நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை பொலிசாருக்கு நெத்தியடி வழங்கிய நீதிமன்றம்

இலங்கை பொலிசாருக்கு நெத்தியடி வழங்கிய நீதிமன்றம்

யுக்திய நடவடிக்கை கீழ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான வாகனங்களை அவற்றின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வாகனங்களை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளுக்கு அவகாசம் வழங்குமாறு விடுத்த கோரிக்கையை நிராகரித்து கடுவெல நீதவான் திருமதி சனிமா விஜேபண்டார இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கை பொலிசாருக்கு நெத்தியடி வழங்கிய நீதிமன்றம்

இந்தச் சொத்தை கையகப்படுத்துவதற்கு உயர் நீதிமன்றத்திடம் இருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முறையான உத்தரவுகளைப் பெறவில்லை என பிரதிவாதி சட்டத்தரணி நீதிமன்றில் கடும் ஆட்சேபனையை முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கடந்த வருடம் டிசெம்பர் மாதம் போதைப்பொருள் கடத்தல்காரரான ‘வெலிவிட்ட சுத்தா’ என்பவரின் சகோதரிக்கு சொந்தமான 5 சொகுசு பஸ்கள்,

நவீன கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கடுவெல பொலிஸார் கைப்பற்றி குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது.

லண்டனில் தமிழரின் புது காரை திருடி சென்ற திருடர்கள்
Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் தமிழரின் புது காரை திருடி சென்ற திருடர்கள்

லண்டனில் தமிழரின் புது காரை திருடி சென்ற திருடர்கள்

லண்டனில் தமிழரின் ஒருவரது புது காரை திருடி சென்ற திருடர்கள், மீள அதே இடம் வந்து திரும்பி பார்த்த பொழுது கார் திருடப்பட்டுள்ளது கண்டு அதிர்ந்த்து போயுள்ளார் அந்த .தமிழர்.

லண்டன் தொண்டன் கீற்று பகுதியில் தனது புது காரை பார்க்கிங் செய்துவிட்டு வேலைக்கு சென்றுள்ளார் .

மீள வேலை முடித்து வந்து பார்த்த பொழுது தமிழர் கார் காணாமல் போயுள்ளது .

36.000 பவுண்டுகளுக்கு வாங்க பட்ட , காரை இழந்து அவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார் .

கார் திருட பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தெரிவிக்க பட்ட நிலையில் போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன . .

வழமையாக எந்த இடத்தில் காரை பார்க்கிங் செய்கிறார் என்பதை கவனித்து வைத்த திருடர்கள் தமது கைவரிசையை காண்பித்துள்ளனர் .

இது போன்று உங்களுக்கும் இடம்பெறலாம் எச்சரிக்கையுடன் செயல் படுங்கள் லண்டன் .தமிழர்களே

வீடியோ

ஹவுதிகள் தாக்குதல் செங்கடலில் எரியும் பிரிட்டன் எண்ணெய் கப்பல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹவுதிகள் தாக்குதல் செங்கடலில் எரியும் பிரிட்டன் எண்ணெய் கப்பல்


ஹவுதிகள் தாக்குதல் செங்கடலில் எரியும் பிரிட்டன் எண்ணெய் கப்பல்

ஹவுதிகள் தாக்குதல் செங்கடலில் எரியும் பிரிட்டன் எண்ணெய் கப்பல் .


இந்தியா நோக்கி சென்று கொண்டிருந்த பிரிட்டன் ஒயில் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல் .


படகுடமாகும் செங்கடல் கப்பல் போக்குவரத்து ,

வீடியோ

பிரபல வர்த்தகரின் வீட்டை உடைத்து திருட்டு
Posted in இலங்கை செய்திகள்

தங்க ஆபரணங்களை திருடிய இளைஞர் கைது

தங்க ஆபரணங்களை திருடிய இளைஞர் கைது

வவுனியா நகர சபை மைதானத்தில் நடைப் பயிற்சிக்கு வருகை தந்தவரின் நகைகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் 32 வயது இளைஞர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நடைப் பயிற்சிக்காகக் கடந்த சில நாட்களாக வவுனியா நகர சபை மைதானத்துக்கு வந்து சென்றுள்ளார். வழமை போன்று நேற்றுமுன்தினம் மாலையும் நகர சபைக்கு அவர் வந்துள்ளார்.

தங்க ஆபரணங்களை திருடிய இளைஞர் கைது

இதன்போது தான் அணிந்திருந்த சங்கிலி, காப்பு உள்ளிட்ட 4 பவுண் தங்க ஆபரணங்களை நகர சபை வளாகத்தில் உள்ள மோட்டடார் சைக்கிள் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்ட தனது மோட்டார் சைக்கிள் இருக்கைக்குள் வைத்து பூட்டி விட்டு நடைப் பயிற்சிக்குச் சென்றுள்ளார்.

நடைப் பயிற்சி முடிந்த பின்னர் தனது மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக அந்தப் பெண் வந்தபோது அவரது மோட்டார் சைக்கிள் இருக்கை உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் திருடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது

யாழ் சிறைச்சாலைக்கு சென்ற ஜீவன்
Posted in இலங்கை செய்திகள்

யாழ் சிறைச்சாலைக்கு சென்ற ஜீவன்

யாழ் சிறைச்சாலைக்கு சென்ற ஜீவன்

மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிலையானதொரு தீர்வை காணுமாறு இந்திய அரசிடமும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்

பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள 43 தமிழக மீனவர்களை அமைச்சர் நேரில் சென்று சந்தித்தார். அவர்களிடம் சுகம் விசாரித்ததுடன், அவர்களுக்குள்ள பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் கூறியவை வருமாறு,

“ யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 43 தமிழக மீனவர்களை சந்தித்தேன். அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது பற்றி எடுத்து கூறினேன். அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டனர். 43 மீனவர்களில் இருவர் கடத்தல்

சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளனர். ஏனைய 41 மீனவர்களுக்கும் இலங்கை அரசு மூலமாக அல்லது, எம்மால் முடிந்த உதவிகளை நிச்சயம் செய்வோம். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் அவர்கள் விடுதலை

செய்யப்படுவார்கள் என நம்புகின்றேன். இலங்கை பொலிசார் தம்மை நன்றாக நடத்துகின்றனர் என மீனவர்கள் தெரிவித்தனர்.

யாழ் சிறைச்சாலைக்கு சென்ற ஜீவன்

வடக்கில் உள்ள மீனவர்களும் தமிழர்கள், போரால் பாதிக்கப்பட்டவர்கள், சிறிய படகுகளை வைத்துக்கொண்டுதான் அவர்கள் தமது வாழ்க்கையை கொண்டு நடத்துகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது.

தமிழக மீனவர்கள் ரோலர் படகுகளைப் பயன்படுத்தி அதிகளவான மீன்களை பிடிக்கின்றனர், இலங்கை கடல் வளமும் சேதமடைகின்றது. இது கடல்சார் சட்டங்களையும் மீறும் செயலாகும். மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

காணுமாறு இந்திய அரசிடமும், இலங்கை ஜனாதிபதியிடமும் நாம் கோரிக்கை முன்வைத்துள்ளோம்.” – என்றார்.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

நிந்தவூரில் காணாமல் போன மாணவர்களின் ஒருவரின் சடலம் மீட்பு

நிந்தவூரில் காணாமல் போன மாணவர்களின் ஒருவரின் சடலம் மீட்பு

கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போன மாணவர்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓலுவில் நிந்தவூர் எல்லைக் கடலோரங்களில் விளையாட்டில் ஈடுபட்ட 8 மாணவர்களில் இருவர் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போன சம்பவம் நேற்று (16) மாலை அப்பகுதியில் சோக நிலையயை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காணாமல் போன சூர்தின் முஹம்மட் முன்சிப் என்ற மாணவனின் உடல் இன்று காலை ஒலுவில் பகுதியில் கரையோதுங்கியுள்ளது. மற்றுமொரு மாணவன் தொடர்பான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நிந்தவூரில் காணாமல் போன மாணவர்களின் ஒருவரின் சடலம் மீட்பு

சம்பவ தினம் மாளிகைக்காடு – சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த இரண்டு மாணவர்களே பிரதேச கடலில் புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

13-15 வயதுக்குட்பட்ட 08 பாடசாலை மாணவர்கள் தொழுகையை முடித்துக்கொண்டு துவிச்சக்கர வண்டியில் நிந்தவூர்- ஒலுவில் எல்லை கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன் இரண்டு மாணவர்கள் கடல் அலை உள்ளிழுத்து சென்றுவிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தவிர ஏனைய ஆறு மாணவர்களிடம் நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரைத்த மாவை மீள அரைக்கும் செயற்பாட்டில் தமிழ்க் கட்சிகள்
Posted in இலங்கை செய்திகள்

சாந்தன் எந்த நிலையிலும் இலங்கைக்கு வந்து இறங்கலாம்

சாந்தன் எந்த நிலையிலும் இலங்கைக்கு வந்து இறங்கலாம்

சாந்தன் எந்த நிலையிலும் இலங்கையில் வந்து இறங்கலாம் என்ற கட்டத்தில்தான் இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் வினாவிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சாந்தன் எந்த நிலையிலும் இலங்கையில் வந்து இறங்கலாம் என்ற கட்டத்தில்தான் நிலைமை உள்ளது.

சாந்தனுடைய தாயார், சகோதரி, சகோதரன் உள்ளிட்டோர் என்னிடம் வந்து கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தனர்.

சாந்தன் எந்த நிலையிலும் இலங்கைக்கு வந்து இறங்கலாம்

சாந்தனும் தன்னுடைய வழக்கறிஞருக்கூடாக ஒரு கோரிக்கையை எனக்கு எழுத்தில் அனுப்பியுள்ளார். இவற்றை வைத்து அமைச்சரவையில் இது தொடர்பில் பேசியிருந்தேன்.

அதற்கு ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் உள்ளிட்டோர் அவர் இங்கு வருவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என தெரிவித்தனர்.

இது தொடர்பில் சம்மந்தப்பட்டவர்களிற்கு அறிவித்துள்ளோம். அங்கு அதற்கான நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கிறது.

அவரை அவரது உறவினர்கள் எந்த நேரத்திலும் அழைத்து வரலாம் என தெரிவித்தார்.

அரைத்த மாவை மீள அரைக்கும் செயற்பாட்டில் தமிழ்க் கட்சிகள்
Posted in இலங்கை செய்திகள்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்காலிக தீர்வு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்காலிக தீர்வு

யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் நிரந்தர புகையிரத கடவை சமிஞ்ஞை விளக்கு அமைக்கப்படும் வரை புகையிரத கடவையில் ஏற்படும் அனர்த்தங்களை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்காலிக தீர்வை பெற்றுக் கொடுத்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் இணுவில் பகுதியில் ஏற்பட்ட புகையிரதத்துடன் வான் மோதியதில் ஏற்பட்ட விபத்து காரணமாக சிறு குழந்தை உள்ளிட்ட இருவர் பலியாகி இருந்தனர்.

இந்நிலையில் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (16) களவிஜயம் மேற்கொண்டு நிலைமைகளை பார்வையிட்டிருந்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்காலிக தீர்வு

நிலைமைகளை ஆராய்ந்த அமைச்சர் துறைசார் திணைக்களத்துடன் கலந்துரையாடி சமிஞ்ஞை விளக்கை பொருத்துவதற்கான் நடவடிக்கை மேற்கொண்டார்.

குறித்த நடவடிக்கை நடைபெறுவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் அதுவரை தற்காலிக ஏற்கபாடாக கிராமத்து இளைஞர் இருவரை காவல் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டதுடன் அதற்கான மாதாந்த கொடுப்பனவை கட்சி நிதியில் இருந்து வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

என்னால் உக்ரேன்- ரஷ்யா போரை நிறுத்த முடியும்- டொனால்ட் ட்ரம்ப்
Posted in உலக செய்திகள்

டொனால்ட் ட்ரம்பிற்கு 354.9 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம்

டொனால்ட் ட்ரம்பிற்கு 354.9 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நியூயோர்க்கில் நடந்த சிவில் மோசடி விசாரணைக்குப் பிறகு 354.9 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வட்டியும் சேர்த்து, அவர் குறைந்தது $453.5m அமெரிக்க டொலர் அபராதம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் டிரம்ப் நியூயோர்க்கில் வர்த்தகம் செய்ய மூன்று ஆண்டுகளுக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அவரது மகன்களான எரிக் மற்றும் டொனால்ட் ஜூனியர் இரண்டு ஆண்டுகளுக்கு இதேபோன்ற தடைகளைப் பெற்றுள்ளனர்.

சுற்றி வளைக்க படும் இஸ்ரேல் குவிக்க படும் படைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

சுற்றி வளைக்க படும் இஸ்ரேல் குவிக்க படும் படைகள்


சுற்றி வளைக்க படும் இஸ்ரேல் குவிக்க படும் படைகள்

சுற்றி வளைக்க படும் இஸ்ரேல் குவிக்க படும் படைகள் .


வரலாற்று பெரும் தாக்குதல் நடத்த தயாராகும் இஸ்ரேல் எதிரிகள் ,
மாறும் ஆடு களம் ,

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

பொது கழிப்பறை கட்டணம் வெளியான அறிவிப்பு

பொது கழிப்பறை கட்டணம் வெளியான அறிவிப்பு

கொழும்பு, பெஸ்டியன் மாவத்தையில் உள்ள தனியார் பஸ் நிலையத்தில் கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு அறவிடப்படும் கட்டணத்தில் மாற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு வசூலிக்கப்பட்ட கட்டணம் 20 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

பொது கழிப்பறை கட்டணம் வெளியான அறிவிப்பு

இந்த நிலையில், கழிப்பறை கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்தார்.

அதன்படி, கழிப்பறைகளை பராமரிக்கும் தரப்பினருக்கு, உயர்த்தப்பட்ட கட்டணத்தை முந்தைய விலைக்கு மாற்றியமைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதன்படி நேற்று பிற்பகல் முதல் 20 ரூபாய் கட்டணம் அறவிடப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா தலைவர் கடும் எச்சரிக்கை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா தலைவர் கடும் எச்சரிக்கை


இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா தலைவர் கடும் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா தலைவர் கடும் எச்சரிக்கை .


அமெரிக்காவுக்கு எதிராக தயாராகும் புதிய போர் அரங்கு ,இஸ்ரேலினால் பொறியில் சிக்கும் அமெரிக்கா

வீடியோ

அமெரிக்கா விமான தளமீது வெடிகுண்டு விமானங்கள் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது தாக்குதல்

அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது தாக்குதல்

அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது தாக்குதல் ஈரான் குழுக்கள் ஏவுகனை தாக்குதல் ,சிரியா ஈராக் அமெரிக்கா இராணுவ தளங்கள் பற்றி எரிகிறது .

சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் உள்ள அமெரிக்கா இராணுவ தளங்களை இலக்கு வைத்து ,ஈரான் ஆதரவு குழுக்கள் ஏவுகணை மற்றும் விமான வழியூடாக தாக்குதலை நடத்தியுள்ளன

சிரியா அமெரிக்கா இராணுவ தளம் மீது நாடத்திய தாக்குதலில் அமெரிக்கா இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது .

அதே போன்று ஈராக் பகுதியில் உள்ள அல் ஒமார் இராணுவ தளமும் தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளது .

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகள் செயலாற்றி வரு நிலையில் ,ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் உள்ள அமெரிக்கா இராணுவ தளங்கள் குறி வைத்து தாக்க பட்டு வருகின்றன .

இஸ்ரேலுக்கு உள்ளே துப்பாக்கி சண்டை பலர் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்கு உள்ளே துப்பாக்கி சண்டை பலர் காயம்


இஸ்ரேலுக்கு உள்ளே துப்பாக்கி சண்டை பலர் காயம்

இஸ்ரேலுக்கு உள்ளே துப்பாக்கி சண்டை பலர் காயம் .


இஸ்ரேல் பாலஸ்தீன போர் அரங்கில் புதிய மாற்றம்
இஸ்ரேல் நகரங்களுக்கும் துப்பாக்கி சண்டைகள் மக்கள் மத்தியில் பதட்டம்

வீடியோ

ரஷ்யா எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி பலி போட்டு தள்ளிய புட்டீன்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி பலி போட்டு தள்ளிய புட்டீன்

ரஷ்யா எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி பலி போட்டு தள்ளிய புட்டீன்

ரஷ்யா எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் பலியாகியுள்ளார் ,அவரை போட்டு தள்ளிய விளாதிமீர் புட்டீன்.

அலெக்ஸி நவல்னி ரஷ்யாவின் எதிர் கட்சி தலைவராக விளங்கி வந்தார் ,இவர் ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புட்டீனுக்கு எதிராக செயல் பட்டு வந்தார் .

தன்னை விட மக்கள் செல்வாக்கை பெற்று வளர்ந்து வருவதை ஜீரணிக்க முடியாத விளாதிமீர் புட்டீன் அவரை சிறையில் அடைத்தார் .

சிறையில் நடை பயிற்சியில் ஈடு பட்டு கொண்டிருந்த அவர் ,திடிரென நோய் வாய்ப்பட்டு இறந்துள்ளதக தெரிவிக்க பட்டுள்ளது .

47 வயதான இவரது மரணம் ஆதரவாளர்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .இவரது மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

வீடியோ

ஏவுகணை ஏற்றி சென்ற ஆயுத கப்பல் சிறைபிடிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஏவுகணை ஏற்றி சென்ற ஆயுத கப்பல் சிறைபிடிப்பு

ஏவுகணை ஏற்றி சென்ற ஆயுத கப்பல் ஒன்று சிறைபிடிப்பு ,
அமெரிக்கா ஈரான் கடும் மோதல் ,ஆயுத கப்பல் சிக்கியதால்
போர் பதட்டம் அதிகரிப்பு .

வீடியோ

கொத்மலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த யுவதி
Posted in இலங்கை செய்திகள்

கொத்மலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த யுவதி

கொத்மலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த யுவதி

படத்தை பார்க்கும் போது, யுவதியொருவர் தொங்கிக்கொண்டிருப்பதை போல தெரியும் எனினும், கதை வேறாகும்.

தலவாக்கலை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த யுவதியொருவர் தலவாக்கலை பிரதேச மக்கள் மற்றும் பொலிஸாரால் பெரும் பிரயத்தனத்து பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் தலவாக்கலை கூட்டுறவு தலைமை அலுவலகத்துக்கு அருகாமையில் மிகவும் ஆழமான இடத்தில் இளம் பெண் வீழ்ந்துள்ளார், மேலும் அவர் நீர்த்தேக்கத்தில் தத்தளித்ததைக் கண்ட மக்கள் எடுத்த உடனடி நடவடிக்கையால் அவரது உயிரைக் காப்பாற்ற முடிந்தது.

கொத்மலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த யுவதி

ஒரு சிலர் நீர்த்தேக்கத்தில் குதித்து அவளைப் பிடித்தனர், நீர்த்தேக்கத்துக்கு மேலே நின்றிருந்தவர்கள் கயிறுகளை போட்டு, மிகவும் சிரமப்பட்டு கரைக்கு இழுத்தனர், பின்னர் அவர் சிகிச்சைக்காக லிந்துலை பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அக்கரபத்தன பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி ஒருவர் நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்து மீட்கப்பட்டுள்ளார். வேலை ஒன்று இல்லையே என யோசித்துகொண்டே நீர்த்தேக்கத்துக்கு ஓரமாக சென்று கொண்டிருந்த போதே, நீர்த்தேக்கத்துக்குள் தவறி விழுந்துள்ளார்.

பயங்கரவாதிகள் விடுதலை புலிகள் சஜித் பிரமேதாசா முழக்கம்
Posted in இலங்கை செய்திகள்

சஜித் அணிக்கு தாவிய இருவர்

சஜித் அணிக்கு தாவிய இருவர்

ஐக்கிய மக்கள் சக்தியில் மேலும் இரண்டு அரசியல்வாதிகள் இணைந்துள்ளனர்.

காமினி திலகசிறி மற்றும் காமினி சில்வா ஆகியோர் இவ்வாறு சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவைத் தெரிவித்து கட்சியில் இணைந்துள்ளனர்.

இஸ்ரேல் இராணுவ அதிகாரி அவுட் கொத்தாக பலர் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவ அதிகாரி அவுட் கொத்தாக பலர் காயம்


இஸ்ரேல் இராணுவ அதிகாரி அவுட் கொத்தாக பலர் காயம்

இஸ்ரேல் பாலஸ்தீன காசா பகுதியில் இடம்பெற்ற போரில்
இஸ்ரேல் இராணுவ அதிகாரி அவுட் கொத்தாக பலர் காயம் .
ஹமாஸ் படைகள் அறிவிப்பு

வீடியோ

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

இரண்டு இராணுவம் பலி

இரண்டு இராணுவம் பலி

இருவேறு இடங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் பாதுகாப்பு படையை சேர்ந்த இரண்டு சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (15) மாலை பறயனாலங்குளம் பெரியகட்டு பகுதியில் மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற 26 வயதுடைய இராணுவ சிப்பாய் நீரில் மூழ்கி செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உடமயிலபிட்டிய தலாத்துஓயாவில் வசிக்கும் இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இதேவேளை, பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி 35 வயதான கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி அவர் உயிரிழந்துள்ளார்.

மேல் லுணுகம, மண்டாவளையில் வசிக்கும் கடற்படை சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.