இஸ்ரேல் டவர் முகாம் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்
இஸ்ரேல் டவர் முகாம் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்
இஸ்ரேல் டவர் முகாம் மீது ஹிஸ்புல்லா இராணுவம் கடும் தாக்குதல் நடத்தியுள்ளது .
கோலன் குன்று மேல் அமைந்துள்ள இந்த இராணுவ முகாம் பாரிய சேதங்களை உள்ளாகியுள்ளதாக ,தாக்குதலை நடத்திய ஹிஸ்புல்லா அமைப்பினர் அறிவித்துள்ளனர் .
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையில் போர் வெடித்த முதல் இன்று வரை ,இஸ்ரேல் இராணுவ தளங்கள் , ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகளை இலக்கு வைத்து கடும் தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளமை குறிபிட தக்கது .
காசாவில் இருந்து இராணுவம் விலகாது இஸ்ரேல்
காசாவில் இருந்து இராணுவம் விலகாது இஸ்ரேல்
காசாவில் இருந்து இஸ்ரேல் இராணுவம் விலகாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுமுழங்கியுள்ளார் .
இராணுவ பெண்கள் விடுவிக்க நடவடிக்கை ,
ஹமாஸ் இசுரேல் பேச்சுக்கள் ஆரம்பமாகிறது ,
ரஷ்யா உக்ரைன் மீது கடும் தாக்குதல் எரியும் உக்ரைன்
ரஷ்யா உக்ரைன் மீது கடும் தாக்குதல் எரியும் உக்ரைன்
ரஷ்யா உக்ரைன் கார்கீவ் பகுதி மீது விமானம் மூலம் கடும் தாக்குதல் நடத்தியதில் ,தொழில் துறை நிலையங்கள் எரிந்த வண்ணம் உள்ளது .
ரஷ்யா கெமிக்காசிகள் விமானம் நடத்திய தாக்குதலில் இந்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
ரஷ்யா உள்ளே நுழைந்து உக்ரைன் விமானங்கள் நடத்திய தாக்குதலை அடுத்தே , அதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலை ரஷ்யா உக்ரைன் பகுதிகளை குறிவைத்து நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ குண்டுகளை வீசி தாக்குதல்
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ குண்டுகளை வீசி தாக்குதல்
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ எடையுள்ள குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக பிரிட்டன் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .
ஜனவரி 18 ஆம் திகதி பாலஸ்தீனம் காசா பகுதியில் இஸ்ரேலை இராணுவம் வீசிய MK83 bomb guided by a GBU32,குண்டுகள் சுமார் ஆயிரம் கிலோ எடை கொண்டவை என அந்த மருத்துவர்கள் தெரிவித்துளள்னர் .
பாலஸ்தீனம் காசாவில் தொடர்ந்து பணியாற்றி வரும் பிரிட்டன் மருத்துவார்களே இந்த பகீர் தகவலை தெரிவித்துள்ளனர் .
ஐநா உடனடியாக விசாரணை நடத்தி இந்த குண்டு யார் வழங்கியது என்பதை கணடறிய வேண்டும் என வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .
வட்டுவாகல் பாலத்தில் கண்ணிவெடிகள் படம் உள்ளே
உடப்பில் படம் காட்டிய மீன்பிடி அமைச்சர் படம் உள்ளே
முல்லைத்தீவில் இந்திய ராணுவம் திருத்தப்படும் பாலம்
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 100 குழந்தைகள் விடுவிப்பு
அமெரிக்க பாதுகாப்பு உத்தியை ரஷ்யா வரவேற்கிறது
கம்போடியா எல்லையில் தாய்லாந்து வான்வழித் தாக்குதல்
ஹிஸ்புல்லா ஏவுகணைகள் தாக்குதல் இஸ்ரேல் டவர் முகாம் புகைக்கிறது
ஹிஸ்புல்லா ஏவுகணைகள் தாக்குதல் இஸ்ரேல் டவர் முகாம் புகைக்கிறது
ஹிஸ்புல்லா ஏவுகணைகள் தாக்குதல் இஸ்ரேல் டவர் முகாம் புகைக்கிறது ,
ஹிஸ்புல்லா ஏவுகணை மழைக்குள் நனையும் இஸ்ரேல் முகாம்கள்
காசாவுக்குள் நுழையும் லொறிகளிடம் 5000 பறிக்கும் எகிப்து உளவுத்துறை
காசாவுக்குள் நுழையும் லொறிகளிடம் 5000 பறிக்கும் எகிப்து உளவுத்துறை
காசாவுக்குள் நுழையும் உணவு லொறிகளிடம் 5000 டொலரை பறிக்கும் எகிப்து உளவுத்துறை தகவல் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
பாலஸ்தீனம் காஸாவுக்குள் எகிப்தும் வழியாக நுழையும் உணவு லொறிகளிடம் , எகிப்தின் உளவுத்துறை ,
சரட்டிக்கு என தெரிவித்து லொறி ஒவொன்றுக்கும் ஐந்து ஆயிரம் அமெரிக்கா டொலர்களை வசூலிப்பதாக ,புதிய தகவல் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீன மக்களை காப்பாற்ற வேண்டும் ஐநா திடீர் குத்துகரணம்
பாலஸ்தீன மக்களை காப்பாற்ற வேண்டும் ஐநா திடீர் குத்துகரணம்
பாலஸ்தீன மக்களை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என ஐநா திடீர் குத்துகரணம் அடித்துள்ளது .
சர்வதேச நீதிமன்றம் பாலஸ்தீன மக்களை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்த விதிகளின் அடைப்படையில் ,இந்த நகர்வு மேற்கொள்ள பட வேண்டும் என ஐநா தெரிவித்துள்ளது
இஸ்ரேல் தொடர்ந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தி மிக பெரும் இனப்படுகொலையை நடத்திய வண்ணம் உள்ளது .
அதனால் தொடர்ந்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது ,என்கின்ற நிலையில் ஐநா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
இஸ்ரேல் ஹமாஸ் கடும் மோதல்|புல்டோசர் டாங்கிகள் அழிப்பு
இஸ்ரேல் ஹமாஸ் கடும் மோதல்|புல்டோசர் டாங்கிகள் அழிப்பு
இஸ்ரேல் ஹமாஸ் படைகளிற்கு இடையில் கடும் மோதல்.
பாலஸ்தீனம் காசாவில் இஸ்ரேல் இராணுவ புல்டோசர் டாங்கிகள் அழிப்பு ,
வெடித்து பறந்த கடும் யுத்தம் ,
பாலஸ்தீனம் காஸாவில் 174 மக்கள் பலி இஸ்ரேல் இராணுவம் கோர தாக்குதல்
பாலஸ்தீனம் காஸாவில் 174 மக்கள் பலி இஸ்ரேல் இராணுவம் கோர தாக்குதல்
பாலஸ்தீனம் காஸாவில் 174 மக்கள் பலியாகியுள்ளனர் , இஸ்ரேல் இராணுவம் நடத்திய கோர தாக்குதல் காரணமாக பாலஸ்தீனம் காசாவில் இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது
பாலஸ்தீனம் இஸ்ரேல் போர் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை 25,000 பலியாகியும் 63,000 க்கு மேற்பட்ட காயாமடைந்துள்ளனர் .
இஸ்ரேல் அரச இராணுவம் பாலஸ்தீனம் காசா பகுதியில் நடத்தி வரும் தாக்குதலில் , முற்றாக சுடுகாடாகியுள்ளது .
மக்கள் அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளனர் ,அவ்வாறு அகதிகளாக ஓடும் மக்களையே துரத்தி கேடுகெட்ட இஸ்ரேல் இராணுவம் இனப்படுகொலை புரிந்த வண்ணம் உள்ளது
ஐவர் படுகொலை – இரண்டு பெண்கள் கைது
ஐவர் படுகொலை – இரண்டு பெண்கள் கைது
பெலியத்த பொலிஸ் பிரிவில் தெற்கு அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (29) காலை ரத்கம பிரதேசத்தில் ஹக்மன பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது குறித்த இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐவர் படுகொலை – இரண்டு பெண்கள் கைது
கைது செய்யப்பட்டவர்கள் புஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 23 மற்றும் 33 வயதுடையவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிகளும் குறித்த இரு பெண்களில் ஒருவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் கராப்பிட்டிய பிரதேசத்தில் இருந்து புஸ்ஸ பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
ஹக்மன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணிக்கு நீதிமன்றம் உத்தரவு
நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணிக்கு நீதிமன்றம் உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது.
இதன்படி, கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளர் முஜிபர் ரஹ்மான், மத்திய கொழும்பு அமைப்பாளர் அப்சரா அமரசிங்க, கட்சியின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேற்குறிப்பிட்ட பிரதிவாதிகள் மற்றும் அவர்களைப் பின்பற்றுபவர்கள் மாளிகாவத்தை பொலிஸ் பிரிவில் உள்ள முஸ்லிம் மயானத்திற்கு அருகில் இருந்து பிரதீபா மாவத்தை, ஜயந்த வீரசேகர மாவத்தை, மில்டன் பெரேரா மாவத்தை மற்றும் ஜும்மா சந்தி வழியாக சங்கராஜ சுற்றுவட்டத்தின் ஊடாக பயணிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது
மஹிந்த மைத்திரிக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை
மஹிந்த மைத்திரிக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை
2018 ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பில் நீதிமன்றில் சாட்சியமளிக்குமாறு பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு அழைப்பாணை அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மனு தொடர்பான அடிப்படை சமர்ப்பணங்களை பரிசீலித்த எஸ். துரைராஜா, குமுதுனி விக்கிரசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன் பின்னர், குறித்த மனுவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் தீர்மானித்ததுடன், சமூக செயற்பாட்டாளர் ஒஷல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் சுகாதார ஊழியர்கள்
வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் சுகாதார ஊழியர்கள்
தமது பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படாவிட்டால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சுகாதார ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி இலங்கை திரும்பியவுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என அறிவித்த போதிலும் இதுவரையில் நடைபெறவில்லை என சுகாதார ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக கொழும்பை சூழவுள்ள வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்றைய தினம் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
மாணவர்களுக்கு பாடசாலை முக்கிய அறிவிப்பு
மாணவர்களுக்கு பாடசாலை முக்கிய அறிவிப்பு
மாணவர்களுக்கு பாடசாலை முக்கிய அறிவிப்பு ரத்துச்செய்யப்பட்ட உயர்தர விவசாய விஞ்ஞான வினாத்தாளுக்குப் பதிலாக நடைபெறவுள்ள புதிய
பரீட்சைக்குத் தோற்றுவதற்கான அனுமதி அட்டையை www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும், அது கிடைக்காத பட்சத்தில் இணையத்தளத்திற்கு பிரவேசித்து அனுமதி அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், பரீட்சார்த்திகள் இரத்து செய்யப்பட்ட பரீட்சைக்கு தோற்றிய அதே பரீட்சை நிலையத்தில் புதிய வினாத்தாளுக்கு தோற்றினால், அனுமதி அட்டை தேவையில்லை என்றும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு உயர்தர விவசாய வினாத்தாள் கசிந்துள்ளதாக தெரியவந்ததையடுத்து, வினாத்தாளை முழுமையாக ரத்து செய்ய பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்தது.
அதன்படி அந்த பாடத்தை மட்டும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி விசேட பரீட்சையாக நடத்த திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விவசாய வினாத்தாளின் இரண்டாம் பகுதி காலை 08.30 மணி முதல் 11.40 மணி வரையிலும், முதல் பகுதி பிற்பகல் 01 மணி முதல் 3 மணி வரையிலும் நடைபெறும்.
மேலதிக தகவல்களை பரீட்சை திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
களனி நிர்வாக கட்டிடம் மாணவர்களால் முற்றுகை
களனி நிர்வாக கட்டிடம் மாணவர்களால் முற்றுகை
களனி பல்கலைக்கழகத்தில் சுமார் 350 மாணவர்கள் அடங்கிய குழுவொன்று தற்போது பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர்களின் பல கோரிக்கைகளை முன்வைத்து, நேற்று (29) இரவு பல்கலைக்கழகத்திற்கு அருகில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டு போராட்டத்தைக் கலைத்தனர்.
இந்த போராட்டம் காரணமாக களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதி முற்றாக தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரிசி இறக்குமதி செய்யப்படமாட்டாது
அரிசி இறக்குமதி செய்யப்படமாட்டாது
அரிசி தேவையில் இலங்கை தன்னிறைவு பெற்றுள்ளதால், 2024இல் அரிசி இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டில் இலங்கை தன்னிறைவடையும் வகையில், நெல், சோளம், உருளைக்கிழங்கு மற்றும் மிளகாய் பயிர்களுக்கு முன்னுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர,
“கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு என்ற வகையில், இந்த ஆண்டு விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அபிவிருத்திக்கான இலக்கு நோக்கிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
2023 ஆம் ஆண்டில், நாட்டில் சிறு போகத்திலும் பெரும் போகத்திலும் உரங்களை கொள்வனவு செய்வதற்கு நிதி மானியங்களுக்காக சுமார் 22 பில்லியன் ரூபாவை செலவிட்டோம். அத்துடன் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் 13 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.
அரிசி இறக்குமதி செய்யப்படமாட்டாது
அதன்படி 2022ஆம் ஆண்டு 8 மெட்ரிக் டொன் அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட போதிலும் 2023ஆம் ஆண்டு அரிசி இறக்குமதி செய்யப்படவில்லை. நம் நாட்டு விவசாயிகள் உற்பத்தி செய்த அரிசியை இந்த நாட்டு மக்கள் வருடம் முழுவதும் உட்கொண்டார்கள் என்றே கூற வேண்டும். நெருக்கடியான நிலையிலும், அரிசியில் தன்னிறைவு பெற்றுள்ளதால், இந்த ஆண்டு அரிசியை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை.
கடந்த ஆண்டைப் போலவே வறட்சி மற்றும் வெள்ளத்தால் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டது. வறட்சியால் 65,000 ஏக்கரும், கனமழையால் 100,000 ஏக்கரும் சேதமடைந்துள்ளன. வறட்சியினால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் 1,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. சுமார் 700 மில்லியன் ரூபா ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கனமழையால் பாரிய அளவில் மரக்கறிப் பயிர்கள் அழிந்ததே மரக்கறி விலை உயர்வுக்கு காரணமாகும். சில விவசாயிகள் ஒரே விவசாய நிலத்தில் பலமுறை காய்கறி விதைகளை பயிரிட்டனர். ஆனால் அவை மழையால் அழிந்துவிட்டன. ஆனால், விவசாயிகளுக்கு நாங்கள் வழங்கிய “நெட் ஹவுஸ்’களில் பயிர் செய்தததால், ஓரளவுக்கு மரக்கறிகள் சந்தைக்கு வந்தன.
இன்னும் இரண்டு மாதங்களில் மரக்கறிகளின் விலை இயல்பு நிலைக்குத் திரும்பும். 2024 ஆம் ஆண்டில், நமது தேசிய நுகர்வு இலக்கை அடைய நெல், சோளம், உருளைக்கிழங்கு மற்றும் மிளகாய் ஆகிய 4 வகையான பயிர்களின் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஏனைய பயிர் உற்பத்திகளை ஊக்குவிப்பதோடு, இந்த 4 வகைப் பயிர்களை முக்கிய இலக்காகக் கொண்டுள்ளோம்.
பெரிய வெங்காய பயிர்ச் செய்கையுடன், சின்ன வெங்காய உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. எனவே, இந்த ஆண்டு மீண்டும் சின்ன வெங்காய பயர்ச் செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன்படி, மொணராகலை தெலுல்ல, யாழ்ப்பாணம் மற்றும் குருநாகல் மொரகொல்லாகம, நியந்தகம ஆகிய இடங்களில் சின்ன வெங்காயச் செய்கையை பிரபலப்படுத்த தீர்மானித்துள்ளோம்.
இதற்கு இணையாக பெருந்தோட்டத் துறையில் பல முக்கிய தீர்மானங்களை இவ்வருடம் நடைமுறைப்படுத்துகின்றோம். அதன் முதல் கட்டத்தை கடந்த ஜனவரி 1ஆம் திகதி முதல் ஆரம்பித்துள்ளோம். அதன்படி, தேயிலை கொழுந்துகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக பி 60 கொள்கை அமுல்படுத்தப்பட்டது.
மேலும், தேயிலை, இறப்பர் மற்றும் தென்னைப் பயிர்ச்செய்கைக்கு இரண்டு அரசாங்க உர நிறுவனங்களின் மூலம் உரங்களை மானிய விலையில் வழங்கும் திட்டத்தையும் ஆரம்பிக்க உள்ளோம். இதன் கீழ் தேயிலைக்காக தயாரிக்கப்பட்ட விசேட உரம், மானிய விலையில் வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டது.
தேயிலைப் பயிர்ச்செய்கையின் விளைச்சலை அதிகரிப்பதற்காக, அனைத்து தேயிலை உரங்களையும் அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களான கொமர்ஷல் உர நிறுவனம் மற்றும் லங்கா உர நிறுவனம் மூலம் உற்பத்தி செய்ய விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஈரானை சத்தியமா தாக்க மாட்டோம் அமெரிக்கா
இஸ்ரேல் துறைமுகத்தில் திடீர் தாக்குதல் இராணுவம் காயம்
இஸ்ரேல் துறைமுகத்தில் திடீர் தாக்குதல் இராணுவம் காயம்
இஸ்ரேல் துறைமுகத்தில் நுழைந்து திடீர் தாக்குதல் இராணுவம் காயம் .
வெடித்து சிதறிய ,ஏவுகணைகள் அலறிய சைரோன்கள் ,
நிலை குலைந்த மத்திய இசுரேல்
மாவனல்லையில் தீ விபத்து – 30 கடைகள் நாசம்
மாவனல்லையில் தீ விபத்து – 30 கடைகள் நாசம்
மாவனல்லை நகரின் பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (28) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 30 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
விரைந்து செயல்பட்ட பொலிஸார், மாவனல்லை பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
பழங்கள், ஜவுளி மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் பல கடைகள் இந்த தீயில் எரிந்து நாசமானது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதுடன், மாவனெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு
பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு
யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க இன்று (29) பதவியேற்றார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்பார்.
இதன்போது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் கலந்து கொண்டனர்.
இதுவரை காலமும் கடமையாற்றிய மஞ்சள செனரத் பதவிஉயர்வு பெற்று சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது











































