ஆபாச காணொளி – தம்பதிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை

Spread the love

ஆபாச காணொளி – தம்பதிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை

பெலிஹுல்ஓய பஹன்துடாவ பிரதேசத்தில் ஆபாச காணொளி ஒன்றை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய தம்பதிக்கு 7 வருட ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாத சிறைத்தண்டனை விதித்து பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் குறித்த தம்பதிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளுக்கு 10,800 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஹன்துடாவ நீர்வீழ்ச்சியில் பதிவு செய்யப்பட்ட குறித்த ஆபாச காணொளி கடந்த ஆகஸ்ட் மாதம் குறித்த தம்பதியினால் இணையத்தளத்தில் வௌியிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகளினால் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மஹரகம மற்றும் எல்பிட்டி பகுதியை சேர்ந்த தம்பதியினர் இவ்வாறு கைது செய்யப்பட்டு கடந்த 16 ஆம் திகதி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் வழக்கினை நேற்றைய தினத்திற்கு (01) ஒத்தி வைத்து குறித்த இருவரும் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்று குறித்த தம்பதி பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து 7 வருட ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *