Posted in இலங்கை செய்திகள்

யாழில் வாலிபன் பரிதாப மரணம்

யாழில் வாலிபன் பரிதாப மரணம்

இலங்கை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற ஊந்துருளி விபத்தில்

சிக்கி 22 வயதுடைய வாலிபர் பலியாகியுள்ளார்


மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

நாள் தோறும் இலங்கையில் இவ்வாறான விபத்துக்களில் நான்கிற்கு மேற்பட்டவர்கள்

பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் அதிகரிக்க படவுள்ள எரிபொருள் விலை

    இலங்கையில் அதிகரிக்க படவுள்ள எரிபொருள் விலை

    இலங்கையில் தொடர்நது நாள் தோறும் அத்தியாவசிய பொருட்கள் விலைகள்

    அதிகரிக்க பட்ட வண்ணம் உள்ளன ,அவ்விதம் தற்போது எரிபொருளின் விலையும்

    அதிகரிக்க யோசனைகள் முன்வைக்க பட்டுள்ளன

    ஆளும் அரசின் கண்மூடித்தனமான செயல்பாடுகளினால் மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்

      Posted in இலங்கை செய்திகள்

      கள்ள மின்சாரத்தில் தாக்குண்டு இருவர் மரணம் -சோகத்தில் கிராமம்

      கள்ள மின்சாரத்தில் தாக்குண்டு இருவர் மரணம் -சோகத்தில் கிராமம்

      இலங்கை இரத்தினபுரி பெல்மதுளை பகுதியில் விவசாய நிலமொன்றில் பயன்படுத்த

      பட்ட சட்டவிரோத மின்சாரத்தில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர்

      இவர்கள் மரணம் தொடர்பில் காவல்துறையினர் தொடர் விசாரணைகளை நடத்தி

      வருகின்றனர் ,அனுமதி இன்றி இவ்வாறு


      மின்சாரம் பயன்படுத்தி வந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள படும் என எதிர் பார்க்க படுகிறது

        Posted in Uncategorized

        போலந்து உக்கிரேனில் குவிக்க படும் அமெரிக்கா இராணுவம்

        போலந்து உக்கிரேனில் குவிக்க படும் அமெரிக்கா இராணுவம்

        உக்கிரன் இது பாரிய படையெடுப்பை ரஷியா மேற்கொள்ள உள்ள நிலையில்

        அமெரிக்கா மூவாயிரத்திற்கு மேற்பட்ட படையினரை ர் ,போலாந்து மற்றும் உக்கிரேன் பகுதிகளில் குவிக்க பட்டுள்ளன

        ரசியா உக்கிரேன் மீது தாக்குதல் தொடுக்கும் பட்சத்தில் எதிர் தாக்குதல் புரியாது

        உக்கிரேன் படைகள் ரசியாவிடம் சரண் அடையும் என எதிர் பார்க்க படுகிறது

          Posted in Uncategorized

          ஆறுபேர் மீது கத்தி வெட்டு தாக்குதல்

          ஆறுபேர் மீது கத்தி வெட்டு தாக்குதல்

          அமெரிக்கா Philadelphia பகுதியில் நபர் ஒருவர் அங்கிருந்த ஆறு மக்கள் மீது சரமாரி

          கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினார் ,இதில் பெண்கள் உள்ளிட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்

          நெஞ்சு ,நெத்தி ,கழுத்து கை ,உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டு காயங்கள்

          ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன


          குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

          Posted in Uncategorized

          உக்கிரேனில் உள்ள அமெரிக்கர்களை வெளியேற – அமெரிக்கா அவசர உத்தரவு

          உக்கிரேனில் உள்ள அமெரிக்கர்களை வெளியேற – அமெரிக்கா அவசர உத்தரவு

          பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் முடிவதற்குள் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.

          உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: வெள்ளை மாளிகை கெடு
          ஜேக் சல்லிவன், விளாடிமிர் புடின்

          அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில்

          ரஷியா 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை குவித்துள்ளது. இதனால்,உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

          இந்நிலையில் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் பேசியதாவது:

          உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்.உளவுத்துறை மூலம் நமக்குக் கிடைத்த தகவல்கள்படி, புடின் தனது

          படைகளை அதிகரிக்கும் விதம், அவற்றை (உக்ரைனில்) பயன்படுத்த என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது.

          அது விரைவான காலக்கட்டத்தில் நடக்கும்.பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் முடிவதற்குள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கை மற்றும் படையெடுப்புக்கு உத்தர விடுவார்.

          எப்படியும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.அவர் இராஜ தந்திரத்தில் ஈடுபட விரும்பினால், நாங்கள் ஒரு இராஜதந்திர பாதை நோக்கி செல்ல விரும்புகிறோம். அவர்

          படையெடுப்பை தேர்வு செய்தால், தீர்க்கமாகப் பதிலளிப்பதற்காக எங்கள் கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றுவோம்.

          ஜெர்மனி, போலந்து, ஆர்மீனியா நாடுகளில் அமெரிக்கப் படைகள் நிலை நிறுத்தப்படுவது உக்ரைனில் ரஷ்யாவை எதிர்த்து போரிடுவதற்காக அல்ல. உக்ரேனிய

          எல்லைக்கு வரும் புதிய படைகள் உட்பட ரஷ்ய ராணுவ விரிவாக்கத்தின் அறிகுறிகளை நாங்கள் தொடர்ந்து காண்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்

            Posted in சினிமா

            ஆண்ட்ரியா செய்த காரியம்

            ஆண்ட்ரியா செய்த காரியம்

            நடிகை, பாடகி என பண்முகம் கொண்ட நடிகை ஆண்டியா செய்த காரியத்தால் அவருடைய ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

            ஆண்ட்ரியா செய்த காரியம்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்
            ஆண்ட்ரியா


            பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இவர் அதன் பின் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா,

            விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, வடசென்னை என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இவர் பல நடிகைகளுக்கு பின்னணி குரல்

            கொடுத்திருக்குறார். தமிழ் சினிமாவில் இடம் பெற்று வெற்றியடைந்த பல பாடல்களை இவர் பாடியுள்ளார். சமீபத்தில் இவர் பாடிய ஊ சொல்றியா மாமா பாடல் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

            தற்போது இவர் சமூக வலைத்தளம் மூலமாக தனது ரசிகர்களுக்கு உடல்நலன் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். இவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் ரத்த

            தானம் அளிக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்துடன் ரசிகர்களுக்கு சில வேண்டுகோளையும் விடுத்துள்ளார். அதில் “இன்று ஒரு நல்ல

            செயலைச் செய்ய வேண்டுமா? அப்போ இரத்த தானம் செய்யுங்கள்! இரத்த தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் நீண்ட நாட்களாக இருந்ததால், நேற்று

            இரத்த வங்கிக்குச் சென்று ரத்த தானம் செய்தேன் என்று நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்து அதனுடன் ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

            ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கி வரும் ‘பிசாசு 2’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

              Posted in சினிமா

              விஜய் மகனுடன் இணைய தயார்.. பிரபல நடிகர்

              விஜய் மகனுடன் இணைய தயார்.. பிரபல நடிகர்

              தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர், விஜய் மகனுடம் இணைய தயாராக இருப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளார்.

              விஜய் மகனுடன் இணைய தயார்.. பிரபல நடிகர் ஆர்வம்
              சஞ்சய்


              2019-இல் வெளியான ஆதித்யா வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் துருவ் விக்ரம். நடிகர் விக்ரமின் மகனான இவர், முதல் படத்திலேயே

              பல ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய மகான் படத்தில் அவருடைய தந்தை விக்ரமுடன் இணைந்து நடித்தார். இப்படத்தில் சிம்ரன், வாணி

              போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ்

              நாராயணன் இசையமைத்திருந்தார். இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

              இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் துருவ் விக்ரம் சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, “சிறு வயதிலிருந்தே நானும் விஜய் சாருடைய மகன்

              சஞ்சய்யும் நல்ல நண்பர்கள், அவர் நல்ல கதையுடன் வந்தால் அந்த படத்தில் நடிக்க

              நான் தயாராக இருக்கிறேன். மேலும் அந்தப்படம் பாலிவுட் படங்களை போல இரண்டு நாயகர்களின் வாரிசுகள் இணையும் படமாக அது இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

                Posted in உலக செய்திகள்

                முடங்கியது டுவிட்டர்- அவதியில் மக்கள்

                முடங்கியது டுவிட்டர்- அவதியில் மக்கள்

                தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டதாக டுவிட்டர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

                திடீரென முடங்கியது டுவிட்டர் வலைதளம் – அவதியடைந்த பயனாளர்கள்
                டுவிட்டர் வலைதளம்


                உலகம் முழுவதும் நள்ளிரவு டுவிட்டர் சமூக வலைதள சேவை திடீரென முடங்கியது. இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், மெக்சிகோ, இங்கிலாந்து உள்பட பல்வேறு

                நாடுகளில் இந்த பாதிப்பு காணப்பட்டது. இதனால், அவதியடைந்த டுவிட்டர் பயனாளர்கள் புகாரளித்தனர்.

                ஒரு மணி நேரத்திற்கும் பிறகு டுவிட்டர் வலைதளம் செயல்பாட்டிற்கு வந்தது.

                தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டதாகவும் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்தது.

                ட்வீட்களை இடுகையை தடுக்கும் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது,

                நிலைமை சீரடைந்து விட்டதாகவும் டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்தது. மேலும் தொழில்நுட்ப கோளாறுக்கு பயனாளர்களிடம் டுவிட்டர் நிறுவனம் மன்னிப்பு கோரியது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற ஆசனம் ​அதிகரிப்பு

                  யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற ஆசனம் ​அதிகரிப்பு

                  புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் கீழ், கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு

                  பாராளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில்

                  ஒரு பாராளுமன்ற ஆசனம் ​அதிகரிக்கப்பட்டுள்ளது.

                    Posted in இலங்கை செய்திகள்

                    காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையேயான படகு பாதை சேவை முடக்கம்

                    காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையேயான படகு பாதை சேவை முடக்கம்

                    காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையேயான படகு பாதை போக்குவரத்துச் சேவை கடந்த மூன்று தினங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் மக்கள் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கப்படுகின்றன.

                    குறிப்பாக, ஊர்காவற்றுறை பிரதேச செயலகம், ஊர்காவற்றுறை நீதிமன்று, ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை போன்றவற்றில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

                    படகு பாதையின் வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைந்துள்ளமையாலேயே சேவை நிறுத்தப்பட்டுள்ளது என காரணம் கூறப்பட்டுள்ளது.

                    மேற்படி படகு இது போன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் அடிக்கடி இடம்பெற்றது. எனினும், பின்னர் புதிய கேபிள் இணைக்கப்பட்டு அண்மைக்காலமாக தடையின்றி சேவை இடம்பெற்றது.

                    இரு வெளியிணைப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, ஒன்று பழுதடைந்தால் மற்றையதை பயன்படுத்தும் நடைமுறை பின்பற்றப்பட்டது. ஆனால், தற்போது

                    பொருத்தப்பட்டிருந்த ஒரு வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைந்துள்ளது எனக் கூறி மூன்று தினங்களாக பாதை சேவையில் ஈடுபடாமல் உள்ளது.

                    அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் தற்காலிகமாக ஒழுங்குபடுத்தப்பட்ட மோட்டார் படகில் ஆபத்துக்களுக்கு மத்தியில் தினமும் பயணம் செய்கின்றனர்.

                    படகில் மோட்டார் சைக்கிள்களை ஏற்றி இறக்குவதில் பெரும் சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றன.

                    வீதி அபிவிருத்தி அதிகார சபை ஒரு வெளியிணைப்பு இயந்திரத்தை மூன்று நாள்களுக்கு திருத்தம் செய்கின்றதா என படகு பாதைப் பயணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

                    எனவே, படகு பாதையின் சீரான சேவைக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      யாழில் 10 பேரை கடித்த விசர் நாய்

                      யாழில் 10 பேரை கடித்த விசர் நாய்

                      யாழ். நகர் மத்தி பகுதியில் இன்றைய தினம் கட்டாக்காலி நாய் ஒன்று வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்டித்துள்ளது.

                      யாழ். நகர் மத்தியில் கஸ்தூரியார் வீதி , மின்சார நிலைய வீதி என்பனவற்றில் இன்று

                      மதியம் முதல் மாலை வரையிலான நேரத்தினுள் 10க்கும் மேற்பட்டவர்களை நாய் கடித்துள்ளது.

                      அதில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவருக்கு இரண்டு கால்களிலும் நாய் கடித்துள்ளது. அதேவேளை அப்பகுதிகளில் சுமார் 10க்கும் மேற்பட்டவர்களை குறித்த நாய் கடித்துள்ளது.

                      சம்பவம் தொடர்பில் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபனுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் , குறித்த நாயினை மாநகர சபை ஊழியர்கள் ஊடாக பிடிப்பதற்கான

                      நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் , நாய் தொடர்பிலான தகவல்கள் தெரியாமையால் நாயினை பிடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

                      குறித்த நாய் தொடர்பிலான தகவல்கள் தெரிந்தவர்கள் மாநகர சபைக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்

                        Posted in இலங்கை செய்திகள்

                        சுவிசில் இருந்து இலங்கை வந்தவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

                        சுவிசில் இருந்து இலங்கை வந்தவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

                        கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வீட்டில் ஆட்களில்லாத

                        சமயத்தில் புகுந்த திருடர்கள் 60 பவுண் தங்க நகைகள், விலை உயர்ந்த சேலைகளை திருடிச் சென்றுள்ளனர். நேற்று இந்த சம்பவம் நடந்தது.

                        சுவிஸிலுள்ள குடும்பமொன்று அண்மையில் விடுமுறையில் வந்து, கோண்டாவிலிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.

                        அந்த வீட்டுக்காரர்களும், சுவிஸ் குடும்பமும் நேற்று காலையில் வீட்டை விட்டு புறப்பட்டு சென்றனர். இதன்போது, பெறுமதியான தங்க நகைகள், சேலைகளை

                        அலுமாரிக்குள் மறைத்து வைத்து விட்டு சென்றுள்ளனர். மாலையில் வீடு திரும்பினர்.

                        அலுமாரியில் பொருட்கள் கிளறியிருந்ததை அவதானித்து, மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை தேடிய போது, அவை திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

                        இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          தடம் புரண்ட ரயில் – பல சேவைகள் பாதிப்பு

                          தடம் புரண்ட ரயில் – பல சேவைகள் பாதிப்பு

                          இலங்கை கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயில் ஒன்று

                          தடம் புரண்டதில் மலையக ரயில் சேவைகள் பாதிக்க பட்டுள்ளன


                          விரைவில் மீட்பு பணிகள் சீர் படுத்த பட்டு சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என

                          தெரிவிக்க படுகிறது

                            Posted in இலங்கை செய்திகள்

                            இராணுவ பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொலை

                            இராணுவ பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொலை

                            இலங்கை மோதர பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினர்

                            இணைந்து நடத்திய தேடுதலின் பொழுது பாதாள உலக குழுவை சேர்ந்த நபர் ஒருவர்

                            சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்

                            இவர் பல கடத்தல் ,கொலை மற்றும் போதைவஸ்து கடத்தலுடன் தொடர்புடையவர் என

                            தெரிவிக்க பட்டுள்ளது

                              Posted in சினிமா

                              ரஜினியின் 169-வது திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது

                              ரஜினியின் 169-வது திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது

                              தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினியின் 169-வது படத்தின் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

                              ரஜினியின் 169-வது திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது
                              ரஜினி


                              காதலில் விழுந்தேன், எந்திரன், சர்க்கார், அண்ணாத்தே போன்ற பல படங்களை தயாரித்த நிறுவனம் சன் பிக்சர்ஸ்.

                              இந்த நிறுவனம் தற்போது விஜய்யின் பீஸ்ட், விஜய் சேதுபதியின் விஜேஎஸ்46, சூர்யாவின் எதர்க்கும் துணிந்தவன் படங்களை இயக்கி வருகிறது.

                              இந்நிலையில் ரஜினியின் 169-வது திரைப்படத்தை இந்த நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இவர் கோலமாவு கோகிலா படத்தின்

                              மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய டாக்டர் படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. அதன்பின் நெல்சன் அடுத்ததாக விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார்.

                              இந்த படத்தின் அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி படத்தின் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை

                              உற்சாகப்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ஒரு வீடியோவின் மூலம் இந்த படத்தின் அறிவிப்பை

                              வெளியிட்டுள்ளது. அதில் ரஜினி மாஸாக அமர்ந்துக்கொண்டு போஸ்

                              கொடுத்திருக்கிறார். இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்

                                Posted in உலக செய்திகள்

                                உக்கிரேன் எல்லையில் 10 நாள் போர் ஒத்திகை நடத்தும் ரசியா

                                உக்கிரேன் எல்லையில் 10 நாள் போர் ஒத்திகை நடத்தும் ரசியா பதட்டம் அதிகரிப்பு

                                ரசியா இராணுவம் Belarus, பகுதியில் பத்து நாள் இராணுவ போர் ஒத்திகையில் ஈடுபடுகிறது

                                இந்த திடீர் முற்றுகை போரினால் ரசியா ,உக்கிரேனுக்கு இடையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது


                                நேட்டோ படைகள் ரசியாவின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாது செயல்படுவதால்

                                இராணுவ நடவடிக்கை மூலம் ரசியாவை பாதுகாக்க புட்டீன் முனைந்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                                Posted in Uncategorized

                                தற்கொலை தாக்குதல்- 4பேர் மரணம் – 10 பேர் காயம்

                                தற்கொலை தாக்குதல்- 4பேர் மரணம் – 10 பேர் காயம்

                                சோமாலிய தலைநகர் Mogadishu பகுதியில் நடத்த பட்ட தற்கொலை தாக்குதலில் சிக்கி

                                நால்வர் சம்பவ இடத்தில பலியாகினர் ,மேலும் பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்

                                பாரளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ,இதனை சீர்குலைக்கும் முகமாக இந்த

                                தாக்குதல்கள் நடத்த பட்டு வருவதாக அரச இராணுவம் தெரிவித்துள்ளது

                                Posted in Uncategorized

                                சவூதி உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய போராளிகள்

                                சவூதி உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய போராளிகள்

                                ஏமான் நாட்டில் அரச படைகளுக்கு எதிராக போராடி வரும் கவுதிய கிளர்ச்சி படைகள்

                                சவூதி நாட்டின் உளவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்

                                குறித்த விமானமானது Hajjah மாகாணத்தின் மேலாக பறந்து கொண்டிருந்த பொழுதி

                                சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                                குறித்த போராளிகள் மீது சவுதி போர் விமானங்கள் தொடர் தாக்குதலை நடத்தி வரும்

                                நிலையில் இந்த பதிலடி தாக்குதல் நிகழ்த்த பட்டுள்ளது

                                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                  லண்டனில் இளம் பெண்ணை கற்பழித்த 10 பேர் கைது

                                  லண்டனில் இளம் பெண்ணை கற்பழித்த 10 பேர் கைது

                                  லண்டன் Folkestone and Canterbury பகுதியில் 2016 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான கால பகுதியில்


                                  12 வயதுடைய சிறுமி ஒருவரை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பத்து பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                                  தொடர்ந்து இடம் பெற்று வந்த விசாரணைகளில் இவர்கள் குற்றவாளிகள் என

                                  அடையாளம் காண பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு பல்லாண்டு சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது