சர்ச்சையான படத்தை எடுக்க ஆர்வம் காட்டும் சசிகுமார்

Spread the love

சர்ச்சையான படத்தை எடுக்க ஆர்வம் காட்டும் சசிகுமார்

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வரும் சசிகுமார், அடுத்ததாக சர்ச்சையான கதையை எடுக்க ஆர்வம் காண்பித்து வருகிறார்.

சர்ச்சையான படத்தை எடுக்க ஆர்வம் காட்டும் சசிகுமார்
சசிகுமார்


இயக்குனர் பாரதிராஜா தன் வாழ்க்கையில் லட்சியமாக நினைத்துக் கொண்டிருந்தது

குற்றப்பரம்பரை படத்தை எடுப்பதைத்தான். இடையில் பாலா எடுக்கப்போவதாகத் தகவல் வர,

இருவருக்கும் கருத்து மோதல் வந்தது. இந்த கருத்து மோதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பிறகு குற்றப்பரம்பரை பற்றி இருவருமே பேசவில்லை.

சசிகுமார்

தற்போது சசிகுமார் குற்றப்பரம்பரையினர் குறித்த படத்தை எடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளார்.

வேல ராமமூர்த்தி இதன் கதையை எழுதுகிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் படத்தைத் தயாரிக்க

இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்தப் படத்தை சசிகுமார் இயக்க அதிக வாய்ப்புள்ளது.

அவரே முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

    Leave a Reply