இஸ்ரேலிய ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பலர் கொல்லப்பட்டனர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேலிய ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பலர் கொல்லப்பட்டனர்

இஸ்ரேலிய ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பலர் கொல்லப்பட்டனர்
ரஃபாவில் இஸ்ரேலிய ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பலர் கொல்லப்பட்டனர்.


டெஹ்ரான், செப். 11 (எம்என்ஏ) புதன்கிழமை காலை ரஃபா பகுதியில் இஸ்ரேலிய ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பல சியோனிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலிய ஹெலிகாப்டர் ரஃபாவில் விபத்துக்குள்ளானதாக புதன்கிழமை செய்தி ஆதாரங்கள் தெரிவித்தன.

முதற்கட்ட தகவல்களின்படி, இந்த சம்பவத்தில் 3 சியோனிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

ஹெலிகாப்டர் விபத்தைத் தொடர்ந்து மேலும் 8 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சியோனிஸ்ட் அதிகாரிகள் இந்த பிரச்சினையில் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

பெருந்தோட்ட மக்களின் வாக்குகள் ரணிலுக்கு - வடிவேல் சுரேஷ்
Posted in இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட மக்களின் வாக்குகள் ரணிலுக்கு – வடிவேல் சுரேஷ்

பெருந்தோட்ட மக்களின் வாக்குகள் ரணிலுக்கு – வடிவேல் சுரேஷ்

பெருந்தோட்ட மக்களின் வாக்குகள் ரணிலுக்கு – வடிவேல் சுரேஷ் ,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பெருந்தோட்ட மக்களின் 99 வீத வாக்குகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெறுவார் எனவும் பெருந்தோட்ட சமூகத்தில் வேறு எந்த தீர்மானமும் இல்லை எனவும் தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பெருந்தோட்ட மக்களுக்கு வாக்குரிமையைப் பெற்றுக்கொடுத்தது முன்னாள் ஜனாதிபதி ஜெ. ஆர். ஜயவர்தன மற்றும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்று நினைவு கூர்ந்த இராஜாங்க அமைச்சர், அதற்காக 10

மாவட்டங்களில் பரந்து வாழும் பெருந்தோட்ட மக்கள் ஒரே குழுவாக நன்றி தெரிவிப்பதற்கு ஒன்றிணைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கொழும்பு பிளவர் வீதியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் இதனைத் தெரிவித்தார்.

இந்த நாட்டிற்கு இனவாதமற்ற தலைவர் ஒருவரே தேவை எனத் தெரிவித்த அவர், உலகமே அங்கீகரித்த முதிர்ந்த, புத்திசாலி, தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரே தலைவரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இனவாதியல்ல என்றும் வலியுறுத்தினார்.

மேலும் கருத்து தெரிவித்த தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ்,

‘’இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள் நடத்தும் பொதுக்கூட்டங்களை விட, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ளும் பேரணிகளுக்கு ஒரு சிறப்பு இருக்கின்றது. ஜனாதிபதி

ரணில் விக்ரமசிங்கவின் பொதுக்கூட்டங்களுக்கு மாத்திரமே இந்நாட்டின் தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற பாகுபாடு இன்றி மக்கள் ஒன்று கூடுவதே இதற்குக் காரணமாகும்.

இந்த நாட்டைப் பெரும் பொருளாதாரப் படுகுழியில் இருந்து மீட்டெடுத்த தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளோம். இந்த நாட்டில் 40% மக்கள் இந்த தேர்தலில் மௌனமாகவே இருக்கின்றனர்.

மலையகம், வடக்கு கிழக்கு அல்லது தெற்கு என அனைத்து மாகாணத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியினரே மௌனமாக உள்ளனர். அவர்கள் மௌனமாக இருந்தாலும் செப்டம்பர் 21 ஆம் திகதி தங்கள் கடமையையும் பொறுப்பையும் சரியாக நிறைவேற்றுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

பெருந்தோட்ட மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. ஆனாலும் அவர்கள் இந்த நாட்டை நேசிக்கும் மக்கள். அவர்கள் எப்போதும் ஆயுதம் ஏந்தியதில்லை. மேலும் அவர்கள் இனவாதிகளும் அல்ல. இதன்படி ஜனாதிபதி தேர்தலில் 99%

பெருந்தோட்ட மக்களின் வாக்குகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெறுவார். அது தொடர்பாக பெருந்தோட்டத்தில் வேறு முடிவு இல்லை. மேலும் இனவாதமற்ற தலைவர் ஒருவரே எமக்குத் தேவை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இனவாதம் இல்லை.

உலகின் பல நாடுகளில் பொருளாதார வீழ்ச்சியால் என்ன நடக்கிறது என்பதை நாம் கடந்த காலத்தில் அனுபவித்திருக்கிறோம்.

வரிசையில் நின்றாலும் மருந்து கிடைக்காத காலமும் இருந்தது. தோட்டத்தில் இருந்து வைத்தியசாலைக்கு செல்ல முச்சக்கர வண்டி இன்றி கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்தனர்.

அவை நாம் அனுபவித்த விடயங்கள். அவ்வாறு நடக்கவில்லை என்று யாரும் கூற முடியாது. நாம் ஏன் மீண்டும் அந்த நிலைக்குச் செலல வேண்டும்?அரசியல் கட்சிகள், நிறம் முக்கியமில்லை.

பொருளாதார ரீதியில் நாட்டைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

வடக்கு, தெற்கு, மலையகம் என்று நாம் அனைவரும் ஒன்றிணைவதற்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும். அனுபவம் இல்லாத, உலகம் ஏற்காத தலைவரை தெரிவு செய்வதா? அல்லது முதிர்ந்த, புத்திசாலி, தொலைநோக்குப் பார்வை

கொண்டவர் என உலகமே அங்கீகரித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்வதா என்ற கேள்விக்கான பதில் உங்களிடமே உள்ளது.

ஜனாதிபதி ஜே. ஆர்.ஜயவர்தனவின் காலத்தில் இருந்தே சர்வதேச சமூகத்துடன் உறவுகளைக் கட்டியெழுப்பிய தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அத்தகைய ஒரு

தலைவர் ஒருவர் உள்ளாரா என்பதை பார்க்குமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன். சர்வதேச ஆதரவு இல்லாமல் நம் நாடு மீள முடியாது.

குறுகிய காலத்தில் இந்த நாட்டை மீட்டெடுத்தோம் என்ற காரணத்துக்காக மாத்திரமன்றி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை முன்னேற்றும் திட்டத்தை அடுத்த ஐந்தாண்டுகளில் அமுல்படுத்த வேண்டுமானால் இந்த

ஜனாதிபதித் தேர்தலில் அவர் மாபெரும் வெற்றியைப் பெற வேண்டும். கேஸ் சிலிண்டரை வெற்றிபெற உங்கள் வாக்கு அவசியம். இல்லை என்றால், மறுநாளில் இருந்து கேஸ் சிலிண்டர்களைத் தேடி வீதிக்கு செல்ல வேண்டி இருக்கும்.

தேசப்பற்றுள்ள மக்கள் சக்தியின் தலைவர் சுகத் ஹேவா பத்திரன,

‘’இந்த நேரத்தில் நாட்டின் பொருளாதாரத்தைப் பேணுவதற்கும் கட்டியெழுப்புவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு தலைவர் இல்லை. அதை இந்நாட்டு மக்கள் தற்போது புரிந்து கொண்டுள்ளனர்.

எந்த குப்பைகளை ஏற்றுக்கொண்டேனும் ஜனாதிபதித் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நிலைக்கு இன்று சஜித் பிரேமதாச தள்ளப்பட்டுள்ளார்.

மறுபுறம் மக்கள் மத்தியில் அச்சத்தை பரப்பி இந்த நாட்டில் ஆட்சியைக் கைப்பற்ற பாசிச அரசியல் இயக்கம் முயற்சிக்கிறது.

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதன் மூலமே சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என்பதுடன் வர்த்தக சமூகத்தின் நோக்கங்களை அடைய முடியும் என்பதைக் கூற வேண்டும்.

கடந்த வாரம் முழுவதும், நமது பங்குச் சந்தை வேகமாக சரிந்தது. ஆனால் இன்று பங்குச்சந்தை மீண்டு வருகிறது.

ஏனெனில், அரச ஊழியர்களின் தபால்மூல வாக்குகளில் பெரும்பான்மையான கேஸ் சிலிண்டருக்கு வழங்கப்பட்டுள்ளதன் மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி நிச்சயம் என்பதை அனைத்து அறிக்கைகளும்

கணக்கெடுப்புகளும் உறுதிப்படுத்தியுள்ளன என்பதாலேயே இந்த முன்னேற்றம் எற்பட்டுள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் மீண்டும் நம்பிக்கை உருவாகியுள்ளது.

இந்த நாடு இரத்தக் குளமாகி, பயங்கரமானதாக மாறிவிடுமோ என்ற சந்தேகத்தினால் எதிர்காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்த சுற்றுலாப் பயணிகள் தமது பயணங்களை இரத்துச் செய்யத்

தூண்டப்பட்டுள்ளனர் என்பதை சுற்றுலாத் துறையுடன் தொடர்புடையவர் என்ற வகையில் நான் பொறுப்புடன் கூறுகிறேன்.

நம் நாட்டின் இரண்டு முக்கிய வருமான ஆதாரங்கள் சுற்றுலாத்துறை மற்றும் அந்நியச் செலாவணி ஆகும். இன்று அதற்கும் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் வெளிநாடுகளில் இருந்து சுமார் மூன்று இலட்சம் இலங்கையர்கள் ஜே.வி.பிக்கு வாக்களிக்க வருவார்கள் என்ற பொய்யான அலை

உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போலி அலை காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களது பயணத்தை இரத்து செய்துள்ளனர்.

இந்த போலி அலை காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்துள்ளனர்.’’ என்று தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவை வெற்றி பெற வைப்போம்
Posted in இலங்கை செய்திகள்

சஜித் பிரேமதாசவை வெற்றி பெற வைப்போம்

சஜித் பிரேமதாசவை வெற்றி பெற வைப்போம்

சஜித் பிரேமதாசவை வெற்றி பெற வைப்போம் ,முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் இணைந்து ​நேற்று (10) மதியம் மன்னாரில் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக தீர்மானிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் குறித்த முடிவை ஆதரித்து தொடர்ச்சியாக பிரசார பணிகளை மேற்கொள்வதற்காக விரைவான செயற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கான முன்னாயத்த கூட்டம் மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.

குறித்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியின் முக்கியஸ்தர் பல்வேறு விடயங்களை முன்வைத்திருந்தனர்.

குறிப்பாக சிலர் எமது கட்சியில் இருந்து சில சலுகைகளுக்காக அண்மைய நாட்களாக கட்சி தாவல்களில் ஈடுபடுவதாகவும் தோற்பார் என்று தெரிந்து ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாகவும் இது கட்சியையோ அல்லது கட்சியின் வாக்குகளையோ எந்த விதத்திலும் பாதிக்காது என தெரிவித்தனர்.

இலங்கை முழுவதும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருப்பதாகவும் தலைமையின் முடிவின் அடிப்படையில் மக்கள் சஜித் பிரேமதாசவுக்கு தங்கள் ஆதரவை தெரிவிப்பார்கள் எனவும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

அதே நேரம் முன்பை விட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக உழைக்க போவதாகவும், தலைமையின் கரங்களை பலப்படுத்துவதற்கான தீர்மானமும் குறித்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்திருந்தனர்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம்
Posted in இலங்கை செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் தமிழரசுக் கட்சி உறுப்பினர் அகிலன் முத்துக்குமாரசாமியின் ஏற்பாட்டில் நேற்று (10) பிற்பகல் 3 மணிக்கு யாழ். கொடிகாமம் நட்சத்திர மஹால் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஜிலானி பிரேமதாச, உமாசந்திரா பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது தென்மராட்சி விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் வெற்றியீட்டிய வீர வீராங்கனைகளுக்கான வெற்றிக் கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன

ஜனாதிபதியின் கேள்விக்கு அனுர ஏன் பதில் கூறவில்லை
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியின் கேள்விக்கு அனுர ஏன் பதில் கூறவில்லை

ஜனாதிபதியின் கேள்விக்கு அனுர ஏன் பதில் கூறவில்லை

ஜனாதிபதியின் கேள்விக்கு அனுர ஏன் பதில் கூறவில்லை ,திசைகாட்டியின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதிப் பொருளாதாரமா அல்லது இறக்குமதிப் பொருளாதாரமா என்று கேட்டதற்குப் பதிலளிக்காத அநுர திஸாநாயக்க தன்னை விவாதத்திற்கு அழைக்கிறார்.

தன்னுடன் விவாதத்திற்கு வர முன்னர் அநுர, சுனில் ஹந்துன்நெத்தி, ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் தனியாக விவாதம் நடத்தி நாட்டுக்குத் தமது சரியான பொருளாதாரக் கொள்கையைச் கூற வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தான் முன்னர் குறிப்பிட்டதுபோல், அநுரவும், தானும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பங்கேற்கும் காணொளி

உரையாடலுக்கு நேரத்தை ஒதுக்க முடியும் என்று தெரிவித்த ஜனாதிபதி, யாருக்கும் பேச இடமளிக்காமல் பேசக்கூடிய சஜித்தையும் இதற்கு அழைக்கலாம் எனவும் சுட்டிக்காட்டினார்.

குருநாகல் அஸ்லியா கோல்டன் கிரசென்டா ஹோட்டலில் நேற்று (10) பிற்பகல் நடைபெற்ற குருநாகல் மாவட்ட அறிஞர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினருடான கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், 8,900 பில்லியன் ரூபாய் செலவும், 4,900 பில்லியன் ரூபாய் வருமானமும், 4,000 பில்லியன் ரூபாய் பற்றாக்குறையும் கொண்ட நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கும் கொள்கைப் பிரகடனத்தை அனுரகுமார

திஸாநாயக்க ஏன் தனது விஞ்ஞாபனத்தில் வெளியிட்டுள்ளார் என்று கேள்வி எழுப்பிய ஜனாதிபதி, மேடைகளில் பொய்யாகக் கூச்சல் எழுப்பாமல் தமது சரியான பொருளாதாரக் கொள்கையை நாட்டுக்கு முன்வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“குருநாகல் மாவட்டத்துடன் எனக்கு நீண்டகாலப் பிணைப்பு இருக்கிறது. 1978 ஆம் ஆண்டு கம்பஹாவில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தியை குருநாகல் வரை கொண்டு வருகின்றோம். அந்தப் விரைவில் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு எனக்கு என்ன நடந்தது என இங்கு கேள்வி எழுப்பப்பட்டது. சஜித்துக்கும் அநுரவுக்கும் என்ன நடந்தது என்று நான் கேட்டிருக்க வேண்டும். உணவு, மருந்து, எரிபொருள், எரிவாயு, உரம் இன்றி மக்கள் தவிக்கும்போது சஜித்துக்கும் அநுரவுக்கும் மக்களுக்காக வருத்தமும்

வேதனையும் ஏற்படவில்லையா? மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லையா? அவர்கள் அப்படிச் செய்திருந்தால் இன்று நான் இங்கு இருந்திருக்க மாட்டேன். அவர்கள் தமது பொறுப்புக்களை சரியாக

நிறைவேற்றாத காரணத்தினால்தான், ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து நாட்டின் ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்க நேர்ந்தது.

எனக்குப் பல அரசியல் கட்சிகளின் ஆதரவு கிடைத்தது. அந்த ஆதரவுடன் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு வந்தேன்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகும்போது சபாநாயகரை தற்காலிக ஜனாதிபதியாக நியமித்து தேர்தலுக்குச் சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும்? அதிகார இடைவெளியை

உருவாக்கியிருந்தால் இன்று வங்கதேசம் இருக்கும் நிலையில் நாமும் இருக்க வேண்டியிருக்கும்.

நாட்டின் பொறுப்பை ஏற்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு வந்தோம்.

அடுத்த ஆண்டு, மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைப்பதற்கான முயற்சிகளை எடுப்போம். நாடு முழுவதும் முதலீட்டு வலயங்களை உருவாக்குவதோடு,

விவசாயத்தை நவீனமயமாக்கும் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்திருக்கிறோம். இளையோருக்கான தொழில் வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்களின்படி நாம் செயல்பட்டால், கடன் பெறுவதற்கான தேவைகள் குறைவாகவே இருக்கும்.

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின்படி எதிர்காலத்தில் இந்நாட்டின் செலவு 6,800 பில்லியன் ரூபாயாகவும், வருமானம் 5,100 பில்லியன் ரூபாயாகவும் காணப்படுவதோடு, இடைவெளி 1700 பில்லியன் ரூபாயாகக்

காணப்படும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.2 சதவீதமாகும். எனவே, இந்த இடைவெளியை நிரப்பும் இயலுமையும் எமக்கு உள்ளது.

ஆனால் ஜேவிபி தருவதாக கூறும் நிவாரணங்களை வழங்கினால் செலவு 8,900 கோடி ரூபாயாகவும், வருமானம் 4,900 பில்லியன் ரூபாயாகவும் காணப்படும். அத்தோடு வரிக் குறைப்பு தொடர்பிலும் பேசுகின்றனர்.

அதன்படி வரவு செலவுத் திட்ட இடைவெளி 4000 பில்லியன் ரூபாயாக அமையும். பின்னர் பட்ஜெட் இடைவெளி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.9 சதவீதமாக காணப்படும்.

இவ்வாறான பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல முடியுமா என்பது கேள்விக்குறியாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மீறி சந்தையில் பணம் வாங்கினால், வட்டி 25% ஆக இருக்கும். இப்படியான மாற்றத்தையா அவர்கள் எதிர்பார்க்கின்றனர்?

அதனால் டொலரின் பெறுமதி 500 ரூபாயாக உயர்வடையும். சர்வதேச நாணய நிதியத்துடனான நிபந்தனைகளை மீறிவிட்டால் அவர்களின் ஆதரவு இரத்தாகும். அதனால் நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கி நகரும்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப, ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்குச் செல்ல வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அண்மையில் அனுரகுமார திஸாநாயக்கவும் களனி பிரதேசத்தில் ஏற்றுமதி பொருளாதாரத்தையும் நடைமுறைப்படுத்துவதாக கூறியிருந்தார்.

ஆனால் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை இரத்துச் செய்வதாகவும் அவரின் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் இன்றி எவ்வாறு ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்குச் செல்ல முடியும்? சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களினாலேயே பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப சுதந்திரம் கிடைக்கும்.

நாம் பொருளாதாரப் பரிமாற்ற சட்டத்தைக் கொண்டுவந்தபோது, சுனில் ஹந்துன்நெத்தியும், ஹர்ஷன சூரியப்பெருமவும் ஏற்றுமதி பொருளாதாரம் இந்த நாட்டின் அரசியலமைப்பிற்கு எதிரானது என வழக்குத் தொடுத்தனர்.

ஆனமடுவவில் நடைபெற்ற கூட்டத்தில் அநுர என்னை விவாதத்திற்கு அழைத்திருப்பதாக அறிந்தேன்.

அவர்கள் ஏற்றுமதி பொருளாதாரத்தை முன்னெடுக்கப் போகிறார்களா அல்லது இறக்குமதியிலேயே தங்கியிருப்பார்களா என்பதை முதலில் சொல்ல வேண்டும்.

எனவே, முன்னாள் விவசாய அமைச்சர் அநுரகுமார திஸாநாயக்க, சுனில் ஹந்துன்நெத்தி, ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோருக்கு இடையில் விவாதம்

நடத்தி அவர்களின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதிப் பொருளாதாரமா, இறக்குமதிப் பொருளாதாரமா என்பதை முதலில் நாட்டுக்கு அறிவிக்க வேண்டும்.

நான் முன்பே அழைப்பு விடுத்ததுபோல் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளருடன் நானும், அநுரகுமார திசாநாயக்கவும் பங்கேற்கும் பகிரங்க சந்திப்பொன்றை நடத்துவோம். அதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

தேவைப்பட்டால் சஜித் பிரேமதாசவையும் அழைக்கலாம். சஜித் பேச ஆரம்பித்தால் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளருக்கு பேச நேரம் எஞ்சாது. இருப்பினும் சஜித்தையும் அழைப்போம்.

எனவே, அவரின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதி பொருளாதாரமா இறக்குமதி பொருளாதாரமா என்பதை அநுரகுமார திசாநாயக்க எமக்கு முதலில் கூற வேண்டும். பொருளாதாரத்தை நாசமாக்கி நாட்டை வங்குரோத்து அடையச் செய்யக்கூடிய வரவு செலவு திட்ட யோசனைகளை

முன்மொழிந்திருப்பது ஏன் என்று அவர்களிடம் கேட்கிறேன். அதனால் மேடைகளில் கோசமிடுவதை நிறுத்திவிட்டு சரியான பொருளாதார திட்டத்தைத் முன்மொழியுமாறு அறிவுறுத்துகிறேன்.”


ஜனாதிபதியிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும் அதற்கு ஜனாதிபதி வழங்கிய பதில்களும் கீழே தரப்படுகின்றன.

கேள்வி:
இது நாம் சிறுபராயத்தில் பார்த்த இலங்கை அல்ல. அக்காலத்தில் எழுத்தறிவு விகிதம் ஐம்பது சதவீதம் வரைதான் இருந்தது. இன்று 30 வயது வரையிலான கல்வியறிவு 100% என்றும் முழுமையான எழுத்தறிவு 92% என்றும் வானொலி தகவல் ஒன்றில் அறிந்தேன்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட வங்குரோத்து நிலைக்கு அபிவிருத்தி நடவடிக்கையற்ற நிதி முகாமைத்துவம், நிதிக் கட்டுப்பாடு மற்றும் நிதி ஒழுக்கமின்மை ஆகிய நெருக்கடிகளே காரணமாக அமைந்தன. ஆனால் அனைவர் மீதும் ஏன் குற்றம் சாட்டப்படுகிறது?

பதில்:
நாட்டின் ஏனைய முன்னேற்றங்களை மறந்து விடுவோம். தம்புத்தேகமவில் ஒரு சிறிய பாடசாலை இருந்தது. மத்திய வித்தியாலயமாக மாற்ற கட்டங்கள் வழங்கப்பட்டன.

அந்தப் பாடசாலையில் அநுர திஸாநாயக்க என்ற மாணவர் ஒருவர் இருந்தார். பாடசாலைக் கல்வியின் பின்னர் களனிப் பல்கலைக்கழகத்தில் பிரவேசித்தார். அதுவும் ஜனாதிபதி ஜே. ஆர்.ஜெயவர்தனவின் காலத்தில் கட்டப்பட்ட பல்கலைக்கழகம்.

அங்கிருந்து வெளியேறி நாட்டின் தலைநகரான ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் கட்டப்பட்ட பாராளுமன்றத்துக்கு வந்தார். 76 வருடங்களாக இந்த நாட்டில் எதுவும் நடக்கவில்லை என்று அவர் பாராளுமன்றத்தில் கூறுகிறார்.

மேலும், தெற்காசியாவிலேயே நமது நாடு சிறந்த மனித வளர்ச்சிக் குறியீட்டைக் கொண்டுள்ளது.

அப்படியானால், 76 ஆண்டுகளில் ஏதோ நடந்துள்ளது. 1947 இல், இந்த நாட்டில் சுமார் 2000 பாடசாலைகள் இருந்தன.

இப்போது நாடு முழுவதும் பாடசாலைகள் உள்ளன. இன்று நாடு முழுவதும் மின்சாரம் உள்ளது. அப்போது வீடுகளில் மின்சாரம் இருக்கவில்லை. குருநாகலுக்கு சிறிய ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கட்டது.

அன்று ஒரே ஒரு பல்கலைக்கழகம் மட்டுமே இருந்தது. இன்று 17 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இன்று எத்தனை கைத்தொழில் வலயங்கள் உள்ளன? அப்படியானால், எதுவும் நடக்கவில்லை என்று சொல்ல முடியுமா? ஆனால் மாற்றம் தேவை என்று கூறி தமக்குத் தேவையானவர்களை அதிகாரத்திற்குக் கொண்டுவர முயல்கிறார்கள்.

