இஸ்ரேலை தாக்கியது ஏவுகணை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேலை தாக்கியது ஏவுகணை

இஸ்ரேலை தாக்கியது ஏவுகணை

இஸ்ரேலை தாக்கியது ஏவுகணை ,டெல் அவிவ் அருகே இராணுவ இலக்கை நோக்கி ஏவுகணைகளை வீசியதாக ஹிஸ்புல்லா கூறுகிறது


டெல் அவிவ் புறநகர் பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேலிய இராணுவ புலனாய்வு பிரிவை ஏவுகணைகளால் குறிவைத்ததாக ஹெஸ்புல்லா கூறுகிறது.

சுமார் ஐந்து ஏவுகணைகள் லெபனானில் இருந்து கடப்பது கண்டறியப்பட்டதாகவும், அவற்றில் சில இடைமறித்து, மீதமுள்ளவை திறந்த பகுதியில் விழுந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

நியூயார்க்கில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான பெரிய போராட்டங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

நியூயார்க்கில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான பெரிய போராட்டங்கள்

நியூயார்க்கில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான பெரிய போராட்டங்கள் எதிர்பார்க்கப்படுகிறது

ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று நியூயார்க் தெருக்களில் இறங்கினர். அவர்கள் நகரத்தைச் சுற்றியுள்ள வெவ்வேறு பூங்காக்கள் மற்றும் இடங்களில் காண்பிக்கப்படுகிறார்கள்.

மாணவர் குழுக்கள், தொழிற்சங்கங்கள், ஆர்த்தடாக்ஸ் யூதக் குழுக்கள் மற்றும் அமைதிக்கான யூதக் குரல்கள், பாலஸ்தீனியர்களின் காரணத்தைச் சுற்றி ஒரு மிக இளம் குழுவை நாங்கள் காண்கிறோம்.

இன்னும் சில நிமிடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் எனக்குப் பின்னால் பெரும் போலீஸ் பிரசன்னம் உள்ளது.

அவர்கள் நகரைச் சுற்றி வந்தனர். இன்று குறைந்தது 10 பல்கலைக்கழகங்களில், மாணவர் குழுக்கள் தங்கள் வகுப்புகளை விட்டு வெளிநடப்பு செய்ய அழைப்பு விடுத்துள்ளனர், மேலும் அந்த பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு பூங்காவில் கூடி காசாவில் இனப்படுகொலை மற்றும் லெபனானில் நடந்து வரும் விரோதப் போக்கை முடிவுக்குக் கொண்டு வருமாறு குரல் எழுப்பினர்.

இந்த இயக்கம் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது, ஆனால் அது பெரிதாகி வருவதாகத் தெரிகிறது, மேலும் இந்த முக்கியமான நாளில் இது நிச்சயமாக கவனத்தை ஈர்த்துள்ளது.

சமூக ஊடகங்களில் பகிர இங்கே கிளிக் செய்யவும்

அமெரிக்கா இஸ்ரேலுக்கு ராணுவ உதவிகளை அனுப்பியது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

அமெரிக்கா இஸ்ரேலுக்கு ராணுவ உதவிகளை அனுப்பியது

அமெரிக்கா இஸ்ரேலுக்கு ராணுவ உதவிகளை அனுப்பியது

அக்டோபர் 7ம் தேதிக்குப் பிறகு அமெரிக்கா இஸ்ரேலுக்கு ராணுவ உதவிகளை அனுப்பியது .


பிரவுன் பல்கலைக்கழகத்தின் போர்ச் செலவுத் திட்டத்திற்கான அறிக்கையின்படி, கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசா மீதான போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்கா இஸ்ரேலுக்கு குறைந்தபட்சம் 17.9 பில்லியன் டாலர் இராணுவ உதவியை வழங்கியுள்ளது.

தெற்கு இஸ்ரேல் மீதான ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களின் ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்பட்ட அறிக்கை, இஸ்ரேலின் அயர்ன் டோம்

மற்றும் டேவிட் ஸ்லிங் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை நிரப்புவதற்கும், துப்பாக்கிகள் மற்றும் ஜெட் எரிபொருளுக்கான பணத்திற்கும் $4 பில்லியன் செலவாகும் என்று கூறுகிறது.

அந்த காலக்கட்டத்தில் மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு கூடுதலாக 4.86 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கப்பட்டது என்று அறிக்கை கூறுகிறது.

செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் ஹூதி தாக்குதல்களை அடக்குவதற்கான அமெரிக்க இராணுவத்தின் பிரச்சாரத்துடன் தொடர்புடைய

செலவுகள் இந்த எண்ணிக்கையில் அடங்கும், இது காசா மக்களுடன் ஒற்றுமையாக இருப்பதாக யேமனை தளமாகக் கொண்ட குழு கூறுகிறது.

ஹார்வர்டின் ஜான் எஃப் கென்னடி அரசுப் பள்ளியின் பேராசிரியரான லிண்டா ஜே பில்ம்ஸ், செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்கப் போர்களின்

விலையை ஆய்வாளர்கள் வில்லியம் டி ஹார்டுங் மற்றும் ஸ்டீபன் செம்லர் ஆகியோருடன் மதிப்பீடு செய்தார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழு
Posted in இலங்கை செய்திகள்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பக்கங்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத், புதன்கிழமை (08) தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த மாநாட்டில் அவர் கூறுகையில், விசாரணைகளின் முடிவுகள் விரைவில் வெளியாகும்.

அந்த பக்கங்கள் எவ்வாறு காணாமல் போயின என்பதும், ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அனைத்து பக்கங்களும் அப்படியே உள்ளதா என்பதும் விசாரணைகளின் மூலம் கண்டறியப்படும் என்றார்.

மட்டு முதலாவது அரசியல் கட்சி வேட்பு மனுத் தாக்கல்
Posted in இலங்கை செய்திகள்

மட்டு முதலாவது அரசியல் கட்சி வேட்பு மனுத் தாக்கல்

மட்டு முதலாவது அரசியல் கட்சி வேட்பு மனுத் தாக்கல்

மட்டு முதலாவது அரசியல் கட்சி வேட்பு மனுத் தாக்கல் ,மட்டக்களப்பு மாவட்டத்தில் நவம்பவர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

அதன்படி, மாவட்டத்தில் முதலாவது அரசியல் கட்சி நேற்று நண்பகல் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியே இவ்வாறு வேட்புமனுத் தாக்கல் செய்தது .

இதேவேளை நேற்றைய தினம் வி. லவக்குமார் தலைமையிலான சுயேட்சை குழுவொன்றும் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரி ஜேஜே முரளிதரன் தெரிவித்தார்.

வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

தாமரை கோபுரத்தில் இருந்து குதித்த மாணவி
Posted in இலங்கை செய்திகள்

தாமரை கோபுரத்தில் இருந்து குதித்த மாணவி

தாமரை கோபுரத்தில் இருந்து குதித்த மாணவி

தாமரை கோபுரத்தில் இருந்து குதித்த மாணவி ,நேற்று (07) மாலை மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாமரை கோபுரத்தின் 29 ஆவது மாடியில் இருந்து 03 ஆவது மாடிக்கு குதித்து தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவி குறித்த தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் குறித்த பாடசாலை மாணவி கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் படித்து வருவதும், பாடசாலை முடிந்து

தாமரை கோபுரத்திற்கு சென்று 29 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை

செய்து கொண்ட பாடசாலை மாணவன் மற்றும் மாணவியின் தோழியான இவர், குறித்த சம்பவத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக அவரது தந்தை பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சடலம் திடீர் மரண பரிசோதனை செய்யப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்வி அமைச்சு பொய்யான செய்தி
Posted in இலங்கை செய்திகள்

கல்வி அமைச்சு பொய்யான செய்தி

கல்வி அமைச்சு பொய்யான செய்தி

கல்வி அமைச்சு பொய்யான செய்தி ,அரச பாடசாலைகளில் ஆரம்ப தர மாணவர்களுக்கான மதிய உணவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அந்த தகவல்கள் அனைத்தும் பொய்யானது எனவும் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் திலகா ஜயசுந்தர தெரிவித்தார்.

அடுத்த வருடம் வரை அதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அரச பாடசாலைகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் கடந்த மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வரி செலுத்தாதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

வரி செலுத்தாதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வரி செலுத்தாதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வரி செலுத்தாதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை,இந்த ஆண்டு இறுதிக்குள் செலுத்த வேண்டிய நிலுவைத் வரித் தொகையை வசூலிக்க அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வரி செலுத்தத் தவறியவர்கள்

இருந்தால், அவர்களது வங்கிக் கணக்குகளை முடக்கவும், சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அதிகாரம் உள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, உள்நாட்டு இறைவரி திணைக்கள பிரதி ஆணையாளர் நாயகம் என். எம். என். எஸ். பி. திஸாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

எனினும், வரி வசூலிக்க வரும் அதிகாரிகளின் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், நிலுவைத் தொகையை காசோலையாகவோ,

பணமாகவோ வழங்க வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பஸ்ஸில் பதற்றத்தை ஏற்படுத்திய பாம்பு
Posted in இலங்கை செய்திகள்

பஸ்ஸில் பதற்றத்தை ஏற்படுத்திய பாம்பு

பஸ்ஸில் பதற்றத்தை ஏற்படுத்திய பாம்பு

பஸ்ஸில் பதற்றத்தை ஏற்படுத்திய பாம்பு ,குருநாகலில் இருந்து நேற்று காலை மாவத்தகம மதிபொக்க நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில் பாம்பு இருந்தமையால் மிகவும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று காலை 8 மணியளவில் குருநாகல் பிரதான பஸ் நிலையத்தில் இருந்து பஸ் புறப்பட்டுச் சென்றதுடன், சில நிமிடங்களின் பின்னர் பஸ்ஸின் பின் கதவுக்கு அருகில் உள்ள இருக்கைக்கு அடியில் பாம்பு ஒன்று இருந்துள்ளது.

நேற்று அலுவலக நாள் என்பதால், பஸ்ஸில் ஏராளமானோர் பயணம் செய்துள்ளனர்.

இதன்போது, இருக்கைக்கு அடியில் இருந்து பாம்பு வெளிப்பட்டதை பார்த்த பெண் ஒருவர், மிகவும் பயந்து, ‘பாம்பு..பாம்பு..’ என சத்தம் போட்டார்.

இதையடுத்து குறித்த பாம்பு பஸ்ஸின் முன்பகுதிக்கு ஊர்ந்து சென்றுள்ளது.

பாம்பு முன்னால் வருவதைக் கண்ட சாரதி, குருநாகல் அட்கந்த ஆலயத்திற்கு அருகில் பஸ்ஸை நிறுத்தினார்.

பஸ்சை நிறுத்தியதால் பயந்துபோன பயணிகள் அனைவரும் பஸ்சை விட்டு இறங்கினர்.

சிறிது நேரத்தின் பின் பஸ்ஸில் இருந்த பாம்பை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனினும் பஸ் மீண்டும் பயணத்தை ஆரம்பித்தாலும் அதில் பயணிக்க பயந்த சிலர் வேறு பஸ்ஸில் செல்ல முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளை வேட்டிகள் வாறாங்க மக்களை தேடி
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளை வேட்டிகள் வாறாங்க மக்களை தேடி

வெள்ளை வேட்டிகள் வாறாங்க மக்களை தேடி

வெள்ளை வேட்டிகள் வாறாங்க மக்களை தேடி ,மக்களை நினைத்து பார்க்க மறக்கும் இவர்கள் ,மக்களாகிய உங்களினால் வாக்குகள் போட்டு பாராளுமன்றுக்கு அனுப்பி என்ன பலன் காணப்பட போகிறது என்ற விடயம் கேள்வியாக உள்ளது .

சாவகச்சேரி மருத்துவமனைக்கு செல்ல மறுத்து, மக்கள் குரல்களை ,அவர்கள் குமுறல்களை கேட்க மறந்த ,பார்க்க மறந்த சைக்கிள் கட்சி, இந்த தேர்தலில் பாராளுமன்ற

உறுப்பினராக வருகின்ற பொழுது ,இதன் ஊடாக இவர்கள் என்ன மீள மக்களுக்கு செய்ய போகின்றார்கள் …?

அழுகின்ற பொழுது மக்கள் கண்ணீரை துடைக்க மறந்த சைக்கிள் கட்சியான செல்வராசா கயேந்திரன் ,கயேந்திரன் பொன்னம்பலம் போன்றவர்கள் தமிழருக்கு என்ன விடியலை பெற்று தர போகின்றார்கள் …??

ஆகவே தற்போது என் இனமே ,என் சனமே விழித்து கொள் ,இவ்வாறான கூட்டத்தை ஓட விரட்டியடிக்க வேண்டும் .

மக்களை ஏமாற்றி பிழைக்கின்ற இவ்வாறான வெள்ளை வேட்டிகளுக்கு மக்கள் இந்த பாரளுமன்ற தேர்தலில் தகுந்த சாட்டையடி கொடுக்க வேண்டும் என்பதே மக்கள் குமுறலாக உள்ளது .

ஆகவே ஒன்றாகி இந்த வெள்ளை வேட்டிகளை ஓட ஓட விரட்டியடிப்போம் மக்களே .எழுந்து வாருங்கள் இது இந்த வெள்ளை வெற்றிகளுக்கு தண்டனை கொடுக்கும் உகந்த காலம் .

கூட்டுமாறு கொண்டு கூட்டி அடிக்க வேண்டும் என் ஆத்திரத்தில் உள்ள மக்கள் கருத்துக்கள் பறந்து வருகிறது .

AKD குழுவினரிடம் புலம்பெயர்ந்த உறவுகள் விடுத்த கேள்விகள்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

AKD குழுவினரிடம் புலம்பெயர்ந்த உறவுகள் விடுத்த கேள்விகள்

AKD குழுவினரிடம் புலம்பெயர்ந்த உறவுகள் விடுத்த கேள்விகள்

AKD குழுவினரிடம் புலம்பெயர்ந்த உறவுகள் விடுத்த கேள்விகள்,சற்றும் எதிர்பாராத விவாதம் .

அர்ச்சுனாவை மக்கள் இப்படியுமா நேசிக்கிறார்கள் ,தேசிய மக்கள் சத்தி உறுப்பினர்கள் ஆளுமையோடு ,ஆக பூர்வமாக பறந்த விடயங்கள் அவர்கள் மீது நன்மதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

காணொளியில் அழுத்தி முழுமையான உரையாடல்கள் பாருங்கள் .

வீடியோ

அர்ச்சுனாவை விடுவிக்கக்கோரி அநுர குழுவினருடன் பேச்சுவார்த்தை
Posted in முக்கிய செய்திகள்

அர்ச்சுனாவை விடுவிக்கக்கோரி அநுர குழுவினருடன் பேச்சுவார்த்தை

அர்ச்சுனாவை விடுவிக்கக்கோரி அநுர குழுவினருடன் பேச்சுவார்த்தை

வீடியோ

வைத்தியருக்கு ஆதரவாக ஆளுனர் அலுவலகம் முன்பாக போராட இருக்கும் மக்கள்
Posted in முக்கிய செய்திகள்

வைத்தியருக்கு ஆதரவாக ஆளுனர் அலுவலகம் முன்பாக போராட இருக்கும் மக்கள்

வைத்தியருக்கு ஆதரவாக ஆளுனர் அலுவலகம் முன்பாக போராட இருக்கும் மக்கள்

வைத்தியருக்கு ஆதரவாக ஆளுனர் அலுவலகம் முன்பாக போராட இருக்கும் மக்கள்,எதிரிகளை பந்தாடிய மக்கள் கேள்வி பதில்கள் .

கீழே உள்ள காணொளியை அழுத்தி மக்களே பாருங்கள் .

வீடியோ

அர்ச்சுனா அனுராவுக்கு ஆதரவு அளிப்பாரா
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா அனுராவுக்கு ஆதரவு அளிப்பாரா

அர்ச்சுனா அனுராவுக்கு ஆதரவு அளிப்பாரா

அர்ச்சுனா அனுராவுக்கு ஆதரவு அளிப்பாரா என்ற கேள்வியே தற்போது தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது .

சிறையில் நீதிமன்ற காவலில் அர்ச்சுனா இராமநாதன் சிறை வைக்க பட்டுள்ள நிலையில் ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மக்கள் முன்பாக தோன்ற தவறினால்

அவரை நேசிக்கும் அல்லது அவரை பின்தொடரும் மக்கள் அனுராவுக்கு ஆதரவு அளிப்பார் என்ற சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது .

அர்ச்சுனா இராமநாதன் மற்றும் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு இடையில் நல்லுறவை மேற்கொண்டு ,அதன் ஊடாக தமிழ் மக்கள் வாக்குகளை பெற்று கொள்ள வேண்டிய நிலையில் களம் காணப்படுகிறது .

அதனை கருத்தில் கொண்டு அனுரா குமரா உறுப்பினர்கள் செயலாற்ற வேண்டும் ,என்பதே இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்த வேண்டிய நிலையில் ,

களம் கசிந்துள்ள நிலையில் அதனை கருத்தில் எடுத்து அனுரா குமரா திசாநாயக்க பயணிக்க வேண்டும் என்பதே நமது எதிர் பார்ப்பாக உள்ளது .

ஆகவே பெரும்பான்மை பலத்த நிரூபித்தால் மட்டுமே ,அனுரா குமாரா திஸாநாயக்கா பாராளுமன்றில் வெற்றியை படைக்க வேண்டும் என்றால் ,மக்கள் அவரை வெல்ல வைக்க பட வேண்டும் என்பதே கள நிலவரமாக உள்ளது .

அர்ச்சுனாவை விடுதலை செய் |அனுரா கட்சி மக்கள் மோதல் 
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவை விடுதலை செய் |அனுரா கட்சி மக்கள் மோதல் 

அர்ச்சுனாவை விடுதலை செய் |அனுரா கட்சி மக்கள் மோதல் 

அர்ச்சுனாவை விடுதலை செய் |அனுரா கட்சி மக்கள் மோதல்  ,கடந்த தினம் வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் அனுரகுமார திஸாநாயக்காவின் தேசிய மக்கள் சக்தியின் கம்பாக மாவட்ட கட்சி பிரமுகரை சுசில் பெர்னான்டோ எம்மோடு கலந்து கொண்டு சிறப்பித்தார் .

இந்த நீண்ட விவாதத்தில் பல கேள்விகளுக்கு சிறந்த பதில் வழங்கினார் .

அர்ச்சுனா இராமநாதன் விடுதலை ,மற்றும் வடக்கு மாகாண வைத்தியசாலைகளில் இடம்பெற்ற சுகாதார மோசடி ,லஞ்ச ஊழல் ,மருத்துவ மாபியாக்களுக்கு எதிரான விடயம் விசாரிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது .

முள்ளி வாய்களில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு மன்னிப்பு கூறுவீர்களா என்ற பல்வேறுபட்ட கேள்விகளுக்கு அவர் பதில் வழங்கினார் .

இந்த நிகழ்வில் நிஷா , சுசில் பெர்னான்டோ மற்றும் நால்வர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

அதன் முழுமையான விபரம் காணொளியில் ,மக்களே கண்டிப்பாக பாருங்கள் ,சூடு பறக்கும் விவாதம் .

வீடியோ

பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதல்

பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதல்

பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதல் ,பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலில் இரண்டு குடிமக்கள் கொல்லப்பட்டனர், ஒருவர் காயமடைந்ததாக சீனா தெரிவித்துள்ளது.

கராச்சி விமான நிலையம் அருகே போர்ட் காசிம் எலக்ட்ரிக் பவர் கம்பெனியின் வாகனத் தொடரணி தாக்கப்பட்டதில் குறைந்தது 10 பேர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானில் உள்ள சீன தூதரகம், கராச்சி விமான நிலையத்திற்கு அருகே அவர்களின் வாகனத் தொடரணி

தாக்கப்பட்டதில், அதன் குடிமக்களில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டதாகவும், மூன்றில் ஒருவர் காயமடைந்ததாகவும் கூறியுள்ளது.

ஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (18:00 GMT) இரவு 11 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், போர்ட் காசிம்

எலக்ட்ரிக் பவர் நிறுவனத்தின் சீன ஊழியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் செய்தி ஒளிபரப்பு நிறுவனமான ஜியோ நியூஸ், குறைந்தது 10 பேர் காயமடைந்ததாக அறிவித்தது.

திங்கட்கிழமை அதிகாலை அறிக்கையில், சீன தூதரகம் “பயங்கரவாத தாக்குதலை” கண்டித்தது மற்றும் “பாகிஸ்தான் தரப்பு தாக்குதலை முழுமையாக விசாரிக்கவும், குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கவும்,

சீன குடிமக்கள், நிறுவனங்கள் மற்றும் திட்டங்களின் பாதுகாப்பைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டது. பாகிஸ்தான்”.

இந்த வெடிப்பினால் ஏற்பட்ட தீ விபத்தில் 10 வாகனங்கள் சேதமடைந்ததாகவும், நான்கு கார்கள் எரிந்து நாசமானதாகவும் மீட்பு அதிகாரியான ஹசன் கான் Dawn.com இடம் தெரிவித்தார்.

இஸ்ரேலிய இராணுவத்தை தோற்கடிக்க முடியாது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேலிய இராணுவத்தை தோற்கடிக்க முடியாது

இஸ்ரேலிய இராணுவத்தை தோற்கடிக்க முடியாது

இஸ்ரேலிய இராணுவத்தை தோற்கடிக்க முடியாது ஹெஸ்பொல்லா தடையை இழக்கிறது, நெகிழ்வுத்தன்மையின் சமிக்ஞைகளை அனுப்புகிறது

ஹைஃபா மீதான இந்த சமீபத்திய தாக்குதல்களின் மூலம், தற்போதைய நிலைமையை அதிகரிக்க ஹெஸ்பொல்லா முயற்சிக்கிறது.

இஸ்ரேல் அதன் இராணுவத் தலைமையையும் உள்கட்டமைப்பையும் குறிவைத்ததில் குழுவின் தொடர்ச்சியான பின்னடைவுகள் இருந்தபோதிலும்

அவர்களின் கட்டுப்பாடு மற்றும் கட்டளை அமைப்பு இன்னும் அப்படியே உள்ளது என்பது அவர்கள் கொடுக்கும் செய்தி.

பல வழிகளில், ஹிஸ்புல்லாஹ் தடையை இழந்துவிட்டது, அது இப்போது செய்ய முயற்சிப்பது அந்நிய சக்தியை உருவாக்குவதாகும்.

இந்த குழு செய்ய வேண்டியது எல்லாம் உயிர்வாழ வேண்டும். அது இஸ்ரேலிய இராணுவத்தை தோற்கடிக்க முடியாது என்று தெரியும், ஆனால் அது என்ன

செய்ய முடியும் என்பது உயிரிழப்புகளை ஏற்படுத்துவது மற்றும் இஸ்ரேலுக்கு இராணுவ அழுத்தத்தை ஏற்படுத்துவது.

அரசியல் மட்டத்தில், இது நெகிழ்வுத்தன்மையின் சமிக்ஞைகளையும் அனுப்புகிறது.

சமீப நாட்களாக, ஹிஸ்புல்லாஹ்வின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து அறிக்கைகளை கேட்டு வருகிறோம். காசா மீதான இஸ்ரேலின் போரை

முடிவுக்குக் கொண்டுவருவதற்கு எல்லையில் துப்பாக்கிச் சூடு நிறுத்தப்படுவதை ஹெஸ்பொல்லா இன்னும் இணைக்கிறதா என்று அவர்களிடம் கேட்கப்பட்டது.

அவர்களின் பதில்: “எங்கள் முன்னுரிமை போர்நிறுத்தம்.”

அதே நேரத்தில், இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த லெபனான் அரசாங்கத்தை

பிரதிநிதித்துவப்படுத்தியதாக கூறுகிறார்கள். அதனால் பல வழிகளிலும் பின்வாங்கி விட்டதாகச் சொல்லாமல் தவிர்த்து வருகின்றனர்.

ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதிலிருந்து பதிவுசெய்யப்பட்ட செய்தியில் நாம் பார்த்த மிக உயர்ந்த அதிகாரியான ஹிஸ்புல்லாவின் துணைப்

பொதுச்செயலாளர் நைம் காசிமின் கடைசி அறிக்கையில் – வடக்கு இஸ்ரேலில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாது என்று கூறவில்லை. காசா மீதான போர் தொடர்கிறது.

தேர்தலிலிருந்து பல எம்.பிக்கள் விலகல்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தலிலிருந்து பல எம்.பிக்கள் விலகல்

தேர்தலிலிருந்து பல எம்.பிக்கள் விலகல்

தேர்தலிலிருந்து பல எம்.பிக்கள் விலகல் ,தற்போது கலைக்கப்பட்டுள்ள ஒன்பதாவது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் முதுமை, உடல்நலக்குறைவு,

அவர்களுக்கு சாதகமற்ற அரசியல் நிலைகள் போன்ற காரணங்களால் அரசியலில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பாரம்பரியக் கட்சிகளைப் பொறுத்த வரையில் அரசியல் இயக்கங்கள் அடியோடு மாறி வருவதாகத் தெரிகிறது. சுதந்திரத்திற்குப் பிந்தைய

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக, பாரம்பரிய பிரதான போக்குடைய கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு

சக்தியான தேசிய மக்கள் சக்தி, ஜனாதிபதித் தேர்தலில் ஈட்டிய வெற்றி நவம்பர் 14 அன்று பொதுத் தேர்தலில் பாராளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான களத்தையும் அமைத்துள்ளது.

தற்போதைய பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக தம்மிடம்

இருந்து வெளியேறிய எம்.பி.க்களுக்கு வேட்புமனு வழங்குவதில்லை எனத் தீர்மானித்துள்ளது. இந்நிலை குறித்த எம்.பி.க்களை வேறு வேறு கூட்டணிகளில் இருந்து சீட்டு பெற தூண்டியுள்ளது.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது மூத்த சகோதரர் சமல் ராஜபக்ஷ, காமினி லொக்குகே மற்றும் அலி சப்ரி உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை போட்டியிட மாட்டார்கள்.

திரு.சமல் ராஜபக்ச தான் போட்டியிடப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

எனினும் அவரது மகன் சஷீந்திர ராஜபக்ச மொனராகலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளார்.

ஒரு முறை பதவி வகிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பாராளுமன்றத்தில் நுழைந்ததாக திரு. சப்ரி கூறினார்.

“இப்போது நான் எனது சட்டத் தொழிலுக்குத் திரும்பியுள்ளேன்,” என்று அவர் கூறினார்.

கடந்த முறை SLPP பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட திரு வாசுதேவ நாணயக்கார உடல்நலக்குறைவு காரணமாக இம்முறை போட்டியிடமாட்டார்.

திரு.பந்துல குணவர்தனவும் இம்முறை போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார். முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் போட்டியிடுவதா இல்லையா என்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையில், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இம்முறை போட்டியிடுவதாக தெரியவில்லை.

மாறாக அவரது மகள் சமிந்திரனி கிரியெல்ல இம்முறை கண்டி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

பேராசிரியர் திஸ்ஸ விதாரண மற்றும் ஏ.எச்.எம்.பௌசி ஆகிய இரு அரசியல்வாதிகள் பாராளுமன்றப் போட்டியிலிருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

307 பொலிஸார் இடமாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

307 பொலிஸார் இடமாற்றம்

307 பொலிஸார் இடமாற்றம்

307 பொலிஸார் இடமாற்றம் ,ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில்( Presidential Security Division) இருந்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு பொலிஸ் பிரிவுகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 307 பொலிஸார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பொதுச் சேவை ஆணைக்குழுவின் நடைமுறை விதிகளின் 258(1) மற்றும் (II) இன் படி தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஒப்புதலின் கீழ் இந்த இடமாற்றங்கள் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்களில் 11 தலைமை ஆய்வாளர்கள், 5 ஆய்வாளர்கள், 38 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 12 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் தற்காலிகமாக கடமையாற்றிய 24 பொலிஸாரின் இடமாற்ற உத்தரவு இரத்து செய்யப்பட்டுள்ளது.

2019 ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபருக்கு பதிலளித்தார் ஜனாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

2019 ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபருக்கு பதிலளித்தார் ஜனாதிபதி

2019 ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபருக்கு பதிலளித்தார் ஜனாதிபதி

2019 ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபருக்கு பதிலளித்தார் ஜனாதிபதி ,2019 ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் நேரடியாகப் பேசிய போது, அதிகாரிகள் நீதி வழங்கத் தவறியமை குறித்து தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.

நேற்று நீர்கொழும்பு கடுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம் செய்திருந்த போது அவரிடம் கேள்விகளை முன்வைக்கும் சந்தர்ப்பத்தின் போதே குறித்த நபர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் நீதித்துறை சுதந்திரமாக இல்லை. இது அரசியலின் கீழ் உள்ளது. இந்நாட்டின் அரசியலால் நான் வெறுப்படைந்துள்ளேன். இப்போது இவ்விடத்தில் எங்களை மிருகங்களைப் பரிசோதிப்பது போல் சோதிக்கின்றனர்.

அனைவருக்கும் தெரியும் இங்கு யார் வருகின்றார் என. ஆனால் உங்களால் எனது பிள்ளையைத் தர முடியுமா? என் பெற்றோரைத் தர முடியுமா?

அன்று நடந்த சம்பவத்தை (ஈஸ்டர் தாக்குதல்) முழுமையாக தடுத்திருக்கக் கூடிய வாய்ப்பு இருந்தது. அது குறித்து நீங்களும் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

எனவே இதுபோல் அல்லாத ஒரு முறைமையை உருவாக்கித் தாருங்கள் என்பதைத் தான் நான் கேட்கிறேன் என குறித்த நபர் ஜனாதிபதியிடம் கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஜனாதிபதி திஸாநாயக்க, உயர் அரசியல்வாதிகளின் விசேட பாதுகாப்புப் பிரிவினருக்கு மட்டுமே தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதாகத் தெளிவுபடுத்தினார்.

அப்போது பாராளுமன்றத்தில் இருந்த தனக்கும் தனது சக கட்சி உறுப்பினர்களுக்கும் அவர்களின் ஆட்சிக் காலத்தில் சிறப்புப் பாதுகாப்பைப் பெறவில்லை என்பதை அவர் நினைவுபடுத்தினார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கான வழிகளை கோடிட்டுக் காட்டிய ஜனாதிபதி, முதலில் தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை விசாரணைகள் மூலம் கண்டறிந்து அதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்றார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தல் இரண்டாவதாகும்.

இறுதியாக, அரசியலால் இந்த அமைப்பு தோல்வியடைந்தால், தோல்வியடைந்த அமைப்பை அரசியலின் மூலம் மறுசீரமைக்க வேண்டும், ஏனெனில் இந்த அமைப்புகள் முறைமைகள் (சிஸ்டம்) அரசியல் இன்றி திருத்தப்பட்ட நடைமுறைப்படுத்தப்பட இயலாதது.

ஏனென்றால் இவை எல்லாம் அரசியலை மையமாகக் கொண்டே இயங்குகின்றன என ஜனாதிபதி பதிலளித்தார்.