இஸ்ரேல் தளபதியை தூக்கி சென்ற ஹமாஸ்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் தளபதியை தூக்கி சென்ற ஹமாஸ்


இஸ்ரேல் தளபதியை தூக்கி சென்ற ஹமாஸ்

இஸ்ரேல் முக்கிய பிராந்திய கட்டளை இராணுவ தளபதியை
தூக்கி சென்ற ஹமாஸ் போராட்ட குழு .

காசா பகுதியின் கட்டளை தளபதியாக கேணல் தர அதிகாரியே இறந்த
நிலையில் சடலத்தை தூக்கி சென்ற ஹமாஸ்

இஸ்ரேல் தளபதியை தூக்கி சென்ற ஹமாஸ்

இஸ்ரேல் இராணுவம்
கண்ணீரோடு தகவலை வெளியிட்டுள்ளது

கைதிகள் பரிமாற்றத்தில் கூட சடலத்தை வழங்கவில்லை ,
நூறு டாங்கிகள் 300 போர் வாகனங்கள் அழிக்க பட்டோ அல்லது சேதமாக்க பட்டோ உள்ளது

அடிமேல் அடி வாங்கி சுருண்டுள்ளது இஸ்ரேல் என்பது இதன் ஊடாக வெளிப்பட்டுள்ளது
காணொளியில் மேலதிக முழு விபரம் பார்க்க

full video

ஹந்தான மலையில் சிக்கிய மாணவர்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஹந்தான மலையில் சிக்கிய மாணவர்கள் மீட்பு

ஹந்தான மலையில் சிக்கிய மாணவர்கள் மீட்பு

ஹந்தான மலைத்தொடரில் சிக்கியிருந்த ராகம மருத்துவ பீட மாணவர்கள் 180 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் போதே அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹந்தான மலையில் சிக்கிய மாணவர்கள் மீட்பு

மோசமான வானிலை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக குறித்த மாணவர்கள் நேற்றைய தினம்(02) அங்கு சிக்குண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நெதன்யாகுவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து தூக்கிலிடு துருக்கி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

நெதன்யாகுவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து தூக்கிலிடு துருக்கி

நெதன்யாகுவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து தூக்கிலிடு துருக்கி

இஸ்ரேல் ஆளும் அதிபர் நெதன்யாகுவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி ,அவர் புரிந்த போர்க்குற்ற இன அழிப்புலு தூக்கிலிட வேண்டும் என துருக்கி தெரிவித்துள்ளது

நீதிமன்றில் நிறுத்தினாலே அவருக்கு வழங்க படவேண்டும் அதனால் ,அதனை மறைத்து சர்வதேச நீதிமன்றில் நிறுத்து என துருக்கி கோரிக்கை விடுத்துள்ளது

.நெதன்யாகுவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து தூக்கிலிடு துருக்கி

சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் புரியும் இந்த இனப்படுகொலையை பார்த்து கொண்டு இருக்க கூடாது என துருக்கி கோரியுள்ளது

துருக்கி இந்த அறிவிப்பு இஸ்ரேல் ஆளும் அதிபர் நெதன்யாகு மற்றும் இராணுவ தளபதி ,பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் உள்ளடக்க படுவார்கள் .

இவர்களே போர் குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்கள் ஆவர் .

அதனால் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க துருக்கி சர்வதேச நீதிமன்றில் அவசர கோரிக்கை விடுத்துள்ளது

வீடியோ

ஓய்வுபெற்றவர்களின் சம்பளம் ஜனவரி முதல் 2500 ரூபாய்
Posted in இலங்கை செய்திகள்

ஓய்வுபெற்றவர்களின் சம்பளம் ஜனவரி முதல் 2500 ரூபாய்

ஓய்வுபெற்றவர்களின் சம்பளம் ஜனவரி முதல் 2500 ரூபாய்

ஓய்வுபெற்றவர்களின் நலன்புரி மற்றும் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது .

இவ்வாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை கருத்திற்கொண்டு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் மாற்றம் அதிகரிக்கப்பட்டது .

2500 ரூபாவானது ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வீடியோ

இஸ்ரேல் போர் குற்றங்களை காசா மக்களிடம் கோரும் லண்டன் பொலிஸ்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் போர் குற்றங்களை காசா மக்களிடம் கோரும் லண்டன் பொலிஸ்

இஸ்ரேல் போர் குற்றங்களை காசா மக்களிடம் கோரும் லண்டன் பொலிஸ்

லண்டன் மெட்ரோபொலிட்டன் காவல்துறை, பாலஸ்தீனப் பிரதேசங்களில் நடந்த “போர்க் குற்றங்கள்” குறித்து புகாரளிக்குமாறு சாட்சிகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் கேட்டுள்ளது என்று பிரிட்டிஷ் சட்ட மையம் தெரிவித்துள்ளது.

“பயங்கரவாத” செயல்களுக்கு ஆளாகியிருக்கலாம் ஆனால் காசா பகுதியில் இருந்து வருபவர்கள் அல்ல,.

இஸ்ரேலில் இருந்து வரும் பயணிகளிடம் இதேபோன்ற வேண்டுகோள் விடுத்ததற்காக காவல்துறை முன்பு விமர்சிக்கப்பட்டது.

இஸ்ரேல் போர் குற்றங்களை காசா மக்களிடம் கோரும் லண்டன் பொலிஸ்

“பயங்கரவாதம், போர்க்குற்றங்கள் அல்லது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு சாட்சியாகவோ அல்லது பலியாகவோ” பாலஸ்தீனிய பிரதேசங்களில் இருந்தவர்களையும் உள்ளடக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்ட அறிவிப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு எதிரான போர்க்குற்ற வழக்கைத் தயாரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ஆதாரங்களைச் சேகரித்து வருகிறது .

பாலஸ்தீனியர்களுக்கான சர்வதேச நீதி மையம் (ICJP), இதுபோன்ற ஆதாரங்களை காவல்துறையிடம் பொதுமக்கள் வழங்குவதற்கு உதவ முன்வந்தது.

வீடியோ

இஸ்ரேல் இராணுவத்தி துரத்தி தாக்கும் ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தை துரத்தி தாக்கும் ஹிஸ்புல்லா

இஸ்ரேல் இராணுவத்தை துரத்தி தாக்கும் ஹிஸ்புல்லா

லெபனான் எல்லையில் உள்ள ஆக்கிரமிக்க பட்ட Doviv குடியேற்ற பகுதியி மீது ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் அந்த பகுதியில் குடியமர்த்த பட்ட மக்கள் ,மற்றும் இராணுவத்தினர் மீது சரமாரி தாக்குதல் .

இஸ்ரேல் இராணவ முகாமில் இருந்து புகைமண்டலம் எழுந்து பறக்கும் காட்சிகள் காணப்படுகின்றன ,

அதே பகுதியில் உள்ள 10 க்கு மேற்பட்ட இராணுவ நிலைகள் குறிவைத்து தாக்க பட்டுள்ளன .

இஸ்ரேல் இராணுவத்தை துரத்தி தாக்கும் ஹிஸ்புல்லா


இதனால் செய்வதறியாது இஸ்ரேல் படைகள் திணறிய வண்ணம் உள்ளன

அதி உக்கிரமாக தாக்குதலை விடுதலை போராளிகள் நடத்தி வருவதால் ,லெபனானை காசாவை போல அழிப்போம் என இஸ்ரேல் இராணுவம் சூளுரைத்துள்ளது

அவ்வாறு தாக்குதல் நடத்திட முனைந்தால் இஸ்ரேல் பலமான பாதிப்பை சந்திக்கும் என்பது, போராளிகள் தாக்கல் வியூகங்கள் எடுத்து காண்பிக்கின்றன

கழியும் நிமிடங்கள் பதட்டமாக உள்ளது ,எதுவும் நடக்க கூடும் என்ற கள நிலவரம் காணப்படுகிறது

வீடியோ

இஸ்ரேல் இராணுவத்தி துரத்தி தாக்கும் ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல் பலர் காயம்

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல் பலர் காயம்

இஸ்ரேல் இராணுவத்தின் முகாம்கள் மீது ஹிஸ்புல்லா இராணுவத்தின் விமானங்கள் தாக்குதலை நடத்தியுள்ளன .

இஸ்ரேல் இராணுவத்தின் மிக முக்கிய போர் வாகனங்கள் குவிக்க பட்ட பகுதிகளை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் இராணுவம் வாகனங்கள் மற்றும் இராணுவத்தினருக்கு பாரிய இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .

தமது தரப்பில் ஏற்பட்ட இழப்பு தொடர்பாக இதுவரை இஸ்ரேல் இராணுவம் ஏதும் தெரிவிக்கவில்லை

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல் பலர் காயம்

தமது படை இழப்பை மூடி மறைத்து அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

தாக்குதலை நடத்திய ஹிஸ்புல்லா விடுதலை போராளிகள் அமைப்பினர் அந்த காட்சிகளை வெளியிட்டு பர பரப்பை கிளப்பியுள்ளார்

அடிமேல் அடிவாங்கி சுருண்டு போயுள்ள இஸ்ரேல் இராணுவம் ,தொடர்ந்து தனது அதிகார மமதையில் ஆடி வருவதை காணமுடிகிறது

வீடியோ

இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் டாங்கிகள் துரத்தி துரத்தி அழிப்பு
ஹமாஸ் ஹிஸ்புல்லா கூட்டு தாக்குதலினால் நிலை படைகள் .

தரைவழியாக முன்னேற்ற நகர்வை மேற்கொண்டு அடிவாங்கி திணறும் இஸ்ரேல் இராணுவம் .


மறைத்து அப்பாவி மக்கள் வாழ்விடங்கள் மீது குண்டுகளை வீசி பழிதீர்க்கும் பயங்கரம்

கொத்தாக விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,
வெடித்த கடும் யுத்தம் .

அகதிகளாக தப்பி மக்கள் ஓடும் மக்களை ,துரத்தி தாக்கும் இராணுவம்

மன்னாரை சேர்ந்த 7 பேர் தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சம்
Posted in இலங்கை செய்திகள்

மன்னாரை சேர்ந்த 7 பேர் தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சம்

மன்னாரை சேர்ந்த 7 பேர் தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சம்

மன்னாரைச் சேர்ந்த 2 குடும்பம் 7 பேர் படகு மூலம் நேற்று (01) தனுஷ்கோடி அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் சென்று இறங்கியுள்ளனர்.

மன்னார் – சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 2 குடும்பங்கள் இவ்வாறு தஞ்சமடைந்துள்ளனர்.

படகு கட்டணமாக இரண்டு குடும்பங்களும் சேர்ந்து ஒரு இலட்சம் ரூபாய் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மன்னாரை சேர்ந்த 7 பேர் தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சம்

தகவல் அறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் அவரை மீட்டு முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைத்தனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தாங்கள் இரண்டு குடும்பங்களும் படகு மூலம் தனுஷ்கோடிக்கு வருகை தந்ததாக தெரிவித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று வரை 295 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

தப்பி ஓடும் இராணுவம் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

தப்பி ஓடும் இராணுவம் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

தப்பி ஓடும் இராணுவம் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

எதிரிகளின் ஏவுகணை தாக்குதலை அடுத்து
உயிர் காக்க பாதுகாப்பு தேடி ஓடும் இராணுவம்.

சக இராணுவ சிப்பாய் பிடித்து வெளியிட்ட காணொளி வைரல் ,

பல நூறு இராணுவம் மரணம் ,தொடரும் உக்கிர மோதல் .

வீடியோ

இஸ்ரேல் ஈரான் மோதல் உச்சம்|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஈரான் மோதல் உச்சம்|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் ஈரான் மோதல் உச்சம்|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் ஈரான் மோதல் உச்சம் ,
திறக்க படும் புதிய போர் களமுனை .

மோதல் எப்போதும் வெடிக்கலாம் ,
மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயம்

ஆக்கிரமிக்கும் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கை
க்கு முற்று புள்ளி வைக்க படும் ஈரான் மிரட்டல் .

யாழ்ப்பாணத்தில் 36 லட்சம் நகைகள் கொள்ளை
Posted in இலங்கை செய்திகள்

தம்பதியை கொன்று பணம் தங்க நகைகள் கொள்ளை

தம்பதியை கொன்று பணம் தங்க நகைகள் கொள்ளை

தம்பதியரை கொன்று பணம் மற்றும் தங்க நகையை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் செட்டிகுளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 30 ஆம் திகதி அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபர்களை கைதுசெய்வதற்காக செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தம்பதியை கொன்று பணம் தங்க நகைகள் கொள்ளை

கிளிநொச்சி, உரிட்டிகுளம் பகுதியில் தேடப்பட்டு வந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (01) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​குற்றச் செயலின் போது அவர் அணிந்திருந்த ஆடைகளும், திருடப்பட்ட தங்க நகையின் ஒரு பகுதியும் கிணற்றில் இருந்த பையில் காணப்பட்டது.

சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய சாரதி கைது

பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய சாரதி கைது

தலங்கம, கொப்பேகடுவ வீதியில் அக்குரேகொட சந்தியில் முச்சக்கர வண்டி ஒன்று பொலிஸ் கான்ஸ்டபிள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது செய்யப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர் மேல் மாகாண தெற்கு போக்குவரத்து பிரிவு பொலிஸ் கான்ஸ்டபிள் என தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய சாரதி கைது

காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக குறித்த கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாரதி கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், தலங்கம பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஹமாஸ் கடும் ரொக்கட் தாக்குதல்

காசா இஸ்ரேலுக்கு இடையில் வெடித்த கடும் போர் ,

வீடியோ

ஊழல் மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

ஊழல் மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை

ஊழல் மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை

2024 வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் மருந்துகளைக் கொள்முதல் செய்வது தொடர்பான சிறப்பு வழிகாட்டல்களை வெளியிடுவது மற்றும் அதற்காக ஒரு தனி நிறுவனத்தை நிறுவுவது குறித்து கவனம்

செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் ஊடாக மருந்து இறக்குமதியில் இடம்பெறும் ஊழல், முறைகேடுகள் மற்றும் ஏனைய சர்ச்சைக்குரிய

விடயங்களைத் தடுக்க வழி ஏற்படும் என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சீதா அரம்பேபொல தெரிவித்தார்.

மேலும், சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் சுகாதார அமைச்சின் மனித வளங்கள், சட்டவிதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் மாற்றங்களைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொல இவ்வாறு தெரிவித்தார்.

ஊழல் மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல,

தற்போது, நாட்டில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையங்களுக்குத் தேவையான தரமான மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளோம்.

தற்போதைய பொருளாதார நிலை காரணமாக சிகிச்சை மற்றும் பராமரிப்பு பணிகளில் சில பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தாலும் அவற்றைத் தவிர்த்து, அடுத்த ஆண்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியுதவிகளைக் கொண்டு எதிர்வரும் வருடத்தில் இந்த செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

மேலும், சுகாதார அமைச்சில் பல கட்டமைப்பு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். கடந்த வாரம் சில மாற்றங்களைச் செய்தோம். அடுத்த வாரத்திலும் இதுபோன்ற சில மாற்றங்களைச் செய்ய தயாராக இருக்கிறோம்.

மேலும், மனித வளங்கள், சட்டவிதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் மாற்றங்களைச் செய்யவும் எதிர்பார்க்கிறோம். மருந்துக் கொள்வனவு செயல்முறையிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.

குறிப்பாக, 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் ஊடாக, மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வது தொடர்பான விசேட வழிகாட்டுதல்களை வெளியிடுதல் மற்றும் அதற்கென தனியான நிறுவனமொன்றை ஸ்தாபிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், மருந்து இறக்குமதியின் போது இடம்பெறும் ஊழல், முறைகேடுகள் மற்றும் பிற சர்ச்சைக்குரிய சம்பவங்களைத் தவிர்க்க முடியும்.

நாட்டில் உள்ள மருந்துகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்நாட்டில் மருந்துகளை உற்பத்தி செய்தல், அவற்றை சந்தைக்கு அறிமுகப்படுத்தும் பணியை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சுகாதாரத் துறையில் தாக்கம் செலுத்தும் மனித வள மேலாண்மைக்காக பிரபலமற்ற முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. அதற்காக, பதவிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த ஒவ்வொரு மாற்றங்களுடனும், தற்போது மருந்துகள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று எதிர்பார்க்கின்றோம்.

மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள தயாராகி வருகிறோம். அனைவருக்கும் ஒரே மாதிரியான சுகாதார சேவையை எவ்வாறு வழங்குவது ((Universal Health Coverage)) மற்றும் (Social protection) சமூகப் பாதுகாப்பு வழங்குவது குறித்து உலகில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. அதற்காக உலக சுகாதார நிறுவனத்துடன் சுகாதார அமைச்சு இணைந்து செயல்பட்டு வருகிறது.

