Author: நலன் விரும்பி
மதுபான விளம்பரத்தில் நடிகைகள்
மதுபான விளம்பரத்தில் நடிகைகள்
முன்னணி நடிகைகள் பலரும் மதுபான விளம்பரத்தில் நடித்து வருவதால், அவர்களுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
மதுபான விளம்பரத்தில் நடிகைகள்… வலுக்கும் எதிர்ப்பு
ஹன்சிகா – பூஜா ஹெக்டே
நடிகர், நடிகைகள் சினிமாவை தவிர்த்து சொந்த தொழில்கள் மூலமும் விளம்பர படங்களில் நடித்தும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.
தரமற்ற பொருட்களை அவர்கள் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
ஏற்கனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளம்பரப்படுத்திய தமன்னா கோர்ட்டு வழக்கு சர்ச்சையில் சிக்கினார்.
தற்போது முன்னணி நடிகைகள் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அழகு சாதன பொருட்களை போட்டி போட்டு விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்க தொடங்கி உள்ளனர்.
இதனை மிஞ்சும் வகையில் ஹன்சிகா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட சில நடிகைகள் வெளிநாட்டு மதுபானங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஹன்சிகா – பூஜா ஹெக்டே
திரைப்படங்களில் மது அருந்துவது, புகைப்பிடிப்பது தீங்கானது என்று விளம்பரம் செய்யும்
நிலையில் இவர்கள் உணவுடன் மதுபாட்டிலை வைத்தும், கிளாசில் மது ஊற்றுவது போன்றும்
புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு இளைஞர்களை குடிக்க தூண்டுவதாக வலைத்தளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.
இது பரபரப்பாகி உள்ளது. பூஜா ஹெக்டே தற்போது விஜய் ஜோடியாக ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார்
பிறந்தநாளில் மரக்கன்று நட்ட நடிகை
பிறந்தநாளில் மரக்கன்று நட்ட நடிகை
அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன், அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்த ராஷி கண்ணா, தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.
பிறந்தநாளில் மரக்கன்று நட்ட ராஷி கண்ணா
ராஷி கண்ணா
2013-ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் கபே’ எனும் இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவ
ர் நடிகை ராஷி கண்ணா. பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து தென்னிந்திய அளவில்
பிரபலமான இவர், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஜெயம் ரவியுடன் அடங்கமறு, விஷாலுடன் அயோக்யா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன், சுந்தர்.சியுடன் அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்ததன் மூலம்
முன்னணி நடிகையாக உயர்ந்தார். இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் ராஷி
கண்ணாவிற்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ராஷி கண்ணா
இந்நிலையில் நடிகை ராஷி கண்ணா, தனது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நட்டு இருக்கிறார்.
இதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கும் ராஷி கண்ணாவிற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்
வருடம் 16 மில்லியன் டொலர் பணத்தை அள்ளும் பிரிட்டனில் பிறந்த இலங்கை பெண்
வருடம் 16 மில்லியன் டொலர் பணத்தை அள்ளும் பிரிட்டனில் பிறந்த இலங்கை பெண்
பிரிட்டனில் பிறந்த இலங்கையை சேர்ந்த சிங்கள பெண்மணி ஒருவர் நிறுவனம் ஒன்றின்
நிறைவேற்று சர்வ வல்லமை பொருந்திய முதன்மை அதிகாரியாக விளங்குகிறார் ,அதாவது CEO
அவுஸ்ரேலியாவில் பணியாற்றுமிவர் உலக ஆசிய பணக்கார பட்டியலில் அதிக பணத்தினை
பெற்று கொள்ளும் பெண்மணியாக இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்
இவரது ஆண்டு வருமானம் 16 மில்லியன் டாலராக உள்ளது
அறிவார்ந்த நிலையில் எமது சமூகமும் இது போல பயணிக்க வேண்டும் என்பதே நமது எண்ண
கருத்தாகும் ,இவரை போல நீங்களும் முன்னேறலாம் .
