Posted in இலங்கை செய்திகள்

ரணில் அதிரடி -ருவானே ஐ.தே.கவின் தலைவர்

ரணில் அதிரடி -ருவானே ஐ.தே.கவின் தலைவர்

ஐ.தே.கவின் உபதலைவராக இருக்கும் ருவான் விஜேவர்த்தனவே என்று ஐக்கிய

தேசியக் கட்சியின் அடுத்தத் தலைவராக நியமிக்கப்படுவார் என்று தான்

உறுதியாக நம்புவதாக, ஐ.தே.கவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று (21), ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பின்னர், ருவான் விஜேவர்தனவே

கட்சித் தலைவராக வருவார் என்பதில், எந்தவொரு வாதமும்

முன்னெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

காதலித்த பெண்களின் ஆபாச படம் வைத்திருந்த காதல் மன்னன் சிக்கினார்

காதலித்த பெண்களின் ஆபாச படம் வைத்திருந்த காதல் மன்னன் சிக்கினார்

தமிழகத்தில் பொறியியல் படிப்பு படித்த வாலிபர் ஒருவர் முகநூல் ,மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடக பல பெண்களுக்கு காதல்

வலை விரித்து அதில் பெண்களுடன் ஆபாசமாக உரையாடி

அவர்கள் அந்தரங்க காட்சிகளை கைபேசியில் வைத்திருந்த நிலையில் சிக்கினார்

இவரால் தொடர் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்க பட்டு வந்த இளம் பெண் ஒருவர் பெற்றவர்கள் காவல்துறைக்கு வழங்கிய

தகவலின் அடைப்படையில் குறித்த வாலிபர் நகர்வுகள் கண்காணிக்க பட்டன


அதன் வழியே காதல் மன்னன் மடக்கி பிடிக்க பட்டார்
அப்பொழுது

அவர் கைபேசியை ஆராய்ந்த பொழுதே இந்த அந்தரங்க ஆவணங்கள் பலநூறு சிக்கியது

சினிமாவை மிஞ்சிய காதல் கில்லாடி இவர் தான் போல

Posted in உலக செய்திகள்

ஒரு பெண்ணை காதலித்த ,அண்ணன் தம்பி

ஒரு பெண்ணை காதலித்த ,அண்ணன் தம்பி

தமிழகத்தில் சினிமா பாணியில் ஒரு பெண்ணை அண்ணன் தம்பி

காதலித்து வந்துள்ளது அம்பலமாகியுள்ளது

அண்ணன் காதலித்த பெண்ணை அதே தம்பி காதலித்து திருமணம் முடித்தார் ,

இதனால் மனம் உடைந்த அண்ணன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்தார் ,

இதனை அறிந்த தம்பதிகள் நஞ்சை அருந்தினர் ,இதனால்

தம்பதிகள் தொடர்ந்து மருத்துவ மனையில் அபாயம் கட்டத்தில் உள்ளனர்

சினிமாவை மிஞ்சிய அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதால் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பு நிலவுகிறது

Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் டிசம்பர் 2 லொக்டவுன் முடிவுக்கு வருகிறது

பிரிட்டனில் டிசம்பர் 2 லொக்டவுன் முடிவுக்கு வருகிறது

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் வைரஸ் பரவல் காரணமாக உயிரிழப்பு அதிகரித்தது ,ஆனல் தற்போது அதன் உயிர்

பலி எண்ணிக்கை குறைந்ததை அடுத்து தற்பொழுது


டிசம்பர் இரண்டாம் திகதியுடன் லொக்கடவுன் முழுமையாக நீக்க

பட்டு பிரிட்டன் வழமை போன்று இயல்பு நிலைக்கு திரும்பும் என நிபுணர் குழு ஒன்று தெரிவித்துள்ளது

தமது பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு இவ்விதம் செய்கிறது என்ற குற்ற சாட்டு ஒருபுறம் ,மறுபுறம் கொரனோ ஊசி வெளியிட

பட்ட நிலையில் இந்த லக்கடவுன் மீள நீக்கும் நிலைக்கு அரசு செல்கிறது என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது

Posted in உலக செய்திகள்

மீனவர் வலையில் சிக்கிய 1000 கிலோ மீன்

மீனவர் வலையில் சிக்கிய 1000 கிலோ மீன்

தமிழகத்தில் மீனவர் வலையில் ஆயிரம் கிலோ எடையுள்ள திருக்கை மீன் ஒன்று சிக்கியுள்ளது


வலையை கரைக்கு இழுத்து வர சிரம பட்ட மீனவர்க்ள, மேலும் சில

படகுகளை இணைந்து கரைக்கு இழுத்தனர் அப்பொழுதே வலையில்

இந்த இராட்சத மீன் இழுத்து வரப்பட்டது

Posted in உலக செய்திகள்

பிரேசில் நாட்டில்- கருப்பினத்தவர் அடித்துக் கொலை

பிரேசில் நாட்டில்- கருப்பினத்தவர் அடித்துக் கொலை

பிரேசில் நாட்டில் கருப்பினத்தவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து பல்பொருள் அங்காடியில் வன்முறை வெடித்தது.

பிரேசில் நாட்டில் பல்பொருள் அங்காடி பாதுகாவலர்களால் கருப்பினத்தவர் அடித்துக் கொலை


கலவரம் நடந்த பல்பொருள் அங்காடியை படத்தில் காணலாம்
பிரேசிலியா:

தெற்கு பிரேசிலில் உள்ள போர்ட்டோ அலெக்ரே நகரத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில், கருப்பினத்தவரான ஜோவோ அல்பெர்டோ(வயது 40) என்ற நபர் அங்குள்ள பாதுகாவலர்களால்

அடித்துக் கொல்லப்பட்டார். இது குறித்து வீடியோ காட்சிகள் அங்குள்ள உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட பல்பொருள் அங்காடி போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. தற்போது, பிரேசில் முழுவதும் கருப்பினத்தவர் உரிமை மீட்பு முழக்கங்கள் எழத்

தொடங்கியுள்ளன. பிரேசில் நாட்டில் ஏற்கனவே கருப்பின மக்களுக்கான உரிமை குறித்து பல்வேறு போராட்டங்கள் நடந்து

வரும் நிலையில், இந்த சம்பவம் அங்குள்ள மக்களிடையே மேலும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்த பல்பொருள் அங்காடியின் முன்பு மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்திற்கு அந்த நிறுவனம் சார்பில் வருத்தம் தெரிவித்ததோடு, இதில் சம்பந்தப்பட்ட

காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Posted in உலக செய்திகள்

போதைக்காக கிருமி நாசினியை குடித்த 7 பேர் பலி

போதைக்காக கிருமி நாசினியை குடித்த 7 பேர் பலி

ரஷியாவில் போதைக்காக கிருமி நாசினியை குடித்த 7 பேர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ரஷியாவில் போதைக்காக கிருமி நாசினியை குடித்த 7 பேர் பலி

ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி பெற்ற பிராந்தியம் சகா. அங்குள்ள டாட்டின்ஸ்கி என்ற மாவட்டத்தை

சேர்ந்த சிலர் போதைக்காக மதுவுக்கு பதில் கிருமி நாசினியை குடித்தனர். அடுத்த சில மணி நேரத்தில் அவர்களுக்கு வாந்தி மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்த

போதும் சிகிச்சை பலனளிக்காமல் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Posted in உலக செய்திகள்

வீட்டில் சிக்கிய கஞ்சா – நடிகை கைது

வீட்டில் சிக்கிய கஞ்சா – நடிகை கைது

அந்தேரி வீட்டில் கஞ்சா சிக்கியதை தொடர்ந்து நகைச்சுவை நடிகை பாரதி சிங்கை போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடியாக கைது செய்தனர்.

வீட்டில் கஞ்சா சிக்கியதால் நகைச்சுவை நடிகை கைது – போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை அடுத்து மும்பையில் இந்தி திரையுலகினர் மற்றும் போதைப் பொருள் கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து போதைப்பொருள் தடுப்பு

பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட நடிகை ரியா சக்கரவர்த்தி தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.

இதுதவிர தீபிகா படுகோனே, ரகுல் பிரீத்சிங், ஷரத்தா கபூர், சாரா அலிகான் உள்ளிட்ட முன்னணி நடிகைகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. சமீபத்தில் கூட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர்

தயாரிப்பாளர் பிரோஸ் நாடிவாலாவின் வீட்டில் சோதனை நடத்தி கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவரது மனைவியை கைது

செய்தனர். இதேபோல பிரபல நடிகர் அர்ஜூன் ராம்பால் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று அந்தேரி லோகன்ட்வாலா பகுதியில் உள்ள பிரபல நகைச்சுவை நடிகை

பாரதி சிங்கின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்து சிறிய அளவில் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பாரதி சிங் கிலாடி 786, சனம் ரே உள்ளிட்ட இந்திப் படங்களில் நடித்துள்ளார். பல டி.வி. நிகழ்ச்சிகளிலும், நகைச்சுவை

நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார். சில டி.வி. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார்.

இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், போதைப் பொருள் வி்ற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினோம். அப்போது நடிகை பாரதி சிங்கின் பெயரும்

அடிபட்டது. இதையடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்தி உள்ளோம். அவரது வீட்டில் இருந்து சிறிய அளவில் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

வீட்டில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து பாரதி சிங் விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு

வரவழைக்கப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பின் பாரதி சிங்கை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Posted in இலங்கை செய்திகள்

பாம்பு தீண்டிய நிலையில சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில்

பாம்பு தீண்டிய நிலையில சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில்

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு பாம்பு

தீண்டிய நிலையில் பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து நேற்று (20) இரவு மணியளவில் வீடு

செல்வதற்காக அவர் அலுவலகத்தின் கதவை மூடிய போது அதிலிருந்த பாம்பு ஒன்று கையில் தீண்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மந்திகை ஆதார வைத்தியசாலையில் உடனடியாக அவர் சேர்க்கப்பட்டார். அங்கு வைத்திய பரிசோதனையின் பின்னர் அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

Posted in இலங்கை செய்திகள்

வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற பெண்-தேடும் பொலிஸ்

வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற பெண்-தேடும் பொலிஸ்

கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தப்பிச் சென்ற பெண்ணை தேடும் பணிகள் தொடர்ந்தும்

முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு தனது இரண்டு வயது குழந்தையுடன் குறித்த பெண் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றிருந்தார்.

குறித்த குழந்தை உறவினர் வீடொன்றில் இருந்து நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

குறித்த 25 வயதுடைய பெண் தொடர்ந்தும் தலைமறைவாகவெ இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் குறித்த பெண் பேருந்து ஒன்றில் இருந்து இறங்கி கிரிஎல்ல நகரில் உள்ள காட்டுப்பகுதியில் தலைமறைவாக #

இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

8 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்குள்; மூடக்கம்

8 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்குள்; மூடக்கம்

பண்டாரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட அட்டுலுகம

பகுதியின் 8 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அட்டுலுகம பகுதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின்

அடிப்படையில் 17 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

இப்பகுதிக்கு எவ்வாறு கொரோனா வந்தது என இதுவரையில் இனங்காணப்படவில்லை

என களுத்துறை மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய உதய ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

கொரனோ பரவல் -சிலாபம் மீன் சந்தைக்கு பூட்டு

கொரனோ பரவல் -சிலாபம் மீன் சந்தைக்கு பூட்டு

கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் சிலாபம் பொது மீன் சந்தை ஒருவார காலத்திற்கு

மூடப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் கே.பி.சந்தன குமார தெரிவித்தார்.

சிலாபம் பொது மீன் சந்தைக்கு வருகை தந்தோரில் 50 பேருக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிலாபம் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும்

பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகள் குழு சிலாபம் நகர சபை கட்டத்தில் நேற்று (20) நடத்திய விஷேட கலந்துரையாடலின் போதே

, பொது மீன் சந்தையை ஒரு வார காலத்திற்கு மூடவது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், சிலாபத்திலுள்ள மீனவர்கள் மீன்களை சிலாபம் நகரிலுள்ள துறைமுகத்துக்கு அருகில் விற்பனை செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

வெளிநாட்டு தமிழ் முதலாளிகளுக்கு வலைவிரிக்கும் – கோட்டா மகிந்தா

வெளிநாட்டு தமிழ் முதலாளிகளுக்கு வலைவிரிக்கும் – கோட்டா மகிந்தா

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வினை வழங்கினால். வெளிநாடுகளில் உள்ள தமிழ் முதலீட்டாளர்கள் மீண்டும் நாட்டிற்கு வந்து முதலீடுகளை மேற்கொள்வார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

வரவு செலவுதிட்டம் மீதான இரண்டாவது வாசிப்பின் மூன்றாம் நாள் விவாதம் இன்று இடம்பெற்றது. விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் 83

கலவரத்தினைத் தொடர்ந்து நாட்டை விட்டுச்சென்றவர்கள் நாட்டுக்கு திரும்பிவர வேண்டுமாயின் முதலில் அவர்களுக்கு இங்கு

வாழ்வதற்குமுடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

என்னிடமும் பல்வேறு திட்டங்கள் இருகின்றன. அவற்றினை செயற்படுத்துவது குறித்து நாங்கள் பேசுவோம். அவற்றினை

செயற்படுத்துவோம். நானும் பரிந்துரைகளை முன்வைக்க தயாராகவே உள்ளேன்.

உண்மையாக இங்கு இருக்கின்றவர்கள் ஜனாதிபதி, தோல்வியடைந்துள்ளார். தோல்வியடையவில்லை என பேசுகின்றார்கள். ஜனாதிபதி இன்னும் தோல்வியடையவில்லை. ஏனென்றால் ஒரு வருடம் தான் கடந்துள்ளது. இன்னும் 4வருடங்கள் இருக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார்

இந்த வரவு செலவுத் திட்டத்தில் அரச வருமானத்துக்கும் அரச செலவினத்திற்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது. இந்த வேறுபாட்டை 3332நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் கடன்

பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டமானது துண்டுவிழும் தொகையில் உள்ளது. . இது அப்பாவி பொது மக்களின் சுமத்தப்படும் சுமை என்ற அச்சம் எழுகிறது.

கொவிட் 19 வைரசியினால் விழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கும், மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் எந்தவிதமான நிரந்தர

தீர்வும் இங்கு முன்வைக்கப்படவில்லை. இந்த வரவு செலவுத்திட்டத்தில் பாமர மக்களுக்கு எவ்வித நிவாரணங்களும் இல்லை. அத்துடன் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வும் இல்லை

மற்றும் மலையக மக்களின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான எந்த விடயங்களும் இதில் குறிப்பிடப்படாதது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இவற்றை மூடி மறைப்பதற்காக சம்பள உயர்வு முன்மொழிவை மட்டுமே இந்த வரவு-செலவுத் திட்டத்தில் உள்வாங்கி இருக்கிறார்கள். இந்த சம்பள உயர்வு முன்மொழிவும் வரவுசெலவுத்

திட்டத்தின் மூலமாக கொடுக்க முடியாது. இது ஐந்து வருடங்களுக்கு முன்பு முன்வைக்கப்பட்ட கோரிக்கையாகும். இன்றைய விலைவாசி உயர்வு மற்றும் நாணய மதிப்பு

போன்றவற்றுடன் ஒப்பிடும்போது 1,300 ரூபா வழங்கப்பட வேண்டும். ஆகவே இதனைத் தாண்டி இன்னும் ஆயிரம் ரூபா வில் முடக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே பிரதமர் அவர்கள்

உறுதியளித்த படி அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபா இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் உள்ளடக்கப்பட வேண்டும். ஏனென்றால் பிரதமர் அவர்கள் இந்த சபையிலேயே கூறிய பிறகு பெருந்தோட்ட

கம்பனிகள் 1000 ரூபா சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க முடியாது என்று கூறியிருக்கின்றார்கள் எனவே பிரதமர் அவர்கள் நேரடியாக தலையிட்டு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்

ஒரு சகாப்த காலத்துக்கு மேலாக மகிந்த ராஜபக்ஷ சகோதரர்களினால் நாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டின் மூலம் நாட்டின் கடன் தொகை அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

இதில் உழஎனை-19 ஆல் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவது பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. அத்துடன் நாட்டில் வருமானம் வரும் எந்த தகவல்களும் பாதீட்டில்

உள்ளடக்கப்படவில்லை. இன்றைய அரசாங்கம் ஆட்சியைப் பிடிப்பதற்காக மத்திய வங்கி imran parlimentகொள்ளைகளையும், ஈஸ்டர் தாக்குதலையும் பற்றி பேசுகின்றார்கள். எமது அரசாங்கம்

மத்திய வங்கி கொள்ளைலயில் சம்பந்தப்பட்டிருப்பதாக பேசுகிறார்கள். நீங்கள் அரசாங்கத்தில் இருந்துகொண்டு ஏன் இன்னும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் பழி சுமத்திக் கொண்டு இருக்கின்றீர்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தை குறை கூறிக் கொண்டு இருக்காமல் இந்த குற்றங்கள் உண்மையானவையாக இருந்தால் அந்த குற்றங்களுக்கு பின்னால் உள்ள குற்றவாளிகளை எப்படி வெளிப்படுத்துவது

என்பதில் கவனம் செலுத்த வேண்டும். நல்லாட்சியிலும் எத்தனையோ நல்ல விடயங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் தவறுகளும் நடந்திருக்கின்றன. அதற்கான ஒரு

பிராயச்சித்தமாக தான் இன்று இந்த அரசாங்கம். ஆகையால் நீங்களும் அவ்வாறான தவறுகள் விடாமல் எதிர்காலங்களில் மக்களால் போற்றும் கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

முழு உலகமும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளது சர்வதேச போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது தொழிற்சாலைகளும் வர்ததகநிலையங்களும் மூடப்பட்டுள்ளன. வர்த்தக நடவடிக்கைகள்

இடை நிறுத்தப்பட்டுள்ளன எங்கள் மக்களில் ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தொழிலகங்கள் மூடப்பட்டுள்ளன என்பதை நாங்கள்

உணரவேண்டும் மனிங் சந்தையில் நாளாந்தம் உழைப்பவர்கள் முதல் தனது முச்சக்கர வண்டியை லீசிங்கில் பெற்ற முச்சக்கர வண்டி சாரதிகள் முதல் நாளாந்த வருமானம் உழைப்பவர்கள்

அனைவரும் பெரும் துயரத்தில் உள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் தமது பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் உதவவேண்டும்

இளம் தலைவராகயிருந்தவேளை மகிந்த ராஜபக்ச மனித உரிமைக்காக போராடி ஜெனீவா வரை சென்றவர் இதன் காரணமாக மனித உரிமைகளிற்காக குரல்கொடுத்த மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் அதற்கு எதிரான வழியில் பயணிப்பது நல்லதல்ல அவ்வாறான அரசாங்கமொன்றை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்

Posted in உலக செய்திகள்

மக்கள் வீடுகளை எரித்து கையளித்த ஆர்மேனிய இராணுவம்

மக்கள் வீடுகளை எரித்து கையளித்த ஆர்மேனிய இராணுவம்

ஆர்மேனியா மற்றும் சேர்பியன் படைகளுக்கு இடையில் கடும் சண்டை

இடம் பெற்ற வண்ணம் உள்ளது ,உலக நாடுகளின் தலையீட்டால் இரு நாட்டு இராணுவம் போர் ஓய்வு நிலைக்கு செல்வது என முடிவு செய்தன

இதன் படி அசேர்பியா இராணுவத்திடம் மீட்க பட்ட பகுதிகளில் சிலவற்றை

ஒப்படைக்க முடிவு செய்ய பட்டது ,அதன் படி அந்த அபகரிக்க பட்ட பகுதிகளில்

இருந்த மக்கள் வீடுகளை தீ வைத்து ஏறித்தான் அதன் பின்னர் எலும்பு

கூடுகளாக அந்த கிராமங்களை ஆர்மேனிய இராணுவம் ஒப்படைத்துள்ள செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மேற்படி சம்பவ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

துருக்கிய அதிபர் உத்தரவு – லோயர் உள்ளிட்ட 101 பேர் கைது

துருக்கிய அதிபர் உத்தரவு – லோயர் உள்ளிட்ட 101 பேர் கைது

துருக்கியில் ஆளும் சண்டியர் எடகோனின் ஆட்சியில் சர்வாதிகாரம் முற்றி உள்ளது

,தனி இனவெறியுடன் அவரது செயல் பாடுகள் இடம்பெற்று வருகிறது ,

நாடுகள் மீது படையெடுப்பு மற்றும் தனக்கு பிடிக்காதவர்களை இரகசியமாக

போட்டு தள்ளுவது மேலும் பயங்கரவசதிகளுடன் தொடர்பு என கோரி கைது செய்வது என்ற படலம் தொடர்ந்த வண்ணம் உள்ளது

இவ்விதம் குருதீஸ்தான் போராளிகளுடன் தொடர்பு பட்டார் என்ற குற்ற

சாட்டில் முக்கிய சட்டத்தரணி ஒருவர் உள்ளிட்ட நூற்றி ஆறுபேர் கைது செய்ய பட்டுள்ளனர்

மேற்படி விவகாரம் உலக அரங்கில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

பிரேசிலில் ஆறு மில்லியன் பேர் கொரனோவால் பாதிப்பு

பிரேசிலில் ஆறு மில்லியன் பேர் கொரனோவால் பாதிப்பு

பிரேசில் நாட்டில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ்

தாக்குதலில் சிக்கி சுமார் ஆறு மில்லியன் பேர் பாதிக்க பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரா அமைச்சு அறிவித்துள்ளது

மேலும் எதிர் வரும் சில மாதங்களில் இதன் பாதிப்பு எண்ணிக்கை

அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

ஜேர்மனியில் மக்களை கத்தியால் வெட்டிய மர்ம நபர்

ஜெர்மனி நாட்டில் உள்ள ஓபர்க‌ஷன் என்ற இடத்தில் வாலிபர் ஒருவர் திடீரென அங்கிருந்தவர்களை கத்தியால் தாக்க தொடங்கினார்.

இதில் 5 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. மேலும் பலரை அவர் கத்தியால் குத்துவதற்கு முயன்றார். அவரை சிலர் தாக்கினார்கள்.

இதனால் மேலும் அவரால் தாக்குதல் நடத்த முடியவில்லை.

இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

காயம் அடைந்த 5 பேரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்கள். அதில் ஒருவருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கத்தியால் குத்திய வாலிபருக்கும் காயம் ஏற்பட்டு இருந்தது. அவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த வாலிபர் ஏன் இவ்வாறு நடந்து கொண்டார் என்பது தெரியவில்லை.

குடும்ப பிரச்சனையில் மன உளைச்சல் ஏற்பட்டு இவ்வாறு நடந்து கொண்டதாக

முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் பற்றிய விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

நத்தார் தினத்திற்கு முன்பாக பாடசாலைகள் அடித்து பூட்டப் பட மாட்டாது – கல்வி அமைச்சர்

நத்தார் தினத்திற்கு முன்பாக பாடசாலைகள் அடித்து பூட்டப் பட மாட்டாது – கல்வி அமைச்சர்

பிரிட்டனில் எதிர் வரும் நத்தார் தினத்தை முன்னிட்டு அதற்கு முன்பாக

பாடசாலைகள் விடுமுறை விட கூடும் என எதிர் பார்க்க பட்டு வந்த நிலையில் அவ்விதமான செயல்கள் எதுவும் இங்கு இடம் பெறாது

என
கல்வி அமைச்சர் தடாலடியாக அறிவித்துள்ளார்

இவரது அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பெரும் இடியாக வீழ்ந்துள்ளது

Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

ஏர் இந்தியா விமானங்களுக்கு 14 நாட்கள் தடை

ஏர் இந்தியா விமானங்களுக்கு 14 நாட்கள் தடை

பயணிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, ஏர் இந்தியா விமானங்களுக்கு 14 நாட்கள் தடை விதித்துள்ளது ஹாங்காங்.

ஏர் இந்தியா விமானங்களுக்கு 14 நாட்கள் தடை விதித்தது ஹாங்காங்

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

ஊரடங்கைத் தொடர்ந்து சர்வதேச, உள்ளூர் விமான சேவைகள் முடக்கப்பட்டன. அதன்பிறகு மே மாதம் முதல் வந்தே பாரத்

திட்டத்தின் கீழ் ‘ஏர் பப்பிள்’ முறையில் வெளிநாடுகளுக்குச் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ஹாங்காங் – டெல்லி இடையே ஏர் இந்தியா விமானங்களை இயக்குவதற்குக் கடந்த ஜூலை மாதம் ஒப்பந்தம்

போடப்பட்டது. இதன்படி, ஹாங்காங் – டெல்லி இடையே ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவிலிருந்து ஹாங்காங் செல்லும் பயணிகள், பயண நேரத்திற்கு 72 மணி நேரம் முன்பாக கொரோனா பரிசோதனை

மேற்கொண்டு நெகட்டிவ் என சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஹாங்காங் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தியா தவிர, வங்காளதேசம், எத்தியோப்பியா, பிரான்சு, இந்தோனேசியா, கஜகஸ்தான், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து,

அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளும் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற வேண்டும் என ஹாங்காங் அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், டெல்லி – ஹாங்காங் இடையேயான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்து ஹாங்காங் வந்திறங்கிய பயணிகளில்

சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதாக ஹாங்காங் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, ஏர் இந்தியா விமானங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதாவது வரும்

டிசம்பர் 3-ம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்கள் ஹாங்காங் சேவையை தொடர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


கொரோனா காலத்தில் ஏர் இந்தியா விமானங்களுக்கு 5வது முறையாக இத்தகைய தடைகளை ஹாங்காங் விதித்துள்ளது

Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டன் ஸ்கொட்லாந்து எல்லைகள் அடித்து பூட்டு – மீறினால் தண்டம்

பிரிட்டன் ஸ்கொட்லாந்து எல்லைகள் அடித்து பூட்டு – மீறினால் தண்டம்

பிரிட்டனில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் இரண்டாம்

அலை தொடர்பாக ஸ்கொட்லாந்து
அரசு தமது western and central Scotland பகுதிக்குள் உள்ளடங்கும் 11

கவுன்சில்கள் நான்காம் இலக்கம் தடை நிலை பிரகடன படுத்த பட்டுள்ளது

இதனால் இந்த எல்லைகளுக்குள் யாரையும் நுழைய கூடாது ,அவ்வாறு

நுழைந்தால் தண்டம் அறவிட படுவதுடன் அது கிரிமினல் குற்றம் ஆகும் என தெரிவிக்க பட்டுள்ளது

மேற்படி தடை எதிர் வரும் டிசம்பர் மாதம் வரை தொடரும் என அறிவிக்க பட்டுள்ளது