மேலும், தற்போது பெய்து வரும் மழையால் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருகிறது. சுகாதார குழுக்களின் முயற்சிகளினால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு நோய் இறப்பு விகிதத்தை குறைக்க முடிந்தது.“ என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொல மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி பிரதமர்கள் இடையே சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி பிரதமர்கள் இடையே சந்திப்பு

ஜனாதிபதி பிரதமர்கள் இடையே சந்திப்பு

டுபாய் எக்ஸ்போ நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடான COP 28 இல் பங்கேற்கச் சென்றிருக்கும் ஜனாதிபதி ரணில்

விக்ரமசிங்க மற்றும் கிரேக்க பிரதமர் கிர்யாகோஸ் மிட்ஸுடாக்ஸ் ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பு நேற்று (01) நடைபெற்றது.

இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்திக் கொள்வது தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் அவதானம் செலுத்தியிருந்ததோடு,

ரைவில் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கிரேக்க பிரதமருக்கு அழைப்பு விடுத்தார்.

ஜனாதிபதி பிரதமர்கள் இடையே சந்திப்பு

இதேவேளை, டுபாய் எக்ஸ்போ நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடான COP 28 இல் பங்கேற்கச் சென்றிருக்கும் ஜனாதிபதி

ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (01) நடைபெற்றது.

தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் அக்செயா அனந்தசயனன்
Posted in இலங்கை செய்திகள்

தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் அக்செயா அனந்தசயனன்

தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் அக்செயா அனந்தசயனன்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த அக்செயா அனந்தசயனன், மருத்துவராகுவதே தனது இலட்சியம் என்றார்.

சிறந்த பெறுபேற்றை பெற்றமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், க.பொ.த.சாதாரணதர பரீட்சையில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றதில் தமிழ் இனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது பெருமையாக உள்ளது. பெறுபேற்றை கல்வி நடவடிக்கையில் ஒரு படிக்கல்லாகவே பார்க்கிறேன்.

உயிரியல் கற்கையை தெரிவு செய்து மருத்துவ பீடத்திற்கு செல்ல வேண்டும் என்பதே எனது இலட்சியம். பெற்றோருக்கும், பாடசாலை சமூகத்தினருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் அக்செயா அனந்தசயனன்

விஞ்ஞான பாடத்திற்கும் ஆங்கில இலக்கியம், சிங்களம் ஆகிய தொகுதி பாடங்களுக்குமே தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சென்றேன்.கணித பாடத்தை தரம் ஆறு முதல் தந்தையிடமே கற்றேன்.

சாதாரண தர மாணவர்கள் சாதாரண பரீட்சையை உயர்தரத்திற்கான சிறு வழிகாட்டாலாக கருதி எதிர்கொள்ள வேண்டும் – என்றார்.

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் தேசிய ரீதியில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த அக்செயா அனந்தசயனன் 9 ஏ பெறுபேறுகளை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

குறித்த மாணவியின் தந்தை கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கணித விரிவுரையாளராகவும் தாய் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட விரிவுரையாளராகவும் பணியாற்றுகின்றனர்.

பிரான்ஸல் 14 தமிழருக்கு சிறை
Posted in இலங்கை செய்திகள்

சிறைச்சாலையில் தாக்குதலால் மற்றுமொரு கைதி மரணம்

சிறைச்சாலையில் தாக்குதலால் மற்றுமொரு கைதி மரணம்

ட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த கைதி கைதிகளால்

தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் இன்று சனிக்கிழமை (1) கண்டறியப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சோந்த 47 வயதுடைய சோமசுந்தரம் துரைராஜா கடந்த 27 ஆம்

திகதி கசிப்பு வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

சிறைச்சாலையில் தாக்குதலால் மற்றுமொரு கைதி மரணம்

இந்த நிலையில் குறித்த நபர் செவ்வாய்க்கிழமை (28) சிறைச்சாலையில் சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் உத்தரவிட்ட நிலையில், பிரேத பரிசோதனையில் மொட்டையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதாலேயே மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

குறித்த கைதி, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்ற கைதிகளுடன் முரண்பட்டு அந்தக் குழுவினர்

அவரைத் தாக்கியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றன

கேக் கொண்டு சென்ற பெண்ணுக்கும் விற்றவருக்கும் விளக்கமறியல்
Posted in இலங்கை செய்திகள்

கேக் கொண்டு சென்ற பெண்ணுக்கும் விற்றவருக்கும் விளக்கமறியல்

கேக் கொண்டு சென்ற பெண்ணுக்கும் விற்றவருக்கும் விளக்கமறியல்

மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளையிட்டு கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும்

இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடச் சென்ற சம்பவத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் கேக்கை விற்பனை செய்த பேக்கரியில் கடமையாற்றி வந்த ஆண் உட்பட இருவரையும் எதிர்வரும்

12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், பெண்ணை சட்டவைத்தியரிடம் உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் புதன்கிழமை (29) உத்தரவிட்டார்.

நாவற்குடாவில் வசித்துவரும் பாலிப்போடி உதயகுமாரி என்ற பெண் சம்பவதினமான கடந்த 26ம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளையிட்டு நகரத்திலுள்ள பேக்கரி ஒன்றில்

பிறந்தநாள் கேக் ஒன்றை வாங்கி அதில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வே.பிரபாகரன் அண்ணா தலைவர் என பெயரை எழுதி வாங்கி கொண்டு அங்கிருந்து கொக்கட்டிச்சோலைக்கு பஸ்வண்டியில் பயணித்துள்ளார்.

கேக் கொண்டு சென்ற பெண்ணுக்கும் விற்றவருக்கும் விளக்கமறியல்

அங்கு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தை நோக்கி வீதியால் நடந்து சென்றவர், தலைவரின் பிறந்தநாள் கேக் வெட்ட போறேன் கடையை ஏன் பூட்ட வில்லை? தலைவரை காட்டி கொடுத்து விட்டார்கள், என சத்தமிட்டு சென்ற

நிலையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து புலனாய்வு பிரிவினர் அவரை பின் தொடாந்து சென்று, துயிலும் இல்லம் சென்ற நிலையில் கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது இவரது கணவர் விடுதலைப் புலிகளில் இருந்து உயிரிழந்துள்ளதாகவும், புலிகளின் மட்டக்களப்பு படை

தளபதி றமேஷ் மச்சாள் முறையான உறவினர் எனவும் தற்போது தனிமையில் நாவற்குடாவில் வசித்து வருவதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த கேக்கை விற்பனை செய்த மட்டு நகரிலுள்ள பேக்கரியில் கடமையாற்றிவரும் கொக்கட்டிச்சோலையைச் சோந்த 35 வயதுடைய பரமேஸ்வரன் முனீஸ்வரன் என்பவரை கைது செய்து

விசாரணையில் குறித்த பேக்கரிக்கு சென்ற பெண் பிறந்தநாள் கேக் ஒன்றை வாங்கி அதில் பிரபாகரன் பெயர் எழுதிதருமாறு கேட்டுக் கொண்டதற்கு இனங்க பெயரை பொறித்து கேக்கை விற்பனை செய்துள்ளார்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண்னை தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்தநாளுக்கு கேக் வெட்ட முயற்சித்த குற்றச்சாட்டிலும் அவருக்கு உதவிபுரிந்த குற்றச்சாட்டில் பேக்கரியில்

கடமையாறிவந்து கேக்விற்பனை செய்தவர் உட்பட இருவருக்கும் எதிராக பயங்கரவாத தடைச் சடத்தின்கீழ் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்து 29ம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் பீற்றர்

போல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இருவரையும் எதிர்வரும் டிசம்பர் 12 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் பெண்ணை

மனநிலை பாதிக்கப்பட்டுள்ளாரா என கண்டறிய சட்டவைத்தியரிடம் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் பொலிசாருக்கு உத்தரவிட்டார்

இலங்கையில் 9 மாதத்தில் 1500 பேர் கற்பழிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மகளை துஷ்பிரயோகம் செய்த இராணுவ ஊழியர் கைது

மகளை துஷ்பிரயோகம் செய்த இராணுவ ஊழியர் கைது

சுமார் 02 வருடங்களாக தனது மகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் இராணுவ ஊழியர் ஒருவர் கொபேகனே பொலிஸாரால் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

வன்னிகம, வித்திகுளிய பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வவுனியா பம்பைமடு 17 வது காலாட்படை முகாமில் ஊழியராக பணிபுரிவது தெரியவந்துள்ளது.

மகளை துஷ்பிரயோகம் செய்த இராணுவ ஊழியர் கைது

சந்தேகநபர் சுமார் 02 வருடங்களாக 12 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக கொழும்பு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் கிடைத்திருந்தது.

இந்த தகவலையடுத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கொபேகனே பொலிஸாருக்கு அறிவித்துள்ள நிலையில், விசாரணைகளுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் சிறுமி வைத்திய பரிசோதனைக்காக நிகவரெட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நிகவெரட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளா