பூகான்வீல் நாட்டு சபாநாயகர் பங்கெடுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு !
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில் சிறப்பு அதிதியாக பங்கெடுக்க இருக்கின்ற பூகான்வீல் நாட்டு சபாநாயகர் சிமொன் பெனானு ( Speaker of
BougainvilleHouse of Representatives ) அவர்கள் ‘இனப்பிரச்சனைக்கான அரசியல்தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு’ எனும் தொனிப்பொருளில் சிறப்புரை ஆற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சனி,ஞாயிறு ஆகிய இருநாட்களுக்கு இணைவழியே இடம்பெற நடைபெற இருக்கின்ற அரசவை அமர்வில், பல்வேறு சர்வதேச வள அறிஞர்கள் பங்கெடுக்க இருக்கின்றனர்.
பசுபிக் பெருங்கடல் தீவின் சுதந்திர தனிநாட்டு அரசியல் இறைமைக்காக நீண்டகாலமாக போராடி, 2019ம் ஆண்டு முதல் கட்ட பொதுவாக்கெடுப்பொன்றின் மூலம் பப்புவாக்கினாயாவில்
இருந்து பிரிந்து சுதந்திர நாடாக தமது அரசியல் பெருவிருப்பினை வெளிப்படுத்திய தேசம் ‘பூகான்வீல்’.
சர்வதேச ஒப்பந்தத்துக்கு அமைய விரைவில் முறையான இரண்டாம் கட்ட பொதுவாக்கெடுப்பினை பூகான்வீல் தேசம் எதிர்கொண்டுள்ள நிலையில்;, அத்தேசத்தின்
சபாநாயகர், பொதுவாக்கெடுப்பு நோக்கிய தமது அரசியல் செயல்வழிப்பாதையினை பகிர்ந்து கொள்ளும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் பங்கெடுக்க இருக்கின்றார்.
இதுதவிர ‘சுயநிர்ணய உரிமையும், ஈடுசெய்நீதியிலான பிரிந்து செல்லலும் Self Determination and Remedial Secession’ – ‘இந்தியப் பெருங்கடல் இலங்கைத்தீவில் பெருகிவரும் சீன ஆதிக்கமும் அதனை
தடுப்பதற்கான பொறிமுறையும் Growing Chinese influence in the Indian Ocean specially in Sri Lanka and measures to counter it. ‘ எனும் தலைப்புக்களிலும் பலவள அறிஞர்கள் கருத்துரைகளை முன்வைக்க இருக்கின்றனர்.
இதேவேளை ஒத்திவைக்கப்பட்ட அரசவை அமர்வின் கூட்டமர்வில் வளஅறிஞர்கள், அரசவை உறுப்பினர்கள், மேற்சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்துகள் பகிரும் வகையில்
‘தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு’ எனும் கருப்பொருளில் கலந்தாய்வு இடம்பெற இருக்கின்றது.
இந்நிகழ்வுகளை மே22ம் நாள் சனிக்கிழமை, நியு யோர்க் நேரம் காலை 9 மணி முதல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வலைக்காட்






