Tag: வன்னி மைந்தன் கவிதைகள்
உன்னை பார்க்கையில
உன்னை பார்க்கையில
உன்னை நானும் பார்க்கையில
உள்ளம் மெல்ல துள்ளுதடி
கள்ளம் இல்லா பேரழகை
கட்டி அணைக்க துடிக்குதடி
கொஞ்சி பேசும் மொழியழகில்
கொள்ளை பிரியம் வைக்குதடி
அச்சம் இல்லா பேசிடவே
அல்லும் பகலும் துடிக்குதடி
இடையின் அளவை அளக்கையில
இதயம் மெல்ல வெட்குதடி
தாளம் போடும் தாமரையை
தழுவ மோகம் துடிக்குதடி
துடையின் மேலே புருவமது
துரத்தி மெல்ல முறைக்கையில
மெல்ல வாலிபம் துடிக்கிறதே
மெழுகாய் உருகி அழுகிறதே
சொல்ல முடியா சுகமதனை
சொர்க்கமே நீ தருவாயா
அள்ளி பருகிட நாளுமே
அன்பே என்னை விடுவாயா …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 24-05-2024
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

- அர்ச்சுனா

- ஏன் அழுகின்றாய்

உன் நிலை என்ன
உன் நிலை என்ன
சொந்த நிலம் பறிபோக
செந்தமிழன் விலை போக
வெந்து இங்கு வாழ்க
வேதனையில் நோக
மூத்த குடி நாங்கள் என்று
முன்னே பலர் சொன்னார் -அட
மூத்திரம் பெய்துவிட
முன்னே படை காவலா
கோத்திரத்தில் இங்கு உந்தன்
கொள்கை என்னவோ
கொடும் பகைவன் செயல் இழக்கும்
நிலை என்னவோ
மாற்று பகை நகர்வில் உன்
மடை என்னவோ
மறு மலர்ச்சி காண
உன் நிலை என்னவோ ..?
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-09-2023
- மீள வருவாயாby நிருபர் காவலன்
- ஒரு நாள் வெல்வேன்by நிருபர் காவலன்
- எப்படி நான் பேசிடுவேன்by நிருபர் காவலன்
- என்னை விடுby நிருபர் காவலன்
- நேரில் வந்து விடுby நிருபர் காவலன்
இறந்து போ
இறந்து போ
சாக்கடையை தூவி அன்று
சாதனைகள் படித்தவர்
பூக் கடைகள் ஏதுமினிறி
புழுங்கி ஏன் அழுகிறார்
வேர்க் கடலை இதுவென்று
வெற்றிகளாய் உரைத்தவர்
வேர் அறுந்து வீழ்ந்ததென்ன
வேடிக்கையார் கேட்கிறார்
கை கூப்பி கும்பிட்டு
கால் வீழ்ந்து அழுதாரை
மேல் உதைத்து வீழ்த்தி
மேனியை சுட்டீரே
துப்பாக்கி இருக்கென்று
துணிவுடனே சுட்டவரே
தப்பாகி போனீரே
தரணி சொல்கிறதே
இறந்து போ
பெரும் பான்மை நீர் என்று
பெருமையாய் சொன்னவரே
பெரும் பான்மை துரத்தையிலே
பொடியாகி பறந்ததென்ன
கோட்டையில இருப்பதாய்
கொக்கரித்த கோட்டாவே
நாட்டை விட்டு போனதென்ன
நாடோடி ஆனதென்ன
பார்த்தாயா தமிழரது
பழி உன்னை துரத்திறது
கேட்டாயா நீ அன்று
கேடு கெட்டாயே
பூக்குமா இனி உந்தன்
பூந்தோப்பு அங்கு
பார்க்குமா இனி உன்னை
பலம் கொண்ட அன்பு
வேற்கிறதா இன்று
வேதனை தெரிகிறதா
காத்தவரே உன்னை
கை விட்ட கேவலமா
இருந்தென்ன இனி காண்பாய்
இன்றேனும் இறப்பாய்
இன்றேனும் உந்தன்
பிடிவாதம் துறப்பாய் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 29-08-2022
ஆணி வேர் ஒன்று அறுந்தது
ஆணி வேர் ஒன்று அறுந்தது
உன் மக்கள் அவை காக்க
உரமேறி நின்றவா
தம் மக்கள் உனை காக்க
தவறியது ஏன் நண்பா
பின்னிருந்து இரு குண்டு
பிய்த்து நெஞ்சுடைக்க
மூச்சிழந்து போனாயே
முகவரி தொலைத்தாயே
காட்சிகள் இது ஒன்றாய்
காணொளியில் நீ இருக்க
வீச்சிழந்து போனவனே
வித்துடல் ஆனாயே
பேச்சிழந்து போவதற்கா
பேராசை நீ கொண்டாய்
அறுபத்தெட்டு அகவையில
ஆறடியில் ஏன் உறைந்தாய்
உன் துயரில் உலகெல்லாம்
உனை எண்ணி அழுகுதடா
உதயமாய் ஒளித்தவனே
உறக்கத்தில் ஏன் ஒளிந்தாய் ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 08-07-2022
வன்னி மைந்தன் கவிதைகள்
08-07-2022 ஜப்பான் முன்னாள் பிரதமர் shinzo Ape சுட்டு கொலை செய்யப்பட்ட துயரில் வடித்தவை
இளமையில் கூடு வசந்தம் கொஞ்சும் ..!
இளமையில் கூடு வசந்தம் கொஞ்சும் ..!
இளமையில உன் ஏக்கம்
இன்றே தனித்து விடு
முதுமையில முதலிரவு
முழு ஏக்கம் தனிக்காது
வெறுமையில நீ இருந்து
வெளியேற்றி விட்டவைகள்
முதுமையில தேறாது
முதுகெலும்பு தாங்காது
வறுமை என்ற கூட்டுக்குள்ளே
நீ தொலைத்த வாழ்விருக்கே
மீள் எழுச்சி கொள்ளாது
மீள உன்னை கெஞ்சாது
வாலிபத்து அகவையில
வாழ்க்கை பட வேணுமடி
வரப்புயரும் நீர் போல
வாழ்வு அமைய வேணுமடி
கோடி பணம் சேர்த்து வைத்து
கோட்டையிலே நீ இருந்தும்
காணப்போவது ஏதுமில்லை
கண் மலர்ச்சி ஏதுமில்லை
இளமையில இல்லறத்தை
இனிதே நீ கலந்து விடு
இல்லையது தப்பி விடின்
இறந்தே நீ மாண்டு விடு ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 06-03-2022
நீ பிள்ளையா
நீ பிள்ளையா
அழகான ஊருக்கும்
ஐயாறு பிள்ளைக்கும்
முதலான தந்தை
முன் என்ன தலை வெட்டு …?
காதில கம்மலும்
கரட்டி ஓணான் தாடியும்
குண்டி காட்டும்
குளியாத சட்டையும் …..
உலக அழகு என்று
ஊர் சுற்றும் காவாலி ….
போலான பிள்ளைக்கு
பொறுப்பெங்கே கூடி வரும் ..?
தான் உண்ணும் வேளையில்
தான் பெற்றது அழுகுதென்று
உண்டதை எறிந்தோடி
உயிர் காத்த அப்பனை …..
வழி மறந்து போனவனே
வாழ்ந் தென்ன கண்டாய் ..?
முதியோர் இல்லத்தில்
முன் எறிந்து ஏன் போனாய் ..?
எதிர் காலம் ஒன்றுண்டு
என்பதை மறந்தின்று …
உலவி திரிபவரே
உது போல நிலையுனக்கும் கான் …!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -21/01/2018
வன்னி மைந்தன் கவிதைகள்


























