்துடன் இரசாயன அச்சுறுத்தல்கள், வெடிப்பொருட்கள் அகற்றுதலுக்கு எதிரான தமது எதிர் நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பாக

இராணுவ இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணு சக்தி படை வீரர்களினால் காட்சிப்படுத்தப்பட்ட ஒத்திகை காட்சியையும் இராணுவ தளபதி கண்டுகளித்தார்.

“எமது பணம் வெளிநாடுகளில் பொருட்களை கொள்வனவு செய்வதில் செலவிடுவதற்கு பதிலாக நாம் உயர் தொழில்நுட்பத்துடன் அதிநவீன இயந்திரங்களைப் பெற்று

ஜனாதிபதியின் ஆசியுடன் முடிவுப்பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும்” என தெரிவித்த இராணுவ தளபதி,

இராணுவத்தினரால் குறைந்த செலவில் உயர்ந்த தரத்துடன் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் தொடர்பாகவும் நினைவுகூர்ந்தார்.

இந்த நிகழ்வில் இலங்கை பொறியியலாளர்கள் படையணியின் படைத் தளபதியும் இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் ஜகத் குனவர்தன, பிரதி பதவி நிலை பிரதானி, இராணுவத்

தளபதி, இலங்கை இராணுவ தொண்டர் படைத் தளபதி, மேற்கு பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி , கள பொறியியலாளர்

தலைமை அதிகாரி, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவீல் ஒருவர் கோரமாக அடித்து, வெட்டிக் கொலை

முல்லைத்தீவீல் ஒருவர் கோரமாக அடித்து, வெட்டிக் கொலை

முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு கிராமத்தில் பால்பண்ணை

பகுதியில் வசிக்கம் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து, வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்றிரவு (19) இடம்பெற்றுள்ளது.

32 அகவையுடைய ஒரு பிள்ளையின் தந்தையான ஜெயமோகன் நிரோசன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையுடன் தொடர்புடைய குடும்ப பெண் ஒருவர்​ முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த குடும்பஸ்தரின் உடலில், தலையில் இரண்டு வெட்டுக்காயங்கள்

காணப்படுவதால் பிரேத பரிசோதனையின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

சம்பவம் குறித்து முள்ளியவளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Posted in இலங்கை செய்திகள்

திடீரென கறுப்பு நிறமாக மாறிய கிணற்றுநீர்

திடீரென கறுப்பு நிறமாக மாறிய கிணற்றுநீர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட

வேணாவில் கிராமத்தில் கிணற்று நீர் திடீரென கறுப்பு நிறமாக மாறிய அதிசய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கிணற்று நீர் கறுப்பு நிறமாக மாறிய சம்பவத்தை மக்கள் பலர்

சென்று பார்வையிட்டு வருவதோடு இந்த சம்பவம் எவ்வாறு

நிகழ்ந்தது என்பது தொடர்பான மேலதிக விடயங்கள் இதுவரை தெரியவில்லை.

Posted in இலங்கை செய்திகள்

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய பிரபல நடிகர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய பிரபல நடிகர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பொலிஸாரிற்கு இடையூறு

விளைவித்த பிரபல நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருலப்பனை பொலிஸாரினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரிடம் தற்போது வாக்குமூலம் பெறப்பட்டு வருவதுடன் சம்பவம்

தொடர்பில் கிருலப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்றால் பதிக்கப்பட்ட மேலும் 04 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா தொற்றால் பதிக்கப்பட்ட மேலும் 04 பேர் உயிரிழப்பு

நேற்றைய தினம் (19) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கொவிட் 19 கொற்றுக்குள்ளான நோயாளர்களில் நான்கு பேர் (4) உயிரிழந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 73 என பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

  1. கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண் நபர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.மரணத்திற்கான காரணம் கொவிட்19
  2. தொற்றுக்குள்ளானதுடன் ஏற்பட்ட நிமோனியா நிலைமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  3. 27 வயதான, கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த பெண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் முல்லேரியா
  4. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதினால் கல்லீரல் நோய்
  5. நிலை அதிகரித்தமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  6. களுத்துறை மாவட்டத்தில் பொக்குணு விற்றவைச்சேர்ந்த 59 வயதான பெண்.. வீட்டில் உயிரிழந்துள்ளார். உயிர்
  7. இழந்தமைக்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளாமை மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  8. களுத்துறை மாவட்டதில் ஹல்தொட்ட பிரதேசத்தைச் சேர்த 86 வயதான ஆண் நபர்.வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான
  9. காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளாதைத் தொடர்ந்து ஏற்பட்ட மார்பு தொற்று என தெரிவிக்கப்பட்டுள்ளது
Posted in உலக செய்திகள்

ஒபாமாவின் புத்தகம் ஒரே நாளில் 8.9 இலட்சம் பிரதிகள் விற்பனை

ஒபாமாவின் புத்தகம் ஒரே நாளில் 8.9 இலட்சம் பிரதிகள் விற்பனை

அமெரிக்க முன்னாள் அதிபார் ஒபாமா எழுதியுள்ள ‘எ ப்ராமிஸ்டு லேண்ட்’ புத்தகம் முதல் நாள் விற்பனையில் சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து அந்தப் புத்தகத்தின் பதிப்பாளார் பெங்குவின் ராண்டம் ஹவுஸ் நிறுவனம் கூறியுள்ளதாவது, ஒபாமா எழுதியுள்ள வாழ்க்கைக் குறிப்பு புத்தகமான ‘எ ப்ராமிஸ்டு லேண்ட்’,

வெளியிடப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அமெரிக்காவிலும் கனடாவிலும் 8.9 இலட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளது.

முன்பதிவு செய்து வாங்கப்பட்ட பிரதிகள், மின்னணுப் பிரதிகள், மற்றும் ஒலி வடிவப் பிரதிகளும் இதில் அடங்கும்.

எங்களது பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட எந்தவொரு புத்தகமும் இதுவரை இவ்வளவு அதிக பிரதிகள் விற்பனையானதில்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர், ஒபாமாவின் மனைவி மிஷெல் எழுதிய ‘பிகமிங்’ புத்தகம் தான் பெங்குயின் வெளியிட்ட ஒரே நாளில் மிக அதிகமாக விற்பனையானது.

2018 ஆம் ஆண்டில் அந்தப் புத்தகம் வெளியான 24 மணி நேரத்தில் 7.25 இலட்சம் பிரதிகள் விற்பனையாகின. புதன்கிழமை

நிலவரப்படி, அமேஸான் வலைதளத்தில் மிக அதிகமாக விற்பனையாகும் புத்தகங்களின் வரிசையில் ஒபாமாவின் ‘எ ப்ராமிஸ்டு லேண்ட்’ முதலிடத்தில் உள்ளது

Posted in இலங்கை செய்திகள்

மாவீரர்களை நினைவேந்த உலகத்தமிழர்களாய் தயாராவோம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

மாவீரர்களை நினைவேந்த உலகத்தமிழர்களாய் தயாராவோம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

தமிழீழத் தேசிய மாவீரர் நாளினை முன்னெடுப்பதற்கு அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் தாயக மக்களின் உணர்வெழுச்சியின் வடிவமாக உலகத்தமிழர்கள் நாம்

இணையவழியே ஒன்று கூடி மாவீரர்களை நினைவேந்த தயாராவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.

ஆக்கிரமிப்புக்கு எதிராக, இனஅழிப்புக்கு எதிராக மண்ணையும் மக்களையும் பாதுகாக்கப் போராடினார்களேயன்றி, எவரையும் ஆக்கிரமிப்பதற்காகவோ அடிமை கொள்வதற்காகவோ மாவீரர்கள்

போராடவில்லை. ஆனால் இன்று தமிழர் தேசத்தை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிங்கள பேரினவாத அரசு, தமிழர்களின் நினைவேந்தும் உரிமைக்கு சவால்விடுத்து வருகின்றது.

இந்நிலையில் தாயகம், தேசிய, அரசியல் இறைமைக்காக தமது உன்னதமான உயிர்களை ஈகம் செய்த எமது தேசப்புதல்வர்களை நெஞ்சினில் ஏந்தி, உலகத்தமிழர் நாம் மாவீரர்கள் என்ற

ஒற்றைப்புள்ளியில் உணர்வெழுச்சியோடு ஒன்றுகூடுவோம் என அறைகூவல் விடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மாவீரர்

வாரம், மாவீரர் நாள் நிகழ்வுகளை மற்றும் உலகத்தமிழ் ஊடகங்கள் மூலமாக நேரஞ்சலாக காணமுடியும் எனத் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு விடுத்துள்ள அறிக்கையின் முழுவடிவம் :

தமிழீழ தேசத்தை தமது உதிரத்தால் உயிர்ப்பித்த நம் தேசப் புதல்வர்களின் திருநாளாகிய மாவீரர் நாளினை நினைவேந்த உலகத்தமிழர்களாய் நாம் தயாராவோம்.

ஈழத்தமிழ் மக்களின் விடுதலை வேட்கையினைத் தமது வீரத்தாலும் ஈகத்தாலும் உலகெங்கும் முரசறைந்து, அனைத்துலக உலக

ஒழுங்கில் ஈழத்தமிழர் பிரச்சினையை ஒரு பேசுபொருளாக மாற்றிய விடுதலை வீரர்கள் மாவீரர்கள்.

ஆக்கிரமிப்புக்கு எதிராக, இனஅழிப்புக்கு எதிராக மண்ணையும் மக்களையும் பாதுகாக்கப் போராடினார்களேயன்றி, எவரையும் ஆக்கிரமிப்பதற்காகவோ அடிமை கொள்வதற்காகவோ மாவீரர்கள்

போராடவில்லை. ஆனால் இன்று தமிழர் தேசத்தை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிங்கள பேரினவாக அரசு, தமிழர்களின் நினைவேந்தும் உரிமைக்கு சவால்விடுத்து வருகின்றது.

ஈழத்தமிழ் மக்களின் மனங்களில் அணையாத தீபமாக சுடர்விட்டுக் கொண்டிருக்கும் தியாகதீபம் லெப் கேணல் தீலிபனின்

நினைவேந்தல் நிகழ்வுகளை, தாயக மக்கள் முன்னெடுப்பதற்கு சிறிலங்கா அரசகட்டமைப்பு ஏற்படுத்திய தடைகளை முன்னராக ஏற்படுத்தியிருந்தது.

தற்போது மாவீரர் நாளினை முன்னெடுக்க முனையும் செயற்பாடுகளுக்கு சிறிலங்கா பாதுகாப்பு தரப்பு அச்சுறுத்தி வருகின்றது.

மறுபுறம் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பல்வேறு புலம்பெயர் நாடுகளில் மக்கள் பெருமளவில் பங்கெடுத்து மாவீரர்களை நினைவேந்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலைமைகளை கவனத்தில் கொண்டு தாயக மக்களின் உணர்வெழுச்சியின் வடிவமாக உலகத்தமிழர்கள் நாம் இணையவழியே ஒன்றுகூடி மாவீரர்களை நினைவேந்த

தயாராவோம். இதற்காக உலகத்தமிழர்களை ஒருங்கிணைத்தவாறு ஏற்பாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

மாவீரர் நாள் வாரம் :

நொவெம்பர் 21ம் நாள் முதல் 26ம் நாள் வரை உணர்வுபூர்மாக புலம்பெயர் இளையோர்களால் முன்னெடுக்கப்படுகின்றது.

நொவெம்பர் 27 – மாவீரர் நாள் :

தாயக நேரம் மாலை 6h05க்கு தொடங்கவிருக்கின்ற இணைவழியிலான மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றது.

இந்நிகழ்வுகளை www.tgte.tv – Facebook : tgteofficial மற்றும் உலகத்தமிழ் ஊடகங்கள் மூலமாக நேரஞ்சலாக ஒளிபரப்பாகின்றது.

தாயகம், தேசிய, அரசியல் இறைமைக்காக தமது உன்னதமான உயிர்களை ஈகம் செய்த எமது தேசப்புதல்வர்களை நெஞ்சினில்

ஏந்தி, உலகத்தமிழர் நாம் மாவீரர்கள் என்ற ஒற்றைப்புள்ளியில் உணர்வெழுச்சியோடு ஒன்றுகூடுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

போருக்கு நிதி ஒதுக்கிய கோட்டா அரசு – உறுமிய சிறிதரன் வீடியோ

போருக்கு நிதி ஒதுக்கிய கோட்டா அரசு – உறுமிய சிறிதரன் வீடியோ

ஆளும் கோத்தபாயவின் ஆட்சியின் முதலாவது வரவு செலவு நிதி

ஒதுக்கீட்டில் போருக்கு பல மில்லியன் ஒதுக்கி இருப்பதாக சிறிதரன் முழங்கியுள்ளார்

இது ஏன் என்ற கேள்வியை எழுப்பிய சிறிதரன் ,தமிழ் மக்கள் தொடர்ந்து புறம் தள்ள பட்டு வருவதாக தொடர்ந்து அவர் சுட்டி காட்டியுள்ளார்

முழுமையாக அந்த காணொளியை பாருங்கள் இங்கேஅழுத்துங்க

https://www.facebook.com/ImShritharan/videos/375237100364118
Posted in இலங்கை செய்திகள்

மாவீரர் நாள் நடக்கும் – சிறிதரன் முழக்கம் = வீடியோ

மாவீரர் நாள் நடக்கும் – சிறிதரன் முழக்கம் = வீடியோ

தமிழர் பகுதியில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடப் பாண்டு வைரஸ் பாதிப்பின் விதிமுறை படி


இந்த நினைவு கூறல்கள் நடக்கும் என கவுரவ பாராளுமன்ற

உறுப்பினர் சிறுத்தை புலி சிறிதரன் முழங்கியுள்ளார்

கீழே காணொளியை பார்க்கவும் கிளிக் here

https://www.facebook.com/147809565379816/videos/998671540959832

Posted in இலங்கை செய்திகள்

தெல்தோட்டையில் ஆலய நிர்மான பனியில் மோசடியாம் பிரதமருக்கு கடிதம்

தெல்தோட்டையில் ஆலய நிர்மான பனியில் மோசடியாம் பிரதமருக்கு கடிதம்

ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மதங்களின் பங்கு முக்கியத்தவமானது அது எந்த மதமாகவும் இருக்கலாம். அந்த வகையில் மதங்ககளையும் மத சார்பான விடயங்களையும்

மதஸ்தானங்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டிய பொருப்பு எம் அனைவருக்கும் இருக்கின்றது. இவ்வாறு அபிவிருத்தி என்ற போர்வையில் தெல்தோட்டையில் மதஸ்தானம் ஒன்று பாதிக்கபட்டு

வருவதையிட்டு செய்தியாக கொண்டு வருவதில் நாங்கள் கவலை அடைகின்றோம். இது மதத்திற்கோ அல்லது மதஸ்தானத்திற்கோ

சேரு பூசும் நடவடிக்கை அல்ல. தப்புக்கள் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காவும் மதங்கள் பாதுகாக்கபட வேண்டும் என்பதற்காவே.

தற்போது தெல்தோட்டையில் அமைந்துள்ள மிகவும் தொன்மையான ஒரு ஆலயம் ஒன்று புரணரமக்கப்பட்டு வருகின்றது. அண்மை காலமாக இந்த ஆலயத்தின் நிர்மாண

வேலையின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட ஆலய நிர்வாக சபையினர் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என கூறியும் இதiனால் சைவ மக்கள் பெரிதும் பாதித்து வருவதாகவும் இதனை

உடனடியாக திருத்தி அமைப்பதற்கு பொருப்பாக இருக்கும் அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் நடவடிக்கை எடுக்க

வேண்டும் எனகோரியும் பிரதமருக்கு கடிதம் ஒன்று அனுப்பபட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.

இந்த ஆலயம் இந்து கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு ஆலயமாகும். இந்த ஆலய நிர்மாண பனிக்கு நகர வர்த்தகர்கள் பெருந்தோட்ட மக்கள் அரசியல் பிரமுகர்கள் தனவந்தகர்கள் உட்பட

பல்வேறு நன்கொடையாளர்கள் தங்களது நன்கொடைகளை பணமாகவும் பொருட்களாகவும் வழங்கி வருகின்றனர். இருந்தும் இந்ந பணம் முறையாக கையாளப்படவில்லை. பணத்திற்கான

உரிய கணக்குகள் சமர்பிப்பாடவில்லை. பொருட்கள்; பாவனைக்கு உட்படுத்தாது கைவிடப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றது. இந்த ஆலயத்தின் நிர்மாண பனி பல வருடங்களாக முன்னெடுக்கபட்ட

போதும் இது வரை பூர்த்தியாகவில்லை இதனால் இந்த பிரதேசத்தில் வாழும் பொது மக்கள் பெரிதும் பாதிப்டைந்து வருகின்றனர்.

தற்போது ஆலய வளாகம் கைவிடப்பட்டு அமைக்கபட்ட கட்டுமான பனிகளும் பாதிப்படைந்து வருகின்றது. என கூறி இந்த கடிதம் பிரதமருக்கு அனுப்பபட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேற்படி

ஆலய பரிபான சபையின் தலைவர் சின்னையா சத்தியநாதன் அவர்களை தொடர்பு கொண்ட போது. ஆலயம் ஒன்று கட்டுவது இழகுவான காரியமல்ல. சில குறைபாடுகள் இருக்கதான்

செய்கின்றது. இதனை நிவர்த்தி செய்வதற்கு போதுமான பணம் இல்லை. கிடைத்த உதவிகளை முiறாக பயன்படுத்தி உள்ளோம்.

தொடர்ந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம் என்று கூறினார்.

பொதுவாக மலையத்தில் ஆயிரகணக்கான கோவில்கள் இவ்வாறு உரிய திட்ட வரைபு இல்லாமல் உடைக்கபப்பட்டு பணம் போதைமையால் கைவிடபட்டு காணப்படுகின்றது. முதலில்

தங்களிடம் இருக்கும் பணத்திற்கு ஏற்ப ஆலயத்தை அமைப்பதற்கு முயற்சிப்பதில்லை. இருந்த ஆலயத்தையும் உடைத்து விட்டு ஆலயமே இல்லாமல் மக்கள் இன்று பாதித்து வருகின்றனர். இந்து

கலாச்சார அமைச்சு இதன் மேல் கவணம் எடுத்து ஆலயங்களை உடைப்பதில் தடைகளை கொண்டு வர வேண்டும். பணம் இருந்தால்

உடைத்து கட்டலாம் என்ற நிலை உறுவாக வேண்டும். நன்றாக இருந்த கோவிலை உடைத்து நாசமாக்கிய நிலையை தடை செய்ய வேண்டும்.

Posted in உலக செய்திகள்

உலக மக்களினால் அதிகம் விரும்ப படுபவர்களாக ஒபாமா தம்பதிகள் தெரிவு

உலக மக்களினால் அதிகம் விரும்ப படுபவர்களாக ஒபாமா தம்பதிகள் தெரிவு

உலக மக்கள் அதிகம் நேசிக்கும் நபர்களாக அமெரிக்காவின்

முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தம்பதிகள் தெரிவு செய்ய பட்டுள்ளனர்

இவர்களின் மனித நேய அறம் சார்ந்த செயல் பாடுகள் மற்றும்

,வெளிப்படை தன்மையான நகர்வுகள் மக்கள் விரும்ப காரணம் என தெரிவிக்க பட்டுள்ளது

Posted in உலக செய்திகள்

அப்பாவி மக்கள் 39 பேரை கொன்று குவித்த அவுஸ்ரேலியா இராணுவம்

அப்பாவி மக்கள் 39 பேரை கொன்று குவித்த அவுஸ்ரேலியா இராணுவம்

ஆப் கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள அவுஸ்ரேலியா இராணுவம்

அந்த நாட்டின் அப்பாவி மக்கள் முப்பத்தி ஒன்பது பேரை கொன்று

குவித்துள்ள செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்கா ஆதரவு படைகளாக செயல் பட்டு வரும்

அவுஸ்ரேலியாவின் இந்த செயல் தொடர்பான நீதி விசாரணைகள் மேற்கொள்ள படவுள்ளன

போர்க்குற்ற செயல்களில் இவர்கள் ஈடுபட்டு மனித உரிமை மீறல்களை புரிந்துள்ளதாக குற்றம் சுமத்த பட்டுள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் அரசு -இராணுவத்திற்கு 16.5 பில்லியன் நிதி ஒதுக்கு

பிரிட்டன் அரசு -இராணுவத்திற்கு 16.5 பில்லியன் நிதி ஒதுக்கு

பிரிட்டன் ஆளும் அரசு இராணுவத்தில் புதிய ஆயுத தளபாட உற்பத்தி

மற்றும் இராணுவ அபிவிருத்திக்கு என சுமார் 16.5 பில்லியன் பவண்டுகளை ஒதுக்கியுள்ளது

தொடர்ந்து நிலவி வரும் பனிப்போர் காரணமாக தமது

இராணுவத்தை மீள கட்டமைக்க இந்த நிதி தேவை படுவதாக கூறி மேற்படி நிதி ஒதுக்க பட்டுளள்து

பாதுகாப்பு செலவீனத்திற்கு மிக பெரும் நிதி ஒதுக்கியுள்ளது மூன்றாம்

உலக போருக்கு நாடுகள் தயாராகி வருகின்றனவா என்ற சந்தேகத்தய் கிளப்பியுள்ளது

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் கடும் புயல் தாக்குதல் – 26 பேர் பலி

அமெரிக்காவில் கடும் புயல் தாக்குதல் – 26 பேர் பலி

மத்திய ம்,ஏரிக்காவில் கடும் புயல் தாக்குதலில் சிக்கி இதுவரை இருபத்தி

ஆறு மக்கள் பலியாகியுள்ளனர்
மேலும் பல ஆயிரம் மக்கள் தமது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்

தொடர்ந்து கடும் மழை புயல் கோர தாண்டவம் ஆடி வருகிறது

மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன

Posted in உலக செய்திகள்

கொரனோ வெறிக்கு -13 லட்சத்து 53 ஆயிரம் பேர் பலி

கொரனோ வெறிக்கு -13 லட்சத்து 53 ஆயிரம் பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 லட்சத்து 53 ஆயிரத்தை கடந்தது.

13 லட்சத்து 53 ஆயிரம் பேர் பலி – திணறும் உலக நாடுகள்

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வைரஸ் தற்போது உலகின் 217 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 53 ஆயிரத்தை கடந்துள்ளது.

குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 474 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 1,908 பேரும், பிரேசிலில் 754 பேரும், இத்தாலியில் 753 பேரும், போலந்தில் 603 பேரும் கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, 5 கோடியே 65 லட்சத்து 40 ஆயிரத்து 752 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 1 கோடியே 58 லட்சத்து 70 ஆயிரத்து 617 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1 லட்சத்து 1 ஆயிரத்து 100 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 3 கோடியே 90 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 லட்சத்து 53 ஆயிரத்து 871 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா – 2,56,206
பிரேசில் – 1,67,497
இந்தியா – 1,30,993
மெக்சிகோ – 99,026
இங்கிலாந்து – 53,274
இத்தாலி – 47,217
பிரான்ஸ் – 46,698
ஈரான் – 42,941
ஸ்பெயின் – 42,039

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் பிச்சை எடுத்தாலும், கொடுத்தாலும் தண்டனை

இலங்கையில் பிச்சை எடுத்தாலும், கொடுத்தாலும் தண்டனை

இலங்கையில் பிச்சை எடுத்தாலும், பிச்சை கொடுத்தாலும் தண்டனை விதிக்கப்படும் என்று போலீசார் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

இலங்கையில் பிச்சை எடுத்தாலும், கொடுத்தாலும் தண்டனை
கோப்புபடம்

இலங்கையில் பிச்சை எடுத்தாலும், பிச்சை கொடுத்தாலும் தண்டனை விதிக்கப்படும் என்று போலீசார் அதிரடியாக

அறிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி அஜித்ரோஹணா கூறியதாவது:-

கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிச்சை எடுப்பவர்களில் 95 சதவீதம் பேர் உண்மையான யாசகர்கள் கிடையாது. வர்த்தக நோக்கத்துடன் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை தற்போது

அதிகரித்து இருக்கிறது. ஒரு நபரின் வழிகாட்டுதலின்படி பெரும்பாலானோர் பிச்சை எடுக்கிறார்கள். அவர்களுக்கு தினமும் சம்பளம் வழங்கப்படுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

போக்குவரத்து சிக்னல்களில் பிச்சை எடுப்பவர்களால் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சிக்னல் அருகே பிச்சை எடுப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல சிக்னல்

பகுதியில் பிச்சை அளிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். உண்மையாக பிச்சை எடுப்பவர்கள் குறித்து சமூக சேவை நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து முடிவு

எடுக்கப்படும்.உண்மையாக பிச்சை எடுப்பவர்கள் பிரதான நகரங்களிலும், சிக்னல் பகுதியிலும் பிச்சை எடுப்பதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.