இது தான் இவர்கள் எதிர்பார்க்கும் மாற்றமாகும். இருக்கும் அனைவரையும் அனுப்பிவிட்டு இவர்கள் யாரை நியமிக்கப் போகிறார்கள்? பனியனில் ஓட்டைகள் உள்ளவரையா? இவர்கள் மிகப் பெரிய பொய்யை பரப்புகிறார்கள்

. கடன் வாங்கிய பணத்தை வருமானம் ஈட்ட முடியாத விடயங்களுக்கு செலவழித்ததால் தான் எங்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.

இதில் குறிப்பிட்ட தொகையை வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியிருந்தால் பிரச்சினை எழுந்திருக்காது.


கடைசியில் கடனை அடைக்கும் ஆற்றல் எங்களிடம் இல்லை. சமூக மேம்பாட்டுக்காக நாங்கள் கடன் பெற்றாலும், மீதமுள்ள கடன்கள் நிர்வாகத்திற்கும், உள்கட்டமைப்புக்கும் பயன்படுத்தப்பட்டன.

அதில் எங்களுக்கு எந்த வருமானமும் கிடைக்கவில்லை. அதுதான் பிரச்சினையாக மாறியது.

கேள்வி:
நீங்கள் பிரதமராக இருந்தபோது அரசியல் பழிவாங்கலுக்கு ஆளான பலருக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்ட போதும் மாகாண மட்டத்தில் அது நடைமுறைப்படுத்தப்படாத சந்தர்ப்பங்களும் உள்ளது.

இம்முறை ஜனாதிபதியான பின்னர் அதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

பதில்:
அரசியல் பழிவாங்கல் தொடர்பான பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். நான் பிரதமராக இருந்த காலத்தில் சிலருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

மேலும், கடந்த காலத்தில் வீடுகள் எரிக்கப்பட்டவர்களின் பிரச்னைக்கும் தீர்வு காண வேண்டும்.

ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் உள்ளன.

அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அனைத்துத் தரப்பு அரசியல் தீர்வையும் வழங்க எதிர்பார்க்கிறோம்.

கேள்வி:
கிராமங்களில் உள்ள சமூகத் தலைவர்களை அரச நிர்வாகத்தில் இணைத்துக் கொள்ளும் எண்ணம் உங்களுக்கு உள்ளதா?

பதில்:
ஜனசபையை நிறுவும் பணியை மேற்கொள்ளும் பொறுப்பு கரு ஜெயசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதற்கான செயலகமும் சட்டமும் தயாராகி வருகின்றன. எதிர்காலத்தில் அவை சட்டமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

திசைகாட்டி காந்தம் மூலம்தான் திசையைக் கண்டறிகிறது. காந்தம் தவறாக இருந்தால், அது தவறான திசையை சுட்டிக்காட்டும். அதுதான் நடந்திருக்கிறது.

கேள்வி:
ஜனாதிபதி அவர்களே, தற்போதைய கல்வி முறையில் ஏதோ சிக்கல் காணப்படுகிறது. இளைஞர்களின் எதிர்காலத்தை வெல்வதற்கான உங்கள் கவனத்தையும் நான் அறிய விரும்புகிறேன்?

பதில்:
கல்வி முறையில் பல சிக்கல்கள் உள்ளன. பாடசாலை சபை போன்றவற்றை நிறுவி நிர்வாகத் தரப்பின் ஊடாகத் தீர்வு காண கல்வி அமைச்சர் செயல்பட்டு வருகிறார். பாடவிதானங்களில் கவனம் செலுத்தி, 2040 ஆம் ஆண்டுக்கு ஏற்ற கல்வி முறையை உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளோம்.

இதற்கு சுமார் 5-10 ஆண்டுகள் ஆகும். 2050 உங்கள் எதிர்காலம் என Gen Z சந்ததியினருக்கு சொல்கிறேன். அதற்கான வழியைத் தயார் செய்வதிலேயே எனது கவனம் உள்ளது.

நான் 2050 என்று சொன்னபோது ஏன் 2050 என்று ஐ.ம.ச.யினர் வினவுகின்றனர். திசைகாட்டியும் அதே கேள்வியைக் கேட்கிறது. இது அவர்களுக்குப் புரியவில்லை. எதிர்காலத்தில் எவ்வாறான உலகம் வரப்போகிறது என்று நாம் மட்டும்தான் சிந்திக்கிறோம்.

மேலும், குருநாகல் மாவட்டத்திற்கு நவீன விவசாயத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறேன். அத்துடன், தென்னைச் செய்கை அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குருநாகல் ஒரு அதிர்ஷ்டமான மாவட்டம். அந்த செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

கேள்வி:
ஜனாதிபதி அவர்களே, ஜே.வி.பி இந்த நாட்டைப் பெரிதும் சேதப்படுத்திய கட்சி. ஆனால் திசைகாட்டி என்ற இந்த கட்சியின் திடீர் அலைக்கு என்ன காரணம்?

பதில்:
பாரம்பரிய எதிர்க்கட்சி சரியாக செயற்படாததால்தான் திசைகாட்டி முன்னிலைக்கு வந்தது. எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் எதிர்க்கட்சியில் உள்ள மற்றொரு கட்சியை முன்னேற அனுமதிக்கக் கூடாது.

டட்லி சேனநாயக்க முதல் ஒவ்வொரு தலைவரும் அதைத்தான் செய்தார்கள். எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் வேறு கட்சி தலைதூக்க இடமளித்தால் எதிர்க்கட்சியின் பணிகளைத் தொடர முடியாது.

அவர்களுக்கு வாக்கு கிடைக்குமா, கிடைக்காதா என்பது தெரியவில்லை. சிலர் அரசாங்கத்திற்கு எதிராக வாக்குகளைப் பயன்படுத்த விரும்பினால், அவர்கள் திசைகாட்டியை நோக்கிச் செல்கிறார்கள்.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் மணிக்கணக்கில் உரை நிகழ்த்தி நேரத்தை வீணடித்து வருகிறார். அனுரவும் சஜித்தும் இரண்டாம் இடத்துக்காகப் போராடி வருகின்றனர்.

தபால் மூல வாக்களிப்பில் சஜித் பிரேமதாச 3 ஆவது இடத்திற்கு வீழ்ந்திருந்தார். சஜித்தால் தனது எதிர்க்கட்சித் தலைமையை பாதுகாக்க முடியாதிருக்கும்போது நாட்டை எப்படிப் பாதுகாக்க போகிறார்?

கேள்வி:
நமது நாட்டில் அணுசக்தி பயன்பாட்டுக்கான சாத்தியங்கள் உள்ளன. அதற்கான ஆயத்தங்கள் உள்ளனவா?

பதில்:
ஆம். இயற்கை வலுசக்தியை பயன்படுத்தும்போது அணுசக்தியும் தேவைப்படலாம். இது பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அணு உலை அமைந்துள்ளது. அவ்வாறான நிலைக்கு நாமும் செல்ல வேண்டியிருக்கும். 21ஆம் திகதி சிலிண்டருக்கு வாக்களித்தால் அந்த நிலைக்கு நகரலாம்.

கேள்வி:
குருநாகல், தம்பதெனிய, யாப்பஹுவ, படுவஸ்நுவர பிரதேசங்களை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்ய உத்தேசித்துள்ளீர்களா? மேலும், உலகிலேயே சிறந்த கிரபைட்டைக் கொண்ட குருநாகலில், அது சார்ந்த தொழில்துறையை மேம்படுத்தத் தீர்மானித்துள்ளீர்களா?

பதில்:
இலங்கையில் மிகப் பெரிய கிராபைட் சுரங்கம் கஹடகஹா பகுதியிலுள்ள சுரங்கமாகும். தற்போது கிராபைட் கையிருப்பு தொடர்பிலான பிரச்சினை எழுந்துள்ளது. நவீன அறிவியல் ஆய்வு அறிக்கை பெறப்பட உள்ளது.

ராகேதர பகுதியிலும் கிராபைட் சுரங்கம் ஒன்று உள்ளது. கஹடகஹா சுரங்க கிராபைட் உலகின் சிறந்த கிராபைட் வகைகளில் ஒன்றாகும். மேலும், நாடு முழுவதும் உள்ள கனிம வளங்களைக் கண்டறியும் திட்டத்தைத்

ஆரம்பிக்கவுள்ளோம். மேலும் குருநாகல், தம்பதெனிய, யாப்பஹுவ, படுவஸ்நுவர ஆகிய பிரதேசங்களை சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்வது குறித்தும் கவனம் செலுத்துகிறோம். கட்டுநாயக்க விமான

நிலையத்திற்கு அருகாமையில் உள்ளதால், இந்தப் பகுதியில் புதிய ஹோட்டல்களை அமைக்கும் திட்டமும் உள்ளது. குறிப்பாக யாப்பஹுவ உலகப் புகழ் பெற்றதையடுத்து அதன் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கேள்வி:
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 65% விவசாயத்தில் தாக்கம் செலுத்தும். மேலும் நாட்டில் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கான சாத்தியங்களும் உள்ளன. அது குறித்து கவனம் செலுத்தியிருக்கிறீர்களா?

பதில்:
நவீன விவசாயத்திற்கு மாறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மேலும், வன்னி ஹத்பத்து பிரதேசத்தில் சூரிய சக்திக்கான திறன் காணப்படுகிறது. ஆனால் குருநாகல் மாவட்டத்தை டிஜிட்டல்

பொருளாதாரத்துடன் அபிவிருத்தி செய்வதே எமது நோக்கமாகவுள்ளது. குருநாகல் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதன் பின்னர் பாரிய டிஜிட்டல் பொருளாதார வலயமொன்று உருவாக்கப்படும்.

அதேவேளை கண்டியில் மற்றுமொரு டிஜிட்டல் பொருளாதார வலயம் உருவாக்கப்படும். இந்த இரண்டு வலயங்களும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையால் இணைக்கப்பட்டுள்ளன. அந்த நடவடிக்கைகள்

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும். மேலும், வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் கனிம வளங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


மேலும் சீனாவுக்கு துரியான் ஏற்றுமதி செய்யும் புதிய திட்டம் மாவத்தகமவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கு பொருத்தமான பகுதிகளை அடையாளம் காண வேண்டும்.

குருநாகல், குளியாபிட்டிய, ஹலவத்தை ஆகிய 3 நகரங்களையும் ஒன்றிணைத்து கல்வித்துறை மேம்படுத்த வேண்டும்.

கேள்வி:
இந்நாட்டின் நிலையான சம்பளம் பெறாத கஷ்டங்களை எதிர்கொள்ளும் மக்களுக்காக ஏதாவது வேலைத்திட்டம் உங்களிடம் உள்ளதா?

பதில்:
இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் மாதச் சம்பளம் பெறுவதில்லை. விவசாயம், மீன்பிடித்தல், சுயதொழில் போன்ற சிறுதொழில்களை செய்பவர்களே உள்ளனர்.

இந்த முறைசாரா தொழில் துறைக்கென தனித் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு தனியான நிதி மற்றும் ஓய்வூதியத் திட்டம் உள்ளது. அனைவரும் அதற்குள் இணைந்துகொள்ள விரும்பாவிட்டாலும் ஓரளவானவர்கள் இணைவர். மேலும், இலங்கையிலும் தனியார் முதலீட்டு ஓய்வூதிய நிதி திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும்.

அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளில் பெரும்பாலான மக்கள் இத்தகைய ஓய்வூதிய நிதியில் வாழ்கின்றனர். இப்போது இந்தியாவிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர்களான அசங்க நவரத்ன, மஞ்சுலா திசாநாயக்க, குருநாகல் கல்வியல் மற்றும் வர்த்தகர்கள் கலந்துரையாடலின் ஒருங்கிணைப்பாளர் எம்.பீ.திசாநாயக்க,கலாநிதி சமிந்த மலலசேகர,

பொல்கஹாவெல, ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் தம்மி ரத்நாயக்க, குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி தொகுதி அமைப்பாளர் நுவன் லியனகே உள்ளிட்டோரும் பிரதேச அரசியல் தலைவர்களும், தொழில் வல்லுனர்கள் உட்பட பெருமளவானர்களும் கலந்துகொண்டிருந்தன

தபால் மூல வாக்களிப்புக்கு மீண்டும் சந்தர்ப்பம்
Posted in இலங்கை செய்திகள்

தபால் மூல வாக்களிப்புக்கு மீண்டும் சந்தர்ப்பம்

தபால் மூல வாக்களிப்புக்கு மீண்டும் சந்தர்ப்பம்

தபால் மூல வாக்களிப்புக்கு மீண்டும் சந்தர்ப்பம்.ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி தபால் மூல வாக்களிப்பு இன்றும் (11) நாளையும் (12) இடம்பெறவுள்ளதாக என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூலம் வாக்களிப்பதற்காக கடந்த 4, 5 மற்றும் 6ம் திகதிகளில் வாக்களிக்க முடியாத அனைத்து அரசு ஊழியர்களும் இந்த இரண்டு நாட்களிலும் தபால் மூலம் வாக்களிக்கலாம் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு தினங்களில் தபால் மூல வாக்குகளைப் அடையாளப்படுத்தாவிட்டால் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் செப்டம்பர் 21ஆம் திகதி அல்லது வேறு எந்த நாளிலோ வாக்குகளை அளிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று தபால்மூல வாக்களிப்பை பயன்படுத்தும் வாக்காளர்கள் தமது பணியிடங்கள் அமைந்துள்ள மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகம் அல்லது பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சென்று வாக்களிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் எகிப்திய எல்லை அருகில் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் எகிப்திய எல்லை அருகில் தாக்குதல்

இஸ்ரேல் எகிப்திய எல்லை அருகில் தாக்குதல்


இஸ்ரேல் எகிப்திய எல்லை அருகில் தாக்குதல் ,எகிப்திய எல்லைக்கு அருகில் சியோனிச எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


தெஹ்ரான், செப். 10 (எம்என்ஏ) – எகிப்து எல்லை மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகே இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையைத் தொடர்ந்து, பல சியோனிச வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர் என்று பாலஸ்தீனிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாலஸ்தீனிய எதிர்ப்பை ஆதரித்த இரண்டு இளம் எகிப்தியர்கள், எகிப்துக்கும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திற்கும் இடையிலான எல்லைப் புள்ளிகளில் சியோனிச எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக பாலஸ்தீனிய செய்தி ஆதாரங்கள் செவ்வாயன்று தெரிவித்தன.

எகிப்துடனான எல்லைப் புள்ளிகளில் பல இஸ்ரேலிய வீரர்கள் மீது கார் ஒன்று ஓடியதாகவும், அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் சியோனிஸ்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தத் தாக்குதலில் பல சியோனிச வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், காயமடைந்ததாகவும் ஆதாரங்கள் தெரிவித்தன, ஆனால் இந்த உயிரிழப்புகள் குறித்த நம்பகமான புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை.

பிரிட்டன் யேமனில் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பிரிட்டன் யேமனில் தாக்குதல்

பிரிட்டன் யேமனில் தாக்குதல்


பிரிட்டன் யேமனில் தாக்குதல் ,டெஹ்ரான், செப். 09 (எம்என்ஏ) – மேற்கு யேமனின் துறைமுக நகரான ஹுதைதாவுக்கு அருகில் உள்ள அல் ஜபானாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் போர் விமானங்கள் புதிய தாக்குதலை நடத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசா பகுதியில் டெல் அவிவ் ஆட்சியின் மிருகத்தனமான ஆக்கிரமிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செங்கடலில் இஸ்ரேலுடன் இணைந்த கப்பல் போக்குவரத்து மீதான அரபு நாடுகளின் தாக்குதல்களுக்கு பதிலடியாக யேமனில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் புதிய இராணுவத் தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

யேமனின் உத்தியோகபூர்வ சபா செய்தி நிறுவனம், பெயர் தெரியாத நிலையில் பேசும் ஒரு பாதுகாப்பு ஆதாரத்தை மேற்கோள் காட்டி, வான்வழித் தாக்குதல் திங்களன்று மூலோபாய மேற்கு மாகாணமான ஹுதைதாவில் உள்ள ஜபானா பகுதியை குறிவைத்து, மேலும் விவரங்களை வழங்காமல் தெரிவித்தது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான அதன் போரில், குறிப்பாக அக்டோபர் 7 ம் தேதி காசா மீது பேரழிவுகரமான போரை ஆட்சி கட்டவிழ்த்துவிட்ட பிறகு, யேமன்கள் பாலஸ்தீனத்துடன் தங்கள் ஒற்றுமையை வெளிப்படையாகக் குரல் கொடுத்துள்ளனர்.

