போதைப் பொருளுடன் ஒருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

போதைப் பொருளுடன் ஒருவர் கைது

போதைப் பொருளுடன் ஒருவர் கைது

போதைப் பொருளுடன் ஒருவர் கைது ,ராகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வீதித்தடையை பயன்படுத்தி வாகனங்களை சோதனை செய்த போது போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் ராகம, வல்பொல பட்டலந்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சோதனைக்கு உட்படுத்திய காரில் 102 கிராம் 940 மில்லி கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 45 வயதுடைய ‘பாஸ் ரொஷான்’ என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் ராகம, கெண்டலியத்த பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபர் ஹெரோயின் கடத்தல் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.

போலீசார் நடத்திகிய விசேட சுற்று காவல் முற்றுகை தேடுதலில் இவ்விதமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட வண்னம் உள்ளனர் .

இலங்கையில் நாள்தோறும் இவ்விதமான குற்ற சத்துக்களின் அடிப்டையில் பலர் கைது செய்யப்பட்டு வருவது ,இலங்கை போதைவஸ்து நாடாக மாற்றம் பெற்றுள்ளதை காண்பிக்கிறது .

யாழில் வீடொன்று முற்றுகை
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வீடொன்று முற்றுகை

யாழில் வீடொன்று முற்றுகை

யாழில் வீடொன்று முற்றுகை ,யாழ்ப்பாணம் – கந்தர்மடம் மணல்தறை வீதிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வீடொன்றை முற்றுகையிட்டு வீட்டு உரிமையாளர், இரண்டு பெண்கள் மற்றொரு ஆண் என நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்த தலைமையிலான யாழ். மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

அதிகளவு பெண்கள் மற்றும் ஆண்கள்

சில நாட்களாக குறித்த வீட்டில் அதிகளவு பெண்கள் மற்றும் ஆண்கள் வந்து போவதாக பொலிஸ் புலனாய்வாளர்களுக்கு அந்தப் பகுதி ஊர்மக்களினால் தகவல் வழங்கபட்டுள்ளது.

இதன்போது நேற்று (09) வீட்டை முற்றுகையிட்ட வேளை இரு பெண்களும் ஆண் ஒருவரும் மற்றும் வீட்டின் உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்தனர்.

இதேவேளை மற்றொருவர் மதில் பாய்ந்து தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தப்பிச் சென்றவருடையதாக கருதப்படும் கைத்தொலைபேசியை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறன்றனர்.

பாராளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான்
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான்

பாராளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான்

பாராளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான் ,முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்ற உறுப்பினராக இன்று (10) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையிலேயே சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது.

டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதால் வெற்றிடமான ஐக்கிய மக்கள் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை நியமிக்க கட்சி தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் அறிவிப்பு கட்சி தாவல் ஆரம்பம்

இலங்கையில் இடம்பெறுவதாக திகதி அறிவிக்க பட்ட நிலையில் ,கட்சி தாகவும் டீல்கள் அதிக இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

அவ்வாறன கட்சி தாவும் காட்சிகளில் ஒன்றாகவே முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்ய பட்டுளளார் .

இலங்கையில் இவ்வாறு தேர்தல்கள் இடம் பெறும் காலங்களில் இடம்பெறும் அரசியல் பிரமுகர்களுக்கு வழங்க படும் டீல்கள் அடிப்படையில் பதவிகள் வழங்க படுகின்றன .

ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்தி பயணிக்க ரணில் தள்ள பட்டுளளார்

.அதனால் .இந்த பேரம்பேச்சுக்களுக்கு ரணில் தயாராகி வருகிறார் என்பதை இவை காண்பிக்கின்றன .

பிரான்சில் வீதியில் உறங்கும் தமிழர்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

பிரான்சில் வீதியில் உறங்கும் தமிழர்கள்

பிரான்சில் வீதியில் உறங்கும் தமிழர்கள்

பிரான்சில் வீதியில் உறங்கும் தமிழர்கள் மது போதைக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டுவர முடியா நிலையில் வீதியில் உறங்கும் பரிதாபம் .

இலங்கையில் இருந்து பிரான்சுக்கு வருகை தந்த தமிழர்கள் ,சிலர் மதுபோதைக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டுவர முடியா நிலையால் ,மனைவி ,பிள்ளைகளினால் துரத்த பட்ட நிலையில் வீதியில் உறங்குகின்றனர் .

வீதியில் உறங்கும் இந்த பிரான்ஸ் தமிழர்கள்

இவ்வாறு வீதியில் உறங்கும் இந்த பிரான்ஸ் தமிழர்கள் கண்ணுற்ற சில மக்கள் இவரக்ளுக்கு உதவிட முன் வந்துள்ளனர் .

அவ்வாறு உதவிட வந்தவர்கள் தமது கடைகள் ,நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ,கொடுத்துள்ளனர் .

பிரான்சில் வீதியில் உறங்கும் தமிழர்கள்

ஆனால் அங்குகூட இவர்களினால் ஒழுங்காக வேலைக்கு செல்ல முடியாது வேலையை விட்டு ஓட்டம் பிடித்துள்ளனராம் .

உடுப்புக்கள் கூட வாங்கி கொடுத்து ,உணவும் கொடுத்து வேலையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர் .

அவ்வாறன மனிதநேய முயற்சிகளை மக்கள் மேற்கொண்ட பொழுதும் , அதனை புறம் தள்ளி ,அரசு பணத்தை பெற்று ,அதில் குடித்து இவ்வாறு வீதியில் உறங்குகின்றனர் என்கின்ற குற்ற சாட்டை ,இவர்களை அறிந்தவர்கள் முன் வைக்கின்றனர் .

மது போதைக்கு அடிமையான தமிழர்கள்

இவர்களின் இந்த மது போதைக்கு அடிமையான ,அவர்களது மனைவி,பிள்ளைகள் ,உடன்பிறந்தவர்கள் யாவரும் , இவர்களினால் பெரும் துயருக்கு உள்ளாகியுள்ளனர் என்கின்ற விடயமும் வெளியாகியுள்ளது .

பிரான்சில் வீதியில் உறங்கும் தமிழர்கள்

ஆதாலால் பிரான்சுக்கு வருகை தந்து உலக நாடுகளை வியந்து பார்க்கும் அளவுக்கு நிமிர்ந்து நிற்கும் லைக்கா நிறுவனர் சுபாஷ்,

அவரும் இதே பிரான்ஸ் நாட்டில் குடியேறி பின்னர் இன்று பல கோடிகளுக்கு அதிபதியாக உள்ளார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் .

எனினும் இவர்களை நல்வழி படுத்தி ,சிறந்த முறையில் வாழவைக்க யாரவது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது மக்கள் விருப்பாகிறது .

ஏடன் வளைகுடாவில் எரியும் கப்பல்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஏடன் வளைகுடாவில் எரியும் கப்பல்கள்

ஏடன் வளைகுடாவில் எரியும் கப்பல்கள்

ஏடன் வளைகுடாவில் எரியும் கப்பல்கள் ஹவுதிகள் கப்பல் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளனர் .

தமது தாக்குதலுக்கு உள்ளான மூன்று கப்பல்களும் இஸ்ரேல் அரசுக்கு தொடர்பு பட்ட கப்பல்கள் என, ஏமன் ஹவுதி போராளிகள் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளனர் .

இஸ்ரேல் பாலஸ்தினம் போர்


இஸ்ரேல் பாலஸ்தினம் காஸாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெறுவதால் காசா மக்களுக்கு ஆதரவாக ,ஏடன் வளைகுடா பகுதி ஊடாக பயணிக்கும் இஸ்ரேல் கப்பல்களை இலக்கு வைத்து ,தாக்குதல் நடத்தி வருவதாக ஹவுதிகள் தெரிவித்துள்ளன .


அப்பாவி காசா மக்கள் மீதான போரை இஸ்ரேல் நிறுத்தினால் ,தமது செங்கடல் ,வழியாக பயணிக்கும் கப்பல்கள் மீதான தாக்குதல் நிறுத்த படும் என , ஹவுதிகள் அறிவித்துள்ளன.

இந்தியாவுக்கு சென்று கொண்டிருந்த கப்பல்

சரக்குகளை ஏற்றியவாறு இந்தியாவுக்கு சென்று கொண்டிருந்த கப்பல்கள் மீதே தாக்குதல் நடத்த பட்டுள்ளது .


இஸ்ரேல் காஸாவுக்கு இடையில் யுத்தம் ஆரம்பிக்க பட்ட நாள் முதலாக, இந்தியா நோக்கி செல்லும் கப்பல்கள் மீதே ,அதிகமான தாக்குதல் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
நில ஆக்கிரமிப்பில் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

நில ஆக்கிரமிப்பில் இலங்கை

நில ஆக்கிரமிப்பில் இலங்கை

நில ஆக்கிரமிப்பில் இலங்கை ,மகாவலி அபிவிருத்தியின் பெயரில் நில ஆக்கிரமிப்பு நிறுத்தக் கோரி போராட்டம்.


மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கொக்குதொடுவாய் கொக்கிளாய் கருநாட்டுக்கேணி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

 நில ஆக்கிரமிப்பில் இலங்கை


போராட்டமானது இன்று( வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.


மகஜர் கையளிப்பு


போராட்டத்தில் ‘தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிக்காதே’, ‘மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து’, ‘எமது வாழ்வாதாரத்தை பறிக்காதே’,

‘மகாவலி அபிவிருத்தி முல்லைத்தீவில் பௌத்த மயமாக்கலுக்கா’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இதனைத் தொடர்ந்து மகாவலி நில ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆளுநரின் செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

இலங்கை ஆளும் ரணில் விக்கிரமசிங்கா ஆட்சியில் கொண்டிருக்கும் ,தமிழர்களின் பூர்விக குடிகள் வசிக்கும் நில அபகரிப்புக்கு எதிராக மக்கள் நடத்துகின்ற்னர் .

வனஜீவராசிகளை ஏவி காணிகளை அபகரிப்பது , தமிழர்களை அச்சுறுத்தி பூர்விக மக்கள் வாழ்விடங்களில் சிங்கள மக்களை குடியேற்றுவது என்கின்ற நடவடிக்கையில் சிங்களம் ஈடுபட்டுள்ளதை இவை காண்பிக்கின்றன என ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார் .

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் பாலஸ்தீனம் ஹம்ஸ பொற்படைகள் அறிவிப்பு .

பாலஸ்தீனம் காசா மக்கள் விடுதலைக்கு போராடி வரும் ஹமாஸ் விடுதலை அமைப்பினர் ,இஸ்ரேல் ராணுவத்தின் உளவு விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

ஹமாஸ் போராளிகளை இந்த அறிவிப்பை இஸ்ரேல் இராணுவம் மறுத்துள்ளது ,அந்த விமானம் விபத்தில் சிக்கி வீழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது .

எகிப்தின் எல்லையோரமாக காணப்படும் ரபா சாலை

எகிப்தின் எல்லையோரமாக காணப்படும் ரபா சாலையை ஆக்கிரமித்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட 48 மணித்தியாலத்தில் இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

மற்றும் ஈரான் ஆதரவு அமைப்பின் ஒருங்கிணைந்த தாக்குதல் நடவடிக்கையின் ஒன்றாக காணப்படுகிறது .

மக்களை ஓட ஓட விரட்டி இஸ்ரேல் தாக்குதல்

அப்பாவி மக்களை ஓட ஓட விரட்டி இஸ்ரேல் தாக்குதலை நடத்தி பல்லாயிரம் மக்களை கொன்று குவித்து வருகிறது .

இவ்வாறன கால பகுதியில் இழப்புக்களை சந்தித்த வண்ணம் ,மக்கள் வலிகளை தாங்கிய படி தமது விடுதலை நோக்கி நகர்கிறது பாலஸ்தீன தேசம் .

தோல்வியை சந்தித்துள்ள இஸ்ரேல் இராணுவம் ஆயுத தளபாடம் மற்றும் ஆளணி இழப்பை சந்தித்து பெரும் தோல்வியில் உறைந்துள்ளது .

அந்த தோல்வியை ஜீரணிக்க முடியாத நிலையில் மக்களை கொன்று குவித்து ,அந்த மக்களை ஹமாஸுக்கு எஹிராக திசை திருப்பி விட்டுள்ளது குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
வெளிநாடுகளில் இராணுவ வேலைகளுக்கு விண்ணப்பம்
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாடுகளில் இராணுவ வேலைகளுக்கு விண்ணப்பம்

வெளிநாடுகளில் இராணுவ வேலைகளுக்கு விண்ணப்பம்

வெளிநாடுகளில் இராணுவ வேலைகளுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மனித கடத்தல் குழுவொன்று தற்போது இலங்கை இளைஞர்களை ரஷ்யாவுக்கு இராணுவ சேவைக்கு அனுப்பும் மோசடியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் எச்சரித்துள்ளார்.

ரஷ்ய இராணுவத்தில் அதிக சம்பளத்தில் வேலை

ரஷ்ய இராணுவத்தில் அதிக சம்பளத்தில் வேலை தருவதாக கூறி ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் முன் வரிசைப் பாதுகாப்புப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பல மாதங்களாக அவர்களுக்கு உரிய சம்பளம் கூட வழங்கப்படவில்லை எனவும் இது தொடர்பான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி எந்தவொரு நபரும் இராணுவ சேவைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட மாட்டார் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எனவே சுற்றுலா வீசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்காக எக்காரணம் கொண்டும் செல்ல வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மக்களிடம் மேலும் கோரிக்கை விடுக்கிறது.

மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் ,தமது கோரிக்கைகளுக்கு வழங்கப்பட்ட இணக்கப்பாடுகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் இன்று (09) முதல் மாகாண மட்டத்தில் வைத்தியசாலைகளில் தொழிற்சங்க

நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அனைத்து வைத்தியசாலைகளிலும் 4 மணித்தியாலங்களுக்கு பணிப்புறக்கணிப்பு

அதன்படி இன்று காலை 8.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் 4

மணித்தியாலங்களுக்கு பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தாதியர்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடமாட்டார்கள் என அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எச்.எம்.எஸ்.பி.மெதிவத்த தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க நடவடிக்கை அமுலப்படுத்தப்பட்டுள்ள மருத்துவமனைகளின் விபரங்கள் பின்வருமாறு

09 – வட மத்திய மாகாணம்
13 – மத்திய மாகாணம்
14 – சப்ரகமுவ மாகாணம்
15 – வடமேல் மாகாணம்
16 – தென் மாகாணம்
20 – ஊவா மாகாணம்
21-மேல் மாகாணம் போன்றவற்றில் தொழிற்சங்க நடவடிக்கை அமுல்படுத்தப்படும்.

டயானாவிற்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

டயானாவிற்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு

டயானாவிற்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு

டயானாவிற்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு ,இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்றத்தில் அமர்வதற்கு சட்டரீதியாக தகுதியற்றவர் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பூரண உயர் நீதிமன்ற அமர்வில் சவாலுக்கு உட்படுத்த முடியும்

என கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி வளாகத்தின் பீடாதிபதி பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

இந்த டயானா கமகேவுக்கு உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பு என்பதால், அதனை பூரண நீதிமன்ற அமர்வில் சவாலுக்கு உட்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டயானா கமகே பிரித்தானியப் பிரஜையாக இருப்பதால்

டயானா கமகே பிரித்தானியப் பிரஜையாக இருப்பதால் இந்நாட்டு நாடாளுமன்றத்தில் அமர்வதற்கு சட்டரீதியாக தகுதியில்லை என உயர் நீதிமன்றம் நேற்று (08) தீர்ப்பளித்துள்ளது.

சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த பின்னர், இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

குறித்த தீர்ப்பு தொடர்பில் டயானா கமகேவுக்கு மேலும் ஒரு வாய்ப்பு இருப்பதாக பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்தார்.

“அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது, பூரண உயர் நீதிமன்ற அமர்வில் கோரிக்கை விடுப்பதற்கு.

ஏனெனில் மூன்று பேர் கொண்ட அமர்வில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய தீர்ப்பை பூரண அமர்வில் சவால் செய்யலாம்.

அவருக்கு இன்னும் அந்த வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் அதற்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்தால் அக்கட்சியைச் சேர்ந்த எவரும் தேசியப்பட்டியலில் இருந்து வரலாம்.

எனவே இந்த இரண்டில் எது முதலில் வரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்றார்.

பாராளுமன்றத்தில் அமருவதற்கு சட்டப்பூர்வ தகுதி இல்லை

இதேவேளை, பாராளுமன்றத்தில் அமருவதற்கு சட்டப்பூர்வ தகுதி இல்லை என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புடன் டயானா கமகேயின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டப்பூர்வத்தன்மை குறித்தும், பிரதிபா மஹாநாமஹேவா கருத்து வௌியிட்டார்.

“இந்தக் கட்சி தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்போது இந்தக் கட்சிக்கு ஒரு தலைவர் இருக்கிறார். செயலாளரும், கட்சித் தவிசாளரும் உள்ளனர்.

இந்த தீர்ப்பின் ஊடாக இந்த கட்சிப் பதிவு சட்டவிரோதமா என்ற அடுத்த கேள்வி வரும்.

அத்தகைய பதிவைச் சவாலுக்கு உட்படுத்து வேண்டுமானால், வேறு பல தரப்பினரும் பிரதிவாதிகளாக முன்வைக்கப்பட வேண்டும்.

இதை இன்னொரு வழக்காக கொண்டு வர வேண்டும். இந்த எம்.பி, 4 ஆண்டுகளாக சம்பளம் பெற்றுள்ளார்.

அவர் இலங்கை பிரஜை இல்லை என்றால் மோசடியாகவே சம்பளம் பெற்றுள்ளார்.

எனவே அவற்றையும் வசூலிக்க வேண்டும். பின்னர் அது ஒரு தனி வழக்கில் வர வேண்டும்” என்றார்.

போதைப்பொருளுடன் ஒருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

போதைப்பொருளுடன் ஒருவர் கைது

போதைப்பொருளுடன் ஒருவர் கைது

போதைப்பொருளுடன் ஒருவர் கைது ,2 கோடி ரூபாவுக்கும் அதிமான பெறுமதி கொண்ட குஷ் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தாய்லாந்தின் பெங்கொக் நகரில் இருந்து இலங்கை வந்துள்ள நிலையில், அவரது பயணப்பையில் சூட்சுமமாக பொதி செய்யப்பட்டிருந்த 5 கிலோ 278 கிராம் குஷ் போதைப்பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேக நபர் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை இன்று போதைவஸ்து சந்தையாக மற்றம் .

பெற்றுள்ளது ராஜபக்ச ஆட்சிகாலத்தில் போதைவஸ்து மிக அதிகமாக இலங்கையில் பாவனைக்கு உள்ளாக்க பட்டது .

அதன் நீட்சியாகவே இன்று இலங்கை எங்கும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்ற்னர் .

அரசியல்வாதிகள் போதை வஸ்து வியாபாரிகளாகவும் மாற்றம் பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .

இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல்

இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல்

இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல் நடத்திய போராளி குழுக்கள் ,நெருக்கடியில் திணறும் இஸ்ரேல் இராணுவம் .

இஸ்ரேலிய நாட்டின் நிறுவ பெற்றுள்ள கோலன் குன்று கண்காணிப்பு ,உயர் பாதுகாப்பு அடுக்கு கொண்ட இராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த தாக்குதலில் அந்த கோலன் குன்று மலை முகாம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

கோலன் குன்று

கோலன் குன்று பகுதியில் நிறுவ பெற்றுள்ள இந்த உயர் பாதுகாப்பு முகாமில் இருந்து வழங்க படும் தகவலை அடுத்தே ,சிரியாவில் உள்ள ஈரான் ,சிரியா இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்த படுகிறது .

சிரியா போர் படை

அவ்விதமான தாக்குதல் நடத்தும் நெருக்கடியை ஏற்படுத்தும் இஸ்ரேல் இராணுவ தளத்தை தெரிவு செய்தே இப்பொழுது சிரியா போர் படை புலிகள் தாக்குதலை நடத்தியுள்ளன .

இடி மின்னல் தாக்குதலாக இந்த அதிரடி தாக்குதல் அமைய பெற்றுள்ளது .

இஸ்ரேல் உள்ளே நுழைந்து ஹமாஸ் போராளிகள் நடத்திய அசாத் நடவடிக்கை ,கோலன் குன்று முகாம் ,லெபனான் ஹிஸ்புல்லா ,ஹமாஸ் ,சிரியா போராளிகள் மற்றும் ஹவுதிகள் ,ஈராக்கிய படைகளினாலும் தாக்குதலுக்கு இலக்காகியது .

கோலன் குன்று இராணுவ கட்டளை உளவு மையம்

அவ்வாறு என்றால் இந்த கோலன் குன்று இராணுவ கட்டளை உளவு மையத்தின் செயல்பாடுகள் காணப்பட்டன என்பததை இந்த கூட்டு தாக்குதல்கள் ,மூலம் கணித்து கொள்ள முடியும் .

சியோனிச படைகள் நடத்தும் அதே தாக்குதல் தந்திரோபாயங்களை ,அப்படியே திருப்பி அதே இஸ்ரேலியா இராணுவத்தினருக்கு எதிராக ஈரான் ஆதரவு குழுக்கள் நடத்தி வருகின்றன .

அதனால் இஸ்ரேல் இராணுவத்தின் வடக்கு கட்டளை உளவு கண்காணிப்பு இராணுவ மையங்கள் செயல் இழந்த நிலையில் அல்லது இயங்க முடியா நெருக்கடி நிலைக்குள் பாலஸ்தீன அமைப்புக்கள் செயல்பட்டு வருகின்றன .

எனினும் வழமை போன்று எமது வான்காப்பு படைகளினால் தாக்குதல் நடத்திட பறந்து வந்த விமானங்கள் ,சுட்டு வீழ்த்த பட்டதாக அறிவித்துள்ளது குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
எதிரிகளுக்கு டிக்டாக் ராசன் சவால்
Posted in இலங்கை செய்திகள்

எதிரிகளுக்கு டிக்டாக் ராசன் சவால்

எதிரிகளுக்கு டிக்டாக் ராசன் சவால்

எதிரிகளுக்கு டிக்டாக் ராசன் சவால் விட்டுள்ளார் ,இலங்கையில் முடிந்தால் என்னை தூக்கி பார் என பகிரங்க சவால் .

பிரான்ஸ் டிக்டாக் ராசன் மக்களுக்கு உதவி செய்வதாக தெரிவித்து ,மக்கள் வழங்கும் பணத்தை பெற்று அதன் ஊடக உதவிகளை செய்து வருகிறார் .

புளியங்குளம் காவல்நிலையத்தில் தாக்குதல்

வவுனியாவை சேர்ந்த பொது மகன் சிலரை ,புளியங்குளம் காவல் நிலையத்தில் வைத்து ,போலீசாருக்கு லஞ்சம் வழங்கி தாக்குதல் நாடத்தியதாக பாதிக்க பட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் .

அதனை அடுத்து தற்போது இந்த பிரான்ஸ் டிக்டாக் ராசன் மீது ,பாதிக்க பட்டவர்கள் புகார் வழங்கியதுடன் ,மனித உரிமை அமைப்பிலும் முறையீடு செய்ய பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .

மக்களுக்கு உதவி செய்வது என்ற போர்வையில் இந்த பிரான்ஸ் டிக்டாக் ராசன் சில சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக ,பாதிக்க பட்ட தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர் .

மக்கள் ராசன் மோதல்

இதுவரை 117 குழாய் கிணறுகளை பாதிக்க பட்ட மக்களுக்கு இவர் நிறுவி கொடுத்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .அது வரவேற்க தக்க ,பாராட்ட பட வேண்டிய செயல் .

மனித நீதி நேர்மையை மதிக்கும அன்பர்கள் எவரும் இதனை வரவேற்பார்கள் ,

ஆனால் பிரான்ஸ் டிக்டாக் ராசன் சமீபகால செயல்பாடுகள் அருவருக்க தக்க நிலையில் மாற்றம் பெற்று செல்கிறது .

அவையாவன .பொலிஸ் நிலையத்தில் வைத்து ,மக்களை தாக்கியமை ,பிரான்ஸை வசிப்பிடமாக கொண்ட ராசன் ,பிரான்ஸ் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான செயல் பாடுகளை செய்து வருகின்றார் .

இலங்கையில் ,இலங்கை காவல்துறை போன்றவர்களை தனக்கு சார்பாக பயன் படுத்தி ,சமூக விரோத செயலில் ஈடுபடுவது அதிகரித்து காணப்படுகிறது .

பச்சை மிளகாய் என்ற டிக் டாக் வாலிபன் மீதான வன்முறை தாக்குதல் .வவுனியாய் சேர்ந்த இருவர் மீதன தாக்குதல் .

அதனை அடுத்து, இதோ இந்த படத்தில் உள்ளவருடன் எட்டாம் திதி வெளியிட்ட காணொளியில் ,இலங்கையில் ஒருவரும் என் தலைமுடியை கூட புடுங்க முடியாதுஎன இந்த நபர் தெரிவிக்கின்றார் .

பிரான்ஸ் டிக்டாக் ராசன் விடும் எச்சரிக்கை

இது ஒட்டுமொத்த தமிழருக்கு இந்த பிரான்ஸ் டிக்டாக் ராசன் விடும் எச்சரிக்கையாக காணப்படுகிறது .

இவரை நம்பி வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பியவர்கள் விபரங்களை ,பிரான்ஸ் பொலிஸார் பெற்று, பிரான்ஸ் டிக் டாக் ராசானை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன் வைக்க பாடலாம் என எதிர் பார்க்க படுகிறது .

இவருக்கு பின்புலத்தில யார் உள்ளது என்பதை ,பிரான்ஸ் ,இலங்கை தூதரகம் பதில் அளிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் முன்வைக்க சிலர் தயாராகி வருவதாக தெரிவிக்க படுகிறது .

பிரான்ஸ் அரசின் கவனத்திற்கு இந்த பிரான்ஸ் டிக்டாக் ராசன் விடுத்துள்ள ,சமூக விரோத மிரட்டல் பேச்சுக்கள் எடுத்து செல்ல தயாராகி வருகிறது .

மேலும் லண்டன் சாரு என்கின்ற பெண் பல கோடிகளில் இலங்கையில் ,நிலங்கள் ,சொத்துக்கள் என்பன வாங்கி விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

அதனை அடுத்து பிரான்ஸ் டிக்டாக் ராசன் வெளியிட்ட இந்த காணொளிகளை ஆதாரங்களாக வைத்து ,பிரான்ஸ் டிக் டாக் ராசான் மற்றும் லண்டனை சேர்ந்த சாறு என்ற தமிழ் பெண் மீது நாடவடிக்கை மேற்கொள்ள சில தரப்பு தயாராகி வருவதாக தகவல்கள் சமுகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது .

ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் மிரட்டல் விடும் ராசன்

பொதுமக்களுக்கு சேவை என்கின்ற அடிப்படையில் இவ்வாறான சமூக விரோத சக்திகளுடன் ஒன்றிணைந்து ,ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் மிரட்டல் விடுகின்ற செயல்கள் ,

பிரான்ஸ் டிக்டாக் ராசன் மீது நன்மதிப்பை வைத்திருந்த மக்கள் ,இவ்வாறான கீழ் நிலை செயல்பாடுகளினால் அவரை வெறுக்கும் நிலை காணப்படுகிறது .

பிரான்ஸ் அரசு ராசனை இது தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பது மக்கள் கோரிக்கையாக முன் வைக்க படுகிறது .

பிரான்ஸ் குடிவரவு குடியகல்வு அமைச்சு

இலங்கையில் மக்களுக்கு உதவி செய்கின்ற எந்த யுடுப்பர்களோ ,அல்லது தனியார் நிறுவனங்களோ பணியாளர்களோ ,இவ்விதம் மக்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுவது இல்லை .

ஆகையால் இப்பொழுது பாதிக்க பட்ட மக்கள் தரப்பினர் முன் வைத்த குற்ற சாட்டுக்கள் ஏற்புடையவை என்கின்ற நிலையை காண்பித்துள்ளளது .

மக்களுக்கு உதவி செய்திடும் சமூக நல ஆர்வளர்கள் எனக்கூறும் பிரான்ஸ் டிக்டாக் ராசன்,மக்கள் வீடுகளுக்கு சென்று கறி சட்டிக்குள் விரலை விட்டு நக்கி பார்க்கும் அருவருப்பான செயலை செய்துள்ளது ,அவர் வெளியிட்ட காணொளியில் காண படுகிறது .

பிரான்சில் வசித்ததாக கூறும் இவர் ,பிரான்ஸ் நாட்டில் எந்த ஒரு குடிமகனின் செய்திடாத இழிவான செயலை செய்துள்ளார் ,அது காணொளியை பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது .

சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ராசன்

இது சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகளின் அடாவடியின் செயலாக மக்கள் சமூகம் கருதுகிறது .

மக்களை தொடராக அச்சுறுத்தும் நடவடிக்கையில் பிரான்ஸ் டிக்டாக் ராசன் ஈடுபட்டுளள்து அம்பலாகியுள்ளதால் ,பிரான்ஸ் போலீசார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வார்கள் என எதிர் பார்க்க படுகிறது .

மக்களுக்கு உதவி செய்திடும் பிரான்ஸ் டிக் டாக் ராசான் ,செய்திடும் சிந்திக்கும் தன்மை அற்ற இவ்வாறன கீழ் நிலை செயல்பாடும் இவரை ஏற்று வரவேற்றவர்கள் இவரை வெறுக்கும் நிலைக்கு தள்ளி செல்கிறது .

இலங்கை போலீசார் கைது செய்திட மறுத்தால் ,பிரான்ஸ் பொலிசார் இவரது இந்த காணொளிகளை பார்வையிட்டு மேற் கூற பட்ட விடயங்களில் ராசனை விசாரிக்க வேண்டும் என்பது பாதிக்க பட்ட மக்கள் விருப்பமாக உளள்து .

மிரட்டல் வீடியோ

இராணுவ அதிகாரிகள் இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

இராணுவ அதிகாரிகள் இருவர் கைது

இராணுவ அதிகாரிகள் இருவர் கைது

இராணுவ அதிகாரிகள் இருவர் கைது ,முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவரும் முன்னாள் இராணுவ சார்ஜன்ட் ஒருவரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருநாகல் பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள கூலி இராணுவப் படை முகாம்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்களை கடத்திய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஸ்யாவில் இலங்கை இராணுவத்தினர் கூட்டமாக நின்று போரிடும் காணொளி ஒன்று வெளியாகியிருந்தது .

அந்த காணொளி உலகளாவிய ரீதியில் பெரும் பேசுபொருளாக மாற்றம் பெற்றது .

இது போன்ற காணொளி ஒன்றும் உக்ரைன் இராணுவ தரப்பில் இருந்தும் வெளியாகியது ,

இதன் ஊடக உக்ரைன் மற்றும் ரஷ்ய இராணுவத்தில் , இலங்கை இராணுவம் செயல்படுவதான விடயம் அம்பல பட்டுள்ளது .

இவை ஆளும் ரணில் அரசின் இரட்டை நாடகமாக இந்த விடயம் காணப்படுகிறது .

இஸ்ரேலுக்கு ஆயுதம் இல்லை அமெரிக்கா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு ஆயுதம் இல்லை அமெரிக்கா

இஸ்ரேலுக்கு ஆயுதம் இல்லை அமெரிக்கா

இஸ்ரேலுக்கு ஆயுதம் இல்லை அமெரிக்கா அதிரடி அறிவிப்பால் கதிகலங்கியுள்ள இஸ்ரேல் .

ஆயுதங்கள் வழங்க மாட்டோம் எனவும் ஆயுத கப்பல் இப்பொழுது இஸ்ரேலுக்கு வந்து சேராது என அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது .

இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்

எகிப்தின் எல்லையோர ரபா மீது ,இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்களை நடத்திட ஆரம்பித்துள்ள இவ்வேளையில் ,வேறு வழியின்றி இஸ்ரேல் திணறி வருகிறது .

அமெரிக்கா வழங்கும் இந்த மிக பெரும் ராட்சத குண்டுகளையாயே, இஸ்ரேல் இராணுவம் அப்பாவி பலஸ்தீன மக்கள் தலைமேல் வீசி வருகிறது .

இப்பொழுது பாலஸ்தீனம் காசா இஸ்ரேல் போரை அமெரிக்காவே நடத்தி செல்கிறது என்பது ,இந்த ஆயுத தாமதம் மூலம் அம்பலமாகியுள்ளது .

தேர்தலை பைடன் நிராவகம் சந்தித்துள்ளதால் இஸ்ரேலுக்கு நேரடியாக உதவிகளை செய்த்திட முடியா நிலையில் சிக்கி தவித்து வருகிறார் .

ஆயுத உதவி வாழங்குவதில் தாமதம்

அதனால் தற்போது இந்த ஆயுத உதவி வாழங்குவதில் தாமதம் ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

வெள்ளைமாளியின் ஆயுதங்களை நம்பியே போரை நடத்தி வந்த இஸ்ரேல் இப்பொழுது பொறிக்குள் சிக்க வைக்க ப்பட்டுள்ளதா இல்லை ,இஸ்ரேல் அமெரிக்கா இணைந்து நாடகம் நாடத்துகிறதா என்பதை சில நாட்களில் தெரிய வந்து விடும் .

பேச்சுக்கு தயார் என ஹமாஸ் தெரிவித்துள்ள நிலையில் ,ஹமாசுடன் பேச்சை நடத்திட மறுத்து அடம் பிடிக்கும் நெதன்யாகுவிற்கு ,அமெரிக்கா வைத்துள்ள இந்த ஆப்பு நியம் என்றால் ,இஸ்ரேல் காசா போர் முடிவுக்கு வரும் என நம்பலாம் .

Error: View 9293b2au4w may not exist
கைங்கிங் பிரிட்டன் விமான சேவைகள் பாதிப்பு
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கைங்கிங் பிரிட்டன் விமான சேவைகள் பாதிப்பு

கைங்கிங் பிரிட்டன் விமான சேவைகள் பாதிப்பு

கைங்கிங் பிரிட்டன் விமான சேவைகள் பாதிப்பு என பிரிட்டன் விமான நிலையங்கள் தெரிவித்துள்ளன .

பிரிட்டன் நாடு தழுவிய நிலையில் விமான சேவைகள் பாதிக்க பட்டுள்ளன ,இதனால் பயணிகள் மிக பெரும் நெருக்கடியைசந்தித்ததாக தெரிவிக்க பட்டது .

பிரதான கணனிகள் கைக்கிங்

பிரிட்டன் விமான நிலையங்களின் பிரதான கணனிகள் கைக்கிங் குழுவொன்று தாக்குதல் நடத்தியதால் , அதன் வலையமைப்பபை சீர் குழைத்ததினால் மிக பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது .

கணனிகள் வலையமைப்பு செயல் இழந்த நிலையில் ,மனித வலுவை பயன்படுத்தி சோதனைகள் இடம்பெற்றதாகவும், இதனாலயே மிக பெரும் நெருக்கடி ஏற்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .

கீத்திரோ விமான நிலையம் முடக்கம்

இங்கிலாந்தின் முத்தாலாவது அதிக விமானங்கள் பயணிக்கும் கீத்திரோ விமான நிலையம் உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களின் ,சேவைகளில் தாமதம் ஏற்பட்டதாக அறிவிக்க பட்டுள்ளது .

இந்த திடீர் கைக்கிங் தாக்குதலிங்ல பிரிட்டனுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது .

ஈரான் கைக்கிங் குழுவினர் இந்த தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் தளபதி பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் தளபதி பலி

இஸ்ரேல் காவல்துறை தளபதி பலி

இஸ்ரேல் தளபதி பலி என இஸ்ரேல் அறிவித்துள்ளது .இந்த தாக்குதலானது இஸ்ரேல் கட்டுப்பாட்டு பகுதியான மேற்குக்கரை பகுதியில் நடத்த பட்ட தாக்குதலில் Chief Inspector Yitav Lev Halevi, 28 என்பவர் பலியாகியுள்ளார் .

எலியாட் பகுதியை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா ,ஹமாஸ் மற்றும் ஈராக்கிய போர் படைகள் என்பன கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .

அவ்வாறன இடைவிடாத தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது .

இழப்பை இஸ்ரேல் இராணுவம் மூடி மறைப்பு

ஆனால் தமக்கு ஏற்பட்ட இழப்பை இஸ்ரேல் இராணுவம் மூடி மறைத்து வருகிறது .

எனினும் அது கடந்து தற்போது தமது தளபதிகள் பலி என்பதை ,இஸ்ரேல் இராணுவம் தெரிவிக்க வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளது .

எலியாட் பகுதியில் அமைய பெற்றுள்ள கப்பல் துறைமுக பகுதிகளையும் ,ஈராக்கிய படைகள் மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் தாக்குதல் நடத்தின .

அந்த தாக்குதலில் தமது படைக்கும் ,முகாம்களுக்கு சிறு சேதம் மட்டுமே ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டது .

காசா மேற்கு கரையில் மோதல்

அவ்வாறான நிலையில் பாலஸ்தீனம் காசா மேற்கு கரையில் தமது காவல்துறை தளபதி பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளது .

ஹமாஸ் மற்றும் ,அல்குட்ஸ் படைகள் இணைந்து கடும் தாக்குதலை நடத்திய வண்னம் உள்ளன .அவ்வாறான தாக்குதலிலேயே இந்த உயர் காவல்துறை தளபதிகள் பலியாகியுள்ளனர் .

ஹமாஸ் துல்லியமாக மிக முக்கிய இஸ்ரேல் இராணுவ தளபதிகள் ,காவல்துறை தளபதிகள் யாவரையும் தெரிவு செய்து கனகச்சிதமாக போட்டு தள்ளியுள்ளது .

இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட இஸ்ரேல் படைத்துறை சார் தளபதிகள் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist

இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானம் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானம் தாக்குதல்


இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானம் தாக்குதல்

இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானம் தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் இராணுவ தளங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குடியேற்றங்கள் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

எகிப்தின் எல்லையோர ரபா வழியாக தாக்குதல் நடத்த பட்டு வரும் நிலையில் .தற்போது இஸ்ரேலிய வடக்கு எல்லையோரமாக உள்ள இஸ்ரேல் தளங்கள் மீது கடும் தாக்குதல் நடத்த பட்டு வருகிறது .

பெரும் வெற்றி

பெரும் வெற்றி பெறுவதன் ஊடாக தனது ஆட்சி அதிகாரத்தை நிலை நாட்டி கொள்ள முடியும் என்ற நிலையில் ,தற்போது இஸ்ரேல் இராணுவத்தை ஏவி தாக்குதலை நடத்தி வருகிறார் நெதன்யாகு .

அவ்விதமான நிலையில் தமது மண்ணை பாதுகாக்க பாலஸ்தீனம் போராடி வருகிறது .

இனப்படுகொலை நடத்தும் இஸ்ரேல்

தமது மண்ணையும் மக்களையும் காப்பாற்ற போராடும் மக்களுக்கு எதிரான பெரும் இனப்படுகொலையை நடத்திய வண்ணம் உள்ளது இந்த ,இஸ்ரேல் அரச பயங்கரவாதம் .

இஸ்ரேலிய சியோனிச பாயங்கரவாதம் மேற்கொள்ளும் தாக்குதலை அடக்க மறுத்து அப்பாவிகளை தாக்க முற் பட்டால் ,போராடும் அந்த அமைப்புக்ளும் இவ்விதம் விமானம் மூலம் தாக்குவது இயல்புதானே என சொல்ல படுகிறது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
விலை கேட்டவரை துரத்திய கடைக்காரர்
Posted in இலங்கை செய்திகள்

விலை கேட்டவரை துரத்திய கடைக்காரர்

விலை கேட்டவரை துரத்திய கடைக்காரர்

சாப்பாட்டு விலை கேட்டவரை துரத்திய கடைக்காரர் ,நீர்கொழும்பு பீச்சில் தவகரன் ,சங்கவி யூட்டுபருக்கு நடந்த சங்கடமான செயல் .

நமது அன்பு நண்பர்கள் thavakaran view youtuber நீர் கொழும்பில் மிக பிரபலமான பீச்சுக்கு காணொளி பாதிவாக்க சென்றிறுந்தனர்

அப்பொழுது அங்கே பல கடைகள் காணப்பட்டன .இந்த கடைகளில் அழகிய பொருட்கள் காணப்பட்டுள்ளன .அப்பொழுது அந்த பொருள்களின் விலையை அந்த thavakaran view youtuber கேட்டுள்ளார் .

thavakaran view யூடுப்பரை கெட்ட வார்த்தையால் பேசிய கடைக்காரர்

அதற்கு அந்த உணவாக கடைக்காரரோ விலையினை கேட்காதே விரும்பினால் வாங்கி போ என,தரம் கெட்ட நிலையில் thavakaran view ,சங்கவி ஆகிய வடிக்கையாளாருக்கு பேசுகிறார் .

எமது கடைக்கு தேடி வருபவர்களிடம் எப்படி பேச வேண்டும் என தெரியாத விழிப்புணர்வு அற்ற நிலையில், இலங்கையில் வர்த்தக நிலையங்கள் ,உணவகங்கள் இயங்குகின்றன என்பதற்கு இவை சான்றாக உள்ளது .

அருவருப்பான சம்பவங்கள்

இரண்டு மாதத்தில் இலங்கையில் இவ்வாறான அருவருப்பான சம்பவங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன .

இதனை பாராளுமன்ற உறுப்பினர்கள் ,மாநகரசபை உறுப்பினர்கள் கவனத்தில் எடுத்து செயல்பட்டதாக தெரியவரவில்லை .

இலங்கையை தேடி வரும் உல்லாச பயணிகள் ,மற்றும் உள்ளூர் மக்களிடம் இவ்வாறு தரம் தாழ்ந்த நிலையில் செயல் படும் ,இவ்வாறான கடை காரர்கள் கைது செய்யப்படல் வேண்டும் .

அத்துடன் இவர்களுக்கு உயர் வார்தாக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த பட்டு அதில் .எவ்விதம் வாடிகையாளர்களுடன் உரையாட வேண்டும் என்ற விடயத்தை கற்று கொடுக்க வேண்டும், என்பதே நமது வேண்டுதல் .

thavakaran view போன்ற யூடுப்பர்கள் உங்கள் காடைகளை காணொளி பிடித்து வெளியிட்டால், அதனை பார்க்கும் மக்கள் உங்கள் கடை தேடி வருவார்கள் .

எனவே இதனை உங்களுக்கான விளம்பரமாக பார்க்க வேண்டும் .அதனை விடுத்தது இவ்வாறு நாகரிகமற்ற முறையில் செயல்படுவது கண்டிக்க தக்கது .

வீடியோ

இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்

இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்

இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல் பலத்த சேதம் என நடத்தியவர்கள் தெரிவிப்பு .

அதி உச்ச பாதுகாப்பு கொண்ட இஸ்ரேல் நாட்டின் எலியாட் துறைமுகத்தை இலக்கு வைத்து ஈராக் போர் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன .

இந்த தாக்குதலில் எலியாட் துறைமுகம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ரபா எல்லை வழியில் கடும் யுத்தம்

எகிப்து எல்லையோர ரபா எல்லை வழியில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

இஸ்ரேலிய அரச இராணுவத்தினர் ஆரம்பித்திருக்கும் இந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலை வழங்கும் முகமாகவே ,தற்போது போராளி குழுக்கள் தாக்குதலை ஆரம்பித்துள்ளன .

பாலஸ்தீனம் காசா மக்கள்

பாலஸ்தீனம் காசா மக்கள் அகதிக இடம்பெயர்ந்து ரபா வீதிகள் தங்கியுள்ளனர் .

இவ்வாறு தங்கியுள்ள மக்கள் மற்றும் இஸ்ரேல் இனப்படுகொலை இராணுவம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

இஸ்ரேலிய படைகள் அவ்வாறு தாக்குதல் ,ஆரம்பிக்க அதற்கு தாக்குதல்களை இஸ்ரேல் உள்ளே ஈராக் ,சிரியா ,ஹிஸ்புல்லா ,ஹமாஸ் படைகள் நடத்திய வண்ணம் உள்ளன .

இரு தரப்பிற்கும் இடையில் தற்போது கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

Error: View 9293b2au4w may not exist