Posted in இலங்கை செய்திகள்

சவூதி -இலங்கைக்கு 75 மெ.தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு

ரமழானை முன்னிட்டு சவூதி அரேபிய அரசால் இலங்கைக்கு 75 மெ.தொன் பேரீத்தம் பழங்கள் அன்பளிப்பு

எதிர்வரும் புனித ரமழானை முன்னிட்டு இம்முறை (2021) இலங்கை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக 75 மெற்றிக்தொன் பேரீத்தம் பழங்கள் சவூதி அரேபிய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பேரீத்தம் பழங்களைக் கையளிக்கும் நிகழ்வு பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் (16) இடம்பெற்றது.

இதன்போது இலங்கையில் உள்ள சவூதி அரேபிய தூதரக பிரதித் தூதுவர் றியாப் அல் ஷரீப், பிரதமரும் புத்தசாசனம், கலாசார மற்றும் மத அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்த பேரீத்தம் பழங்களைக் கையளித்தார்.

அவற்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம் அஷ்ரபிடம்
கையளித்தார்.

இப் பேரீத்தம் பழங்கள் மிக விரைவில் நாடு பூராகவும் உள்ள பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட
திணைக்களத்தினால்


ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக திணைக்களப் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரிவித்தார்.

    Posted in Uncategorized

    ஐநா தீர்மானத்தால் அச்சம் இல்லை – கோட்டா திமிர் பேச்சு

    நாட்டின் இறையாண்மையை பாதுகாத்துக் கொண்டு ஜெனீவா மனித உரிமை பேரவையின் தீர்மானங்களுக்கு அச்சமின்றி முகங்கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

    ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பங்கேற்கும் கிராமத்துடன் கலந்துரையாடலின் 16ஆவது நிகழ்ச்சித் திட்டம் மாத்தறை மாவட்டத்தின் பிட்டபத்த பிரதேச செயலக பிரிவிலுள்ள கிரிவெல்கெல வடக்கு மூன்றாம் பியவர கிராம உத்தியோகத்தர் பிரிவில் இன்று (27) நடைபெற்றது.

    இதன்போது உரையாற்றி ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.

    ´உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும், தேசிய பாதுகாப்பு குறித்து கடந்த அரசாங்கம்

    அக்கறை காட்டாததால் தான் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் இராணுவ வீரர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டன.

    அந்த வழக்குகளில் இருந்து அவர்களை வெளியேற்றுவதில் இப்போது எனக்கு ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. சர்வதேசத்திற்கு சென்று ஜெனீவாவில் தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கி எமது இறையாண்மையை எமது சுதந்திரத்தை முழுமையாக அழித்து விட்டார்கள்.

    அந்த இணை அனுசரணையில் இருந்து நாம் விலகியுள்ளோம். அவர்கள் எங்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள்.அது ஒரு பொருட்டல்ல. நாம் அதை எதிர்கொள்ள முடியும்.நாங்கள் ஒரு சுதந்திர நாடு. நாம் எங்கள் வேலையைச் செய்யலாம்.நாம் அவர்களை அச்சமின்றி

    எதிர்கொள்கிறோம். அதுதான் தேவை. இந்தியப் பெருங்கடலில் இருக்கும் சக்திகளின் அதிகார போராட்டதில் நாம் தலையிடத் தேவையில்லை. அதிகாரப் பகிர்வு என்ற பெயரில்

    பிரிவினைவாதத்தை மீண்டும் கொண்டுவருவதற்கும் அவர்களின் புவிசார் அரசியல் நலன்களை நிறைவேற்ற நமது இறையாண்மையைக் காட்டிக் கொடுப்பதற்கும் நாங்கள் தயாராக இல்லை´ என்றார்

      Posted in Uncategorized

      யாழில் ஒருவர் வெட்டி கொலை-மிரட்டும் படு கொலைகள்

      புத்தூர், வீரவாணி பகுதியில் தனிமையில் வசித்த ஆண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

      இன்று (28) அதிகாலை 1 மணி அளவில் அவரது வீட்டுக்கு அருகில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

      இந்த சம்பவத்தில் துரைராசா சந்திரகோபல் (வயது 52) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

      அவருடன் இருந்த பழைய பகையை காரணமாக சிலர் இந்தக் கொலையைச் செய்துள்ளனர் என்று

      ஆரம்ப கட்ட விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

        Posted in Uncategorized

        யாழில் 143 பேருக்கு கொரனோ-பரப்பிய இராணுவம்

        யாழ்ப்பாண மாவட்டத்தில் மேலும் 143 பேருக்கு கொவிட்-19 தொற்றுள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.

        தொற்றுக்குள்ளானோரில், திருநெல்வேலி பொதுச் சந்தை தொகுதி வியாபாரிகள், தொழிலாளர்கள் 127 பேர் அடங்குகின்றனர் என்று வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

        “யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரே நாளில் கண்டறியப்பட்ட கொவிட்-19 நோய்த் தொற்றாளர்களின் அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும்.

        யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 746 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டே 143 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

        யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், மருத்துவ பீட மாணவர்கள் மூவர், தாதிய மாணவர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

        யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட ஏழு பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

        சாவகச்சேரி வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

        யாழ்ப்பாண மாநகரில் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என சுயதனிமைப்படுத்தப்பட்டிருத்த நால்வருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று கேதீஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

          Posted in Uncategorized

          பளையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விபத்தில் மரணம் – லொறி சாரதி தப்பி ஓட்டம்

          பளையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விபத்தில் மரணம் – லொறி சாரதி தப்பி ஓட்டம்

          பளை பகுதியில் கடந்த தினம் இரவு 9.30 மணியளவில் நடந்த பாரிய விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்

          கார்,மற்றும் லொறி நேருக்கு நேர் மோதியதில் இந்த மரணம் சம்பவித்துள்ளது

          காரில் பயணித்த தந்தை ,மற்றும் அவரது 11 மற்றும் 14 வயது மகன்களும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்

          கார் பலத்த சேதமடைந்துள்ளது ,விபத்தினை ஏற்படுத்திய லொறி சாரதி அங்கிருந்து தப்பி

          ஓடியுள்ளார் ,சாரதிகளின் அலட்சி போக்கின் காரணமாக நாள்தோறும் நாடு தழுவிய ரீதியில் நால்வர் இவ்விதம் விபத்துக்களில் பலியாகி வருகின்றனர்

          இந்த உயிர்பலிகளை தடுக்க முடியாது சிங்கள காவல்துறை திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது

            Posted in Uncategorized

            மல்லாவியில் வீடு புகுந்து ரவுடிகள் வாள்வெட்டு தாக்குதல் – பீதியில் மக்கள்

            மல்லாவியில் வீடு புகுந்து ரவுடிகள் வாள்வெட்டு தாக்குதல் – பீதியில் மக்கள்

            முல்லைத்தீவு மல்லாவி புகழேந்தி நகர்ப்பகுதியில் கடந்த தினம் ஊந்துருளியில் வருகை தந்த ரவுடி கும்பல் வீடு புகுந்து இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது

            இதே வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர் மீது இம்மாத முற்பகுதியில் வாள்வெட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது

            இதன் பொழுது பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது

            மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது

              Posted in Uncategorized

              ஊடக போராளியை இராணுவ வண்டியால் மோதி படுகொலை புரிந்த சிங்கள இராணுவம்

              ஊடக போராளியை இராணுவ வண்டியால் மோதி படுகொலை புரிந்த சிங்கள இராணுவம்

              இலங்கையில் ஆளும் கோட்டாபய அரசு ஓசை படமால் பலரை வாகன விபத்துக்கள் மூலம் படு கொலை செய்து வருகிறது

              அவ்விதம் ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் பொன்னாலையூர் பண்டிதர் தி.பொன்னம்பலவாணர் என்ற ஊடக போராளி ஊந்துருளியில் பயணித்து கொண்டிருந்தார்

              அப்பொழுது யாழ்ப்பாணம் பன்றிக்கோட்டு பிள்ளையார் ஆலய அருகாமையில் வைத்து மோதியது .

              இதன் பொழுது தலையில் பலத்த காயமடைந்த நிலையில் தற்போது அவர் மரணமாகியுள்ளார்

              நீரேரிகளில் சடலங்கள் தொடராக மிதந்து வரும் நிலையில் இப்பொழுது இவ்வாறான படு கொலைகளும் அதிகரித்து செல்கின்றமை இங்கே குறிப்பிட தக்கது

                Posted in இலங்கை செய்திகள்

                வவுனியாவில் குளத்தில் மூழ்கி வாத்தியார் மரணம் – நடந்தது என்ன ..?

                வவுனியாவில் குளத்தில் மூழ்கி வாத்தியார் மரணம் – நடந்தது என்ன ..?

                வவுனியாவில் கருமாரி அம்மன் ஆலய தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிப்பதற்காக வைரவபுளியங்குளம் குளத்தில் இறங்கிய அசிரியர் ஒருவர் நீரில் முழ்கி மரணமடைந்துள்ளார்.

                இன்று (27) காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

                வவுனியா, குட்செட் வீதி, கருமாரி அம்மன் ஆலயத்தின் தேர்திருவிழாவிற்கு தாமரைப்பூ மற்றும்

                தாமரை இலை என்பவற்றை பறிப்பதற்காக ஆசிரியர் ஒருவர் வைரவபுளியங்குளம் குளத்திற்குள் சென்றுள்ளார்.

                குறித்த குளத்தில் தாமரை இலை மற்றும் தாமரை பூவைப் பறித்துக் கொண்டிருந்த போது தாமரைக் கொடியில் சிக்கி நீரில் முழ்கியுள்ளார்.

                வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இரசாயனவியல் பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியரான எஸ்.பரந்தாமன் என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  சிறிதரன் எம்பியின் மகன் மீது வாள்வெட்டு குழு தாக்குதல்

                  சிறிதரன் எம்பியின் மகன் மீது வாள்வெட்டு குழு தாக்குதல்

                  யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள சிறிதரனின் மூத்த மகன் மீது எட்டு பேர் அடங்கிய மர்ம கும்பல் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது

                  இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார் ,அரசியல் வாதிகளின் சீண்டுதல் மூலம்

                  இந்த வன்முறை தாக்குதல் இடம்பெற்றுள்ளது ,மாவையின் மகன் மீதும் இவ்வாறு தாக்குதல் நடத்த பட்ட நிலையில்

                  தற்பொழுது கூட்டமைப்பின் முக்கிய தூணாக விளங்கும் சிறிதரன் எம்பியின் மீது தமது

                  கவனத்தை திசை திருப்பி இந்த அரசியல் பழிவாங்குதல் தாக்குதல் நிகழ்த்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                  இவர்களது வீட்டில் உள்ள கமராவில் இந்த குழுக்கள் நடத்தும் தாக்குதல் பதிவாகியுள்ளது,இந்த தாக்குதலை மேற்கொண்ட எட்டு ரவுடிகளும் கைது செய்ய படுவார்களா என்பதே நமது கேள்வியாகும்

                  இந்த விடயம் ஐநாவில் முன்னுதாரணமாக எதிரொலிக்க போகும் என்பதை இங்கே அடித்து கூறலாம்

                    Posted in இலங்கை செய்திகள்

                    புஸ்ஸல்லாவ , புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன் சங்காபிஷேகமும் தேர் திருவிழாவும் photo

                    புஸ்ஸல்லாவ , புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன் சங்காபிஷேகமும் தேர் திருவிழாவும் photo

                    புஸ்ஸல்லாவ சிவபுரத்தில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன்(தாயுமானவர்) ஆலயத்தில் தொடர்ந்து 48 நாட்கள்

                    நடைபெற்ற மண்டலாபிஷேகத்தை தொடர்ந்துபால்குட பவனியும் சங்காபிஷேகமும் தேர் திருவிழாவும் நேற்று (25) நடைபெற்றது.

                    இந்த தெய்வீகநிகழ்வில் நாடளாவிய ரீதியில் இருந்து பக்தர்கள் கலந்துக் கொண்டார்கள். புஸ்ஸல்லாவ சிவபுரத்தில்

                    புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன்(தாயுமானவர்) ஆலயத்தில் தொடர்ந்து 48 நாட்கள் நடைபெற்ற மண்டலாபிஷேகத்தை

                    தொடர்ந்துபால்குட பவனியும் சங்காபிஷேகமும் தேர் திருவிழாவும் நேற்று (25) நடைபெற்றது. இந்த தெய்வீகநிகழ்வில் நாடளாவிய ரீதியில் இருந்து பக்தர்கள் கலந்துக் கொண்டார்கள்

                      Posted in இலங்கை செய்திகள்

                      சனிக்கிழமை ஊடகவியலாளர்கள் சந்திப்பு – “ஐ.நா தீர்மானமும், தமிழீழ மக்களின் எதிர்காலமும் zoom

                      சனிக்கிழமை ஊடகவியலாளர்கள் சந்திப்பு – “ஐ.நா தீர்மானமும், தமிழீழ மக்களின் எதிர்காலமும் zoom

                      காலம் : 27/03/2021சனிக்கிழமை*

                      நேரம்

                      தமிழீழம் இரவு 20:30

                      ஐரோப்பா 16:00

                      பிரித்தானியா 15:00

                      கனடா காலை 11:00

                      தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் பன்னாட்டு இராசதந்திர அரங்குகளிலும், குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடரில் மேற்கொண்ட செயற்பாடுகள்

                      தொடர்பாகவும், எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் தெளிவூட்டப்படும் இணையவழி ஊடான இவ் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள

                      விரும்புவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளலாம் :

                      https://us02web.zoom.us/j/84476843064?pwd=clZYdnduL1Vvc2V1cTEwVE5WK3czdz09

                      Meeting ID: 844 7684 3064
                      Passcode : 213141

                      நன்றி
                      தமிழர் இயக்கம்

                      Posted in Uncategorized

                      யாழில் இராணுவம் திடீர் முற்றுகை

                      யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியில் உள்ள சில வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு கிருமி நாசினி விசுறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

                      யாழ் மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் நேற்றைய தினம் (25) மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் அவசர கூட்டம் இடம்பெற்றிருந்தது.

                      யாழ் மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தின் போது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன.

                      எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக யாழ் நகர பகுதியில் அதிகளவான

                      பொலிஸார், இராணுவத்தினர், சுகாதார துறையினர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் காணப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளது.

                        Posted in Uncategorized

                        ஐநாவில் இலங்கைக்கு தோல்வி –சம்பிக்க ரணவக்க

                        ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால், இலங்கைக்கு எதிரான யோசனையை முன்வைக்காமல் தடுப்பதற்கு, தற்போதைய அரசாங்கம் சரியான இராஜதந்திர அரசியல்

                        வழிமுறைகளை முன்னெடுக்கவில்லை எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, இதன்மூலம் கிடைக்கும் பிரதிபலனை, அரசாங்கம், ஜனாதிபதி, அமைச்சர்கள் மாத்திரமல்ல, முழு இலங்கைச் சமூகமும் எதிர்காலத்தில் அனுபவிக்கும் என்றார்.

                        எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

                        அங்கு தொடர்ந்துரைத்த அவர், இதைப் பாரிய பிரச்சினையாக நாம் பார்க்கிறோம் எனத் தெரிவித்ததோடு, இந்தச் செயற்பாட்டை நல்லாட்சியே ஆரம்பித்ததெனக் காட்டவே இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றும் குற்றஞ்சாட்டினார்.

                        ஆனால், இந்த விடயத்தில் சர்வதேசத் தலையீடு ஏற்பட, தற்போதைய பிரதமர் மஹிந்தவே காரணமாக அமைந்தார் என்றும் கூறிய சம்பிக்க எம்.பி, யுத்தம் நிறைவடைந்த பின்னர், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர், பொறுப்புக்கூறல் என்ற இணக்கப்பாட்டை மஹிந்த ராஜபக்ஷ

                        ஏற்படுத்திக்கொண்டார் என்றும் இந்தப் பொறுப்புக் கூறல் தொடர்பான அர்த்தத்தை அப்போதைய அரச தலைவர் அறிந்து செயற்படுகிறாரா என நாம் கேள்விக்குட்படுத்தினோம். ஆனால் இந்தப் பொறுப்புக்கூறலே, இன்றைய பிரச்சினைக்குக் காரணமாக அமைந்துள்ளதென்றார்.

                        “நாமும் தவறொன்று செய்ததோம். அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எம்மிடம் கேட்காமலேயே மனித உரிமைகள் பேரவையின் யோசனைக்கு இணை அனுசரணை வழங்கினார். இதைச் செய்யாமல் இருந்திருக்கலாம் என்று சிந்தித்தோம். எனினும், குறித்த காலப்பகுதியில்

                        நாட்டைப் பயமுறுத்தவோ, யுத்தக் குற்றங்கள் குறித்து மின்சார கதிரைக்கு அழைத்தச் செல்லவோ, சர்வதேச நீதிமன்றத்தக்கு கொண்டுசெல்லவோ இல்லை. 5 வருடங்கள் இந்த யோசனையை ஒத்திவைக்கப்பட்டதே நடந்தது” என்றார்.

                        இந்த அரசாங்கம், தமது கொள்கைகளையும் திட்டங்களையும் மாற்றுவதன் மூலமே, இன்று இவ்வாறான பிரச்சினையை இலங்கை சந்தித்துள்ளது என்றும் யுத்தத்தின் பின்னர் எமது நாடு

                        செயற்பட்ட விதமே இன்றைய பிரச்சினைக்குக் காரணமாகவுள்ளது என்றும், குறிப்பாக வடக்கிலும் தெற்கிலும் சட்டத்தைப் பாதுகாக்கவோ மனித உரிமைகளைப் பாதுகாக்கவோ அரசாங்கம் செயற்படவில்லை. தமக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்துபவர்களைச் சிறையில்

                        அடைக்கவும் அவர்களின் பிரஜாவுரிமையை இரத்துச் செய்து, அவர்களைத் தேர்தல் செயற்பாடுகளிலிருந்து தூரமாக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க ஜனாதிபதி ஆணைக்குழு ஊடாகச் செயற்பட்டுள்ளது” என்றார்.

                          Posted in Uncategorized

                          தமிழக மீனவர்கள் 54 பேர் சிங்களப் படையால் கைது

                          சர்வதேச கடல் எல்லையை மீறி, இலங்கை கடல்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இந்திய மீனவர்கள் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                          இலங்கை கடற்படையினரால், இவர்கள் நேற்றுக்காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
                          ‘கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களிடமிருந்து 05 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டன. அதிலிருந்த மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’ என கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

                          இவர்கள் மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கடற்பிராந்தியங்களில் வைத்தே செய்யப்பட்டனர் என்றார்.

                          மன்னார் – பேசாலை கடற்பகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்த 02 படகுகளுடன் 20 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                          யாழ்ப்பாணம் – காரைநகரை அண்மித்த கடற்பகுதியில் பாரிய படகொன்றில் மீன்பிடியில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கூறினார்.


                          மேலும்இ முல்லைத்தீவு – சாலைக் கடற்பகுதியில் 02 படகுகளுடன் 20 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                          கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களும் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்த கடற்படை பேச்சாளர், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்றார்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            யாழ் தீவுகளுக்கு புதிய பஸ் சேவைகள்

                            வடக்கிலுள்ள தீவுகளுக்கான போக்குவரத்து சேவையை மேம்படுத்த விரைவில் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்த

                            பயணிகள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தீவகங்களில் தற்போது மிகப்பழைய பஸ்களே போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றார்.

                            புதிய பஸ்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவை கிடைத்தவுடன் அவற்றைத் தீவுகளில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

                            இதேவேளை, வடக்கில் போக்குவரத்துக்கான குழுவை விரைவில் ஸ்தாபித்து, அதற்குத் தேவையான வசதிகளையும்

                            ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
                            வட மாகாணத்தில் பாடசாலை போக்குவரத்து சேவையில் பற்றாக்குறை நிலவுவதாகவும் கஷ்டப்

                            பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கான போக்குவரத்து சேவையை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்..

                              Posted in Uncategorized

                              23 இலட்சம் ரூபாவை திருடிய அதிகாரி

                              23 இலட்சம் ரூபாவை திருடிய அதிகாரி

                              தன்னிடம் இருந்த பணம் அடங்கிய பொதியினை இரண்டு நபர்கள் கொள்ளையிட்டு சென்றதாக

                              பொய்யான நாடகமாடிய, ஹெய்யன்துடுவ பகுதியை சேர்ந்த நிறுவனமொன்றின் நிர்வாக அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

                              தன்னிடம் இருந்த 23 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பணத்தை வங்கியில் வைப்பில் இடுவதற்காக சென்ற போது கொள்ளையிடப்பட்டதாக அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

                              எனினும், இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, குறித்த நபர் தனக்கு நெருக்கமான இருவரை பயன்படுத்தி இந்த நாடகத்தை நடத்தியமை தெரியவந்துள்ளது.

                              தான் பணிபுரியும் நிறுவனத்தின் பணத்தை தனது தேவைகளுக்காக செலவழித்த பின்னர், அதிலிருந்து தப்புவதற்காக இவ்வாறான பேலியான கொள்ளை நாடகமொன்றை அவர்

                              நடத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

                                Posted in இலங்கை செய்திகள்

                                இலங்கை விடயம் ஆராய -சட்ட ஆலோசகர்கள் புலனாய்வாளர்கள் நியமனம்

                                இலங்கை தொடர்பாக ஆராய, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால், சட்ட ஆலோசகர்களும் புலனாய்வாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.

                                இலங்கை தொடர்பான தீர்மானம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்ட நிலையில், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிக

                                ர் அலுவலகம், இலங்கையைக் கண்காணிக்கும் பணியைத் தொடங்கும் என்றும் அதன்படி, இலங்கையில் பணிபுரிவதற்காக, 12 புதிய ஊழியர்களை நியமிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

                                அவர்களில், சர்வதேச குற்றவியல் நீதி – குற்றவியல் விசாரணைகள் மற்றும் அணியை ஒருங்கிணைத்து, தகவல்

                                மற்றும் சான்றுகள் சேகரிக்கும் உத்தியுடைய ஆய்வாளர்கள், இரண்டு புலனாய்வாளர்கள், மனித உரிமை அதிகாரிகள் மற்றும்

                                பாதிக்கப்பட்ட தரப்பின் ஆதரவு அதிகாரிகள், இவ்வனைவரையும் மேற்பார்வை செய்வதற்கான அனுபவமுள்ள சட்ட ஆலோசகர்கள் ஆகியோரையே நியமிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

                                  Posted in Uncategorized

                                  தந்தையை அடித்து கொன்ற மகன் -இலங்கையில் நடந்த பயங்கரம்

                                  தந்தையை அடித்து கொன்ற மகன் -இலங்கையில் நடந்த பயங்கரம்

                                  இலங்கை கொலோன்துடுவ பகுதியில் முப்பத்தி இரண்டு வயது மகனின் கோர தாக்குதலில் சிக்கி 72 வயது தந்தை பலியாகியுள்ளார்

                                  இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகறாரு முற்றிய நிலையில் இந்த படுகொலை

                                  இடம்பெற்றுள்ளது ,மேற்படி விடயம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

                                    Posted in Uncategorized

                                    பொன்சேகாவிடம் 1 பில்லியன் கோரியுள்ள முரளி

                                    பொன்சேகாவிடம் 1 பில்லியன் கோரியுள்ள முரளி

                                    ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிடம்,

                                    இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர்,முத்தையா முரளிதரன் 1 பில்லியன் ரூபாய் நட்டஈட்டை கோரியுள்ளார்.

                                    இந்த மாதம் 15ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில், பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா,

                                    முரளிதரனை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்தமைக்கு எதிராகவே, முரளிதரனால் நட்டஈடு கோரி கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

                                    Posted in Uncategorized

                                    உலகின் கண்காணிப்பு வலயத்தில் மீண்டும் இலங்கை

                                    உலகின் கண்காணிப்பு வலயத்தில் மீண்டும் இலங்கை

                                    சர்வதேச கண்காணிப்பு வலையமைப்புக்குள் மீண்டும் இலங்கை வந்து விட்டது’ என்ற பட்டவர்த்தனமான உண்மையை அரசாங்கம் கண்ணை கட்டி, கணக்கு வித்தை காட்டி சிங்கள மக்களிடம் மறைக்க முயல்கிறது. சிங்கள மக்களுக்கு இதை எடுத்து கூற, முன்னாள் நல்லிணக்க துறைசார் அமைச்சர் என்ற முறையில் நான் கடமைப்பட்டுள்ளேன்.

                                    இலங்கையை கண்காணித்து, இலங்கை பற்றிய வாய்மொழி அறிக்கையை எதிர்வரும் செப்டம்பர்/அக்டோபரிலும், எழுத்து மூல அறிக்கையை அடுத்த வருடம் பெப்ரவரி/மார்ச்சிலும் சமர்பிக்கும்படியும், அதையடுத்து, இலங்கை திருந்தாவிட்டால் பொறுப்பு கூறல் தொடர்பாக

                                    அடுத்து எடுக்கப்பட வேண்டிய காத்திரமான நடவடிக்கைகளை அடுத்த வருடம் செப்டம்பர்/அக்டோபரில் சிபாரிசு செய்யும்படியும், ஐநா மனித உரிமை ஆணைக்குழு (UNHRC) தீர்மானம், ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தை (OHCHR) கோரியுள்ளது என்பதை இலங்கை

                                    ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச கவனத்தில் கொள்ள வேண்டும் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

                                    இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியதாவது,

                                    அரசாங்கம் இன்று கண்ணை கட்டி, கணக்கு வித்தை காட்டுகிறது. தமக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளையும், வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாத நாடுகளையும் கூட்டிக்காட்டி ஐநா தீர்மானம் தோற்றுவிட்டது என கூறுகிறது.

                                    கடந்த ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பெற்ற வாக்குகள் சுமார் 69 இலட்சம். அவருக்கு எதிராக வாக்களித்த, வாக்களிக்காத, ஒட்டுமொத்த பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் தொகை சுமார் 90 இலட்சம். ஆகவே, “வாக்களிக்காதவர்களும் நம்மவரே” என்ற

                                    அரசாங்கத்தின் கணக்கின்படி, கோட்டாபய ராஜபக்ச உண்மையில் தோல்விதான் அடைந்துள்ளார். ஆகவே அவர் அரசியலை விட்டு வீட்டுக்கு போக வேண்டுமோ? என்ற கேள்வியை வெளிவிவகார அமைச்சர், எனது கொழும்பு மாவட்ட நண்பர் தினேஷ் குணவர்தனவிடம் கேட்க விரும்புகிறேன்.

                                    இலங்கை அரசாங்கம் கனவு கண்டுக்கொண்டு, ஊரை ஏமாற்றிக்கொண்டு இருக்கும் வேளையில், ஐநா செயற்பட போகிறது. அதற்கான பலமும், அதிகாரமும் இந்த தீர்மானம் மூலம் ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துக்கு (OHCHR) கிடைக்கிறது. ஐநா மனித உரிமை ஆணைக்குழுவில் (UNHRC) அங்கம் வகிக்கும், வகிக்காத சுமார் 40 இணை அனுசரணை நாடுகளால் கொண்டு வரப்பட்ட இலங்கை பற்றிய இந்த தீர்மானம், இலங்கையை கண்காணிக்கும் பொறுப்பை மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துக்கு (OHCHR) வழங்குகிறது.

                                    முதற்கட்டமாக பன்னிரெண்டு (12) விசேட ஊழியர்கள், இலங்கை கண்காணிப்பு தொடர்பில், ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தில் நியமிக்கப்பட உள்ளார்கள். மேலும் இலங்கை தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க சுமார் 29 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை அலுவலகம் ஐநா பொதுசபையை கோரியுள்ளது.

                                    இதன்மூலம், சாட்சியம், தகவல் ஆகியவற்றை சேகரிக்கும், கண்காணிக்கும் நடவடிக்கைகளை, அலுவலகம் ஆரம்பிக்கும். பாதிக்கப்பட்டோருக்கான உதவியுடன் பொறுப்பு கூறல், நீதி விசாரணை, மனித உரிமை மீறல், சர்வதேச மனித உரிமங்கள் மீறப்படல் ஆகியவை தொடர்பில் கண்காணிப்பு முன்னெடுக்கப்படும்.

                                    எனவே பொறுப்பு கூறல், நீதி விசாரணை, தண்டனை, நஷ்டஈடு, காணாமல் போனோர் அலுவலகம் சுயாதீனமாக செயற்படல், அரசியல் தீர்வு, மாகாணசபை தேர்தல், பன்மைத்துவம் ஏற்பு ஆகியவை தொடர்பில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவின் அரசாங்கம் இனியும் சர்வதேசத்துடன் பேட்டை ரவுடியை போன்று முரண்பட முடியாது. அத்தகைய பிற்போக்கு அரசியல் விளையாட்டுக்கு இனி கால அவகாசமும் இல்லை. அதற்கு இது உள்நாட்டு மைதானமும் இல்லை.