டெல் அவிவ் ஆட்சி இதுவரை குறைந்தது 40,988 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளது, பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள், மேலும் 94,825 பேர் காயமடைந்துள்ளனர் என்று காசாவை தளமாகக் கொண்ட சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களுக்கு எரிபொருள், மின்சாரம், உணவு மற்றும் தண்ணீர் ஆகியவற்றைத் துண்டித்து, ஆக்கிரமிப்பு நிறுவனம் பிரதேசத்தின் மீது “முழுமையான முற்றுகையை” விதித்துள்ளது.

காசாவில் இஸ்ரேலின் தரை மற்றும் வான்வழித் தாக்குதல்கள் முடிவடையும் வரை தங்கள் தாக்குதல்களை நிறுத்தப் போவதில்லை என்று ஏமன் ஆயுதப் படைகள் கூறியுள்ளன.

அன்சாருல்லா எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் அப்துல்-மாலிக் அல்-ஹூதி, “அமெரிக்காவை நேரடியாக எதிர்கொள்வது ஒரு பெரிய மரியாதை மற்றும் ஆசீர்வாதம்” என்று கூறினார்.

இந்த தாக்குதல்கள் உலகளவில் பல பெரிய கப்பல் மற்றும் எண்ணெய் நிறுவனங்களை மிக முக்கியமான கடல் வர்த்தக வழிகளில் ஒன்றின் வழியாக தங்கள் போக்குவரத்து நடவடிக்கைகளை நிறுத்த நிர்ப்பந்தித்தன.

உக்ரைன் பாரிய இழப்புகளைச் சந்தித்துள்ளது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள்

உக்ரைன் பாரிய இழப்புகளைச் சந்தித்துள்ளது

உக்ரைன் பாரிய இழப்புகளைச் சந்தித்துள்ளது

உக்ரைன் பாரிய இழப்புகளைச் சந்தித்துள்ளது
குர்ஸ்க்: ரஷ்யாவில் உக்ரைன் பாரிய இழப்புகளைச் சந்தித்துள்ளது
தெஹ்ரான், செப். 09 (எம்என்ஏ) – ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் கடந்த

மாதம் ஊடுருவியதில் இருந்து உக்ரைன் சுமார் 11,400 துருப்புக்களை இழந்துள்ளதாக மாஸ்கோவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

ரஷ்ய இராணுவம் 89 டாங்கிகள், 42 காலாட்படை சண்டை வாகனங்கள், 74 கவசப் பணியாளர் கேரியர்கள், 635 கவச போர் வாகனங்கள், 371 கார்கள், 85 பீரங்கித் துண்டுகள் மற்றும்

24 பல ராக்கெட் லாஞ்சர்கள் உட்பட 1,000 யூனிட் உக்ரேனிய இராணுவ வன்பொருள்களை அழித்துள்ளது. ரஷ்யா டுடே படி, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட HIMARS அமைப்புகள், அமைச்சகம் அதன் சமீபத்திய தினசரி புதுப்பிப்பில் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உக்ரைன் 240 படைவீரர்களையும் 13 வன்பொருள் அலகுகளையும் இழந்துள்ளது என்று அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.

கடந்த நாளில், ரஷ்ய தரைப்படைகள், பீரங்கி மற்றும் விமானத்தின் ஆதரவுடன், மிகைலோவ்கா, செர்காஸ்காயா கொனோபெல்கா மற்றும் தேசடோய் ஆக்டியாப்ரியா குடியிருப்புகளுக்கு அருகில் மூன்று உக்ரேனிய தாக்குதல்களை முறியடித்துள்ளன.

கியேவின் துருப்புக்கள் மலாயா லோக்னியா, கொரேனேவோ, கிரேமியானோயே மற்றும் மார்டினோவ்கா ஆகிய கிராமங்களை நோக்கி முன்னேற முயன்றனர், ஆனால் அவை பின்னுக்குத் தள்ளப்பட்டன.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டனர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டனர்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டனர்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர்
அல்-மவாசி முகாம் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர்.


தெஹ்ரான், செப். 10 (எம்என்ஏ) – தெற்கு காசாவில் உள்ள அல்-மவாசி முகாம் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதலைத் தொடர்ந்து குறைந்தது 100 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர்.

கான் யூனிஸ் அருகே தெற்கு காசாவில் கூடாரம் அமைத்துள்ள முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது, குறைந்தபட்சம் 40 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 60 பேர் காயமடைந்துள்ளனர் என்று அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

ஹமாஸ் கட்டளை மையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

அல்-மவாசி மீதான தாக்குதலைத் தொடர்ந்து, மனிதாபிமான வலயத்தில் கட்டளை மையத்தை நடத்துவதாக இஸ்ரேலிய இராணுவத்தின் கூற்றை ஹமாஸ் நிராகரித்துள்ளது.

“இது இந்த அசிங்கமான குற்றங்களை நியாயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தெளிவான பொய்யாகும்,” என்று ஹமாஸ் ஒரு அறிக்கையில்

கூறியது, அதன் உறுப்பினர்கள் சிவிலியன் கூட்டங்களுக்குள் இருப்பதை அல்லது இராணுவ நோக்கங்களுக்காக இந்த இடங்களைப் பயன்படுத்துவதை எதிர்ப்பை பலமுறை நிராகரித்துள்ளது.

அர்ச்சுனா உருக்கம் பசியோடு பார்த்தீபன் இருக்கிறான்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அர்ச்சுனா உருக்கம் பசியோடு பார்த்தீபன் இருக்கிறான்

பசியோடு பார்த்தீபன் இருக்கிறான் அர்ச்சுனா உருக்கம்

அர்ச்சுனா உருக்கம் பசியோடு பார்த்தீபன் இருக்கிறான் என தனது முகநூல் பதிவில் தியாக தீபம் திலீபன் நினைவில் உருகி பேசியுள்ளார் .

தியாக தீபம் திலீபன் நினைவை பகிர்ந்து அவரது நிழல்படத்தை பதிவிட்டு ,அதிலே பார்த்தீபன் இன்னும் பசியோடு தான் இருக்கிறான் என குறிப்பிட்டுள்ளார் .

ஆழ நெஞ்சத்தில் அகிம்சாவாதியின் அன்பு அர்ச்சுனா மனதில் பட்டு தெறிப்பதை இந்த விடயம் எடுத்து காண்பித்துள்ளது .

இந்தியா இராணுவத்தின் பாசிச வெறிக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த ,வீர தளபதி திலீபன்நீரும் இன்றி உண்ணாவிரதம் இருந்து தன் உயிரை அவர் ஆகுதியாக்கி கொண்டார் .

வரலாறு வரலாற்று நாயகர்களை வாழ்த்திய படியே பயணிக்கிறது .வலிகளோடு தமிழர் நெஞ்சங்களுக்கு நடக்கிறது .

தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு அவசர அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு அவசர அறிவிப்பு

தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு அவசர அறிவிப்பு

தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு அவசர அறிவிப்பு ,ஜனாதிபதி வேட்பாளர்களை விளம்பரப்படுத்தும் வகையில் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள அனைத்து ஸ்டிக்கர்களையும் உடனடியாக அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

1981 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் 74 ஆவது பிரிவின் கீழ் அது குற்றமாகும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தனியார் பஸ்கள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட தனியார் வாகனங்களில் ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளை விளம்பரப்படுத்தும் அடையாளங்கள், புகைப்படங்களுடன் கூடிய ஸ்டிக்கர்கள், கொடிகள் போன்றவற்றை காட்சிப்படுத்துவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த ஸ்டிக்கர்களை அகற்றுவதற்கு அனைத்து பொலிஸ் அதிகார பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் அவசர சோதனைகளை மேற்கொள்ளுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,041 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்த முறைப்பாடுகளில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 2,947 முறைப்பாடுகளும் வன்முறைச் செயல்கள் தொடர்பாக 25 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளமையினால், எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகளை தேவைக்கேற்றவாறு மூடுவதற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு

இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு

இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு ,ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஐரோப்பிய ஒன்றியம் நேற்று (09) தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நேற்று ஆரம்பமானது.

இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

குறித்த அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ள உண்மைகளை ஏற்றுக்கொள்வதாகவும், இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பான அறிக்கை தொடர்பில் பிரித்தானியாவும் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மெசிடோனியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைமையிலான குழுவும் இலங்கை யின் மனித உரிமைகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெற்றிபெறுவோம் நாங்கள் அனுரா
Posted in இலங்கை செய்திகள்

வெற்றிபெறுவோம் நாங்கள் அனுரா

வெற்றிபெறுவோம் நாங்கள் அனுரா

வெற்றிபெறுவோம் நாங்கள் அனுரா,இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் மகத்தான வெற்றி பெறுவோம் என ஜனாதிபதி வேட்பாளர் அனுரா திசாநாயக்க தெரிவித்துள்ளார் .

கடந்து வந்த தடை உடைத்து மக்கள் வாழ நல்ல நாட்டை உருவாக்குவோம் என அவர் தெரிவித்துள்ளார் .

இனவாதியாக விளங்கி வரும் ஜேவிபி கட்சியின் தலைவராக விளங்கி வரும் அனுரா திசாநாயக்க பேரை மாற்றி பயணித்தாலும் இவர்களது கொள்கை சிங்க பேரினவாத இனவாதமாக காணப்படுகிறது.

அவ்வாறான கால பகுதியில் மக்கள் நலன் தொடர்பாக அனுரா திசாநாயக்க பேசி வருவது வேடிக்கையாக உள்ளது என மக்கள் மன்றம் பேசி கொள்கிறது .

காப்பாற்றுவோம் மக்களை நாமல்
Posted in இலங்கை செய்திகள்

காப்பாற்றுவோம் மக்களை நாமல்

மக்களை காப்பாற்றுவோம் நாமல் கூவல்

காப்பாற்றுவோம் மக்களை நாமல் ,மட்டக்களப்பு மூத்தோர் பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாம் ராஜபக்ச மக்களை காப்பாற்றுவோம் என தெரிவித்துள்ளார் .

நாம் மக்களுக்காக வாழ்கின்றோம் அதலால் மக்களை நங்கள் காப்பாற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார் .

இலங்கை திரு நாடு இன்று இவ்விதமான பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைய காரணமாக அமைந்தது மகிந்தக்குடும்பத்தின் கொள்ளை காரணம் என்பதை மறந்து தேர்தலில் தாங்கள் வென்றுவிடுவோம் என்கின்ற நினைப்பில் இவ்வாறு வீர பேச்சை ஐயாநாமல் ராஜபக்ஸா பேசியுள்ள்ளார் .

சிசுவின் சடலம் ஓட்டோவில் இருந்து மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

சிசுவின் சடலம் ஓட்டோவில் இருந்து மீட்பு

சிசுவின் சடலம் ஓட்டோவில் இருந்து மீட்பு

சிசுவின் சடலம் ஓட்டோவில் இருந்து மீட்பு ,அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட என்போல்ட் தோட்டத்தில் கிளினிக்கல்ஸ் பிரிவில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் இருந்து சிசுவொன்று சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

வீட்டின் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் துர்நாற்றம் வீசியதால் முச்சக்கர வண்டியில் சென்று பார்த்த போது கறுப்பு பொலித்தீன் உரையில் போடப்பட்டு துணி ஒன்றில் சுற்றி மறைக்கப்பட்ட நிலையில் சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர்.

மேற்படி சிசுவின் சடலத்தை அவ்விடத்திற்கு கொண்டு வந்து விட்டுச் சென்றவர் தொடர்பிலும் இதுவரை எவ்வித தகவல்களும் கண்டறியவில்லை.

சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக 28 வயதுடைய முச்சக்கரவண்டியின் சாரதி சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை, நுவரெலியா மாவட்ட நீதவான் பார்வையிட்டு பின்னர் சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்ததோடு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

துரத்திய மக்கள் தப்பி ஓடிய புலிகள் ரகுபதி
Posted in இலங்கை செய்திகள்

துரத்திய மக்கள் தப்பி ஓடிய புலிகள் ரகுபதி

துரத்திய மக்கள் தப்பி ஓடிய புலிகள் ரகுபதி

துரத்திய மக்கள் தப்பி ஓடிய புலிகள் ரகுபதி ,சுவிசில் புலிகளின் அனைத்துலக கட்டமைப்பின் பொறுப்பாளராக விலகிய ரகுபதி ஆகியோரை மக்கள் ஓட ஓட துரத்திய மக்கள் .

மக்கள் பணத்தை கொள்ளையடித்து ஏப்பம் இட்டு வரும் புலிகளின் கட்டமைப்புக்களுக்கு எதிராக இப்பொழுது மக்கள் உலகளாவிய ரீதியில் கொந்தளித்த வண்ணம் உள்ளனர் .

மாவீரர்நாள் ,மற்றும் மக்களுக்கு உதவி செய்வதாக தெரிவித்து மக்களது பனத்தை கொள்ளையடித்து ,மோசடி விளையாட்டுக்களில் ஈடுபட்டு வந்த ரகுபதி ,அப்துல்லா உள்ளிட்டோரை மக்கள் துரதியடித்தனர் .

மக்கள் பணத்தில் ஆடம்பர கார்கள் ,ஜீப் என்பனவற்றை வாங்கிய ரகுபதி உள்ளிட்ட குழு தற்போது ஆடம்பர சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் .

அதனால் ஆத்திரமுற்ற மக்கள் தற்போது ஒன்று திரண்டு இந்த ஏமாற்று புலிகள் குழுக்களுக்கு எதிராக வீதி இறங்கியுள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது .

மக்களே தொடர்ந்து இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்பதாக மக்கள் கருத்தாக வெளியாகிய வண்ணம் உள்ளது .

15 வருடகாலமாக மக்களை ஏமாற்றி ,மக்கள் பந்தில் சுக போக வாழ்க்கை வாழ்ந்து வந்த இந்த புலிகள் குழுக்கள் இப்பொழுது அதே அதரவு வழங்கிய மக்களினால் விரட்டியடிக்க பட வேண்டிய நிலைக்கு மாற்றம் பெற்றுள்ளது .

இதுவே புரட்சியுயின் ஒரு படியாக உள்ளது .லண்டனில் மாடு மேய்ச்ச தரையாக விளங்கும் 137 ஏக்கர் காணியை வாங்கிய தலைமைச்செயலகம் எனும் குழு வரலாற்று மையம் எனும் பெயரில் மாவீரர் நாளினை நடத்தி வருகிறது .

இந்த 137 ஏக்கர் காணி 12 மில்லியன் ,பவுண்டுகள் அதாவது 240 கோடி இலங்கை ரூபாய்களுக்கு இந்த காணி வாங்க பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது .

ஆனால் அது தொடர்பாக இவர்கள் எதனையும் மக்களுக்கு தெரிவிக்கவில்லை .அவ்வாறான காலா பகுதியிலேயே தற்போது சுவிஸில் மாபியாவாக விளங்கும் ரகுபதி விரட்டியடிக்க பட்டுள்ளார் .

அதே போன்று லண்டன் வரலாற்று மையம் சங்கீதன் கூலி குழுவும் மக்களினால் சுற்றிவளைக்க படுவார்கள் என மக்கள் மன்றம் கருத்துரைத்த வருகின்றமை குறிப்பிட தக்கது .

மக்கள் எழுச்சியுற்று கேள்வி கேட்காத வரைக்கும் இந்த கூலி குழுக்கள் மக்களை ஏமாற்றுவதை யாராலும் தடுக்க முடியாது என்பதே நிதர்சனமாகும் .

இதில் அழுத்த காணொளி பார்க்கவும்

இஸ்ரேலுக்கு ஈரானின் பதில் கடந்த கால நடவடிக்கையிலிருந்து வேறுபட்டது
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு ஈரானின் பதில் கடந்த கால நடவடிக்கையிலிருந்து வேறுபட்டது

இஸ்ரேலுக்கு ஈரானின் பதில் கடந்த கால நடவடிக்கையிலிருந்து வேறுபட்டது


இஸ்ரேலுக்கு ஈரானின் பதில் கடந்த கால நடவடிக்கையிலிருந்து வேறுபட்டது ,இஸ்ரேலுக்கு ஈரானின் பதில் கடந்த கால நடவடிக்கையிலிருந்து வேறுபட்டது
டெஹ்ரான், செப். 08 (எம்என்ஏ) – இஸ்மாயில் ஹனியேவின் இஸ்ரேலிய

படுகொலைக்கு இஸ்லாமிய குடியரசின் பதில், ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸில் நடந்ததை விட வித்தியாசமாக இருக்கும் என்று பாக்தாத்துக்கான ஈரானின் தூதர் கூறுகிறார்.

ஈராக்கிற்கான இஸ்லாமிய குடியரசின் தூதுவர் முகமது கசெம் அல்-இ சதேக் ஈராக் ஊடகத்திடம் கூறுகையில், இஸ்ரேலின் பயங்கரவாதச் செயலுக்கு சரியான நேரத்தில் ஈரான் பதிலடி கொடுக்கும்.

டமாஸ்கஸில் உள்ள ஈரானின் தூதரகத்தின் தூதரகப் பிரிவை தாக்கிய பின்னர் இஸ்ரேல் எதிர்கொண்ட பதிலில் இருந்து வேறுபட்டதாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

“இந்த கட்டத்தில், செயல்திறன், மரணதண்டனை மற்றும் அதிகாரம் ஆகியவற்றின் அடிப்படையில் முந்தைய பதிலில் இருந்து பதில் வேறுபட்டதாக இருக்கும், இது பாதுகாப்பு மற்றும் இராணுவ தளபதிகளால் சரியான நேரத்தில் மற்றும் இடத்தில் தீர்மானிக்கப்படும்.

“1 வது உண்மையான வாக்குறுதி நடவடிக்கை அதிகாரத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்று என்னால் கூற முடியும், மேலும் அடுத்த உண்மையான வாக்குறுதி நடவடிக்கை அதிகாரத்தை செயல்படுத்துவதாக இருக்கும், மேலும் கடவுளின் அனுமதியால், ஈரானின் பதில் உறுதியானது” என்று அவர் வலியுறுத்தினார்.

ஏப்ரல் 14 அதிகாலையில், டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தின் தூதரகப் பிரிவு மீது இஸ்ரேலிய ஆட்சியின் ஏப்ரல் 1 வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இராணுவ இலக்குகளுக்கு எதிராக IRGC ஏரோஸ்பேஸ் ஃபோர்ஸ் பல்லாயிரக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியது. இஸ்ரேலிய ஆட்சியின் மீதான பதிலடித் தாக்குதலுக்கு ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் என்று ஈரான் பெயரிட்டுள்ளது.

ஜூலை 31 அன்று தெஹ்ரானில் அவர்களது இல்லம் குறிவைக்கப்பட்ட பின்னர் இஸ்மாயில் ஹனியே மற்றும் அவரது மெய்க்காப்பாளர்களில் ஒருவர் வீரமரணம் அடைந்ததாக IRGC வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்மாயில் ஹனியேவின் படுகொலை “சியோனிச ஆட்சியால் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது மற்றும் அமெரிக்காவின் கிரிமினல் அரசாங்கத்தால் ஆதரிக்கப்பட்டது” என்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஒரு அறிக்கையை வெளியிட்டது.

காசாவில் ஒரே மாதத்தில் 16 பள்ளிகள் மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல்
Posted in உலக செய்திகள்

காசாவில் ஒரே மாதத்தில் 16 பள்ளிகள் மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல்

காசாவில் ஒரே மாதத்தில் 16 பள்ளிகள் மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல்

காசாவில் ஒரே மாதத்தில் 16 பள்ளிகள் மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது: உரிமைகள் குழு.


டெஹ்ரான், செப். 08 (எம்என்ஏ) – முற்றுகையிடப்பட்ட காசா பகுதி முழுவதும் இடம்பெயர்ந்த பொதுமக்களின் தங்குமிடங்களாக மாற்றப்பட்ட பள்ளிகளை குறிவைக்கும் இஸ்ரேலின் முறையான கொள்கையில் ஆபத்தான அதிகரிப்பை ஆவணப்படுத்தியுள்ளதாக மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

Euro-Medterranean Human Rights Monitor இன் அறிக்கையின்படி, ஆகஸ்ட் தொடக்கத்தில் இருந்து, இஸ்ரேல் காசா பகுதியில் தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்பட்ட 16 பள்ளிகளை குண்டுவீசித் தாக்கியது, 217 பாலஸ்தீனியர்களைக் கொன்றது மற்றும் நூற்றுக்கணக்கானவர்களை காயப்படுத்தியது – அவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.

இஸ்ரேலிய இராணுவம் கடந்த ஒரு வாரமாக காசா மற்றும் வடக்கு காசா கவர்னரேட்டுகளில் குடியிருப்பு வீடுகள், கூட்டங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மற்றும் தங்குமிடங்கள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களை குண்டுவீசி தாக்குவதன் மூலம் பொதுமக்களை குறிவைத்து தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

மிக சமீபத்திய ஆக்கிரமிப்பில், காசா பகுதிக்கு வடக்கே ஜபாலியா அல்-நஸ்லாவில் உள்ள ஹலிமா அல்-சாதியா பள்ளியை குறிவைத்து, சனிக்கிழமை நள்ளிரவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களை அதன் களக் குழு ஆவணப்படுத்தியதாக சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட குழு கூறுகிறது. வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கு இந்த கட்டிடம் தங்குமிடமாக இருந்தது. இந்த தாக்குதலில் நான்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

முன்னதாக சனிக்கிழமையன்று, இஸ்ரேலிய விமானம் காசா நகருக்கு வடக்கே இடம்பெயர்ந்த மக்களுக்கான மற்றொரு தங்குமிடமான அம்ர் இபின் அல்-ஆஸ் பள்ளியையும் குண்டுவீசித் தாக்கியது, ஒரு குழந்தை உட்பட நான்கு பாலஸ்தீனியர்களைக் கொன்றது.

“இடம்பெயர்ந்தோரின் மேல் உள்ள பள்ளிகளை குறிவைத்து அழிப்பது நியாயமான நியாயம் இல்லை மற்றும் வேறுபாடு, இராணுவத் தேவை, விகிதாசாரம் மற்றும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமை ஆகியவற்றின் அப்பட்டமான மீறலாகும்” என்று குழு கூறியது.

சிரியா மீது இஸ்ரேல் 15 வான்வழித் தாக்குதல்களை நடத்தியது
Posted in உலக செய்திகள்

சிரியா மீது இஸ்ரேல் 15 வான்வழித் தாக்குதல்களை நடத்தியது

சிரியா மீது இஸ்ரேல் 15 வான்வழித் தாக்குதல்களை நடத்தியது

சிரியா மீது இஸ்ரேல் 15 வான்வழித் தாக்குதல்களை நடத்தியது ,சிரியா மீது இஸ்ரேல் 15 வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.


டெஹ்ரான், செப். 09 (எம்என்ஏ) – அரபு நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இஸ்ரேலிய ஆட்சியால் 15 வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சிரியாவின் உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹமாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள மஸ்யாஃப் நகரின் புறநகர்ப் பகுதியில் சியோனிச எதிரி ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.

சியோனிஸ்டுகளால் ஏவப்பட்ட ஏவுகணைகளை எதிர்கொள்ள சிரிய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று திங்கள்கிழமை அதிகாலை செய்தி வட்டாரங்கள் தெரிவித்தன.

டார்டஸ் நகரில் வெடிச்சத்தம் கேட்டதாக பல ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல் அவிவ் ஆட்சி கிழக்கு மற்றும் வடக்கு சிரியாவில் உள்ள பகுதிகளை குறிவைத்ததாக அல் மயாதீன் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டதாகவும் காயமடைந்ததாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன