Author: நலன் விரும்பி
யாழில் இளம்பெண்ணை விரட்டி சென்று மோட்டார் சைக்கிளை எரித்த கும்பல்
யாழில் இளம்பெண்ணை விரட்டி சென்று மோட்டார் சைக்கிளை எரித்த கும்பல்
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் கடந்த தினமும் பணி முடித்து வீடு திரும்பி
கொண்டிருந்த இளம் பெண் ஒருவரை பின் தொடர்ந்த மூவர் அடங்கிய ரவுடி கும்பல் விரட்டி சென்றுள்ளது
பீதியடைந்த பெண் மோட்டார் சைக்கிளை வீதியில் போட்டு விட்டு வீடு ஒன்றுக்குள் புகுந்துள்ளார் ,அவ்வேளை அவரது அந்த அழகிய மோட்டார் வண்டியை தீவைத்து எரித்து விட்டு கும்பல் தப்பி
சென்றுள்ளது ,மேற்படி சம்பவ தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இதே பகுதியில் மேலும் சில பெண்கள் இவ்விதமான் கும்பல் ஒன்றினால் மிரட்டப் பட்டதும் ,வீடு புகுந்து அவர் தம் பொருட்கள் வாளினால் வெட்டி வீச பட்டதும் தெரிந்ததே
ஐந்து கிராமங்கள் முற்றாக தனிமை படுத்தல் – இராணுவம் காவல்
ஐந்து கிராமங்கள் முற்றாக தனிமை படுத்தல் – இராணுவம் காவல்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து தற்போது ஐந்து கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளன
இவ்வாறு தனிமை படுத்த பட்ட பகுதிகளில் போலீசார் மற்றும் இராணுவம் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்
இதே போல மேலும் பல கிராமங்கள் தனிமை படுத்த படலாம் என எதிர்பார்க்க படுகிறது
கொரனோ தாண்டவம் – பொது நிகழ்வுகளிற்கு கட்டுப்பாடு
கொரனோ தாண்டவம் – பொது நிகழ்வுகளிற்கு கட்டுப்பாடு
இலங்கையில் மிக வேகமாக பரவி வரு கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பல மக்கள் நாள்
தோறும் பாதிக்க பட்டு வரும் நிலையில் தற்போது பொது நிகழ்வுகளுக்கு புதிய கட்டுப் பாடுகள் விதிக்க பட்டுள்ளன
திருமணம் ,ஆலயங்கள்,மற்றும் பாடசாலைகள் என்பனவற்றில் செயல்பாடுகளுக்கு புதிய
கட்டு பாடுகள் விதிக்க பட்டுள்ளன
மேலும் நிகழ்கால கொரனோ விதிகளை மீறுவோர் கைது செய்ய படுவர் என எச்சரிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
குண்டு தாக்குதல் -எதிரொலி ரிச்சார்ட் ,மற்றும் சகோதரர் கைது
குண்டு தாக்குதல் -எதிரொலி ரிச்சார்ட் ,மற்றும் சகோதரர் கைது
இலங்கையில் மைத்திரி ஆட்சி காலத்தில் தேவாலயங்கள் மீது நடத்த பட்ட தொடர் குண்டு
தாக்குதல் சூத்திரகாரிகளுடன் தொடர்பில் இருந்தார் என்ற குற்ற சாட்டின் அடிப்படையில் முஸ்லீம்
அமைச்சரும் சிங்கள விசுவாசியுமான ரிச்சர்டு பதியுதீன் மாற்று அவரது சகோதரர் ஆகியோர் கைது செய்ய பட்டுள்ளனர்
இதே மகிந்த ஆட்சியில் வன்னியில் தமிழர்கள் நிலங்களை ஆக்கிரமித்து ரவுடிகளை வைத்து
ஆராயகம் செய்து வந்தவர்களின் முக்கியமானவர் இவர் என்பதும் ,அவ்வாறான நபரை அதே சகோதர ஆட்சியில் கைது செய்ய பட்டுள்ளதும் இங்கே கவனிக்க தக்கது
மாட்டை கொன்றவரை குத்தி கொன்ற நபர் – அரங்கேறிய பழிவாங்கல் படுகொலை
மாட்டை கொன்றவரை குத்தி கொன்ற நபர் – அரங்கேறிய பழிவாங்கல் படுகொலை
இலங்கை கலுவலகொட பகுதியில் பால் கறக்கும் பசு மாடு ஒன்றினை மின்சார வேலியில் சிக்க வைத்து கொலை
செய்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர் ,அவரோ பிணையில் விடுதலையாகி வீடு வந்த வேளை
இரவு அவர் நடமாடிய பொழுது ,அவரை பின்தொடர்ந்து சென்ற மமாட்டின் உரிமையாளரின் மகன் அவரை சரமாரியாக கத்தியால் குத்தி கொன்றுள்ளார்
பல்லாயிரம் ரூபா பெருத்தியான மாடு படுகொலை செய்ய பட்ட வேதனையின் துடிப்பில் இந்த
பழிவாங்கல் படுகொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
பிரித்தானியாவில் தொடங்கியுள்ள W2W மக்கள் விழிப்பூட்டல் நடைப்பயணம் ! photo
பிரித்தானியாவில் தொடங்கியுள்ள W2W மக்கள் விழிப்பூட்டல் நடைப்பயணம் ! photo
தடை நீக்கத்திற்கான நடைப்பயணம் ” WALK FOR LIFT THE BAN” எனும் முழக்கத்துடன் வேல்ஸ் நாடாளுமன்ற தொகுதியல் இருந்து பிரித்தானிய பிரதமர் அலுவலக வரையிலான W2W ( wales to
westminster ) மக்கள் விழிப்பூட்டல் நடைப்பயணம் இன்று வெள்ளிக்கிழமை (23-04-2021) தொடங்கியுள்ளது.
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்த சட்டப்போராட்டத்தில், தடையினை மறுபரிசீலனை செய்ய
உள்துறை அமைச்சுக்கு 90 நாட்களை சிறப்பு தீர்ப்பாயம் 90 நாட்கள் வழங்கியிருந்தது. இக்காலக்கெடு நெருங்கி வருகின்ற நிலையில் பிரித்தானியா வாழ் தமிழர்கள்
தடைநீக்கத்திற்கான தமது விருப்பினை அரசாங்கத்தினை நோக்கி வெளிப்படுத்தும் வகையில் lifttheban.uk எனும் இணையத்தளம் செயற்பட்டு வருகின்றது.
நாடாளுமன்றத்தின் ஊடாகவே இத்தடை கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், அந்நாடாளுமன்றத்தின் ஊடாகவே தடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ
அரசாங்கம் தனது வாதுரையில் தெரிவித்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்விடயத்தினை கவனத்தில் கொண்டு செல்லும் வகையில் இந்த இணையத்தளம் செயற்படுகின்றது.
பிரித்தானிய வாழ் தமிழர்கள் தமது பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலகுவாக தடைநீக்கத்துக்கான தமது விருப்பினை இந்த இணையத்தளத்தின் மூலம் வெளிப்படுத்த முடியும்
என்ற நிலையில், பொதுமக்களுக்கு இது தொடர்பில் அரசியல் விழிப்பினை ஏற்படுத்தும் நோக்கில் எனும் இந்த நடைபயணம் தொடங்கியுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களான திரு தேவராஜா நீதிராஜா, திரு இராஐதுரை பார்த்தீபன் இவர்களுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்கள்,
செயற்பாட்டாளர்கள், மக்கள், ஆதரவாளர்கள் என பலர் தங்களையும் இன்றைய நாளில் நடைப்பயணத்தல் இணைந்து கொண்டு பயணிக்கின்றார்கள் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.


ஐந்து மில்லியன் பைசர் ஊசிகளை வாங்கும் இலங்கை – குஷியில் மக்கள்
ஐந்து மில்லியன் பைசர் ஊசிகளை வாங்கும் இலங்கை – குஷியில் மக்கள்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயில் இருந்து மக்களை காப்பற்றி கொள்ளும் நோக்கில்
உருவாக்க பட்டுள்ள தடுப்பூசிகளில் பைசர் நிறுவனத்தின் ஊசியானது திறம்பட செயல் ஆற்றி வருகிறது
இதன் செயல் திறனை அடுத்து மேற்படி தடுப்பூசியினை இலங்கை பெற்றுக் கொள்ள குறித்த
நிறுவனத்திடம், விண்ணப்பம் செய்து இருந்தது ,இதற்கு அமைய ஐந்து மில்லியன் டோசுக்களை
வழங்கிட தீர்மானிக்க பட்டுள்ளது ,இவை விரைவில் இலங்கையை வந்தடையும் என தெரிவிக்க படுகிறது
எரிந்த நிலையில் மீட்க பட்ட சடலம் – அதிர்ச்சியில் கிராம மக்கள்
எரிந்த நிலையில் மீட்க பட்ட சடலம் – அதிர்ச்சியில் கிராம மக்கள்
இலங்கை மாத்தளை பகுதியில் தோட்டம் ஒன்றின் அருகாமையில் வைத்து எரிந்த நிலையில்
மனித சடல பாகங்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளன
மேற்படி படு கொலை எவ்வாறு இடம்பெற்றது ,இதில் எரிக்க பட்டது ஆணா ,அல்லது பெண்ணா
என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீள் திறப்பு
யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீள் திறப்பு
யாழ்ப்பாண பல் கலைக் கழகத்தில் அமைக்க பட்டு இருந்த முள்ளி வாய்க்கால் நினைவு தூபி
விஷமிகளினால் இடித்து அழிக்க பட்டது
அவ்விதமான அந்த தூபி முற்றாக அழிக்க பட்டு புதிதாக அமைக்க பட்டுள்ளது
சிங்கள ஆளும் பவுத்த இனவாதிகளின் தூண்டுதலின் பேரிலேயே இந்த சிலை உடைப்பு
இடம்பெற்று இருந்தமை குறிப்பிட தக்கது
யாழில் வாள்களை காட்டி கொள்ளையில் ஈடுபட்டு வந்த திருடர்கள் 6 பேர் கைது
யாழில் வாள்களை காட்டி கொள்ளையில் ஈடுபட்டு வந்த திருடர்கள் 6 பேர் கைது
யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் வாயதனவர்கள் இருக்கும் வீடுகளை பார்த்து நுழைந்து
வாளை காட்டி பணம் ,மற்றும் நகைகள் ,வாகனங்கள் என்பனவற்றை திருடி சென்ற திருட்டு
கும்பல் ஒன்றினை
போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்
இவ்வ்வாறு கைது செய்ய பட்டவர்களிடம் இருந்து பெருமளவு வாள்கள் ,கத்திகள் மற்றும் திருட
பட்ட விலை உயர்ந்த பொருட்கள் என்பன மீட்க பட்டுள்ளன
தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
கொரனோ கோர தாண்டவம் – இரு கிராமங்கள் தனிமை படுத்தல்
கொரனோ கோர தாண்டவம் – இரு கிராமங்கள் தனிமை படுத்தல்
இலங்கையில் சமீப நாட்களாக வீரியம் பெற்று வேகமாக பரவி வருகிறது
கொரனோ வைரஸ் ,இதனை அடுத்து சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் குருநாகல பகுதியில் இரு
கிராம சேவகர் பிரிவுகள் முற்றாக தனிமை படுத்த பட்டுள்ளன
இங்கே பல மக்கள் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கண்டு பிடிக்க்க பட்ட
நிலையில் அந்த கிராமங்கள் மறு அறிவித்தல் வரை தனிமை படுத்த பட்டுள்ளது
இங்கு இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது ,இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது
மனித வெடி குண்டு தாரி உறவினர்கள் இராணுவத்தால் கைது
மனித வெடி குண்டு தாரி உறவினர்கள் இராணுவத்தால் கைது
இலங்கையில் தேவாலயங்கள் மீது தொடர் குண்டு தாக்குதலை நடத்திய சகரான் உறவினர்கள்
இருவர் பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் தொடர்ந்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,
மேலும் புலிகள் பெயரை பாவித்து வெளிநாடு செல்ல முற்பட்ட நபர் ஒருவரும் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
கொரனோ தாண்டவம் – பல் கலைக் கழகங்கள் திறப்பு ஒத்தி வைப்பு
கொரனோ தாண்டவம் – பல் கலைக் கழகங்கள் திறப்பு ஒத்தி வைப்பு
இலங்கையில் வேகமாக உருவெடுத்து பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலநூறு
பேர் நாள் தோறும் பாதிக்க பட்டு வருவதனால் பல் கலைக் கழகங்கள் மீள் திறப்பது ஒத்தி வைக்க பட்டுள்ளது
இது போலவே பயண கட்டுப் பாடுகளும் ஆங்காங்கே விதிக்க பட்டுள்ளதால் ,மீள் இலங்கை முடக்க
நிலைக்கு செல்லும் அபாயம் எழுந்துள்ளது
விடுதலைப்புலிகள் விவகாரத்தில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகரிக்கும் அழுத்தம் ! photo
விடுதலைப்புலிகள் விவகாரத்தில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகரிக்கும் அழுத்தம் !
பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை என்பது நாடாளுமன்றத்தின் ஊடாகவே கொண்டு வரப்பட்டிருந்த நிலையில்,
அத்தடையினை நாடாளுமன்றத்தின் ஊடாக நீக்கக் கோரும் அழுத்தம் நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தடையினை நீக்க கோரி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற
சட்டப்போராட்டத்தின் வாதுரையில் நாடாளுமன்றத்தின் ஊடாகவே இத்தடை நீக்கப்பட வேண்டும் கோரப்படுகின்றது.
இந்நிலையில் பிரித்தானிய வாழ் தமிழர்கள் தாம் வசிக்கின்ற தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்த்தினை இந்த lifttheban.uk இணையவழி மூலமாக முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானிய அரசாங்கத்தின் தடை என்பது, பிரித்தானிய வாழ் தமிழர்களின்
இயல்பு வாழ்க்கையினை பாதிப்பதோடு, தமது சுதந்திரமான அரசியல் செயற்பாடுகளுக்கும் தடையாக இருக்கின்றதென குறிப்பிடுகின்றனர்.
தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையம் தனது இரண்டாம் கட்டத்தீர்ப்பில்,
பிரித்தானிய அரசாங்கத்துக்கு 90 நாட்கள் காலஅவகாசம் வழங்கியுள்ள நிலையில், தமிழ்மக்கள் தடையினை நீக்க கோரும்
தமது விருப்பினை இணையத்தளம் மூலம் வெளிப்படுத்த ஊக்குவிக்கும் பொருட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது பிரச்சாரத்தினை தீவிரப்படுத்தியுள்ளது.
பயங்கரவாத தடைப்பட்டியலில் விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் வைத்திருக்கும் பிரித்தானிய உள்துறையமைச்சரின்
செயல் சட்டமுறைமைக்கு முரணானது என ஆணையம் தனது முதல் தீர்ப்பில் (ஒக்ரோபர் 21-2020) முன்னராக தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.




விபத்தில் சிக்கிய இலங்கை விமானம் – தப்பிய பயணிகள்
விபத்தில் சிக்கிய இலங்கை விமானம் – தப்பிய பயணிகள்
இலங்கை அரசுக்கு சொந்தமான ஏயர்லங்கா பயணிகள் விமானம் ஒன்று மாலைதீவு விமான நிலையத்தில்
விபத்தில் சிக்கியுள்ளது ,பயணிகளை காவி பறக்கும் முயற்சியில் ஈடுபட்ட பொழுது அந்த விமான நிறுவனத்தில் உள்ள
வாகனம் ஒன்று விமானத்தின் பின் பகுதியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும்
,குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது
இது திட்டமிடப்பட்ட சதியா என்பது தொடர்பில் தெரியவரவில்லை
யாழில் மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு
யாழில் மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு
யாழ்ப்பாணம் கொடிகாமம் பாலாவி காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி
கொண்டிருந்த கும்பல் ஒன்றை கண்ணுற்ற இராணுவம் ,அந்த உளவு இயந்திரத்தின் மீது துப்பக்கி சூடு நடத்தியுள்ளது
இந்த தாக்குதலை அடுத்து மணல் ஏற்றி கொண்டிருந்த நபர்கள் தப்பி சென்றுள்ளனர்
உழவு இயந்திரத்தின் டயர்கள் காற்று போன நிலையில் பொலிஸாரினால் மீட்க பட்டுள்ளது
தப்பி ஓடிய மூவைரையும் கைது செய்யும் நகர்வில்க் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
ரயிலில் மோதி பலியான 16 எருமைகள்
ரயிலில் மோதி பலியான 16 எருமைகள்
இலங்கை வவுனியா ஓமந்தை பகுதியில் தண்டவாளத்தின் மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருந்த
பதினாறு எருமைகள் கடுகதி ரயிலில் மோதுண்டு பலியாகியுள்ளன
பல லட்சம் ரூபா பெறுமதியான எருமைகள் இவ்விதம் பலியாகியுள்ளமை உரிமையாளரை பாதித்துள்ளது
மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,இரை
தேடி சென்ற எருமைகளை ,இவ்விதம் கொன்று வீசியுள்ளது துயரை ஏற்படுத்தியுள்ளது

இலங்கையில் எகிறும் கொரனோ – 630 பேர் மரணம்
இலங்கையில் எகிறும் கொரனோ – 630 பேர் மரணம்
இலங்கையில் தற்போது கொரனோ நோயானது மிக தீவிரமாக பரவி வருகிறது ,நாள் ஒன்றுக்கு
சுமார் 500 பேர் இந்த நோயினால் பாதிக்க பட்டு வருவது கண்டு பிடிக்க பட்டுள்ளது
மேலும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி ஐவர் பலியாகியுள்ளனர்
இதனால் இலங்கையில் இறந்தவர்கள் எண்ணிக்கை 630 எட்டியுள்ளது
இலங்கை இந்தியா விமான பயணங்கள் இடை நிறுத்தம்
இலங்கை இந்தியா விமான பயணங்கள் இடை நிறுத்தம்
இலங்கை இந்தியாவுக்கு இடையில் மீள ஆரம்பிக்கப் படவிருந்த விமான பயணங்கள் தபோது இடைநிறுத்தம் செய்ய பட்டுள்ளது
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து இந்த இடைக்கால தடை விதிக்க பட்டுள்ளது
மேற்படி இந்த தடை உத்தரவினால் இரு நாடுகளுக்கு இடையிலான பயண போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது
கோழி முட்டையிடவில்லை – காவல்துறையில் முறையிட்ட விவசாயி
கோழி முட்டையிடவில்லை – காவல்துறையில் முறையிட்ட விவசாயி
இலங்கையில் விசித்திர சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது ,சுய தொழில் வேலை வாய்ப்பு பணியொன்றை
நடத்தி வந்த விவசாயி தான் வளர்த்து வந்த கோழிகளுக்கு நிறுவனம் ஒன்றில் இருந்து கோழி
தீவனத்தை பெற்று வாழங்கியுள்ளார் ,அதனை உண்ட கோழிகள் முட்டையிடவில்லை என அவர் புகார் அளித்துள்ளார்
இதனால் குறித்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்ய பட்டு விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன









