மனம் உடைந்த அர்ச்சுனா
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

மனம் உடைந்த அர்ச்சுனா

மனம் உடைந்த அர்ச்சுனா

மனம் உடைந்த அர்ச்சுனா ,எனக்கேன் வம்பு..
இது சாதாரண தமிழன்…
வம்புகள் தானே பார்த்துக் கொள்ளலாம்..
இது இராமநாதன் அர்ச்சுனா..


இதுவரை கிடைத்த நற்பெயருடன் லண்டன் வா கனடா வா பிரான்ஸ் வா என்கிறது உறவு..


இல்லை இங்கேயே செத்து விடுகிறேன் என சொல்கிறது அப்பாவின் ஆன்மா..
மனமுடைந்து கேட்கிறேன்..சோறு தானே உண்கிறீர்கள்..


நான் இவ்வாறே விட்டுவிட்டு ஓடிப்போகிறேன் என்று சொல்லிக் கொள்வோம்..
இனியும் உங்களுக்கு ஏதாவது நம்பிக்கை உண்டா?


வீடு பிளந்து போய் இருக்கிறது..
சுமந்திரன் என்ன செய்கிறார்?
சாணக்கிய பரமாத்மா எங்கே?
அங்கஜன் ராமநாதன் எங்கே?


சித்தார்த்தனுக்கு whatsappபில் பிடிஎஃப் ஓபன் பண்ண தெரியாதா?
மனதுக்குள் அழுகிறேன்..இவ்வாறு முகநூலில் அர்ச்சுனா மனம் உடைந்து எழுதியுள்ளார் .

பாடல் பொதுவேட்பாளருக்கு வெளியீடு
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

பாடல் பொதுவேட்பாளருக்கு வெளியீடு

பாடல் பொதுவேட்பாளருக்கு வெளியீடு

பாடல் பொதுவேட்பாளருக்கு வெளியீடு செய்யப்பட்டுள்ளது ,சங்கு சின்னத்திற்கு வாக்கினை அளிக்குமாறுஇ கோரி இந்த புதிய பாடல் ஒன்று வெளியிட பட்டுள்ளது .

பிரான்சை சேர்ந்த ஈழத்து பாடகராக விளங்கும் மயிலையூர் இந்திரன் அவர்களினால் எழுத பட்டு ,பாட பட்டுள்ளது .இதற்க்கு 13 வயது சிறுவன் இசை அமைத்து வெளியிட பட்டுள்ளது .

பொது வேட்பாளர் மிக முக்கியமாக கருதப்படுவதால் இந்த பாடல் அவருக்காக விரைந்து உருவாக்கம் பெற்று வெளியிட பட்டுள்ளது .

இந்த பாடல் உருவகத்தில் ஈடுபட்ட இந்திரன் மற்றும் இசை அமைப்பாளருக்கும் இவ்வேளை எதிரி இணையம் பாராட்டையும் வாழ்த்தினையும் தெரிவித்து கொள்கிறது .

இதில் அழுத்தி பாடல் பார்க்கலாம்

அர்ச்சுனா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

அர்ச்சுனா

அர்ச்சுனா

நான் உன் உறவு நம்படா
நான் கூட வருவேன் எண்ணடா
தோல்வி கண்டு தளராதே
தோற்று நீ போகாதே

வழி வரும் தடை கண்டு வாடாதே
வலி எல்லாம் வெற்றி தான் கலங்காதே
எதிரே பகை வரின் தளராதே
என்றும் நாம் இருப்போம் சோராதே ..

திடல் இருக்கு விளையாடு
திட்டம் இருக்கு அடி போடு
வீர மகன் நீ தானே
விளையாடு விவேகம் நாட்டு

எவன் வருவான் எழு பார்ப்போம்
எழுவாய் பயனிலை முன் காப்போம்
தடை போட்டார் தடை உடை
தரணியில் உன் புகழ் விதை..

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 02-09-2024

ஏன் அழுகின்றாய்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

ஏன் அழுகின்றாய்

ஏன் அழுகின்றாய்

தனிமையில் நீ இருந்து
தங்கமே ஏன் அழுகின்றாய்
அங்கமெல்லாம் தினம் வாட
ஆர் உயிரே ஏன் நோகிறாய் ,,

உண்ணாமல் நீ இருந்து
உயிரே தினம் வாடலாமோ
என் நாளும் நான் வாட
என் உயிரே வைக்கலாமா

இன்பம் துன்பம் இரு பாதி
இதயமே புரிந்து விடு
வாழும் போதே
வசந்தமாய் வாழ்ந்து விடு

கண் இருந்து நீர் வடிய
கண்ணே இதயம் நோகுதே
மண்ணை விட்டு போக தானே
மனமே எண்ணுதே

உள்ளம் நீ வாட
உறங்க முடியலையே
என் மனதை
ஏ மனமே புரிந்து விடு…..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 02-09-2024

காய்ச்சல் பறந்ததது மாவை கொண்டாட்டம்
Posted in இலங்கை செய்திகள்

காய்ச்சல் பறந்ததது மாவை கொண்டாட்டம்

காய்ச்சல் பறந்ததது மாவை கொண்டாட்டம்

காய்ச்சல் பறந்ததது மாவை கொண்டாட்டம் ,தமிழரசு கட்சியின் கூட்டத்தில் கலந்து கொள்ள காய்ச்சல் காரணமாக தவறிய மாவை சேனாதிராசா தோழர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் .

யாழ்ப்பாணம் தாவடியில் உள்ள தர்மலிங்கம் நினைவு தூபியில் ,அவரது நினைவு நாளில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் .

இதில் தர்மலிங்கத்தின் மகனான சித்தார்த்தன் ,அவருடன் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஆகியோர் கலந்து கொண்டு தமது நினைவு அஞ்சலியை செலுத்தி .கொண்டனர்

இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாக ,தமிழரசு கட்சி செயலாற்ற போவதாக அறிவிக்க பட்ட நிலையில் ,மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவியது .

அதனை அடுத்து தற்பொழுது தமிழரசு கட்சி பொதுவேட்பாளருக்கு ஆதரவு தரமறுத்து சஜித்துக்கு ஆதரவை வழங்கிட முன் வந்த நிலையில் ,அந்த கட்சியின் கூட்டத்தில் வக்கெடுப்பில் கலந்து கொள்ள தனக்கு காய்ச்சல் சுகவீனம் என கூறி தப்பித்து கொண்ட மாவை தற்போது தோழர் நினைவிடத்தில் கொட்டாவி விட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார் .

பெட்டிகளுக்கு இவர்கள் பேரம் போயுள்ளது இந்த கட்சி படத்தை பார்க்கின்ற பொழுது தெளிவாகிறது .

அரசியல் வியாபாரிகள் இவர்கள் என மக்கள் கோரியது உண்மை தான் போலும் .

விமானம் 22 சுட்டுவீழ்த்தல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

விமானம் 22 சுட்டுவீழ்த்தல்

விமானம் 22 சுட்டுவீழ்த்தல்

விமானம் 22 சுட்டுவீழ்த்தல் ,உக்ரைன் நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முற்பட்ட ரஷ்ய தற்கொலை வெடிகுண்டு விமானங்கள் 22 சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்ரைன் வான் காப்பு படைகள் தெரிவித்துள்ளன .

கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்த பட்ட ரஸ்யாவின் அகோர தாக்குதலில் 22 விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாகவும் ,20 ஏவுகணைகள் உள்ளிட்டவை சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .

வடகொரியா மற்றும் ஈரான் ஏவுகணையை ரஸ்யா பயன்படுத்தி வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ரஸ்யா நடத்தும் இந்த தாக்குதலில் மிக பெரும் யுத்தம் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது .

M-60 டாங்கிகள் ஈரான் இராணுவ தரைப்படை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

M-60 டாங்கிகள் ஈரான் இராணுவ தரைப்படை

M-60 டாங்கிகள் ஈரான் இராணுவ தரைப்படை

M-60 டாங்கிகள் ஈரான் இராணுவ தரைப்படை களிடம் ஒப்படைக்கப்பட்டன
தெஹ்ரான், செப். 01 (எம்என்ஏ) – ஷாஹித் ஜர்ஹரன் படைமுகாமில் ராணுவத் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் செயத் அப்துல்ரஹிம் மௌசவி முன்னிலையில்

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், புதிய மாற்றியமைக்கப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட எம்-60 டாங்கிகள் ஒப்படைக்கப்பட்டன.

ஈரான் இராணுவம் திடீரென களமிறங்கிய இந்த டாங்கிகள் மிக பெரும் பேரழிவை ஏற்படுத்த வல்லது என தெரிவிக்க பட்டுள்ளது .

களம் இறக்க பட்ட இந்த டாங்கிகள் வருகை எதிரி இராணுவத்தை மிக பெரும் நெருக்கடியில் சிக்க வைத்துள்ளது என்கிறது இராணுவம் .

மத்திய கிழக்கு நாடுகள் மீது இஸ்ரேல் அமெரிக்கா கூட்டு படைகள் இணைந்து தாக்குதல் நடத்த கூடும் என்ற நிலையில் இந்த டாங்கிகள் களம் இறக்க பட்டுள்ளது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

4 பேர் அமெரிக்காவில் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

4 பேர் அமெரிக்காவில் பலி

4 பேர் அமெரிக்காவில் பலி

4 பேர் அமெரிக்காவில் பலி ,அமெரிக்காவின் ஹவாயில் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர், 2 பேர் காயமடைந்தனர்

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 2 பேர் காயமடைந்துள்ளதாகவும் அமெரிக்க பொலிஸார் திங்கள்கிழமை அறிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள ஹொனலுலு கவுண்டியில் சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில்

சந்தேக நபர் உட்பட நான்கு பேர் இறந்தனர், மேலும் இருவர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாக உள்ளூர் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

11:15 மணிக்குப் பிறகு சிறிது நேரம். சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி (ஞாயிற்றுக்கிழமை 0915 GMT), வயானே பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புக்கு காவல்துறை அதிகாரிகள் பதிலளித்ததாக ஹொனலுலு காவல் துறை தெரிவித்துள்ளது.

Waianae வசிப்பிடத்திலிருந்து வரும் பல 911 அழைப்புகள், அவர்களது பக்கத்து வீட்டுக்காரர் ஒரு முன் லோடரை இயக்குவதாகவும், பல கார்களை வீட்டிற்குள் செலுத்துவதற்கு அதைப் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பல நபர்கள் கார்போர்ட்டில் இருந்தனர் மற்றும் சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது தப்பியோடினார் அல்லது தப்பி ஓட முயன்றார், பாதிக்கப்பட்டவர்களைத் தாக்கினார் என்று திணைக்களம் ஒரு

செய்திக்குறிப்பில் கூறியது, சில சமயங்களில், வீட்டில் வசிக்கும் 42 வயதுடைய ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். கைத்துப்பாக்கியுடன் சந்தேக நபர், சின்ஹுவா தெரிவித்துள்ளது.

சந்தேக நபரை சுட்டுக்கொன்ற குடியிருப்பாளர் இரண்டாம் நிலை கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சந்தேக நபர் உட்பட மூன்று நபர்கள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. கூடுதல் நபர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்” என்று திணைக்களம் முன்பு ஒரு பேஸ்புக் பதிவில் கூறியது.

சில மணிநேரங்களுக்குப் பிறகு, காயமடைந்தவர்களில் ஒருவர் மருத்துவமனையில் இறந்துவிட்டார், மற்ற இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று திணைக்களம் ஒரு புதுப்பிப்பில் உறுதிப்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து ஆலோசிக்க ஹொனலுலு போலீசார் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். “முந்தைய மாதங்கள் மற்றும் வாரங்களில் பல சம்பவங்கள் நடந்துள்ளன, ஆனால் இந்த சம்பவம் அவற்றுடன் தொடர்புடையது அல்ல.

இந்த சம்பவம் அண்டை வீட்டாரின் விளைவாக நடந்தது” என்று ஹொனலுலு காவல்துறை தலைவர் ஜோ லோகன் உள்ளூர் செய்தி நிறுவனமான HawaiiNewsNow மூலம் மேற்கோள் காட்டினார்.

துப்பாக்கிச் சூடு “ஒரு சீரற்ற செயல் அல்ல, ஆனால் இலக்கு வைக்கப்பட்டது.”

Waianae பள்ளத்தாக்கு பகுதி ஓஹு தீவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது, இது மாநில தலைநகரான ஹொனலுலுவின் தாயகமாகும்.

வெஸ்ட் ஓஹுவில் நடந்த வன்முறைக் குற்றங்களின் சமீபத்திய துப்பாக்கிச் சூடு.

பல துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகளுக்குப் பிறகு, “சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் சமீபத்திய வன்முறைச் சம்பவங்களால் விரக்தியடைந்து சோர்ந்து போயிருப்பதாக” உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்

பதின்ம வயதினரை உள்ளடக்கிய பலர், உள்ளூர் KITV தொலைக்காட்சி வாரங்களுக்கு முன்பு தெரிவித்தது, “சமீபத்திய சோகங்கள் கட்டாயப்படுத்துகின்றன. மாநில தலைவர்கள் இதில் ஈடுபட வேண்டும், இங்கு சட்ட அமலாக்கத்தை அதிகரிக்க வேண்டும்.”

இரண்டு கப்பல் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இரண்டு கப்பல் தாக்குதல்

இரண்டு கப்பல் தாக்குதல்

இரண்டு கப்பல் தாக்குதல் ,யுனைடெட் கிங்டம் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) திங்கள்கிழமை காலை ஒரு புதிய அறிக்கையில், யேமனின் சலீஃப் நகருக்கு வடமேற்கே 70NM தொலைவில் ஒரு சம்பவம் நடந்ததாக அதன் ஆதாரங்களில் இருந்து ஒரு அறிக்கை கிடைத்துள்ளது.

“செப் 02, 2024 அன்று 0410UTC UKMTO க்கு யேமனின் சலீஃப் நகருக்கு வடமேற்கே 70NM தொலைவில் ஒரு சம்பவம் பற்றிய அறிக்கை கிடைத்தது” என்று UKMTO ஒரு அறிக்கையில் கூறியது.

“ஒரு வணிகக் கப்பலின் மாஸ்டர், கப்பலை 2 அறியப்படாத எறிகணைகள் தாக்கியதாகத் தெரிவிக்கின்றன.

சேதத்தைக் கட்டுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று அறிக்கை மேலும் கூறியது.

காசா மீதான அதன் ஆக்கிரமிப்புகள் மற்றும் பாலஸ்தீன தேசத்திற்கு எதிரான அதன் குற்றங்கள் நிறுத்தப்படும் வரை சியோனிச ஆட்சியின் கப்பல்கள் மற்றும் நலன்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று ஏமன் ஆயுதப்படைகள் அறிவித்துள்ளன.

டெல் அவிவ் அக்டோபர் 7, 2023 முதல் இஸ்ரேலிய ஆட்சிக்கு ஆதரவாக யேமன் மீது ஆக்கிரமிப்பைத் தொடங்கிய இஸ்ரேலிய ஆட்சி மற்றும் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுடன் தொடர்புடைய செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் டஜன் கணக்கான கப்பல்களை யேமன்கள் குறிவைத்துள்ளனர்.

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படு கொலை பிரச்சாரத்தை ஆட்சி தொடங்கியது.

அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில்

அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில்

அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில் ,அன்பு தம்பி வன்னி மைந்தன் மற்றும் தம்பி ரகுராம் அவரகட்கு.

உங்கள் அர்ச்சுனா பற்றிய உரையாடல் கேட்டேன்! தமிழ் அரசியல் ஊழல் வாதிகள் அவர்களுக்கு உதவிடும் சிவில் சேவை அமைப்புக்கள், இதில் மதத்தலைவர்களும் அடங்கும். இந்த நிலமைகளை நிதானமாக ,அவதானமாக கவனித்த தம்பி தேசிய தலைவர் அவர்கள் கூறிய இறுதி வார்த்தைகளில் இதுவும் ஒன்று.

எங்கள் எதிர்கால அரசியலை எமது இளைஞர்களின் கையில் ஒப்படைக்கின்றேன் என்பதுதான்?.

ஆகவே இப்போது நடப்பது அதுதான். அதை செயல்படுத்த எங்களுக்கு ஒரு இளைஞன் கிடைக்கமாட்டானா என்று கடந்த 15 வருடமாக காத்திருந்த எமக்கு கிடைத்த விடி வெள்ளி வைத்தியர் அரச்சுனா.

ஒவ்வொரு தன்மானமுள்ள தாயகத்தில் உள்ள தமிழனும்,புலம்பெயர் உறவுகளும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பதுதான் எமது பேரவா! தமிழர் ஒற்றுமை பேணப்படவேண்டும் என்றால் பொது வேட்பாளருக்கு,அவர்கள் ஏற்றுக் கொண்டார்களோ இல்லையோ அவர்களுக்கு வாக்களிப்போம்.

ஆனால் அடுத்த பாராளுமன்றத்தேர்தலில் கல்விமான்களான இளைஞர்களை தேர்தலில் நிறுத்துவோம்.


எங்கள் சிந்தனை என்ன என்றால் வடக்கு, கிழக்கில் இப்போதுள்ள மருத்துவ மாபியாக்களை,இவர்களுக்கு துணையாய் இருக்கும் ஊழல் அரசியல்வாதிகளை,அரசியல்வாதிகளின் குடையின் கீழ் இயங்கும் சிவில் அமைப்பினரை, குருமாரை துடைத்தெடுத்து கள்ளங் கபடமற்ற ,வெளிப்படைத்தன்மையாகப்பேசும் டாக்டர்.

அர்ச்சனாவின் தலமையின் கீழ் நிரந்தரமான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வை எம்மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எமது பேரவா.

2009 இதன் பின் சலித்துப்போயிருந்த எமக்கு இன்று அர்ச்சுனா ஒரு நம்பிக்கை விடி வெள்ளி.

ஆகவே, உங்களைப் போன்றவர்கள் அர்ச்சுனாவின் சிந்தனைகளை உள்வாங்கி அவருக்கு எதிராக செயல்படும் மாபியாக்களுக்கு துணை போகாமல் தர்மத்தின் பாதையில் செல்ல வேண்டும் என்பதே எமது பேரவா.

ஆகவே படித்த பண்புள்ள,மூன்று மொழிகளிலும் சரளமாக உரையாடக்கூடிய பட்டதாரிகளை பாராளுமன்றம் அனுப்புவோம்.

அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில்: . எனது மனைவி வீட்டில் இருந்து 5வது வீடு அர்ச்சுனாவினுடைய அப்பா வீடு. இவர்கள் பெரிய விழானை பூர்வீகமாக கொண்டவர்கள்.

அர்ச்சுனாவினுடைய சித்தப்பா என்னுடன் இளவாலை புனித கென்றி அரசர் கல்லூரியில் படித்தவர்.அர்ச்சுனா இப்போது வலம் வரும் தட்டுவாணிகளைப்போல் அல்ல.

யாழ்ப்பாணம் ராணி தியேட்டர் ,ஶ்ரீதர் தியேட்டர்,ஹரன் தியேட்டர். உரிமையாளர் திரு. இரத்தின சபாபதியின் பேரன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வடக்கிலும், கிழக்கிலும் 146 பேரூந்துகளை வைத்து பஸ் கம்பனி நடத்திய நாகலிங்கத்தின் பேரனாவார்.

யாழ். ஸ்ரான்லி வீதியில் மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் விற்கும் மகேந்திரா அன் கம்பனி திரு. நித்தியானந்தத்தின் மருமகனாவார்.இவர் உறவினர்கள் அகதிகளாக பிரித்தானியா சென்றவர்கள் அல்ல.1960 முன்பதாகவே அங்கு குடியேறியவர்கள்.

அர்ச்சுனா வாய்திறந்தால் கோடியாக கொட்டி கொடுப்பதற்கு உறவினர்கள் தயாராக இருக்கின்றார்கள்.ஆனால் அவரது நேர்மை, பணிவு,ஒளிவு மறைவு இன்மை, கல்வித்தகமை,தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள பாசம் இதனால் அவர் எதைக்குறித்தும் அலட்டிக்கொள்ளவில்லை.


ஆம் அன்பான உறவுகளே! எம் சமூக நீதிக்காக அர்ச்சனா வழியில் போராடுவோம்.”அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு”என்பதை மன்னாரில் கண்ணால் கண்டோம்.கலந்து கொண்ட அனைத்து உள்ளங்கட்கும் நன்றி!.

மருத்துவ பராமரிப்பு இல்லாமல் எம்மை விட்டு பிரிந்த எம் அன்பு மகள் சிந்தூஜா,அவர் கணவர் மரியராஜிற்காக நாம் இறைவனிடம் வேண்டுவோம்.

இதை எல்லாவற்றையும் தன் இதயத்தில் சுமந்து வலிதாங்கிய எம் அன்பு மகன் டாக்டர். அர்ச்சுனாவின் நெஞ்சுரத்திற்கு நன்றி கூறுகின்றேன்.


டேவிட் அந்தனி( பிரான்ஸ்சிலிருந்து) என்ற வாசகர் அர்ச்சுனா உடன்பிறந்த அண்ணா ரகுராம் பேச்சு கேட்டு வாசகர் ஒருவர் எழுதிய மடல் இது .

நன்றி டேவிட் அண்ணா .

உள்வீட்டில் வெடித்த சண்டை சுமந்திரனை தோற்கடியுங்கள்
Posted in இலங்கை செய்திகள்

உள்வீட்டில் வெடித்த சண்டை சுமந்திரனை தோற்கடியுங்கள்

உள்வீட்டில் வெடித்த சண்டை சுமந்திரனை தோற்கடியுங்கள்

உள்வீட்டில் வெடித்த சண்டை சுமந்திரனை தோற்கடியுங்கள்,தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் ,உள்ளே வெடித்த உச்ச சண்டைகள் .

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் கட்சிக்கு உள்ளேயே பாரிய நெருக்கடியை கொடுத்து அந்த கட்சியின் வளர்ச்சியை சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்த பட்டுள்ளது .

சங்கிற்கு மக்கள் ஆதரவு அளித்து வரும் நிலையில் தற்போது திடீரென சஜித்துக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக சுமந்திரன் ஆதரவாளர்கள் நடத்திய வாக்கெடுப்பு நடவடிக்கையும் ,உள்வீட்டு சதிகளும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

பெட்டியை வாங்கிவிட்டு சுமந்திரன் இவ்விதம் செய்துள்ளதாக மக்கள் மன்றம் கருத்து தெரிவித்துள்ளது .

சுமந்திரன் திட்டமிட்டு கட்சியை உடைத்து ,தமிழ் தேசிய கனவை சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவே மக்கள் மன்றம் குற்றம் சுமத்துகிறது .

3 சிறுவர்களின் உயிரை காப்பாற்றிய சம்பவம்
Posted in இலங்கை செய்திகள்

3 சிறுவர்களின் உயிரை காப்பாற்றிய சம்பவம்

3 சிறுவர்களின் உயிரை காப்பாற்றிய சம்பவம்

கல்கிஸ்ஸ கடலில் நீராடிக்கொண்டிருக்கையில் அடித்துச் செல்லப்பட்ட 3 சிறுவர்களை குறித்த இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த கல்கிஸ்ஸ பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் காப்பாற்றியுள்ளனர்.

3 சிறுவர்களும் கடலில் நேற்று (01) பிற்பகல் நீராடிக்கொண்டிருந்த வேளையில் இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர்கள் உடனடியாக விரைந்து 3 சிறுவர்களையும் மீட்டு, அடிப்படை முதலுதவி அளித்த பின், களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

கொழும்பு 9 இல் வசிக்கும் 16 வயதுடைய 3 சிறுவர்களே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு ,கொஸ்கொட கடற்கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மனித சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கொஸ்கொட பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவ்வாறு ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளமையால் குறித்த நபர் பல நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலம், பிரேத பரிசோதனைக்காக பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குத்துகாரணம் அடித்த மாவை
Posted in இலங்கை செய்திகள்

குத்துகரணம் அடித்த மாவை

குத்துகரணம் அடித்த மாவை

குத்துகரணம் அடித்த மாவை ,பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அறிவிப்பு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சி, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கியமை குறித்த செய்தி ஊடகங்கள் வாயிலாகவே தாம் அறிந்து கொண்டதாக எமது செய்தி சேவை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் தெரிவித்தார்.

எனினும் தமிழரசுக் கட்சி மத்திய குழுத் தீர்மானம் என்பது கூட்டு தீர்மானே என கட்சியின் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழு, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர், சஜித் பிரேமதாசவிற்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர், கூட்டத்தின் பின் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்து இருந்தார்.

அதனை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா மறுப்பு தெரிவித்து அது கட்சியின் தீர்மானம் இல்லை என தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் மாவை சேனாதிராஜா கலந்து கொள்ளவில்லை. மத்திய குழுத் தீர்மானம் என்பது ஒரு கூட்டுத் தீர்மானம். மத்திய குழுவில் 30 பேர் கலந்து கொண்டார்கள்.

மாவை சேனாதிராஜாவிற்கு அறிவித்து அவரும் வருவதாக இருந்தார்.

உடல் நிலை சரியில்லை என்று தெரிவித்து அவர் கலந்து கொள்ளவில்லை.

மூத்த துணைத் தலைவர் தலைமையில் தான் கூட்டம் நடைபெற்றது.

மத்திய குழுவின் தீர்மானம் தான் சஜித் பிரேமதாசவிற்கு அதரவு வழங்குவது என்பது.

அதனையே அறிவித்தோம். எதிர்வரும் 4ஆம் திகதி தபால் மூல வாக்களிப்பு. அதனால் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அவருடன் ஏற்கனவே நான் கதைத்துள்ளேன். இது தொடர்பாக நான் கதைக்கிறேன்.

மூத்த துணைத்தலைவர் யாழ்ப்பாணத்தில் நேரில் சந்தித்து மாவை சேனாதிராஜாவுடன் கதைப்பார் என்றார்.

லண்டனில் ஸ்ரீதரன் எம் பி மக்களோடு பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் ஸ்ரீதரன் எம் பி மக்களோடு பேச்சு

லண்டனில் ஸ்ரீதரன் எம் பி மக்களோடு பேச்சு, தமிழ் டெஹஸ்ய கூட்டமைப்பின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினராக விளங்கி வரும் சிறிதரன் அவர்கள் லண்டனில் மக்களை சந்தித்து பேச்சுக்களில் .

வட்டக்கச்சி மக்களை சந்தித்த அவர் ,தனது மக்கள் நலன் சம்பந்தமாக பல விடயங்கள் தொடர்பாக பேசினார் .

அப்பொழுது பொது வேட்பாளர் ஏன் நிறுத்த [பட்டுள்ளார் ,அதன் அவசியம் என்ன என்பதை மிக தெளிவாக எடுத்து ,விளக்கியத்துடன் ஐந்து லட்சம் வாக்குகள் கிடைக்க பெறும் என்றால் ,

அது தமிழருக்கு கிடைக்க பெட்ரா மிக பெரும் வெற்றியாக இருக்கும் என்கின்ற விடயத்தை தெரிவித்துள்ளார் .

தனிப்பட்ட ரீதியில் பொது வேட்பாளராக களம் இறங்கியுள்ள அரியேந்திரன் அவர்களை தாங்கள் வரவேற்றுள்ளது தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் .

வட்டக்கச்சி மக்கள் ,அதன் சார்ந்த செயல்பாடுகள் தொடர்பாக அதிகம்பேச பட்டுள்ளதாக வெளியான காணொளிகள் வாயிலாக தெரிந்து கொள்ள முடிவதுடன் ,அதில் மக்கள் அரசியலும் பேச பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது .

பொறி தட்டும் சொற்கள் பொங்கி வெடித்து எழுச்சியை அங்கு காண்பித்தார் .

6000 போராளிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

6000 போராளிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர்

6000 போராளிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர் , இஸ்ரேலுக்கு நுழைந்து பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலில் ஆறாயிரம் போராளிகள் நுழைந்ததாக தெரிவிக்க பட்டுள்ளது .

அல் அசாத் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்க பட்ட பொழுது அவ்வேளை பலஸ்தீன போராளிகளுடன் இனைந்து பலஸ்த்தீனம் காசா மக்களும் இந்த போரில் பங்கெடுத்ததாக தெரிவிக்க பட்டுள்ளது .

அவ்வாறான மிக பெரும் தாக்குதல் பின்புலத்தில் இடம்பெற்ற துயரமான சம்பவம் இஸ்ரேலுக்கு மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது .

அவ்விதம் இந்த தாக்குதல் நடத்த பட்டு உள்ளதான இந்த தகவல் உலக அரங்கில் மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேல் கைதிகள் 6பேர் சடலமாக மீட்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

இஸ்ரேல் கைதிகள் 6பேர் சடலமாக மீட்பு

இஸ்ரேல் கைதிகள் 6பேர் சடலமாக மீட்பு

இஸ்ரேல் கைதிகள் 6பேர் சடலமாக மீட்பு ,பலஸ்தீனம் காசா பகுதியில் ஹமாஸ் மக்கள் போராளிகளினால் கடத்தி செல்ல பட்ட ஆறு இஸ்ரேலியர்கள் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .

இவ்வாறு சடலமாக மீட்க பட்ட ஆறுபேரில் பெண்களும் உள்ளடக்கம் பெறுகின்றனர் .

இவ்வாறு மீட்க பட்டவர்களில் இராணுவ பெண்கள் உள்ளடக்கம் பெறுகின்றனர் என்கின்ற விடயம் வெளியாகியுள்ளது .

கைதிகளை மீட்க போராடும் , மக்களுக்கு இந்த கைதிகள் சடலமாக மீட்க பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

தற்போது இஸ்ரேல் மக்கள் ஏனைய கைதிகளை உடனடியாக மீட்டு தருமாறு கோரி வீதி இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர் .

துப்பாக்கி சண்டை இஸ்ரேலுக்குள் ஆமி காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

துப்பாக்கி சண்டை இஸ்ரேலுக்குள் ஆமி காயம்

துப்பாக்கி சண்டை இஸ்ரேலுக்குள் ஆமி காயம் ,இஸ்ரேல் மேற்குக்கரை பகுதி ஊடகங் நுழைந்த பலஸ்தீன போராளி குழுக்கள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலை ஆமி காயமடைந்துள்ளனர் .

கார் ஒன்றின் ஊடாக நுழைந்த பலஸ்தீன போராளி குழுக்கள் தீடிரென சிவில் பாதுகாப்பு படைகள் மீது தாக்குதல் நாடத்தியதில் மூவர் காயமடைந்துள்ளதாகவும் ,அதில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

காரில் நுழைந்த போராளி குழுக்கள் படுகொலை செய்ய பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .

தொடர்ந்து பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

11 விமானம் சுட்டு வீழ்த்தல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள்

11 விமானம் சுட்டு வீழ்த்தல்

11 விமானம் சுட்டு வீழ்த்தல்

11 விமானம் சுட்டு வீழ்த்தல் ,உக்ரைனை தாக்கிட வந்த 11 தற்கொலை வெடிகுண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்ரைன் வான் காப்பு படைகள் தெரிவித்துள்ளன .

ரஷ்யா உள்ளே ஊடுருவி உக்ரைன் தற்கொலை விமானங்கள் பதிலடி தாக்குதலை நடத்தி வருகின்ற நிலையில் ,அதனை முறியடிக்கும் முகமாக இந்த தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ரஸ்யாவும் தொடர்ந்து மூர்க்கத்தனமான தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

உக்ரைன் பலவேறு பட்ட மாகாணங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமடைந்து காணப்படுவதால் ,மக்களும் காயமடைந்தும் பலியாகி வருகின்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

உடைத்து பேசிய Mp ஸ்ரீநேசன் ஞான­முத்து
Posted in இலங்கை செய்திகள்

உடைத்து பேசிய Mp ஸ்ரீநேசன் ஞான­முத்து

உடைத்து பேசிய Mp ஸ்ரீநேசன் ஞான­முத்து

உடைத்து பேசிய Mp ஸ்ரீநேசன் ஞான­முத்து ,கடந்த தினம் வன்னி மைந்தன் எனும் டிக் டாக் நேரலையில் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் ஐயா ஸ்ரீநேசன் ஞான­முத்து சிறப்பித்தார் .

இதன் பொழுது பொது வேட்பாளர் ஏன் வரவேண்டும் அதனால் எமக்கு கிடைக்க பெறும் நன்மைகள் என்ன என்பதை அவரே மிக தெளிவாக எடுத்து விளக்கினார் .

தமிழன் ஒற்றுமையாக ஒரு குடையின் கீழ் நின்று பயணிக்கின்றார் என்பதை இந்த விடயம் எடுத்து காட்டுகிறது என்கின்ற விடயத்தை எடுத்து விளம்பினார் .

தற்காலத்தில் தமிழன் இருப்பை தக்க வைத்துக்கொள்ளவும் ,தமிழன் பலத்தையும் காண்பிக்கின்ற நேரம் இது என்பதை அவர் எடுத்து விளக்கியதுடன் ,பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கிய வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதனுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார் .