புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவர் பதவி பிரமாணம்
புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவர் பதவி பிரமாணம்
பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்
24 மணிநேரத்தில் 836 சந்தேக நபர்கள் 24 மணிநேரத்தில் 836 சந்தேக நபர்கள் கைது
24 மணிநேரத்தில் 836 சந்தேக நபர்கள் கைது
நாடு தழுவிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையான ‘யுக்திய’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக நள்ளிரவு 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மேலும் 836 சந்தேக நபர்கள் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 6 பேரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருவர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த காலப்பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களில் 142 கிராம் ஹெரோயின், 95 கிராம் ஐஸ் மற்றும் 1,650 போதை மாத்திரைகள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு – புதுமாத்தளன் கடற்கரையில் அசம்பாவிதம்
முல்லைத்தீவு – புதுமாத்தளன் கடற்கரையில் அசம்பாவிதம்
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
குறித்த நபர் உறவினர்களுடன் புதுமாத்தளன் பிரதேசத்தில் உள்ள கடற்கரையில் நேற்று (28) நீராடச் சென்ற போதே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புதுக்குடியிருப்பு 10 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே காணாமல் போயுள்ளார்.
கடற்படையினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவியை பகிடிவதை – 6 மாணவர்கள் கைது
மாணவியை பகிடிவதை – 6 மாணவர்கள் கைது
.சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் பல்கலைக்கழகத்தின் 4 ஆம் ஆண்டு மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் கடந்த 14 ஆம் திகதி 1997 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சமனலவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.
சந்தேகத்திற்குரிய மாணவர்கள் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மொழிக் கல்வி பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் 23, 24 மற்றும் 25 வயதுடைய மொரவக, ருக்கஹவில, அலுஹ்தாராம, இமதுவ மற்றும் கிடலாவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என சமனலவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு பாலஸ்தீன காசா பகுதியில் வெடித்த மோதல்
அமெரிக்காவில் வெள்ளம் 15 மில்லியன் மக்கள் தவிப்பு
அமெரிக்காவில் வெள்ளம் 15 மில்லியன் மக்கள் தவிப்பு
அமெரிக்காவில் நிலவி வரும் கடும் மழை வெள்ளம் மற்றும் பனிமழை காரணமாக 15 மில்லியன் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்
drenches Northeast பகுதிகளில் இடம்பெற்று வரும் பருவகால நிலை காரணமாக மக்கள் பெரும் துயரில் சிக்கி தவித்து வருகின்றனர் .
புயல் வெள்ளம் காரணமாக மரங்கள் வீடுகளுக்கு மேல் முறிந்து வீழ்ந்து காணப்படுகின்றன .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம் பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன
சந்தைகளுக்குள் அழுகிய உணவு விற்பனை
பழுதடைந்த இறைச்சி விற்பனை சீல் வைப்பு
இலங்கையில் துப்பாக்கிச் சூடு வன்முறை அதிகரிப்பு
பாலங்களை புனரமைக்க RDA-க்கு ஒன்றரை ஆண்டுகள் தேவை
சர்வதேச உதவி அரசாங்க எச்சரிக்கை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் நோய்
அமெரிக்கா இராணுவத்திற்கு பெரும் இழப்பு|கொத்தாக வீழ்ந்த படைகள்
அமெரிக்கா இராணுவத்திற்கு பெரும் இழப்பு|கொத்தாக வீழ்ந்த படைகள்
அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல் , பெரும் இழப்பு.
கொத்தாக வீழ்ந்த அமெரிக்கா படைகள் ,ஈரான் அதரவு குழுக்கள் அதிரடி தாக்குதல்.
சந்தைகளுக்குள் அழுகிய உணவு விற்பனை
பழுதடைந்த இறைச்சி விற்பனை சீல் வைப்பு
இலங்கையில் துப்பாக்கிச் சூடு வன்முறை அதிகரிப்பு
பாலங்களை புனரமைக்க RDA-க்கு ஒன்றரை ஆண்டுகள் தேவை
சர்வதேச உதவி அரசாங்க எச்சரிக்கை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் நோய்
ஈரான் ரொக்கட் சோதனை விண்ணில் பாய்ந்த ஈரான் 3 ரொக்கட்
வவுனியாவில் கோர விபத்து பேரூந்து மோட்டார் சைக்கிள் மோதல்
வவுனியாவில் கோர விபத்து பேரூந்து மோட்டார் சைக்கிள் மோதல்
வவுனியாவில் கோர விபத்து பேரூந்து மோட்டார் சைக்கிள் நேரெதிர் மோதல் ,இந்த கோர விபத்து சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
இலங்கை வவுனியா வலய பணிமனை அருகில் இடம்பெற்ற பேரூந்து மோட்டார் சைக்கிள் நேரெதிர் மோதியதில் ஏற்படட விபத்தில் சிக்கி ஒருவர் காயமடைந்துள்ளனர் .
மோட்டார் சைக்கிள் பேரூந்து மோதி தள்ளியதில் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .
வவுனியாவில் இவ்விதமான பேரூந்து மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இலங்கை மீனவர்கள் 13 பேர் மாலைத்தீவு கடற்பரப்பில் கைது
இலங்கை மீனவர்கள் 13 பேர் மாலைத்தீவு கடற்பரப்பில் கைது
இலங்கை மீனவர்கள் 13 பேர் மாலைத்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்,மாலைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கலே இவ்வாறு கைது செய்யப்பட்டனர் .
மேலும் அவர்கள் பயணித்த 02 மீன்பிடி படகுகளையும் மாலைத்தீவு கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
ஒரு கப்பலில் 7 இலங்கை மீனவர்களும், மற்றொரு கப்பலில் 6 இலங்கை மீனவர்களும் இருந்தனர் ,அனைவரும் மாலைத்தீவு கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த இரண்டு மீன்பிடி படகுகளும் கடந்த 25ஆம் திகதி பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு படகுகளும் தற்போது ஹா அலிஃப் ஃபில்லதூ துறைமுகத்தில் நங்கூரமிட்டு, நூராதீன் என்ற மாலைத்தீவு கடலோர பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மாலைத்தீவு கடற்பரப்பில் இந்திய மற்றும் இலங்கை மீன்பிடி கப்பல்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பது வழமையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் இரத்து
இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் இரத்து
இலங்கை கராத்தே சம்மேளனம் மற்றும் இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்திற்காக நியமிக்கப்பட்ட இடைக்கால குழுக்களை கலைக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் ஜூலை மாதம் 28 ஆம் திகதி, அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ரொஷான் ரணசிங்க கராத்தே டோ சம்மேளனத்தின் பதிவை இடைநிறுத்தி, சங்கத்தின் பணிகளை தற்காலிகமாக நடத்துவதற்கு இடைக்கால குழுவை நியமித்தார்.
இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் இரத்து
இது தொடர்பான இடைநிறுத்தத்தை ஏற்படுத்திய வர்த்தமானியை தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் இரத்துச் செய்து, கராத்தே டோ சம்மேளனத்தின் விடயங்கள் கடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகள் சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் ரொஷான் ரணசிங்க கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்தின் பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்தி இடைக்கால குழுவொன்றை நியமித்திருந்தார்.
தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையும் இரத்துச் செய்து சங்கத்தின் செயற்பாடுகளை முன்னைய அதிகாரிகள் சபையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
பொலிசார் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் 803 பேர் கைது
பொலிசார் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் 803 பேர் கைது
பொலிசார் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தியதில் 803 பேர் கைது செய்யப்பட்டனர் .விசேட பொலிஸ் நடவடிக்கையின் பொழுதே மேற்படி கைது நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது .
யுக்திய நடவடிக்கையின் தொடர்ச்சியே இந்த கைது நடவடிக்கை என பொலிசார் தெரிவித்துள்ளனர் .கைதானவர்கள் பலர் தேட படும் குற்றவாளிகளாக காணப்பட்டனர் .
யாவரும் நீதிமன்றில் பரப்படுத்த சிறை தணடனைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
போதைவஸ்து ஒழிப்பு சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர் .
இஸ்ரேலுக்குள் நுழைந்து லெபனான் விமானங்கள் கடும் தாக்குதல்
இஸ்ரேலுக்குள் நுழைந்து லெபனான் விமானங்கள் கடும் தாக்குதல்
இஸ்ரேலுக்குள் நுழைந்து லெபனான் போர் விமானங்கள் கடும் தாக்குதல் , முகாம்கள்பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக லெபனான் ஹிஸ்புல்லா அறிவிப்பு .
இஸ்ரேலுக்குள் விமானங்கள் நுழையும் பொழுது சைரோன்கள் அலறின ,இஸ்ரேல் வான் எதிர்ப்பு ஏவுகணைகள் சீறி பாய்ந்ததாக தெரிவிப்பு .
இந்த தாக்குதலில் லெபனான் படைகளுக்கு பலத்த இழப்பு என லெபனான் படைகள் அறிவிப்பு .
இஸ்ரேல் டாங்கிகள் 5 அழிப்பு ஹமாஸ் படைத்த சாதனை
இஸ்ரேல் டாங்கிகள் 5 அழிப்பு ஹமாஸ் படைத்த சாதனை
இஸ்ரேல் டாங்கிகள் 5 அழிப்பு , எதிரி படை டாங்கிகள் உள்ளே நுழைய விட்டு தாக்குதல் நடத்தி சாதனை படைத்த ஹமாஸ் .
இஸ்ரேல் டாங்கிகள் அழிக்கப்படும் காட்சிகளை வெளியிட்டு ஹமாஸ் உலகை அலற விட்டுள்ளது .
Grid
இஸ்ரேல் இராணுவத்தால் பலஸ்தீன ஊடக நபர்கள் 120 பேர் படுகொலை
இஸ்ரேல் இராணுவத்தால் பலஸ்தீன ஊடக நபர்கள் 120 பேர் படுகொலை
இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீன ஊடக நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் .
இஸ்ரேல் பாலஸ்தீன , இஸ்ரேல் இராணுவ தாக்குதலில் 120 பலஸ்தீன ஊடக நபர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் .
கடந்த தினம் இஸ்ரேல் தாக்குதலில் பலியானவர் Iyad Ahmed al-Rawag என பாலஸ்தீன அரசு அறிவித்துள்ளது .
கூதி சவூதி கடும் மோதல்
அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்
காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66
யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை
500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது
ஹொரானாவில் சடலம் மீட்பு
போரை நிறுத்து கைதிகளை கூட்டி வா நெதன்யாகு வீடு முன்பாக போராட்டம்
போரை நிறுத்து கைதிகளை கூட்டி வ நெதன்யாகு வீடு முன்பாக போராட்டம்
போரை நிறுத்து கைதிகளை கூட்டி வா என கூறி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு முன்பாக மக்கள் போராட்டம் .
இஸ்ரேல் பிரதமர் தனியார் வீடு முன்பாக கூடிய மக்கள் இந்த போராடடத்தை தொடுத்த வண்ணம் உள்ளனர் .
தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து கொள்ளும் நோக்குடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பலஸ்தீன மக்கள் மீது தொடர் இனப்படுகொலை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளார் .
இலக்கையில் கோட்டபாய துரத்தியடிக்க நெதன்யாகுவும் மக்களினால் துரத்த பட போவதை மேற்படி தொடர் போராட்டம் எடுத்து காட்டுகின்றன .
உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் கட்டடங்களுக்குள் சடலம்
உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் கட்டடங்களுக்குள் சடலம்
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் மோதல் ,கட்டடங்களுக்குள் சடலம் மீட்பு , ரஷ்யா நடத்தும் போரில் உக்ரைனுக்கு பலமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது .
உக்ரைன் டொன்ஸ்டெக் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் பல கட்டடங்கள் வீழ்ந்த நிலையில் ,கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து ஐந்து மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளதாக உக்ரைன் மீட்பு படைகள் தெரிவித்துள்ளன .
இரண்டு வருடங்கள் எட்டிப்பிடித்து கடக்கும் போரில் உக்ரைன் உள் கட்டமைப்பு பலமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது .
சந்தைகளுக்குள் அழுகிய உணவு விற்பனை
பழுதடைந்த இறைச்சி விற்பனை சீல் வைப்பு
இலங்கையில் துப்பாக்கிச் சூடு வன்முறை அதிகரிப்பு
பாலங்களை புனரமைக்க RDA-க்கு ஒன்றரை ஆண்டுகள் தேவை
சர்வதேச உதவி அரசாங்க எச்சரிக்கை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் நோய்
தமிழ் தேசியம் தமிழருக்கு தெரியாதாம் எட்டப்பன் சுமந்திரன் பிதற்றல்
தமிழ் தேசியம் தமிழருக்கு தெரியாதாம் எட்டப்பன் சுமந்திரன் பிதற்றல்
தமிழ் தேசியம் தமிழருக்கு தெரியாதாம் சுமந்திரன் தெரிவித்துள்ளார் ,தமிழ் தேசிய வாதிகளிற்கு தெரியாது என கூறும் சுமந்திரன் புலம்பல்கள் இது என்றே மக்கள் .கூறுகிறார்கள்
2009 ஆம் ஆண்டு தமிழர்கள் அழிக்க பட்டதன் பின்னர் ,அதன் பின்னர் ஆண்ட ஆளும் கட்சிகளின் உயிர் நாடியாக அங்கம் வகித்த சுமந்திரன் ,தமிழ் தேசிய விடுதலை பெற்று கொடுக்கவில்லை .
தமிழன் அழிக்க பட்ட 14 வருடங்களில் தமிழர்களுக்கு இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை கூற வக்கற்ற சுமந்திரன், தானே தமிழர்களின் தலைவனாக மகுடம் சூட முனைகிறார் .
சட்டத்தை வைத்து அரசியல்வாதிகளை உள்ளக ரீதியாக மிரட்டி அடிபணிய வைக்கும் நடவடிக்கையில் இவர் ஈடுபடுகிறார் , இவ்வாறான குற்ற சாட்டுக்களை சமுக வலைத்தளங்களில் முன் வைக்க படுகிறது
சுமந்திரன் தமிழர்கள் நேசிக்கிறார்கள் என்றால் கனடாவில் கூழ் முட்டை அடிவாங்கி ஓடியது ஏன் ..?
தமிழ் தேசியம் தமிழருக்கு தெரியாதாம் எட்டப்பன் சுமந்திரன் பிதற்றல்
சாணக்கியன் சுமந்திரன் ஆகியோரை மக்கள் விரட்டியடித்தனர் .தனது பித்தலாட்டத்தை நிரப்பும் கூழ்முட்டையாக சுமந்திரன் உள்ளதை அந்த கூழ் முட்டையடி விவரங்கள் காணபடுகிறது
வந்திருந்த நாடுகளில் வந்திருந்து தமிழர்களை மிரட்டும் நடவடிக்கையில் சுமந்திரன் ஈடுபட்டார் .
இது தொடர்பாக பலமுறை பேட்டி காண முற்பட்டு அழைத்த பொழுது அவர் அழைப்புக்கு பதில் தரவில்லை .
வாங்க சார் எமது அழைப்புக்கு பதில் தாருங்கள் தமிழ் தேசியம் முதல் பல விடயங்கள் வரை பேசுவோம் .
உப்பு சப்பற்ற பேச்சுக்களைபேசி காலத்தை கடத்தி ஏமாற்றும் இந்த பித்தலாட்ட நாடகத்தை சுமந்திரன் நிறுத்த வேண்டும் .
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி சட்டத்தரணியாக உள்ள இவர் தமிழர்கள் தேசியம் பேசுகிறாராம் .
இப்பொழுது ஸ்ரீதரன் ஆட்சியை ஏற்க முடியாது அவருக்கு முட்டு கட்டை போட்டு குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் .
பொது மக்கள் அரசியல் கட்சியாக பரிணாமம் பெற்றுள்ள இவர் மக்கள் விமர்சனகள் மாற்று கருத்துக்களுக்கு பதில் அளிக்க வேண்டும் .
அதைவிடுத்து தனது அதிர்வு குழுக்கள் ஊடக பேசுவதை நிறுத்தி எம்மோடு பேசுங்கள் கேட்க நிறைய இருக்கு மிஸ்ட்டர் சுமந்திரன் .
தொடராக மக்களை ஏமாற்றுவதை நிறுத்தி நிலையான் அரசியலை நடத்துங்கள் .
சிங்கள ஏயன்சியாக உள்ள நீங்கள் ஆண்ட சிங்க முகமூடியை கழற்றி எறிந்து விட்டு முதலில், மனிதனாக மனித பண்புடன் வாழ முற்படுங்கள் மிஸ்டர் சுமந்திரன் .
புலிகள் காலத்தில் நீங்கள் எங்கு இருந்தீர்கள் ,கதிர்காமர் உங்கள் மாமா என்கின்ற விடயத்தை கூற மறைப்பது ஏன் என்பதை தெரிவியுங்கள் …?
கதிர்காமர் என் மாமா என்பதை நீங்கள் ஏற்கவிளையா..? அல்லது அது பொய்யா ?அதனையும் பகிரங்க வெளியில் பேசலாமே அப்போது நீங்கள் யார் என்பது மக்களுக்கு தெளிவாக புரியும் .
Grid
கோடி மோசடி பணம் திருடிய 500 கோடி தம்பதிகள் கைது
கோடி மோசடி பணம் திருடிய 500 கோடி தம்பதிகள் கைது
கோடி மோசடி பணம் திருட்டு அம்பலம் ,500 கோடி கொள்ளையடித்த தம்பதிகள் கைதுசெய்ய பட்டுள்ளனர் .
பிரமிட் திட்டத்தின் கீழ் இந்த மோசடியில் தம்பதிகள் ஈடுபட்டனர் என குற்றம் சாட்ட பட்டுள்ளது .
மோசடி பணம் கொள்ளையில் ஈடுபட்ட தம்பதிகள் மறைந்திருந்த நிலையில் இவர் கைது செய்ய பட்டுள்ளனர் .
இந்த மோசடி தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்ட நிலையில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது .
செங்கடலில் எரியும் கப்பல் சிக்கிய இலங்கை இந்தியர்கள்
செங்கடலில் எரியும் கப்பல் சிக்கிய இலங்கை இந்தியர்கள்|ஹவுதிகள் கடும் தாக்குதல்
செங்கடலில் பயணித்த எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் கப்பல் எரிகிறது ,செங்கடலில் பயணித்த இந்த கப்பலில் இலங்கை இந்தியர்கள் சிக்கியுள்ளனர் .
செங்கடலில் எரியும் இந்த கப்பலில் சிக்கிய இலங்கை இந்தியர்கள்
சிக்கியுள்ளனர் .
ஹவுதிகள் கடும் தாக்குதல் காரணமாக கப்பல் போக்குவரத்து பட்டுள்ளது .






































