Author: நலன் விரும்பி
பாடசாலைகள் ஆரம்பம் தொடர்பான விஷேட அறிவிப்பு
பாடசாலைகள் ஆரம்பம் தொடர்பான விஷேட அறிவிப்பு
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளை தவிர்ந்த ஏனைய
பகுதிகளில் உள்ள பாடசாலைகளை இம்மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
6 ஆம் தரம் முதல் 13 ஆம் தரம் வரையான வகுப்புகளுக்கே இவ்வாறு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறக்குமதி கட்டுப்பாடுகள் குறித்த ஐரோப்பிய ஒன்றியம் வௌியிட்டுள்ள அறிக்கை
இறக்குமதி கட்டுப்பாடுகள் குறித்த ஐரோப்பிய ஒன்றியம் வௌியிட்டுள்ள அறிக்கை
இலங்கையினுள் தொடர்ச்சியாக இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிப்பது
உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டவை அல்ல
என இந்நாட்டில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் உள்ள பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ருமேனியா தூதுவரகங்கள் இணைந்து அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளனர்.
மாவீரர் நாள் நினைவேந்தல் குறித்த மனு விசாரணை ஒத்திவைப்பு
மாவீரர் நாள் நினைவேந்தல் குறித்த மனு விசாரணை ஒத்திவைப்பு
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உட்பட காங்கேசன்துறை
பொலிஸ் பிரிவில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி மல்லாகம் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
“நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளன.
அந்த நிகழ்வுகளைத் தடுப்பதற்கான கட்டளையை வழங்கவேண்டும்” என்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் காங்கேசன்துறை பொலிஸார் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 106ஆம் பிரிவின் கீழ் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது.
இந்த விண்ணப்பம் இன்று நீதிமன்றால் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
எதிர் மனுதாரர்களாக வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் ஆகியவற்றின் நிர்வாகம், பூசகர் ஆகியோர் உள்பட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த மனு அழைக்கப்பட்ட போது மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையிலான 6இற்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் தோன்றினர்.
“பொலிஸாரின் விண்ணப்பதில் உள்ள விடயம் தொடர்பில் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நாளை அழைக்கப்படவுள்ள நிலையில் பொலிஸார் இந்த விண்ணப்பத்தை
தாக்கல் செய்துள்ளனர். அதனால் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யபட்ட எழுத்தாணை மனுவின் முடிவை வைத்து இந்த
விண்ணப்பதை விசாரணைக்கு எடுக்கவேண்டும்” என்று சட்டத்தரணி வி.மணிவண்ணன் மன்றுரைத்தார்.
அதனால் வழக்கை நாளை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைத்த மல்லாகம் நீதிவான் நீதிமன்றம், பிரதிவாதிகளுக்கு அறிவித்தலை சேர்ப்பிக்க உத்தரவிட்டது.
கொழும்பு மாவட்டத்தில் 6,000 பேர் கொரனோவால் பாதிப்பு
கொழும்பு மாவட்டத்தில் 6,000 பேர் கொரனோவால் பாதிப்பு
அக்டோபர் 4ஆம் திகதி தொடக்கம் இதுவரையில் கொழும்பு மாவட்டத்தில் இனங்காணப்பட்ட கொரோனா
தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6,000மாக அதிகரித்துள்ளது
கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இது தொடர்பாக குறிப்பிடுகையில், கொழும்பு மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்களின்
எண்ணிக்கை 6,141 பேர் பதிவானதாக குறிப்பிடுகிறது. கம்பஹா மாவட்டத்தில் 5,667 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 610 பேரும் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் இலங்கையில் பதிவான வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 327 ஆகும். இதில் 157 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
கம்பஹா மாவட்டத்தில் 111 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 6 பேரும், காலி மாவட்டத்தில் 3 பேருமாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பதிவாகியுள்ளனர்.
களுத்துறை, அனுராதபுரம், மற்றும் மாத்தறை மாவட்டங்களில் நேற்றைய தினம் தொற்றுக்குள்ளானவர்கள் முறையே 2 பேர் வீதம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
புத்தளம், குருநாகல், நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் தலா ஒருவர் வீதம் தொற்றுக்குள்ளானவர்கள் பதிவாகியுள்ளனர் என கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் தேசிய
செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
வெலிகட சிறைச்சாலையில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 பேர் ஆகும். பொலிஸ் விசேட
அதிரடி படையில் 6 பேரும், பொலிஸில் 2 பேரும், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் 2 பேரும் ஏனைய 9 பேரும் நாட்டில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் என்று பதிவாகி உள்ளது.
இலங்கையில் கொரோனா – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 69
இலங்கையில் கொரோனா – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 69
இலங்கையில் கொரோனா வைரசு தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் (18) சற்று முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மூவரின் மரணம் இடம்பெற்றுள்ளமை
உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 69 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கந்தானை பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண் நபர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளாமையுடன் நீரிழிவு நோயின்
- சிக்கல் நிலைமை ஏற்பட்டதாகும்
- கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 74 வயதான பெண் ஆவார். கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளாமை இனங்காணப்பட்டு ஹேமாகமை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப்
- பெற்றுவந்த வேளையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் அதியுயர் இரத்த அழுத்தம் நிரிழிவுடன் கொவிட் 19 தொற்றுக்குள்ளாமையினால் நுரையீரல்
- பலவீனப்பட்டமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஆண் நபர். வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நீரிழிவு நோயின்
- சிக்கல் நிலை கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளாமையினால் அதிகரித்தமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பாதுகாப்பு அதிகாரியை அதிரடியாக நீக்கிய டிரம்ப்
தேர்தல் பாதுகாப்பு அதிகாரியை அதிரடியாக நீக்கிய டிரம்ப்
அமெரிக்க தேர்தல் தொடர்பாக டிரம்பின் குற்றச்சாட்டை நிராகரித்த தேர்தல் பாதுகாப்பு அதிகாரி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
மோசடி குற்றச்சாட்டை நிராகரிப்பதா? -தேர்தல் பாதுகாப்பு அதிகாரியை அதிரடியாக நீக்கிய டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். ஆனால், முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என தேர்தல் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிபட
தெரிவித்துள்ளனர். டிரம்பின் குற்றச்சாட்டை தேர்தல் பாதுகாப்பு உயர் அதிகாரி கிறிஸ் கிரெப்சும் மறுத்திருந்தார். சமீபத்தில் அவர்
வெளியிட்டிருந்த அறிக்கையில், நவம்பர் 3ல் நடந்த தேர்தல், அமெரிக்க வரலாற்றில் மிகவும் பாதுகாப்பானது என்று கூறியிருந்தார்.
இதனால் மேலும் கடுப்பான அதிபர் டிரம்ப், தேர்தல் அதிகாரி கிறிஸ் கிரெப்சை பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார். இதற்கான
அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டார் டிரம்ப். கிறிஸ் கிரெப்சின் பதவிநீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறி உள்ளார்.
‘தேர்தல் பாதுகாப்பு குறித்து கிறிஸ் கிரெப்ஸ் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை மிகவும் தவறானது. தேர்தலில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் நடந்துள்ளன. எனவே, கிறிஸ்
கிரெப்ஸ் சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு அமைப்பின் இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்’ என டிரம்ப் மேலும் கூறி உள்ளார்.
ஆனால், கிறிஸ் கிரெப்ஸ் தனது பதவி பறிபோகும் என கடந்த வாரமே தன் நண்பர்களிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய பொருளாதார மாற்றத்தின் சிற்பி மன்மோகன்சிங் – ஒபாமா புத்தகத்தில் புகழாரம்
இந்திய பொருளாதார மாற்றத்தின் சிற்பி மன்மோகன்சிங் – ஒபாமா புத்தகத்தில் புகழாரம்
இந்திய பொருளாதார மாற்றத்தின் தலைமை சிற்பி, மன்மோகன்சிங் என்று ஒபாமா தனது புத்தகத்தில் புகழாரம் சூட்டி உள்ளார்.
இந்திய பொருளாதார மாற்றத்தின் சிற்பி மன்மோகன்சிங் – ஒபாமா புத்தகத்தில் புகழாரம்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா ‘எ பிராமிஸ்டு லேண்ட்’ (‘வாக்குறுதி அளிக்கப்பட்ட ஒரு நிலம்’) என்ற பெயரில் தனது அரசியல் வாழ்க்கையின் நினைவலைகளை இரு தொகுதிகளாக
எழுதுகிறார். முதல் தொகுதி உலகமெங்கும் நேற்று விற்பனைக்கு வந்துள்ளது. இதில் 2008-ம் ஆண்டு அவர் அமெரிக்க ஜனாதிபதி
தேர்தல் பிரசாரம் தொடங்கியதில் இருந்து தனது முதல் பதவிக்காலம் வரையிலானவற்றை (பாகிஸ்தானில் ஒசாமா
பின்லேடன் அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டது வரையிலானவை) பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த புத்தகத்தின் முதல் தொகுதிக்கு ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை விமர்சனம் எழுதி, அதன் மூலம் சில தகவல்கள்
வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த புத்தகத்தில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார்.
இந்தியா பற்றி அவர் குறிப்பிடுகையில், “இந்தியா மீதான என் மோகம், மகாத்மா காந்தியுடன் தொடர்பு உடையது. ஆபிரகாம்
லிங்கன், மார்ட்டின் லூதர்கிங், நெல்சன் மண்டேலா ஆகியோருடன் மகாத்மா காந்தி என் சிந்தனையில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தினார்” என கூறி உள்ளார்.
“ஒரு இளைஞனாக நான் மகாத்மா காந்தியின் எழுத்துகளை படித்தேன். என் ஆழ்ந்த உள்ளுணர்வுகளுக்கு அவர் குரல்
கொடுப்பதை நான் கண்டேன்” என மகாத்மா காந்தியைப்பற்றி எழுதுகையில் நெகிழ்ந்து போய் இருக்கிறார் ஒபாமா.
இந்த புத்தகத்தில் அவர் இன்றைய நவீன இந்தியாவை பாராட்ட தவறவில்லை.
இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “மீண்டும் மீண்டும் ஆட்சி மாற்றங்கள், அரசியல் கட்சிகளுக்குள் கடும் சண்டைகள்,
பிரிவினைவாதிகளின் ஆயுதப்போராட்டங்கள், ஊழல் மோசடிகள் என எல்லாவற்றிலும் தப்பித்து பல அம்சங்களில் நவீன இந்தியா ஒரு
வெற்றிக்கதையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது” என கூறி உள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி ஒபாமா நிறைய சொல்கிறார். குறிப்பாக, “இந்திய பொருளாதார மாற்றத்தின் தலைமை சிற்பி மன்மோகன்சிங். அவர் முன்னேற்றத்தின் சின்னம்.
அடிக்கடி துன்புறுத்தல்களுக்கு ஆளான சீக்கிய மத சிறுபான்மை வகுப்பில் இருந்து நாட்டின் பிரதமராக உயர்ந்தவர். அவர் மக்களின் வாழ்க்கைத் தரங்களை உயர்த்தி, ஊழல் செய்யாததற்காக
மக்களிடம் நற்பெயரை சம்பாதித்ததுடன் பேணியும் வருகிறார்” என கூறி உள்ளார். மேலும், மன்மோகன் சிங், தனது சொந்த
பிரபலத்தின் பலனாக பிரதமராகவில்லை என்பதையும் ஒபாமா சுட்டிக்காட்டி இருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பற்றி எழுதும்போது, “சோனியா காந்தி பேசுவதை விட, கேட்பதில் ஆர்வம் காட்டுகிறார். கொள்கை விஷயங்களைப்பற்றி பேசுகிறபோதெல்லாம் அதை
மன்மோகன்சிங் வசம் தள்ளிவிடுவதில் கவனமாக இருந்தார்” என்றும் ஒபாமா எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
10.10 கோடி அபராதத் தொகையை செலுத்தினார் சசிகலா
10.10 கோடி அபராதத் தொகையை செலுத்தினார் சசிகலா
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா தனது அபராதத் தொகையை சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினார்.
ரூ.10.10 கோடி அபராதத் தொகையை செலுத்தினார் சசிகலா
சசிகலா
பெங்களூரு:
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதியில் இருந்து அவர், பெங்களூரு பரப்பன
அக்ரஹாரா சிறையில் இருந்து வருகிறார். அவரது தண்டனை காலம் இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில் சசிகலா விடுதலை குறித்து செய்திகள் வெளியாகி வந்தன.
இதற்கிடையே, பெங்களூருவை சேர்ந்த டி.நரசிம்மமூர்த்தி என்பவர், சசிகலா விடுதலை குறித்து கேள்வி எழுப்பி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். அவரது கேள்விக்கு கடிதம்
மூலம் பதிலளித்த பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை சூப்பிரண்டு ஆர்.லதா, “சிறை ஆவணங்கள்படி சுப்ரீம் கோர்ட்டு
விதித்துள்ள அபராதத் தொகையை செலுத்தினால், சசிகலா அனேகமாக அடுத்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 27-ம் தேதி விடுதலை ஆகலாம்.
அபராதத் தொகையை செலுத்த தவறினால், அவர் மேலும் 13 மாதங்கள் அதாவது 2022-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி விடுதலை
செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும், அவர் பரோல் காலத்தை பயன்படுத்தினால், அவர் விடுதலை செய்யப்படும் தேதியில் மாற்றம் ஏற்படலாம்” என்று கூறி இருந்தார்.
வழக்கமான நடைமுறைகளின்படி, அபராதத் தொகையை செலுத்த அனுமதிக்க கோரி பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல் செய்து இருந்தார்.
ஏற்கனவே, தனது அபராதத் தொகை ரூ.10 கோடியை நீதிமன்றத்தில் சுதாகரன் செலுத்தி உள்ளார்.
இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா அபராதத் தொகையை சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினார்.
பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவப்பா முன் ரூ.10.10 கோடிக்கான காசோலையை சசிகலா வழக்கறிஞர் வழங்கினார்.
உயிர் தப்பினேன்- நடிகை குஷ்பு உருக்கம்
உயிர் தப்பினேன்- நடிகை குஷ்பு உருக்கம்
முருகன் அருளால்தான் உயிர் பிழைத்ததாகவும் தனது கணவர் வணங்கி வரும் கடவுளின் புண்ணியமும் தன்னை காப்பாற்றி உள்ளதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார்.
முருகன் அருளால் உயிர் தப்பினேன்- நடிகை குஷ்பு உருக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் உயிர் தப்பியது பற்றி குஷ்பு உருக்கமான பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
கடலூர் வேல் யாத்திரையில் கலந்து கொள்வதற்காக இன்று புறப்பட்டு சென்றபோது எனது கார் மீது கண்டெய்னர் லாரி மோதியது.
இந்த விபத்தில் எனது கார் பலத்த சேதம் அடைந்துள்ளது. முருகன் அருளால்தான் நான் உயிர் பிழைத்து உள்ளேன். எனது கணவர்
வணங்கி வரும் கடவுளின் புண்ணியமும் என்னை காப்பாற்றி உள்ளது.
அந்த முருகனே என்னை வேல் யாத்திரைக்கு வரச் சொல்லி அழைத்து உள்ளது போலவே உணர்கிறேன். எனது பயண திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
விபத்து நடந்த போதிலும் வேல் யாத்திரையில் திட்டமிட்டபடி நான் கலந்து கொள்கிறேன்.
இவ்வாறு குஷ்பு கூறினார்.
கண்டியில் நில அதிர்வு
கண்டியில் நில அதிர்வு
கண்டி, பல்லேகெல, அம்பகோட்டே பகுதியில் இன்று காலை (18)
சிறிய அளவிலான நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் இதனை தெரிவித்துள்ளது.
மனைவியை கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை
மனைவியை கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை
காதலர் தினத்தன்று தனது மனைவியை பெற்றோல் ஊற்றி கொலை செய்த ஒருவருக்கு மரண தண்டனை விதித்து திருகோணமலை
மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்க வாசகர் இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து இன்று (18) தீர்ப்பளித்தார்.
38/1, பாடசாலை மாவத்தை, ஆண்டாம் குளம், திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய கெந்த கேவாகே அனுர இசாந்த என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018.02.14 ஆம் திகதி கந்தளாய் அக்போபுர பகுதியைச் சேர்ந்த குலசேகர முதியன்சாலாகே ரேணுகா எனும் தனது மனைவியை காதலர் தினத்தன்று பெற்றோல் ஊற்றி தீ வைத்து
கொலை செய்த குற்றத்திற்கெதிராக கெந்த கேவாகே அனுர இசாந்த என்ற எதிரிக்கு எதிராக சட்டமா அதிபரினால் 2019.04.12 ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்றில் மரணத்தை
விளைவித்த குற்றச்சாட்டின் இலங்கை தண்டனை சட்டக்கோவை கொலை குற்றச்சாட்டின் கீழ் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அவ் வழக்கு தொடர்பான இரு தரப்பு வழக்கு விசாரணைகளும், அதற்கான தொகுப்புரைகளும் நிறைவு செய்யப்பட்டதையடுத்து இன்றைய தினம் குறித்த வழக்குக்கான தீர்ப்பு திறந்த நீதிமன்றில்
எதிரி மற்றும் அரச சட்டத்தரணி, முன்னிலையில் வாசித்து காண்பிக்கப்பட்டு எதிரி குறித்த குற்றச்சாட்டுக்கு குற்றவாளியாக
இணங்காணப்பட்டதையடுத்து எதிரிக்கு மரணதண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.
சகல மாகாணங்களிலும் கால்நடை வைத்தியசாலைகளை அமைக்க தீர்மானம்
சகல மாகாணங்களிலும் கால்நடை வைத்தியசாலைகளை அமைக்க தீர்மானம்
நாட்டின் சகல மாகாணங்களிலும் எதிர்வரும் சில ஆண்டுகளில் கால்நடை வைத்தியசாலைகளை அமைக்கத் தீர்மானித்துள்ளதாக
கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார் தொழில் இராஜாங்க அமைச்சர் – டி.பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
கண்டி கெட்டம்பே கால்நடை மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின்; மத்திய மாகாணப் பணிமனையில் இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டின் சகல பகுதிகளிலும், கால்நடை வைத்திய சேவைகள் காணப்பட்டாலும், மக்களுக்கு சலுகைவிலையில், முழுமையான
உத்தரவாதத்துடன் கூடிய சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான அரச கால்நடை வைத்தியசாலைக்கான பற்றாக்குறைகள் காணப்படுகின்றன.
இதனை நிவர்த்தி செய்யும் நோக்குடன் நாட்டின் சகல மாகாணங்களிலும் கால்நடை வைத்தியசாலைகள் அமைக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டாhர்.
மஹிந்த ராஜபக்ஷவின் 75ஆவது பிறந்த தினம்
மஹிந்த ராஜபக்ஷவின் 75ஆவது பிறந்த தினம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 75ஆவது பிறந்த தினம் இன்றாகும்.
இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தை நோக்கிய வெற்றி பயணத்தின் ஓராண்டு பூர்த்தியும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினமும் இன்றாகும்.
1945 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி ரூஹூணு கிருவாப்பத்து வீரகெட்டிய கிராமத்தில் பிறந்தார். இலங்கையின்
அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமான ஆளுமையைக்கொண்ட பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ கருதப்படுகிறார்.
1970 ஆம் ஆண்டு பெலியந்த தொகுதியில் இருந்து 1970 இல் முதன்முதலாக பாராளுமன்றத்துக்குத் தெரிவாகி 2005 ஜனாதிபதி
தேர்தலில் வெற்றி பெறும் வரை பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்டார்.
1994ஆம் ஆண்டு அரசாங்கத்தை அமைக்க இவர் பெரும் பங்களிப்பு செய்தார். மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய சேவைகள் குறிப்பிடத்தக்கது.
2001ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவராகவும் 2004ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் (2004 ஏப்ரல் 06 – 2005 நம்பர்19) பிரதமராகவும்
2005ஆம் ஆண்டின் நாட்டின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டார்.
பத்து ஆண்டுகள் ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் நாட்டில் நிலவிய 30 வருடகால பயங்கரவாதத்தை
முடிவுக்குகொண்டுவந்து நாட்டில் சுதந்திரத்தை உறுதிப்படுத்த ஆற்றிய பணிகள் உலகெங்கிலும் பாராட்டை பெற்றுள்ளன.
நாட்டின் அபிவிருத்திக்காவும் அவர் ஆற்றிய பணிகள் மகத்தானவையாகும். ஆங்கிலேயரின்
ஆட்சிக்காலத்திற்குப்பின்னர் பெருந்தெருக்கள் அபிவிருத்தியில் அதாவது நெடுஞ்சாலைகளை அமைப்பதிலும் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
குறுகிய காலப்பகுதியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை வழி நடத்தி பெரும் வெற்றியை ஈட்டிய பெருமையையும் அவரைச்
சாரும். கடந்த தேர்தலில் ஆகக் கூடுதலான வாக்குடன் அவர் மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தெரிவான ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தை நோக்கிய வெற்றி பயணத்தின் ஓராண்டு பூர்த்தியும் இன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா உயிரிழந்தோரின் எண்ணிக்கை 66
கொரோனா உயிரிழந்தோரின் எண்ணிக்கை 66
இலங்கையில் கொரோனா உயிரிழந்தோரின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக அரசாங்க தகவல்திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
சற்று முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கீழ் குறிப்பிட்ட விபரங்களைக்கொண்ட கொவிட் 19 தொற்றக்குள்ளான நோயாளர் ஐவரின் மரணத்தை உறுதி
செய்துள்ளதுடன் இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றக்குள்ளான நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 66 ஆகும் என தெரிவித்துள்ளார்.
- கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஆண் நபர். கொவிட் 19 தொற்றக்குள்ளானவர் என்ற ரீதியில் அடையாளங் காணப்பட்டவர் புனானி(புனானை) சிகிச்சை மத்திய நிலையம்
- மற்றும் அதனைத் தொடர்ந்து வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்தோடு அந்த வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான
- காரணம் அதியுயர் இரத்த அழுத்தத்துடன் கொவிட் 19 தொற்றக்குள்ளானமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 69 வயது பெண் ஆவார்.
- வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நீரிழிவு நோயில் ஏற்பட்ட சிக்கலான நிலை மற்றும் அதியுயர் இரத்த அழுத்தத்துடன் கொவிட் 19 தொற்றக்குள்ளானமை என
- தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கிருலப்பனை பகுதியைச் சேர்ந்த 71 வயதான பெண் வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் அதியுயர் இரத்த அழுத்தம் நீரிழிவு நோய் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதினால்
- அதிகரித்தமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த 81 வயதான பெண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான
- காரணம் கொவிட் 19 தொற்றக்குள்ளானதுடன் நிமோனியா ஏற்பட்டமை ஆகும்.
- தொமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய ஆண் நபர். வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நீரிழிவு
- நோயில் சிக்கலான நிலையுடன் கொவிட் 19 தொற்றுக்குள்ளானமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
750 காவல்துறையினருக்கு கொரனோ
750 காவல்துறையினருக்கு கொரனோ
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ
நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 750 காவல்துறையினர் பாதிக்க பட்டுள்ளனர்
இவ்வாறு பாதிக்க பட்ட அனைவரும் தனிமை படுத் தலுக்கு
உள்ளாக்க பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்
மக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போதே இவர்களுக்கு இந்த
நோயானது பரவியதாக தெரிவிக்க படுகிறது
600 மில்லியன் ரூபா செலவில் 06 தேசிய பாடசாலைகள்
600 மில்லியன் ரூபா செலவில் 06 தேசிய பாடசாலைகள்
மாத்தளை மாவட்டத்திற்கு 600 மில்லியன் ரூபாய் செலவில் 06 தேசிய பாடசாலைகள்…..
2021 முதலாவது காலாண்டில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு முழுமையான தீர்வு…..
ஆசிரியர் நியமனங்களின் போது பாடசாலைகளை அண்மித்து வசிக்கும் ஆசிரியர்களை அண்மித்த பாடசாலைகளுக்கு நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும்….
மாத்தளை மாவட்டத்திற்கு உயர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்….
உலகளாவிய கொவிட் தொற்றுக்கு மத்தியில் நாடு மேலும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்படுவதை தடுத்து, நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து
செல்வதற்கு நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படும் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழுவினால் மாத்தளை மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்களின் பங்கேற்புடன் வரலாற்று
சிறப்புமிக்க மாத்தளை மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்த கலந்துரையாடல் 15 ஆம் திகதி மாத்தளை சுற்றுலா மேம்பாட்டு வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அனைத்து அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் இணைந்து நிறுவிய புதிய பொறிமுறை ஊடாக நேரடியாக கிராமங்களுக்கு வளங்கள் பகிரப்படும் வேலைத்திட்டமொன்றை
தயாரித்தல், எதிர்காலத்தில் மாவட்டத்திற்கென ஆரம்பிக்க திட்டமிடப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்வைத்தல் போன்ற அடுத்த ஆண்டு வரவு செலவுதிட்த்திற்காக ஒதுக்கப்பட்ட
நிதியை கிராமத்தின் அபிவிருத்தியில் நேரடியாக ஈடுபடுத்துவதற்கு மாவட்ட மட்டத்தில் யோசனைகளை பெற்றுக் கொள்வதும் இந்த வேலைத்திட்டத்தின்; ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது.
கல்வி
•முதலாவது கட்டமாக மாத்தளை மாவட்டத்திற்கு ரூபாய் 600 மில்லியன் செலவில் 06 தேசிய பாடசாலைகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
•மாத்தளை மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய 113 பட்டதாரி பயிற்சியாளர்கள் மற்றும் உயர் டிப்ளோமா கல்வியை நிறைவுசெய்த ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
•அதன்படி, 2021 முதல் காலாண்டில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு முழுமையான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
•எதிர்காலத்தில் ஆசிரியர் நியமனங்களின் போது பாடசாலைகளை அண்மித்து வசிக்கும் ஆசிரியர்களை அண்மித்த பாடசாலைகளுக்கு நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும்.
•மாத்தளை மாவட்டத்தில் உயர் தொழில்நுட்ப பல்கலைக்கழகமொன்றை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் ஜனவரி மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
•மாத்தளை மாவட்டத்தில் ஆசிரியர் உதவியாளர்களை நிரந்தரமாக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்வது குறித்து இந்த மேம்பாட்டுக் குழுவில் முன்மொழியப்பட்டது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, முன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள்
•வரலாற்றில் முதல்முறையாக, முன்பள்ளிகளுக்கு பொறுப்பான அமைச்சர் ஒருவரை நியமித்ததன் மூலம் இந்த துறையின் வளர்ச்சி
பணிகளை வெற்றிகரமாக்கியுள்ளது. முறைசாரா முன்பள்ளி கலாசாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தேசிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு, பாடசாலை விளையாட்டு மற்றும் கிராமப்புற விளையாட்டுகளின் வளர்ச்சி
•அகுரம்பொடா மத்திய மகா வித்தியாலயம் (விளையாட்டு பாடசாலை) முதல் கட்டத்தை ரூ 7.7 மில்லியன் செலவில்
அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது இவ்வாண்டின் இறுதியில் பூர்த்திசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
•மாத்தளை மாவட்டத்தில் 11 பிரதேச செயலக பிரிவுகளில் 55 பாடசாலைகளில் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
•ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலும் ஒரு விளையாட்டு மைதானம் எனும் அடிப்படையில் 11 விளையாட்டு மைதானங்களை நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
•ரூபாய் 50 மில்லியன் செலவில் மாத்தளை ஹொக்கி மைதானத்தை சர்வதேச அளவிலான அரங்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
•மாத்தளை மாவட்டத்தில் 30 வெளிப்புற உடற்பயிற்சி மையங்கள் நிறுவப்படும்.
உள்ளூராட்சி நிர்வாகம்
•ரூபாய் 300 மில்லியன் செலவில் மாத்தளையில் ஒரு முழுமையான தீயணைப்பு நிலையத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.
குறித்த சந்தர்ப்பத்தில் மாத்தளை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பிரமித்த பண்டார தென்னகோன், ஜனக பண்டார
தென்னகோன், நாலக பண்டார கோட்டேகொட, சிசிர ஜயகொடி, லசந்த அழகியவன்ன,விதுர விக்ரமநாயக்க, விஜித பேருகொட,
ரோஹண திசாநாயக்க ஆகியோர், ஆளுநர் லலித் யூ. கமகே, மாவட்ட செயலாளர் எஸ்.எஎம்.ஜி.கே.பெரேரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
யாழில் புயல் மழை -16 குடும்பங்கள் பாதிப்பு
யாழில் புயல் மழை -16 குடும்பங்கள் பாதிப்பு
கடந்த இரண்டு நாட்களாக யாழ் மாவட்டத்தில் காணப்பட்ட காற்றுடன் கூடிய மழையின் காரணமாக 16 குடும்பங்களைச்
சேர்ந்த 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார்.
கடந்த 15 ஆம் திகதியிலிருந்து இன்றைய தினம் வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்பட்ட காற்றுடன் கூடிய மழையினாலே இப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அத்தோடு நல்லூர், கோப்பாய் தெல்லிப்பளை, பருத்தித்துறை, சண்டிலிப்பாய்
பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அனர்த்தத்தினால் பாதிப்பு
ஏற்பட்டுள்ளதாகவும் பாதிப்புகள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு
அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்தமுகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்
கொழும்பைச் சேர்ந்த பலருக்கு கொரனோ
கொழும்பைச் சேர்ந்த பலருக்கு கொரனோ
இன்று 17 காலை வரையில் Covid -19 வைரசு தொற்றுக்குள்ளான 382 நபர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக COVID-19 வைரஸ் பரவலை
தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் உள்நாட்டில் இருந்து 374 பேரும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஐந்து இலங்கை கடலோர பாதகாப்பு வீரர்களும் மூன்று வெளிநாட்டு கடலோர பாதுகாப்பு வீரர்களும்
பதிவாகியுள்ளனர். இவ்வாறு இனங்காணப்பட்டவர்களுள் பெரும்பாலானவர்கள் கொழும்பு பிரதேசத்திற்கு உட்பட்டவர்கள்.
இவர்களின் எண்ணிக்கை 231, கம்பஹா பிரதேசத்தில் 42 தொற்றுக்குள்ளானவர்களும் , களுத்துறை பிரதேசத்தில் 20 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இன்று (17) காலை வரை மினுவங்கொடை ஆடை தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணிகளுடன் தொடர்பு பட்டிருந்த உழஎனை-19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த
எண்ணிக்கை 14,154 ஆகும். இவர்களுள் 8,381 பேர் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி – 3106
பேலியகொடை மீன் சந்தை கொத்தணி -11,048
நேற்றைய (16) தினம் இலங்கையில் உழஎனை-19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 17,668
என்பதுடன் இவர்கள் 11,805 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
நேற்றைய (16) தினம் வரையில் வைத்தியசாலைகளிளும் COVID -19 பராமரிப்பு நிலையங்களிளும் 5,802 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று (17) காலை 6 மணி வரையிலான கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வைத்தியசாலைகள் மற்றும் வைரஸ் தொற்று பராமரிப்பு நிலையங்களில் இருந்து 311 பேர் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர்..
இதன் அடிப்படையில் இன்று (17) காலை வரையிலும் இலங்கையில் COVID -19 தொற்றினால் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.
இன்று (17) காலை வரைக்கும் COVID-19 தொற்றுக்குள்ளானவர்கடளுடன் (முதலாவது மற்றும் இரண்டாவது)
தொடர்புபட்ட 30,000 பேர் சுய தனிமைப்படுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலை EY 264 என்ற பயணிகள் விமானத்தின் மூலம் துபாயிலிருந்து 26 பேரும் Ul 668 மற்றும் ருடு 218 என்ற பயணிகள்
விமானத்தின் மூலம் கட்டாலிருந்தும் முறையே, 37 மற்றும் 22 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்த அனைவரும் முப்படையினர் மூலம் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில்
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (17) வரைக்கும் படையினரால் நடத்தப்பட்டுவரும் 33 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலும் 3,281 பேர்
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றைய (16) தினம் வரை 10, 713 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மணிக்கூட்டும் கோபுரத்தில் 4 நாடுகளின் நேரம் – குழம்பிய மக்கள்
இலங்கை மணிக்கூட்டும் கோபுரத்தில் 4 நாடுகளின் நேரம் – குழம்பிய மக்கள்
நுவரெலியா மாநகரத்தின் மத்தியில் புதிதாக மக்களின் தேவைக்கருதியும்
நலன்கருதியும் நல்லுள்ளம் படைத்தவர்களினால் நிர்மாணிக்கபட்ட மணிக்கூட்டு
கோபுரத்தில் காணப்படும் 04 மணிக்கூடுகளும் இலங்கை நேரத்தை 04 விதத்தில்
அன்மை காலங்களில் காட்டி வந்தன. இதனால் இதணை பார்க்கும் வெளிநாட்டு
மற்றும் உள்நாட்டு பயணிகள் மிகவும் கஷ்டத்திற்கு உள்ளாகின்றனர் என அன்மையில் நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்.
தற்போது தொழில்நுட்ப கோளாருக்குள்ளான இந்த மணிக்கூடுகள் திருத்தப்பட்டு
முறையாக செயற்பட்டு வருகின்றது. இந்த நல்ல செயலை முன்னெடுத்து செல்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.

பஸ் மீது மர்ம நபர்கள் தாக்குதல் -34 பேர் உடல் சிதறி பலி
பஸ் மீது மர்ம நபர்கள் தாக்குதல் -34 பேர் உடல் சிதறி பலி
எதியோப்பியாவில் பஸ் மீது மர்ம நபர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 34 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
எத்தியோப்பியாவில் பஸ் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு – 34 பேர் பலி
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வரும் அதே வேளையில் சில பயங்கரவாத குழுக்களும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இதன் காரணமாக அந்த நாட்டு மக்கள் சூடான், தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக அங்கு இன ரீதியிலான மோதல்கள் வலுத்து வருகின்றன.
இந்த நிலையில் அந்த நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பெனிஷாங்குல்-குமுஸ் பிராந்தியத்தில் நேற்று முன்தினம் இரவு பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த பஸ்சை வழிமறித்த மர்ம நபர்கள் சிலர் பஸ் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் பஸ்சில் இருந்த பயணிகளின் உடல்களில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.
அதனை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த கொடூர தாக்குதலில் 34 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் நடந்த பகுதியில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தப்பியோடிய மர்ம நபர்களை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த தகவல்களை அந்த நாட்டின் தேசிய மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.








