அர்ச்சுனாவை விரட்டிய தேர்தல் ஆணையம்
அர்ச்சுனாவை விரட்டிய தேர்தல் ஆணையம்
அர்ச்சுனாவை விரட்டிய தேர்தல் ஆணையம் .இடம்பெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்திட சென்ற ஊசி கட்சி வேட்பு மனு தாக்கல் இரத்து செய்ய பட்டுள்ளது
எனினும் அதற்கு செலுத்த பட்ட பணம் மீள் கையளிக்க படும் என தெரிவித்துள்ளது .
இந்த தேர்தலுக்கு 46 லட்சம் வழங்க படும் . எனவே அந்த பணத்தை எடுத்து அவர் என்ன செய்ய போகிறார் என்பதே நமது கேள்வியாக உள்ளது .
தங்கம் தேர்தலில் போட்டியிட தடை | பொறியியல் சிக்கிய அர்ச்சுனா
தங்கம் தேர்தலில் போட்டியிட தடை | பொறியியல் சிக்கிய அர்ச்சுனா
தங்கம் தேர்தலில் போட்டியிட தடை | பொறியியல் சிக்கிய அர்ச்சுனா
மிருசுவில் படுகொலை கோட்டா மன்னிப்பு வழங்கிய குற்றவாளிக்கு பயணத்தடை
மிருசுவில் படுகொலை கோட்டா மன்னிப்பு வழங்கிய குற்றவாளிக்கு பயணத்தடை
மிருசுவில் படுகொலை கோட்டா மன்னிப்பு வழங்கிய குற்றவாளிக்கு பயணத்தடை ,யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டு தமிழர்களை படுகொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் மரணதண்டனை விதிக்கப்பட்டு
பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட குற்றாவளி சுனில் ரத்நாயக்கவிற்கு உயர்நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடையை வியாழக்கிழமை (20) விதித்துள்ளது.
குற்றவாளியான சுனில் ரத்நாயக்கவிற்கு மார்ச் 2020 இல் ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக
தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை பூர்த்தியாகியுள்ள நிலையிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ச வழங்கிய பொதுமன்னிப்பிற்கு எதிராக மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
மிருசுவிலில் இருந்து இடம்பெயர்ந்த 9 பேர், 2000ம் ஆண்டு டிசம்பர் 19ம் திகதி தங்கள் வீடுகளை பார்ப்பதற்காக மீண்டும் மிருசுவில் பகுதிக்கு
சென்றனர்.இவர்களில் பதின்மவயதினரும்,ஐந்து வயது சிறுவனும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அவர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பிவந்தவேளை இரண்டு இராணுவத்தினர் அவர்களின் கண்களை கட்டி மோசமாக தாக்கியுள்ளனர்.
ஒரு இளைஞன் அவர்களின் பிடியிலிருந்து தப்பினான்.எனினும் ஏனைய 8 பேரும் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடல்கள் அருகில் உள்ள பகுதியில் புதைக்கப்பட்டிருந்த பகுதியில் மீட்கப்பட்டன
ஆனந்த கண்ணீர் விட்ட அக்கா |ஏழை பெண்ணின் குமுறல் |40 தாவது கழிப்பறை
ஆனந்த கண்ணீர் விட்ட அக்கா |ஏழை பெண்ணின் குமுறல் |40 தாவது கழிப்பறை
ஆனந்த கண்ணீர் விட்ட அக்கா |ஏழை பெண்ணின் குமுறல் |40 தாவது கழிப்பறை.
ஆனந்த கண்ணீர் விட்ட அக்கா |ஏழை பெண்ணின் குமுறல் |40 தாவது கழிப்பறை உதவிட தொடர்புகளுக்கு-0044 7536707793
- இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 100 பாலஸ்தீனியர்களுக்கு காசாவில் இறுதிச் சடங்கு

- லெபனானின் அரப் சலீம் பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கேட்டுக் கொண்டது

- லெபனானின் அரப் சலீம் நகரில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி

- ஜனாதிபதியின் தலைமையில் இன்று முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- பூட்டானுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரினி திரும்பினார்

ஏழை வீடு தேடி சென்ற பண கார குடும்பம் |கண்ணீரில் நனைந்த உறவுகள்
ஏழை வீடு தேடி சென்ற பண கார குடும்பம் |கண்ணீரில் நனைந்த உறவுகள்
ஏழை வீடு தேடி சென்ற பண கார குடும்பம் |கண்ணீரில் நனைந்த உறவுகள்
ஏழை வீடு தேடி சென்ற பண கார குடும்பம் |கண்ணீரில் நனைந்த உறவுகள்
உதவிட தொடர்புகளுக்கு-0044 7536707793
- இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 100 பாலஸ்தீனியர்களுக்கு காசாவில் இறுதிச் சடங்கு

- லெபனானின் அரப் சலீம் பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கேட்டுக் கொண்டது

- லெபனானின் அரப் சலீம் நகரில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி

- ஜனாதிபதியின் தலைமையில் இன்று முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- பூட்டானுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரினி திரும்பினார்

- மாத்தறையில் ஹெராயின், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

- கொஸ்கொட தாரகாவின்’ உறவினரைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு முயற்சி

- கிளிநொச்சியில் தாத்தாவின் வாடகைக் கார் மோதியதில் ஒரு வயது சிறுமி உயிரிழந்தார்

- இந்தோனேசியாவின் அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்பு

- வறண்ட வானிலைக்கு மத்தியிலும் 1,13,000-க்கும் மேற்பட்ட மக்களுக்குக் குடிநீர் விநியோகம்

லண்டனில் கார் விபதில்தமிழர் பலி
லண்டனில் கார் விபதில்தமிழர் பலி
லண்டனில் கார் விபதில்தமிழர் பலி .லண்டன் மாநகரசபைக்கு உள்ளிட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார் .
கார் ஒன்றில் மோதுண்டு அவர் பலியான கோர காட்சிகள் வெளியாகியுள்ளன ..வேகமாக வந்த கார் இவ்வாறு மோதி தள்ளியது .
அதில் காரின் கீழே அவர் தலையில் பலமான அடி காயங்களுக்கு உள்ளான நிலையில் பலியாகியுள்ளார் .
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சையை மேற்கொண்ட பொழுதும் ,சிகிச்சை பலனின்றி அவர் இறந்துள்ளார் என அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
கலகலப்பாக அன்பாக பழக்க கூடிய அற்புத நண்பனை பிரிந்து துயரில் வாடுவதாக அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர் .
வெளிநாடுகளில் வீதி விபத்துக்களில் சிக்கி நம்மவர்கள் அதிகம் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
அமெரிக்க இந்தோ பசிபிக் கட்டளைத் தளபதி இலங்கை விஜயம்
அமெரிக்க இந்தோ பசிபிக் கட்டளைத் தளபதி இலங்கை விஜயம்
அமெரிக்க இந்தோ பசிபிக் கட்டளைத் தளபதி இலங்கை விஜயம்அமெரிக்க இந்தோ – பசிபிக் கட்டளைப் பீடத்தின் (INDOPACOM) கட்டளைத் தளபதி அட்மிரல் சாமுவேல் பப்பாரோ புதன்கிழமை (19) அன்று இலங்கைஙை வந்தடைந்துள்ளார்.
இவர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நாட்டில் தங்கி இருப்பார் என அமெரிக்கத் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
கட்டளைத்தளபதி அட்மிரல் சாமுவேல் பப்பாரோவின் விஜயம் தொடர்பில் மேலும் அமெரிக்கத் தூதரகம் குறிப்பிடுகையில்,
நீண்டகாலமாக நீடிக்கும் அமெரிக்க – இலங்கை பாதுகாப்புப் பங்காண்மையினை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காகவும், இந்தோ-பசிபிக் பகுதியில் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான
அமெரிக்காவின் தொலைநோக்குப் பார்வையினைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் இலங்கையின் சிரேஷ்ட அரச அதிகாரிகளுடனும், இராணுவத் தலைவர்களுடனும் அட்மிரல் பப்பாரோ பல சந்திப்புகளை மேற்கொள்வார்.
அத்துடன், இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் காணப்படும்
பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்குமான அமெரிக்காவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என கூறப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை- அமெரிக்க இருதரப்பு பாதுகாப்பு உறவை மீண்டும் உறுதிப்படுத்தவும், அமெரிக்க இந்தோ – பசிபிக் முழுவதும் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்த பார்வையைப் பகிர்ந்து கொள்ளவும்
கட்டளைத்தளபதி அட்மிரல் சாமுவேல் பப்பாரோவை வரவேற்பதில் மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
எம்.பிக்களுக்கு இலத்திரனியல் உபகரணங்கள் வழங்க திட்டம்
எம்.பிக்களுக்கு இலத்திரனியல் உபகரணங்கள் வழங்க திட்டம்
எம்.பிக்களுக்கு இலத்திரனியல் உபகரணங்கள் வழங்க திட்டம் ,பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான மின்னணு உபகரணங்களை அவர்களின் பதவிக் காலத்தில் பயன்படுத்துவதற்கும் உரிமையளிப்பதற்கும் ஒரு திட்டத்தின் கீழ் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
பாராளுமன்ற விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலத்திற்கு கணினிகள், நகல் இயந்திரங்கள், தொலைநகல் இயந்திரங்கள் மற்றும் மொபைல் போன்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுற்றறிக்கையின்படி, பொருட்களின் மதிப்பு வாங்கிய பிறகு தவணை அடிப்படையில் வசூலிக்கப்படும்.
பணம் வசூலிக்கப்பட்ட பிறகு, பொருட்களின் உரிமை பாராளுமன்ற உறுப்பினருக்கு மாற்றப்படும்.
எனவே, இந்த நோக்கத்திற்காக ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் பதவிக் காலத்தில் ரூ. 800,000 ஒதுக்க அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.
முன்னதாக, பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலத்தில், ரூ. 500,000 என்ற இரண்டு தவணைகளின் கீழ் ரூ. 1 மில்லியன் பெற முடிந்தது
எரியும் எண்ணெய் தாங்கிகள்
எரியும் எண்ணெய் தாங்கிகள்
எரியும் எண்ணெய் தாங்கிகள் ,உக்கிரேன் நாட்டின் நிறுவ பட்டுள்ள எண்ணெய் தாங்கிகளை இலக்கு வைத்து ரஷ்ய படைகள் கடுமையாக தாக்குதலை நடத்திவருகின்றன .
கடந்த முப்பது நாட்களாக உக்கிரேன் பொருளாதார மையங்களை இலக்கு வைத்து ரஷ்யா தாக்குதலை நடத்திட ஆரம்பித்துள்ளது .
இதனால் உக்கிரேன் உள்கட்டமைப்புக்கள் பலமான சேதங்களை சந்தித்து வருகிறது .
பல கிராமங்கள் பல மாதங்களாக மின்சாரம் தொலை தொடர்புகள் இன்றி தவித்து வருவதாக அங்கிருந்து பவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
ரஷ்ய உக்கிரேன் மீது நடத்தி வரும் தாக்குதலில் பல மில்லியன் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
காஸாவுக்குள் மீள நுளைந்த இஸ்ரேல் இராணுவம்
காஸாவுக்குள் மீள நுளைந்த இஸ்ரேல் இராணுவம்
காசா இஸ்ரேல் இராணுவம் நுழைந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இஸ்ரேல் பலஸ்தீனம் இடையில் கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்று வரும் நிலையில் தற்பொழுது மீளவும் இஸ்ரேலிய இராணுவம் சமரச பேச்சினை முறித்து மீளவும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது .
ஈரான் மீது மிக பெரும் தாக்குதலை நடத்தும் முகமாக இந்த சுற்றிவளைப்பு தாக்குதலை இஸ்ரேல் பாலஸ்தீனம் காசாவை மையமாக வைத்து ஆரம்பித்துள்ளதாக அந்த மக்கள் தெரிவித்து வருகின்றனர் .
முல்லைத்தீவில் ஐந்து லட்சம் ஏக்கர் காணியை அபகரித்த இராணுவம்
முல்லைத்தீவில் ஐந்து லட்சம் ஏக்கர் காணியை அபகரித்த இராணுவம்
முல்லைத்தீவில் ஐந்து லட்சம் ஏக்கர் காணியை அபகரித்த இராணுவம், என முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார் .
கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழர்கள் தொண்ணூறு ஆயிரம் ஏக்கரில் மட்டும் குடி கொண்டுள்ளார்கள் எனவும் ,ஏனைய பகுதிகள் யாவும் இராணுவம் ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ளதாக ரவிகரன் தெரிவித்தார் .
தொடர்ந்தும் தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்து சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி ,சிங்கள பவுத்த பேரினவாத இராணுவம் நிலை கொண்டுள்ளது .
இறுதி போர் முடிவடைந்ததை அடுத்து தமிழர் முதன்மையான பகுதிகளை ஆக்கிரமித்து சிங்கள இராணுவம் அகல கால் ஊன்றியுள்ளது குறிப்பிட தக்கது .
மூன்று நாளில் குவிந்த மில்லியன் |வசூல் ராஜா அர்ச்சுனா மகிழ்ச்சி
மூன்று நாளில் குவிந்த மில்லியன் |வசூல் ராஜா அர்ச்சுனா மகிழ்ச்சி
மூன்று நாளில் குவிந்த மில்லியன் |வசூல் ராஜா அர்ச்சுனா மகிழ்ச்சிyil ,துள்ளி குதிக்கின்றார் . வாங்கிய பணத்திற்கு இதுவரை கணக்கு கானாபிக்காத வசூல் ராஜ எம்பி பீ எஸ் இப்பொழுது மீளவும் வசூல் வேட்டையில் களம் இறங்கியுள்ளார் .
இவரது இந்த நகர்வு மிக மோசமான ஒன்றாக உள்ளது என்பதே தற்போதைய பேச்சு மற்றும் செயல்பாடுகள் மூலம் தெரிகிறது .காணொளியில் மேலதிக விபரம்
யாழில் காவல்துறை மீது தாக்குதல் அனுரா ஆட்சியின் அடாவடி
யாழில் காவல்துறை மீது தாக்குதல் அனுரா ஆட்சியின் அடாவடி
யாழில் காவல்துறை மீது தாக்குதல் அனுரா ஆட்சியின் அடாவடி ,தமிழர் பகுதியில் சிங்கள இனவாத அரசு தமிழருக்கு எதிரான நய வஞ்ச தாக்குதலை நடத்தி வருகிறது .
அதன் ஒரு எதிரொலியாக இந்த சம்பவம் பார்க்க படுகிறது .
ஆளுகின்ற அனுரா ஆட்சியில் தமிழர்கள் மீது வன்மம் கொண்டு தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன .
யாழ்ப்பாணத்தில் போலீசாரை தாக்கிய அந்த வீர தமிழ் மகன் தற்போது தலை மறைவாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
மேற்படி காட்சி தற்போது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது .
பெண்கள் மீது தாக்குதல் நடத்தும் அனுரா ஆட்சியின் வண்டவாளம் தமிழர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் ,அனுராவுக்கு எதிரான கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .
21 கோடியில் வீடு கட்டும் அர்ச்சுனா
21 கோடியில் வீடு கட்டும் அர்ச்சுனா
21 கோடியில் வீடு கட்டும் அர்ச்சுனா . அர்ச்சுனா இராமநாதன் தற்போது வயாவிலான் பகுதியில் ,பிரதான வீதிக்கு அருகில் மூன்று மாடியில் ஆடம்பர மாடி வீடு ஒன்றை 21 கோடியில் அமைத்து வருகிறாராம்.
இந்த வீட்டில் ,மொட்டை மாடியில் உலங்குவானூர்தி இறங்கும் வசதி மற்றும் நீச்சல் குளம் என்பன அமைக்க பட்டு வருகிறது .
கிரனைட் கற்கள் பாதிக்க பட்ட வீடாக இது நவீன முறையில் அமைக்க அமைக்க படுகிறதாம்.
உண்ண பணம் இல்லை என தெரிவித்த அர்ச்சுனா இராமநாதன் ,தற்போது திடீரென மூன்று மாடியில் ஆடம்பர வீடு அமைத்து வருவது மக்கள் மத்தியில் தற்போது பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது .
கீழ் உள்ள கார் ஒன்றை கோடியில் கொள்வனவு செய்துள்ளாராம்

கடந்த மூன்று நாட்களில் மூன்றரை மில்லியன் இலங்கை ரூபாய்கள் அர்ச்சுனா இராமநாதன் பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக பரவி வருகிறது .
வெளிநாட்டு தமிழர்கள் கொட்டி கொடுத்த பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்து வருகிறார் அர்ச்சுனா .

இதேவேளையில் ஒன்றை கோடி ரூபாவுக்கு பென்ஸ் கார் ஒன்றை கொள்வனவு செய்து அதில் தற்போது உலாவி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .
தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று நிறைவடைகிறது
தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று நிறைவடைகிறது
தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று நிறைவடைகிறது ,உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று புதன்கிழமை (19) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது.
மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் வைப்புத்தொகை செலுத்தலாம் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் வைப்புத்தொகை ஏற்றுக்கொள்ளல் கடந்த 3ஆம் திகதி தொடங்கியது.
இதற்கிடையில், உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது நாளை நண்பகல் 12 மணியுடன் முடிவடையவுள்ளது.
அத்துடன், மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டு வருவதாகவும், திங்கட்கிழமை (17) நிலைவரப்படி, உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட அங்கீகரிக்கப்பட்ட பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் வைப்புத்தொகை செலுத்தியுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
போரை நிறுத்த ரஷ்யா ஒப்புதல்
போரை நிறுத்த ரஷ்யா ஒப்புதல்
போரை நிறுத்த ரஷ்யா ஒப்புதல் ,ரஷ்யா – உக்ரைன் இடையே நீடித்து வரும் போரை நிறுத்துவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் பேச்சு நடத்தியுள்ளனர்.
இதில் உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிரான தாக்குதல்களை 30 நாட்கள் நிறுத்துவதற்கு ரஷ்யா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன், சவுதி அரேபியாவில், அந்நாட்டின் மத்தியஸ்தத்துடன் நடந்த பேச்சில், 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு, ரஷ்யா ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது.
அது தொடர்பாக சில முன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருந்ததால், இரண்டாம் கட்டமாக இரு நாடுகளின் தலைவர்கள் மட்டத்திலான தொலைபேசி பேச்சுக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து, ரஷ்ய அதிபர் புடினுடன், டிரம்ப் நேற்று பேச்சு நடத்தினார். இரண்டு மணிநேரம் நடந்த இருவரின் பேச்சு குறித்து ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உக்ரைனை சுற்றியுள்ள நிலைமை குறித்து இரு தலைவர்களும் விரிவான பேச்சு நடத்தினர்.
‘இதன்முடிவில், அந்நாட்டு எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிரான தாக்குதல்களை 30 நாட்கள் நிறுத்துவதற்கு அதிபர் புடின் ஒப்புக்கொண்டார்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதல் கட்டமாக, உக்ரைனும் ரஷ்யாவும் இரு நாட்டு எரிசக்தி கட்டமைப்புகளையும் தாக்காமல் இருப்பதற்கான 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் விரைவில் அமலாகும் என்று கூறப்படுகிறது
இஸ்ரேலின் தாக்குதலில் 413 பேர் பலி
இஸ்ரேலின் தாக்குதலில் 413 பேர் பலி
இஸ்ரேலின் தாக்குதலில் 413 பேர் பலி ,காசா மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்கு அமெரிக்காவின் வரம்பற்ற அரசியல் மற்றும் இராணுவ ஆதரவே காரணம் என்று ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 413 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதை ஹமாஸ் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது என்றும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் பிற மத்தியஸ்தர்களின் ஆலோசனைகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது
என்றும் குற்றம் சாட்டிய இஸ்ரேல், போர் நிறுத்தத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக காசா மீது கடுமையான வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது.
இந்தத் தாக்குதல்களில், குழந்தைகள், பெண்கள் உட்பட 413 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பூமிக்கு திரும்பினார் சுனிதா
பூமிக்கு திரும்பினார் சுனிதா
பூமிக்கு திரும்பினார் சுனிதா ,விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் உள்ளிட்டோர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.
இலங்கை நேரப்படி புதன்கிழமை அதிகாலை 3.27 மணிக்கு புளோரிடா கடலில் டிராகன் ஸ்பிளாஷ் டவுன் ஆனது. சுனிதா மற்றும் வில்மோருடன் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் இருவரும் டிராகன் விண்கலம் மூலம் பூமி திரும்பினர்.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் பலரும் இவர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்த வண்ணம் இருந்தனர். ஸ்பிளாஷ் டவுன் ஆகும் காட்சியை நாசா, ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனங்கள் நேரடி ஒளிபரப்பு செய்து வந்தன
பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது
பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது
பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது ,பல துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஈடுபட்ட 31 வயது நபர் ஒருவர் ஹோமாகமவில் உள்ள மேல் மாகாண (தெற்கு) பிரிவு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் கூற்றுப்படி, ஹோமாகம, கலாவிலவத்தையில் 5 கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், கோணபால பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
அவர் மே 12, 2023 அன்று அவிசாவெல்லவில் இரண்டு நபர்களைத் தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டிருந்தார்.
2023 மே 26 அன்று அவிசாவெல்லையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்றும், அதில் ஒருவர் காயமடைந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
2023 செப்டம்பரில் அவிசாவெல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதன் விளைவாக இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அர்ச்சுனாவுக்கு ஊடகத் தடை விதிப்பு
அர்ச்சுனாவுக்கு ஊடகத் தடை விதிப்பு
அர்ச்சுனாவுக்கு ஊடகத் தடை விதிப்பு ,பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு நாளை வியாழக்கிழமை (20) முதல் மே 8 ஆம் திகதி வரை ஊடகத் தடை விதிக்கப்படும் என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன புதன்கிழமை (19) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இந்தக் காலகட்டத்தில் பாராளுமன்றத்தில் எம்.பி. கூறும் எந்தவொரு கருத்தும் ஹன்சாட்டில் இருந்து நீக்கப்படும் என்றும் சபாநாயகர் கூறினார்.
பல்வேறு தனிநபர்கள் மற்றும் சமூகங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்த அறிக்கைகள் தொடர்பாக தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து வந்த ஏராளமான புகார்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
“அவதூறான கருத்துக்களைத் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற எனது கோரிக்கைகளை எம்.பி. பலமுறை புறக்கணித்து வருவதால், நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்” என்று சபாநாயகர் கூறினார்.



























