Tag: இறந்து போ
இறந்து போ
இறந்து போ
சாக்கடையை தூவி அன்று
சாதனைகள் படித்தவர்
பூக் கடைகள் ஏதுமினிறி
புழுங்கி ஏன் அழுகிறார்
வேர்க் கடலை இதுவென்று
வெற்றிகளாய் உரைத்தவர்
வேர் அறுந்து வீழ்ந்ததென்ன
வேடிக்கையார் கேட்கிறார்
கை கூப்பி கும்பிட்டு
கால் வீழ்ந்து அழுதாரை
மேல் உதைத்து வீழ்த்தி
மேனியை சுட்டீரே
துப்பாக்கி இருக்கென்று
துணிவுடனே சுட்டவரே
தப்பாகி போனீரே
தரணி சொல்கிறதே
இறந்து போ
பெரும் பான்மை நீர் என்று
பெருமையாய் சொன்னவரே
பெரும் பான்மை துரத்தையிலே
பொடியாகி பறந்ததென்ன
கோட்டையில இருப்பதாய்
கொக்கரித்த கோட்டாவே
நாட்டை விட்டு போனதென்ன
நாடோடி ஆனதென்ன
பார்த்தாயா தமிழரது
பழி உன்னை துரத்திறது
கேட்டாயா நீ அன்று
கேடு கெட்டாயே
பூக்குமா இனி உந்தன்
பூந்தோப்பு அங்கு
பார்க்குமா இனி உன்னை
பலம் கொண்ட அன்பு
வேற்கிறதா இன்று
வேதனை தெரிகிறதா
காத்தவரே உன்னை
கை விட்ட கேவலமா
இருந்தென்ன இனி காண்பாய்
இன்றேனும் இறப்பாய்
இன்றேனும் உந்தன்
பிடிவாதம் துறப்பாய் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 29-08-2022
இறந்து போ
இறந்து போ
சாக்கடையை தூவி அன்று
சாதனைகள் படித்தவர்
பூக் கடைகள் ஏதுமினிறி
புழுங்கி ஏன் அழுகிறார்
வேர்க் கடலை இதுவென்று
வெற்றிகளாய் உரைத்தவர்
வேர் அறுந்து வீழ்ந்ததென்ன
வேடிக்கையார் கேட்கிறார்
கை கூப்பி கும்பிட்டு
கால் வீழ்ந்து அழுதாரை
மேல் உதைத்து வீழ்த்தி
மேனியை சுட்டீரே
துப்பாக்கி இருக்கென்று
துணிவுடனே சுட்டவரே
தப்பாகி போனீரே
தரணி சொல்கிறதே
இறந்து போ
பெரும் பான்மை நீர் என்று
பெருமையாய் சொன்னவரே
பெரும் பான்மை துரத்தையிலே
பொடியாகி பறந்ததென்ன
கோட்டையில இருப்பதாய்
கொக்கரித்த கோட்டாவே
நாட்டை விட்டு போனதென்ன
நாடோடி ஆனதென்ன
பார்த்தாயா தமிழரது
பழி உன்னை துரத்திறது
கேட்டாயா நீ அன்று
கேடு கெட்டாயே
பூக்குமா இனி உந்தன்
பூந்தோப்பு அங்கு
பார்க்குமா இனி உன்னை
பலம் கொண்ட அன்பு
வேற்கிறதா இன்று
வேதனை தெரிகிறதா
காத்தவரே உன்னை
கை விட்ட கேவலமா
இருந்தென்ன இனி காண்பாய்
இன்றேனும் இறப்பாய்
இன்றேனும் உந்தன்
பிடிவாதம் துறப்பாய் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 29-08-2022
இப்படி வாழ்ந்து இறந்து போ ..!
இப்படி வாழ்ந்து இறந்து போ ..!
சின்னம் சிறு எறும்பிடை கற்றுக்கொள்ளு – அதன்
நிகழ்ச்சி நிரல் மெல்ல வந்து எடுத்து கொள்ளு
உடலை விட பன்மடங்கு சுமக்குது பார்
உலகிலேறி தன் புகழை விதைக்குது பார்
பார்வையிலே சிறிதென்று ஒதுக்கி வைத்தார் – இவர்
பலத்தை கண்டேன் வியந்து நின்றார் ..?
போர்வைக்குள்ளே மறைந்திருந்தால் சூடுவரும் – குளிர்
போர்வை விட்டு எழுந்துவிட்டால் தெரிந்து விடும்
சிந்தையுளார் மன்றில் வந்து பேசிடுவார் – சபை
சிரிக்கும் படி தன்பேச்சை வைத்திடுவார்
அறிவு தன்னை அறிந்துவைத்து அவிழ்த்திடுவார்
அதனாலே உச்சி புகழ் பெற்றுவிட்டார்
வறுமையுளார் வலிகள் தன்னை படித்திடுவார்
வலி சுமந்தார் வாழ்வினிலே வென்று நிற்பார்
ஆணவத்தை தலைமேல வைத்து விட்டார்
ஆணிவேர் அறுத்தெறிந்து வீழ்ந்திருப்பார்
உன்னிடத்தில் உள்ளதை கொடுத்து பார் – இவர்
உள்ளம் மகிழ உன்னை நினைத்திருப்பார்
இறந்த பின்னும் இவ்வையம் வாழ்ந்திருப்பார்- இவர்
இறைவனாக மக்கள் மனம் போற்றிடுவார் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 09-11-2021






























