யாழ் வடமராட்சியில் ஆணின் சடலம் மீட்பு
யாழ் வடமராட்சியில் ஆணின் சடலம் மீட்பு
யாழ். வடமராட்சியில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
நெல்லியடி, புறாப்பொறுக்கி, ஆலடி எரிபொருள் நிலையத்துக்கு அண்மையாக உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டமை தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்
காதலியை கொன்று சரணடைந்த காதலன்
காதலியை கொன்று சரணடைந்த காதலன்
காதலியை கொன்று சரணடைந்த காதலன் ,தனது காதலியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறி வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த இளைஞன், இது தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைக்கால் பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் செவ்வாய்க்கிழமை(18) மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய விமல்கா துஷாரி என்ற யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண், மாரவில வீரஹேன பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவருடன் சுமார் ஒன்றரை வருட காலமாக காதல் உறவில் இருந்த நிலையில் அண்மையில் , இந்த உறவை முறித்துக் கொள்ளலாம் என தனது காதலனிடம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக குறித்த பெண்ணின் வீட்டில் வைத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து இந்த கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தென்னகோன் நீதிமன்றத்தில் சரண்
தென்னகோன் நீதிமன்றத்தில் சரண்
தென்னகோன் நீதிமன்றத்தில் சரண் ,முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
பல நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் இன்று சரண் அடைந்துள்ளார் .அப்படி என்றால் இதுவரை இவருக்கு அடைக்கலம் வழங்கியது யார் என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது
யாழ் மேயராகிறார் தங்கம் |புது கார் வாங்கிய அர்ச்சுனா
யாழ் மேயராகிறார் தங்கம் |புது கார் வாங்கிய அர்ச்சுனா
யாழ் மேயராகிறார் தங்கம் |புது கார் வாங்கிய அர்ச்சுனா
அப்பா ஆனார் அர்ச்சுனா |கடுப்பில் தங்கம்
அப்பா ஆனார் அர்ச்சுனா |கடுப்பில் தங்கம்
அப்பா ஆனார் அர்ச்சுனா |கடுப்பில் தங்கம்
வீடு கழிப்பறை வழங்கிய அசத்திய |இரு கனடா பெண்கள்
வீடு கழிப்பறை வழங்கிய அசத்திய |இரு கனடா பெண்கள்
வீடு கழிப்பறை வழங்கிய அசத்திய |இரு கனடா பெண்கள் ,வவுனியா ஓமந்தை [பகுதியில் வீடு மற்றும் ,கழிப்பறை புனரமைத்து அசத்திய இரு கனடா பெண்கள்
சாதனை |முகத்தில் சிரிப்புடன் மகிழ்ந்த இளம் குடும்பம் |கனடா மதி அக்கா ,கண்மணி அக்கா கனடா உங்களுக்கு வன்னி மைந்தன் தளத்தின் நன்றிகள் |திட்டம் 17
எட்டு வருடம் தவித்த மக்கள் |கண்ணீர் துடைத்த வெளிநாட்டு உறவுகள்
எட்டு வருடம் தவித்த மக்கள் |கண்ணீர் துடைத்த வெளிநாட்டு உறவுகள்
எட்டு வருடம் தவித்த மக்கள் |கண்ணீர் துடைத்த வெளிநாட்டு உறவுகள்
அமெரிக்கா விமானத்தை துரத்திய ஈரான் விமானங்கள்
அமெரிக்கா விமானத்தை துரத்திய ஈரான் விமானங்கள்
அமெரிக்கா விமானத்தை துரத்திய ஈரான் விமானங்கள் ,ஈரானிய போர் விமான மோதலுக்குப் பிறகு அமெரிக்க உளவு ஆளில்லா விமானம் பின்வாங்கியது
ஈரானின் வான்வெளிக்கு அருகில் ஒரு அமெரிக்க MQ-4C உளவு ஆளில்லா விமானம் கண்டறியப்பட்டதாக ஒரு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது,
நாட்டின் போர் விமானங்களுடனான மோதலுக்குப் பிறகு அந்த ஆளில்லா விமானம் பின்வாங்கியதாக மேலும் தெரிவித்துள்ளது.
ஈரானின் F-14 போர் விமானங்கள் மற்றும் கண்காணிப்பு ஆளில்லா விமானங்களை எதிர்கொண்ட பிறகு, அமெரிக்க MQ-4C உளவு ஆளில்லா
விமானம் ஈரானிய வான்வெளிக்கு அருகில் அதன் நிலையிலிருந்து விரைவாக விலகியது என்று நூர்நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் வான்வெளியில் அங்கீகரிக்கப்படாத எந்தவொரு நுழைவும் தீர்க்கமான பதிலடியை எதிர்கொள்ள நேரிடும் என்று ஈரானிய இராணுவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஈரானிய F-14 போர் விமானங்கள் மற்றும் கண்காணிப்பு ஆளில்லா விமானங்களை நாட்டின் வான்வெளிக்கு அருகில் எதிர்கொண்ட பிறகு
அமெரிக்க MQ-4C உளவு ஆளில்லா விமானம் உடனடியாக பின்வாங்கியதாக ஈரானிய இராணுவ விமானப்படை கூறியதாக ஊடக நிறுவனம் மேற்கோள் காட்டியது.
ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஆயுதப்படைகள் எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் எதிராக பாதுகாக்க முழுமையாக தயாராக உள்ளன,
மேலும் தேவைப்பட்டால் மத்திய கிழக்கில் எதிரி நலன்கள் மீது பேரழிவு தரும் தாக்குதலை நடத்தும் என்று இராணுவ விமானப்படை அறிக்கையை மேற்கோள் காட்டி அது மேலும் கூறியது.
“ஈரான் தனது வான்வெளியை மீறும் எந்தவொரு எதிரி விமானத்தையும் – ஆளில்லா அல்லது ஆளில்லா – சுட்டு வீழ்த்தும். எந்தவொரு ஆத்திரமூட்டும்
நடவடிக்கைகளுக்கும் எதிராக எதிரியை நாங்கள் எச்சரிக்கிறோம்,” என்று ஐஆர்ஜிசி விண்வெளிப் படையின் அறிக்கையை மேற்கோள் காட்டி அது மேலும் கூறியது.
இஸ்ரேல் தாக்குதலில் 200 காசா மக்கள் பலி
இஸ்ரேல் தாக்குதலில் 200 காசா மக்கள் பலி
இஸ்ரேல் தாக்குதலில் 200 காசா மக்கள் பலி ,காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை மீண்டும் தொடங்கியதை அடுத்து குறைந்தது 200 பேர் கொல்லப்பட்டனர்
காசா பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இஸ்ரேலிய ஆட்சி வான்வழித் தாக்குதல்களை நடத்தியது, பாலஸ்தீன எதிர்ப்புக் குழுவான ஹமாஸுடனான போர்நிறுத்தம் ஜனவரி 19 அன்று அமலுக்கு வந்ததிலிருந்து இது மிகப்பெரியது.
பாலஸ்தீன சிவில் அவசர சேவையை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 200 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்தன.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் போர் அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் காசாவில் ஹமாஸுக்கு எதிராக “வலுவான நடவடிக்கை” எடுக்குமாறு இராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் அமைச்சக அலுவலகம் கூறியதாக அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய ஆட்சி போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது போரை அறிவித்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
“ஒப்பந்தத்தை மீறியதற்கும், தலைகீழாக மாற்றுவதற்கும் நெதன்யாகு மற்றும் சியோனிச ஆக்கிரமிப்பை மத்தியஸ்தர்கள் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்” என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதானிக்கும் இலங்கை அரசுக்கும் இடையே தொடர்ந்தும் கலந்துரையாடல்
அதானிக்கும் இலங்கை அரசுக்கும் இடையே தொடர்ந்தும் கலந்துரையாடல்
அதானிக்கும் இலங்கை அரசுக்கும் இடையே தொடர்ந்தும் கலந்துரையாடல் ,இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் குறித்து அதானிக்கும் இலங்கை அரசுக்கும் இடையே தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக “தி இந்து” செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த திட்டங்களின் கட்டணங்கள் தொடர்பாக பரஸ்பர உடன்பாட்டை எட்டுவதற்கு உரிய கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பூநகரி புதுப்பிக்கத்தக்க காற்றாலை திட்டத்தில் இருந்து கட்டணப் பிரச்சினை காரணமாக விலகுவதாக அதானி குழுமம் சமீபத்தில் எழுத்துப்பூர்வமாக அறிவித்திருந்தது.
ஆனால் குறித்த திட்டத்தை முற்றாக நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
கட்டணங்கள் தொடர்பாக பரஸ்பர உடன்பாடு ஏற்பட்ட பிறகு, ஜூன் மாதத்திற்குள் இந்தத் திட்டத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படக்கூடும் எனவும் குறிப்பிடப்படுகின்றது
போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு ,உக்ரைன் மீதான போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், அமெரிக்க ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப் இன்று தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.
கடந்த 2022 பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்ததுடன், ஆயுத உதவியும் வழங்கின.
இதற்கிடையே, இந்த போரை நிறுத்த பிரதமர் மோடி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
கடந்த ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்பும், போரை நிறுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
இதுதொடர்பாக சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கடந்த 11ஆம் திகதி நடந்த பேச்சுவார்த்தையின்போது, 30 நாள் போர் நிறுத்த திட்டத்தை அமெரிக்கா முன்மொழிந்தது.
இதை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஏற்றுக் கொண்டார். ஆனால், ரஷ்யா உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. ரஷ்யா போர் நிறுத்தத்தை
ஏற்காவிட்டால், பொருளாதார தடை விரிவுபடுத்தப்படும் என்று அமெரிக்கா மற்றும் ஜி7 நாடுகள் கடந்த 14ஆம் திகதி எச்சரிக்கை விடுத்திருந்தன.
இந்நிலையில், உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் இன்று (மார்ச் 18)
தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ரஷ்ய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் திங்கட்கிழமை (17) தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த 16ஆம் திகதி இரவு செய்தியாளர்களிடம் பேசும்போது, “போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா, உக்ரைனுடன் பேசி வருகிறோம். 18ஆம் திகதிக்குள் முக்கிய அறிவிப்பு வெளியாகும்.
அன்று புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
எனது வயிறு தெய்வம் தந்த வயிறு சாமர சம்பத் தசாநாயக்க
எனது வயிறு தெய்வம் தந்த வயிறு சாமர சம்பத் தசாநாயக்க
எனது வயிறு தெய்வம் தந்த வயிறு சாமர சம்பத் தசாநாயக்க ,நானும், எனது வயிற்றை குறைப்பதற்காக நடக்கின்றேன். குறையவில்லை. அதற்காக நான் என்ன செய்வது, எனது வயிறு இங்குள்ளவர்களுக்கு பிரச்சினை என்றால்,
என்னதான் செய்து. இந்த வயிறு தெய்வம் தந்த வயிறு என்று, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினையை செவ்வாய்க்கிழமை (18) எழுப்பிய அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னதாக சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, சமீபத்தில் நடைபெற்ற
கோப் குழுக் கூட்டத்தின் போது, தன்னை ‘பதுல்லே படா’ என்று குறிப்பிட்ட கோப் உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
“பதுல்லே படா’ என்று கோப் உறுப்பினர் குறிப்பிட்டது தெளிவாகத் தெரிகிறது, ஏனெனில் பதுளை மாவட்டத்தில் பெரிய வயிறு கொண்ட வேறு எந்த பாராளுமன்ற உறுப்பினரும் இல்லை. அமைச்சர் சமந்த வித்யாரத்ன உட்பட
பதுளையில் உள்ள மற்றவர்களுக்கு வயிறு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது,” என்றும் சாமர சம்பத் தசநாயக்க கூறினார்.
“கோப் உறுப்பினர்களுக்கு நீங்கள் அறிவுரை வழங்க வேண்டும், கூட்டங்களின் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென சொல்விக்கொடுக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப் புறக்கணிப்பு
சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப் புறக்கணிப்பு
சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப் புறக்கணிப்பு ,சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு, நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் உள்ளிட்ட 19 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, தமக்கான கொடுப்பனவுகள்
குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை (18) காலை 7 மணிமுதல் நாளை புதன்கிழமை (19) காலை 7 மணி வரை அடையாள பணிப் புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது.
அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டாலும் அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகளான சமன் ரத்னபிரிய மற்றும் ரவி குமுதேஷ் ஆகியோர் திங்கட்கிழமை (17) நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.
நிதி அமைச்சினூடாக பிரச்சினையைத் தொழில்நுட்ப ரீதியில் தீர்க்க முயன்ற முயற்சிகள் தோல்வியில் முடிந்ததை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வரவு – செலவுத் திட்டத்தால் ஏற்பட்ட அநீதிக்கு அதிகாரிகளிடம் சரியான பதில்களில்லை, மேலதிக நேரக் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளமை, அரச விடுமுறை கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளமை, பதவி உயர்வுகள்
குறைக்கப்பட்டுள்ளமை, சலுகைகள் தொடர்பாக எவ்வித பதில்களும் கிடைக்காமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது
யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன்
யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன்
யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் ,யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் திங்கட்கிழமை (17) நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது
வழக்கு ஒன்றை இல்லாது செய்வதாக கூறி, யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவரின் மகன் ஒருவர்
20 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றுள்ளார். இந்நிலையில் இலஞ்சம் வழங்கியவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த வகையில் குறித்த பொலிஸ் அதிகாரி முல்லைத்தீவு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அத்துடன் இலஞ்சம் பெற்ற நபரை கைது செய்யுமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் குறித்த சந்தேகநபர், சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (17) முன்னிலையாகினர்.
இதன்போது குறித்த சந்தேக நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
பொருட்களின் விலைகள் குறைப்பு
பொருட்களின் விலைகள் குறைப்பு
பொருட்களின் விலைகள் குறைப்பு ,சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் விலை 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 277 ரூபாய் ஆகும்.
ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பு 4 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 279 ரூபாய் ஆகும்.
ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 162 ரூபாய் ஆகும்.
ரின் மீன் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 490 ரூபாய் ஆகும்.
அத்துடன், ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கின் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 185 ரூபாவாக உள்ளது.
ஒரு கிலோ கிராம் வெள்ளை கௌப்பியின் விலை 45 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 750 ரூபாய் உள்ளது.
ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 160 ரூபாய் என பதிகாகியுள்ளது.
ஒரு கிலோ கிராம் வெள்ளைப்பூண்டின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 575 ரூபாவாகவும் காணப்படுகின்றது.
வடக்கு கிழக்கில் இயங்கிய மிக பயங்கரமான சித்திரவதை முகாம்
வடக்கு கிழக்கில் இயங்கிய மிக பயங்கரமான சித்திரவதை முகாம்
வடக்கு கிழக்கில் இயங்கிய மிக பயங்கரமான சித்திரவதை முகாம் ,பட்டலந்த சித்திரவதை முகாம் போல, வடக்கு, கிழக்கில் இயங்கிய மிக பயங்கரமான சித்திரவதை முகாம்களை அம்பலப்படுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தி
அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், தமிழ் மக்கள் என்பதற்காக அதை மூடிமறைத்துவிடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
மட்டு. ஊடக மையத்தில் திங்கட்கிழமை(17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
1988 ஆம் ஆண்டு இயங்கிய இந்த பட்டலந்த சித்திரவதை முகாம் இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. ஜே.வி.பியின் இரண்டாம் கட்ட போராட்டத்தை
மேற்கொண்ட போது அவர்களை அடக்குவதற்காக சட்டவிரோதமாக இந்த முகாம் செயற்பட்டு வந்திருக்கிறது.
1994 சந்திரிக்கா ஆட்சிக்கு வந்தபோது இந்த பட்டலந்த முகாம் தொடர்பாக விசாரணை நடைபெற்றது.
ஆனால் விசாரிக்கப்பட்ட கோவை திறக்கப்படாமல் இருட்டில் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றது உண்மைகள் புதைக்கப்பட்டுள்ளன.
37 ஆண்டுகளுக்கு பின்னர் ஜே.வி.பி யினர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புதைக்கப்பட்ட உண்மைகள் புதைகுழியில் இருந்து வெளியில் வந்துள்ளது.
தேசிய மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்திராவிட்டால் இந்த பட்டலந்த சித்திரவதை முகாம் வெளியில் வந்திருக்காது
ஆகவே பாதிக்கப்பட்டவர்கள் இப்போது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதால் தான் இந்த சித்திரவதை முகாம் வெளியில் வந்திருக்கிறது. எனவே, இது போன்ற வடக்கு, கிழக்கில் பல சட்டவிரோத முகாங்கள் காணப்பட்டன.
1990 ம் ஆண்டு காலப்பகுதியில் இயங்கிய மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படை முகாமில் 4 கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள், முதியவர்கள் தறடறுதட பெண்கள் உட்பட 186 பொதுமக்களை சித்திரவதை செய்து
பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஒரே இரவில் படுகொலை செய்து குழிகளில் போட்டு நிரப்பினார்கள். அதில் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் தப்பி வெளிவந்து உண்மைகளை தெரிவித்தார்
இந்த சத்திருக் கொண்டான் முகாம் சித்திரவதை படுகொலை காணாமல் ஆக்கப்படுவதற்கான முக்கியமான முகாமாக இயங்கியது.
அவ்வாறே பல முகாங்கள் இயங்கியதுடன் கொண்டு செல்லப்படுபவர்கள் திரும்பிவராதளவுக்கு கல்லடி, கரடியனாறு, கொண்டை வெட்டுவான், உட்பட பல முகாம்கள் காணப்பட்டன
சித்திரவதை என்பது சாதாரண விடயமல்ல: அமிலத் தொட்டிகளில் இளைஞர்களை போட்டு கொலை செய்துள்ளனர். எங்களைப் பொறுத்தமட்டில் வடக்கு, கிழக்கில் தமிழர்கள் சார்பாக செயற்படுகின்ற தமிழ் தேசிய கட்சிகள்
ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை எண்ணிக்கை ரீதியாக சிறுபான்மையாக இருக்கின்றதால் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது.
எனவே, எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களது நீதியை வெளியில் கொண்டு வர முடியாது.
ஆனால் 37 வருடத்திற்கு பின்னர் ஆட்சியை கைப்பற்றியதால் தான் இந்த சித்திரவதை முகாம் வெளி உலகத்துக்கு வந்துள்ளது
உங்கள் தோழர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்காக பட்டலந்த சித்திரவதை முகாமை கொண்டு வந்திருப்பதாக மற்றவர்களுக்கு கூறாமல் வடக்கு, கிழக்கு
பிரதேசத்திலும் இவ்வாறான படுகொலைகள் சித்திரவதைகள் நடந்துள்ளது போன்ற விஷயங்களை நீங்கள் வெளிக் கொண்டு வாருங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.
141 உக்ரேனிய ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்திய ரஷ்யா
141 உக்ரேனிய ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்திய ரஷ்யா
141 உக்ரேனிய ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்திய ரஷ்யா ,கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் நான்கு JDAM குண்டுகளையும், உக்ரேனிய இராணுவத்தின் 141 ஆளில்லா வான்வழி வாகனங்களையும் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“வான் பாதுகாப்பு படையினர் நான்கு அமெரிக்க தயாரிக்கப்பட்ட JDAM வழிகாட்டப்பட்ட வான் குண்டுகளையும், 141 நிலையான இறக்கை ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தினர்” என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் போர்க்குழு மேற்குப் பிரிவின் நடவடிக்கைகள் காரணமாக உக்ரேனிய இராணுவம் ஒரு நாளில் 240 இராணுவ வீரர்களை இழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
“மேற்கு போர்க்குழுவின் பிரிவுகள் தங்கள் தந்திரோபாய நிலையை மேம்படுத்தியுள்ளன. அவர்கள் கார்கோவ் பிராந்தியத்தின் இசியம்ஸ்கோய், வைஷேய் சோலெனோய், போரோவயா, ட்ருஷெலியுபோவ்கா,
கட்டெரினோவ்கா மற்றும் டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் நோவோய் ஆகிய பகுதிகளில் உக்ரேனிய இராணுவத்தின் இயந்திரமயமாக்கப்பட்ட, தாக்குதல் மற்றும் பீரங்கி படைகளின் மனிதவளம் மற்றும் உபகரணங்களை
தோற்கடித்தனர். எதிரி 240 படைவீரர்கள், இரண்டு அமெரிக்க தயாரிக்கப்பட்ட M113 கவச பணியாளர்கள் கேரியர்கள், ஒரு கவச போர் வாகனம், 10 ஆட்டோமொபைல்கள், நான்கு பீரங்கி துப்பாக்கிகள், ஒரு கிராட் மல்டிபிள்
ராக்கெட் லாஞ்சர் மற்றும் இரண்டு குவெர்டஸ் மின்னணு போர் நிலையங்களை இழந்தனர்,” என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியதாக டாஸ் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் போர்க்குழு தெற்கு நடவடிக்கைகளால் உக்ரேனிய துருப்புக்கள் நாள் முழுவதும் 305 இராணுவ வீரர்களையும் ஒரு டாங்கியையும் இழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குழுவின் பிரிவுகள் மிகவும் சாதகமான கோடுகள் மற்றும் நிலைகளை எடுத்து டொனெட்ஸ்க் மக்கள் குடியரசில் உக்ரேனிய அமைப்புகளை தோற்கடித்ததாகவும் அது குறிப்பிட்டது.
கிழக்கு போர்க்குழுவின் பொறுப்பு மண்டலத்தில் கியேவின் தினசரி இழப்புகள் 150 க்கும் மேற்பட்ட படைவீரர்களாக இருந்தன என்று அமைச்சகம் மேலும் கூறியது.
ஏமனுக்கு எதிராக அமெரிக்கா 170 தாக்குதல்களை நடத்தியுள்ளது
ஏமனுக்கு எதிராக அமெரிக்கா 170 தாக்குதல்களை நடத்தியுள்ளது
ஏமனுக்கு எதிராக அமெரிக்கா 170 தாக்குதல்களை நடத்தியுள்ளது ,ஏமனின் பல்வேறு பகுதிகளை அமெரிக்க போர் விமானங்கள் குறைந்தது 170 முறை குறிவைத்துள்ளன.
ஏமனின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பாளர்கள் 170க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக யேமன் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செங்கடல் மற்றும் அரேபிய கடலில் எதிரி கப்பல்களை குறிவைக்க யேமன் படைகள் தயங்காது என்பதை சாரி மீண்டும் உறுதிப்படுத்தினார், ஏமனின் நோக்கங்கள் அடையப்படும் வரை இந்த இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று வலியுறுத்தினார்.
கடந்த 24 மணி நேரத்தில், ஏமன் படைகள் அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஹாரி எஸ். ட்ரூமன் மீது பாலிஸ்டிக் மற்றும் வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள் மற்றும் பல ட்ரோன்களைப் பயன்படுத்தி இரண்டு தனித்தனி தாக்குதல்களை நடத்தின.
இதற்கிடையில், ஏமனில் குடியிருப்புப் பகுதிகளில் அமெரிக்கா தலைமையிலான படைகள் நடத்திய மிருகத்தனமான வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா விமானதங்கி கப்பலை தாக்கிய ஹவுதி
அமெரிக்கா விமானதங்கி கப்பலை தாக்கிய ஹவுதி.ஏமன் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலை ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் தாக்குகிறது
ஏமன் ஆயுதப்படைகள் செங்கடலில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஹாரி எஸ். ட்ரூமன் மீது மற்றொரு தாக்குதலை நடத்தியுள்ளதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.
அல் மாயாதீனின் கூற்றுப்படி, ஏமன் ஆயுதப்படைகளின் செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரி, பல மணி நேரம் நீடித்த நீடித்த போரின் போது போர்க்கப்பல் பல பாலிஸ்டிக் மற்றும் வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் குறிவைக்கப்பட்டதாக அறிவித்தார்.
ஏமனை தாக்குவதை நோக்கமாகக் கொண்ட எதிரி நடவடிக்கையை ஏமன் படைகள் வெற்றிகரமாக முறியடித்ததாக அவர் கூறினார்.
ஏமன் தனது பிரதேசத்தில் ஆக்கிரமிப்புக்கு எதிரான பதிலடி நடவடிக்கைகள் தொடர்பான அதன் தலைமையின் உத்தரவுகளுக்கு ஏமன் உறுதிபூண்டுள்ளது என்பதை சாரி வலியுறுத்தினார்.
இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்கள் யேமன் செயல்பாட்டு நீர்நிலைகள் வழியாக செல்ல அனுமதிக்கப்படாது என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
கணவன் மனைவியின் சடலங்கள் மீட்பு
கணவன் மனைவியின் சடலங்கள் மீட்பு
கணவன் மனைவியின் சடலங்கள் மீட்பு பொகவந்தலாவ தெரேசியா தோட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றத்தை இனங்கண்ட பொதுக்கள் இரண்டு பேரின் சடலங்கள் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இரண்டு சடலங்களுக்கு அருகாமையில் நஞ்சு போத்தல் இருப்பதாகவும் சிறிது காலம் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொழும்பு பகுதியில் கூலி தொழில் செய்து வந்ததாகவும் கொழும்பில் இருந்து தனது வீட்டுக்கு வருகை தந்து நான்கு நாட்கள் கடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்ததோடு இந்த இரண்டு சடலங்கள் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட கணவன் 38 வயதுடைய சின்னையா விஜயகுமார் எனவும் மனைவி 37வயதுடைய பெருமாள் கௌரி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இருவரின் சடலங்களும் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதோடு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



























