ஹிஸ்புல்லா இஸ்ரேல் மோதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா இஸ்ரேல் மோதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war


ஹிஸ்புல்லா இஸ்ரேல் மோதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

ஹிஸ்புல்லா இஸ்ரேல் மோதல் கடும் ரொக்கட் வீச்சு
ஆயுத தளபாடங்கள் போர் வண்டிகள் அழிப்பு

வீடியோ

புலிச் சின்னம் அணிந்த இளைஞனின் விடுதலையில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை
Posted in இலங்கை செய்திகள்

புலிச் சின்னம் அணிந்த இளைஞனின் விடுதலையில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை

புலிச் சின்னம் அணிந்த இளைஞனின் விடுதலையில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை

தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்புடன் சம்மந்தப்பட்ட ரீசேர்ட் அணிந்திருந்தமையினால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் பெற்றோர் இன்று(01.12.2023) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தங்களின் குடும்ப நிலையை எடுத்துக்கூறியதுடன், மகனின் விடுதலைக்கு உதவுமாறும் கேட்டனர்.

இந்நிலையில் உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவர்களுக்கு நிலமைகளை எடுத்துக்கூறினார்.

இதனையடுத்து, குறித்த இளைஞனின் பெற்றோருக்கு நம்பிக்கையளித்த அமைச்சர், சஞ்சலமடைந்து தேவையற்ற பண விரயங்களை செய்யாமல் பொறுமையாக இருக்குமாறும் ஆறுதல் தெரிவித்து அனுப்பி வைத்தார்.

புலிச் சின்னம் அணிந்த இளைஞனின் விடுதலையில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை

கடந்த 27 ஆம் திகதி சில அரசியல் தரப்புக்களினால் மாவீரர் நாள் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், கொடிகாம பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விற்கு சென்ற

அப்பிரதேசத்தினை சேர்ந்த யூட் சுரேஸ்குமார் டனுஜன்(வயது – 23) என்ற இளைஞன் தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படம் புலிச் சின்னம் ஆகியவை பொறிக்கப்பட்ட ரீசேர்ட் அணிந்திருந்தார்.

இதனடிப்படையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள குறித்த இளைஞன், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

video

இஸ்ரேலுக்குள் கடும் ரொக்கட் வீச்சு |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் கடும் ரொக்கட் வீச்சு |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேலுக்குள் கடும் ரொக்கட் வீச்சு |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேலுக்குள் கடும் ரொக்கட் வீச்சு
தாக்குதலை மேற்கொண்ட ஹமாஸ்

அலறிய ஏவுகணை அபாய ஒலிகள் ,பதறி ஓடிய மக்கள்

வீடியோ

இஸ்ரேலுக்குள் விமானங்கள் தாக்குதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் விமானங்கள் தாக்குதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war|

இஸ்ரேலுக்குள் விமானங்கள் தாக்குதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war|

இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்த பறந்து வந்த ஹிஸ்புல்லா விமானங்கள் ,
அயன் டோம் வழிமறித்து தாக்குதல்

வீடியோ

கார் மேலே வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி
Posted in உலக செய்திகள்

கார் மேலே வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி

கார் மேலே வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி

ஸ்பெயின் நாட்டின் Madrid ring road பகுதியில் உலங்குவானூர்தி
ஒன்று அவ்வழியே பயணித்த கார் மீது வீழ்ந்து நொறுங்கியது .

இந்த விபத்தில் காயமடைந்தனர் ,கார் மற்றும் உலங்கு வானூர்தி என்பன பலத்த சேதமடைந்தன .

அவசர கால பேரிடர் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த வானூர்தியே இவ்வாறு விபத்தில் சிக்கியதாக தெரிவிக்க பட்டுள்ளது

இந்த விபத்தினால் அந்தவழி சாலை போக்குவரத்து பல மணிநேரம் பாதிக்க பட்டது .

விபத்து விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

வீடியோ

இஸ்ரேலுக்குள் 45 ரொக்கட் தாக்குதல் |இஸ்ரேல் போர்|isreal Gaza war |palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் 45 ரொக்கட் தாக்குதல் |இஸ்ரேல் போர்|isreal Gaza war |palestine isreal war


இஸ்ரேலுக்குள் 45 ரொக்கட் தாக்குதல் |இஸ்ரேல் போர்|isreal Gaza war |palestine isreal war

இஸ்ரேல் நகரங்களை இலக்கு வைத்து 45 ரொக்கட் தாக்குதல் பட்டுள்ளது .


ஏவுகணை அபாய ஒலி அலறல் சத்தம் கேட்டு ஓடும் மக்கள் .வெடிக்கும் ரொக்கட்.

18 விமானிகள் சுட்டு வீழ்த்தல் .

full video

வெடிக்கும் ரொக்கட் எரியும் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

வெடிக்கும் ரொக்கட் எரியும் இஸ்ரேல்

வெடிக்கும் ரொக்கட் எரியும் இஸ்ரேல்

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல் ,எரியும் வீடுகள் கார்கள் .

ஓட்டம் பிடிக்கும் இஸ்ரேல் மக்கள் .

வெடித்த குண்டு பலர் மரணம்

வீடியோ

வெடித்த போர் ஓடும் மக்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

வெடித்த போர் ஓடும் மக்கள்


வெடித்த போர் ஓடும் மக்கள்

வெடித்த போர் ,பாலஸ்தீனம் மீது ஆரம்பித்த இஸ்ரேல் ஓடும் மக்கள் ,
அதிர்ச்சியில் உலகம்

அதிர்ச்சியில் உலகம்

video

அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

காலி-கொழும்பு பிரதான வீதியில் அம்பலாங்கொட பொலிஸ் பிரிவுக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிறிய ரக லொறி ஒன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் 5 பேர் காயமடைந்தவர்கள் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்ததாக அம்பலாங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

மொரட்டுவ பிரதேசத்தில் கட்டிட நிர்மாணிப்பதற்காக வந்து பத்தேகமவிற்கு மீண்டும் சென்றுக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சாரதி தூங்கியதால், லொறி வீதியை விட்டு விலகி கொன்கிரீட் தூண் ஒன்றில் மோதி கவிழ்ந்தது.

லொறியின் பின்னால் பயணித்தவர்களில் ஒருவர் வாகனத்தில் இருந்த கொங்கிரீட் இயந்திரத்தால் நசுக்கப்பட்டு பலத்த காயமடைந்து பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

வீதி அபிவிருத்தி அதிகார சபை எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

கிராமப்புற மக்களுக்கான இன்ப செய்தி

கிராமப்புற மக்களுக்கான இன்ப செய்தி

நாடளாவிய ரீதியில் சேதமடைந்துள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி சுமார் 20 பில்லியன் ரூபா கடனுதவி வழங்க இணங்கியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், உரிய கடன் தொகை கிடைத்த பின்னர் வீதிப் புனரமைப்புப் பணிகளை ஆரம்பிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன,

கிராமப்புற மக்களுக்கான இன்ப செய்தி

“இந்நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் செயற்பட சர்வதேச நிபுணத்துவத்துவமுடைய பிரான்ஸ் நாட்டு லாசார்ட் நிறுவனமும், சர்வதேச கடன்களை செலுத்தாததால் ஏற்பட்டுள்ள சட்ட விடயங்களுக்கு கிளிபர்ட்

ஹான்ஸ் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது. கடன் வழங்குனர்களுடன் அவர்கள் விரிவாக கலந்துரையாடினர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களின் போது ஜப்பான், இந்தியா மற்றும் சீனாவின் ஆதரவைக் கோரினார்.

தற்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டை மேற்கொள்ள சர்வதேச சமூகம் உத்தியோகபூர்வமாக இணங்கியுள்ளது.

அது ஒரு நாடாக நாம் பெற்ற வெற்றியாகும். நாடு மீண்டும் சுவாசிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் நாடளாவிய ரீதியில் நிறுத்தப்பட்டிருந்த திட்டங்களை மீள ஆரம்பிக்க முடியும்.

ஒரு சில வீதிகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன. மேம்பாலங்கள் அமைக்கும் பணி இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றே நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே, இவ்வாறு நிறுத்தப்பட்ட அனைத்துத் திட்டங்களும் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்பட உள்ளன.

ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் சுமார் 20 பில்லியன் ரூபா கடன் உடன்படிக்கை மேற்கொண்டிருக்கிறோம். இந்தக் கடன் தொகை மூலம் நாடு முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள சேதமடைந்த மற்றும் பயணிக்க முடியாத வீதிகளை புனரமைப்பதற்காக பயன்படுத்தப்பட உள்ளது.

அந்த வீதிகள் குறித்து ஆராயுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். அதன்படி, அடுத்த வாரத்திற்குள் வீதிப் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

புகையிரதப் பாதைகள், அதிவேகப் பாதைகள் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். செயற்திறன்மிக்க புகையிரதப் பாதைகளாக மாற்ற, புகையிரத தண்டவாளங்களை நவீனமயப்படுத்த

வேண்டும். நான் இந்த அமைச்சுப் பொறுப்பை ஏற்கும் போது இந்திய கடன் திட்டத்தின் கீழ் 160 புகையிரதப் பெட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன.

இந்த புகையிரதப் பெட்டிகளுக்கான துறைமுக அபராதத் தொகையை செலுத்திய பின்னர், 123 புகையிரதப் பெட்டிகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

யார் ஆட்சிக்கு வந்தாலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களின் அடிப்படையில்தான் நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும் அளவுக்கு நமது நாட்டில் பொருளாதாரப் பலம் இல்லை. துறைமுகங்கள், விமான நிலையங்கள், வருமான வரித்திணைக்களம் உள்ளிட்ட அரச வருமானம் ஈட்டும்

நிறுவனங்கள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்க வேண்டும். தற்போதுள்ள காலாவதியான செயற்பாட்டுப் பொறிமுறையுடன் தொடர்ந்து செல்ல முடியாது.

அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்று இலங்கையை மாற்றுவதற்கு அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவது அவசியமாகும்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொழில்நுட்ப மாற்றத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பட்ஜெட் ஆகும். ” என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின
Posted in இலங்கை செய்திகள்

சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, 2023(2022) கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களின் ஊடாக பார்வையிட முடியுமென பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை மே 29 ஆம் திகதி 3,568 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன், குறித்த பரீட்சையில் 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.

அவர்களில், 3 இலட்சத்து 94,450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.

ஜெரோம் மீண்டும் CID யில் முன்னிலை
Posted in இலங்கை செய்திகள்

ஜெரோம் மீண்டும் CID யில் முன்னிலை

ஜெரோம் மீண்டும் CID யில் முன்னிலை

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று (01) இரண்டாவது நாளாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி உள்ளார்.

இன்று (12.01) குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு நேற்று (30) அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பின் படி அவர் இன்று முன்னிலையாகியுள்ளார்.

அவரிடம் நேற்று 08 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது

video

பெங்களூரில் 15 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Posted in உலக செய்திகள்

பெங்களூரில் 15 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூரில் 15 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களுரூ, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள 15 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பாடசாலை நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து விரைந்து வந்த பொலிஸார், பாடசாலைகளில் இருந்து மாணவ, மாணவியரை வெளியேற்றினர். மேலும், பாடசாலைகளில் தீவிர

சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பதை கண்டுபிடித்தனர்.

பெங்களூரில் 15 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அதேவேளை, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பாடசாலைகளில் ஒன்று மாநில துணை முதல் மந்திரி டிகே சிவக்குமாரின் வீட்டிற்கு எதிரே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

15 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டலால் பெங்களூருவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது
Posted in இலங்கை செய்திகள்

பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது

பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என தனியார் பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

பஸ் கட்டணங்கள் தொடர்பான தேசிய கொள்கையின் பிரகாரம் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு டீசல் விலை 4 வீதத்திற்கு மேல் குறைக்கப்பட

வேண்டும் எனவும், இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதும் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை எனவும் பஸ்

சங்கங்கள் தெரிவித்துள்ளன. இம்முறை பஸ் கட்டணத்தில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் வெடிக்கும் இஸ்ரேல் அறிவிப்பு |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

போர் வெடிக்கும் இஸ்ரேல் அறிவிப்பு |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

போர் வெடிக்கும் இஸ்ரேல் அறிவிப்பு |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

போர் வெடிக்கும் ,ஹமாஸ் அழிக்க படும் இஸ்ரேல் பகிரங்க அறிவிப்பு ,சிக்கலில் அரபு நாடுகள் ,தயாராகும் தடுப்பு ,திட்டங்கள்

சுரங்கத்தை அழிக்க இஸ்ரேல் திட்டம் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

சுரங்கத்தை அழிக்க இஸ்ரேல் திட்டம் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

சுரங்கத்தை அழிக்க இஸ்ரேல் திட்டம் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

ஹமாஸ் சுரங்கத்தை அழிக்க இஸ்ரேல் அமெரிக்கா கூட்டு திட்டம் ,பதட்டமாகும் போர்க்களம்

தமிழ் மொழி மூலம் முதலாம் இடம் பெற்ற பாடசாலை
Posted in இலங்கை செய்திகள்

தமிழ் மொழி மூலம் முதலாம் இடம் பெற்ற பாடசாலை

தமிழ் மொழி மூலம் முதலாம் இடம் பெற்ற பாடசாலை

2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் தமிழ் மொழிமூலம் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் தர பாடசாலை முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் தர பாடசாலையின் மாணவி ஒருவர் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார்.

இதேவேளை, சாதாரண தரப்பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் கண்டி மஹாமாயா பெண்கள் கல்லூரி முதலிடத்தையும், மூன்றாம் இடத்தை கொழும்பு றோயல் கல்லூரியும் பெற்றுக் கொண்டுள்ளது.

video

கலங்காதே மனமே
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

கலங்காதே மனமே

கலங்காதே மனமே

ஊரு விட்டு ஊரு வந்தா
உன்னை மறப்பேனா
உள்ளமதில் நின்றாய்
உன்னை எறிவேனா

கண்ணுக்குள்ள நீ இருந்து
காட்சிகளை தினம் கொட்ட
கண்ணு மறந்து தூங்குமா
காதலது தாங்குமா

விண்ணும் மண்ணும் உள்ளவரை
விடயங்களை மறப்பேனா
விரதமதை முடித்து வைத்த
விருந்தோம்பல் மறப்பேனா

எந்தனது நெஞ்சுக்குள்ள
என்றும் நீ ஆலயமே
என்றும் உன்னை மறவேனே
ஏன் மனமே கலங்காதே

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-11-2023

சிறுவர்களை கடத்தி செல்லும் இஸ்ரேலை இராணுவம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

சிறுவர்களை கடத்தி செல்லும் இஸ்ரேலை இராணுவம்

சிறுவர்களை கடத்தி செல்லும் இஸ்ரேலை இராணுவம்

பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதிகளுக்குள் நுழைந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் வீடுகளுக்குள் நுழைந்து சிறுவர்களை கடத்தி செல்கிறது

கழுத்தை அழுத்தி சிறுவர்களை கடத்தி இழுத்து செல்கிறது .

இஸ்லாமியர்களை கொன்றே தீருவோம் என்கின்ற நிலையில் இஸ்ரேல் இராணுவம் நடத்தும் காட்டு மிராண்டி தனமான இந்த செயலை அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் பார்து ரசித்த வண்ணம் உள்ளனர்

முஸ்லீம்களை கூண்டோடு அழிக்க வேண்டும் என்கின்ற மதவாத ,
வெறியில் இஸ்ரேல் இன அழிப்பு நடத்தி கொண்டுள்ளது .


அந்த காட்சிகளை பார்க்கிற பொழுது கோபத்தில் விழிகள் கொப்பளிக்கின்றன

சிறுவர்களை கடத்தி செல்லும் இஸ்ரேலை இராணுவம்

அரபு சோம்பேறி நாடுகள் தன் இனம் ஒன்றை அழித்து கொண்டிருக்க கைகட்டி வேடிக்கை பார்த்து கொரட்டை விடுகிறது .

இப்படி நாங்கள் அழிப்போம் எங்களை ஒன்று நீங்கள் புடுங்க முடியாது என்கின்ற நிலையில் இஸ்ரேல் இனவெறி வந்தேறிகள் கொலை வெறியாட்டம் போடுகின்றான் .


ஐநாவின் சிறுவர் பாதுகாப்பு நலன் ,இன அழிப்பு எல்லாம் காற்றோடு பறக்கிறது

எண்ணெய் ஏற்றுமதியை தடுத்து நிறுத்தி மேற்குலகம் மற்றும் இஸ்ரேலை பழிவாங்க மறுக்கும் அரபு நாடுகள் வெட்கம் கெட்ட செயல் .
வீதி இறங்கி போராடும் மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .

இந்த தடையை என்று அரபு நாடுகள் விதிக்கிறோதோ அன்று தான் இஸ்ரேல் ,அமெரிக்காவை அடக்க முடியும் ,தவறின் இது போன்ற கொலைகளை பாத்து ரசித்து கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது தன நிலவரமாக உள்ளது .

video

பேரூந்தில் மூன்று பெண்கள் செய்த காரியம்
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்தில் மூன்று பெண்கள் செய்த காரியம்

பேரூந்தில் மூன்று பெண்கள் செய்த காரியம்

பேருந்து ஒன்றில் பெண் ஒருவரின் தங்க சங்கிலியை திருடும் சிசிரிவி காட்சிகள் எமக்கு கிடைத்துள்ளது.

கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் திக்வெல்ல பிரதேசத்தில் பேருந்தில் ஏறியுள்ள நிலையில், அதே பேருந்தில் கந்தர பிரதேசத்தில் வைத்து மூன்று பெண்கள் ஏறியுள்ளனர்.

தங்க சங்கிலியை பறிகொடுத்த பெண் கூறுகையில், குறித்த மூவரே இந்த திருட்டை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்தார்.

video