Author: நலன் விரும்பி
டிரோன் மூலன் கண்காணிப்பு – 396 பேர் கைது
டிரோன் மூலன் கண்காணிப்பு – 396 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய 396 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
முகக்கவசம் அணியாது சென்றமை , மாகாண எல்லைகளை கடந்து சென்றமை ஆகிய
குற்றங்களில் இவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
இந்த கைது டிரோன் விமானங்கள் மூலம் கண்காணிக்க பட்டு நடத்த பட்டுள்ளதாக காவல்துறை
பேச்சாளர் தெரிவித்துள்ளார்
பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு குழந்தை பிறந்தது
பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு குழந்தை பிறந்தது
பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், இந்திய மொழி அனைத்திலும் பாடி வருகிறார். அவருடைய மயக்கும் குரலுக்கு அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்டநாள் காதலரான ஷிலாதித்யாவைத் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பின்னரும் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் செம பிசியாகப் பாடிக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா கோஷல்.
ஸ்ரேயா கோஷல்
சமீபத்தில், தான் கர்ப்பமாக இருப்பதாக குறிப்பிட்டு அழகிய புகைப்படம் ஒன்றையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்தார்.
இதையடுத்து ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ஸ்ரேயா
கோஷலுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை ஸ்ரேயா கோஷல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடுப்பான வனிதா விஜயகுமார்- ஏன் தெரியுமா ..?
கடுப்பான வனிதா விஜயகுமார்- ஏன் தெரியுமா ..?
சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கொரோனாதேவி சிலை, பார்ப்பதற்கு வனிதா விஜயகுமார் போலவே இருப்பதாக கிண்டல் செய்து வருகிறார்கள்.
கொரோனா தேவியுடன் ஒப்பிட்ட நெட்டிசன்கள்… கடுப்பான வனிதா விஜயகுமார்
கொரோனா தேவி – வனிதா
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய – மாநில அரசுகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் கோவையில் உள்ளவர்கள் ஒருபடி மேலே சென்று கொரோனா
தேவி சிலை வைத்து மக்கள் விரைவில் கொரோனாவில் இருந்து விடுபட வேண்டும் என வேண்டுதலோடு வழிபட்டு வருகின்றனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வனிதா
இந்த நிலையில் சில நெட்டிசன்கள் கொரோனாதேவி சிலை, பார்ப்பதற்கு வனிதா விஜயகுமார் போலவே இருப்பதாக ஜாலியாக கேலி கிண்டல் செய்து, அதுகுறித்த மீம்ஸ்களை அவருக்கே டேக் செய்து வருகின்றனர்.
வனிதா விஜயகுமார்
இந்த புகைப்படத்தை பார்த்த வனிதா விஜயகுமார், கடுப்பாகி, “எல்லோரும் இதை ஏன் எனக்கு ஷேர் செய்கிறார்கள்? என்று பதிவு செய்து கேள்வி எழுப்பியுள்ளார்”. இந்த பதிவு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சாலையோரம் நாதஸ்வரம் வாசிக்கும் நபர்… கண்டுபிடிக்க உதவி கோரும் ஜிவி பிரகாஷ்
சாலையோரம் நாதஸ்வரம் வாசிக்கும் நபர்… கண்டுபிடிக்க உதவி கோரும் ஜிவி பிரகாஷ்
சாலையோரம் நாதஸ்வரம் வாசித்து உதவி கேட்கும் ஒருவரின் வீடியோவை பகிர்ந்து, அவரை கண்டுபிடிக்க உதவுமாறு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
சாலையோரம் நாதஸ்வரம் வாசிக்கும் நபர்… கண்டுபிடிக்க உதவி கோரும் ஜிவி பிரகாஷ்
ஜிவி பிரகாஷ்
இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4ஜி, காதலிக்க யாருமில்லை, பேச்சிலர் உள்ளிட்ட படங்களில்
நடித்து வருகிறார். அதோடு சூர்யாவின் வாடிவாசல், தனுஷின் 43-வது படம் ஆகியவற்றிற்கு இசையமைத்தும் வருகிறார்.
இந்நிலையில் சாலையோரம் நாதஸ்வரம் வாசிப்பவரின் வீடியோவை சமூக வலைத்தள
பக்கத்தில் பதிவிட்ட இணையவாசி ஒருவர், இவரது வாசிப்பையும், இருக்கும் நிலைமையையும் பாருங்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதைப் பார்த்த ஜி.வி.பிரகாஷ், ‘இந்த நபரை கண்டுபிடிக்க முடிந்தால், நாம் அவரை பாடல்
பதிவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்புகள் மிக திறமையாகவும், துல்லியமாகவும் இருக்கின்றன’ எனக் குறிப்பிட்டு அந்த வீடியோவை ரீ-ட்வீட் செய்திருக்கிறார்.
இவர் வாசிக்கிறத கேளுங்க. இருக்கிற நிவைமையும் பாருங்க.
— Viswam Nataraj (@CMDViswamsGroup) May 22, 2021
நல்லதோர் வீணை செய்தே …… pic.twitter.com/NJbpb84uW7
இன்று 2,145 பேருக்கு கொரனோ தொற்று -= சாராய கடைகள் பூட்டு
இன்று 2,145 பேருக்கு கொரனோ தொற்று -= சாராய கடைகள் பூட்டு
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரனோவால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை
சுமார் 2,145 பேராக உயர்வடைந்துள்ளது
வேகமாக பரவி வரும் இந்த நோயினை கட்டுப்படுத்த பயண தடைகள் விதிக்க பட்டுள்ளது
,எனினும் அவை தாண்டி இந்த நோயானது வேகமாக பரவி வருகிறது
சாராய கடைகள் பூட்டு
எதிர் வரும் இருபத்தி ஐந்தாம் திகதி முதல் சாராய கடைகள் அனைத்தும் அடித்து பூட்டுமாறு
உத்தர விட பட்டுள்ளது ,இதனால் குடி மகன்கள் பெரிதும் கலக்கத்தில் உறைந்துள்ளனர்
கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் -சென்றவர்களை கரை திரும்ப வேண்டுதல்
கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் -சென்றவர்களை கரை திரும்ப வேண்டுதல்
வங்காள விரிகுடாவின் வடமேற்குப் பகுதியில் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல் பயணங்களில் ஈடுபட வேண்டாமென வளிமணடலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் நாளை முதல் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல் பயணங்களில் ஈடுபட வேண்டாமென வளிமணடலவியல் திணைக்களம் அறிவித்திருக்கிறது.
தற்போது கடல் பிரதேசத்தில் கடற்றொழில் ஈடுபட்டிருப்பவர்கள் விரைவாக கரைக்குத் திரும்புமாறு அல்லது பாதுகாப்பான இடங்களுக்குத் செல்லுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் தாழமுக்கம் நாளை மறுதினம் புயலாக மாற்றமடையக்கூடுமென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக எதிர்வரும் சில தினங்களுக்கு வடக்கு மற்றும் வடமேற்கு வங்காள விரிகுடா
கடல் பிரதேசத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். காற்று 80 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
பயண கட்டுப்பாடு நீக்க படுமா ..? இராணுவ தளபதி போட்ட குண்டு
பயண கட்டுப்பாடு நீக்க படுமா ..? இராணுவ தளபதி போட்ட குண்டு
நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னரும் வார இறுதி நாட்களில் தொடர்ந்தும் பயணக் கட்டுப்பாடுகளை மேற்கொள்வதா இல்லையா என்பது
பற்றி தீர்மானிக்கப்படும் என்று கொவிட் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தற்சமயம் அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட உள்ளதோடு அன்றைய தினம் இரவு பதினோரு மணிக்கு மீண்டும் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளது.
பொது மக்கள் தமக்கான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவே இந்த பயணக்கட்டுப்பாட்டில் அன்றைய தினம் தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது.
மக்களின் நலன் கருதி அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் இராணுவ தளபதி கூறினார். அரசாங்கம் வழங்கும் சலுகைகளை இந்த
சந்தர்ப்பத்தில் துஸ்பிரயோகம் செய்ய வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்ததுடன் ,அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும்
கொவிட் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார
கொரனோவால் பாதிக்க படும் ஐயர் மாருக்கு உதவி வழங்க, டக்கிளஸ் நடவடிக்கை
கொரனோவால் பாதிக்க படும் ஐயர் மாருக்கு உதவி வழங்க, டக்கிளஸ் நடவடிக்கை
கொறோனா வைரஸினால் பாதிக்கப்படுகின்ற இந்துச் சிவாச்சாரியர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிவாச்சாரியர்களின் தேவைகள் தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கொறோனா வைரஸினால் பாதிககப்படுகின்ற சிவாச்சாரியர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களில் எதிர்கொள்ளுகின்ற நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக கௌரவ பிரதமரின்
இந்து விவகாரம் தொடர்பான இணைப்பாளர் சிவஸ்ரீ பாபு சர்மா இராமசந்திரக் குருக்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர்இ பாதிக்கப்பட்டிருக்கின்ற
சிவாச்சாரியர்களுக்கான உணவு நடைமுறை மற்றும் ஆகமக் கடமைகளை மேற்கொள்வதற்கு வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாக அவதானம் செலுத்தினார்.
இதன்போதுஇ சிவாச்சாரியர்களுக்கு தேவையான சைவ உணவுகள் ஆச்சார முறைப்படி பரிமாறப்படுவதை உறுதிப்படுத்துமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆலோசனை வழங்கப்பட்டது.
அதேவேளைஇ வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி தனிமைப்படுத்தல் பராமரிப்பு நிலையத்தில்
தற்போது மூன்று சிவாச்சாரியர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர்
வைத்தியக் கலாநிதி கேதீஸ்வரன்இ தேவையேற்படின் சிவாச்சாரியர்களுக்கான தனியான
தொகுதி ஒன்றினை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய 423 பேர் கைது
தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய 423 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய 423 பேர் காவல் துறையினரால் கைது செய்ய
பட்டுள்ளனர்
இவ்வாறு கைதானவர்களில் அதிகமானவர்கள் முகக்கவசம் அணியாது சென்றவர்கள் என
தெரிவிக்க படுகிறது
இலங்கையில் ஒரே நாளில் கொரனோவால் 38 பேர் மரணம்
இலங்கையில் ஒரே நாளில் கொரனோவால் 38 பேர் மரணம்
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 38 பேர் மரணமாகியுள்ளனர்
இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 1.089 பேர் மரணமாகியுள்ளனர் .பல்வேறு பட்ட
நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்ற பொழுதும் ,குறித்த நோயினைன் கட்டு படுத்த
முடியாது இலங்கை திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது
கொரனோ நோயினால் 1000 சிறுவர்கள் பாதிப்பு
கொரனோ நோயினால் 1000 சிறுவர்கள் பாதிப்பு
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் ஆயிரம் சிறுவர்கள்
பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இவ்வாறு பாதிக்க பட்ட சிறுவர்களுக்கு கொரனோ தடுப்பூசி செலுத்திட இலங்கை அரசு முயன்று
வருகின்றமை குறிப்பிட தக்கது
அம்புலன்ஸ் வண்டி மீது தாக்குதல் – விசாரணைகள் ஆரம்பம்
அம்புலன்ஸ் வண்டி மீது தாக்குதல் – விசாரணைகள் ஆரம்பம்
ஹட்டன் பகுதியில் 1990 சுவசெரிய அம்பியுலன்ஸ் வண்டியின் ஓட்டுனர் மற்றும் உதவியாளர் மீது தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் இதுவரையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நபர் ஒருவர் மாடியில் இருந்து விழுந்துள்ளதாக இன்று (22) அதிகாலை 2 மணியளவில் 1990 என்ற இலக்கத்திற்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.
இதனையடுத்து அப்பகுதிக்கு அம்பியுலன்ஸ் வண்டி சென்றுள்ளதுடன் இதன்போது மாடியில் இருந்து விழுந்ததாக
கூறப்பட்ட நபருக்கு எவ்வித காயங்களும் இல்லாத காரணத்தினால் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளனர்.
இதன்போது அப்பகுதியில் மதுபோதையில் இருந்த சிலர் ஓட்டுனர் மற்றும் உதவியாளரான பெண்ணின் மீது தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றன
கொரனோ தொற்றியவர்களை தாக்கும் புதிய நோய் – பீதியில் மக்கள்
கொரனோ தொற்றியவர்களை தாக்கும் புதிய நோய் – பீதியில் மக்கள்
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 9 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயாளிகளை கருப்பு பூஞ்சை என்ற நோய் தாக்குவதாக தகவல்கள் வெளியானது. இந்திய மாநிலங்களான ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களில் தொற்று பாதித்த சிலருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் அதிகம் இருப்பதாக தகவல் வெளியானது.
அதீத நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், Steroid medicine எடுப்பவர்கள், பல நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்கள், சில தெரபிகள் எடுத்துக்கொள்வோருக்கு கருப்பு பூஞ்சை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் புதுவையிலும் கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் தொடங்கியுள்ளது. புதுவை அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த 5 நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயால் கண் பார்வையை இழந்துள்ளனர்.
நாள்தோறும் புதுவை, தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் இருந்து கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.
இதுகுறித்து கண் மருத்துவமனை டாக்டர் வெங்கடேஷ் தெரிவிக்கையில்:-
கொரோனா வந்தவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள் நாள்தோறும் ஒருவர் அல்லது 2 பேர் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புடன் சிகிச்சைக்காக வருகின்றனர்.
இதுவரை 14 நோயாளிகள் வந்துள்ளனர். நோயின் தாக்கம் அதிகரித்து சிகிச்சைக்கு வரும்போதே 5 பேருக்கு பார்வையில்லை.
கருப்பு பூஞ்சை நோய் மூக்கின் வழியே, கண்ணில் பரவி ரத்தக்குழாய்களை சிதைக்கிறது. உடலில் எதிர்ப்பு சக்தி குறைவு, சர்க்கரை நோய் அதிகமாக இருப்பவர்களை இந்நோய் தாக்குகிறது.
ஸ்டீராய்டு அதிகமாக எடுப்பவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைகிறது. அவர்களின் உடலில் பூஞ்சை வளர்ந்து கண் பார்வையை பாதிக்கிறது. சிகிச்சைக்காக புதுவையை சேர்ந்தவர்கள் 3 பேர் வந்துள்ளனர்.
தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் பலர் நோய் பாதிப்புடன் சிகிச்சைக்கு வருகின்றனர். தமிழகம்-புதுவையில் இந்த நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் அறிகுறிகளை தெரிந்து கொள்வது கஷ்டம். கண்ணை சுற்றி வீக்கம், வாய், மூக்கில் ரத்தம் வந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்.
காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் சென்று எண்டாஸ் கோப் பார்த்தால் நோயின் தாக்கம் தெரியும். எல்லா கொரோனா நோயாளிகளுக்கும் கரும்பூஞ்சை தொற்று வராது.
சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்களை பெருமளவில் தாக்கும். அவர்கள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
என்று தெரிவித்தார்..
நீண்டகால நோய்களுடன் உள்ளவர்களுக்கு புதுவை சுகாதாரத்துறை சார்பில் சில எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு உள்ளது. சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொடர் நோய்களான ரத்த கொதிப்பு, சர்க்கரை, இருதய நோய், சிறுநீரக நோய் மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள் தவறாமல் மருந்தை உட் கொண்டு நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
இருதய ரத்தக்குழாய் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், இருதய ரத்தக் கோளாறுக்கு ஸ்டன்ட் வைத்துள்ளவர்கள் தவறாமல் ஆஸ்பிரின் மற்றும் ரத்தம் உறையாமல் இருப்பதற்கான மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவறாமல் தாங்கள் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் இன்சுலின் ஊசி மற்றும் மாத்திரைகளை தொடர்ந்து எடுத்து சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண் டும்.
இதன் மூலம் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் கருப்பு பூஞ்சை போன்ற உயிர் கொல்லி நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். பொதுமக்கள் இதனை உணர்ந்து தடுப்பூசியை உடனே போட்டுக் கொண்டு தங்களையும் தங்கள் பாசத்துக்கு உரிவர்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
தேவை இல்லா பயணங்களை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்..
27ஆம் திகதி வரையில் பயணிகள் ரயில் , பஸ்கள் சேவைகள் இரத்து – போக்குவரத்து முடக்கம்
27ஆம் திகதி வரையில் பயணிகள் ரயில் , பஸ்கள் சேவைகள் இரத்து – போக்குவரத்து முடக்கம்
நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை பயணிகள் ரயில்கள்; எதுவும் சேவைகளில் ஈடுபடாது என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
சரக்கு மற்றும் எரிபொருட்களை எடுத்துச்செல்லும் ரயில்கள் மாத்திரம் இக்காலப்பகுதயில்
சேவையில் ஈடுபடும் என்று ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் டப்ளியு.ஏ.டி.எஸ்.குணசிங்க தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ,பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சேவைகள் இடம்பெறாது.கடந்த காலத்தில் இடம் பெற்றது போன்று அத்தியாசிய
சேவைகளுக்காக செல்லும் பொது மக்களுக்காக மாத்திரம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான
பஸ்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடும் என்று இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் யு.ர்.பண்டுக சுவர்ணஹங்ச தெரிவித்தார்
பயணக் கட்டுப்பாடு விதிகளை கண்காணிப்பதில் 22 ஆயிரம் பொலிசார்
பயணக் கட்டுப்பாடு விதிகளை கண்காணிப்பதில் 22 ஆயிரம் பொலிசார்
இன்று (21) இரவு 11 மணி தொடக்கம் நாட்டில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவிருக்கிறது.
பயணக்கட்டுப்பாடு அமுலிலிருக்கும் காலப்பகுதியில் கட்டுப்பாடு விதிமுறைகளை மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதுபற்றி கண்காணிப்பதற்கு சுமார் 22 ஆயிரம் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறையை பயன்படுத்தி அல்லது ஏனைய தேவைகளுக்காக வீடுகளில் இருந்து
வெளியேறுவதற்கு எந்தவித அனுமதியுமில்லையென பொலிசார் அறிவித்துள்ளனர்.
இருப்பினும் அத்தியாசிய தேவைகளை முன்னெடுப்பதற்கு இந்த பயணக்கட்டுப்பாடு தடை அல்ல என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண ,அரசாங்க
தகவல் திணைக்களத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் தெரிவித்தார்.
பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியில் அனைத்து பகுதிகளிலுமுள்ள மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி உண்டு. இதேபோன்று எவருக்காவது அத்தியாசிய
மருந்துவகைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அருகிலுள்ள மருந்தகத்திற்குச் சென்று அதனை பெற்றுக்கொள்வதற்காக செல்ல முடியும்.
அத்தியாவசிய சேவைகள் இடம்பெறும். குறிப்பாக பேக்கரி தயாரிப்புக்கள் உணவுப்பொருட்கள் காய்கறி பழங்கள் உள்ளிட்ட அனைத்து உணவுப்பொருட்கள் அடங்கலான நடமாடும் வாகன
விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண கூறினார்.
கிட்னியை மாற்ற உதவிய சிரஞ்சீவிக்கு நன்றி.. பொன்னம்பலம் உருக்கம்
கிட்னியை மாற்ற உதவிய சிரஞ்சீவிக்கு நன்றி.. பொன்னம்பலம் உருக்கம்
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக வலம் வந்த பொன்னம்பலம், தனது கிட்னியை மாற்ற உதவிய சிரஞ்சீவிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக வலம் வந்தவர் பொன்னம்பலம். ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், உள்ளிட்
ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கமல் தொகுத்து வழங்கிய
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பொன்னம்பலம் கலந்துக் கொண்டார். சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பொன்னம்பலம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வீடியோ வைரலானது.
இதையடுத்து பலரிடம் உதவி கேட்டார். சரத்குமார், கமல் உள்ளிட்ட பலர் பொன்னம்பலத்திற்கு உதவி செய்தனர்.
இந்நிலையில் தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் சிரஞ்சீவி பொன்னம்பலத்தின்
கிட்னியை மாற்ற உதவி செய்திருக்கிறார். இதற்கு நடிகர் பொன்னம்பலம் வீடியோ வெளியீடு சிரஞ்சீவிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சீமான் எதிர்ப்பு… சமந்தாவின் பதிவு…
சீமான் எதிர்ப்பு… சமந்தாவின் பதிவு…
பேமிலிமேன் 2 வெப் தொடருக்கு சீமான் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், நடிகை சமந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு செய்திருக்கிறார்.
சீமான் எதிர்ப்பு… சமந்தாவின் பதிவு…
சீமான் – சமந்தா
சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் வெப் தொடர் ‘தி பேமிலிமேன் 2’. இந்த தொடர் வரும் ஜூன் மாதம் நான்காம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு
நாட்களுக்கு முன்னர் இந்த தொடரின் டிரைலர் வெளியானது. இந்த டிரைலர் மாபெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருந்தாலும் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தொடரை வெளியிடக்கூடாது என்று கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நாம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தத் வெப்தொடரை வெளியிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் ’அமைதியாக இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள்’ என்று பதிவு செய்து மார்ட்டின் லூதர் கிங்கின் பொன்மொழியான ’முழுப்பாதையும்
தென்படாவிட்டாலும் முதலடியை எடுத்து வைப்பதற்கு நம்பிக்கையே முக்கியம்’ என்பதையும் பதிவு செய்துள்ளார்.
பூகான்வீல் நாட்டு சபாநாயகர் பங்கெடுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு !
பூகான்வீல் நாட்டு சபாநாயகர் பங்கெடுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு !
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில் சிறப்பு அதிதியாக பங்கெடுக்க இருக்கின்ற பூகான்வீல் நாட்டு சபாநாயகர் சிமொன் பெனானு ( Speaker of
BougainvilleHouse of Representatives ) அவர்கள் ‘இனப்பிரச்சனைக்கான அரசியல்தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு’ எனும் தொனிப்பொருளில் சிறப்புரை ஆற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சனி,ஞாயிறு ஆகிய இருநாட்களுக்கு இணைவழியே இடம்பெற நடைபெற இருக்கின்ற அரசவை அமர்வில், பல்வேறு சர்வதேச வள அறிஞர்கள் பங்கெடுக்க இருக்கின்றனர்.
பசுபிக் பெருங்கடல் தீவின் சுதந்திர தனிநாட்டு அரசியல் இறைமைக்காக நீண்டகாலமாக போராடி, 2019ம் ஆண்டு முதல் கட்ட பொதுவாக்கெடுப்பொன்றின் மூலம் பப்புவாக்கினாயாவில்
இருந்து பிரிந்து சுதந்திர நாடாக தமது அரசியல் பெருவிருப்பினை வெளிப்படுத்திய தேசம் ‘பூகான்வீல்’.
சர்வதேச ஒப்பந்தத்துக்கு அமைய விரைவில் முறையான இரண்டாம் கட்ட பொதுவாக்கெடுப்பினை பூகான்வீல் தேசம் எதிர்கொண்டுள்ள நிலையில்;, அத்தேசத்தின்
சபாநாயகர், பொதுவாக்கெடுப்பு நோக்கிய தமது அரசியல் செயல்வழிப்பாதையினை பகிர்ந்து கொள்ளும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் பங்கெடுக்க இருக்கின்றார்.
இதுதவிர ‘சுயநிர்ணய உரிமையும், ஈடுசெய்நீதியிலான பிரிந்து செல்லலும் Self Determination and Remedial Secession’ – ‘இந்தியப் பெருங்கடல் இலங்கைத்தீவில் பெருகிவரும் சீன ஆதிக்கமும் அதனை
தடுப்பதற்கான பொறிமுறையும் Growing Chinese influence in the Indian Ocean specially in Sri Lanka and measures to counter it. ‘ எனும் தலைப்புக்களிலும் பலவள அறிஞர்கள் கருத்துரைகளை முன்வைக்க இருக்கின்றனர்.
இதேவேளை ஒத்திவைக்கப்பட்ட அரசவை அமர்வின் கூட்டமர்வில் வளஅறிஞர்கள், அரசவை உறுப்பினர்கள், மேற்சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்துகள் பகிரும் வகையில்
‘தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு’ எனும் கருப்பொருளில் கலந்தாய்வு இடம்பெற இருக்கின்றது.
இந்நிகழ்வுகளை மே22ம் நாள் சனிக்கிழமை, நியு யோர்க் நேரம் காலை 9 மணி முதல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வலைக்காட்
முகம் எப்படி சரியானது – ரைசா விளக்கம்
முகம் எப்படி சரியானது – ரைசா விளக்கம்
சில நாட்களுக்கு முன் முகம் சரியான அழகான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள ரைசா, அதற்கான காரணத்தை கூறி இருக்கிறார்.
முகம் எப்படி சரியானது – ரைசா விளக்கம்
ரைசா வில்சன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ரைசா வில்சன். இவர் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று பலருடைய கவனத்தை ஈர்த்தார். இந்த நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து சில படங்களில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமானார்.
இவர் கடந்த மாதம் சிகிச்சைக்கு தோல் மருத்துவரிடம் சென்றதாகவும் அதனால் தனது முகத்தில் ஏற்பட்ட காயம் குறித்தும்
பதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து பல சர்ச்சைகள் நடந்தன. சில நாட்களுக்கு முன் மீண்டும் முகம் சரியான அழகான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் ரைசா.
இலங்கையில் கொரனோ பரப்பும் மக்கள் – அதிர்ச்சி தகவல்
இலங்கையில் கொரனோ பரப்பும் மக்கள்- அதிர்ச்சி தகவல்
இலங்கையில் கொரனோ தொற்றிய நபர் ஒருவரால் அந்த நோயினை 400 பேருக்கு பரப்பிட
முடியும் எனவும் ,அவ்விதம் இலங்கையில் இடம் பெற்றுள்ளதக தெரிவிக்க படுகிறது
எனவே தான் மக்களை முகக் கவசம் அணிந்து கொள்ளும் மாறும் ,சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
இந்த நோயின் தொற்றுக்கு உள்ளான சிலருக்கு எவ்வித அறிகுறியும் இன்றி 14 நாட்களுக்கு பின்னர் அடையாளம் காணப்பட்டுள்ள சம்பவங்கள் அதிகரித்துள்ளது
எனவே மக்களே விழிப்பாக இருந்து உங்களை காப்பாற்றி கொள்ளுங்கள்







