உலகளவில் பயண எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

உலகளவில் பயண எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

உலகளவில் பயண எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

உலகளாவிய ரீதியில் பயண எச்சரிக்கையை அமெரிக்கா அவசர அவசரமாக வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் ஸ்திரமின்மை காரணமாக,

வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க குடிமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை ஞாயிற்றுக்கிழமை (22) உலகளாவிய எச்சரிக்கை பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டது.

தனது உத்தியோகபூர்வ இணைய பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில்,

வெளியுறவுத்துறை, “இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலால் மத்திய கிழக்கு முழுவதும் பயணங்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது மற்றும் அவ்வப்போது வான்வெளி மூடப்பட்டுள்ளது.

அமெரிக்க குடிமக்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள நலன்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

“உலகெங்கிலும் உள்ள அமெரிக்க குடிமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு வெளியுறவுத்துறை அறிவுறுத்துகிறது.

பயணத்தைத் திட்டமிடும்போது எங்கள் பயண ஆலோசனை, நாட்டுத் தகவல் மற்றும் சமீபத்திய பாதுகாப்பு எச்சரிக்கைகளை கவனமாகப் படியுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய இணையதளம்:
https://travel.state.gov/content/travel/en/international-travel/International-Travel-Country-Information-Pages.html

இந்த இணையதளத்தில் உங்கள் பயண நாடு குறித்து:

பாதுகாப்பு நிலை, சட்டங்கள் மற்றும் விதிமுறைகள், உள்ளூர் சூழ்நிலைகள், சுகாதாரம், மருத்துவ வசதிகள், தூதரக தகவல்கள் உள்ளடங்கலான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

முன்னறிவிப்பு மூலம் பயணிகளை பாதுகாப்பாக வைத்திருக்க உலக நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் செயற்பட்டு வருகின்றன. மேலதிக விசாரணைகளுக்கு உங்கள் அருகிலுள்ள அமெரிக்க தூதரகத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் எங்கு இருந்தாலும், பாதுகாப்பாக இருங்கள். இந்த எச்சரிக்கை அறிவிப்பை உங்கள் சுற்றுவட்டாரத்தவருக்கும் பகிருங்கள். எனக் குறிப்பிடப்பட்டிருந்தது,

கனடா தமிழரிடம் இருந்து அனுராவுக்கு கடிதம்
Posted in இலங்கை செய்திகள்

கனடா தமிழரிடம் இருந்து அனுராவுக்கு கடிதம்

கனடா தமிழரிடம் இருந்து அனுராவுக்கு கடிதம்

கனடிய தமிழர் பேரவை இலங்கை ஜனாதிபதி அனுராவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் முறையான விசாரணைகள் செய்யுமாறும் அகழ்வு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் உண்மையின் பக்கம் நின்று இதனை கையாளுமாறும்

கனடிய தமிழர் பேரவை இலங்கையின் ஜனாதிபதி கெளரவ அனுர குமார திசாநாயக்கவிற்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதே வேளை செம்மணி மனித புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும் மனிதபுதைகுழி அகழ்வை மேற்கொள்ளவும் வலியுறுத்தி

ஜூன் 23 தொடக்கம் 25 வரை இலங்கையில் நடக்கவிருக்கும் அணையா விளக்கு போராட்டத்திற்கும் கனடிய தமிழர் பேரவை தனது ஆதரவைத்தெரிவித்துள்ளது.

இதுநிற்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் செம்மணி மனிதபுதைகுழியை பார்வையிடுவதற்கு தடையற்ற அனுமதி வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அந்த பகுதியில் விஜயம் மேற்கொள்வதற்கும் மக்களை சந்திப்பதற்கும்தடையற்ற அனுமதி வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்தகால மனித உரிமை மீறல்களை கையாள்வது குறித்த-நாட்டின் நல்லிணக்கத்திற்கான தனது அர்ப்பணிப்பு குறித்த நேர்மையை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் விரும்புவதால்

மனித உரிமை ஆணையாளர் மக்களை சந்திப்பதற்கும் அனைத்து இடங்களிற்கும் செல்வதற்கும் எந்த தடையையும் விதிக்கப்போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கனடிய தமிழர் பேரவையால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கிணங்க அனுரா செயற்படுவாரா என்பது கேள்விக்குறியே.

இஸ்ரேல் மீது பயங்கர ஏவுகணைகளை வீசும் ஈரான்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் மீது பயங்கர ஏவுகணைகளை வீசும் ஈரான்

இஸ்ரேல் மீது பயங்கர ஏவுகணைகளை வீசும் ஈரான்

ஈரான் – இஸ்ரேல் போர் நாளுக்குநாள் உக்கிரமடைந்துவரும் நிலையில், இஸ்ரேல் மீது மிகப்பெரிய ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடாத்துகிறது ஈரான்.

அமெரிக்க தாக்குதலுக்குப்பின் இஸ்ரேல் மீது கொராம்ஷர் – 4 என்ற மிகப் பெரிய ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதில் 1,500 கிலோ வெடிபொருள் இருப்பதால், இஸ்ரேலில் உள்ள கட்டிடங்கள் மிகப் பெரியளவில் சேதம் அடைந்து வருகின்றன.

ஈரானில் உள்ள 3 முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க நேற்று அதிகாலை குண்டு வீசியது.

இதனால் கோபம் அடைந்துள்ள ஈரான் இஸ்ரேல் மீது, மிகப் பெரிய ஏவுகணையான கொராம்ஷர்-4 மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

2,000 கி.மீ தூரம் சென்று தாக்கும் இந்த ஏவுகணையில் 1,500 கிலோ வெடிபொருள் உள்ளது. இதனால் இது இஸ்ரேலில் உள்ள கட்டிடங்களில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க தாக்குதலுக்குப்பின் கொராம்ஷர்-4 உட்பட 40 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் நேற்று வீசியது. டெல் அவிவ் நகரில் உள்ள வணிக வளாகம், வங்கி உட்பட பல கட்டடங்கள் இந்த தாக்குதலில் சேதம் அடைந்தன.

இதில் 11 பேர் காயம் அடைந்தனர். சேதம் அடைந்த பகுதிகளில் இஸ்ரேல் மீட்பு குழுவிவர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க வான்வழித் தாக்குதலை தொடர்ந்து மேற்கு ஆசியாவில் உள்ள ஒவ்வொரு அமெரிக்க குடிமகனும்

அல்லது இராணுவ வீரர்களும் இப்போது ஈரானின் இலக்காக மாறியுள்ளனர் என ஈரான் அரசு தொலைக்காட்சி எச்சரித்துள்ளது.

இது குறித்து ஈரான் மதகுரு கொமேனியின் நெருங்கிய உதவியாளர் ஹொசைன் ஷரியத்மதர் கூறுகையில்,

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க அத்துமீறி தாக்ககுதல் நடத்தியுள்ளது. இதையடுத்து, சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக எதிர்த் தாக்குதல் நடத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

அதன்படி மத்திய கிழக்கில் உள்ள முக்கிய அமெரிக்க இராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்துள்ளது.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையை தாக்கவும், பிரிட்டிஷ், ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் அமெரிக்க கப்பல்களுக்கு ஹோர்முஸ் ஜலசந்தியை மூடவும் ஈரானிய படைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் மூடினால் இலங்கைக்கு என்ன பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

ஹோர்முஸ் மூடினால் இலங்கைக்கு என்ன பாதிப்பு

ஹோர்முஸ் மூடினால் இலங்கைக்கு என்ன பாதிப்பு

ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரானிய பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இலங்கைக்கு ஏற்படப்போகும் பாதிப்பு என்ன

இருப்பினும் இறுதி முடிவு உயர் தேசிய பாதுகாப்பு பேரவையினால் எடுக்கப்படும் என ஈரானிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கான முக்கிய வழித்தடமாக குறித்த நீரிணை காணப்படுகிறது.

உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் குறித்த பகுதியும் முக்கியம் பெறுவதால், எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் இதனூடாக விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடுவதால், கச்சா எண்ணெய் பொருட்களை அதிகளவு இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய பிறகு, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான, ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.

இதனால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானுக்கு வடக்கேயும், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு தெற்கேயும் ஹோர்முஸ் நீரிணை அமைந்துள்ளது.

சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு முதன்மை பாதையாக இது விளங்குகிறது.

கத்தார் போன்ற நாடுகளின் இயற்கை எரிவாயு (LNG) கப்பல்களும் இந்த நீரிணை வழியாகச் செல்கின்றன.

இலங்கைக்கு ஹோர்முஸ் நீரிணைக்கும் நேரடியாக எந்த தொடர்பும் இல்லை, ஆனாலும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் மாற்றங்களால், அது இலங்கையின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் பொருட்கள், சூயஸ் கால்வாய், ஆப்பிரிக்காவை சுற்றிவரும் கடல் வழி அல்லது பசிபிக் பெருங்கடல் வழியாக வரும்.

இல்லையெனில், அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வழியாக கொண்டு வரப்படலாம். இதற்கு செலவுகள் அதிகமானாலும், நம்பிக்கையான வழித்தடங்களாகும்.

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் விநியோகத்தில் தற்போது எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும்,

கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், விரைவில் அதன் தாக்கம் தென்படலாம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பி-2 போர் விமான சிறப்பு அம்சங்கள்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவின் பி-2 போர் விமான சிறப்பு அம்சங்கள்

அமெரிக்காவின் பி-2 போர் விமான சிறப்பு அம்சங்கள்

அமெரிக்காவின் பி-2 போர் விமானத்தின் சிறப்பு அம்சங்கள் தற்போது வெளியாகியுள்ளன, அந்தவகையில் அதன் சிறப்பு அம்சங்கள் என்னவெனில்,

கடந்த 1970-களில் அதிவீன பி-2 போர் விமானத்தை தயாரிக்கும் பணியில் அமெரிக்கா களமிறங்கியது.

புதிய போர் விமானத்தை தயாரிக்கும் பணி அமெரிக்காவின் நார்த்ரோப் கார்ப்பரேசனிடம் அளிக்கப்பட்டது.

கடந்த 1989-ம் ஆண்டில் பி-2 போர் விமானம் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. உலகின் மிகச் சிறந்த போர் விமானமாக பி-2 கருதப்படுகிறது.

172 அடி அகலம், 69 அடி நீளம் கொண்ட இந்த போர் விமானத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. இதனை ரேடாரில் கண்டறிய முடியாது. அணு குண்டுகள் மற்றும் மிகப்பெரிய வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

ஒரு போர் விமானத்தில் 40,000 கிலோ கிராம் வரையிலான வெடிகுண்டுகளை சுமந்து செல்ல முடியும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 11,000 கிலோ மீற்றர். வரை தரையிறங்காமல் பறக்கும்.

இது மணிக்கு 1,010 கிலோ மீற்றர். வேகத்தில் சீறிப் பாயும். 50,000 அடி உயரம் வரை பறக்கும். அமெரிக்க விமானப் படையிடம் மொத்தம் 21 பி-2 போர் விமானங்கள் உள்ளன. ஒரு விமானத்தின் விலை ரூ.18,000 கோடி ஆகும்.

அமெரிக்காவின் எப். 16, எப்.35 ரக போர் விமானங்கள் பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளன. ஆனால் பி-2 ரக போர் விமானங்களை வேறு எந்த நாட்டுக்கும் அமெரிக்கா விற்பனை செய்யவில்லை.

இஸ்ரேல் உள்ளிட்ட அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடுகளிடம்கூட பி-2 போர் விமானங்கள் இல்லை.

ஈரான் அணு சக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்திய 7 பி-2 போர் விமானங்களும், அமெரிக்காவின் மிசோரி மாகாணம், வெயிட்மேன் விமானப்படைத் தளத்தில் இருந்து சனிக்கிழமை (21) புறப்பட்டன.

ஒவ்வொரு பி-2 விமானத்திலும் இரு ஜிபியு-57 வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டன. இரு விமானிகள் இணைந்து விமானத்தை இயக்கினர்.

அமெரிக்காவில் இருந்து ஈரானுக்கு செல்லும் வழியில் பி-2 போர் விமானங்கள் வேறு எங்கும் தரையிறங்கவில்லை. சுமார் 37 மணி நேரம் போர் விமானங்கள் தொடர்ச்சியாக பறந்தன.

நடுவானிலேயே 7 போர் விமானங்களுக்கும் எரிபொருள் நிரப்பப்பட்டது. ஈரான் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (22) அதிகாலை 2.10 மணிக்கு அந்த நாட்டின் 3 அணு சக்தி தளங்கள் மீதும் பி-2 போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

பின்னர் 7 விமானங்களும் பத்திரமாக அமெரிக்காவுக்கு திரும்பின.

மின்சாரம் தாக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலி
Posted in இலங்கை செய்திகள்

மின்சாரம் தாக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலி

மின்சாரம் தாக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலி

மின்சாரம் தாக்கத்துக்கு உள்ளாகி, 550 பேர், கடந்த ஐந்து ஆண்டுகளில் மரணித்துள்ளனர் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 120 என ஆணையம் தெரிவித்துள்ளது.

மின்சாரம் தாக்கி இறந்தவர்களில் சுமார் நாற்பது சதவீதம் பேர் பயிர் பாதுகாப்பு மற்றும் விலங்குகளைக் கொல்வது போன்ற நோக்கங்களுக்காக

சட்டவிரோதமாக பதிக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத மின்சார கம்பிகள் காரணமாக ஏற்பட்டுள்ளது.

இந்த இறப்புகளில் பெரும்பாலானவை கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களிலிருந்து பதிவாகியுள்ளதாகவும் ஆணையம் கூறுகிறது.

கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையம் கூறுகிறது.

பொதுமக்களின் அறியாமை, மின்சார வேலி நிறுவல்களின் தரம் குறைவாக இருப்பது மற்றும் சட்ட அமலாக்கத்தில் உள்ள சிக்கல்கள் ஆகியவை

மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு பங்களித்துள்ளதாகவும் ஆணையம் கண்டறிந்துள்ளது.

இந்த சூழ்நிலையின் காரணமாக, மின்சாரம் தாக்கி இறந்தவர்களைக் குறைக்க பொதுமக்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களின் பங்கேற்புடன் ஆலோசனை அமர்வுகளை நடத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையம் முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்த ஈரான்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்த ஈரான்

அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்த ஈரான்

அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்த ஈரான். ஈரானில் அமைந்துள்ள அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ஸி தனது ருவிட்டர் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக உள்ள அமெரிக்கா, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் ஐ.நா சாசனம்,

சர்வதேச சட்டம் மற்றும் அணுக்கரு பரவாமை ஒப்பந்தம் உள்ளிட்டவற்றை மீறியுள்ளது.

இந்த மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு கடும் விளைவுகள் ஏற்படும். ஐ.நா உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் இந்த சட்டவிரோத மற்றும் குற்றவியல் நடத்தை மீறல் குறித்து விழிப்போடு இருக்க வேண்டும்.

ஐ.நா சாசனம் மற்றும் அதன் விதிகளின்படி, சுய பாதுகாப்பு சார்ந்து சட்டபூர்வமான பதிலடி மூலம் ஈரானின் இறையாண்மை மற்றும் மக்கள் பாதுகாக்கப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஈரான் மீதான தாக்குதல் தொடர்பாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்தது. “ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழிப்பதும்,

அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாத அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் தான் அமெரிக்காவின் முதல் நோக்கம்.

அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலில் ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்பட்டன.

ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது நாங்கள் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம்.

மத்திய கிழக்கு பகுதியின் கொடுங்கோல் நாடான ஈரான் இப்போது அமைதிக்கான உடன்பாட்டை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் அடுத்தடுத்த தாக்குதல் மிக பெரியதாகவும், மிக எளிதாகவும் இருக்கும் என எச்சரிக்கிறேன்.

கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் ஈரான் பேசி வருகிறது. வெடி குண்டுகள் மூலம் நம் மக்களின் உயிரை அவர்கள் பறிக்கின்றனர். அப்படி லட்சக்கணக்கானவர்களை நாம் இழந்துள்ளோம்.

பல பேரை கொன்றவர் ஜெனரல் காசிம் சுலைமானி என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடரக் கூடாது என பல ஆண்டுகளுக்கு முன்பு நான் முடிவு செய்தேன்.

அதனால் தான் சொல்கிறேன் இனி இது தொடரக்கூடாது. ஒன்று ஈரானில் அமைதி ஏற்பட வேண்டும். அல்லது அங்கு மோசமான பாதிப்புகள் ஏற்படும்.

இந்த பாதிப்பின் தாக்கம் கடந்த 8 நாட்களாக ஈரான் சந்தித்து வரும் நிலையை காட்டிலும் மோசமாக இருக்கும்.

அங்கு தாக்குதல் நடத்துவதற்கான நமக்கு ஏராளமான இலக்குகள் உள்ளன. அமைதி ஏற்படவில்லை என்றால் அந்த இலக்குகளை துல்லியமாக, துரிதமாக, திறம்பட தாக்குவோம்.

இந்த நேரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு அணியாக இணைந்து செயல்பட்டோம். இதற்கு முன்பு யாரும் இப்படி இணைந்து செயல்பட்டது கிடையாது. இஸ்ரேல் இராணுவத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இது மாதிரியான வெற்றிகர இராணுவ நடவடிக்கையை உலகம் கண்டதில்லை. அதை செய்து காட்டிய அமெரிக்க படையினருக்கு வாழ்த்துகள்.

இது மாதிரியான இராணுவ நடவடிக்கையை உலகில் வேறு எந்த நாடும் மேற்கொண்டது இல்லை. அப்படியொரு தாக்குதலை நாம் நடத்தியுள்ளோம்.

நான் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். கடவுளுக்கு நன்றி. கடவுளே நாங்கள் உங்களை நேசிக்கிறோம். எங்கள் மிகப்பெரிய இராணுவத்தை நேசிக்கிறோம்.

அவர்களை காக்கவும். கடவுள் மத்திய கிழக்கு, இஸ்ரேல், அமெரிக்காவை ஆசீர்வதிப்பார். நன்றி” என்றார்.

ஈரான் தாக்குதலில் இலங்கையருக்கு காயமில்லை
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

ஈரான் தாக்குதலில் இலங்கையருக்கு காயமில்லை

ஈரான் தாக்குதலில் இலங்கையருக்கு காயமில்லை

ஈரானால் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் ஒருவரும் காயமடையவில்லை என இஸ்ரேலிலுள்ள இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அதிகரித்து வரும் போர் பதட்டங்களுக்கு மத்தியில், இலங்கை தூதரகம் நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஈரானில் அணுசக்தி தொடர்பான தளங்கள் மீது அமெரிக்க விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக, இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை 8.00 மணியளவில்

இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய நகர்ப்புறங்களை குறிவைத்து தொடர்ச்சியான ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இது நிகழ்கிறது.

நாள் முழுவதும் நிலைமை அதிகரிக்கக்கூடும் என இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

அதன்படி, இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரா, இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களையும் விழிப்புடன் இருக்குமாறும்,

தாக்குதல்களின் போது சேதங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு உத்தியோகபூர்வ பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றுமாறு வலியுத்தியுள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையிலான மோதல் 10 நாட்களை எட்டியுள்ள நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களாக ஆளில்லா விமான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

எனினும், பலத்த காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று தூதுவர் குறிப்பிட்டார்.

ஈரானை தாக்கும் அமெரிக்கா உலகிற்கு பேரழிவு
Posted in உலக செய்திகள்

ஈரானை தாக்கும் அமெரிக்கா உலகிற்கு பேரழிவு

ஈரானை தாக்கும் அமெரிக்கா உலகிற்கு பேரழிவு

போர் பதற்றத்தை தணிக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அன்டோனியோ குட்டெரெஸ் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“இன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தனது இராணுவ பலத்தை பயன்படுத்தியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது.

ஏற்கனவே போரின் விளிம்பில் இருக்கும் ஒரு பிராந்தியத்தில் இது மிகவும் ஆபத்தான நடவடிக்கையாகும்.

மேலும், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாகும்.
இந்த மோதல் விரைவில் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் அதிகரித்து வருகிறது.

இது பொதுமக்கள், மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் உலகிற்கு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும்.

ஐ.நா. சபையின் சாசனம் மற்றும் சர்வதேச சட்ட விதிகளின் கீழ், ஐ.நா. உறுப்பு நாடுகள் தங்கள் கடமைகளை நிலைநிறுத்தவும், போர் பதற்றத்தை தணிக்கவும் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த ஆபத்தான நேரத்தில், மேலும் குழப்பம் ஏற்படுவதை தவிர்ப்பது மிகவும் முக்கியம். இராணுவ நடவடிக்கை எதற்கும் தீர்வு இல்லை.

பேச்சுவார்த்தை மட்டுமே முன்னோக்கி செல்லும் ஒரே வழி. அமைதி மட்டுமே ஒரே நம்பிக்கை.” என்று தெரிவித்துள்ளார்.

அமைதி இல்லையேல் அழிவு ட்ரம்ப் எச்சரிக்கை
Posted in உலக செய்திகள்

அமைதி இல்லையேல் அழிவு ட்ரம்ப் எச்சரிக்கை

அமைதி இல்லையேல் அழிவு ட்ரம்ப் எச்சரிக்கை

உக்கிரம் அடைந்துவரும் ஈரான் இஸ்ரேல் யுத்தம் தொடர்பாகஒன்றில் அமைதி இல்லையேல் அழிவுதான் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு 60 நாட்கள் கெடு கொடுத்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், 61வது நாளில் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்.

இந்த நிலையில் அமெரிக்க மக்களிடையே உரையாற்றிய டொனால்ட் டிரம்ப், உலகத்திலேயே தீவிரவாதத்திற்கு அதிக ஆதரவு அளிக்கும் நாடு ஈரான் எனவும், ஒன்று அமைதி இல்லையேல் அழிவு என உறுதிப்பட கூறியுள்ளார்.

இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் இரண்டாவது வாரத்தில் எதிர்பாராத விதமாக களத்தில் குதித்துள்ளது அமெரிக்கா.

ஈரான் அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்து இருக்கிறார் டொனால்ட் டிரம்ப்.

ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்ஃபஹான் ஆகிய 3 அணு தளங்கள் மீது தங்கள் நாட்டின் விமானப்படை வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியதாக கூறி இருக்கிறார்.

இதனால் ஈரான் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தாக்குதல் தொடர்பாக தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப்,”

ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது நாங்கள் வெற்றியுடன் தாக்குதல் நடத்தி முடித்துள்ளோம்.

அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன. அமெரிக்காவின் நம்முடைய சிறந்த போர் வீரர்களுக்கு வாழ்த்துகள்.

உலகில் வேறு எந்த ராணுவமும் இதுபோன்று செய்தது இல்லை. இது அமைதிக்கான நேரம் ஆகும்” என கூறியுள்ளார்.

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு ,இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு ,ஈரானின் அணுசக்தி நிலையங்களைச் அண்டிய பகுதிகளில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அடுத்து, இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய நகர்ப்புறங்களில் ஈரானின்

ஏவுகணைத் தாக்குதல்கள் பல நடந்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு மோதல்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த நிலைமை நாள் முழுவதும் மோசமடையலாம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அதன்படி, இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களும் இந்த நிலைமையில் ஏற்படக்கூடிய தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க,

பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார, அங்கு வசிக்கும் அனைத்து இலங்கையர்களிடமும் கோரியுள்ளார்.

இதற்கிடையில், கடந்த 20ஆம் திகதி இரவு TABA எல்லை வழியாக இலங்கைக்குப் புறப்படுவதற்காக எகிப்திற்குள் நுழைந்த நான்கு

இலங்கையர்களில், செல்லுபடியாகும் இஸ்ரேல் விசா இல்லாதவர்கள் சில மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

பின்னர், எகிப்தில் உள்ள இலங்கைத் தூதுவர் சிசிர செனவிரத்ன மற்றும் அவரது குழுவினர், எகிப்தின் பாதுகாப்பு மற்றும் எல்லைக் குழுக்களுடன்

ஒருங்கிணைந்து, பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் அவர்கள் நேற்று (21) காலை கெய்ரோ விமான நிலையத்திற்கு வந்ததாக நிமல் பண்டார தெரிவித்தார்.

அவர்கள் இன்று காலை கெய்ரோ விமான நிலையத்திலிருந்து இலங்கைக்குப் புறப்படவிருந்ததாக தூதுவர் கூறினார்.

மேலும், நேற்றைய தினம் இலங்கைக்குப் புறப்பட எதிர்பார்த்த மூவர் வந்துள்ளதுடன், அவர்களுக்கு தேவையான ஆவணங்களைத் தூதரகம் தயார்

செய்து வழங்கியதாகவும், அவர்களும் TABA எல்லை வழியாக கெய்ரோ விமான நிலையத்திற்கு சென்று இலங்கைக்கு வரவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மீள் நுழைவு விசா காலத்தை நீட்டிக்க தூதரகத்தின் உதவி

இதற்கிடையில், தற்போது இஸ்ரேலில் பணிபுரிந்து இலங்கைக்கு விடுமுறையாக வந்திருக்கும் மேலும் 119 பேர் கொண்ட குழுவொன்று இருப்பதாக தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு

மேலதிகமாக துபாய் மற்றும் அபுதாபி விமான நிலையங்களில் தங்கியிருந்த 10 பேர் மீண்டும் இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றதாகவும் தூதுவர் குறிப்பிட்டார்.

அதன்படி, அவர்களின் மீள் நுழைவு விசா காலத்தை நீட்டிக்க PIBA நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கையர்களுக்கு மட்டுமல்லாமல், ஈரான் தாக்குதல்கள் தொடங்கியதால் மீள் நுழைவு விசா

காலம் முடிவடைந்த அனைத்து வெளிநாட்டவர்களும் மீண்டும் இஸ்ரேலுக்கு வருவதற்கு வசதியாக, சர்வதேச விமான சேவைகள் மீண்டும்

தொடங்கியவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்துள்ளதாகவும் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்

இதன்படி, இலங்கையர்களின் விசா காலத்தை நீட்டிக்க தேவையான அனைத்து உதவிகளையும் இலங்கைத் தூதரகம் வழங்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்திய அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்தியப் பிரஜைகளை தங்கள் நாட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக, ஜோர்தானின் அம்மான் நகரிலிருந்து புது டில்லி விமான நிலையம் வரை

அவ்வப்போது விமானங்களை இயக்கியுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதுவர் தெரிவித்ததாகவும், இந்த விமானப் பாதையைப் பயன்படுத்தி அம்மான் மற்றும் புது டில்லி விமான நிலையங்கள் வழியாக இலங்கைக்கு

புறப்பட விரும்புவோர் தூதரகத்திற்கு வந்து பதிவு செய்யுமாறும் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் அங்கு வசிக்கும் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இலங்கை இராஜதந்திர தூதரகங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, ஈரானிலிருந்தும்

இஸ்ரேலிலிருந்தும் புறப்பட்ட இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இன்று (22) வெளியிட்டது.

அதன்படி, இஸ்ரேலிலிருந்து இதுவரை புறப்பட்ட மொத்த இலங்கையர்களின் எண்ணிக்கை 5 பேர் என்றும், புறப்பட காத்திருக்கும் குழு 3 பேர் என்றும் அமைச்சு தெரிவித்தது.

அதேபோல், ஈரானிலிருந்து புறப்பட்ட மொத்த இலங்கையர்களின் எண்ணிக்கை 4 பேர் என்றும், புறப்பட காத்திருக்கும் குழு 4 பேர் என்றும் அமைச்சு கூறியுள்ளது.

ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு
Posted in இலங்கை செய்திகள்

பற்றாக்குறைக்கு தீர்வு ஆசிரியர்

பற்றாக்குறைக்கு தீர்வு ஆசிரியர்

பற்றாக்குறைக்கு தீர்வு ஆசிரியர் ,சகல பாடசாலைகளிலும் மனித மற்றும் பௌதிக வளங்களின் நியாயமான விநியோகத்தை உறுதி செய்யும் அதேவேளை டிஜிட்டல் கற்றல் முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார்.

உயர் கல்வி

உயர் கல்வி, கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர், டிஜிட்டல் கல்வி நிலை மாற்றத்தை (வகுப்புகள் 6-13) மேற்பார்வையிட

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பணிக்குழுவுடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த கருத்துகளை வெளியிட்டார்.

உரிய சவால்களை எதிர்கொண்டு தேவையான கொள்கைகளை செயற்படுத்து கல்வித்துறையில் டிஜிட்டல் நிலை மாற்றத்தை ஆரம்பித்தல் குறித்து இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ,

தேசிய மற்றும் மாகாண பாடசாலை

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தற்போது உள்ள 42,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை அவசரமாக தீர்க்கப்பட வேண்டும்.

தற்போதுள்ள ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக, தற்போதுள்ள வளங்களை திறம்பட பயன்படுத்தி கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக அடுத்த ஆறு

மாதங்களுக்குள் டிஜிட்டல் கற்றல் முறைமைகளை அறிமுகப்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இந்த பணிக்குழுவின் முதன்மை நோக்கங்களில், மாற்றுத்திறனாளி சமுதாயம் உட்பட அனைத்துப் பாடசாலைகளுக்கும் வசதிகளின் சமமான

விநியோகத்தை உறுதி செய்வது அடங்கும். இந்த இலக்கை அடைவதற்கு வலுவான, பல்துறை பணிக்குழு அவசியம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வின் போது பணிக்குழு அதிகாரிகளுக்கு நியமன கடிதங்கள் வழங்கப்பட்டதோடு பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி பணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

சாரதிகளுக்கு இலங்கை எடுத்த அதிரடி நடவடிக்கையா
Posted in இலங்கை செய்திகள்

சாரதிகளுக்கு இலங்கை அதிரடி நடவடிக்கை எடுத்ததா

சாரதிகளுக்கு இலங்கை அதிரடி நடவடிக்கை எடுத்ததா

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 5 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

இது தொடர்பில் ​​விசாரணைகளை மேற்கொண்ட போக்குவரத்து பிரதி பொலிஸ் கண்காணிப்பாளர் இந்திகா ஹபுகோட, இந்த செய்தி முற்றிலும் தவறானது எனத் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற தவறான செய்தி விளம்பரங்களை உருவாக்குபவர்கள் பதிவிடுபவர்கள் மீது சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி தவறானது என்று இலங்கை பொலிஸார் உத்தியோகபூர்வ பக்கத்திலும் ஒரு குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இருப்பினும், பது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஏன் அபராதம் விதிக்கக் கூடாது என மக்கள் மத்தியில் விசனம் ஏற்பட்டுள்ளது.

நாட்டில் தினந்தோறும் அதிகரித்துவரும் வீதி விபத்துக்கள் பெரும்பாலனவை மதுபோதையில் வாகனம் ஓட்டும் சாரதிகளால் ஏற்படுவதாக அறிக்கைகள் தெரிவித்த போதிலும் அதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளதா?

மது போதையில் வாகனம் ஓட்டுவது என்பது ஒரு பொறுப்பற்ற செயலாகும். இது ஓட்டுனரின் விழிப்புணர்வைக் குறைத்து, பாதையைப் புரியாமல் தவறாக திருப்புவதற்கும், வேகக் கட்டுப்பாட்டை இழப்பதற்கும் வழிவகுக்கும்.

இதன் காரணமாக ஆபத்தான சாலை விபத்துகள், உயிரிழப்புகள், சிக்கல்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட செயல்கள் மற்ற உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் ஒரு சமூக குற்றமாகவும் கருதப்படுகின்றன.

இதற்கான தீர்வாக, ஓட்டுநர்கள் மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். அவசியமாயின், மாற்று ஓட்டுநரை தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த வேண்டும்.

விழிப்புணர்வு முக்கியம் என்பதால், அரசு மற்றும் சமூக அமைப்புகள் விழிப்புணர்வு முகாம்களை ஏற்பாடு செய்து, இளைஞர்கள் மத்தியில் பாதுகாப்பான ஓட்டுமுறை பற்றிய அறிவை ஏற்படுத்த வேண்டும்.

இதுதான் சாலைகளில் உயிரைக் காக்கும் சிறந்த வழி.

ஆனாலும் அபராதம் விதிக்கப்படும் என்ற செய்தியைக் கூட அரசு எதிர்த்துள்ளமை யோசிக்கவே வைக்கின்றது.

உணவுக் கட்டணம் குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

உணவுக் கட்டணம் குறைப்பு

உணவுக் கட்டணம் குறைப்பு

உணவுக் கட்டணம் குறைப்பு ,பாராளுமன்ற பணிக்குழாமினரின் வேண்டுகோளின் பேரில், ஊழியர்களுக்கு வசூலிக்கப்படும் உணவு விலைகளை திருத்தியமைக்க பாராளுமன்ற அவைக் குழு தீர்மானித்துள்ளது.

அந்த குழுவின் தலைவர் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நேற்று (20) பாராளுமன்றத்தில் குழு கூடியபோது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2025.05.23 அன்று பாராளுமன்ற அவைக் குழுவு எடுத்த தீர்மானத்தின்படி, பாராளுமன்ற பணிக்குழாமினருக்கான உணவு விலைகளை நிர்வாக தர அதிகாரிக்கு மாதம் ரூ. 4,000 ஆகவும், நிர்வாக தரமற்ற ஊழியருக்கு மாதம் ரூ. 2,500 ஆகவும் 2025.06.01 முதல் வசூலிக்க பாராளுமன்ற அவைக் குழு முடிவு செய்தது.

இருப்பினும், இந்த விலைகளை திருத்தியமைக்க பாராளுமன்ற பணிக்குழாமினரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்த குழுவால் நீண்ட நேரம் பரிசீலிக்கப்பட்டு, அதன்படி, நிர்வாக தர அதிகாரிக்கு மாதம் ரூ. 3000 ஆகவும், நிர்வாக தரமற்ற ஊழியருக்கு மாதம் ரூ. 2000 ஆகவும் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இந்த புதிய விலைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.

மேலும், மே 23 ஆம் திகதி குழுவால் தீர்மானிக்கப்பட்டபடி, பாராளுமன்ற பொது உணவகத்தில் உணவுகளை கொள்வனவு செய்யும், பாராளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகள், பொலிஸ் அதிகாரிகள், ஜனாதிபதி/பிரதமர்

பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் ஊடகவியாளாலர்களுக்கும் தற்போது வசூலிக்கப்படும் உணவுக் கட்டணங்கள் மாறாமல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் நுவரெலியாவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் விடுமுறை இல்லத்தின் ஒரு பகுதியை பாராளுமன்ற ஊழியர்களுக்காக ஒதுக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதுவரை, பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இந்த விடுமுறை இல்லத்தை முன்பதிவு செய்ய முடிந்ததுடன், சபாநாயகரின் அறிவுறுத்தலின்படி, இந்தக்

கட்டிடத்தில் உள்ள ஒரு பகுதியை எதிர்காலத்தில் பாராளுமன்ற ஊழியர்களுக்குக்கும் ஒதுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதிவெல உத்தியோகபூர்வ குடியிருப்பு வளாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதுப்பித்தல் பணிகள் குறித்தும், பாராளுமன்ற அவைக் குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன்,

பாராளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகளுக்கு பகலில் தற்காலிக தங்குமிடத்திற்கான இடத்தை தயார் செய்வதற்கான அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள்மீது தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஈரானின் அணுசக்தி நிலையங்கள்மீது தாக்குதல்

ஈரானின் அணுசக்தி நிலையங்கள்மீது தாக்குதல்

ஈரானின் அணுசக்தி நிலையங்கள்மீது தாக்குதல் ,ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளப் பதிவில் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா ஈரானின் மீது நேரடி இராணுவத் தாக்குதலை நடத்தியது இதுவே முதல் முறையாகும். ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மோதல் வெடித்தது.

ஈரானின் அணு ஆயுதங்கள் தங்களுக்கு ஆபத்து என்பதால் முன்கூட்டியே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்தது.

இந்நிலையில் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான இராணுவ மோதல் அமெரிக்காவின் தலையீடு மூலம் மேலும் அதிகரித்துள்ளது.

“ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz), மற்றும் எஸ்ஃபஹான் (Esfahan) ஆகிய ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீதான எங்களின் வெற்றிகரமான தாக்குதலை முடித்துள்ளோம்” என்று டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

“அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன. முதன்மைத் தளமான ஃபோர்டோ மீது முழு அளவில் தாக்குதல் நடத்தப்பட்டன.

அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக நாடு திரும்புகின்றன. எங்களின் சிறந்த அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்துக்கள். இதைச் செய்ய வேறு எந்த

இராணுவமும் உலகில் இல்லை. இப்போது அமைதிக்கான நேரம்! இந்த விடயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் என்ன வகையான குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்று டிரம்ப் குறிப்பிடவில்லை.

இருப்பினும் ஈரானின் மிகவும் மேம்பட்ட வசதியான ஃபோர்டோ, ஒரு மலைக்குள் கட்டப்பட்டுள்ளது.

இது அமெரிக்காவின் GBU-57 Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் “பங்கர் பஸ்டர்” ஆயுதத்தால் மட்டுமே தாக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பதுளையில் கவிழ்ந்த பேருந்து
Posted in இலங்கை செய்திகள்

பதுளையில் கவிழ்ந்த பேருந்து

பதுளையில் கவிழ்ந்த பேருந்து

பதுளையில் கவிழ்ந்த பேருந்து, விபத்து மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தப் பயணிகள் பேருந்து தலைகீழாக கவிழ்வதற்கு காரணமாக அமைந்த சம்பவம் அந்த பேருந்து சாரதியில் உதவியாளரை அந்த பேருந்து செலுத்தியதாகவும் அதனாலயே இந்த பேருந்து கவர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் மூவரையும் இழந்து 34 பேர் காயமடைந்துள்ளனர்.

சாரதி அனுமதி பத்திரம் என்று சாரதி உதவியாளர் பேருந்து ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டுச் சிந்தனை காரணமாக பயணிகளை ஏற்றியபடி பயணித்த பேருந்தை, சாரதியின் அனுமதிப்பத்திரம் இல்லாது , சாரதியின் உதவியாளர் ஓட்டிச் சென்ற விடயம் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தை எடுத்து தற்பொழுது பேருந்து சாரதி உதவியாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்த பேருந்து விபத்தில் காயவடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இறந்தவரின் உடல்கள் மரண பரிசோதனை பின்னல் உறவினர்களிடம் கை அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான பேருந்து விபத்துக்கள், அதிகரித்து காணப்படுவதும் அதனை தடுக்க முடியாது இலங்கை போலீஸ் சற்று திணறி வருவது குறிப்பிடத்தக்கது.

ஈரானில் இருந்து இலங்கையரை மீட்க இந்தியா முயற்சி
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

ஈரானில் இருந்து இலங்கையரை மீட்க இந்தியா முயற்சி

ஈரானில் இருந்து இலங்கையரை மீட்க இந்தியா முயற்சி

ஈரான் – இஸ்ரேல் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், ஈரானில் இருக்கும் இலங்கையரை மீட்க இந்தியா முயற்சி எடுத்துள்ளது.

நேபாளம் மற்றும் இலங்கையின் கோரிக்கையை ஏற்று அந்த நாடுகளின் குடிமக்களையும் ஈரானில் இருந்து இந்தியா மீட்டு அழைத்துவர உள்ளது.

ஈரான் – இஸ்ரேல் போரை தொடர்ந்து ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் மத்திய அரசு மீட்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன்படி ஈரானின் மஷாத் நகரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு விமானம் மூலம் 290 இந்திய மாணவர்கள் டெல்லி அழைத்துவரப்பட்டனர்.

இதையடுத்து துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாத் நகரில் இருந்து இந்தியர்களுடன் புறப்பட்ட இரண்டாவது சிறப்பு விமானம் நேற்று காலை டெல்லி வந்து சேர்ந்தது.

இதன்மூலம் ஈரானில் இருந்து இதுவரை 517 இந்தியர்கள் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

இந்நிலையில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள ருவிட்டரில்

“நேபாளம் மற்றும் இலங்கை அரசுகளின் கோரிக்கையை ஏற்று அந்த நாடுகளின் குடிமக்களையும் ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் மீட்டு அனுப்பி வைக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அவசர உதவிக்கான தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளது.

நேபாளம் மற்றும் இலங்கை குடிமக்கள் டெலிகிராம் வாயிலாகவோ அல்லது +989010144557, +989128109115, +989128109109 ஆகிய எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்றும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.

தற்போது ஈரானில் 37 இலங்கையர்கள் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு

ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு

ஜனாதிபதி நிதியத்தின் பாராட்டு நிகழ்வு ,கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதி நிதியத்தினால்

நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் ஆரம்ப நிகழ்வு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (22) கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.

2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், ஒரு மாவட்டத்தில் சிறந்த பெபேறுகளைப்பெற்ற 60 மாணவர்கள் வீதம் தெரிவு

செய்யப்பட்டு, இத்திட்டத்தின் கீழ் நிதிப் புலமைப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

மாகாண ரீதியில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் முதல் நிகழ்வு, இன்று கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதுடன், 2023 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற யாழ்ப்பாணம்,

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்படவுள்ளனர்.

எதிர்காலத்தில் ஏனைய மாவட்டங்களிலும் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களை பாராட்டுவதற்கு, ஜனாதிபதி நிதியம் தயாராகி வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் உளவாளிகள் ஈரானால் கைது
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் உளவாளிகள் ஈரானால் கைது

இஸ்ரேல் உளவாளிகள் ஈரானால் கைது

இஸ்ரேல் உளவாளிகள் ஈரானால் கைது ,முக்கியமான இராணுவ மற்றும் அணுசக்தி பகுதிகளில் உளவு பார்த்ததாக” குற்றம் சாட்டப்பட்ட ஒரு ஜெர்மன் நாட்டவரை ஈரான் கைது செய்துள்ளதாக, நேற்று ஒளிபரப்பான அரசு தொலைக்காட்சி சேனல் டூ தெரிவித்துள்ளது.

யூத ஜெர்மன் இரட்டை குடிமகன்

அவர் ஒரு “யூத ஜெர்மன் இரட்டை குடிமகன் மற்றும் உளவாளி” என்று விவரிக்கப்பட்டார், மேலும் அவர் மத்திய மர்காசி மாகாணத்தில் தடுத்து

வைக்கப்பட்டிருப்பதை அறிக்கை காட்டுகிறது. அவர் “டஜன் கணக்கான உளவு பார்த்தல் மற்றும்/அல்லது நாசவேலை செய்ததாக” அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

அவர் “ஒரு சுற்றுலாப் பயணியின் மாறுவேடத்தில்” ஈரானுக்குள் நுழைந்ததாக அறிக்கை கூறியது, ஆனால் அவர் “நாடு முழுவதும் உள்ள மர்காசி தொடர்பான பகுதிகளை படம்பிடித்து வந்தார்” என்று குற்றம் சாட்டியது.

சமீபத்திய நாட்களில் ஈரானில் இஸ்ரேலுடன் தொடர்புடைய கைதுகள் அதிகரித்துள்ளன.

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து மர்காசி, இஸ்ஃபஹான் மற்றும் தெஹ்ரான் உள்ளிட்ட பல மாகாணங்களில்

குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான மக்கள் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நபர்கள் மீதான குற்றச்சாட்டுகளை பிபிசி சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.

ஈரான் விமானத்தில் சிக்கிய youtubeபிரபலங்கள்
Posted in உலக செய்திகள்

ஈரான் விமானத்தில் சிக்கிய youtubeபிரபலங்கள்

ஈரான் விமானத்தில் சிக்கிய youtubeபிரபலங்கள்

ஈரான் விமானத்தில் சிக்கிய youtubeபிரபலங்கள் ,ஈரான் விமான தாக்குதலில் youtube பிரபலங்கள் சொன்ன தகவல்கள் மக்களை பதற வைத்துள்ளது.

பிரித்தானியா சேர்ந்த youtube சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கக்கூடிய ஜோடிகள் இருவர் இஸ்ரேலுக்கு பயணம் ஆயினர்.

ஈரானிய ஏவுகணைகள்

அங்கு இவர்கள் தங்கி இருந்த கொட்டல் மேலாக ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ,டிரோன்கள் தாக்குதலை நடத்தியதாகவும், அதில் பயந்து போன இவர்கள் தங்கள் அனுபவ பதிவுகளை நேரடியாக தெரிவித்துள்ளார்கள்.

ஈரான் நடத்திக் கொண்டிருக்கும் இந்த தாக்குதல் .அங்குள்ள மக்களை மிகப்பெரிய பரபரப்பிலும் பயத்திலும். அதிர வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்கள்.

வரலாற்றில் கண்டிட முடியாத மிகப்பெரும் அதிர்ச்சிகரமான ,அந்த அதி உச்ச கோரமான தாக்குதலாக அது காணப்படுவதாக தெரிவித்துள்ளார்கள்.

மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பி பிழைத்ததாக ,அந்த ஜோடிகள் தெரிவித்துள்ளார்கள்.

இவருடைய இந்த கருத்துக்கள் தற்போது சமூகத்தலங்கள் பற்றி எரிகின்றன .

ஈரான் மீது தாக்குதல்

சும்மா இருந்த ஈரான் மீது தாக்குதலை நடத்திய இஸ்ரேல் , இப்பொழுது அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறது.

தொடர்ந்தும் இதுபோன்ற தாக்குதல்கள் தீவிர படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால், இஸ்ரேலிய மக்கள் மற்றும் நிலை நாட்டு மக்கள் பீதியுடன் காணப்படுவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.