ரணில் நாட்டை புதிய பிரச்சினையில் சிக்க வைத்துள்ளார்
ரணில் நாட்டை புதிய பிரச்சினையில் சிக்க வைத்துள்ளார்
ரணில் நாட்டை புதிய பிரச்சினையில் சிக்க வைத்துள்ளார் ,உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா கோவிட் தொற்று பரவல், நாட்டின் வங்குரோத்து நிலைமை என்னவற்றினால் 220 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். நாடு விழுந்திருக்கின்ற இந்த பாதாளத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும்.
தற்போது அரசாங்கம் மக்களுடைய வாழ்க்கையை சுருக்கி, பொருளாதாரத்தை சுருக்கி, தொழிலாளர் வர்க்கத்தின் மேல் சுமையை அதிகரித்து மீட்சி பெற முடியும் என்று கூறினாலும், அது பிழையான கருத்து. பொருளாதார விருத்தியின் ஊடாகவே மீட்சி பெற முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
IMF க்கு 2033 ஆம் ஆண்டிலிருந்து கடனை மீளச் செலுத்த வேண்டும். ஆனால் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் 2028 ஆம் ஆண்டிலிருந்து கடனை மீள செலுத்த தீர்மானித்து இருக்கிறது.
பொருளாதாரம் சுருக்கப்படுகின்ற போது மக்களின் வாழ்க்கை தரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டு ஏற்றுமதி விருத்தி காண்பதில்லை.
அந்த சந்தர்ப்பத்தில் டொலர் வருமானம் கிடைப்பதில்லை. கடனை மீள செலுத்துகின்ற காலத்தை குறைத்திருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாட்டை பாரிய சிக்கலுக்கு உள்ளாக்கியிருக்கின்றார் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கொழும்பு நுகேகொடையில் நடைபெற்ற ஐக்கிய குடியரசு முன்னணியின் விசேட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களும் தொழிற்சாலைகளும் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன.
ஆடை தொழிற்சாலைகள் மூடப்பட்டு ஏற்றுமதியை ஊக்குவிக்கின்ற வேலைத்திட்டங்கள் இல்லாத நிலையில், 2028 ஆம் ஆண்டு முதல் கடனை மீள செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது என எதிர்க்கட்சித்தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக 220 இலட்சம் மக்களையும் ஒன்றாக இணைத்துக் கொண்டு, உற்பத்தியும் ஏற்றுமதியையும் அதிகரித்து, பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தி, அனைவரையும் ஒன்றிணைத்த பொருளாதார அபிவிருத்தி ஒன்றையும் சுபீட்சத்தையும் உருவாக்கி வறுமையை ஒழிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாட்டின் வறுமை நிலை 30 இலட்சத்திலிருந்து 70 இலட்சம் வரை அதிகரித்திருக்கின்றது என்பது ஜனாதிபதிக்கு தெரியாது.
வறுமையை போக்குகின்ற வேலைத்திட்டங்கள் எதுவும் அவரிடம் இல்லை என்றாலும் ஐக்கிய மக்கள் சக்தியிடம் நகர, கிராமிய, தோட்டப்புறங்களில் வறுமையை ஒழிப்பதற்கான வேலைத்திட்டங்கள் காணப்படுகின்றன.
அது ஜனசவியவுக்கு சமனான நிலையில் 24 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா 20,000 ரூபா வீதம் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் சொத்துக்கள் பராட்டே சட்டத்தின் மூலம் ஏலத்தில் விடப்படுவதை நிறுத்தியது ஐக்கிய மக்கள் சக்தியே.
பராட்டே சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியதோடு இந்த நிறுவனங்கள் மீண்டும் துளிர் விடுவதற்கு மூலதனத்தை பெற்றுக் கொடுக்கவும் வேண்டும்.
ஆனால் அவை இன்னும் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக டிசம்பர் 15 ஆம் திகதி முதல் வரையறுக்கப்பட்ட காலத்திற்கு பராட்டே சட்டமூலத்தை இடை நிறுத்துவோம்.
அதன் போது வர்த்தகங்களுக்கான மூலதனத்தையும் பெற்றுக் கொடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்தோடு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக புதிய தொழில் முனைவர்கள் ஒரு மில்லியனை உருவாக்குவோம்.
அதற்கு மூலதனத்தையும் பெற்றுக் கொடுப்போம். திறமையும் ஆளுமையுமுள்ள பணியாளர் படையணியொன்றும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது தெரிவித்தார்.
பகுப்பாய்வுகளையும், தரவுகளையும் மையப்படுத்திய அரசாட்சிக்கு செல்ல வேண்டும். மக்களை மையப்படுத்திய ஆட்சிக்குச் செல்ல வேண்டும். அனைத்து கொடுக்கல் வாங்கலும் முறையாக இடம்பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
வாக்குப்பெட்டிகளை மாற்ற முடியுமா
வாக்குப்பெட்டிகளை மாற்ற முடியுமா
வாக்குப்பெட்டிகளை மாற்ற முடியுமா ,வாக்களிப்பு நிலையத்திலிருந்து வாக்கு எண்ணும் நிலையத்திற்கு வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்லும் வாகனத்தைப் பின்தொடர்ந்து செல்ல வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, வாக்குப்பதிவு நிலையத்திலிருந்து வாக்கு எண்ணும் நிலையத்திற்கு அருகிலுள்ள கடைசி பொலிஸ் அரண் வரை வாக்குப்பெட்டிகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தை பின்தொடர்ந்து செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
அவ்வாறு செய்ய வேண்டியிருந்தால், சம்பந்தப்பட்ட வாக்குளிப்பு நிலையத்தின் பெயர், பின்வரும் வாகனத்தின் எண் மற்றும் வாகனத்தில் உள்ள
பிரதிநிதிகளின் பெயர்கள் உள்ளிட்ட விரிவான தகவலை அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவரால் வாக்களிப்பு தினத்திலிருந்து மூன்று நாட்களுக்கு முன்னர் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு வழங்க வேண்டும்.
அதற்காக வழங்கப்படும் வாகன உரிமத்தை சம்பந்தப்பட்ட வாக்களிப்பு நிலையத்தில் உள்ள சிரரேஷ்ட வாக்குளிப்பு நிலைய அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பெட்டி எந்த மாற்றமும் இன்றி வாக்கு எண்ணும் மையத்தில்
ஒப்படைக்கப்படுமா? என சில அரசியல்வாதிகள் மற்றும் வேட்பாளர்கள் சந்தேகம் தெரிவித்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,500ஐ தாண்டியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல் நேற்று மாலை 4:30 மணி வரையில் பெறப்பட்ட தேர்தல் முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை 3,610 ஆகும்.
இதுவரை 3,047 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மீனவர்களுக்கு அநுர வழங்கியுள்ள உறுதி
மீனவர்களுக்கு அநுர வழங்கியுள்ள உறுதி
மீனவர்களுக்கு அநுர வழங்கியுள்ள உறுதி ,தமது அரசாங்கத்தின் கீழ் மீனவர்களுக்கு டீசல் மானியம் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு
தேவையான உபகரணங்களுக்கு வரிவிலக்கும் அளிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்
வனவிலங்கு குற்றத்திற்காக விதிக்கப்பட்ட அதிகூடிய அபராதம்
வனவிலங்கு குற்றத்திற்காக விதிக்கப்பட்ட அதிகூடிய அபராதம்
வனவிலங்கு குற்றத்திற்காக விதிக்கப்பட்ட அதிகூடிய அபராதம் ,யால தேசிய பூங்காவில் இருந்து 92 வகையான வண்ணத்துப்பூச்சிகள் உட்பட நூற்றுக்கணக்கான உள்ளூர் பூச்சிகளை கடத்த முயன்ற இத்தாலிய தந்தை மற்றும் அவரது மகனுக்கு 6 கோடி ரூபா (இல்ஙகை பெறுமதி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொகை 200,000 அமெரிக்க டொலர்களுக்குச் சமமாகும்.
பூச்சிகளை சட்டவிரோதமாக சேகரித்தல், வைத்திருத்தல் மற்றும் கடத்தியதற்காக கடந்த செப்டம்பர் மாதம் அவர்கள் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதமானது வனவிலங்கு குற்றத்திற்காக இலங்கையில் விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதமாகும்.
திஸ்ஸமஹாராம நீதவான் தரிந்து சமீர டி சில்வா கடந்த 3ஆம் திகதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக 810 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகவும், பின்னர் அது 304 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இத்தாலியர்கள் சார்பாக ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த சட்டத்தரணிகள் குழு முன்னிலையாகி, சந்தேக நபர்களை அனுதாபத்துடன் பார்த்து குறைந்தபட்ச அபராதம் விதிக்குமாறு நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
பிரதிவாதிகளுக்கு உண்மைகளை விளக்கிய நீதவான், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதிவாதிகள் வெளிநாட்டு பிரஜைகள் என்பதால், இந்த வழக்கை விரைவாக தீர்க்க நீதிமன்றம் மிக விரைவாக செயல்பட்டு, அது தொடர்பான நிபுணர் அறிக்கைகளை உடனடியாக பெற்றுக்கொண்டதாக குறிப்பிட்டார்.
வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தின்படி, பாதுகாக்கப்பட்ட விலங்குகளுக்கு எதிரான குற்றம் என்பதால், தாக்கல் செய்யப்பட்ட 304 குற்றச்சாட்டுகளிலும் இருவரும் குற்றவாளிகள் என்று நீதவான் கூறினார்.
அதன்படி, ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் உரிய அபராதத் தொகை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதுடன், அதன் மொத்தத் தொகை 6 கோடியே 1 இலட்சத்து 80,000 ரூபா என நீதவான் அறிவித்துள்ளார்.
இந்த அபராதத் தொகையை இம்மாதம் 29ஆம் திகதி செலுத்துமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், அபராதத் தொகையை செலுத்தும் வரை இரு வெளிநாட்டவர்களையும் நாட்டை விட்டு வெளியேற அனுமதியில்லை எனவும் தெரிவித்துள்ளது.
கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிசு
கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிசு
கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிசு ,லிந்துலை, என்போல்ட் தோட்டத்தில் எல்.ஜி. பிரிவில் சடலமாக மீட்கப்பட்ட சிசு, பிறந்த கையோடு வயர் ஒன்றில் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.
குறித்த தோட்டத்தில் வீடொன்றுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் இருந்தே கடந்த 10 ஆம் திகதி சிசுவின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து சந்தேகத்தின் பேரில் ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய ஆட்டோ சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது மாவனல்லை பகுதியில் இருந்து தமது தோட்டத்துக்கு வந்திருந்த பெண் ஒருவரின் பையே அது என அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய 24 வயதான பெண் கைது செய்யப்பட்ட, விசாரிக்கப்பட்டார். தனக்கும், குறித்த ஆட்டோ சாரதிக்கும் இடையில் இருந்த தகாத உறவு காரணமாகவே குழந்தை பிறந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மாவனல்லை பகுதியில் தான் வேலை செய்யும் வீட்டில் வைத்து கடந்த 5 ஆம் திகதி குழந்தை பிறந்துள்ளதாகவும், தனது சகோதரியின் உதவியுடன் குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சடலத்தை புதைப்பதற்காகவே ஆட்டோவில் அதனை அக்கரபத்தனை பகுதிக்கு எடுத்து வந்ததாகவும் பொலிஸாரிடம் அப்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதிகாலைவேளையில் சடலத்தை அடக்கம் செய்வதற்கு திட்டமிட்டிருந்ததாகவும், அதற்குள் சடலத்தை தாய் கண்டு அக்கம், பக்கத்தினருக்கு தகவல் வழங்கியதால் அதனை செய்யமுடியாமல்போனதாக ஆட்டோ சாரதி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள பெண் பொலிஸ் பாதுகாப்புடன் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார். இப்பெண்ணையும், ஆட்டோ சாரதியையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அத்துடன், குறித்த பெண்ணின் சகோதரியையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திவரும் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இஸ்ரேல் பயன்படுத்திய MK-84 வெடிகுண்டின் அம்சங்கள்
இஸ்ரேல் பயன்படுத்திய MK-84 வெடிகுண்டின் அம்சங்கள்
அல்-மவாசி முகாமில் இஸ்ரேல் பயன்படுத்திய MK-84 வெடிகுண்டின் அம்சங்கள்.
தெஹ்ரான், செப். 11 (எம்என்ஏ) – இஸ்ரேலிய ஆட்சி சமீபத்தில் காசா பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட அல்-மவாசி முகாம் மீது அமெரிக்கத் தயாரிப்பான MK-84 குண்டுகளை இனப்படுகொலை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வீசியது.
சியோனிச இஸ்ரேலிய ஆட்சியால் அப்பாவி பாலஸ்தீனியர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட மார்க் 84 அல்லது BLU-117 என்பது 2,000-பவுண்டுகள் (900 கிலோ) அமெரிக்க பொது-நோக்கு வெடிகுண்டு என்று ஆன்லைன் ஆய்வுகள் கூறுகின்றன.
இது மார்க் 80 வரிசை ஆயுதங்களில் மிகப்பெரியது. வியட்நாம் போரின் போது சேவையில் நுழைந்தது, இது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அமெரிக்க கனரக வழிகாட்டப்படாத வெடிகுண்டாக மாறியது. அந்த நேரத்தில், 15,000-
பவுண்டுகள் (6,800 கிலோ) BLU-82 “டெய்சி கட்டர்” மற்றும் 3,000-பவுண்டுகள் (1,400 கிலோ) M118 “இடித்தல்” வெடிகுண்டிற்குப் பின்னால் எடையின்
அடிப்படையில் இது மூன்றாவது பெரிய வெடிகுண்டு ஆகும். 1991 இல் 5,000 lb (2,300 kg) GBU-28, 2003 இல் 22,600 lb (10,300 kg) GBU-43/B Massive Ordnance Air Blast
குண்டு (MOAB) மற்றும் 000300000000003 இல் சேர்க்கப்பட்டதன் காரணமாக இது தற்போது ஆறாவது இடத்தில் உள்ளது. lb (14,000 கிலோ) பாரிய ஆயுத ஊடுருவி.
காசா பகுதியில் அதன் இனப்படுகொலைப் போரில், சியோனிச ஆட்சி பல்வேறு அமெரிக்கத் தயாரிப்பு ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளது.
வாஷிங்டன் போரின் முடிவை விரும்புவதாகக் கூறிக்கொண்டிருக்கும் அதே வேளையில், அது ஆட்சிக்கு அனைத்து கொடிய ஆயுதங்களையும் தொடர்ந்து வழங்கி வருகிறது.
காசா மீதான அதன் போரில், டெல் அவிவ் ஆட்சி 41,000 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றது மற்றும் 96,000 க்கும் மேற்பட்டவர்களைக் காயப்படுத்தியுள்ளது, அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.
காபூலை உலுக்கிய இரண்டு குண்டு வெடிப்புகள்
காபூலை உலுக்கிய இரண்டு குண்டு வெடிப்புகள்
காபூலை உலுக்கிய இரண்டு குண்டு வெடிப்புகள்
தெஹ்ரான், செப். 11 (எம்என்ஏ) ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் புதன்கிழமை இரண்டு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.
காபூலின் 11வது மாவட்டத்தில் இரண்டு வெடிப்புகள் ஏற்பட்டதாக ஆப்கானிஸ்தானின் உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்தன.
குண்டுவெடிப்புக்கான காரணம் தெரியவில்லை மற்றும் சாத்தியமான உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் இல்லை.
இந்த சம்பவம் குறித்து தலிபான் அதிகாரிகள் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
ரஷ்யாவின் Su-30SM போர் விமானம் கருங்கடலில் விழுந்து நொறுங்கியது
ரஷ்யாவின் Su-30SM போர் விமானம் கருங்கடலில் விழுந்து நொறுங்கியது
ரஷ்யாவின் Su-30SM போர் விமானம் கருங்கடலில் விழுந்து நொறுங்கியது
டெஹ்ரான், செப். 12 (எம்என்ஏ) – உக்ரைனை குறிவைத்து நடத்தப்பட்ட வேலைநிறுத்த நடவடிக்கையின் போது, செப்டம்பர் 10 ஆம் தேதி இரவு செவஸ்டோபோல் அருகே ரஷ்யாவின் Su-30SM போர் விமானம் கருங்கடலில் விழுந்து நொறுங்கியது.
நோவோஃபெடோரிவ்காவில் உள்ள சாகி விமான தளத்தில் இருந்து புறப்பட்ட விமானம், அதன் ஆறு ஏவுகணைகளில் நான்கு ஏவுகணைகளை கடல்சார்
இலக்குகளில் செலுத்திய பின்னர் ராடாரில் இருந்து காணாமல் போனதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருங்கடலில் ஒரு படகில் இருந்து சுடப்பட்ட மேன்-போர்ட்டபிள் வான் பாதுகாப்பு அமைப்பு (MANPADS) மூலம் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்திற்கான சரியான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், MANPADS வேலைநிறுத்தம் ஏற்படக்கூடும் என்று அப்பகுதியிலிருந்து அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, இவ்விபத்தில் இரு விமானிகளும் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
“இரண்டு குழு உறுப்பினர்களின் தலைவிதி குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை, ஆனால் இருவரும் உயிர் பிழைக்கவில்லை” என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர், டிஃபென்ஸ் பிளாக் தெரிவித்துள்ளது.
அர்ச்சுனா கண்ணீர் உருக்க கடிதம்
அர்ச்சுனா கண்ணீர் உருக்க கடிதம்
அர்ச்சுனா கண்ணீர் உருக்க கடிதம் ,இப்போது தான் மனம் இரண்டாய் பிளந்து கிடக்கிறது..
11 வழக்குகளையும் தாண்டி 118 வது நாளாக தெளிவாக ஓடிக் கொண்டிருக்கிறேன்..
ஒவ்வொரு துரோகங்களையும் முதுகிலிருந்து கத்திகளாக கழட்டும் போது நெஞ்சம் வலிக்கிறது..
செலஸ்தீன் அண்ணாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட துரோகத்திற்கான வரலாறு..
செலஸ்டின் அண்ணாவுக்கு நான் என்ன செய்தேன்?
மீண்டும் தம்பி ராசா?தம்பி லோக்கல் அரவிந்த்?அஜித்?கிஷோர்?
மது பிளாக்?இவர்களில் யாராவது சொல்லட்டும் நான் இவர்களுக்கு தீங்கிழைத்து இருக்கிறேன் என்று?
எல்லா தடைகளையும் தனியாக ஒருவன் தாங்கிக் கொண்டு 117 ஆவது நாளாக இன்றுவரை உங்கள் மத்தியில் நிற்கும் போது ஒன்றாக படித்த மருத்துவ சமூகமே நீதித்துறையுடன் சேர்ந்து முதுகில் குத்தும் போது?
பக்கத்தில் நிற்க வேண்டியவர்கள் முதுகில் குத்தி விட்டு தள்ளி நிற்கிறார்கள்?
அரசாங்கம் வஞ்சிக்கிறது என்று நினைத்தேன் சாவகச்சேரியில் இருந்து வெளியேறும் போது!
ஒன்றாக படித்த மெடிக்கல் அட்மினிஸ்ட்ரேஷன் எனக்கு எதிராக நிற்கிறது என்னை ஃபெயில் ஆக்கி கைதட்டி சிரித்துக்கொள்கிறது..
அப்போது கூட வலிக்கவில்லை..
ஆனால் ஒன்றாக நிற்கிறேன் ஒன்றாக சாப்பிடுவோம் ஒன்றாக தோளோடு போவோம் என்று சொன்னவர்கள் இப்போது தனித்தனி வீடியோக்கள் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்?
இதனையும் தாண்டி ஒருவன் நிற்கிறான் என்றால் ..
அதற்குப் பின்னாலும் எனக்காக சில பேர் நிற்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்..
அது எனக்காக வந்த எனக்காக நீதிமன்றத்தில் என் சார்பில் நின்ற தங்கை கௌசல்யாவில் தொடங்கி மயூரன் வினோ பாரதி சஞ்சு விக்கி அண்ணா வன்னி மைந்தன் தளபதி சபே சோதி அக்கா நேசன் அண்ணா உதயா அண்ணன் எனது சொந்த சகோதரர்கள் மற்றும் தமிழ் என்ற உணர்வில் நிற்கும் தமிழனாய் பிறந்த ஒவ்வொரு மானிடனும் எனக்காக நிற்கிறான்..
அந்த ஒரு அரவணைப்பே போதும்..
ஜெயில் என்ன மரண தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன்..
வைத்தியர்கள் அநீதி செய்கின்றார்கள் என நான் சொல்லவில்லை..
தாங்களாகவே ஓடிப்போய் வழக்குகளை போட்டு கொண்டார்கள்..
நீதிமன்றமும் சட்டவாளர்களும் வைத்தியர்களும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடி ஒன்றாக உணவருந்தி விட்டு ஒரே ஒருவனை குரல்வளையை போட்டு நசுக்கும் போது அது நீதிமன்ற அவமதிப்பு என்று சொன்னால் கூட எத்தனை வருடங்கள் எழுத முடியுமோ அத்தனை வருடங்கள் எழுதிக் கொள்ளுங்கள்..
தூக்கு தண்டனை எழுத முடியுமோ அதை கூட எழுதிக் கொள்ளுங்கள்..
எழுதிய பேனைகளை உடைக்கும் போது நீங்கள் உடைப்பது பேனையல்ல..
தமிழனின் குரல்வளைகளை என்பதை நினைவில் கொள்ளுங்கள்..
துரோகிகள் ஆகவே வாழ்ந்து பழகிப்போன தமிழினம் ஒருபோதும் நீதிக்கு தோள் கொடுக்காது..
அதற்காக அது அநீதி என தெரிகின்றபோது நீதிமன்றம் மட்டும் அல்ல தூக்கு மேடையிலும் சொல்லிக் கொள்வேன் அது அநீதி என்று!
சாகத் துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை என்பதை மறுமுறை ஒருமுறை சொல்லிக் கொள்கிறேன்..
மருத்துவ துறையாக இருக்கட்டும் நீதித்துறையாக இருக்கட்டும்..
அநீதி என்பதை அநீதி என்று சொல்லுவதற்கு எதற்காக நான் பயப்பட வேண்டும்?
ஒன்றாக கிரிக்கெட் விளையாடிய அவர்களும் ஒன்றாக உணவு உண்டவர்களும் வழக்கு போட்டவர்களும் அவர்கள் தான் வழக்கை விசாரிப்பவரும் அவர்கள்தான்..
ஆனால் தன்னந்தனியாக நிக்கிறேன்..
கனம் நீதிபதியிடம் ஒரே ஒரு கேள்வி..
அன்று வெள்ளிக்கிழமை..
எல்லா வைத்தியர்களும் வைத்தியசாலையை விட்டு வெளிநடப்பு செய்த போது டிப்பரில் அடிபட்டு ஒரு தந்தையும் மகளும் கைகால் சிதைந்து ஏழு மணி அளவில் கிளிநொச்சி அம்புலன்ஸில் சாவகச்சேரிக்கு கொண்டு வந்த போது…
தாங்கள் நியாயமான வழக்குகள் என சொல்லிக் கொள்கின்ற அதே வழக்குதாரிகள் தான் யாழ்ப்பாணம் சுகாதார பிராந்திய பணிமனையில் ஒலிவாங்கிகளுக்கு முன்னாள் நின்று அவர்களுடைய உரிமைகள் பற்றி கதைத்துக் கொண்டிருந்தார்கள்..
அவர்கள் பக்கம் பக்கமாக எழுதி வாசித்துக் கொண்டிருந்தார்கள்..
ஐயா..
நீங்கள் அதைப் பார்க்கவில்லையா..
உங்களுக்கும் பிள்ளைகள் இருக்கிறது..
உங்களுக்கும் ஒரு அழகான மனைவி இருக்கிறார்..
அவர்கள் அன்று கால் சிதைந்து வந்திருந்தால்..
நீங்கள் என்னை நீதிமன்றத்திற்கு கேட்டு இருப்பீர்களா?? எல்லா வைத்தியர்களும் போனபோது நீர் ட்ரீட் பண்ண வேண்டியது உமது கடமை என்று..
கணம் நீதிபதி அவர்களே நான் ஒரு வைத்திய நிர்வாகி..
அன்று நான் எனக்கென்ன என்று நின்று இருக்கலாம்..
அப்போது அவர்கள் குருதிப்போக்காலே செத்து இருப்பார்கள்..
எனக்கு வழக்கு வந்திருக்காது..
அந்த 25 வைத்தியர்கள் தான் வழக்கில் அடைபட்டு இருப்பார்கள்.
அன்று நானும் எஞ்சி இருந்த மருத்துவ தாதியார்களும்தான் அந்த உயிரை காப்பாற்றினோம்..
அந்த உயிர் அன்று போயிருந்தால் எல்லாருக்கும் ஒரு செத்த வீடு.
அந்தக் குடும்பத்தை சற்று நினைத்துப் பாருங்கள்..
அங்கே ஒரு 18 வயது பெண் பிள்ளையை இழந்திருப்பார்கள்..
ஒரு தந்தையை ஒரு மனைவி இழந்து இருப்பார்…
இப்போது சொல்லுங்கள் அந்த உயிர்களை மட்டுமல்ல அந்த 25 வைத்தியர்களையும் காப்பாற்றியது யார்?
தொழிற்சங்க போராட்டம் என்று கொலை செய்யும் துணிந்தவர்களை நியாயமான வழக்குகள் என்று நீங்கள் சொல்லிக் கொள்கிறீர்கள்?
ஆம் என்னை அச்சுறுத்தினீர்கள்? அதில் என்ன சந்தேகம் இருக்கிறது..
வழக்கினை விசாரிக்காமலே வைத்தியசாலையை விட்டு வெளியே போகுமாறு நீங்களே சொல்கிறீர்கள்..
முதலில் ஒரு வழக்கினை விசாரிக்க வேண்டும்..
வைத்தியசாலை அத்தியாசகர் யார் என்பதை சுகாதார அமைச்சு எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும்..
அதன் பின்பு தானே ஐயா நீங்கள் முடிவெடுக்க முடியும் நான் வைத்தியசாலை வைத்திய அர்ச்சகர் பதவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளேன் என்று?
லண்டனில் இருந்து படித்து விட்டு வந்து யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் சேர்ந்து ஒரு துடுப்பாட்ட மாட்டை கூட பிடிக்கத் தெரியாதவர்கள் இன்று லோயர்களாக நிற்கிறார்கள்.
உங்கள் கணம் நீதிமன்றத்தின் முன் அவர்கள் என்னை அவமானப்படுத்தும் போது திருப்பி ஒரு வசனம் கதைப்பதற்கு கூட தாங்கள் என்னை அனுமதிக்கவில்லை..
குற்றத்தை விசாரிக்காமலே குற்றம் ஆனவன் என நீங்கள் நினைத்து விட்டீர்கள் ஏனெனில் அவர்கள் உங்களுடைய கிரிக்கெட் ஆட்டத்தின் நண்பர்கள் அல்லவா…
நல்ல காலம் நான் வைத்தியர்களுக்காக விளையாடவில்லை..
நானும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் சோப் போல் ஹார்ட் போல் இரண்டும் விளையாடினேன்..
நீதிபதி என்று பார்க்காமல் கூட பவுன்சர் அடித்திருப்பேன்…
முடியாவிட்டால் ஒரு புல் டோஸ்ட் ஆவது போட்டு இருப்பேன்…
எங்களுக்கு முதுகின் பின் கதைக்க தெரியாது..
ஆனால் இலகு தமிழில் நன்றாக கதைக்க தெரியும் தங்கள் மேல் நீதிமன்றம் என்னை கதைக்க கூட அனுமதிப்பதில்லை…
ஒரு குற்றவாளியை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமலே சட்டம் தெரிந்தவர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் ஒரு கரையில் கத்தும் போது நான் கை உயர்த்தினால் உமக்கு கை உயர்த்த கூட அனுமதி இல்லை அடைப்பேன் என்று சொல்லும் உங்கள் நீதி…
வாழ்க நீதிமன்றம்..
கனம் நீதிபதி அவர்களே..
உங்கள் மகன் உந்துருளியில் விழுந்து காதலும் மூக்காலும் இரத்தம் ஒழுக அன்று வெள்ளிக்கிழமை வந்திருந்த குழந்தையாக இருந்தால்..
அப்போது நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்..
25 வைத்தியர்களுக்கும் எதிராக தாங்கள் அப்போதே ஒழுக்காளற்று நடவடிக்கை எடுத்திருக்க மாட்டீர்களா?
எனக்குத்தானே வருகின்றபோது எல்லாரும் நினைத்துக் கொள்வார்கள் அது இரத்தம் என்று..
அடுத்தவனுக்கு வரும்போது அது தக்காளி தொக்கு தானே ஐயா..
இதே நீதிமன்ற நீதிபதி 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் என்று நினைக்கிறேன் நெஞ்சு வலி என்று ஒரு மாலை நேரம் 5 மணி அளவில் வந்திருந்த போது ETU வில் பார்க்க வேண்டிய வைத்தியர்கள் இருக்கவில்லை..
அன்றைய நாள்..
நான் ஈ டி உவிலும் வேலை இல்லை..
நான் ஒரு குழந்தை மருத்துவனாக முதலாம் ஓட்டில் வேலை செய்து கொண்டிருந்தேன்..
அன்று வந்த நீதிபதி எந்த வைத்தியரும் பார்க்காமல் 30 நிமிடங்களுக்கு மேல் நெஞ்சு வலியுடன் துடித்துக் கொண்டிருந்தார்..
அப்போது நான் பெர்மனெண்டாகவே குவாட்டர்ஸில் இருந்ததால் என்னிடம் உடனடியாக ஓடி வந்து சொன்னார்கள் ஒருவர் நெஞ்சுவலிகள் இருக்கிறார் வந்து பார்க்க இயலுமா என்று..
ஐயா சட்டம் கதைப்பதாக இருந்தால்..
நான் அன்று சொல்லி இருக்கலாம்..
நான் முதலாம் வோட்டில் வேலை..
ஆதலால் பார்க்க முடியாது என்று..
எனக்கு அன்று சென்று அவருடைய ஷர்ட் கழட்டுமாறு கூறியபோது தாதிகள் ஒரு மாதிரி நெளிந்தார்கள்..
நான் அவரை சொன்னேன் தயவுசெய்து சேட்டை கழட்டுங்கள் அப்போதுதான் இசிஜி போட முடியும் என்று..
அவர் ஷூட்டை கழட்டிய போது நான் ஸ்க்ரீன்களை போட்டு மறைத்து கொண்டேன்..
மற்றக்கட்டிலில் பெண்மணிகள் இருந்தார்கள்..
அன்று நான் அவருக்கு மருத்துவம் செய்யாது விட்டிருந்தால்..
அன்று நான் யாரோ ஒருவர் தானே என எனது வேலையை பார்த்துக் கொண்டிருந்திருந்தால்..
அந்த நீதிபதி இழக்கப்பட்டிருப்பார்..
சட்டமும் நீதியும் வெளியே கதைக்கலாம்..
நான் அங்கு வேலை இல்லை என சொல்லிவிட்டு நடந்து போய்விட்டிருக்கலாம்..
ஆனால் ஒரு நீதிபதியின் வீட்டில் சாவு விழுந்திருக்கும்..
ஒரு நீதிமன்றமே கலங்கி போயிருக்கும்..
இது பொய் என்றால்..
தயவுசெய்து 2019 ஆம் ஆண்டு வரை நீதிபதியாக இருந்த நீதிபதியிடமே போய்க் கேளுங்கள்..
அவர்தான் என்னுடைய விவாகரத்து வழக்கையும் தன்னுடைய தனிப்பட்ட அறையில் கூப்பிட்டு விசாரித்தார்..
அவர்களும் நீதிபதிகள் தான்..
அவர்களும் கடவுள்கள்தான்..
இதை நான் எழுதுகிறேன் என்பதற்காக 26 ஆம் தேதி நான் வராமல் விடப்போவதில்லை..
எப்படியும் உங்களோடு தோல் நின்று படமெடுத்த சட்டத்தரணிகள் இவற்றையும் பிரிண்ட் பண்ணி எடுத்துக் கொண்டு வருவார்கள்.
அப்போது நீங்கள் சொல்லுவீர்கள்..
நீங்கள் மனத்தியாலகணக்காக எழுதுவதை நான் வாசிக்க வேண்டுமா என்று.
ஆம்..
தீர்ப்பு வழங்குவதாக இருந்தால் ஒரு விடயத்தை தீர விசாரிக்க வேண்டும் என்பது நீதி என்பது பொதுமக்களுக்கு தெரியும்..
ஒருவன் வழக்கினை இடும் போது அவனைப் பார்த்து பொய் வழக்கு இடுவே ஆனால் அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும் என தாங்கள் கூறும் போது எனது நெஞ்சம் சில்லிட்டு போனது..
ஒரு வழக்கை விசாரிக்காமலே பொய் வழக்கு என தீர்மானிக்கும் தங்களுடைய மேலான திறமையை நான் எங்கே சென்று வஞ்சுவது..
வைத்திய சாலையில் உள்ள நோயாளர்களை உள்ள தாதியர்களை உள்ள ஊழியர்களை ஒரு தரப்பு விருத்தி கடிதம் கொண்டு வந்து தங்களிடம் தரும் போது அதையும் வேண்டிப் பார்க்கிறீர்கள்..
மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட நான் அதற்குரிய கடிதத்தை கொண்டுவந்து நீட்டும் போது அதை எதிர் தரப்பு சட்டத்தரணிகள் சொல்லுகிறார்கள் அவற்றை கதைக்கின்ற அடிப்படை உரிமை கூட குற்றம் சாட்டப்பட்டவருக்கு இல்லை என்று.
அப்படி என்றால் ஐயா..
நாங்கள் வைத்தியம் பார்க்கும்போது..
நோயாளிகளிடம் சொல்ல வேண்டும் நீங்கள் கதைக்கும் உரிமை உங்களுக்கு இல்லை என்று..
எனது மருத்துவம் சொல்லிக் கொள்கிறது..
மீண்டும் சொல்கிறேன் எனது மருத்துவம்..
நோயாளிகளை மாத்திரமே சிகிச்சை அளிக்க வேண்டுமே ஒழிய நோயாளிகளின் ரிப்போர்ட்களை அல்ல என்று..
ஏனோ தெரியவில்லை..
இன்று வரை மனம் சொல்கிறது..
நீதி கிடைக்கும் என்று..
இல்லை அந்த நீதி மறுக்கப்பட்டால் அதற்கு உயரிய உயரிய நீதிமன்றங்களை நாடவேண்டிய பொறுப்பு என்னிடம் இருக்கிறது..
எனக்கு வந்த லோயரே என்னைப் பற்றி முகப்புத்தகத்தில் எழுதும் போது..
அவரை நான் விலக்கி இருக்கிறேன்..
எனது மருத்துவ தர்மத்தில் ஒரு நோயாளி தனது உடம்பை கொண்டு வந்து எனது கைகளில் எடுக்கும்போது அவனை முட்டு முழுதாக ஏற்றுக் கொள்கிறேன்..
நீதி மருத்துவத்திற்கு மேலானது..
ஆனால் நீதியே குரல்வலையை நசுக்க கூடாது அல்லவா..
எனக்கு நீதிமன்றத்தில் கதைக்கின்ற உரிமை இல்லாதபோது..
எனது நியாயத்தை சொல்ல முடியாத போது..
நான் எங்கே சென்று சொல்லுவேன்..
பொதுமக்கள் இதைக் கேட்கட்டும் வாசிக்கட்டும்..
எனக்குத் தண்டனை தூக்கும்படியாக இருந்தால் கூட ராமநாதன் அர்ச்சுனா சிரித்துக்கொண்டே செல்வான்..
முடிந்தால் எழுதிவிட்டு உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருங்கள்..
உங்களுக்கு என்ன ஐயா..
யாழ் போதனா வைத்தியசாலை சென்றால் வைத்தியசாலை நிர்வாகி சத்தியமூர்த்தியே வந்து உங்களை உள்ளே அழைத்துச் செல்வர்.
ஆனால்..
இதை வாசிக்கின்ற ஒரு தமிழன் வாயிலில் லைனில் தான் நிற்க வேண்டும்..
அவன் ஒப்பிடியில் இருந்து மருந்து எடுத்து வரும்போது வீட்டில் உலை வைத்திருக்க மாட்டார்கள்..
இதை வாசிக்கின்ற ஒவ்வொருவனும் நிலத்திலே தான் படுக்க வேண்டும்.
ஆனால் நீங்கள் செல்லும்போது பஞ்சு மெத்தை தருவார்கள்..
முதலாவது கட்டிலில் விடுவார்கள்..
நீங்கள் இருமு முன்னரே உங்களுக்கு ஆவி பிடிப்பார்கள்..
வயிறு நோகின்றது என மெல்லமாக சொன்னாலே 12 மருத்துவர்கள் உங்களை சுற்றி நிற்பார்கள்.
ஆனால் பாமர தமிழனுக்கு..
அது கொலையே நடந்தால் கூட..
ஒவ்வொரு சிந்துஜாவாக மட்டுமே மாறிக்கொள்ளலாம்..
சிந்துஜாவின் கணவன் கூட இப்போது சிந்துஜாவுடன் சேர்ந்திருக்கிறான்..
அதற்கான நீதி எங்கே?
அந்தக் குழந்தைக்கான அம்மா அப்பா எங்கே?
அதை என்ன நடந்தது என்று பார்க்க சென்ற என்னை வைத்தியரிடம் கேட்டுவிட்டு உள்ளே சென்ற என்னை உங்கள் மீது ஐந்து நாள் சிறைச்சாலைகள் அடைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டது..
ஆனால்..
எனது வைத்திய சாலையில்.
நான் நிர்வகிக்கின்ற வைத்திய சாலையில் உங்களுடைய நண்பன் கிரிக்கெட் கேப்டன் மன்னிக்கவும் வைத்தியர்களுடைய கிரிக்கெட் கேப்டன் உள்ளே வந்து அடித்து விழுத்தி என்னுடைய மொபைல் போனை பார்த்து என்னுடைய காசைப் பறித்து எனக்கு எதிராகவே வழக்கு போட்டு தங்களிடம் வந்த போது..
தாங்கள் ஜெயிலுக்கு அனுப்பவில்லை…
ஏன் சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்திற்கு கூட வரவில்லை..
ஏனெனில் உங்கள் நண்பன் ஆயிற்றே..
அவரை நீங்கள் அரெஸ்ட் பண்ணுமாறு ஒருநாளும் சொல்லப்போவதில்லை..
இதே உங்களுடைய நீதிமன்றத்தில் இன்னொருவர் வந்து உங்களை அடித்து விழித்தியிருந்தால்..
உங்கள் தொலைபேசியைப் பறித்து அதை போலீஸ் நிலையத்தில் நிலத்தில் கிடந்ததாக கொடுத்திருந்தால் தங்களுக்கு எவ்வாறு இருந்திருக்கும்?
அப்போது கூட நீங்கள் நீதிமன்றத்தில் வைத்து என்னை கேட்கிறீர்கள் ஒருவரை படம் எடுக்க செல்லும்போது போனை பார்த்து அடிப்பதில் இன்னொரு பிழை இருக்கின்றது என்று?
நான் தமிழன் என்று சொல்லவே வெட்கி தலைகுனிகிறேன்..
2021 ஆம் ஆண்டு சாவகச்சேரி வைத்திய சாலையை விட்டு நான் வெளியேறும் போது எல்லாரிடமே சொன்னேன் நான் இறந்தால் கூட எனது உடலை ஆணை இரவு தாண்டி இங்கால் கொண்டு வர வேண்டாம் என்று…
ஆனால் இந்த முறை மருத்துவ நிர்வாகியாக மாறிய போது ஒவ்வொரு நண்பனும் அடித்து கேட்டான். மச்சான் சாவத்திரி ஹாஸ்பிடல் மாற்ற முடியாதா?
நீயும் வராவிட்டால் யார் மச்சான் இதை மாற்றுவது என்று?
சொன்னவனை தேடிக் கொண்டிருக்கிறேன்..
கௌரிசன்..
இப்போது சித்தருடன் சேர்ந்து நிற்கிறான்..
வாழ்க்கை..
ஒரு வட்டம்..
இன்னும் 20 வருடம் தான் வாழ்வேன்..
ஆனால்..
அவை சிறைச்சாலையில் என்றால் கூட உண்மையை சொல்லிவிட்டு உள்ளே போனவன் என்ற பெயருடனே வாழுவேனே தவிர கை கால்களில் விழுந்து கெஞ்சி அழுது மானமற்ற தமிழனாக வாழ மாட்டேன்
நான் மேதகு எனப்படுகின்ற ஒரு தெய்வத்தை பார்த்து வளர்ந்தவன்..
நாங்களும் அங்கே வளர்ந்ததாக சொல்லிக் கொள்கிறார்கள்..
நல்ல காலம் மேதாகு உயிருடன் இல்லை.. என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
அவரின் நீதிமன்றத்தில் இவ்வாறு நடந்ததில்லை..
எனது தந்தை அவரின் நீதி கட்டமைப்பில் ஒரு பெரிய பங்கு வகித்தவர்..
ஒரு இளம் ஆசிரியையை முள்ளியவளையில் பாலியல் வன்முறை கொலை செய்ததற்காக நான் நினைக்கிறேன் விசுவா நடுவில் வைத்து மின்கம்பத்தில் இணைக்கப்பட்டு அந்தப் பெரிய போராளி சுடப்பட்டர்..
அப்போது கூட நீங்கள் அங்கே தான் இருந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..
எழுதலாம் எழுதிக் கொண்டே போகலாம்..
என்ன..
நீங்கள் மறுபடியும் சொல்வீர்கள் இவற்றையெல்லாம் வாசித்துக் கொண்டிருப்பதால் எனக்கு வேலை என்று..
வைத்தியர்கள் போட்ட வழக்குக்கு மேலாக வழக்கை போடும்படி உபதேசிக்கும் தாங்கள்..
வைத்தியசாலையில் வந்து அடிக்கும்போது கூட உங்களுடைய கிரிக்கெட் மேட்சின் நண்பனை இன்றுவரை அரெஸ்ட் பண்ணவில்லை..
அது ராஜகாரிய வதகிரிமை இல்லையா ஐயா..
அன்னார் நீதிமன்றத்தில் நீதி ஒன்று..
சாவகச்சேரி நீதிமன்றத்தில் நீதி ஒன்று..
வாழ்க தமிழினம்..
சமூகத்தின் முன்னோடிகளாக வாழ வேண்டியவர்களே சமூகத்தின் குரல்வளையை நெறுத்திக் கொண்டிருக்கிறார்கள்..
எனக்கு இப்போது நம்பிக்கை இருக்கிறது…
நான் என்றாவது ஒருநாள் சிறையில் இருந்து வெளியால் வந்தால்..
அப்போது என்னுடன் தமிழினமே நிற்கும்..
இப்போது கூட நிற்கிறது..
புரியவில்லை என்றால் அயல் வீட்டில் உள்ள குழந்தை இடம் கேட்டுக் கொள்ளுங்கள்..
சில வேளைகளில் உங்களுடைய மனைவியும் உங்களுடைய குழந்தைகளும் என்னுடைய லைவை பார்த்துக் கொண்டிருப்பார்கள்..
அவர்களிடம் கேளுங்கள்..யார் குற்றம் இழைத்தவன்..யார் நிரபராதி..
நீதிக்கான தேடலில் என்னை இழந்தாலும்.
எனது தமிழினத்தை அழிக்க விடமாட்டேன்..
உங்கள் முன்னாலே உங்களுடைய சட்டவாளர்கள் சொல்லிக் கொள்கிறார்கள் வடிவேல் போல் இருக்கிறார் என்று..
ஒரு குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என நிரூபிக்க முடியாத ஒருவரை ஒரு சட்டவாளர் வந்து அவ்வாறு கதைக்கும் போது உங்களுடைய கனமான நீதிமன்றம் சிரித்துக் கொண்டது…
இவையெல்லாம் வெளியே தெரிய வாய்ப்பில்லை..
நான் இதுவரை இவ்வாறான ஒரு நீதிமன்றத்தை பார்க்கவில்லை..
யாழ் நீதிமன்றத்திற்கு கூட சென்றேன்..
நீதிபதி மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டார்.
ரெட்ட தெளிவாக சம்பந்தப்பட்ட சட்டவாளரிடம் சொன்னார் நீங்கள் கதைக்க வேண்டாம் என்று..
நீதி சாகவில்லை..
மேல் நீதிமன்ற நீதி அரசர் என்று சொல்லிக் கொண்டு வந்த ஒருவரே தமிழினத்தை அழித்து இதுவரை அரசியல் செய்து கொண்டிருக்கும்போது.
தங்களுக்கு மிகவும் நீண்ட பாதை இருக்கிறது..
தாங்களும் ஒரு அரசியல்வாதியாக வந்தால் எமது இனம் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்.
அரசியல் மேடையில் நானும் நிற்பேன்..
மன விரக்த்தியுடன் எழுதவில்லை..
மனமுடைந்து எழுதுகிறேன்.
எனது கொழும்பில் உள்ள சட்டவாளர் சொல்லி இருக்கிறார், தங்களுக்கும் முறைப்பாட்டாளருக்கும் சமூக தொடர்பு இருப்பதால் தாங்கள் ஏதோ ஒரு செக்ஷனின் படி நீதிபதியாக இருக்க முடியாது என்று..
அந்த செக்ஸன் எல்லாம் எனக்கு தெரியாது ஐயா..
அவரே வந்து சொல்லுவார்..
அல்லது மேலும் மேலும் நீதிமன்றங்களை நாங்கள் நாடுவோம்..
மறுபடியும் சொல்கிறேன்..
சாகத் துணிந்தவனுக்கு தூக்குமடையும் பஞ்சு மெத்தையே.
நீங்கள் தூக்குமடையையே எழுதி சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்..
ஆனால் உங்களுடைய குடும்பத்திடம் ஒருமுறை ஒருமுறை கேட்டுக் கொள்ளுங்கள்..
உங்களுடைய அழகான மனைவியும் அழகான குழந்தைகளும் நன்றாக வாழ்வார்கள்.
ஆனால் ஏனைய வீதியிலும் பூநகரி வீதியிலும் வாழைப்பழம் வீக்கம் எனது தமிழினம் எப்போது நிமிர்ந்து வாழ்வது?
தாங்கள் என்னை உயிருடன் விடும் பட்சத்தில்..
என்னும் ஒரு 20 வருடங்கள் தமிழனுக்காகவே வாழ்ந்து போவேன்…
முடிந்தால் நான் கூட்டமானவன் என எபரையாவது நிரூபிக்க சொல்லுங்கள்..
தமிழனுக்கு ஆக சாக துணிந்தவன்.
மாறாக வீழ்த்தவே முடியும். எனவே பொருளாதார வீழ்ச்சியை விரும்பாதவர்கள் செப்டம்பர் 21 சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள் இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது, திருக்கோவிலுக்கு அபிவிருத்தியும் கிட்டாது.” என்றார்.
இவ்வாறு அர்ச்சுனா இராமநாதன் தந்து முகநூலில் பதிவிட்டுள்ளார் ,இந்த பதிவில் வன்னி மைந்தன் ஆகிய என்னையும் சுட்டி காட்டியுள்ளார் ,அதற்கு மிக்க நன்றி அர்ச்சுனா ,என்றும் உங்களோடு நிற்போம் கவலை விடுங்கள் .
- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

- உயரும் மின்சார கட்டணம்

- கோட்டாபய நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறினார்

- துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்

- பண்டாரவளை முன்னாள் மேயர் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது

- உலகின் மிக வெப்பமான மாதங்களில் ஒன்றாக ஆகஸ்ட் மாதம்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

ரணில் பொருளாதாரப் பிரச்சினை தீர்க்கப்படும்
ரணில் பொருளாதாரப் பிரச்சினை தீர்க்கப்படும்
ரணில் பொருளாதாரப் பிரச்சினை தீர்க்கப்படும் ,இன்னும் 20 வருடங்களில் சிறந்த நாட்டில் வாழ முடியும் என்ற நம்பிக்கையை இந்நாட்டு இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
செப்டெம்பர் 21ஆம் திகதி நாட்டை உருவாக்க எரிவாயு சிலிண்டருக்கு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, சஜித்துக்கும் அநுரவுக்கும் நாட்டைக் கட்டியெழுப்ப எந்த திட்டமும் இல்லை எனவும் அவர்களிடம் நாட்டை ஒப்படைத்தால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் எனவும் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் மீண்டும் சீர்குலைந்தால் நாட்டின் எதிர்காலம் தொடர்பில் எவராலும் நம்பிக்கை வைக்க முடியாது என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று (11) இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.
இந்த மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த இரண்டு வருடங்களில் இந்த நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுத்து அனைவரும் வாழக்கூடிய நாட்டை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அடுத்த 05 வருடங்களில் இந்த வேலைத் திட்டத்தை வலுவாக அமுல்படுத்தி நாட்டின் பொருளாதார பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்த ஜனாதிபதி, மக்கள் தமது பிள்ளைகளின் மற்றும் நாட்டின் எதிர்காலத்திற்கான வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“2004 ஆம் ஆண்டு சுனாமிக்கு பின்னர் நான் இங்கு வந்தேன். கோவில் பகுதிக்கு சென்றிருக்கிறேன். நாட்டை பொருளாதாரத்தை கட்டியெழுப்பும்போது திருக்கோவில் பகுதியையும் பலப்படுத்துவோம்.
நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்த வேளையிலேயே நாட்டை ஏற்றேன். 2022 அத்தியாவசிய பொருட்கள் ஒன்றும் எமக்கு கிடைக்கவில்லை. மின்சாரமும் இருக்கவில்லை. கஷ்டங்களுடன் வாழ்ந்தோம். பெண்கள் அதனை மறந்திருக்க வாய்ப்பில்லை. அன்று இப்போதிருக்கும் முன்னேற்றம் கிட்டும் என்று நினைக்கவில்லை.
அனுரவும் சஜித்தும் அன்று இருக்கவில்லை. ஆனால் நான் ஏற்றதால் நாட்டில் தட்டுப்பாடுகள் நீங்கி நல்ல நிலைமை காணப்படுகிறது. அதனால் மக்கள் சுமூகமாக வாழ முடிந்துள்ளது. அன்று பொருட்களின் விலை அதிகரித்தித்து காணப்பட்டது. ரூபாவின் பெறுமதி பெருமளவில் அதிகரித்திருந்தது.
இன்றும் மக்கள் வாழ்க்கை சுமைகளுக்கு முகம்கொடுக்கிறார்கள். இருப்பினும் எனது முயற்சிகள் ரூபாவின் பெறுமதியை அதிகரிக்கச் செய்தமையால் ஓரளவு சுமூகமான நிலைமை வந்திருக்கிறது. பொருட்களின் விலையும் குறைந்திருக்கிறது.
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவே மக்கள் மீது சில சுமைகளை சுமத்த வேண்டியிருந்தது. சர்வதேச நாணய நிதியம் எமது கடன் சுமை அதிகரித்தால் நாட்டின் நெருக்கடி மேலும் உக்கிரமடையுமென அறிவுறுத்தியது.
நான் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக மொத்த தேசிய உற்பத்தியில் 5 சதவீத கடனை மட்டும் பெறுவதற்கு மாத்திரம் அனுமதி கிடைத்தது.
இந்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலேயே முன்னேற்றங்களை ஏற்படுத்தினோம். அதற்காகவே மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினோம்.
அடுத்த ஐந்து வருடங்களில் சுமையை மேலும் குறைக்க எதிர்பார்க்கிறோம். பொருட்களை கொள்வனவு செய்யவும் வாய்ப்பளிப்போம்.
இந்தப் பகுதியை அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்திருக்கிறோம். விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளை இங்கும் முன்னெடுக்கலாம்.
திருக்கோவில் பகுதியிலும் விவசாய அபிவிருத்திக்கான சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இங்குள்ள கடல் வளத்தினாலும் பயனடைய முடியும்.
மீன்பிடித் தொழில், சுற்றுலாத்துறை, கனிய வள வர்த்தகத்தைப் பலப்படுத்த எதிர்பார்க்கிறோம். விவசாயத்தை நவீனமயப்படுத்தி உலக உணவு உற்பத்தியில் பங்கெடுப்போம்.
திருகோணமலையில் பாரிய முதலீட்டு வலயத்தை உருவாக்குவோம். நாட்டின் அபிவிருத்தியை விரிவுபடுத்துவோம்.
மாகாண சபையை செயற்படுத்தி இப்பகுதி மக்களின் அபிவிருத்திக்கும் இளையோருக்கு நம்பிக்கை தரும் நாட்டையும் கட்டியெழுப்ப வேண்டும். இன்றைய சிறுவர்களுக்கு 25 வயதாகும்போது அவர்கள் முன்னேற்றமடைந்த நாட்டில் வாழ வேண்டும் என்பதே எமது இலக்காகும்.
சஜித்தினாலும், அநுரவினாலும் அதனை செய்ய முடியாது. வாய் பேச்சினால் எவர் வேண்டுமானாலும் சாதிக்கலாம். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அவர்களால் முடியாது.
வவுனியா அரச பேருந்துகள் பணிப்புறக்கணிப்பு.
வவுனியா அரச பேருந்துகள் பணிப்புறக்கணிப்பு.
வவுனியா அரச பேருந்துகள் பணிப்புறக்கணிப்பு. ,தமது ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றைய தினம் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கடமையில் இருந்த அரச பேருந்தின் நடத்துனர் மற்றும் ஊழியர்கள் மீது வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்தின் ஊழியர்கள் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தால் அரச பேருந்துத்தரப்பினை சேர்ந்த ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யுமாறு தெரிவித்து போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று காலை முதல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதேவேளை, தமது கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கத்தவறும் பட்சத்தில் வட மாகாண ரீதியாக பணிபகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.
என்னை தோற்கடிக்க பாரிய சதித்திட்டம்
என்னை தோற்கடிக்க பாரிய சதித்திட்டம்
என்னை தோற்கடிக்க பாரிய சதித்திட்டம் ,நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளும் குழுக்களுக்கு தாம் ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கிருலப்பனை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தனது வெற்றியை தடுக்க எதிர்க்கட்சிகள் சதிகளை மேற்கொண்டாலும் பலனில்லை என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “இன்று சஜித் பிரேமதாசவின் வெற்றியை எல்லா முடிச்சுகளையும் போட்டு தடுப்பதுதான் அந்த அரசியல்வாதிகளின் ஒரே இலக்கு.
சாத்தியமான அனைத்து சதிகளும் செய்யப்படுகின்றன.
ஆனால் அவர்கள் இருவரும் ராஜபக்சக்களின் முன்னாள் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இருவரும் ராஜபக்சேவுடன் அமைச்சரவையில் ஒன்றாக அமர்ந்திருந்தனர்.
நினைவில் கொள்ளுங்கள், நாட்டை வங்குரோத்து செய்த குழுவோடு என்றும் சஜித் பிரேமதாசவும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணையாது.
எனவே, 21 ஆம் திகதி, உங்கள் மதிப்புமிக்க பங்களிப்பைப் பயன்படுத்தி, நாட்டு மக்களுக்கு ஒரு முற்போக்கான திருப்புமுனைக்கு முன்முயற்சி எடுப்போம்” என்றார்.
தயார் நாட்டை கட்டியெழுப்ப அனுரா
நாட்டை கட்டியெழுப்பத் தயார் அனுரா
நாட்டை கட்டியெழுப்பத் தயார் அனுரா ,நாட்டின் பொருளாதாரத்தை விஸ்தரிப்பதற்கு தமது அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி மஹியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “பொருளாதாரம் வரம்பில் சிக்கியுள்ளது.
ஏன் இவர்களுக்கு மட்டும் லஞ்சம் வாங்கும் அளவிற்கும் மட்டுமே பொருளாதாரம்? நாம் இதை விட பொருளாதாரத்தை பெரிதாக்குவோம்.
தனக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து துறைகளிலும் செயல்படும் ஒரு சிறந்த சமூகம், ஒரு சிறந்த கல்வி மாற்றம்.
அதுதான் நாடு… அப்படி ஒரு நாடு வேண்டாமா? அதைத்தான் நாங்கள் வழிநடத்துகிறோம்.
ரணில் விக்கிரமசிங்க எப்போதும் கேலி செய்கிறார்.
யோசியுங்கள்… 4,5,6 தபால் ஓட்டு. மூன்றாம் திகதி கூறுகின்றனர் சம்பளம் உயர்த்தப்படும் என்று.
இது கேலிக்கூத்து இல்லையா? யபஹுவே சென்று செப்டம்பரில் வெற்றி பெற்ற பின் உரம் இலவசமாக வழங்குவோம் என்கின்றனர். இப்போது சிறுபோகமும் முடிந்துள்ள நேரத்தில்.
நாங்கள் நாட்டை பொறுப்பேற்று கட்டியெழுப்ப தயார்” என்றார்.
ஈரானின் மூத்த ராணுவ ஜெனரல் சீனா செல்கிறார்
ஈரானின் மூத்த ராணுவ ஜெனரல் சீனா செல்கிறார்
ஈரானின் மூத்த ராணுவ ஜெனரல் சீனா செல்கிறார்
டெஹ்ரான், செப்.11 (எம்என்ஏ) ஈரான் ராணுவத்தின் ஒருங்கிணைப்பு விவகாரங்களுக்கான துணைத் தளபதி ஜெனரல் ஹபிபுல்லா சயாரி சீனாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் இராணுவத் தளபதியும் துணைத் தளபதியுமான ரியர் அட்மிரல் சயாரி புதன்கிழமை ஒரு தூதுக்குழுவின் தலைமையில் தெஹ்ரானில் இருந்து பெய்ஜிங்கிற்கு புறப்பட்டார்.
உலக அமைதி மற்றும் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக கிழக்கு ஆசிய நாட்டின் உயர் அதிகாரிகளின் அழைப்பின் பேரில் ஈரான் மூத்த ராணுவ ஜெனரல் சீனா சென்றுள்ளார்.
மகனை குத்திக் கொலை செய்த தந்தை
மகனை குத்திக் கொலை செய்த தந்தை
மகனை குத்திக் கொலை செய்த தந்தை ,கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொருபன பிரதேசத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று (11) காலை குடும்ப தகராறு முற்றிய நிலையில் கணவன் தனது மனைவி மற்றும் மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த பெண் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பத்தில் ரத்மலானை பொருபன பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய சந்தேகநபரின் மகனே உயிரிழந்துள்ளார்.
கொலையை செய்த சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நடந்த துரோகம் அர்ச்சுனா குமுறல்
நடந்த துரோகம் அர்ச்சுனா குமுறல்
நடந்த துரோகம் அர்ச்சுனா குமுறல் வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதனுக்கு நடந்த துரோக சம்பவம் தொடர்பாக தனது முகநூலில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .
அந்த பதிவில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் தனக்கு பிணை வழங்கியது கிசோர் எனப்படும் அரசியல்வாதி தனது பிணை வழங்குதலுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து கருத்து தெரிவித்ததாக தெறிவித்துள்ளார் .
தனக்கு ஆதரவாக பிணை வழங்கிய கிசோர் திடீரென எழுந்து தான் அதில் இருந்து விலகுவதாக நீதிவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளாராம் .
இவ்வாறு பிணை வழங்குதலில் இருந்து விலகுவதால் , அர்ச்சுனா இராமநாதனை சிறைக்கு உள்ளே அடைத்து விடலாம் என்ற நிலையில் அவர்கள் காணப்பட்டதாகவும் ,அவ்விதமான நகர்வு நீதிபதியின் கருணையால் அவர் தப்பியுள்ளார் எனப்படுகிறது .
26 ஆம் திகதி புதிய மூவர் பிணை வழங்குவதன் ஊடாக அதில் இருந்து அர்ச்சுனா வெளியில் வந்து விடுவார் எனப்படுகிறது .
கூட இருந்தே துரோகம் செய்யும் கிசோர் போன்றவர்கள் இன துரோகிகள் என்ற விடயத்தை அர்ச்சுனா இராமநாதன் கண்கலங்கிய நிலையில் தெரிவித்துள்ளார் .
யாராவது மக்கள் விரும்பினால் எனக்கு பிணை வழங்கு மாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் .
தயவு செய்து அர்ச்சுனாவை நேசிக்கும் மக்கள் யாராவது இருந்தால் அவருக்கு பிணை வழங்க உதவுமாறு வேண்டி கொள்கிறோம் .
தயவு செய்து யாராவது தொடர்பு கொள்ளுங்கள்,மேற்படி விடயத்தை அர்ச்சுனா இரதமநாதனுக்கு தெரிவிப்போம் .
கலங்காது பயணியுங்கள் அர்ச்சுனா கடவுள் உங்களோடு துணை நிற்கிறார்.
- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

- உயரும் மின்சார கட்டணம்

- கோட்டாபய நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறினார்

- துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்

- பண்டாரவளை முன்னாள் மேயர் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது

- உலகின் மிக வெப்பமான மாதங்களில் ஒன்றாக ஆகஸ்ட் மாதம்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

மன்னித்து விடு
மன்னித்து விடு
கண்ணிருந்தும் குருடானேன்
காதிருந்தும் செவிடானேன்
உன்னை எண்ணவே
உள்ளமே மறந்து போனேன்
விதியின் விளையாட்டில்
விளையாடல் நடக்குது
சதிகள் துரத்த
சாதனை தவிக்குது
என்ன நினைத்தாயோ
என்னை திட்டினாயோ
காலம் வரும் ஒரு நாள்
கண்ணே கலங்காதே
உள்ளம் வலிக்கும் போதினில்
உன் நினைவு வந்து போகும்
என் மனம் வலியாலே
ஏறி தணிந்து உருகும்
பேசமுடியா நிலையிலே
பேரிடர் தடுக்குது
வேலியுடைத்து வருவோம் -அந்த
வேளையிலே சந்திப்போம் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 11-09-2024
ஈரானுக்கான அனைத்து நேரடி விமான சேவைகளையும் இங்கிலாந்து நிறுத்தியது
ஈரானுக்கான அனைத்து நேரடி விமான சேவைகளையும் இங்கிலாந்து நிறுத்தியது
ஈரானுக்கான அனைத்து நேரடி விமான சேவைகளையும் இங்கிலாந்து நிறுத்தியது,தெஹ்ரான், செப். 11 (எம்என்ஏ) – ஈரான்-ரஷ்யா ராணுவ ஒத்துழைப்புக்கு எதிரான ஆதாரமற்ற கூற்றுக்களை முன்வைத்து, தெஹ்ரான்
மீதான புதிய பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக, “இங்கிலாந்துக்கும் ஈரானுக்கும் இடையிலான அனைத்து நேரடி விமான சேவைகளையும்” நிறுத்தத் தொடங்கியுள்ளதாக இங்கிலாந்து செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
“ஈரானுடனான அதன் இருதரப்பு விமான சேவை ஏற்பாடுகளை ரத்து செய்ய” சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவதாக லண்டன் கூறியது, இது “ஈரான் ஏர் இங்கிலாந்திற்கு பறக்கும் திறனைக் கட்டுப்படுத்தும்” என்று ஸ்பேஸ் டெய்லி தெரிவித்துள்ளது.
ஈரான் ஏர் அதன் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அட்டவணையின்படி, வாரத்தில் மூன்று நாட்கள் லண்டன் மற்றும் தெஹ்ரான் இடையே நேரடி விமானங்களை இயக்குகிறது.
உக்ரேனுக்கு எதிராக உடனடி பயன்பாட்டிற்காக குறுகிய தூர ஏவுகணைகளை ரஷ்யாவிற்கு வழங்கியதாகக் கூறப்படும் மேற்கத்திய சக்திகள் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை வெளியிட்டதால், இது ஐரோப்பிய பாதுகாப்பை அச்சுறுத்தும் மோதலின் ஆபத்தான அதிகரிப்பு என்று கூறியது.
உக்ரைன் போரில் ஈரானின் ஈடுபாடு தொடர்பாக ஈரான் மீதான சமீபத்திய குற்றச்சாட்டுகள் மேற்கத்திய நாடுகளின் ஆதாரமற்ற கூற்றுக்களைப் பின்பற்றுகின்றன. ஈரானில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களை உக்ரைனில் உள்ள இலக்குகளைத் தாக்க ரஷ்யா பயன்படுத்துவதாக பல மாதங்களாக மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.
ஈரானிய அதிகாரிகள் உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்கு மாஸ்கோவிற்கு ஆயுதங்களை வழங்குவதை பலமுறை நிராகரித்துள்ளனர், அதே நேரத்தில் ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் அவர்களின் இரட்டைத் தரத்திற்காக கண்டித்துள்ளனர், ஏனெனில் காசாவில் ஆட்சியின் தற்போதைய இனப்படுகொலைக்கு மத்தியில் மேற்கு நாடுகள் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதைத் தொடர்கின்றன.
மாஸ்கோவுடனான பேச்சுவார்த்தை மேசையில் கியேவுக்கு உதவுவதற்குப் பதிலாக, மேற்கத்திய நாடுகளும் உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை அனுப்பி வருகின்றன.
“ரஷ்யாவிற்கு ஈரானின் இராணுவ ஆதரவை எளிதாக்குவதில் அவர்களின் பங்கிற்காக பல முக்கிய தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு” ஒப்புதல் அளிப்பதில் அமெரிக்காவுடன் இணைவதாகவும் இங்கிலாந்து கூறியது.
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தெற்கு யேமன் மீது தாக்குதல்
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தெற்கு யேமன் மீது தாக்குதல்
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தெற்கு யேமன் மீது தாக்குதல்
டெஹ்ரான், செப்.11 (எம்என்ஏ) – ஏமனுக்கு எதிரான புதிய ஆக்கிரமிப்புச் செயலில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகியவை அரபு நாட்டின் தெற்குப் பகுதியில் புதன்கிழமை புதிய தாக்குதல்களை நடத்தின.
புதன்கிழமை அதிகாலை யேமனின் தைஸ் மாகாணத்தில் உள்ள மக்பனே பகுதியை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் போர் விமானங்கள் தாக்கின.
இந்த தாக்குதலின் போது, நகரின் சில உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டன.
உயிர்சேதம் அல்லது சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான பாலஸ்தீனத்தின் போராட்டத்திற்கு யேமன் மக்கள் தங்கள் வெளிப்படையான ஆதரவை அறிவித்துள்ளனர், அக்டோபர் 7 ஆம் தேதி ஆட்சி காசா மீது பேரழிவுகரமான போரைத் தொடங்கிய பின்னர், பிரதேசத்தின் பாலஸ்தீனிய எதிர்ப்பு இயக்கங்கள் ஆக்கிரமிப்பு நிறுவனத்திற்கு எதிராக ஆபரேஷன் அல்-அக்ஸா புயல் என்று அழைக்கப்படும் திடீர் பதிலடித் தாக்குதலை நடத்தியது.
காசாவில் குறைந்தது 27,948 பேரைக் கொன்று 67,459 நபர்களைக் காயப்படுத்திய இஸ்ரேலிய தரை மற்றும் வான்வழித் தாக்குதல்கள் முடிவுக்கு வரும் வரை தங்கள் தாக்குதல்களை நிறுத்தப் போவதில்லை என்று ஏமன் ஆயுதப் படைகள் கூறியுள்ளன.
டிசம்பரில் அமெரிக்காவும் பிரிட்டனும் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஏமனை குறிவைத்து இராணுவக் கூட்டணியை அறிவித்தன.
அமெரிக்க தூதரக வளாகத்தில் குண்டுவெடிப்பு
அமெரிக்க தூதரக வளாகத்தில் குண்டுவெடிப்பு
ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தெஹ்ரான், செப். 11 (எம்என்ஏ) – ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சொந்தமான தளவாட மையத்தில் அடையாளம் தெரியாத வெடிப்பு ஏற்பட்டதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் பாதுகாப்பு நிறுவனங்களின் ஷஃபாக் நியூஸ் செய்தி ஆதாரத்தின்படி, சம்பவம் நடந்த வசதி பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
மற்றொரு வெடிப்பு, விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஈராக்கிய பயங்கரவாத எதிர்ப்பு சேவையின் தலைமையகம் ஒன்றின் அருகே நடந்ததாக ஆதாரங்கள் தெரிவித்தன, TASS தெரிவித்துள்ளது.
குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
