எடுத்து கொண்ட விடயத்தில் உரிய கவனத்தைச செலுத்தி வெற்றி காணுங்கள்
வெடித்து சிதறும் காஸ் சிலிண்டர் – மக்களே எச்சரிக்கை
வெடித்து சிதறும் காஸ் சிலிண்டர் – மக்களே எச்சரிக்கை
இலங்கையில் கடந்த இரு நாட்களில் இருபது காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியுள்ளன
மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்த சம்பவத்தினால் சில வீடுகள் சேதமாகியுள்ளன , நாள் தோறும் இந்த எரிவாயுவை பயன்
படுத்தும் மக்களே மிக எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்ட படுகிறது
சிலிண்டரில் எரிவாயு கசிவே இந்த வெடிப்பிற்கு கரணம் என கண்டறிய பட்டுள்ளது
இலங்கையில் மின்சார கார் பாவனைக்கு வருகிறது
இலங்கையில் மின்சார கார் பாவனைக்கு வருகிறது
இலங்கையில் சுற்று சூழல் பாதுகாப்பை அடுத்து புகையை தடுத்து வளி மண்டலத்தை காக்கும்
முகமாக மின்சார காரினை இறக்குமதி செய்திடும் நிலைக்கு இலங்கை தயராகி வருகிறது
இதற்கான அனுமதி தற்போது வழங்க படவுள்ளது
பிரிட்டன் உள்ளிட்ட ஐரோபிய நாடுகளில் 2040 ஆண்டிற்கு பின்னர் முற்று முழுதாக எரிபொருள் கார்கள்
தடை செய்ய படுகின்றன.
அதன் முன்னோடி நடவடிக்கையாக இந்த கார் இறக்குமதிக்கு இலங்கையும் தயராகி வருகிறது
கட்டக்காடு கடற்கரையில் கரை ஒதுங்கிய மனித சடலம்
கட்டக்காடு கடற்கரையில் கரை ஒதுங்கிய மனித சடலம்
யாழ்ப்பாணம் கட்டைக்காடு பகுதி கடலப்குதியில் உருக்குலைந்த நிலையில் மனித சடலம் ஒன்று
மீட்க பட்டுள்ளது
இவ்வாரு சில நாட்களுக்கு முன்னரும் மூன்று சடலங்கள் கரை ஒதுங்கி இருந்தமை குறிப்பிட தக்கது
தீக்குளித்து நபர் தற்கொலை – அதிர்ச்சியில் குடும்பம்
தீக்குளித்து நபர் தற்கொலை – அதிர்ச்சியில் குடும்பம்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள அமிர்தகழி பிரதேசத்தில் முதியவர் ஒருவர்
தனக்கு தானே மண்எண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக
மீட்கப்பட்ட சம்பவம் இன்று (30) காலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
அமிர்தகழி ஆனந்தன் வீதியைச் சேர்ந்த 69 வயதுடைய தியாகராஜா பத்திராஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளர்.
குறித்த நபர் நடக்க முடியாத நிலையில் தனிமையில் வாழ்ந்து வருவதாகவும் தனக்கு வாழ்கை
வெறுத்து போயுள்ளது என கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு சம்பவதினமான இன்று காலை 9
மணியளவில் சமையலறை பகுதியில் தனக்கு தானே மண்எண்ணெயை ஊற்றி தீயிட்டு
தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள அவரின் சடலம் பிரோத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விபச்சார நிலையம் சுற்றிவளைப்பு – மூவர் கைது
விபச்சார நிலையம் சுற்றிவளைப்பு – மூவர் கைது
இலங்கை நீர்கொழும்பு பகுதியில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார நிலையம் ஒன்று
பொலிஸாரினால் , சுற்றிவளைக்க பட்டது ,இதன் போது மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்
கொரானாவுக்கு சிக்கி 23 பேர் மரணம்
கொரானாவுக்கு சிக்கி 23 பேர் மரணம்
இலங்கையில் கடந்த தினம் கொரானாவுக்கு சிக்கி 23 பேர் பலியாகியுள்ளனர் என சுகாதார
அமைச்சு தெரிவித்துள்ளது ,அரசு தெரிவிக்கும் இந்த மரணங்களை விட இறப்பு விகிதம்
இரட்டிப்பாக உள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன
கொட்டான்களுடன் மக்களை மிரட்டிய கடற்படையினர்
கொட்டான்களுடன் மக்களை மிரட்டிய கடற்படையினர்
யாழ்ப்பாணம், மாதகல்- குசுமந்துறை பகுதியில் கடற்படையினர் கொட்டான்களுடன்
குவிக்கப்பட்டு , மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.
மாதகல் குசுமந்துறை கிராம சேவையாளர் பிரிவு – 150 , பகுதியில் கடற்படையினரின்
தேவைக்காக தனியாருக்கு சொந்தமான 1 பரப்பு காணியை சுவீகரிப்பதற்கான காணி அளவீட்டு
பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெறவுள்ளது.
அந்நிலையில் குறித்த காணியை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக
அரசியல்வாதிகள் , அப்பகுதி மக்கள் என பலரும் குறித்த காணிக்கு முன்பாக கூடிய வேளை ,
கொட்டான்களுடன் கடற்படையினர் அவர்களை சூழ்ந்து கொண்டு , அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்.
அச்சுறுத்தல்களை மீறியும் அப்பகுதியில் மக்கள் கூடி தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன
அதிக சம்பளம் வாங்கும் பாடகர்-பாடகி
அதிக சம்பளம் வாங்கும் பாடகர்-பாடகி
4 முறை தேசிய விருது பெற்ற பிரபல இந்தி பாடகியான ஸ்ரேயா கோசல், தமிழ், தெலுங்கு,
கன்னடம், மலையாளம், அஸ்ஸாமி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி என பல்வேறு மொழிகளில் பாடி வருகிறார்.
தமிழ் பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர்-பாடகி
ஸ்ரேயா கோசல்
தமிழ் பட உலகில் பின்னணி பாடகர்-பாடகிகள் மிகக்குறைவாகவே இருக்கிறார்கள். பாடகர்களி
ல் ஒரு பாட்டுக்கு ரூ.4 லட்சம் சம்பளம் வாங்கி, அதிக சம்பளம் வாங்கும் பாடகர் என்ற பெருமையை கடந்த சில வருடங்களாக தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் சித்ஸ்ரீராம்.
பாடகிகளில் அதிக சம்பளம் வாங்குபவர் பிரபல இந்தி பாடகியான ஸ்ரேயா கோசல். ஒரு பாட்டுக்கு ரூ.3 லட்சத்தில் இருந்து மூன்றரை லட்சம் வரை வாங்குகிறார். மேற்கு வங்காளத்தை
சேர்ந்த இவர், 4 முறை தேசிய விருது பெற்றவர். 16 வயதில் இருந்து இந்தி படங்களில் பாடி
வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், அஸ்ஸாமி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி என பல்வேறு மொழிகளில் பாடி வருகிறார்.
சித்ஸ்ரீராம்
‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தில் இடம்பெற்ற ‘‘முன்பே வா…, ’’ ‘வெயில்’ படத்தில் இடம்பெற்ற
‘‘உருகுதே மருகுதே…, ’’ ‘அந்நியன்’ படத்தில் இடம்பெற்ற ‘‘அண்டங்காக்கா கொண்டக்காரி, ’’ ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் இடம்பெற்ற ‘‘மன்னிப்பாயா…’’ ஆகிய பாடல்கள், ஸ்ரேயா கோசல் பாடிய பாடல்களில் சில.
இவருக்கு அடுத்த இடத்தில், அதிக சம்பளம் வாங்கும் பாடகி, சாதனா சர்கம். ஒரு பாடலுக்கு ரூ.2 லட்சம் வாங்குகிறார். மராட்டிய மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில், தாபோல் துறைமுக நகரில்
உள்ள இசை குடும்பத்தை சேர்ந்தவர். ‘மின்சார கனவு’ படத்தில் இடம்பெற்ற ‘‘வெண்ணிலவே…’’
பாடல், ‘அலைபாயுதே’ படத்தில் இடம்பெற்ற ‘‘ஸ்நேகிதனே ஸ்நேகிதனே…’’ என்ற கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல், சாதனா சர்கம் பாடி வெற்றி பெற்ற பாடல்கள்.
படப்பிடிப்பில் காயம் அடைந்த மாளவிகா
படப்பிடிப்பில் காயம் அடைந்த மாளவிகா
பேட்ட, மாஸ்டர் படங்களில் நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனன், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்து இருக்கிறார்.
படப்பிடிப்பில் காயம் அடைந்த மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன்
ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். விஜய்
ஜோடியாக மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். தற்போது தனுஷ் ஜோடியாக மாறன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தியில் தயாராகும் யுத்ரா படத்திலும் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். ஆக்ஷன் படமாக
உருவாகி வரும் இதில் மாளவிகா மோகனனுக்கும் சண்டை காட்சிகள் உள்ளன.
மாளவிகா மோகனன் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சியொன்றை மும்பையில் உள்ள ஸ்டூடியோவில் படமாக்கினர்.
மாளவிகா
அப்போது அவருக்கு எதிர்பாராமல் அடிபட்டு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு
முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கையில் காயம் பட்ட புகைப்படத்தை சமூக
வலைத்தளத்தில் மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார்.
யாழில் தேவாலயம் அடித்து நொறுக்கு – நபர் கைது
யாழில் தேவாலயம் அடித்து நொறுக்கு – நபர் கைது
யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகில் உள்ள தேவாலயம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது
,இவரது தாக்குதலில் ஆலயம் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது
விரைந்து வந்த போலீசாரை போதையில்நபர் ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்க
படுகிறது
உணவாக சமையல்காரர் படியில் இருந்து வீழ்ந்து மரணம்
உணவாக சமையல்காரர் படியில் இருந்து வீழ்ந்து மரணம்
இலங்கை நீர்கொழும்பு பகுதியில் உள்ள பிரபல உணவாகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த
பிரதான சமையல்காரர் மாடியில் இருந்து வீழ்ந்து பலியாகியுள்ளார் ,இவரது மரணம் தொடர்பில்
விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
கடலில் கொந்தளிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை
கடலில் கொந்தளிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கானஇ நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2021 நவம்பர் 29ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
மழை நிலைமை:
பெந்தோட்டையிலிருந்து காலிமற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான
கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் குறிப்பாக பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை மற்றும் மன்னார் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளில் காற்றானது கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன்,
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளில்
காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.
விபச்சாரத்தை சட்டமாக்க நடவடிக்கை
விபச்சாரத்தை சட்டமாக்க நடவடிக்கை
இலங்கையில் விபச்சாரத்தை சட்டமாக்க ஆளும் கட்சி பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
,பாலியல் வழக்குகளில் சிக்கி அப்பாவி பெண்கள் சிறைகளில் சிக்கி தவிக்கின்ற நிலையிலும்
,அவர்கள் குடும்பம் நின்மதியாக வாழும் நிலைக்கு எடுத்து செல்லவும் ,உல்லாச பயணிகள்
தங்கும் கொட்டல்கள் வருமானத்தை அதிகரிக்கவும் இதனை சட்டமாக வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் நிலவி வருகிறது
8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
இலங்கையில் நிலவை வரும் சீரற்ற காலநிலையால் எட்டு மாவாட்டங்களுக்கு மண்சரிவு
எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
நுவரெலியா, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை மற்றும்
குருநாகல் இந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
இலங்கையில் மாவின் விலை அதிகரிப்பு
இலங்கையில் மாவின் விலை அதிகரிப்பு
இலங்கையில் கூப்பன் மாவின் விலை 17,50 சதத்தால் அதிகரிக்க பட்டுள்ளது ,பாணின் விலை 10
ரூபாவால் அதிகரிக்க பட்ட நிலையில் இவ்விதம் மவன் விளையும் அதிகரிக்க பட்டுள்ளது மக்கள்
மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இலங்கையில் 27 பேர் கொரனோவால் மரணம்
இலங்கையில் 27 பேர் கொரனோவால் மரணம்
இலங்கையில் கடந்த தினம் கொரனோ நோயில் சிக்கி 27 பேர் பலியாகியுள்ளனர் என சுகாதார
அமைச்சு தெரிவித்துள்ளது .
இதுவரை 14 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது
யாழ் கடலோர பகுதிகளில் 3 மனித சடலங்கள் மீட்பு
யாழ் கடலோர பகுதிகளில் 3 மனித சடலங்கள் மீட்பு
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மற்றும் நெடுந்தீவு பகுதிகளில்
கடற்கரை பகுதியில் இருவேறு நாட்களில் மூன்று சடலங்கள் மீட்கப் பட்டுள்ளன
இந்த சடலங்கள் இவ்வாறு இங்கு கரை ஒதுங்கின என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன








