Posted in இலங்கை செய்திகள்

குண்டு வெடிப்பு சூத்திரதாரி கைது

குண்டு வெடிப்பு சூத்திரதாரி கைது

இலங்கையில் மைத்திரி ஆட்சியில் தொடராக நடத்த பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி


பல நூறு மக்கள் பலியாகினர்

மேற்படி குண்டு வெடிப்புடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்

Posted in Uncategorized

சிங்கள படைகள் கொடூரமானது – முழங்கிய அரசியல்வாதி

சிங்கள படைகள் கொடூரமானது – முழங்கிய அரசியல்வாதி

இலங்கை இராணுவத்தினர் தன்னுடைய நாட்டு மக்களையே கொலைசெய்யும் அளவிற்கு கொடூரமானர்கள் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவு – ஒதியமலைப் படுகொலையின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று (02) இடம்பெற்றன. அந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதேவேளை, ஒதியமலையில் படுகொலைசெய்யப்பட்ட 32 அப்பாவித் தமிழர்களுடைய ஆத்மாக்களும் சாந்தியடையவேண்டும் எனவும் அவர் பிராத்தித்ததுடன், இப்படியான

கொடூரங்கள் இனியும் இந்த நாட்டிலே நடக்காமல் தமிழர்களாகிய நாம் நின்மதியாக வாழ வழி ஏற்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த 1984ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 02ஆம் திகதி இந்த ஒதியமலைப் பகுதியிலே இடம்பெற்ற ஒரு கொடூரமான படுகொலைச் சம்பவத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு எமது அஞ்சலிகளை மேற்கொண்டுள்ளோம்.

இந்த ஒதியமலைப்படுகொலை தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்போது, இராணுவ உடை தரித்த இனந்தெரியாதோர் இந்த கொலைகளைச் செய்த்ததாக தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு நாட்டிலே தன்னுடைய மக்களையே கொலைசெய்யும் அளவிற்கு, கொடூரமான இராணுவம் இருந்ததெனில் அது இலங்கயில்தான் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

குறிப்பாக கடந்த 1984.12.02அன்று அதிகாலை இந்தக் கிராமத்தைச் சேர்ந்த அப்பாவித் தமிழ் மக்களை வீடுவீடாகச் சென்று, பொதுநோக்கு மண்டபத்திற்கு அழைத்துவந்து 27பேரை

ஈவிரக்கமின்றி படுகொலைசெய்தது மாத்திரமின்றி, மிகுதி ஐந்து பேரை வேறு இடத்திற்கு அழைத்துச்சென்று அவர்களையும் மிக மோசமான முறையில் படுகொலைசெய்துள்ளார்கள்.

இவ்வாறான மிக மோசமான பல செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது சர்வதேசம் என்ன பார்த்துக்கொண்டிருக்கின்றது என்பதே எனது கேள்வியாகும்.

கடந்த காலங்களிலிருந்தே எமது தமிழ் மக்கள்மீது மிகமோசமான கொடுமைகளையும்,

சித்திரவதைகளையும் இந்த நாட்டுபடையினர் மேற்கொண்டுவருகின்றனர் என்பது இதன் ஊடாக வெளிச்சத்திற்கு வருகின்றது.

இந்த படுகொலைச்சம்பவத்தைப் போன்று, பல படுகொலைச் சம்பவங்களையும், பல துன்பியலான சம்பவங்களையும் எமது தமிழ் மக்கள் கண்டிருக்கின்றனர்.

இவ்வாறான துன்பியல் மிக்க சம்பவங்களை முடிவுக்குக்கொண்டுவருமாறுதான்

எங்களுடையவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றனர். தமிழ் மக்களுக்குரிய தீர்வுகளை வழங்கி, தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிசெய்யுமாறுதான் கேட்கின்றோம்.

மேலும் இவ்வாறு படுகொலைசெய்யப்பட்ட 32பேருடைய ஆத்மாக்களும் சாந்தியடையவேண்டும்.

இப்படியான கொடூரங்கள் இனியும் இந்த நாட்டிலே நடக்காமல் தமிழர்களாகிய நாம் நின்மதியாக வாழ வழி ஏற்படவேண்டும்- என்றார்.

    Posted in இலங்கை செய்திகள்

    7 உணவகங்களுக்கு அபராதம் – அதிரடி காட்டிய நீதிமன்றம்

    7 உணவகங்களுக்கு அபராதம்- அதிரடி காட்டிய நீதிமன்றம்

    மட்டக்களப்பு நகர் பகுதியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறிய பிரபலமான 3

    உணவகங்கள் உட்பட 7 உணவங்களை தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 70 ஆயிரம் ரூபாவை

    தண்டப்பணமாக செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் இன்று வியாழக்கிழமை (02) உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

    மட்டக்களப்பு சுகாதார அதிகாரி பிரிவிலுள்ள வெட்டுக்காடு பொதுச் சுகாதார பரிசோதகர்கள்

    நகர் பகுதியிலுள்ள உணவகங்களை இன்று தீடிர் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

    இதன்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது செயற்பட்ட பிரபல்யமான 3 உணவகங்கள்

    உட்பட 7 உணவங்களுக்கு எதிராக உணவு சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை வழக்கு தாக்குதல் செய்தனர்.

    இதனை அடுத்து வழக்கை விசாரணைக்கு எடுத்தபோது தலா ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா வீதிம்,

    70 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கை பாடசாலைகள் விடுமுறை நீடிப்பு

      இலங்கை பாடசாலைகள் விடுமுறை நீடிப்பு

      இலங்கை பாடசாலைகள் டிசெம்பர் 23ஆம் திகதி முதல் 2022 ஜனவரி 02 ஆம் திகதி வரையிலும்

      நீடிக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்

        Posted in சினிமா

        விஜய்சேதுபதி படக்குழு மீது இளையராஜா புகார்

        விஜய்சேதுபதி படக்குழு மீது இளையராஜா புகார்

        விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புதிய படத்தின் மீது இசையமைப்பாளர் இளையராஜா புகார் கொடுத்து இருக்கிறார்.

        விஜய்சேதுபதி படக்குழு மீது இளையராஜா புகார்
        விஜய் சேதுபதி – இளையராஜா


        காக்கா முட்டை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மணிகண்டன். இந்த படம் தேசிய விருதை வென்றது. பின்னர் குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களையும்

        டைரக்டு செய்தார். தற்போது கடைசி விவசாயி என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில்

        நாயகனாக நல்லாண்டி என்ற முதியவரும், கவுரவ தோற்றத்தில் விஜய்சேதுபதியும் நடித்துள்ளனர்.

        கடைசி விவசாயி படத்துக்கு இளையராஜா இசையமைத்து வந்த நிலையில் படக்குழுவினருக்கும், இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் படத்தில் இருந்து

        இளையராஜா இசையை நீக்கிவிட்டு, சந்தோஷ் நாராயணனை இசையமைக்க வைத்து படத்தை முடித்துவிட்டனர்.

        இளையராஜா

        இது பற்றிய தகவல் இளையராஜாவுக்கு தெரிவிக்கப்படவில்லை என்கின்றனர். படம் விரைவில் திரைக்கு வருவதையொட்டி டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.

        டிரெய்லரில் தனது இசை நீக்கப்பட்டு இருப்பது அறிந்து இளையராஜா அதிர்ச்சி அடைந்தார். தனது

        அனுமதியை பெறாமல் இசையை நீக்கியதுடன் இன்னொரு இசையமைப்பாளரை வைத்து

        படத்துக்கு இசையமைத்தது தவறு என்று படக்குழுவினர் மீது இசைக்கலைஞர்கள் சங்கத்தில்

        இளையராஜா புகார் அளித்துள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

          Posted in சினிமா

          சர்ச்சையான படத்தை எடுக்க ஆர்வம் காட்டும் சசிகுமார்

          சர்ச்சையான படத்தை எடுக்க ஆர்வம் காட்டும் சசிகுமார்

          தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வரும் சசிகுமார், அடுத்ததாக சர்ச்சையான கதையை எடுக்க ஆர்வம் காண்பித்து வருகிறார்.

          சர்ச்சையான படத்தை எடுக்க ஆர்வம் காட்டும் சசிகுமார்
          சசிகுமார்


          இயக்குனர் பாரதிராஜா தன் வாழ்க்கையில் லட்சியமாக நினைத்துக் கொண்டிருந்தது

          குற்றப்பரம்பரை படத்தை எடுப்பதைத்தான். இடையில் பாலா எடுக்கப்போவதாகத் தகவல் வர,

          இருவருக்கும் கருத்து மோதல் வந்தது. இந்த கருத்து மோதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பிறகு குற்றப்பரம்பரை பற்றி இருவருமே பேசவில்லை.

          சசிகுமார்

          தற்போது சசிகுமார் குற்றப்பரம்பரையினர் குறித்த படத்தை எடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளார்.

          வேல ராமமூர்த்தி இதன் கதையை எழுதுகிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் படத்தைத் தயாரிக்க

          இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்தப் படத்தை சசிகுமார் இயக்க அதிக வாய்ப்புள்ளது.

          அவரே முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

            Posted in இலங்கை செய்திகள்

            வவுனியாவில் பெண்கள் மீது தாக்குதல்

            வவுனியாவில் பெண்கள் மீது தாக்குதல்

            வவுனியா பகுதியில் குடும்பம் ஒன்று வசித்து வந்த காணிக்குள் அடாத்தாக நார் ஒருவர்

            கொட்டகை அமைக்க முயன்றுள்ளார் ,இதனை தடுத்து நிறுத்திய குறித்த குடும்பத்திற்கு

            வந்தேறிகளுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது

            இதில் மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர் ,மேற்படி விடயம் தொடர்பில்

            விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

              Posted in இலங்கை செய்திகள்

              தொடராக வெடிக்கும் காஸ் சிலிண்டர்கள்

              தொடராக வெடிக்கும் காஸ் சிலிண்டர்கள்

              இலங்கையில் தொடராக காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறிய வண்ணம் உள்ளது


              கடந்த தினம் வவுனியா பகுதியில் இவ்விதம் வெடித்து சிதறியுள்ளது

              மேற்படி சம்பவங்களினால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது ,எங்கு எப்போது

              சிலிண்டர்கள் வெடிக்கும் என பீதி நிலையில் மக்கள் வசித்து வருவதுடன் தற்போது மின்சார

              பாவனைக்கு மக்கள் திரும்பி செல்கின்ற சம்பவங்கள் அதிகரித்துளளது

                Posted in Uncategorized

                இரு சிறுமிகளின் முகத்தில் மிளகாய் கரைத்து ஊற்றிய மாமன்

                இரு சிறுமிகளின் முகத்தில் மிளகாய் கரைத்து ஊற்றிய மாமன்

                இலங்கை மொனராகலை பகுதியில் பாட்டியுடன் வசித்து வந்த 13 மற்றும் 9 வயது சிறுமிகளுக்கு

                அவரது மாமனார் மிளகாயை கரைத்து அந்த சிறுமிகள் முகத்தில் ஊற்றியுள்ளார்

                தந்தை தயை பிரிந்து சென்ற நிலையில் தயார் கொழும்பில் தங்கி இருந்து வேலை பார்த்து

                வருகின்றார் ,அவ் வேளையே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது

                சிறுமிகளை வதைத்தார் என்ற என்ற குற்ற சாட்டில் அவர் கைது செய்ய பட்டுளளார் ,மேற்படி

                சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                இப்படியும் வக்கிர குணம் படைத்தவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்

                  Posted in இலங்கை செய்திகள்

                  லண்டனில் இலங்கையருக்கு விசா வழங்கிய Home Office

                  லண்டனில் இலங்கையருக்கு விசா வழங்கிய Home Office

                  இலங்கையை சேர்ந்த 47 வயதுடைய மூன்று பிள்ளைகளின் குடும்பத்தினருக்கு பிரிட்டன் Home

                  Office விசா வழங்கியுள்ளது இவர் சோலா மின்துறையில் தொழில் புரிந்து வந்த நபர் அகதி தஞ்சம்

                  கோரிய நிலையில் இந்த விசா வழங்க பட்டுள்ளது

                  தயாரின் உடல் நிலை பாதிக்க பட்டு இலங்கை சென்று பார்த்து வந்த பொழுது சிங்கள

                  படைகளினால் தேட பட்டு வந்த நிலையில் அதில் இருந்து தப்பித்து லண்டன் வந்தடைந்த

                  நிலையில் அகதி தஞ்சம் கோரியுளளார் ,.ஆளும் கோட்டா மகிந்த அரசில் தமிழர்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருவது குறிப்பிட தக்கது


                  இது Home Office இந்த மன நிலையில் தற்போது இலங்கையர் தொடர்பில் கரிசனை கொடுள்ளதாக

                  மேற்குலக ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன

                    Posted in இலங்கை செய்திகள்

                    இலங்கையில் மான்களுக்கு கொரனோ

                    இலங்கையில் மான்களுக்கு கொரனோ

                    இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினால் மான்கள் பாதிக்க பட்ட நிலையில்

                    கண்டு பிடிக்க பட்டுள்ளன .

                    உருமாறிய புதிய நோய்கள் பரவி வரும் நிலையில் ,விலங்குகளுக்கும் பாதிக்க படுவது

                    மேலும் இந்த நோயானது புதிய வடிவில் பரவும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது

                      Posted in Uncategorized

                      வீட்டுக்குள் புகுந்த இராணுவ டிராக் – உடைந்த வீடு

                      வீட்டுக்குள் புகுந்த இராணுவ டிராக் – உடைந்த வீடு

                      பொலன்னறுவை – மெதிரிகிரிய பிரதான வீதியில் ஹிங்குராங்கொட மாரசிங்க தோட்டப் பகுதியில் இராணுவ ட்ரக் வண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளது.

                      விபத்தில் இரண்டு இராணுவத்தினர் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வீதிக்கு அருகில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கும் மற்றும் விற்பனை நிலையம் ஒன்றுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                      இன்று (01) பிற்பகல் 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், இராணுவ ட்ரக் வண்டியில் இரண்டு இராணுவத்தினர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                      வெலிகந்த புனானி பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இருந்து ஹிங்குராங்கொட இராணுவ முகாமிற்கு சென்றுக் கொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

                      விபத்தில் காயமடைந்த இராணுவ ட்ரக் சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஹிங்குராங்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                      இந்த விபத்தில் வீட்டில் இருந்த யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை என்றும், ட்ரக் மோதியதில் மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                        Posted in சினிமா

                        கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்த கமல்

                        கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்த கமல்

                        கமல் ஹாசன் தற்போது முழுமையாக குணமடைந்துள்ளபோதிலும், 3ம்தேதிவரை

                        தனிமைப்படுத்தப்படுவார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                        கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்த கமல்
                        கமல் ஹாசன்

                        பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் ஹாசன் அமெரிக்காவில் இருந்து திரும்பிய நிலையில் தொண்டை பாதிப்பு மற்றும் இருமல் காரணமாக சென்னை, போரூரில் உள்ள

                        ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடைபெற்ற பரிசோதனை முடிவில்

                        கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

                        இந்நிலையில் மருத்துவமனை தரப்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து கமல் ஹாசன் முழுமையாக குணமடைந்துள்ளதாக

                        தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 3ம்தேதிவரை அவர் தனிமைப்படுத்தப்படுவார் என்று

                        தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 4ம் தேதியில் இருந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள கமல் தயாராகிவிடுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

                        கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விக்ரம் படத்தில் நடித்து வருவதுடன்

                        நீண்டநாள் கிடப்பில் உள்ள இந்தியன்2 படப்பிடிப்பில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

                          Posted in சினிமா

                          மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா ரணாவத்

                          மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா ரணாவத்

                          பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், மிரட்டல்களுக்கு நான் அஞ்ச மாட்டேன் என்று தனது சமூக வலைத் தளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.

                          மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா ரணாவத்
                          கங்கனா ரணாவத்


                          நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் அந்த சட்டங்களுக்கு

                          எதிராக போராடியவர்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்று விமர்சித்தார். இதையடுத்து கங்கனா மீது சீக்கிய அமைப்பினர் போலீசில் புகார் அளித்தனர்.

                          இந்த நிலையில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், இதுகுறித்து போலீசில் புகார் அளித்து இருப்பதாகவும் கங்கனா தெரிவித்து உள்ளார். தனது சமூக வலைத் தள பக்கத்தில் கங்கனா

                          வெளியிட்டுள்ள பதிவில், ‘‘மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிர் இழந்தவர்களை நினைவுகூரும் வகையில், துரோகிகளை மன்னிக்க கூடாது என்று எழுதினேன். உள்நாட்டு

                          துரோகிகள் பணத்துக்காக தேசவிரோத சக்திகளுக்கு உதவி செய்ததே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என்று பதிவிட்டேன்.

                          கங்கனா ரனாவத்

                          இந்த பதிவுக்காக தீய சக்திகளிடம் இருந்து எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. ஒருவர் என்னை கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளார். இத்தகைய மிரட்டல்களுக்கு நான் அஞ்ச மாட்டேன்.

                          நாட்டுக்கு எதிரான சதி செயல்களில் ஈடுபடுகிறவர்கள் பற்றி தொடர்ந்து பேசுவேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            இலங்கையில் பரவும் எயிட்ஸ் – தடுமாறும் சமுதாயம்

                            இலங்கையில் பரவும் எயிட்ஸ் – தடுமாறும் சமுதாயம்

                            இலங்கையில் உலக நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் ஒழுத்து எயிட்ஸ் நோயானது அதிகரித்து

                            செல்வதாக கவலை வெளியிட பட்டுள்ளது

                            கடந்த ஆண்டுகளை விட சமீப காலங்களில் இதன் பாதிப்பு அதிகரித்து செல்கின்றது ,முறையற்ற

                            பாலியல் உறவு மற்றும் ,அதன் செயல்பாடுகள் தொடர்பிலேயே இந்த நோயானது பரவி வருவதாக

                            தெரிவிக்க படுகிறது

                              Posted in இலங்கை செய்திகள்

                              யாழில் வெடித்து சிதறிய எரிவாயு சிலிண்டர்

                              யாழில் வெடித்து சிதறிய எரிவாயு சிலிண்டர்

                              யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வீடொன்றில் எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்து

                              சிதறியுள்ளது ,எனினும் இதனால சேதங்கள் தவிர்க்க பட்டுள்ளது ,உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை


                              மேற்படி தொடர் வெடிப்புகள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை குழு விசாரணைகளை

                              ஆரம்பித்துள்ளது

                                Posted in Uncategorized

                                இலங்கையில் புதிய சட்டம் – மக்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவிப்பு

                                இலங்கையில் புதிய சட்டம் – மக்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவிப்பு

                                இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வருகின்றன , திருமண

                                மன்படங்களில் 200க்கு குறைவானவர்களே அனுமதிக்க படுவார் ,மேலும் உணவகங்களில் உள்ளே

                                100 உள்ளானவர்கள் மட்டும் அமர வேண்டும்

                                தவிர வீடுகளை விட்டு தேவையின்றி வீதிகளில் நடமாட வேண்டாம் என எச்சரிக்கை பட்டுள்ளது

                                ,மீறுவோர் காவல்துறையால் கைது செய்ய படுவார்கள் என தெரிவிக்க படுகிறது
                                மக்களே விழிப்பாக இருங்கள்

                                பரவும் நோயில் இருந்து உங்களை காப்பற்றி கொள்ளுங்கள்

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  மோடியை சந்திக்க பறந்தார் – நிதியமைச்சர் பசில்

                                  மோடியை சந்திக்க பறந்தார் -நிதியமைச்சர் பசில்

                                  இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசிட இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸா

                                  விரைந்துள்ளார்

                                  இந்த சந்திப்பில் இலங்கை தொடர்பான அபிவிருத்தி மற்றும் முதலீடுகள் தொடர்பாக பேச

                                  உள்ளார் என
                                  தெரிவிக்க படுகிறது

                                    Posted in Uncategorized

                                    தீயில் எரிந்து சிறுமி மரணம்

                                    தீயில் எரிந்து சிறுமி மரணம்

                                    இலங்கை வெலிகம பகுதியில் எட்டு வயது சிறுமி ஒருவர் வீட்டில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி
                                    இறந்துள்ளார்

                                    இந்த வீடு தீ பற்றல் விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட சம்பவமா என்பது தொடபில் விசாரணைகள்

                                    ஆரம்பிக்க பட்டுள்ளன


                                    நாடெங்கும் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து இவ்வாறான தீ பரவல் சம்பவங்கள்

                                    இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      சூறாவளி மக்களுக்கு எச்சரிக்கை

                                      சூறாவளி மக்களுக்கு எச்சரிக்கை

                                      இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

                                      அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

                                      2021 டிசம்பர்01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

                                      தென்கிழக்கு மற்றும் அண்மையாகவுள்ள கிழக்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு

                                      மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ளது. அது அடுத்த சில நாட்களில் ஒரு சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                                      கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

                                      மழை நிலைமை:

                                      புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் குறிப்பாகபிற்பகலில் அல்லது இரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                                      நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

                                      காற்று :

                                      நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது பிரதானமாக வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

                                      கடல் நிலை:

                                      நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.

                                      இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.