வவுனியா அரச பேருந்துகள் பணிப்புறக்கணிப்பு.
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா அரச பேருந்துகள் பணிப்புறக்கணிப்பு.

வவுனியா அரச பேருந்துகள் பணிப்புறக்கணிப்பு.

வவுனியா அரச பேருந்துகள் பணிப்புறக்கணிப்பு. ,தமது ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றைய தினம் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கடமையில் இருந்த அரச பேருந்தின் நடத்துனர் மற்றும் ஊழியர்கள் மீது வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்தின் ஊழியர்கள் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தால் அரச பேருந்துத்தரப்பினை சேர்ந்த ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யுமாறு தெரிவித்து போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று காலை முதல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதேவேளை, தமது கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கத்தவறும் பட்சத்தில் வட மாகாண ரீதியாக பணிபகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.

அரச சேவை சங்கங்கள் வேலை புறக்கணிப்பு
Posted in இலங்கை செய்திகள்

அரச சேவை சங்கங்கள் வேலை புறக்கணிப்பு

அரச சேவை சங்கங்கள் வேலை புறக்கணிப்பு

அரச சேவை சங்கங்கள் வேலை புறக்கணிப்பு இன்று தற்பொழுது இலங்கையில் நாடளாவிய ரீதியில் 200 அரச சபை அமைப்புகள் தமது தொழில் சங்க புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதாக இலங்கை செய்திகள் தெரிவித்துள்ளன .

நாடளாவிய நிலையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற ,இந்த வேலை புறக்கணிப்பால் ,அரசுக்கு ஒரு அழுத்தத்தை கொடுத்து ,அதனூடாக தமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையாக இந்த தொழிற்சங்கம் நடவடிக்கை இடம் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ,

இலங்கை அரசுக்கு மிகப்பெரும் அழுத்தம்

இந்த 200 அரச சபை நிறுவனங்களும் அரசு சபை சங்கங்களும் இலங்கை அரசுக்கு மிகப்பெரும் அழுத்தம் தெரிவிக்கப்படுகிறது

ஆளும் அரசு தற்பொழுது தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், இருநூறு அரசவைச் சங்கங்கள் தற்பொழுது பணி புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது ஆட்சியாளருக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போராட்டங்களை கலப்பதற்காக போலீசார் வழிந்து திணிக்கப்பட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிகின்றன .

நேரம் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் தொடர்ந்தும் இது போன்ற போராட்டங்களை தாங்கள் முன்னெடுத்துச் செல்வோம்.

தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் வெடித்த மக்கள் போர்

தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் மக்களுக்கு சலுகைகளையும் ஆசை வார்த்தைகளையும் காண்பித்து அதன் ஊடாக வாக்குகளை சுரண்டி ஏப்பம் விட்டு வந்த அரசியல் கட்சிகளுக்கு தற்பொழுது தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் .

வீதி இறங்கி மக்கள் போராட்டத்தை நடத்திக் கொண்டுள்ளது மிகப்பெரும் நெருக்கடியையும் நெருக்குவாரத்தை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் ,தமது கோரிக்கைகளுக்கு வழங்கப்பட்ட இணக்கப்பாடுகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் இன்று (09) முதல் மாகாண மட்டத்தில் வைத்தியசாலைகளில் தொழிற்சங்க

நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அனைத்து வைத்தியசாலைகளிலும் 4 மணித்தியாலங்களுக்கு பணிப்புறக்கணிப்பு

அதன்படி இன்று காலை 8.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் 4

மணித்தியாலங்களுக்கு பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தாதியர்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடமாட்டார்கள் என அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எச்.எம்.எஸ்.பி.மெதிவத்த தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க நடவடிக்கை அமுலப்படுத்தப்பட்டுள்ள மருத்துவமனைகளின் விபரங்கள் பின்வருமாறு

09 – வட மத்திய மாகாணம்
13 – மத்திய மாகாணம்
14 – சப்ரகமுவ மாகாணம்
15 – வடமேல் மாகாணம்
16 – தென் மாகாணம்
20 – ஊவா மாகாணம்
21-மேல் மாகாணம் போன்றவற்றில் தொழிற்சங்க நடவடிக்கை அமுல்படுத்தப்படும்.

பிரிட்டனில் ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு

பிரிட்டனில் ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு

பிரிட்டனில் ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு புரிந்து வருவதல் ,ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

1,5,8 திகதி இந்த பணி புறக்கணிப்பு இடம்பெறுகிறது .

இவ்வாறான நாட்களில் மக்கள் ,பயணிகள் ரயில்களில் பயணிப்பது தவிர்த்து கொள்ளுமாறு வேண்ட படுகிறது .

இந்த பணிபுறக்கணிப்பினால் மக்கள் இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது .

பிரிட்டனினால் அதிக மக்கள் நிலக்கீழ் சுரங்க ரயில்வே பயணங்களை அதிகம் மேற்கொண்டு வருகின்றனர் .

இந்த பணிபுறக்கணிப்பால் பல மில்லியன்
இழப்பு நாள் ஒன்றுக்கு ஏற்படுகின்றமை குறிப்பிட தக்கது .