Posted in Uncategorized

கணவரை பிரிந்தார் சமந்தா

கணவரை பிரிந்தார் சமந்தா

முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தனது கணவர் நாக சைதன்யாவை பிரிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது – கணவரை பிரிந்தார் சமந்தா
நாக சைதன்யா – சமந்தா


தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள்

ஆகும் நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக பிரியப் போகிறார்கள் என்று வெகுநாட்களாகவே செய்திகள் உலவுகிறது. இதுகுறித்து இருவரும் எந்தவித

கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தனர்.
நாக சைதன்யா – சமந்தா

தற்போது சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் தாங்கள் பிரிந்து விட்டதாக அறிவித்து இருக்கிறார்கள். அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், நாங்கள் இருவரும் கடந்த 10 வருடங்களாக

நட்பாக பழகி வருகிறோம். இந்த நட்பு எங்கள் திருமணம் வரை சென்றது. தற்போது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். இந்த இக்கட்டான

சூழ்நிலையில் எங்கள் முடிவுக்கு ரசிகர்கள், நண்பர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் மதிப்பு கொடுக்கும் படி கேட்டுக் கொள்கிறோம் என்று பதிவு செய்து இருக்கிறார்கள்.

    Posted in இலங்கை செய்திகள்

    ஆபாச காணொளி – தம்பதிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை

    ஆபாச காணொளி – தம்பதிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை

    பெலிஹுல்ஓய பஹன்துடாவ பிரதேசத்தில் ஆபாச காணொளி ஒன்றை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய தம்பதிக்கு 7 வருட ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாத சிறைத்தண்டனை விதித்து பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அதேபோல் குறித்த தம்பதிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளுக்கு 10,800 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பஹன்துடாவ நீர்வீழ்ச்சியில் பதிவு செய்யப்பட்ட குறித்த ஆபாச காணொளி கடந்த ஆகஸ்ட் மாதம் குறித்த தம்பதியினால் இணையத்தளத்தில் வௌியிடப்பட்டிருந்தது.

    இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகளினால் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

    மஹரகம மற்றும் எல்பிட்டி பகுதியை சேர்ந்த தம்பதியினர் இவ்வாறு கைது செய்யப்பட்டு கடந்த 16 ஆம் திகதி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் வழக்கினை நேற்றைய தினத்திற்கு (01) ஒத்தி வைத்து குறித்த இருவரும் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

    இந்நிலையில், நேற்று குறித்த தம்பதி பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து 7 வருட ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

    Posted in Uncategorized

    இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு

    இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு

    கொவிட்- 19 ஜனாதிபதி செயலணியின் பிரதானியும் இராணுவ தளபதியுமான இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா முக்கிய அறிப்பொன்றை விடுத்துள்ளார்.

    மக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

    அதனால் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை இன்னும் தளர்த்த எதிர்பாத்துள்ளதாக அவர் மேலு‌ம் தெரிவித்தார்.

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையின் மீன்பிடி சட்டத்தில் திருத்தம் – அமைச்சர் டக்ளஸ்

    இலங்கையின் மீன்பிடி சட்டத்தில் திருத்தம் – அமைச்சர் டக்ளஸ்

    சர்வதேச கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற இலங்கையின் மீன்பிடிக் கலன்கள் பின்பற்ற வேண்டிய கடப்பாடுகள் மற்றும் சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்த முன்வரைபு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

    குறித்த கலந்துரையாடல், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்கா,

    கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் பங்குபற்றலுடன் கடற்றொழில் அமைச்சில் (01) நடைபெற்றது.

    தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையில் இலங்கை கடற்றொழிலாளர்களின் நலன்களை பாதுப்பதையும் இலங்கை கடற்றொழில் செயற்பாடுகளை வினைத் திறனுடன் மேற்கொள்வதையும் உறுதிப்படுத்தும் வகையில், குறித்த சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Posted in Uncategorized இலங்கை செய்திகள்

    ஜந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

    ஜந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

    பலத்த மழையின் காரணமாக ஜந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    காலி , களுத்துறை , கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பு மாலை 06 மணிவரை ஏற்புடையது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Posted in இலங்கை செய்திகள்

    பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நபர் உயிரிழப்பு

    பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நபர் உயிரிழப்பு

    மன்னாரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

    மன்னார் – எருக்கலம்பிட்டி, புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் முச்சக்கரவண்டியை சோதனைக்குட்படுத்திய போது, போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் இருவரை பொலிஸார் நேற்றிரவு கைது செய்தனர்.

    சந்தேகநபர்களில் ஒருவர் இன்று காலை திடீர் சுகயீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

    இதன்போது, அந்நபர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

    எருக்கலம்பிட்டி – தர்கா நகர் பகுதியை சேர்ந்த 29 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.

    உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

    மேலதிக விசாரணைகளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

    Posted in இலங்கை செய்திகள்

    யாழில் பேருந்து மோதி பெண் பலி

    யாழில் பேருந்து மோதி பெண் பலி

    யாழ். மத்திய பேருந்து நிலையத்தினுள் இடம்பெற்ற பேருந்து விபத்தில் வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

    யாழ். மத்திய பேருந்து நிலையத்தினுள் இன்று காலை நுழைந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து , பேருந்து நிலைய வளாகத்தினுள் நின்ற வயோதிப பெண்ணொருவரை மோதி விபத்துக்கு உள்ளானது.

    விபத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    வைத்தியசாலையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் குறித்த வயோதிப பெண்ணுக்கு அதிதீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் , சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

    பிரேத பரிசோதனைக்காக சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

    Posted in சினிமா

    ரசிகர் மன்றத்தை விரிவுபடுத்துகிறார் சிம்பு

    ரசிகர் மன்றத்தை விரிவுபடுத்துகிறார் சிம்பு

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    ரசிகர் மன்றத்தை விரிவுபடுத்துகிறார் சிம்பு
    சிம்பு


    நடிகர் சிலம்பரசன் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இது அரசியல் பின்னணி உள்ள கதை என்பதால் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

    இந்நிலையில், தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார் சிம்பு. அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நீண்ட நாள்களாக இயற்கையின் செயல்களால் உங்களிடம்

    நேரடியாக உறவாடாமல். தொலைபேசி வழியாக உறவு கொண்டோம். மேலும் இளைஞர் அணி, வழக்கறிஞர்கள் அணி, மருத்துவ அணி, தொழில்நுட்ப அணி, கலை இலக்கிய அணிகள் மூலம் மன்றத்தை விரிவுபடுத்த உள்ளோம்.

    ஆகவே நம் மன்றத்தின் அகில இந்திய தலைவர் டி.வாசு தலைமையில் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஆகாவே மாநில, மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள்

    தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கலந்து கொள்ள பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

      Posted in சினிமா

      நடிகைக்கு கோல்டன் விசா வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்

      நடிகைக்கு கோல்டன் விசா வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்

      நடிகை ஊர்வசி ராவ்துலா, தற்போது தமிழில் உருவாகும் புதிய படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

      லெஜண்ட் சரவணன் பட நடிகைக்கு கோல்டன் விசா வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்
      ஊர்வசி ராவ்துலா, லெஜண்ட் சரவணன்


      அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், விளையாட்டு

      வீரர்கள், திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது ஆகும்.

      ஏற்கனவே நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய்தத், மோகன்லால், மம்முட்டி, டோவினோ தாமஸ், பிருத்விராஜ், துல்கர் சல்மான், தயாரிப்பாளர் போனி கபூர், டென்னிஸ் வீராங்கனை சானியா

      மிர்சா ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கிய அமீரக அரசு, தற்போது பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்துலாவுக்கு கோல்டன் விசா வழங்கி உள்ளது. இவர் தற்போது தமிழில் உருவாகும் புதிய படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

        Posted in சினிமா

        ரஜினிக்காக எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடல்… ரிலீஸ் தேதி அறிவிப்பு

        ரஜினிக்காக எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடல்… ரிலீஸ் தேதி அறிவிப்பு

        ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

        ‘அண்ணாத்த’ ரஜினிக்காக எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடல்… ரிலீஸ் தேதி அறிவிப்பு
        ரஜினி


        நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்

        ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

        அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

        அதன்படி, அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வருகிற அக்டோபர் 4-ந் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். இப்பாடல் வரிகளை விவேக் எழுதி உள்ளார்.

        இப்பாடலை மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி உள்ளார். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி உயிரிழந்த எஸ்.பி.பி, அதற்கு முன்னரே இப்பாடலை பாடிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

          Posted in இலங்கை செய்திகள்

          20 மாதங்களில் ரூ. 125,747 கோடி பணம் அச்சடிப்பு

          20 மாதங்களில் ரூ. 125,747 கோடி பணம் அச்சடிப்பு

          ஆளும் கோட்டா அரசில் இலங்கை பெரும் பணத்தட்டுபாட்டை சந்தித்து வருகிறது

          இதற்கு அமைவாக கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 125,747 கோடி பணம் அச்சடிக்க பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது

          இதுவே இலங்கையின் தற்கால நிதி நெருக்கடியை எடுத்து கடடுவதாக உள்ளது

            Posted in இலங்கை செய்திகள்

            சுவாமி இலங்கை வருகிறார் – ஆப்பு வைக்க படுமா ..?

            சுவாமி இலங்கை வருகிறார் – ஆப்பு வைக்க படுமா ..?

            இலங்கை அரசுடன் ஒட்டி உறவாடி வரும் சுப்பிரமணிய சுவாமி இலங்கைக்கு அவசர பயணம் ஒன்றை மேற் கொள்கிறார்

            இவரது இந்த பயணத்தின் பொழுது இலங்கை எதிர் காலத்தில் ஆற்ற வேண்டிய செயல் திட்டங்கள் தொடர்பாக பேச படும் என எதிர்பார்க்க படுகிறது

              Posted in இலங்கை செய்திகள்

              14 வயது சிறுமியை கற்பழித்த 65 வயது தாத்தா

              14 வயது சிறுமியை கற்பழித்த 65 வயது தாத்தா

              இலங்கை கவிரவில பாக்றோ தோட்டத்தில் வைத்து 14 வயது மாணவி ஒருவரை அறுபத்தி ஐந்து வயது தாத்தா ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உபடுத்தியுள்ளார்

              மேற்படி நபர் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளார்

              சிறுமை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளார்

                Posted in Uncategorized

                ஏழை குடும்பத்திற்கு உணவு வழங்கிய சிறி எம்பி

                ஏழை குடும்பத்திற்கு உணவு வழங்கிய சிறி எம்பி

                பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களது ஆலோசனைக்கு அமைவாக கரைச்சி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் வேளமாலிகிதன் அவர்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சி

                மாவட்டத்தில் வாழும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சட்டத்தினால் பாதிக்கப்பட்டு அரசியல் கைதிகளாக உள்ள 19 குடும்பங்களுக்கு கரைச்சி பிரதேச சபை மற்றும் கனடிய தேசத்து நண்பர்

                ஒருவரின் பங்களிப்புடன் சுமார் மூவாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் நேற்றும் இன்றும் வழங்கிவைக்கப்பட்டது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே?

                  இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே?

                  சர்வதேச சிறுவர் தினமான இன்று இலங்கை இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே? என் கேட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் மழைக்கு மத்தியிலும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்

                  கடந்த 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 1669 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது

                  இந்நிலையில் இன்று சர்வதேச சிறுவர் தினத்தில் இலங்கை இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே? என் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

                  குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எமது குழந்தைகளுக்கு உயிர் வாழும் உரிமை இல்லையா?, இலங்கை இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே?, உங்கள் சிறைக்கூடம் எங்கள் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடமா?, தமிழ் குழந்தைகள் பயங்கரவாதிகளா?, ஓமந்தையில்

                  இராணுவத்திடம் கையளித்த உறவுகள் எங்கே?, உறவுகள் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும், எமது உறவுகளை எங்களிடம் தா, சர்வதேசமே பதில் சொல், சின்னஞ்சிறார்களும் பயங்கரவாதிகளா?, நட்ட ஈடும் வேண்டாம் மரண சான்றிதழும் வேண்டாம், பயங்கரவாத தடைச்

                  சட்டத்தை நீக்கு, வட்டுவாகலில் கையளித்த எமது உறவுகள் எங்கே?, விடுதலை செய் விடுதலை செய் எமது உறவுகளை விடுதலை செய், omp வேண்டாம் உள்ளக விசாரணை வேண்டாம்,

                  கடத்தாதே கடத்தாதே காலத்தை கடத்தாதே, உள்ளக பொறிமுறை சர்வதேசத்துக்கான கண்துடைப்பே, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி வேண்டும், போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி இணக்கம்

                    இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி இணக்கம்

                    இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது
                    பல்வேறு பட்ட விடயங்களை சுட்டி காட்டி இந்த அவசர நிதியை இலங்கை கடனாக பெறுகிறது

                    கடந்த ஆட்சியில் பல கோடி ரூபாய்களை சுருட்டியது மகிந்த குடும்பம், அதே போல தற்பொழுதும் பெரும் பணத்தை ஆளும் அரசு கொள்ளையடித்து வருவதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது

                      Posted in சினிமா

                      உடல் எடையை குறைத்தது எப்படி? – ரகசியத்தை வெளியிட்ட குஷ்பு

                      உடல் எடையை குறைத்தது எப்படி? – ரகசியத்தை வெளியிட்ட குஷ்பு

                      ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறியுள்ள நடிகை குஷ்பு, உடல் எடையை குறைத்தது எப்படி என்ற ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.

                      உடல் எடையை குறைத்தது எப்படி? – ரகசியத்தை வெளியிட்ட குஷ்பு
                      குஷ்பு


                      90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. இவர் பெயரில் கோவில் கட்டும் அளவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர். வெள்ளித்திரை

                      மற்றும் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்ததைப் போல தற்போது அரசியலிலும் படு பிசியாக செயல்பட்டு வருகிறார் குஷ்பு.

                      கடந்த சில மாதங்களாகவே உடல் எடையை குறைக்க தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார் குஷ்பு. தற்போது அதன் பலனாக, இன்றைய கதாநாயகிகளுக்கு சவால் விடும் அளவிற்கு இளமையான தோற்றத்திற்கு மாறியுள்ளார்.

                      குஷ்பு

                      இதையடுத்து ‘உடல் எடையை எப்படி குறைத்தீர்கள்’ என ரசிகர்கள் பலரும் அவரிடத்தில் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது அந்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார் குஷ்பு.

                      அதன்படி, நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடல் எடையை குறைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். தினமும் நடைப்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் வேகமாக குறைந்துவிடும் என குஷ்பு கூறியுள்ளார்.

                        Posted in சினிமா

                        பிகினி உடையில் பூனம் பஜ்வா

                        பிகினி உடையில் பூனம் பஜ்வா

                        சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூனம் பஜ்வா, அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

                        பிகினி உடையில் பூனம் பஜ்வா – வைரலாகும் புகைப்படங்கள்
                        பூனம் பஜ்வா


                        ‘சேவல்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் பூனம் பஜ்வா. இதைத்தொடர்ந்து ஜீவாவின் ‘தெனவாட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’ படங்களில் நடித்த இவர், சுந்தர்.சி

                        இயக்கிய ‘அரண்மனை 2’ படத்தின் மூலம் பிரபலமானார். இதில் இவருடைய கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்றது.

                        பின்பு சுந்தர்.சி-யுடன் ‘முத்தின கத்திரி’ படத்தில் நடித்தார். அதுக்கு அடுத்தப்படியாக முன்னணி நாயகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். படவாய்ப்பு குறைந்தாலும்,

                        சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

                        பூனம் பஜ்வா
                        பூனம் பஜ்வா

                        இந்நிலையில், தற்போது பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வைரலாகி வரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது

                          Posted in சினிமா

                          இளையராஜா இசையில் உருவாகும் 1417வது படம்

                          இளையராஜா இசையில் உருவாகும் 1417வது படம்

                          தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் இசையமைத்து இருக்கும் இளையராஜாவின் 1417வது படத்தின் புதிய அப்டேட்.

                          இளையராஜா இசையில் உருவாகும் 1417வது படம்
                          இளையராஜா


                          இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது.

                          இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் அவர் இசையமைத்துள்ளார். இதில் நேரடி படங்கள், டப்பிங் படங்கள்,

                          இசையமைத்து ரிலீசாகாத படங்கள், அடுத்து ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படங்கள் என இதுவரை மொத்தம் 1416 படங்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா.

                          இந்தநிலையில் அவரது இசையில் உருவாகும் 1417 படமாக ‘நினைவெல்லாம் நீயடா’ என்கிற படம் உருவாகிறது. இசைஞானியின் இசையில் உருவாகும் இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம்

                          எழுதி இயக்குகிறார் இயக்குநர் ஆதிராஜன். இவர் சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்), அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கியவர்.

                          பிரஜன்
                          நாயகன் பிரஜன் – இயக்குநர் ஆதிராஜன்

                          லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்கும் இந்த படத்தின் கதாநாயகனாக பிரஜன் நடிக்கிறார். கதாநாயகியாக ஒரு முன்னணி நடிகை நடிக்க, மற்றொரு

                          நாயகியாக புதுமுகம் சினாமிகா அறிமுகமாகிறார். இவர்கள் தவிர முக்கிய வேடத்தில் அப்பா படத்தில் நடித்த யுவலஷ்மி நடிக்கிறார். அவருடன் தோழியாக மூக்குத்தி அம்மன் புகழ் அபிநயஸ்ரீ நடிக்கிறார். மற்றும் மனோபாலா, காளி வெங்கட், மதுமிதா, ரஞ்சன்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர்.

                          தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாடல்கள் பாண்டிச்சேரி, கூர்க், இடுக்கி ஆகிய இடங்களில் படமாக்கப்பட இருக்கிறது.

                            Posted in சினிமா

                            கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்த நடிகை

                            கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்த நடிகை

                            உடல்நலக் குறைவாலும் சினிமா துறையில் தற்போதைய சூழல் காரணமாகவும் நடிகை ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.

                            கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்த நடிகை
                            சௌஜன்யா


                            கன்னட தொலைக்காட்சி சீரியல் நடிகை சௌஜன்யா பெங்களூரு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை மின்விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

                            சௌஜன்யா கன்னடப் படத்திலும் பணியாற்றியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

                            அவரது வீட்டில் இருந்து ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் எழுதப்பட்ட நான்கு பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதத்தில், உடல்நலக் குறைவாலும் சினிமா துறையில்

                            தற்போதைய சூழல் காரணமாகவும், கடந்த பல நாட்களாக சிரமப்பட்டு வந்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் இந்த முடிவை எடுப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை என்று சௌஜன்யா குறிப்பிட்டுள்ளார்.

                            அந்தக் கடிதத்தில் செப்டம்பர் 27, 28 மற்றும் 30ஆகிய மூன்று தேதிகள் எழுதப்பட்டுள்ளன. இதில் இருந்து சௌஜன்யா மூன்று நாட்களுக்கு முன்பே தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்ததாக போலீசார் கருதுகின்றனர்.