யாழில் மோட்டர் சைக்கிளில் இராணுவ பெண்கள் – அச்சத்தில் மக்கள்
கொவிட் பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள சுகாதார சட்டங்களை மீறுபவர்களை கைது செய்ய, மற்றும் சுகாதார சட்டங்களை மீறுகின்றவர்களைத் தேடிப் பிடிப்பதற்கும் யாழ்ப்பாணப்
பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால், இராணுவ மகளிர் வீராங்கனைகளைக் கொண்ட விசேட மகளிர் மோட்டார் சைக்கிள் குழுவொன்று நிறுவப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைகளின் தளபதி – மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் மேற்பார்வையில் இந்த விசேட மகளிர் மோட்டார் சைக்கிள் குழு நிறுவப்பட்டுள்ளது.
இந்த புதிய மோட்டார் சைக்கிள் குழுவானது, சுகாதார சட்டங்களை மீறுகின்றவர்களைத் தேடுதல், அவசரகால வீதித் தடைகளை அமைப்பதன் மூலம் சுகாதாரச் சட்டங்களுக்கு
இணங்காதவர்களைக் கைது செய்தல் போன்ற நோக்கங்களுக்காக நிறுவப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம், பாதுகாப்புப் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த சிறப்பு மகளிர் மோட்டார் சைக்கிள் குழு இம் மாதம் 25 ஆம் திகதியிலிருந்து
தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக யாழ்ப்பாணம், பாதுகாப்புப் படைத் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது






