Author: நலன் விரும்பி
பெண் வெட்டிப் படுகொலை
பெண் வெட்டிப் படுகொலை
பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய சீன் தோட்டத்தில் தனிப்பட்ட குரோதம் காரணமாக. பெண்ணொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் 2 பிள்ளைகளின் தாயான 42 வயதுடைய பெண்ணொருவரே கொலை செய்யப்பட்டுள்ளாரென பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில், கொலையுண்ட பெண்ணின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 25
வயதுடைய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென தெரிவித்துள்ள பொலிஸார், கொலையுண்ட பெண்ணின் கணவர் கொழும்பில் தொழில் புரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
வேட்டியொன்றில் முகத்தைக் கட்டி, சரமாரியாக கத்தியால் வெட்டி இக்கெலையை
செய்துள்ளதாகவும், சடலம் பிரேத பரிசொதனைக்காக நுவெரெலியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பறக்கும் படை வேட்டை – 455 பேர் கைது
பறக்கும் படை வேட்டை – 455 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறி பயணித்த 455 பேர் பறக்கும் விசேட படையால் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் மாகாண எல்லைகளை மீறியமை ,மற்றும் முகக்கவசம் அணிய மறுத்த காரணத்தினால் இந்த கைது இடம் பெற்றுள்ளது
புலிகளை கேவல படுத்திய சமந்தா Family Man-2-= லண்டனில் அமோசன் முன்பாக ஆர்ப்பாட்டம் 20 photo
புலிகளை கேவல படுத்திய சமந்தா Family Man-2-= லண்டனில் அமோசன் முன்பாக ஆர்ப்பாட்டம்
தென் இந்திய திரைப்பட நடிகை சமந்தா நடிப்பில் உருவான Family Man-2தொடர் ஒன்றில் தமிழீழ, விடுதலை புலிகளை கேவல படுத்தி சமந்தா நடித்துள்ளார் ,இது ஒட்டு மொத்த தமிழ் மக்களை கேவல படுத்திய ஒன்றாக அமைந்தது
அதனை அடுத்து இன்று மதியம் அளவில் லண்டனில் உள்ள அமோசான் நிறுவனம் முன்பாக குறித்த தொடருக்கு எதிர்ப்பினை தெரிவித்து தமிழர்கள் அறவழி போராடட்ம ஒன்றை நடத்தின
தமிழருக்கான சுந்தந்திர வேட்டை காரர்கள் என்ற அமைப்பும் ,நாடு கடந்த அரசாங்கமும் இணைந்து இந்த
அறவழி போராட்டத்தை நடத்தின
வீழ்ந்து போனது தேசியத்தின் உரிமை மட்டும் அல்ல ,தமிழரின் இன மானமும் தான் என்பதை உறைக்க உரைத்த நிகழ்வாக இது அமைய பெற்றுள்ளது
இலங்கை அரச பயங்கரவாதததால் சிறுபான்மை தமிழர்கள் ஒடுக்க பட்டு ,அடக்க பட்டு ,திறந்த வெளி சிறை சாலைக்குள் சிறை வைக்க பட்டுள்ள இவ் வேளையில் இந்த போராட்டம்
இடம்பெற்றுள்ளது தமிழர்களின் எழுச்சியின் வடிவமாக ,அவர்கள் தன்மான கோபத்தின் உச்சமாக பார்க்க படுகிறது
ஒரு லட்சத்து நாற்பதாயிரம் மக்கள் இறுதி போரில் படுகொலை செய்ய பட்டும், ஒருலட்சம் பேருக்கு மேல் காணாமல் போயும் உள்ளனர்
தொடர்ந்து சிங்கள அரச இராணுவத்தின் இரும்பு பிடிக்குள் சிக்குண்டு ,நாள் தோறும் மக்கள் துன்பன்பங்களை சந்தித்த வண்ணம் உள்ளதும் ,இலங்கையில் தற்போது தமிழர்களை அழித்த மகிந்த ,கோட்டா சகோதர்கள் ஆண்டு வருகின்றமை தமிழருக்கு பெரும் சொல்லென்ன இன்னலை ஏற்படுத்தியுள்ள
இவ்வேளையில் சமந்தா நடித்தவுள்ள இந்த தொடர் தமிழர்களை கேவலப்படுத்தியுள்ளது
ஆறா துயரை ஏற்படுத்தியுள்ளது
குறிப்பிட தக்கது


















யாழில் பெண் மயங்கி வீழ்ந்து வீதியில் மரணம்
யாழில் பெண் மயங்கி வீழ்ந்து வீதியில் மரணம்
யாழ்ப்பாணத்தில், இன்று (28), தனது கணவருடன் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த மனைவி , மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – வேலணை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
சுன்னாகத்தில் உள்ள கோவில் ஒன்றுக்கு, தனது கணவனுடன் ஓட்டோவில் பயணித்துக் கொண்டிருந்த போது, , திடீரென மயக்கமுற்றுள்ளார்.
இதையடுத்த, அவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என, வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
சடலம் பிரதே பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கொரனோ மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளர்களை கடித்து குதறிய விசர் நாய்
கொரனோ மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளர்களை கடித்து குதறிய விசர் நாய்
பைத்தியம் பிடித்த நாயொன்று, கொரோனா தொற்றாளர்கள் தங்கியிருந்து சிகிச்சைப் பெறும், வைத்தியசாலையின் வாட்டுக்குள் நுழைந்து, அங்கிருந்த தொற்றாளர்களை கடித்து குதறியுள்ளது. இந்த சம்பவத்தால் அந்த வைத்தியசாலையே அல்லோலக்கல்லோலப்பட்டது.
மொரவக கொஸ்நில்கொட அரச வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை நிலையத்துக்குள்ளே புகுந்த, பைத்தியம் பிடித்த நாய், மூன்று பெண்களே கடித்துள்ளது.
நாய், வாட்டுக்குள் புகுந்ததையடுத்து, சில தொற்றாளர்கள் கட்டில்களுக்கு மேலே ஏறி, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சத்தமிட்டுள்ளனர்.
அந்த சிகிச்சை நிலையத்தில், வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிப்பெண்கள் 18 பேர் உட்பட, 38 பேர் சிகிச்சைப்பெற்று வந்துள்ளனர்.
அதில் சிலர், தங்கியிருந்து சிகிச்சைகளை முடிந்துகொண்டு, வீடுகளுக்குச் செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்துள்ளனர்.
எனினும், அங்கு கடமையிலிருந்த வைத்தியசாலை பணியாளர்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில், அந்நாயை, வாட்டுக்குள்ளிருந்து விரட்டியடித்துள்ளனர்.
அங்கிருந்து வீதிக்கு நாய் ஓடியதை அடுத்து, அங்கிருந்த சிலர் நாயை அடித்தே கொன்றுள்ளனர்.
பைத்தியம் பிடித்த அந்த நாள், வைத்தியசாலையின் வாட்டுக்குள் எவ்வாறு நுழைந்தது என்பது தொடர்பில் யாருக்கும் தெரியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
5 நாட்டு மக்கள் இலங்கை வர முற்றாக தடை
5 நாட்டு மக்கள் இலங்கை வர முற்றாக தடை
கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், ஐந்து நாடுகளிலிருந்து பயணிகள் தரையிறங்குவதற்கு
தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ஆம் திகதி 00.01க்கு ஆரம்பமாகும் இத்தடை, மறு அறிவித்தல் வரையிலும் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமான், பஹ்ரைன் மற்றும் குவைட் ஆகிய
நாடுகளைச் சேர்ந்த பயணிகளே இலங்கையில், எந்தவொரு விமான நிலையங்களிலும் இறங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
புதிய கொரனோ மருத்துவமனை திறப்பு
புதிய கொரனோ மருத்துவமனை திறப்பு
பெலியத்த ஆயுர்வேத வைத்தியசாலை கொவிட் – 19 நோயாளர்களை பராமரிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினரால் அண்மையில் மாற்றியமைக்கப்பட்டது.
குறித்த பகுதியில் கொவிட் – 19 நோயாளர்கள் அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சிகிச்சை
அளிக்கும் வகையில் குறித்த இடைநிலை பராமரிப்பு நிலையம் இராணுவத்தினரால் சுகாதார அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
இந்த இடைநிலை பராமரிப்பு நிலையம் கொவிட் – 19 தொற்றுக்குள்ளான 100 நோயாளர்களை பராமரிப்பதற்கான சகல மருத்துவ வசதிகளையும் கொண்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக 12வது பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்கவின் வழிகாட்டுதலுக்கு அமைய இடம்பெற்ற இந்த நிர்மாண பணிகளில் 23
ஆவது கஜபா படைப்பிரிவு, மூன்றாவது தேசிய பாதுகாப்புப் படை மற்றும் 17வது பொறியியலாளர் சேவைகள் படையணி ஆகியவற்றின் படைவீரர்கள் ஈடுபட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வில் தென்மாகாண ஆயுர்வேத ஆணையாளர் வைத்தியர். சீஎல் குருகே, சுகாதார ஊழியர்கள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு காணி
இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு காணி
இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 4
இலட்சத்து முப்பத்து ஐயாயிரம் காணித் துண்டுகளை எதிர்காலத்தில் பகிர்ந்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காணி அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ. ஏ. கே ரணவக்க தெரிவிக்கையில் நாட்டில் சுமார் 5 லட்சம் மக்கள் காணிகளை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கமைய பயன்படுத்தப்படாத காணிகளை அடையாளம் கண்டு மக்களுக்கு பகிர்ந்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்ததுடன் இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு
காணிகளை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைய 4 இலட்சத்து முப்பத்து ஐயாயிரம் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
கொரனோ மரண தகனக் கட்டணம் குறைக்கப்பட்டது
கொரனோ மரண தகனக் கட்டணம் குறைக்கப்பட்டது
கொரோனாவால் உயிரிழப்பவர்களைத் தகனம் செய்வதற்கு இனிவரும் காலங்களில் 5,000 ரூபாயை அறவிடப்படுவதற்கு நோர்வூட் பிரதேசசபையால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பிரதேச சபை தவிசாளர் ரவி குழந்தைவேல் தெரிவித்தார்.
25ஆம் திகதி நடைபெற்ற சபையின் மாதாந்த அமர்விலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ”கடந்த காலங்களில் கொரோனாவால் உயிரிழப்பவர்களைத் தகனம் செய்ய 15,000 ரூபாய் நோர்வூட் பிரதேச சபையால் அறிவிடப்பட்டு வந்ததாக ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்டதாகவும், கொரோனாத் தொற்றுக்குள்ளாகி தான் ஒரு மாத சிகிச்சையின் பின்னர், சபைக்கு திரும்பிய பின்னரே இது குறித்து அறிந்துக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
எனவே, இனிவரும் காலங்களில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களைத் தகனம் செய்ய 5,000 ரூபாயை மாத்திரமே அறவிடத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து
இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில முக்கிய பிரபலங்கள் மட்டும் ஷங்கர் மகள் திருமணத்தில் கலந்துகொண்டனர்.
இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து
ஐஸ்வர்யா ஷங்கர் – ரோகித் திருமணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இளம் கிரிக்கெட் வீரரும், டி.என்.பி.எல்-லில் விளையாடும் மதுரை பாந்தர்ஸ் அணி
உரிமையாளரின் மகனுமான ரோகித்தை, ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மணமகள் மற்றும் மணமகனின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில முக்கிய பிரபலங்கள் மட்டும் இதில் கலந்துகொண்டனர். குறிப்பாக தமிழக
முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்.
பெற்றோருடன் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோகித் தம்பதி
பெற்றோருடன் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோகித் தம்பதி
அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் நடிகரும், திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தனர்.
கொரோனா பரவல் குறைந்த பின்னர் வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்
இலங்கை தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்
அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை கார்த்திக் சுப்புராஜ் சார்பில் அவரது நண்பர்கள் வழங்கினர்.
இலங்கை தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்
கார்த்திக் சுப்புராஜ்
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான பீட்சா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி என
அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி கவனம் பெற்ற அவர், ரஜினியின் பேட்ட, தனுஷின் ஜகமே தந்திரம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி
இயக்குனரானார். தற்போது விக்ரம் – துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் ‘சியான் 60’ படத்தை இயக்கி வருகிறார்.
இலங்கை தமிழர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்ட போது எடுத்த புகைப்படம்
இலங்கை தமிழர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்ட போது எடுத்த புகைப்படம்
இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், மதுரை ஆனையூர் பகுதியில் உள்ள சுமார் 800 இலங்கை தமிழர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கொடுத்து உதவி
உள்ளார். அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை கார்த்திக் சுப்புராஜ் சார்பில் அவரது நண்பர்கள் வழங்கினர்.
11 பாடல்களுடன் தயாராகும் நயன்தாரா படம்
11 பாடல்களுடன் தயாராகும் நயன்தாரா படம்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தில் 11 பாடல்கள் உள்ளதாம்.
11 பாடல்களுடன் தயாராகும் நயன்தாரா படம்
நயன்தாரா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அவ்வப்போது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், அவர் அடுத்ததாக ‘பாட்டு’ எனும் மலையாள படத்தில் நடிக்க உள்ளார்.
பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இப்படத்தை இயக்குகிறார். பிரபல மலையாள நடிகர் பகத் பாசில், இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
காதல் கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தான் இசையமைக்க உள்ளார். அவர் இசையமைக்கும் முதல் படம் இதுவாகும்.
இதன் தலைப்புக்கு ஏற்ப, படத்திலும் பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இந்தப்
படத்தில் மொத்தம் 11 பாடல்கள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. பாட்டு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
மருத்துவ பரிசோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார் ரஜினி – வைரமுத்து
மருத்துவ பரிசோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார் ரஜினி – வைரமுத்து
ரஜினியின் நெருங்கிய நண்பரும், கவிஞருமான வைரமுத்துவிடம், மருத்துவச் சோதனைக்கு பின் நலமுடன் இருப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார்.
மருத்துவ பரிசோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார் ரஜினி – வைரமுத்து டுவிட்
வைரமுத்து, ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள்
ஐஸ்வர்யா ஆகியோர் அமெரிக்காவின் மாயோ மருத்துவமனையில் பரிசோதனை முடிந்து
வெளியேறுவதைக் கண்ட ரசிகர் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன் புகைப்படம் எடுத்து வெளியிட்டார். அந்த புகைப்படம் வைரலானது.
இந்நிலையில், ரஜினியின் நெருங்கிய நண்பரும், கவிஞருமான வைரமுத்துவிடம், மருத்துவச் சோதனைக்கு பின் நலமுடன் இருப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “அமெரிக்காவிலிருந்து ரஜினி அழைத்தார். மருத்துவச் சோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார்; மகிழ்ந்தேன்.
அவர் குரலில் ஆரோக்கியம் – நம்பிக்கை இரண்டும் இழையோடக் கண்டேன். அவரன்பர்களின் மகிழ்ச்சிக்காகவே இதைப் பதிவிட்டுப் பகிர்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இருவரை சிலுவையில் அறைந்து ஆணி அடித்த நபர் – நடந்த கொடூரம்
இருவரை சிலுவையில் அறைந்து ஆணி அடித்த நபர் – நடந்த கொடூரம்
கண்டி பகுதியில் முகநூலில் அவதூறு பிரச்சாரம் செய்தனர் என்ற குற்ற சாட்டில் கொதிப்படைந்த நபர் ஒருவர் தனது இரு நண்பர்களை கடத்தி சென்று சிலுவையில் ஆணியால் அறைந்து கொடூர சித்திர வதைகளிற்கு உட்படுத்தியுள்ள சம்பவ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
குறித்த இருவரும் பலமான சித்திர வதைகளிற்கு உள்ளன நிலையில் கண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
தலைமறைவான பிரதான சந்தேக நபர்களை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
வெடி குண்டுகள் ,துப்பாக்கிகளுடன் ஐவர் கைது
வெடி குண்டுகள் ,துப்பாக்கிகளுடன் ஐவர் கைது
இலங்கை இரத்தினபுரி மற்றும் கல்முகவ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் ஐவர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்களிடம் இருந்த துப்பாக்கிகள் ,மாற்று வெடிகுண்டுகள் பறிமுதல் செய்ய பட்டுள்ளன
கைதான அனைவரும் தொடர்ந்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
13 லட்சம் ரூபா நகைகளை திருடிய இருவர் கைது
13 லட்சம் ரூபா நகைகளை திருடிய இருவர் கைது
இலங்கை கதிர்காமம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வீடுகளுக்குள் புகுந்து நகைகளை திருடிய திருடர்கள் இருவர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கைதானவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
மேலும் அவர்கள் திருடிய நகைகளும் மீட்க பட்டுள்ளன
வுனியா- பொது மக்கள் கூடும் இடங்களில் கிருமி நீக்கம்
வுனியா- பொது மக்கள் கூடும் இடங்களில் கிருமி நீக்கம்
கொவிட் – 19 பரவலை தடுக்கும் வகையில் இராணுவத்தினரால் வவுனியா பிரதேசத்தில் பொது
மக்கள் ஒன்று கூடும் இடங்களில் கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய வவுனியா நகரத்தில் உள்ள பஸ் நிலையம், புகையிரத நிலையம்| நலன்புரி நிலையங்கள், அரச மற்றும் தனியார் வங்கிகள், விற்பனை நிலையங்கள் பொது வைத்தியசாலை
வளாகம், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பொது மக்கள் ஒன்று கூடும் இடங்கள் மற்றும் முச்சக்கர வண்டி கருப்பு கரிப்பு நிலையங்கள் என்பன படையினரால் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டன.
வன்னி பாதுகாப்பு படை தலைமையாக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஹேமந்த் பண்டார
வின் பணிப்புரைக்கமைய இடம்பெற்ற இந்த தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் 17வது சிங்க ரெஜிமென்ட் படைவீரர்கள் 8வது கள பொறியியலாளர் படை வீரர்ஸ் சுகாதார
பரிசோதகர்கள் மற்ற நகரசபை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மிரட்டும் கொரனோ – முடக்க பட்ட 11 கிராமங்கள்
மிரட்டும் கொரனோ – முடக்க பட்ட 11 கிராமங்கள்
கொழும்பு, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் சில கிராம சேவகர் பிரிவுகள்
இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய
செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
வேட்டி கட்டி – தலதா மளிகைக்கு சென்று வழிபட்ட கோட்டா
வேட்டி கட்டி – தலதா மளிகைக்கு சென்று வழிபட்ட கோட்டா
இலங்கை ஆளும் ஜனாதிபத்தியும் தமிழ் இன படு கொலை யாழியுமான கோட்டபாய தலதா மாளிகைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்
நோயானது இலங்கையை ஆக்கிரமித்து மிரளவைத்து கொண்டுள்ள நிலையில் இவர் இந்த அமைதி வழிபாட்டில் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது
விஜய்யுடன் நடனம் ஆட சிறப்பு பயிற்சி பெறும் பூஜா ஹெக்டே
விஜய்யுடன் நடனம் ஆட சிறப்பு பயிற்சி பெறும் பூஜா ஹெக்டே
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்திற்காக நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறார்.
விஜய்யுடன் நடனம் ஆட சிறப்பு பயிற்சி பெறும் பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே
விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பீஸ்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருவதால் ஜூலை மாதம் முதல் ஷூட்டிங்கைத் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
பூஜா ஹெக்டே
பயிற்சி பெறும் பூஜா ஹெக்டே
இப்படத்திற்காக சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் செட் அமைக்கும் வேலைகள் நடந்து முடிந்துள்ளன. இங்கு பாடல் காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள். இந்நிலையில் விஜய்யுடன்
நடனம் ஆடுவதற்காக நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு பயிற்சி எடுத்து வருவதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்













